PDA

View Full Version : Nadigar Thilagam : The Greatest Actor of the Universe & The One & Only BO Emperor



Pages : 1 [2] 3 4 5 6 7 8 9 10 11 12 13

pammalar
30th July 2012, 01:51 AM
அன்புள்ள நண்பர் திரு பம்மலர் சார் அவர்களுக்கும் , திரு வாசுதேவன் சார் ,அவர்களுக்கும் எனது இனிய நன்றியினை தெரிவித்து கொள்ளுகின்றேன் .http://i47.tinypic.com/2h4lv86.png

உயர்ந்த பண்பாளர் திரு. esvee அவர்களே,

உயர்ந்த மனிதரின் உன்னத நிழற்படங்களைப் பதிவிட்டு அசத்திவிட்டீர்கள்..!

தங்களுக்கு நன்றி கலந்த பாராட்டுக்கள்..!

நன்மை செய்து, நன்றி சொல்லி, நட்பை வளர்ப்பதை லட்சியமாகக் கொண்டிருக்கும் மக்கள் திலகத்தின் பக்தரான தங்களுக்காக, நமது நடிகர் திலகம் திரியில் முதன்முறையாக, மக்கள் திலகத்தின் "அரசகட்டளை(1967)" பாடல்:

'வேட்டையாடு விளையாடு விருப்பம் போல உறவாடு....'


http://www.youtube.com/watch?v=PjM5BPY9uVw

அன்புடன்,
பம்மலார்.

pammalar
30th July 2012, 02:59 AM
அன்புள்ள பம்மலார் சார்,

1964 பேசும்படம் இதழில் வெளிவந்த 'கர்ணன்' திரைக்காவியத்தின் நிழற்படங்களை அள்ளி வழங்கி ஆனந்தப்படுத்தி விட்டீர்கள். இன்றைக்கு நாம் பலமுறை கர்ணன் படத்தைப்பார்த்தபின்னும் இப்படங்கள் நமக்கு சுவையூட்டுகின்றன என்றால், படம் வெளிவருவதற்கு முன் இவற்றைப்பார்த்த ரசிகர்களுக்கு இவை எவ்வளவு பரபரப்பையும், எதிர்பார்ப்புகளையும் தூண்டியிருக்கும் என்று ஊகிக்க முடிகிறது. அது ஒரு காவியப்படைப்பு என்பதனால்தான், தொடர்ந்து ஆண்டுகள் பலவாக மக்களைக் கவர்ந்து வருகிறது. முன்னர் பேசும்படம் இதழில் வெளியான 'கர்ணன் உருவான வரலாறு' பதிவுகளுடன் இவற்றையும் சேமித்து விட்டோம்.

Lots and Lots of Thanks for your great efforts.

டியர் mr_karthik,

தங்களின் இதமான பாராட்டுக்களுக்கு எனது இனிய நன்றிகள்..!

இந்த எளியவனால் தங்களுக்கு ஒரு சிறு-சேமிப்பு உள்ளதென்றால் அதுகுறித்து பெரிய மகிழ்ச்சி அடைகிறேன் சார்..!

"ஆனந்தக்கண்ணீர்" மினிபதிவு மிக அருமை. இக்காவியத்தில் விசு பாகத்தைப் போலவே செந்தில் பாகமும் ஹாஸ்யத்துக்கு குறைவில்லாதது. Barber செந்தில் அடிக்கும் லூட்டி எப்பொழுது பார்த்தாலும் குபீர் சிரிப்பை வரவழைத்துவிடும்..!

அன்புடன்,
பம்மலார்.

pammalar
30th July 2012, 03:07 AM
Good Analysis Mr.ragulram about AANANDAKKANNEER. Express response to your post by our Raghavendran Sir.

pammalar
30th July 2012, 03:16 AM
Watched 'Karnan' @Golden Digital , Singapore with my Son .
As NOV mentioned first 15 mins are shaky ,then it is very clear .

Noted few points

- My son (now 6+ ) liked the movie very much ..Infact I noticed that He wiped his tears when Karnan got arrows
- Though I watched many times (Theatres , TV, DVD) ,I felt that current audience should have felt bit impatience for few songs ,which they may not familiar with ..especially the song on valaikappu .
- There were only about 100 people in theatre and i noticed most of them are not local Singaporeans ,but singapore residents from India , most should have seen the movie with theatre experience before ..This opertunity of watching a old NT movie in theatre should be better utilised by local singaporeans , who would have never get such opertunity ,but sadly it is missing . I assume many didn't even know Karnan is screened .
- For the first time ,I have seen very old ladies (should be in 80's) were brought by their families ..they were seen so happy when returning back .

Regarding the movie and NT , Goosebumps in many places especially in last 30 mins .. None like him before and after him.

சிங்கை 'கோல்டன் டிஜிட்டல்' திரையரங்கில், டிஜிட்டல் "கர்ணன்" காவியத்தை தங்களது திருமகனுடன் கண்டு களித்த அனுபவத்தை இங்கே(யும்) பகிர்ந்து கொண்டமைக்கு இனிய நன்றிகள், மிஸ்டர் ஜோ..!

pammalar
30th July 2012, 04:50 AM
டியர் முரளி சார்,

தங்களின் வருகைக்கும், பதிவுகளுக்கும், பாராட்டுதல்களுக்கும் அகம் குளிர்ந்த நன்றிகள்..!

"சாமுண்டி", சிறுகுறிப்பு சூப்பர்..!

நடிகர் திலகத்தின் ஸ்போர்ட்ஸ் ஈடுபாடு குறித்து வாசு சாரின் பதிவுக்கு தொடர்ச்சி போல் தாங்கள் தகவல்களை அளித்தது சுவாரஸ்யமாக இருந்தது. தாங்கள், 1975 பொங்கல் சமயத்தில், மதுரையிலிருந்து சென்னை வந்து சேப்பாக்கத்தில் நேரில் கண்டு களித்த, நான்கு நாட்களில் முடிவடைந்த இந்தியாவுக்கும் வெஸ்ட் இண்டீஸுக்கும் இடையேயான நான்காவது டெஸ்ட் மேட்ச்சுடைய Full Scorecard கீழ்க்காணும் சுட்டியில்:

http://www.espncricinfo.com/ci/engine/match/63134.html

[Andy Roberts' Match figures : 12/121, Glorious victory for India at Chepauk & One of the greatest innings in Test History by Our Vishy, one of the most stylish bat]

இந்த ஸ்கோர்கார்டை பார்க்கும்போது ஒரு விஷயத்தை கவனிக்க வேண்டும். இந்த டெஸ்டில் 'தி ஆல்டைம் கிரேட்' சுனில் கவாஸ்கர் விரலில் ஏற்பட்ட பெரிய காயத்தினால் ஆடவில்லை. இந்த நான்காவது டெஸ்டில் மட்டுமல்ல, இட்டெஸ்ட் தொடரின் இரண்டாவது மற்றும் மூன்றாவது டெஸ்ட்களிலும் கவாஸ்கர் இக்காயத்தின் காரணமாக ஆடமுடியவில்லை. இந்த டெஸ்ட் தொடரில், பெங்களூரில் நடைபெற்ற முதல் டெஸ்டில் ஆடிய அவர், இரண்டாவது டெஸ்டுக்கு இடையில் நடைபெற்ற (பம்பாய் பங்கேற்ற) ஒரு 'ரஞ்சி கோப்பை' மேட்ச்சில், பேட் செய்யும் போது விரலில் பலத்த காயமுற்றார். அதன் காரணமாக அடுத்த மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் ஆட முடியவில்லை. பம்பாயில் 1975 ஜனவரி இறுதியில் நடைபெற்ற ஐந்தாவது கடைசி டெஸ்டில் ஆடினார். அதிலிருந்து 1986 செப்டம்பரில் சென்னை சேப்பாக்கத்தில் ஆஸ்திரேலியாவுடன் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டி வரை 100 தொடர் டெஸ்டுகளை [100 consecutive tests] விளையாடிய முதல் கிரிக்கெட் வீரர் என்ற சாதனைக்குச் சொந்தக்காரரானார். கிரிக்கெட்டை பற்றி நீங்கள் தொட்டதால் நான் அதில் எனது தலைவரான கவாஸ்கர் பற்றி தொடவேண்டியதாகி விட்டது. நமது ராகவேந்திரன் சார் மிகச் சரியாகக் குறிப்பிட்டதுபோல் சினிமா, கிரிக்கெட் இரண்டும் நமக்கு இரு கண்கள். எனக்கு சினிமாவில் சிவாஜி கணேசனும்(SG), கிரிக்கெட்டில் சுனில் கவாஸ்கரும் (SG), அதாவது இரு SGக்களும் இரு கண்கள். அதேபோன்று கிரிக்கெட்டில் எந்த நாட்டுக்கு ஆதரவு என்றால் அதில் நான் ராகவேந்திரன் சார் கட்சிதான். நமது அணிக்குப்பிறகு ஆதரவு வெஸ்ட் இண்டீஸ் அணிக்குத்தான். கிரிக்கெட் பற்றி தாங்கள் தங்கள் பதிவில் குறிப்பிட, பழைய கிரிக்கெட் ஆர்வலனான நானும் அந்நினைவலைகளில் நீந்திக் களித்தேன். தங்களுக்கு என் நன்றி..!

அன்புடன்,
சிக்கலார் ஸாரி பம்மலார்.

[நமது பத்தாவது பாக நடிகர் திலகம் திரியில், சிக்கலாரை சிலாகித்து தாங்கள் எழுதிய அற்புதப்பதிவைப் பலமுறை படிததபின் இந்தப் பதிவை எழுத முற்பட்டதனால், உண்டான தாக்கம், இறுதியாக பதிவை நிறைவு செய்யும்போது, பம்மலார் என்பதற்கு பதிலாக முதலில் சிக்கலார் என்றே எழுதத் தூண்டிவிட்டது. அதையும் அப்படியே அழிக்காமல் பதித்திருக்கிறேன்..!].

pammalar
30th July 2012, 05:08 AM
திரைக்காவிய முதல் வெளியீட்டு விளம்பரங்கள் : 7

நடிகர் திலகத்தின் 84வது காவியம்

சித்தூர் ராணி பத்மினி [வெளியான தேதி : 9.2.1963]

பொக்கிஷாதி பொக்கிஷம்

முதல் வெளியீட்டு விளம்பரம்
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC6161-1.jpg

"சித்தூர் ராணி பத்மினி" முதல் வெளியீட்டு விளம்பரங்கள் தொடரும்...

பக்தியுடன்,
பம்மலார்.

Richardsof
30th July 2012, 08:38 AM
Dear pammalar sir, vasudevan sir , karthik sir ,

thanks for your comments.http://i49.tinypic.com/2ilymfb.png

vasudevan31355
30th July 2012, 08:43 AM
நடிகர் திலகத்தின் பதினோராம் ஆண்டு நினைவாக அப்பெருமகனாருக்கு ஒர் அர்ப்பணம்.

சிங்காரச் சென்னையில் சிங்கத்தமிழனுக்கு சிலை எடுத்த விழா.

நமது நெஞ்சில் குடியிருக்கும் நம் அன்பு தெய்வத்தின் பதினோராவது ஆண்டு நினைவாஞ்சலியையொட்டி என்றுமே மறக்க முடியாத ஒரு நினைவுப் பதிவு. ஆம். சிங்கத்தமிழனுக்கு சென்னையில் சிலை எடுத்த விழா...கடந்த 2006 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 21-ஆம் நாள் வெள்ளிக்கிழமையன்று (நடிகர் திலகத்தின் நினைவு நாளன்று) நம் தெய்வ மகனுக்கு தமிழக அரசு சார்பில் அப்போதைய முதல்வர் கருணாநிதி அவர்களால் சிலை திறக்கப் பட்டது. சிலை திறப்பு விழாவின் காட்சிகளும், செய்திகளும் இப்போது நம் பார்வைக்கு.

இதழ்: தினகரன்

நாள்: 22 ஜூலை 2006

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/ist.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/t-3.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/news.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/stalin.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/4-56.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/5-44.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/6-44.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/silai.jpg

கல்லையும் கரைய வைக்கும் நம் அன்புத் தாய் கமலா அம்மா அவர்களின் கண்ணீர்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/kamala.jpg



(அர்ப்பணம் தொடரும்)

அன்புடன்,
வாசுதேவன்.

ScottAlise
30th July 2012, 10:31 AM
நடிகர்திலகம் சிவாஜிகணேசனுக்கு வெறும் மேக்கப் டெஸ்ட் மட்டுமே எடுத்து, படத்தில் இடம்பெறாத சில வேடங்கள்.
1618

mr_karthik
30th July 2012, 01:49 PM
எல்லோரும் கிரிக்கெட் பற்றி எழுதும்போது, நடிகர்திலகம் பாகம் 9-ல் 'அவன் ஒரு சரித்திரம்' பதிவில் கிரிக்கெட் பற்றி எழுதியதை மட்டும் இங்கே மறுபதிவிடுவது தவறில்லையென நினைக்கிறேன்.....

""அப்போது ஒன்டே கிரிக்கெட் தோன்றாத காலம். கிரிக்கெட் என்றால் அது டெஸ்ட் மேட்ச்தான். இந்தியாவில் வழக்கமாக டிசம்பரில் துவங்கி கல்கத்தா, டில்லி, நாக்பூர் என்று சுற்றியபின் சரியாக பொங்கல் விடுமுறைக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் போடுவார்கள். பொங்கலுக்கு தமிழ்நாட்டில் நான்கு நாட்கள் விடுமுறையென்பதால் வருடாவருடம் இந்த ஏற்பாடு. அப்போது சென்னையில் கருப்புவெள்ளை டிவி இருந்தபோதிலும், மைதானத்தில் வசூல் குறைந்துவிடும் என்பதற்காக தொலைக்காட்சியில் ஒளிபரப்ப அனுமதிக்க மாட்டார்கள். ரேடியோ கமெண்ட்ரி மட்டுமே. நாங்களும் வருடாவருடம் ஐந்துநாட்கள் பகல் முழுவதும் சேப்பாக்கம் மைதானமே கதியென்று இருப்போம். அதுவும் எப்படி?. என்னமோ நாங்களே பிளேயர்கள் போல ஒய்ட் அண்ட் ஒய்ட்டில் போய் அமர்ந்துகொண்டு, காதில் சின்ன பிலிப்ஸ் ட்ரான்ஸிஸ்டரில் கமெண்ட்ரி கேட்டுக்கொண்டே நேரில் கிரிக்கெட்டைப் பார்ப்பதில் ஒரு அலாதி திருப்தி. (அந்த சந்தோஷங்கள் இப்போது டிவி முன் அமர்ந்து, மிகத்தெளிவாக, குளோஸப் காட்சிகளாக, ஆயிரத்தெட்டு ரீப்ளேக்களுடன் பார்க்கும்போது கிடைக்கவில்லை). அந்த வருடம் பொங்கலுக்கு, அண்ணனின் 'அவன் ஒரு சரித்திரம்' படத்துக்காக கிரிக்கெட்டை தியாகம் செய்தோம். காவஸ்கரும், கபில்தேவும், யஷ்பால் சர்மாவும், ஷிவ்லால் யாதவும், சந்தீப் பட்டீலும் இரண்டாம் பட்சமாகிப்போனார்கள். (இவர்களின் ரசிகர்கள் மன்னிக்க).""

mr_karthik
30th July 2012, 02:17 PM
பம்மலார் அவர்கள் நடிகர்திலகத்தின் ஒலிம்பிக் விஜயம் பற்றிய ஆவணங்களைப் பதித்தாலும் பதித்தார். தொடர்ந்து வாசுதேவன், முரளி சீனிவாஸ், ராகவேந்தர் என அனைவரும் தங்கள் கிரிக்கெட் அனுபவங்களை (அவற்றோடு நடிகர்திலகத்தின் கிரிக்கெட் ஈடுபாட்டையும் தொடர்பு படுத்தி) பதித்து தள்ளி விட்டனர். (கூடவே 'டெயில் எண்டராக' நானும்).

தவிர, அப்போதெல்லாம் பல்வேறு நல நிதிக்காக சென்னையில் நட்சத்திர கிரிக்கெட் நடைபெறும்போதெல்லாம் தானும் ஒரு அணியின் தலைவராக நடிகர்திலகம் கலந்துகொள்வார். (கூடவே ஜெமினிகணேஷ், ஜெய்சங்கர், ஸ்ரீகாந்த், நாகேஷ் என கிரிக்கெட் ஆர்வம் கொண்ட பல நட்சத்திரங்களும் கலந்துகொள்வார்கள்). பழைய நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்ற இதுபோன்ற பல மேட்சுகளைக் கண்டுகளித்த இனிமையான அனுபவம் எனக்கு உண்டு. அதெல்லாம் எவ்வளவு இனிமையான நாட்கள்.

mr_karthik
30th July 2012, 02:55 PM
அன்புள்ள வாசுதேவன் சார்,

ஆருயிர் அண்ணன் நடிகர்திலகத்தின் சிலைதிறப்புவிழா நிகழ்ச்சிகளின் தினகரன் ஆவண ஏடுகளைப்பதிப்பித்து நம் அனைவரின் கண்களையும் கலங்க வைத்து விட்டீர்கள். ஒட்டுமொத்த திரையுலகமும், தமிழகத்தின் "ஒரு கட்சி" தவிர மற்ற அனைத்துக்கட்சித்தலைவர்களும் தொண்டர்களும், ரசிகர்களும், பொதுமக்களும் கலந்து கொண்ட பிரம்மாண்ட விழாவினை நேரில் கண்டுகளித்த... அல்ல. அல்ல.. கண்டு கண்கலங்கிய அந்த நாள் நினைவுக்கு வருகிறது. (நினைவுக்கு வருகிறது என்பது ஒரு சம்பிரதாய வார்த்தை... அதையெல்லாம் மறந்தால்தானே நினப்பதற்கு) அரசியல் தலைவர்கள் உட்பட யார் முகத்திலும் சிரிப்பைக்காண முடியாத ஒரு விழா என்றால் அது இந்த விழாதான். அனைவரும் உணர்ச்சிகளின் சங்கமத்தில் இருந்த தருணம் அது.

கலைஞர் அவர்களால் சிலை திறக்கப்பட்டபோது கைதட்டிய ரசிகர்களைவிட, கதறிய ரசிகர்களே அதிகம்.

இவ்வரிய பொக்கிஷப்பதிவுகளை, இதுவரை காணாதோர் கண்களுக்கு விருந்தாக்கிய தங்களுக்கு இதயம் நிறைந்த நன்றிகள்.

pammalar
30th July 2012, 07:10 PM
திரைக்காவிய முதல் வெளியீட்டு விளம்பரங்கள் : 8

நடிகர் திலகத்தின் 84வது காவியம்

சித்தூர் ராணி பத்மினி [வெளியான தேதி : 9.2.1963]

பொக்கிஷாதி பொக்கிஷம்

முதல் வெளியீட்டு விளம்பரம் : சுதேசமித்ரன் : 7.2.1963
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC6160-1.jpg

பக்தியுடன்,
பம்மலார்.

RAGHAVENDRA
30th July 2012, 07:32 PM
டியர் கார்த்திக்,
தங்களுடைய கிரிக்கெட் நினைவுகள் எல்லோரையும் போலவே என்னையும் வெகுவாக கவர்ந்துள்ளது மட்டுமின்றி நினைவுகளை அசை போடவும் வைக்கின்றன. இது போல் மேலும் பல நினைவுகளை பகிர்ந்து கொள்ளவும். அதற்காகத் தானே இந்தத் திரி. இதில் அன்பிருக்கும் பாசமிருக்கும். மேதாவித்தனம் இருக்காது, அதிகப் பிரசங்கித்தனமிருக்காது என்பதால் உள்ளம் தெளிவாகவும் இருக்கும். நடிகர் திலகம் என்ற மாமனிதரின் பல்வேறு பரிணாமங்களை வெளிக் கொணர பம்மலார் தந்துள்ள சிறந்த வாய்ப்பிற்கு நன்றி. குறிப்பாக பம்மலார் சூட்டிய நாமகரணம் என்ன பொருத்தமானது பாருங்கள். நாரதர் என்று ஒருவருக்கு பெயர் வைத்தாலும் வைத்தார் அவ்வளவு பொருத்தமாக அமைந்து விட்டது.

தொடரட்டும் தங்கள் பணி.

அன்புடன்

pammalar
30th July 2012, 07:39 PM
திரைக்காவிய மறு வெளியீட்டு விளம்பரங்கள் : 4

நடிகர் திலகத்தின் 194வது காவியம்

என்னைப் போல் ஒருவன்

[முதல் வெளியீட்டுத் தேதி : 18.3.1978 (தென்னகம்), 14.4.1978(சென்னை)]

முதல் வெளியீட்டில் அதிகபட்சமாக சென்னை 'தேவிபாரடைஸ்' திரையரங்கில் 70 நாட்களும் மற்றும் சேலம் 'நியூசினிமா'வில் 70 நாட்களும் ஓடிய சிறந்த வெற்றிக்காவியம்

பொக்கிஷாதி பொக்கிஷம்

மறு வெளியீட்டு விளம்பரம் : தினகரன்(மதுரை) : 26.4.1991
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC6163-1.jpg

முதல் வெளியீட்டில், ஆசியாவின் மிகப் பெரிய திரையரங்கமான மதுரை 'தங்கம்' திரையரங்கில், 41 நாட்கள் ஓடி பெரும் வெற்றி..!

பக்தியுடன்,
பம்மலார்.

vasudevan31355
30th July 2012, 11:11 PM
மதிப்பிற்குரிய முரளி சார்,

தங்களைப் போன்ற பழுத்த அனுபவசாலியின் நெஞ்சம் நிறைந்த பாராட்டுக்கள் மிகுந்த மன நிறைவைத் தருவதோடு பொறுப்புக்களையும் அதிகமாக்குகின்றன. உயர்வான தங்கள் பாராட்டிற்கு மனம் நிறைந்த என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும் நடிகர் திலகம் திரியில் 'தில்லானா'விற்கான தங்கள் பதிவு அம்சத்திலும் அம்சம்.

குறிப்பாக ...

"அந்த கண்பட்டதால் உந்தன் மேனியிலே புண்பட்டதோ அதை நானறியேன் என்ற வரிகளின் போது விழி சிவந்து கண்ணில் நீர் பெருக்கி ஒரு சின்ன தலையாட்டலில் உன் உள்ளத்தையும் அதில் என் மேல் உள்ள காதலையும் எனக்கு ஒன்று என்றால் நீ துடித்துப் போவதையும் நான் உணர்ந்திருக்கிறேன் என்ற புரிதலையும்"....

என்ற வரிகளை பலமுறைகள் படித்து வியந்து, மகிழ்ந்து கொண்டு இருக்கிறேன்.

திகட்டவே திகட்டாத 'தில்லானா' திறனாய்வுக்கு தேனான நன்றிகள்.

RAGHAVENDRA
30th July 2012, 11:32 PM
சிக்கலார் பார்ட்டிhttp://i1094.photobucket.com/albums/i442/pammalar/TM3.jpg

பாகம் 8ல் பம்மலார் தந்திருந்த அட்டகாசமான நிழற்படம் சிக்கலார் பார்ட்டி

http://www.mayyam.com/talk/showthread.php?9593-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-8/page69


'நாதஸ்வர சக்கரவர்த்தி'யாக நடிகர் திலகம், ஏ.பி.என்
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/TM2.jpg

பம்மலார் பாகம் 8ல் தந்திருந்த நிழற்படங்கள்... அவருக்கு மீண்டும் நமது நன்றி

http://www.nadigarthilagam.com/papercuttings3/thillanarunning.jpg

vasudevan31355
30th July 2012, 11:47 PM
அன்பு பம்மலார் சார்,

தங்கள் அன்புப் பாராட்டிற்கு மிக்க நன்றிக்கடன் பட்டுள்ளேன்.

சங்கரா சார் அவர்களின் பிறந்த நாள் பரிசாக தாங்கள் அவருக்களித்த 'கோடீஸ்வரன்' அவருக்கு மட்டுமல்ல... எங்கள் அனைவருக்கும் கோடியைத் தாண்டிய கோலாகலப் பரிசு. கொள்ளை அழகு கொஞ்சும் கோமேதகப் பரிசு.

கிரிக்கெட்டைப் பற்றி தாங்கள் பதித்துள்ள பதிவு பதிவுகளில் மட்டுமல்ல... கிரிக்கெட்டிலும் கிங் பம்மலார் என்பதை ஆணித்தரமாக சொல்கிறது. ஆல்ரவுண்ட் பம்மலார் ஆல் போல் தழைத்து வாழ வாழ்த்துக்கள். தங்களுக்குப் பிடித்த மற்றொரு SG இதோ தாங்கள் கண்டு களிக்க.

http://3.bp.blogspot.com/_6yqwvOiQqzU/TUj0FKq4FbI/AAAAAAAAAnM/yfc8ppMurDg/s1600/Sunil_Gavaskar_Wallpapers.jpg

சித்தூர் ராணி பத்மினி முதல் வெளியீட்டு விளம்பரங்கள் 'ராஜ' பதிவுகள்.

என்னைப் போல் ஒருவன் மறு வெளியீட்டு விளம்பரம் மற்றும் குறிப்புகள் உங்களைப் போல் ஒருவர் யார் என்று கூற வைக்கிறது. வேறு யாரால் சார் மறு வெளியீட்டு விளம்பரங்களை இப்படி அள்ளி வழங்க முடியும்?...

சிகரப் பதிவுகளுக்கு மனம் மகிழ்ந்த நன்றிகள்.

vasudevan31355
31st July 2012, 12:51 AM
அன்பு கார்த்திக் சார்,

பதிவுகளுக்கான தங்களுடைய பாராட்டுதல்களுக்கு எனது தலையாய நன்றிகள்.

தாங்கள் கூறியது போல 'ஆனந்தக்கண்ணீர் 'நல்ல படம், ஆனால் மக்களால் அதிகம் கண்டுகொள்ளப்படாத படம். 'பிரஸ்டீஜ்' பத்மநாபன் gaint-ஆக மக்கள் மனதில் முன்னமேயே தங்கி ராஜ்ஜியம் நடத்துவதால் 'காம்ப்ரமைஸ்' கல்யாணராமன் அதிகம் கண்டுகொள்ளப்படாமல் போய்விட்டாரோ?!

'அவன் ஒரு சரித்திரம்' பதிவில் கிரிக்கெட் பற்றி எழுதியதை மட்டும் இங்கே மறுபதிவு செய்திருந்தாலும் படிக்க மிக interesting ஆகவே இருந்தது. அதுமட்டுமல்ல... 'அவன் ஒரு சரித்திரம்' முழு பதிவையுமே மீண்டும் ஒருமுறை பாகம் 9-ல் படித்துச் சுவைக்க காரணமாயும் இருந்தது. அதற்காக மீண்டும் தங்களுக்கு நன்றிகள் சார்.

pammalar
31st July 2012, 03:57 AM
நடிகர் திலகத்தின் அழகிய-அரிய புகைப்படத்துக்கு கனிவான நன்றி, esvee சார்..!

தங்களின் மீள்பதிவு இன்றும் இனிமை, கிரிக்கெட் பதிவு மிக அருமை, mr_karthik..!

pammalar
31st July 2012, 04:05 AM
அன்பு பம்மலார் சார்,

தங்கள் அன்புப் பாராட்டிற்கு மிக்க நன்றிக்கடன் பட்டுள்ளேன்.

சங்கரா சார் அவர்களின் பிறந்த நாள் பரிசாக தாங்கள் அவருக்களித்த 'கோடீஸ்வரன்' அவருக்கு மட்டுமல்ல... எங்கள் அனைவருக்கும் கோடியைத் தாண்டிய கோலாகலப் பரிசு. கொள்ளை அழகு கொஞ்சும் கோமேதகப் பரிசு.

கிரிக்கெட்டைப் பற்றி தாங்கள் பதித்துள்ள பதிவு பதிவுகளில் மட்டுமல்ல... கிரிக்கெட்டிலும் கிங் பம்மலார் என்பதை ஆணித்தரமாக சொல்கிறது. ஆல்ரவுண்ட் பம்மலார் ஆல் போல் தழைத்து வாழ வாழ்த்துக்கள். தங்களுக்குப் பிடித்த மற்றொரு SG இதோ தாங்கள் கண்டு களிக்க.

http://3.bp.blogspot.com/_6yqwvOiQqzU/TUj0FKq4FbI/AAAAAAAAAnM/yfc8ppMurDg/s1600/Sunil_Gavaskar_Wallpapers.jpg

சித்தூர் ராணி பத்மினி முதல் வெளியீட்டு விளம்பரங்கள் 'ராஜ' பதிவுகள்.

என்னைப் போல் ஒருவன் மறு வெளியீட்டு விளம்பரம் மற்றும் குறிப்புகள் உங்களைப் போல் ஒருவர் யார் என்று கூற வைக்கிறது. வேறு யாரால் சார் மறு வெளியீட்டு விளம்பரங்களை இப்படி அள்ளி வழங்க முடியும்?...

சிகரப் பதிவுகளுக்கு மனம் மகிழ்ந்த நன்றிகள்.

ஆருயிர்ச் சகோதரர் நெய்வேலி வாசுதேவன் அவர்களே,

எனது இன்னொரு கண் போன்றவரான 'லிட்டில் மாஸ்ட'ரின் கொள்ளை அழகு புகைப்படத்தை ஆச்சரிய-அதிர்ச்சியாக அளித்த 'கிரேட் மாஸ்ட்'ரான தங்களுக்கு விண்ணளவு வாழ்நாள் நன்றிகள்..!

நான் சிறிதும் எதிர்பார்க்கவில்லை சார்..! என் கண்கள் ஆனந்தக்கண்ணீரால் குளமாகின்றன..! பேச நா எழுவில்லை..! அப்படியே ஆனந்தத்தில் தத்தளிக்கிறேன்..! இந்த Live புகைப்படத்தில், கவாஸ்கரின் அந்த Superb Stance, Grip on the bat handle, Marvellous Posture, Razor-sharp eyes இத்யாதி..இத்யாதிகளை கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டே இருக்கலாம். He is technically the most correct & perfect batsman of all-time, strictly adhering himself to the Copy-Book Style..!

நமது நடிகர் திலகம் அவர்கள், நுண்கலை நடிப்பு நுட்பங்களில், எப்பேர்ப்பட்ட ஈடு-இணை கூறமுடியா perfectionist-ஓ அதுபோன்று கிரிக்கெட் பேட்டிங் நுட்பங்களில், ஒப்பாரும் மிக்காரும் இல்லாத technically most perfect batsman 'Sunny'.

மீண்டும் மீண்டும் எனது எண்ணிலடங்கா ஆயுட்கால நன்றிகள் தங்களுக்கு..!

தங்களின் உச்சமான பாராட்டுதல்களுக்கும், இதயபூர்வமான வாழ்த்துக்களுக்கும் தலைவணங்குகிறேன்..!

ஒரு மாணிக்கத்தை எனக்குத் தந்த தங்களுக்கு,
தங்கள் 'மனம் கவர்ந்த மாணிக்கம்' எனது நன்றியின் வெளிப்பாடாக:

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/Maanickam1-1.jpg

பாசப்பெருக்கில்,
பம்மலார்.

pammalar
31st July 2012, 04:10 AM
அடியேன் பாகம் எட்டில் பதித்த 'சிக்கலார்' சம்பந்தப்பட்ட அரிய புகைப்படங்களை, இன்று இங்கு இந்த இனிய தருணத்தில் - என் பெயரையும் மறவாமல் நினைவுகூர்ந்து - மறுபதிப்பு செய்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகள், ராகவேந்திரன் சார்..!

pammalar
31st July 2012, 04:13 AM
டியர் வாசுதேவன் சார்,

'நடிகர் திலகத்தின் பதினோராம் ஆண்டு நினைவாக அப்பெருமகனாருக்கு ஓர் அர்ப்பணம்' என்கின்ற தலைப்பில் தாங்கள் இடுகை செய்துள்ள சென்னை சிவாஜி சிலை திறப்பு விழா ஆவணப்பதிவு ஒரு சிகர பதிவு. நமது நடிகர் திலகத்தின் ஐந்தாம் ஆண்டு அவதார நிறைவு நாள் [21.7.2006 : வெள்ளி] அன்று அன்றைய தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் கருணாநிதி அவர்களால் பல இடர்ப்பாடுகளைக் கடந்து திறக்கப்பட்ட இந்தச் சிலையின் திறப்புவிழா பற்றிய 'தினகரன்' தொகுப்பு அருமையிலும் அருமை..!

அன்னை கமலா அம்மையார் அவர்கள் கண்கலங்குவதைக் கண்டு என் கண்களும் ஊற்றுப்பெருக்காயின.

தங்களின் சேவை உள்ளத்துக்கும், அர்ப்பணிப்பு உணர்வுக்கும், உயர்ந்த நன்றிகள்..!

அன்புடன்,
பம்மலார்.

RAGHAVENDRA
31st July 2012, 06:01 AM
நடிகர் திலகத்தின் நீட்சி எந்த அளவிற்கு இருக்கும் என்பதற்கு இந்த இழையே சாட்சி. பம்மலார் இந்த இழையை ஆரம்பித்திருப்பது Tamil Film Classics பிரிவில். பழைய , முந்தைய காலத்தைய, திரை உலகின் பல தலைப்புகளில், பல கலைஞர்களைப் பற்றி, பொருட்களைப் பற்றி, விவாதங்கள் நடக்கும் பிரிவு. பொதுவாக அதிகம் கண்டு கொள்ளப் பட வாய்ப்பற்ற தலைப்புகள், என்ற கணிப்புகளையெல்லாம் உடைத்தெறிந்து, தேடி வந்து நடிகர் திலகத்தின் இழைக்கு மக்கள் பெரும் வரவேற்பை நல்கும் வண்ணம் ஆணித்தரமாய்த் தன் முத்திரையைப் பதித்துள்ள பம்மலார் மற்றும் வாசு அவர்களின் உழைப்புக்கு கிடைத்துள்ள அங்கீகாரமே, இந்த இழை தற்போது பதிவுகளின் எண்ணிக்கையில் முன்னூறையும் பார்வையாளர் எண்ணிக்கையில் பத்தாயிரத்தையும் எட்டும் வேகமாகும். கிட்டத் தட்ட 10 நாட்களில் இது மிகச் சிறப்பானதாகும். இதற்கு அனைத்து பார்வையாளர்களுக்கும் நம் நன்றிகளும் பாராட்டுக்களும். பாகம் 10ல் சில விரும்பத் தகாத மனக் கிலேசங்கள் ஏற்பட்டது ஒரு வகையில் பம்மலாரின் ஆளுமையை அனைவரும் அறிந்து கொள்ள ஒரு சந்தர்ப்பமாக அமைந்து விட்டது. நம் அன்புச் சகோதரர்கள் இதனை சரியான முறையில் புரிந்து கொள்வர் என்று நம்புகிறேன். பாகம் பத்தோடு நமது மனக் கிலேசங்களையெல்லாம் மூட்டை கட்டி வைத்து விட்டு தொடர்ந்து அனைவரும் ஒரு சேர இந்த பம்மலாரின் உழைப்பினை அங்கீகரித்து இங்கே பங்கு பெற வேண்டும் என்பதே என் விருப்பம். மேலும் முந்தைய பாகங்களில் பல சந்தர்ப்பங்களில் நமது சகோதரர்கள் பம்மலாருக்கு உரிய அங்கீகாரம் தரவேண்டும் என்று கூறியிருந்தார்கள். அது உண்மையான வார்த்தைகளின் வெளிப்பாடாக இருக்குமானால், இந்த இழை அதற்கு ஒரு வாய்ப்பாக எடுத்துக் கொள்ளலாம்.

அன்புடன்
ராகவேந்திரன்

Richardsof
31st July 2012, 08:31 AM
http://i45.tinypic.com/2ivy1ic.png

































நன்றி ..... நன்றி. நன்றி .....

21 .4 .2007 அன்று நடிகர் திலகம் அன்பு ரசிகர் திரு . JOE அவர்களால் துவக்க பட்ட மக்கள் திலகம் PART 2 இன்று 200 பக்கம் தாண்டியது ஒரு மாபெரும் சாதனையாகும் .இந்த திரியில் பல்வேறு கருத்துக்கள் , விமர் சனங்கள் ,பாடல்கள் , ஆய்வுகள் , புகைப்படங்கள் ,வீடியோ பேப்பர் விளம்பரங்கள் ,,கருத்து மோதல்கள் , என்று பல்வேறு கோணங்களில் நடிகர் திலகத்தின் நண்பர்கள் மற்றும் மக்கள் திலகத்தின் நண்பர்கள் கலந்து கொண்டு சிறப்பித்த அனைவருக்கும் மக்கள் திலகத்தின் அன்பு ரசிகர்கள் சார்பாக எங்களது நன்றியினை நடிகர் திலகத்தின் அன்பு உள்ளங்களுக்கு தெரிவித்து கொள்கின்றோம் .

மதிப்பிற்குரிய நதியின் நண்பர்கள்.

திருமதி சாரதா அவர்கள்
திரு . பம்மலர் - திரு .ராகவேந்திரன் . திரு ,முரளி ஸ்ரீநிவாஸ் . திரு JOE திரு . வாசுதேவன் . திரு திருமாறன் .
திரு .பாலாஜி . திரு .செல்வகுமார் . திரு .கார்த்திக் . திரு .மகேஷ் . திரு .தமிழரசன் . திரு .ராஜாராம் . திரு .சதீஷ் . திரு கல்நாயக் . திரு ராஜா .திரு .பாரிஸ்டர் ரஜினிகாந்த் . திரு .PR
திரு . groucho70 . திரு. tfmlover . app _engine .m -23 -bayarea - திரு hattori மற்றும் எல்லா நடிகர் திலகத்தின் அன்பு உள்ளங்களுக்கு எங்கள் நன்றியினை மீண்டும் தெரிவித்து கொள்கின்றோம் .

Richardsof
31st July 2012, 08:56 AM
irandu kaigal ... nanganal ......

அன்புள்ள நண்பர் திரு . ராகவேந்திரன் அவர்களுக்கு

தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி .மக்கள் திலகம் - நடிகர் திலகம் இரண்டு இமயங்கள் இந்திய திரை உலக வரலாற்றில் ஏற்படுத்திய சாதனை கின்னிஸ் வரலாற்றில் இடம் பெறவேண்டும் .
உலகில் எந்த ஒரு நடிகர்களுக்கு இல்லாத பெருமை - அவர்கள் மறைந்த பின்னும் அவர்கள் திரை படங்கள் தொடர்ந்து ஓடி சாதனை புரிவது உண்மையிலே ஒரு சரித்திர புரட்சியாகும் .
மேலும் இணைய தளத்தில் இரண்டு திலகங்களின் புகழ் கொடிகட்டி பறக்கிறது என்றால்
அதற்கு மூல காரணம் நடிகர் திலகம் ரசிகர்களால் துவக்கப்பட்ட இந்த நடிகர் திலகம் திரி & மக்கள் திலகம் திரி என்றால் அது மிகையாகது .
இன்றைய இளைய தலை முறை ரசிகர்களும் எதிர்கால ரசிகர்களும் நிச்சயம் நமது திரிகளை பார்த்து , ரசித்து , போற்றுவார்கள் என்பது நிச்சயம் .
மீண்டும் நன்றி .

mr_karthik
31st July 2012, 02:24 PM
நட்சத்திர கிரிக்கெட் 1973 (என் நினைவுக்கு எட்டியவரை)

அன்புள்ள ராகவேந்தர் சார் அவர்கள் பழைய நினைவுகளைப் பதிந்துகொள்ளுங்கள் என்று அனுமதியும் உற்சாகமும் அளித்ததால், நான் பள்ளி மாணவனாக இருந்தபோது சென்னை பழைய நேரு ஸ்டேடியத்தில் நடந்த 'நட்சத்திர கிரிக்கெட்' பார்த்த அனுபவத்தை பகிர்ந்துகொள்ளலாம் என்ற ஆவல். இது ஏதோ ஒரு பள்ளியின் வளர்ச்சி நிதிக்காக நடத்தப்பட்ட மேட்ச்.

அப்போது கிரிக்கெட்டுக்காக சேப்பாக்கம் ஸ்டேடியம் இருந்தபோதிலும், நட்சத்திர கிரிக்கெட் அங்கு விளையாட அனுமதிக்க மாட்டார்கள். விளையாடத்தெரியாத சில நட்சத்திரங்கள் பேட்டால் மைதானத்தை கொத்திப்போட்டு விடுவார்கள் என்ற பயமோ அல்லது வேறு காரணமோ தெரியாது. அதனால் மாநகராட்சிக்கு சொந்தமான பழைய நேரு ஸ்டேடியத்திலேயே நடைபெறும். கூட்டமும் நிறைய சேரும். நட்சத்திரங்கள் பிரமாதமாக விளையாடுவார்கள் என்பதால் அல்ல, எல்லா நட்சத்திரங்களையும் ஒருசேர பார்க்கலாமே என்ற ஆர்வத்தில். இப்போதுபோல அன்றைக்கு ஆளாளுக்கு விருது வழங்கும் விழா நடத்துவது என்பதெல்லாம் கிடையாது அல்லவா?. டெஸ்ட் மேட்ச் மட்டுமே நடந்து வந்த அந்தக்காலத்தில் ஒன்டே மேட்சை துவக்கியதே நமது நட்சத்திரங்கள்தான். இன்னும் சரியாகச்சொன்னால் அரைநாள் மேட்ச்தான். பகல் ஒருமணிக்குத் துவங்கி மாலை ஆறு மணிக்கு முடிந்துவிடும்.

அது ஒரு பொங்கல் தொடர் விடுமுறை. அப்போது சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கிடையே டெஸ்ட் மேட்ச் நடந்து வந்தது. ஐந்து நாள் மேட்ச் நடுவே ஒரு நாள் 'ஓய்வுநாள்' என்று விடுவார்கள். சரியாக அந்த ஓய்வு நாள் பார்த்துதான் நட்சத்திர கிரிக்கெட் நடத்தினார்கள். ஓய்வுநாள் என்பதால் இந்திய இங்கிலாந்து அணி வீரர்களும் நட்சத்திர கிரிக்கெட்டைக்காண வருவார்கள் என்று விளம்பரத்தில் அறிவிப்புச் செய்திருந்தார்கள்.

மேட்ச் நடந்த அன்று பகல் பணிரெண்டரை மணிக்கெல்லாம் நாங்கள் நண்பர்கள் க்ரூப்பாக ஸ்டேடியத்தின் உள்ளே போய் விட்டோம். டிக்கட் விலை 5 ரூ., 10 ரூ., மற்றும் 20 ரூ. அப்போதைய எங்கள் சக்திக்கு 5 ரூபாய் டிக்கட்தான் வாங்கமுடிந்தது. அதனால் கூரையில்லாத வெயில் பகுதியில்தான் அமர முடிந்தது. (பழைய நேரு ஸ்டேடியத்தில் மேற்கூரை கிடையாது. இருந்தாலும் முதல் வகுப்பு மற்றும் வி.ஐ.பிக்களுக்காக டெம்ப்ரரி ரூஃப் அமைத்திருந்தனர்). மார்கழி முடிந்த தருணமாதலால் வெயில் அவ்வளவாக உறைக்கவில்லை.

நடிகர்திலகம் ஒரு அணிக்குத் தலைவராகவும், ஜெமினிகணேஷ் இன்னொரு அணிக்குத்தலைவராகவும் அறிவிக்கப்பட்டனர். மேட்ச் துவங்கும் முன்னதாக இரு அணியினரும் தங்கள் தலைவரின் பின்னால் மைதானத்தைச்சுற்றி அணிவகுத்து வந்தனர். நடிகர்திலகம் ஒயிட் அண்ட் ஒயிட்டில் மேலே நீலநிற ஜிப் ஜெர்க்கின்ஸ் அணிந்து, வெள்ளைத்தொப்பி, கூலிங் கிளாஸ் சகிதம் கையில் கொடி பிடித்து தன் அணியினர் பின்தொடர வந்தபோது ரசிகர்கள் கைதட்டலும் விசிலும் பற்ந்தன. அதன்பின்னால் ஜெமினியும் தன் அணியினருடன் இதேபோல ஸ்டைலாக உடையணிந்து (மைனஸ் தொப்பி) வந்தார். இரண்டு அணியிலும் நடிகர் நடிகையர் என கலந்து இடம்பெற்றிருந்தனர். எந்த அணியில் யார் யார் இருந்தனர் என்பது இப்போது சரியாக நினைவில்லை.

மேட்ச் துவங்க சற்று முன்னர் இந்திய அணி வீரர்கள் மட்டும் ஸ்டேடியத்துக்கு வந்தனர். இங்கிலாந்து வீரர்கள் வரவில்லை. கேப்டன் பிஷன்சிங் பேடி, துணை கேப்டன் காவஸ்கர், விக்கெட் கீப்பர் சையத் கிர்மானி மற்றும் சந்திரசேகர், ஜி.ஆர்.விஸ்வநாத், பிரசன்னா, சோல்கர், பிரிஜேஷ் படேல் உள்பட அனைத்து வீரர்களும் வந்திருந்தனர். அவர்கள் வந்தபோதும் ரசிகர்கள் உற்சாகமாக கைதட்டி வரவேற்றனர். வீரர்களும் கையசைத்து வரவேற்பை ஏற்றுக்கொண்டனர்.

மேட்ச் துவங்கியது. ஜெமினி அணி முதலில் பேட் செய்ததாக ஞாபகம். நடிகர்கள் நன்றாக ஆடினர். நடிகைகள்தான் சொதப்பினர். பல நடிகைகள் பேண்ட், ஷர்ட் அணிந்து வந்திருந்தபோதிலும், சில நடிகைகள் சேலையுடன் விளையாட வந்து ரசிகர்களின் நகைப்புக்கு ஆளாகினர். வர்ணனையாளர்களாக இரண்டு தேர்ந்த நபர்களை நியமித்திருந்தனர். அவர்களுடன் நடிகர் 'சோ'வும் அமர்ந்து அவ்வப்போது குறிப்புகளைச் சொல்லிக்கொண்டிருந்தார்.

ஜெய்சங்கர வந்தபோது கமெண்ட்ரி செய்தவர், 'எதிரிகளின் பந்துகளை அடித்து தூள் பரத்த வருகிறார் தென்னகத்து ஜேம்ஸ்பாண்ட்' என்று அறிவிக்க ரசிகர்கள் கைதட்டினர். அவரும் பந்துகளை தடாலடியாக அடித்து பத்து ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார்.

'அடுத்து அம்மன் அருள் பெற்று ஆட வருகிறார் ஏ.வி.எம்.ராஜன்' என்று கமெண்ட்ரேட்டர் அறிவிக்க (அப்போது அவர் அம்மன் அருள் என்ற படத்தில் நடித்துக்கொண்டிருந்தார்) அவரும் வரும்போதே ரசிகர்களைப்பார்த்து கையசைத்தபடி வந்தார்.

பேண்ட் ஷர்ட்டுடன் ரொம்பவே பந்தாவாக அலட்டிக்கொண்டு மைதானத்துக்குள் இறங்கிய நடிகை ஜெயசித்ரா, பேட்டிங் செய்யத்தெரியாமல் மண்ணோடு சேர்த்து தரையைக் கொத்தியவாறு பேட் செய்ய, இயக்குனர் பி.மாதவன் சென்று, எப்படி பேட் செய்ய வேண்டும் என்று அங்கேயும் அவரை டைரக்ட் செய்தார்.

ரசிகர்கள் எங்கே எங்கே என்று தேடிக்கொண்டிருந்த அந்த நேரமும் வந்தது, 'ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் செங்கோல் ஏந்தி ஆட்சி செய்த கைகளில் இப்போது பேட் எடுத்து ஆட வருகிறார் ராஜ ராஜ சோழன்' என்று கமெண்ட்ரியாளர் அறிவித்ததும் கைதட்டல் பறக்க ராஜ நடை நடந்து மைதானத்தில் இறங்கினார் நடிகர்திலகம். (அப்போது ராஜராஜசோழன் பெரிய எதிர்பார்ப்புகளுடன் தயாரிப்பில் இருந்தது). அவர் வந்தபோது இந்திய கிரிக்கெட் வீரர்களும் கைதட்டினர்.

இவரும் மற்றவர்களைப்போலவே சொத்த்ப்புவாரோ என்று சிலர் முணுமுணுத்தபோது, அவர் மின்னல் வேகத்தில் பந்துகளை பட் பட்டென்று அடித்து ஓடி ஓடி ரன்களைச் சேர்த்தார். அவர் 16 ரன்கள் எடுத்திருந்த சமயம் இயக்குனர் சி.வி.ராஜேந்திரன் வீசிய பந்தை அடித்தபோது நடிகர் ஸ்ரீகாந்திடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.

நாகேஷ் முதலிலேயே விளையாடி அவுட்டான பின்னர், ரசிகர்கள் மத்தியில் சோடா, கலர் விற்கத்தொடங்கினார். அவர் கையால் வாங்கவேண்டும் என்பதற்காகவே எல்லோரும் வாங்கிக்குடித்தனர். நல்ல விற்பனை.

மேட்ச் முக்கால்வாசி முடிந்திருந்த நிலையில் இந்திய அணி வீரர்கள் கையசைத்து விடைபெற்றனர். நட்சத்திரங்களின் கிரிக்கெட் ஆட்டத்தைப்பார்த்தால் தங்களுக்கு கிரிக்கெட் மறந்து போய்விடுமோ என்று பயந்துவிட்டார்களோ என்னவோ.

ஆறு மணிக்கு மேட்ச் முடிந்தபோது ஜெமினி கணேஷ் அணி வெற்றிபெற்றதாக அறிக்கப்பட்டது. ஆட்ட நாயகனாகவும் ஜெமினியே தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசளிக்கப்பட்டார். ஸ்கோர் பற்றியெல்லாம் யார் கவலைப்பட்டது?. ஐந்துமணிநேரம் ரொம்ப ஜாலியாகக் கழிந்தது. அதுபோதும் என்ற நிலையில் ரசிகர்கள் வெளியேறினர்.

KCSHEKAR
31st July 2012, 02:30 PM
டியர் கார்த்திக் சார்,

தங்களின் கிரிக்கெட் நினைவலைகள் மிகவும் அருமை. நாங்களே நேரில் ரசிப்பதுபோல தங்களுடைய வர்ணனை இருந்தது.

P_R
31st July 2012, 02:40 PM
'அடுத்து அம்மன் அருள் பெற்று ஆட வருகிறார் ஏ.வி.எம்.ராஜன்' :lol:


பேண்ட் ஷர்ட்டுடன் ரொம்பவே பந்தாவாக அலட்டிக்கொண்டு மைதானத்துக்குள் இறங்கிய நடிகை ஜெயசித்ரா, பேட்டிங் செய்யத்தெரியாமல் மண்ணோடு சேர்த்து தரையைக் கொத்தியவாறு பேட் செய்ய, இயக்குனர் பி.மாதவன் சென்று, எப்படி பேட் செய்ய வேண்டும் என்று அங்கேயும் அவரை டைரக்ட் செய்தார்.
:rotfl:

SoftSword
31st July 2012, 02:54 PM
நாகேஷ் முதலிலேயே விளையாடி அவுட்டான பின்னர், ரசிகர்கள் மத்தியில் சோடா, கலர் விற்கத்தொடங்கினார். அவர் கையால் வாங்கவேண்டும் என்பதற்காகவே எல்லோரும் வாங்கிக்குடித்தனர். நல்ல விற்பனை.


:lol:
ivar appo server sundharam padatthula nadichuttu irundhaaraa??

KCSHEKAR
31st July 2012, 03:31 PM
டியர் வாசுதேவன் சார்,

நடிகர்திலகத்தின் சிலை திறப்பு விழா நிகழ்ச்சிகள் பற்றிய பதிவு உண்மையிலேயே உணர்ச்சிப்பூர்வமான ஒன்று. பதிவிற்கு நன்றி.

KCSHEKAR
31st July 2012, 03:40 PM
டியர் பம்மலார்,

சித்தூர் ராணி பத்மினி, என்னைப்போல் ஒருவன் வெளியீட்டு விளம்பரப் பதிவு சிறப்பு

Murali Srinivas
31st July 2012, 08:58 PM
சிக்கலார் பற்றிய பதிவிற்கு மனந்திறந்த பாராட்டுகளை வழங்கிய கர்ர்த்திக், பெயரையே சிக்கலார் என்று எழுதிக் கொண்ட சுவாமி, பதிவின் வாசங்களை குறிப்பிட்டு உணர்ச்சி வசப்பட்ட வாசு ஆகிய அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி!

அண்மையில்தான் உறுப்பினராக சேர்ந்தாலும் பதிவ்களில் தூள் கிளப்பும் வினோத் அவர்களே, என் பெயரையும் குறிப்பிட்டு நன்றி தெரிவித்தற்கு மிக்க நன்றி!

அன்புடன்

pammalar
31st July 2012, 10:24 PM
தென்னாடுடைய சிவாஜியே போற்றி !
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/Sivan-1.jpg

பக்திப்பெருக்கில்,
பம்மலார்.

pammalar
31st July 2012, 10:48 PM
வேருக்கு நீரூற்றி விளைக்கின்ற தலைவா !
எங்கள் எல்லோரையும் காத்தருள் இறைவா !

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/Sivan1.jpg

"திருவிளையாடல்(1965)" திரைக்காவியத்தில்

நம் பெருமானும், தருமியும் [Q & A]


http://www.youtube.com/watch?v=S5xP4UZTnTs

நம் பெருமானும், நக்கீரரும்


http://www.youtube.com/watch?v=K8W-ViRl5iA

"திருவிளையாடல்(1965)" முழுத்திரைக்காவியம்

http://www.youtube.com/watch?v=AIbo_2fX2Ok&feature=related

பக்தியுடன்,
பம்மலார்.

pammalar
31st July 2012, 11:14 PM
லேட்டஸ்ட்

மீண்டும் 'குமுதம்' [1.8.2012] : மீண்டும் இளைய திலகம் [Face-to-Face]

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC6164-1.jpg

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC6165-1.jpg

பக்தியுடன்,
பம்மலார்.

RAGHAVENDRA
31st July 2012, 11:19 PM
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4205a.jpg

http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4218a.jpg

மேற்காணும் விளம்பரப் படங்களுக்கு நன்றி பம்மலார்.

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/ThiruvilaiyadalKalkiReviewfw.jpg

இவையெல்லாம் சென்ற ஆண்டு ஜூலைத் திங்கள் படங்களைப் பற்றி விவாதிக்கும் போது பதிவுகளில் இடம் பெற்றவை.

இவற்றைத் தொடர்ந்து நம்முடைய ஹப்பர்கள் பம்மலாருக்கு தந்திருந்த புகழாரம்


While looking at the amazing pace in which our NT thread is moving on, i felt this.....

Majority of contribution for most of the threads in this hub comes from youngsters & tech savvy's whereas in our case, majority of contribution comes from seniors, which I'm sure is the pulse of this threads success. Now, that itself is an achievement in its own order, isn't it ??
ref: http://www.mayyam.com/talk/showthread.php?9593-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-8/page75
hubber: rangan_08
30th July 2011, 06:12 PM

இதற்கு அடியேனுடைய பதில் பதிவு


Dear Mohan,
Thank you for the complements.
..

Partly true. But I personally feel, it is because of youngsters like Saradha, Karthik, Murali Sriniivas, Parthasarathy, KrishnaG, Sathish, yourself, Balakrishnan, and ABOVE ALL THE ONE AND ONLY PAMMAL SWAMINATHAN, and many others, that this thread is going great heights. That is the strength of NT. Some of the names mentioned here might be old in their age but they find place in youngsters as they are young in their heart and passion for NT.

Dear Balakrishnan,
Kindly can you try to provide the translation for the telugu text?


நண்பர் கார்த்திக் கூறியிருந்தது

பம்மலார் சார் மற்றும் ராகவேந்தர் சார்,

ஆரம்பமாகிவிட்டது அடுத்த அட்டகாசம். சாதாரண படங்களுக்கே விளம்பர அணிவகுப்பைத்தந்து அசத்துவீர்கள். திருவிளையாடலோ சாதனைப்படம், வெள்ளிவிழாப்படம். கேட்கணுமா?. ஒரே அதகளம்தான் போங்க.

உண்மையில் நினைக்க நினைக்க ஆச்சரியமாக வே இருக்கிறது. நமக்கு நினைவுதெரிந்த நாள் முதல், இந்த விளம்பரங்களை தினத்தாள்களில் வெளியாகும்போது பார்த்ததோடு சரி. ஆனால் அவற்றையெல்லாம் அப்போது பத்திரப்படுத்தவில்லையே என்று பலமுறை வருந்தியதுண்டு. இப்படி ஒரு கனினி யுகம் வெருமென்றோ, அதிலும் கூட கிடைத்தற்கரிய இவ்விளம்பரங்களைப் பத்திரப்படுத்தி வைத்து நீங்களெல்லாம் அவற்றை மீண்டும் காண்ச்செய்வீர்கள் என்றோ கனவிலும் நினைத்ததில்லை.

இவற்றை இங்கே பதிவேற்றம் செய்வதில் எவ்வளவு சிரமங்கள், எத்தனை ஸ்டெப்கள் இருக்கின்றன என்பதை அறிய முடிகிறது. இருந்தபோதிலும், நடிகர்திலகத்தின் புகழ் பரப்பும் சேவைக்கு முன்னால் இந்த சிரமங்களெல்லாம் துச்சம் என்று எண்ணி செயல்படும் உங்களைப்பாராட்ட வார்த்தைகளே இல்லை. இது வெறும் சம்பிரதாயச்சொல் அல்ல.

அதிலும் 'துளி விஷம்' வெளிவந்த காலத்திலெல்லாம் இத்திரியில் ப்ங்கேற்கும் நாம் யாருமே பிறந்திருக்கவில்லை. அப்போது வெளியான பத்திரிகை விளம்பரங்களை இப்போது பார்க்கும் வாய்ப்புக் கிடைப்பது என்பது உண்மையிலேயே ஒரு த்ரில்லிங்கான அனுபவம்.

இதுவரை ஒரு சிலரிடத்தில் மட்டுமே பாதுகாக்கப்பட்டு வந்த இந்த ஆவணங்கள், இப்போது எண்ணற்ற நடிகர்திலகத்தின் ரசிகர்கள் கைகளில் தவழ்ந்துகொண்டிருக்கின்றன. அவரவர்களும் கணினி, சிடி, ப்ளாஷ் மெமோரி என பல வகையிலும் பத்திரப்படுத்தி வருகின்றனர். இந்தப்பெருமைகள் அனைத்தும் உங்களுக்கே சொந்தம்.

ஜூலை இறுதி வாரத்திலேயே நடிகர்திலகம் - ஏ.பி.நாகராஜன் கூட்டணியில் மூன்று முத்தான படங்கள் வெளிவந்திருப்பது அபாரம். தேதிவாரியாக நாம் கொண்டாடுவதால் வருட வாரியாக உல்டாவாகி விட்டது என்பது இன்னொரு சுவாரஸ்யம். முதலில் 1968, பின்னர் 1967, இப்போது 1965.

உங்கள் சேவையைப்பார்க்கும்போது, ஒவ்வொரு நாளும் நமதி திரிக்கு விஜயம் செய்யும் நேரம் 'இன்றைக்கு நடிகர்திலகத்தின் எந்தப்படத்தின் வெளியீட்டு நாள்?' என்ற ஆவலுடன் திறக்கின்றோம். நீங்களும் எங்களை ஏமாற்றாமல் அள்ளி அள்ளி வழங்குகிறீர்கள்.

இந்தச்சேவைக்காக உலகெங்கிலும் உள்ள நடிகர்திலகத்தின் ரசிகர்கள் உங்களை வாழ்த்தியவண்ணம் இருப்பார்கள்.
30th July 2011, 06:21 PM
mr_karthik

இதற்கு அடியேனுடைய பதில்

டியர் கார்த்திக
தங்களுடைய பாராட்டுக்கு உளமார்ந்த நன்றிகள்.

தங்களுடைய பதிவுக்கு சற்று நீண்ட துணைப் பதிவினைத் தர விழைகின்றேன்.

அதற்கு முன்னர் நாம் அனைவரும் ஒரு சேர ஓ போட வேண்டியது ஸ்வாமிக்குத் தான். அவருடைய இத்தனை இளம் வயதில் அவர் இந்த அளவிற்கு ஆவணங்களை சேமித்து வைத்திருக்கிறார் என்றால் முதலில் அவர் தான் நடிகர் திலகத்தின் தீவிரமான ரசிகர் என்று நான் எண்ணுகிறேன், அதே போல் அவரைப் போல் ரசிகரை அடைய நடிகர் திலகம் பெரும் பேறு பெற்றுள்ளார் என்றால் அது மிகையில்லை. குறிப்பாக நடிகர் திலகத்தின் ரசிகர்களைப் பொறுத்த வரையில் ஒவ்வொருவரும் தம் சொந்தப் பொருள் உடல் ஆவி அனைத்தையும் அவருக்கே அர்ப்பணித்து விட்டனர். அதற்கு முழு உதாரணம் ஸ்வாமி.

ஆவணங்களைப் பொறுத்த மட்டில் தாங்கள் கூறியது முற்றிலும் உண்மை. அதுவும் எங்களைப் போன்ற பிராயத்தினர் அந்தக் காலங்களில் மிகுந்த சிரமத்திற்கிடையில் தான் திரைப் படங்களைக் காணவே அனுமதி பெறுவோம். சினிமாவைப் பற்றிப் பேசினாலே ஏச்சும் பேச்சும் பலர் வீட்டில் கண்டிருப்பர். அப்படிப் பட்ட ஒரு கால கட்டத்தில் அதுவும் நாங்களெல்லாம் சராசரிக்கு உட்பட்ட பொருளாதார அடிப்படையில் அமைந்த வகுப்பினர். அதனால் திரைப்படம் பார்க்கவே பொருளாதாரத்தில் சிக்கல். கிடைக்கும் சில்லரைகளை சேர்த்து வைத்து அதை நடிகர் திலகம் படம் பார்க்க வைத்திருப்போம். நாம் சாப்பிடுகிறோமோ இல்லையோ, அவர் படம் பார்க்க வேண்டும் . சில சமயம் சில்லரை மிச்சமிருந்தால் பாட்டு புத்தகம் வாங்கி விடுவோ்ம். செய்தித் தாள் பருவ இதழ் சேமிப்பு என்பது மிகுந்த சிரமம். தேவைப் படும் தாளை மட்டும் தனியே வெட்டி எடுத்து வைக்க வேண்டும். அவ்வாறு கஷ்டப் பட்டு சேர்த்தது நிறைய. ஆனால் ஒரு கால கட்டத்தில் இடப் பற்றாக்குறை உள்ளிட்ட பல காரணங்களினால் கணிசமான ஆவணங்களை இழந்தேன். அப்படியும் விடாப்பிடியாக சேர்த்து வைத்தவை ஓரளவு. அவை இன்று நமக்கு உதவுகின்றன. இன்னோரு விஷயம், என் பிராயத்தினர் பெரும் பாலானோர், தாங்கள் அப்படி சேர்த்து வைத்த ஆவணங்களை, யாருக்கும் தர மாட்டார்கள், நான் உட்பட. அன்றைய கால கட்டத்தில் அது வருத்தத்திற்குரிய விஷயமாக இருந்தாலும் இன்று அவை வெளியுலகத்தினைப் பார்க்க உதவுகின்றன என்பதை எண்ணும் போது இன்றைக்கு பெருமையாக உள்ளது. ஒரு வேளை நடிகர் திலகம் மறைவுக்குப் பிறகு பல மடங்கு பெரியதாக விஸ்வரூபம் எடுப்பார் என்பதற்கான சான்றாக இவை திகழ்கின்றன என்பதும் ஓர் எண்ணம்.

இன்னும் நிறைய என்னிடம் இல்லையே என்பதே என் வருத்தம்.

மற்றபடி இருக்கும் ஆவணங்களை நம் அனைவரிடமும் பகிர்ந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சியே.

நன்றியுடன்
ref: http://www.mayyam.com/talk/showthread.php?9593-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-8/page76

இவையெல்லாம் நினைவூட்டலுக்காகத் தான். இது போல் நமது நண்பர்கள் அனைவரிடமும் ஒரு சேர பாராட்டுப் பெற்றவர் நமது ஸ்வாமி...

pammalar
1st August 2012, 03:00 AM
டியர் ராகவேந்திரன் சார்,

அடியேன் செய்த சிறுசேவையை மிகப் பெரிய முறையில் தொடர்ந்து அங்கீகரித்துக் கொண்டிருக்கும் தங்களின் உயர்ந்த உள்ளத்துக்கு எனது உச்சமான நன்றிகள்..! தங்களைப் போன்றே அன்றும்-இன்றும் இந்த எளியவனைப் பாராட்டி ஊக்குவித்துக் கொண்டிருக்கும் ஒவ்வொருவருக்கும் எனது இதயங்கனிந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்..!

நமது நடிகர் திலகம் திரிக்குத் தாங்கள், பெருந்தன்மையோடும், தொண்டுள்ளத்தோடும் அளப்பரிய பங்களிப்பினை தொடர்ந்து நல்கி வருகிறீர்கள், வாழ்க தங்களின் திருப்பணியாகிய திரிப்பணி..! நான் ஏற்கனவே குறிப்பிட்டது போல் வாசுதேவன் சாரும், தாங்களும் நமது திரியின் இரு கண்கள்..!

நமது நடிகர் திலகம் திரியின் மெகா வெற்றியை தொடர்ந்து புள்ளிவிவரங்களோடு பறைசாற்றி வரும் தங்களுக்கும், சேவை மனப்பான்மையுடன் இங்கே பங்களிப்புகளை நல்கி வரும் அனைவருக்கும், பாசத்துக்குரிய பார்வையாளர்களுக்கும், மரியாதைக்குரிய மாடரேட்டர்களுக்கும் நமது இதயபூர்வமான நன்றிகள்..!

எல்லாப் பெருமையும், புகழும் நமது இதயதெய்வம் நடிகர் திலகத்துக்கே..!

பாசப்பெருக்கில்,
என்றென்றும் கலைதெய்வத்தின் புகழ்பாடும் குயில்,
பம்மல் ஆர். சுவாமிநாதன்.

pammalar
1st August 2012, 03:19 AM
நட்சத்திர கிரிக்கெட் 1973 (என் நினைவுக்கு எட்டியவரை)

டியர் mr_karthik,

அருமை ! அருமை ! அருமை !

சற்றேறக்குறைய 40 வருடங்களுக்கு முன் நடைபெற்ற வெள்ளித்திரை நட்சத்திர கிரிக்கெட் மேட்ச்சுக்கு, தாங்கள் இன்று [31.7.2012] கமெண்டரி [பதிவு] கொடுத்தது,

அருமை ! அருமை! அருமை !

தங்களின் அபார நினைவாற்றலுக்கு எனது அன்பான பாராட்டுக்கள்..!


ரசிகர்கள் எங்கே எங்கே என்று தேடிக்கொண்டிருந்த அந்த நேரமும் வந்தது, 'ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் செங்கோல் ஏந்தி ஆட்சி செய்த கைகளில் இப்போது பேட் எடுத்து ஆட வருகிறார் ராஜ ராஜ சோழன்' என்று கமெண்ட்ரியாளர் அறிவித்ததும் கைதட்டல் பறக்க ராஜ நடை நடந்து மைதானத்தில் இறங்கினார் நடிகர்திலகம். (அப்போது ராஜராஜசோழன் பெரிய எதிர்பார்ப்புகளுடன் தயாரிப்பில் இருந்தது). அவர் வந்தபோது இந்திய கிரிக்கெட் வீரர்களும் கைதட்டினர்.

இவரும் மற்றவர்களைப்போலவே சொத்த்ப்புவாரோ என்று சிலர் முணுமுணுத்தபோது, அவர் மின்னல் வேகத்தில் பந்துகளை பட் பட்டென்று அடித்து ஓடி ஓடி ரன்களைச் சேர்த்தார். அவர் 16 ரன்கள் எடுத்திருந்த சமயம் இயக்குனர் சி.வி.ராஜேந்திரன் வீசிய பந்தை அடித்தபோது நடிகர் ஸ்ரீகாந்திடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.

நமது தலைவர் பேட்டிங் செய்ய வருகை புரிகையில், நிகழ்ந்தவற்றை தாங்கள் எழுதியிருந்தவிதம் ரொம்பப் பிரமாதம். [எனது இன்னொரு தலைவரும் [லிட்டில் மாஸ்டர்] பார்வையாளராக வந்திருந்தார் என்ற செய்தி கொம்புத்தேனாய் இனித்தது].


மேட்ச் முக்கால்வாசி முடிந்திருந்த நிலையில் இந்திய அணி வீரர்கள் கையசைத்து விடைபெற்றனர். நட்சத்திரங்களின் கிரிக்கெட் ஆட்டத்தைப்பார்த்தால் தங்களுக்கு கிரிக்கெட் மறந்து போய்விடுமோ என்று பயந்துவிட்டார்களோ என்னவோ.

தங்கள் எழுத்தில் ஹியூமருக்கு என்றுமே பஞ்சமிருந்ததில்லை..!

அபூர்வமான பதிவுக்கு அபரிமிதமான நன்றிகள், சார்..!

அன்புடன்,
பம்மலார்.

Richardsof
1st August 2012, 08:24 AM
http://i49.tinypic.com/21ot0nl.jpg

vasudevan31355
1st August 2012, 08:25 AM
அன்பு பம்மலார் சார்,

பிள்ளைக்கு தாய் பாசத்துடன் சோறு ஊட்டும் போது அளவு கடந்த அன்பினால் அந்தப் பிள்ளை பதிலுக்கு ஒரு முறையாவது தனது தாய்க்கு ஒருவாய் சோறு ஊட்டி மகிழ்வதைப் போல அள்ளி அள்ளித் தந்த தங்களுக்கு ஒருவாய் சோறு போல லிட்டில் மாஸ்டரைத் தந்தேன்.நீங்கள் பதிலுக்கு தாய் போல
மாணிக்கத்தைத் தந்து மகிழ்வூட்டி விட்டீர்கள். பல சவால்களை சமாளித்த திரியின் மாணிக்கமான தாங்கள் 'சவாலே சமாளி' மாணிக்கத்தைப் அடியேனுக்கு பரிசாக அளித்திருப்பது அழகு.

சிலை திறப்பு விழா பதிவுக்கான தங்கள் அன்புப் பாராட்டிற்கு மிக்க சந்தோஷமடைகிறேன்.

திருவிளையாடல் புரியும் நம் சிவபெருமானார் நிழற்படம் அம்சம். அழகாக அருள் பாலிக்கிறார். திருவிளையாடல் வீடியோக்களும் அருமை!

மொத்தப் பதிவுகளுக்கும் அன்பு நன்றிகள்.

vasudevan31355
1st August 2012, 08:37 AM
டியர் வினோத் சார்,

வாழ்த்துக்கள். மக்கள் திலகம் திரி பாகம் இரண்டு இருநூறாவது பக்கத்தை தொட்டிருப்பது மட்டற்ற மகிழ்ச்சியை அளிக்கிறது. அதுவும் தாங்கள் திரிக்கு வந்தது முதல் விர்ரென திரி ராக்கெட் வேகத்தில் பறக்க ஆரம்பித்து விட்டது. காணக்கிடைக்காத போட்டோக்களும், பல்வேறு அற்புத பதிவுகளும் தங்கள் மூலமாகவும், மக்கள் திலகத்தின் சாதனை விவரங்கள், விளம்பர கட்டிங்குகள் நண்பர் ராஜாராம் மூலமாகவும் திரி பெற்று வெற்றி பவனி வருகிறது.

திரியின் வெறிக்காக பாடுபட்டு வரும் தாங்கள், இருதிலகங்களின் ரசிகர்களும் ஒற்றுமையோடு செயல்பட்டு அந்த அற்புத மனிதர்களின் புகழை உலகம் முழுதும் பரவச் செய்யவேண்டும் என்ற உயரிய கொள்கையை கொண்ட நீங்கள் மென்மேலும் வெற்றிகளைக் குவித்து மக்கள் திலகம் திரியை மேலும் மெருகேற்றப் போவது உறுதி. திரியின் பங்களிப்பில் என்னையும் மறக்காமல் குறிப்பிட்டிருந்தது தங்கள் அன்பு உள்ளத்தைப் பறைசாற்றுகிறது. அதற்காக என் ஆத்மார்த்தமான நன்றிகள்.

Richardsof
1st August 2012, 08:58 AM
http://i49.tinypic.com/s1p4ev.jpg


அன்புள்ள இனிய நண்பர் திரு . வாசு தேவன் சார்

தங்களின் பாராட்டுக்கு நன்றி . 1972 பொம்மை இதழிலிருந்து .... நடிகர் திலகம் கட்டுரை .. வசந்த மாளிகை பட செய்திகள் .... உங்கள் பார்வைக்கு .
அன்புடன்

esvee

pammalar
1st August 2012, 11:04 AM
திரைக்காவிய முதல் வெளியீட்டு விளம்பரங்கள் : 9

நடிகர் திலகத்தின் 21வது காவியம்

முதல் தேதி [வெளியான தேதி : 12.3.1955]

பொக்கிஷாதி பொக்கிஷம்

முதல் வெளியீட்டு விளம்பரம் : தென்றல் திரை : 15.3.1955
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC6168-1.jpg

பக்தியுடன்,
பம்மலார்.

pammalar
1st August 2012, 11:19 AM
டியர் esvee சார்,

"ஞான ஒளி" விளம்பரம், "பிரேம்நகர் & வசந்த மாளிகை" புகைப்படங்கள் மற்றும் செய்திகள், 'புதுமுகங்கள் வர வேண்டும்' என்ற நடிகர் திலகத்தின் கருத்துரை என ஆவண வரிசை அமர்க்களம்..! பாராட்டுக்கள்..!

[தேசிய திலகத்தின் கொடைக்கரம், யுத்த நிதிக்கு ரூ.10000/- அளித்துள்ள செய்தி ரியலி சூப்பர் நியூஸ்..!]

தொடர்ந்து தூள் கிளப்புங்கள்..!

அன்புடன்,
பம்மலார்.

pammalar
1st August 2012, 11:28 AM
"முதல் தேதி" சிறப்புப் பாடல்

கலைவாணரின் கலக்கல் குரலில்

'ஒண்ணுலே இருந்து இருபது வரைக்கும் கொண்டாட்டம்...'


http://www.youtube.com/watch?v=7iyKReUPxNQ

பக்தியுடன்,
பம்மலார்.

pammalar
1st August 2012, 11:43 AM
டியர் வாசுதேவன் சார்,

தங்களின் அபரிமிதமான அன்பிற்கும், அளவு கடந்த பாசத்திற்கும் மீண்டும் மீண்டும் தலைவணங்குகிறேன்..!

தங்களின் குதூகலமான பாராட்டுக்கள் என் உள்ளத்தைக் குளிர்வித்தது. தங்களுக்கு எனது குளிர்ச்சியான நன்றிகள்..!

அன்புடன்,
பம்மலார்.

vasudevan31355
1st August 2012, 01:50 PM
http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcTXp20Yme4z2GD75jZSSeRJxnSmkyrgU dQPEti-Eb19REiEG5ZhxhS30rw1

அன்பு கார்த்திக் சார்,

1973-இல் நடைபெற்ற நட்சத்திர கிரிக்கெட் விழாவை இத்தனை வருடங்கள் கழித்து புத்தம்புதிய பொலிவுடன் தங்கள் வர்ணனை மூலம் வெளுத்து வாங்கியுள்ளீர்கள்.தெளிந்த நீரோடை போன்ற எளிமையான தங்கள் நடை எளிய புரிதல் நடையிலேயே இருப்பதால் படிக்க அருமையாக உள்ளது. அதுவும் ஸ்டேடியத்தை நம்மவர் வலம் வந்த அழகை வர்ணித்திருப்பது தனிச் சிறப்பு. கட்டுரை படித்து முடித்தவுடன் ஏதோ அந்தக் காலத்தில் பயணித்தது போன்ற ஒர் உணர்வு. அற்புதமான வர்ணனைக் கட்டுரைக்கு மனமுவந்த பாராட்டுக்கள், நன்றிகள்.

vasudevan31355
1st August 2012, 02:00 PM
டியர் ராகவேந்திரன் சார்,

நமது திரி நல்ல வரவேற்பை பெற்றுவருவதை தாங்கள் புள்ளிவிவரங்களுடன் பதிவுகளைத் தருவது மிக்க சந்தோஷமளிக்கிறது. தில்லானா மோகனாம்பாளின் நிழற்படங்களை சரியான நேரத்தில் பதிப்பித்து அசத்தி விட்டீர்கள். அன்பு பம்மலாரின் அளப்பரிய சேவைகளை தாங்கள் சுட்டி காட்டியுள்ளது நிச்சயமாக பாராட்டுக்குரியது. ஏற்றுக்கொள்ளக் கூடியதும் கூட. உங்கள் கருத்தை அப்படியே நான் வழிமொழிகிறேன்.

'திருவிளையாடல்' நூறாவது நாள் மற்றும் வெள்ளிவிழாக் கட்டிங்குகள் கண்களுக்கும், கருத்துக்கும் விருந்து.

'திருவிளையாடல்' கல்கி விமர்சனமும் அருமை.

vasudevan31355
1st August 2012, 02:05 PM
டியர் வினோத் சார்,

நடிகர் திலகத்தின் 'ஞானஒளி' காவியம் தான் அவர் நடித்த காவியங்களிலேயே எனக்கு நெம்பர் 1.
அப்படிப்பட்ட காவியத்தின் பொம்மை இதழ் விளம்பர நிழற்படத்தைத் தந்து உள்ளம் குளிரச் செய்து விட்டீர்கள். அதற்காக என் வாழ்நாள் நன்றிகள் தங்களுக்கு.

vasudevan31355
1st August 2012, 02:19 PM
இறைவனாரின் இனிய நிழற்படங்கள்.

http://i.ytimg.com/vi/EO2CuqL4rQ8/0.jpg

http://i43.tinypic.com/ok4qp5.jpg

http://i41.tinypic.com/wjunti.jpg

http://i44.tinypic.com/bdllc8.jpg

http://i.ytimg.com/vi/prX9aA3jvrU/0.jpg

http://i.ytimg.com/vi/RJhyuTQb0hY/0.jpg

http://i1098.photobucket.com/albums/g364/albertjraj/Thiruvilayadal0006.jpg

http://i1098.photobucket.com/albums/g364/albertjraj/Thiruvilayadal0008.jpg

http://padamhosting.com/out.php/i126890_vlcsnap2011112115h54m44s186.png

அன்புடன்,
வாசுதேவன்.

Richardsof
1st August 2012, 02:32 PM
[http://i48.tinypic.com/2vs3tps.jpg

KCSHEKAR
1st August 2012, 03:38 PM
நடிகர்திலகம் சிவாஜி - வெறும் மேக்கப் டெஸ்ட் மட்டுமே எடுத்து, படத்தில் இடம்பெறாத சில வேடங்கள்.

http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/207514_327093570714422_415269614_n.jpg

P_R
1st August 2012, 03:43 PM
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/207514_327093570714422_415269614_n.jpg
:shock:
திருவள்ளுவர் தவிர, பிற வேடங்கள் என்னென்ன?

SoftSword
1st August 2012, 03:46 PM
thriuvalluvar - this wud've been interesting..
appar?
ilangovadigal?

KCSHEKAR
1st August 2012, 03:49 PM
டியர் வாசுதேவன் சார், றாகவேந்திரன் சார், பம்மலார் சார், திருவிளையாடல் திரைப்படம் குறித்த பதிவுகள் கலக்கல்

KCSHEKAR
1st August 2012, 04:30 PM
:shock:
திருவள்ளுவர் தவிர, பிற வேடங்கள் என்னென்ன?

மறைமலை அடிகள், ராவணன் - (சீதையைக் கடத்தியபோது போட்ட பிட்சை வேடம்) திருவள்ளுவர் மற்றும் சேக்கிழார்

P_R
1st August 2012, 04:38 PM
நன்றி.
மறைமலை அடிகளா? அவர் சமகாலத்தவர் தானே.

KCSHEKAR
1st August 2012, 04:39 PM
சிவாஜி எனும் மூன்றெழுத்து

திவாகர்

சிவாஜி எனும் மூன்றெழுத்துத் தமிழ்க் கலைஞன். இந்தக் கலைஞனைப் பற்றி எப்படி எழுதினால் அவனுக்குப் பெருமை சேர்க்கும் என்பதாக எத்தனையோ எழுத்தாளர்களால் போற்றிகள் பாடப்பட்டவன். இப்படிப்பட்ட கலைஞன் ஒருவன் ஒருவேளை மேற்கத்தியப் படங்கள் மூலம் வெளிப்ப்ட்டிருந்தால் ஆஸ்கார் விருதுகள் பயனற்றவையாக தென்பட்டிருக்கும். அந்நியர் ஆதிக்கத்திலிருந்து விடுபட்டு மீண்டு கொண்டிருந்த இந்தியாவின் தென் எல்லையில் இந்த நட்சத்திரம் ஒளிவிட்டுக் கொண்டிருந்தது நாம் செய்த அதிர்ஷ்டம்.

தமிழ் எனும் மூன்றெழுத்து இந்தக் கலைஞனை வெளியே விடாமல் பாசம், நேசம், கருணை, அன்பு, பக்தி, பெருமை எனும் மூன்றெழுத்துகள் வலையில் கட்டிப்போட்டு தன்னுடனேயே வைத்துக்கொண்டு விட்டது.

அவர் இறுதிக்காலக் கட்டங்களில் அவரைச் சந்திக்கும் ஒரு அருமையான வாய்ப்பு, பூக்கள் எல்லாம் தானாகவே முன்வந்து தேனைச் சொரிந்ததோடு அதை வாயிலும் ஊட்டக் கிட்டிய சந்தர்ப்பம் ஒன்று, அடியேனுக்கு வாய்த்தது. ஆமாம். சிவாஜி ஒரு நிகழ்ச்சிக்காக விசாகப்பட்டினம் வந்தார். அடுத்தநாள் காலை நானும் திரு சம்பத் அவர்களும் பத்து நிமிட அப்பாயிண்ட்மெண்ட் கிடைக்கப்பெற்று அவரைச் சந்திக்க சென்றது வாழ்க்கையில் மறக்கமுடியாத நிகழ்ச்சியாக மாறிவிட்டது என்பது என்னவோ வாஸ்தவம்தான்.

பத்து நிமிஷம் என்பது ஒரு மணி நேரத்துக்கும் மேலாகச் சென்றதும் அவரோடு பல விஷயங்களைப் பகிர்ந்து கொண்டதும் நாங்கள் மறக்க முடியாதவைதான். காமராஜர் அரசியலிலிருந்து மேயராக இருந்த ஸ்டாலின் சென்னை ஆட்சி வரை (அவர் இல்லத்து காஃபி பலரால் புகழப்படுகின்றது என்பது உட்பட) அலசினார். எனக்கு மிகவும் பிடித்த அவர் படம் புதிய பறவை என்றேன். அவரும் அதையே தனக்கு மிகவும் பிடித்த அவரது படங்களில் ஒன்றாகச் சொன்னார். சென்னை வந்தால் அவர் இல்லத்துக்கு அழைத்தார் (ஒப்புக்காகவோ நிஜமாகவோ, ஆனால் அவர் அழைப்பு எங்களுக்கு மிகப்பெரிய கௌரவமாகத்தான் அந்த வேளையில் பட்டது).

புதிய பறவை, அவர் படங்களில் மிக வித்தியாஸமான படம். இருபத்தோராம் நூற்றாண்டு தமிழ்ப்படத்தை இருபதாம் நூற்றாண்டின் மத்தியிலேயே எடுத்துவிட்டார்கள். ஒவ்வொரு கட்டத்தையும், கோணத்தையும் யோசித்து மிகவும் கஷ்டப்பட்டு எடுத்திருக்கிறார்கள் என்பதை அந்தப் படத்தை மிக உன்னிப்பாகப் பார்த்தவர்கள் சொல்வார்கள். மனைவியைக் கொன்றுவிட்டு ஊரை விட்டு ஓடிவந்தவன் பாத்திரத்தில் வெகு சிறப்பாக நடித்திருப்பார். ஒரு கட்டத்தில் நிம்மதியிழந்த மனநிலையில் அந்த மனிதன் உறங்கவேண்டும். அப்படி உறக்கம் தரும், மன நிம்மதியைக் கொடுப்பவள் ஆறுதலாக அருகே வந்து பாடத் தொடங்குகிறாள்., அந்தப் பாடலில் ஒரு சிலவரிகளைக் கேட்டுக்கொண்டே எப்படி உறங்குவது என்பதை அந்த சில தருணங்களில் சிவாஜி தன் முகபாவனையில் காண்பித்திருப்பார். நாற்காலியில் அப்படியே அமர்ந்து கண்கள் மெல்ல மெல்ல செருக தலை சற்றே பின்னே சாயச் சாய அவர் தூங்குவதாக நடிக்கும் காட்சி அதி அற்புதமானதாகப்பட்டது எனக்கு. தூங்க முடியும், தூங்குவது போல நடிக்கவும் முடியும், ஆனால் தூக்கம் எனும் உணர்வு உண்மையாகவே எப்படி நம்மைத் தழுவுகிறது என்பதை வெறும் முகபாவத்தால் தத்ரூபமாகக் காண்பிக்க முடியுமா.. முடியும் என்று நிரூபித்தவன் அந்தக் கலைஞன். அதே போல அந்தப் படத்தில் வரும் எங்கே நிம்மதி பாடலில் கூட ‘எனது கைகள் மீட்டும்போது வீணை அழுகின்றது, எனது கைகள் தழுவும்போது மலரும் சுடுகின்றது’ என்பதற்கான கட்டத்தில் வித விதமான உணர்ச்சிகளை முகபாவங்களாகக் காட்டும் (அதுவும் ஒரே ஃபிரேமில்) சிவாஜியைப் பார்க்கலாம். அதி அற்புதக் கலைஞன் என்பதில் மிகையே இல்லை.

ஜூலை 21 ஆம் நாள், சிவாஜியின் நினைவுநாளன்று வல்லமை குழுவில் ஒரு கவிதை பார்த்தேன். சட்டென மனதைத் தைத்தது. ’போதும் எழுந்து வா’ என்ற கவிதை, கவிஞர் ருத்ரா 2001 ஆம் ஆண்டு எழுதியதை மறுபதிப்பாக வெளியிட்டார். நான் மேலே சொன்ன புதிய பறவை கருத்தோடு அப்படியே ஒத்துப் போகிறது பாருங்கள். இந்தக் கலைஞன் நிஜமாகவே இறந்துவிட்டானா.. அல்லது இறந்தது போல நடித்துக் காட்டுகிறானா.. இயற்கை இவனை இறக்க வைக்கமுடியுமா.. காலம் இந்தக் கலைஞனைக் காலனிடம் ஒப்படைத்து கடமையைச் செய்து விட்டதாக மார் தட்டிக் கொள்ளமுடியுமா.. தமிழன்னை தன் தலைமகனை தமிழகத்தில் இருந்தது போதும், தன்னுள்ளே அடங்கிவிடு என்று அடக்கிவிட முடியுமா, இந்த அருமையான கலைஞனைக் கொடுத்த கடவுள் இவன் இங்கே இருந்தது போதும், இனி தனக்கு மட்டுமே தன் கலையைக் காண்பிக்கட்டும் என சட்டென மறைத்துவிட முடியுமா..

ஒருவேளை புதிய பறவை படத்தில் அந்த உறக்கக் காட்சி படம் பிடித்தவுடன், ’ஷாட் ஓகே சார்.. பிரமாதமான நடிப்பு, உறங்கியது போல நடித்தது போதும், எழுந்து வாருங்கள்’ என்று சொல்வது போல, இந்தக் கலைஞனை இந்த மீளா உறக்கத்திலிருந்து எழுப்ப முடியுமா….

“மரணத்தை
இது வரை நான் காட்டியது
வெறும் அபிநயம் தான்.
இதோ
உயிர்த்துடிப்பான
ஒரு மரணத்தைப்பார்”..என
அந்த மரண தேவனுக்கு
நடித்துக்காட்ட..உன்
துடிப்பை நிறுத்தினாயா ?

இப்போதும்
அவன் ஏமாந்துதான் போனான்.
இப்போது
நீ நடித்துக்காட்டியது
ஒரு மரணத்தின்
மரணத்தை.
உனக்கு மரணம் இல்லை.
நிஜம் எது ? நிழல் எது ?
“போதும்.எழுந்து வா.”

நடித்தது போதும், இயற்கையாக நடித்திருக்கிறாய், வா, இன்னொரு படத்துக்கு நம் கடமையைச் செய்யப்போகலாம் என்று கூப்பிடத் தோன்றுகிறதே.. என்ன மாயம் செய்தால் இவன் திரும்ப வருவான்.. என்ன மந்திரம் போட்டால் மறுபடியும் இந்த மண்ணுக்கு வந்து இப்படி காலத்தையும் வென்ற படைப்புகளை அள்ளித் தருவான்..

தெரியவில்லைதான். ஆனாலும் சிவாஜி எனும் அந்த மூன்றெழுத்து கலைஞனிடம் ருத்ரா எனும் மூன்றெழுத்துக் கவிஞர் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்லவாவது ஒருமுறை சிவாஜி எழுந்து வரலாம் என்றுதான் தோன்றுகிறது.

அதே சமயத்தில் காலத்தால் மாற்றவே முடியாத இன்னொரு அதிசயம் இந்தக் கலைஞன் என்றும் சொல்லத் தோன்றுகிறது.

Courtesy - vallamai.com

mr_karthik
1st August 2012, 04:51 PM
அன்புள்ள பம்மலார் சார், வாசுதேவன் சார், சந்திரசேகர் சார்.... பாராட்டுக்கு நன்றி.

பம்மலார் சார்,

நீங்கள் இரட்டிப்பு மகிழ்ச்சியடைவீர்கள் என்பதற்காகவே இந்திய அணி கிரிக்கெட் வீரர்களை பெயர்களுடன் குறிப்பிட்டிருந்தேன். இன்று தாங்கள் வழங்கியுள்ள 'முதல் தேதி' முதல் வெளியீட்டு விளம்பரமும், 'என்னைப்போல ஒருவன்' மறு வெளியீட்டு விளம்பரமும் அருமை. மிக்க நன்றி

ராகவேந்தர் சார்,

திருவிளையாடல் படத்தைப்பற்றிய மீள்பதிவுகள் அருமை. அதில் எனது பதிவையும் கொண்டுவந்தமைக்கு மிகவும் நன்றி.

வாசுதேவன் சார்,
திருவைளையாடல் ஸ்டில்கள் அற்புதம். பாராட்டுக்கள். தங்கள் மூவரின் கைவண்ணத்தில் திரி ஒளிர்கிறது.

சந்திரசேகர் சார்,
நடிகர்திலகத்தின் மேக்கப் டெஸ்ட் செய்யப்பட்ட அரிய நிழற்படங்கள் அருமை. அவற்றுள் திருவள்ளுவர் வேடம் படத்துக்காக எடுக்கப்பட்டதல்ல, உலகத்தமிழ் மாநாட்டின்போது (1968) சென்னை கடற்கரையில் நடிகர்திலகத்தின் செலவில் திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டபோது அதற்கு மாடலாக போஸ் கொடுத்த ஸ்டில் அது. இதுபற்றி ஏற்கெனவே நமது ராகவேந்தர் சார் பாகம் 7-ல் குறிப்பிட்டிருந்தார்.

வினோத் சார்,
தாங்கள் தந்துள்ள 1965 செய்தித்தாள் பழைய நினைவுகளை கண்முன் கொண்டு வருகிறது. நன்றி. ஒரு தீவிர எம்.ஜி.ஆர். ரசிகர், நடிகர்திலகத்தின் திரியில் இவ்வளவு ஆர்வமாக பங்கு கொள்வது ஆரோக்கியமான நல்ல விஷயம். அதற்கு ஸ்பெஷல் பாராட்டுக்கள்.

KCSHEKAR
1st August 2012, 04:52 PM
டியர் வினோத் (esvee) சார்

ஞான ஒளி விளம்பரம், பிரேம்நகர், வசந்த மாளிகை புகைப்படங்கள் மற்றும் தங்களுடைய பதிவுகள் அருமை. நன்றி.

KCSHEKAR
1st August 2012, 05:08 PM
Dear Kaarthik Sir,



நடிகர்திலகத்தின் மேக்கப் டெஸ்ட் செய்யப்பட்ட அரிய நிழற்படங்கள் அருமை. அவற்றுள் திருவள்ளுவர் வேடம் படத்துக்காக எடுக்கப்பட்டதல்ல, உலகத்தமிழ் மாநாட்டின்போது (1968) சென்னை கடற்கரையில் நடிகர்திலகத்தின் செலவில் திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டபோது அதற்கு மாடலாக போஸ் கொடுத்த ஸ்டில் அது. இதுபற்றி ஏற்கெனவே நமது ராகவேந்தர் சார் பாகம் 7-ல் குறிப்பிட்டிருந்தார்.


Yes, you are right. Thanks

Richardsof
1st August 2012, 05:50 PM
டியர் வினோத் (esvee) சார்

ஞான ஒளி விளம்பரம், பிரேம்நகர், வசந்த மாளிகை புகைப்படங்கள் மற்றும் தங்களுடைய பதிவுகள் அருமை. நன்றி.

Dear KCS SIR

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

vasudevan31355
1st August 2012, 07:13 PM
அன்பு பம்மலார் சார்,

முதல் தேதி அ(இ)ன்று முதல் தேதி காவியத்தின் முதல் வெளியீட்டு விளம்பரம் பதித்து எதிலும் தாங்கள் முதல்வர் என்று மீண்டும் நிரூபித்துள்ளீர்கள். காணக் கிடைக்காத விளம்பரம் அளித்ததற்கு என் முதல் நன்றிகள்.

vasudevan31355
1st August 2012, 07:50 PM
நடிகர் திலகத்தின் நாயகியர். (ஒரு விஷுவல் தொடர் பதிவு)

(தொடர்-1)

நடிகர் திலகம் அவர்களுடன் ஜோடியாக நடித்து தங்களுக்குப் பெருமையையும், மங்காத புகழையும் சேர்த்துக் கொண்ட நடிகைகள் பலர். தலைவருக்கு இந்த நடிகைதான் சரியான ஜோடி... இந்த நடிகைதான் ராசியான ஜோடி, தலைவர் அழகுக்கேற்ற ஜோடி இவர்தான், தலைவர் நடிப்பிற்கு ஓரளவிற்கு ஈடு கொடுக்கக் கூடிய நடிகை இவர்தான், வயதான ரோல்களின் நடிகர் திலகம் நடித்தால் இவர்தான் ஜோடியாக சரிப்படுவார்... லவ் சீன்களில் தலைவரோடு கலக்கலாக டூயட் பாடி நடிக்க ஏற்றவர் இவர்தான்... என்று பட்டி மன்றம் வைக்கும் அளவிற்கு நம்மிடையே ஆரோக்கிய வாதங்கள் ஏற்படுவதுண்டு. ஏன் வம்பு? தலைவருடன் நடித்த எல்லா ஜோடிகளையும் புகைப்படங்கள் வாயிலாகவும், வீடியோக்கள் வாயிலாகவும் பார்த்து ஒரு முடிவெடுத்து விடலாமே என்ற சீரிய நோக்கில் தொடங்கப் படுவதுதான் இந்த 'நடிகர் திலகத்தின் நாயகிகள்' என்ற புதிய தொடர் பகுதி. வழக்கம் போல இந்த புதிய தொடருக்கும் தங்கள் மேலான ஆதரவு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் நடிகர் திலகத்தின் முதல் கொடுத்து வைத்த ஜோடியான பண்டரிபாய் அவர்களின் நடிகர் திலகத்துடனான நிழற்படத்தையும், நடிகர் திலகத்துடன் அவர் ஜோடி சேர்ந்த பாடல் ஒன்றையும் பதிப்பிக்கிறேன். தங்கள் அனைவரது மேலான கருத்துக்களை ஆவலுடன் எதிர்நோக்குகிறேன். நன்றி!

நடிகர் திலகத்தின் நாயகியர் (1) பண்டரிபாய்

படம்:பராசக்தி

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/1-120.jpg

தலைவருக்கு முதல் காதல் பாடல். தலைவர் படத்தில் பாடாமல் இருந்தாலும் முதல் காதல் டூயட் பாடல் போலல்லவா இது. ரசித்து மகிழ்வோமா?...

"புதுப் பெண்ணின் மனசைத் தொட்டுப் போறவரே!"


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=PGBryGdL0FQ

(ஜோடிகள் தொடரும்)

அன்புடன்,
வாசுதேவன்.

RAGHAVENDRA
1st August 2012, 09:14 PM
வாசுதேவன் சார்,
புதிய கோணங்களில் புதிய பார்வைகளில் புதிய அணுகுமுறைகளில் புதிய பரிணாமங்களில் நடிகர் திலகம் என்கிற பல்கலைக்கழகத்தின் ஒவ்வொரு துறையிலும் புகுந்து ஆய்வு செய்யும் தங்கள் முயற்சிகளுக்கு நம் அனைவரின் ஆதரவும் என்றென்றும் உண்டு. நடிகர் திலகத்தின் சண்டைக் காட்சிகளைப் பற்றித் தாங்கள் அளித்த பதிவுகள், எப்பேர்ப்பட்ட ஆராய்ச்சி வல்லுநர் பார்வையிலும் படாதது, எப்பேர்ப்பட்ட மேதாவிகளும் அணுகாதது, திரும்பத் திரும்ப தில்லானா மோகனாம்பாள், திருவிளையாடல், தேவர் மகன் என பிரபலமான சில குறிப்பிட்ட படங்களையே சொல்லி நடிகர் திலகத்தை ஒரு குறுகிய வட்டத்துக்குள் சிலர் அடைக்க செய்த முயற்சிகளை முறியடித்து அவர் உண்மையிலேயே பல்துறை வித்தகர் என்பதற்கு மற்றுமோர் சான்றாக என் தம்பி, தங்கை, ராஜா, மற்றும் மக்களால் அதிகம் அறியப் படாத படங்களிலிருந்தும் காட்சிகளை வழங்க உள்ள, நடிகர் திலகத்தின் சண்டைக் காட்சிகளைப் பற்றிய, தங்களுடைய அலசலும் அணுகுமுறையும் பல சிவாஜி ரசிகர்கள் நெஞ்சில் பால் வார்த்தது. . அந்த வரிசையில் இந்த நாயகியர் அணிவகுப்பும் இடம் பெறும் என்பது திண்ணம். அன்றைய தலைமுறை நாயகியர் தொடங்கி வெவ்வேறு தலைமுறை நடிகையருடன் இணையாக நடித்த அவருடைய சிறப்பினை எடுத்தியம்பும் ஆவணமாக இந்தப் பகுதி இடம் பெறும்.

தங்களுக்கு உளமார்ந்த நல்வாழ்த்துக்கள்.

pammalar
1st August 2012, 10:02 PM
காவியக் காட்சிகள் : 2

பொக்கிஷாதி பொக்கிஷம்

வளர்பிறை(1962)

'பேசும் படம்' இதழிலிருந்து...
[உதவி : நல்லிதயம் திரு. ஜி.மாணிக்கவாசகம்]

இந்த அரிதும் அரிதான விஷுவல் ஆவணப்பதிவை நமது மூத்த சகோதரர் திரு.ராகவேந்திரன் அவர்களுக்கு Dedicate செய்கிறேன்..!

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC6170-1.jpg

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC6171-1.jpg

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC6172-1.jpg

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC6173-1.jpg

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC6174-1.jpg

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC6175-1.jpg

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC6176-1.jpg

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC6177-1.jpg

பக்தியுடன்,
பம்மலார்.

J.Radhakrishnan
1st August 2012, 10:21 PM
[QUOTE=vasudevan31355;917217]நடிகர் திலகத்தின் நாயகிகள். (ஒரு விஷுவல் தொடர் பதிவு)

இந்த 'நடிகர் திலகத்தின் நாயகிகள்' என்ற புதிய தொடர் பகுதி. வழக்கம் போல இந்த புதிய தொடருக்கும் தங்கள் மேலான ஆதரவு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் நடிகர் திலகத்தின் முதல் கொடுத்து வைத்த ஜோடியான பண்டரிபாய் அவர்களின் நடிகர் திலகத்துடனான நிழற்படத்தையும், நடிகர் திலகத்துடன் அவர் ஜோடி சேர்ந்த பாடல் ஒன்றையும் பதிப்பிக்கிறேன். தங்கள் அனைவரது மேலான கருத்துக்களை ஆவலுடன் எதிர்நோக்குகிறேன். நன்றி![/color][/B][/size]

டியர் வாசு சார்,

எப்போதும் போல் தங்களின் முயற்சிகளுக்கு அனைவரின் ஆதரவும் என்றும் உண்டு, ஒரு வேண்டுகோள்! கதாநாயகி சமந்தப்பட்ட படம் மற்றும் வீடியோ உடன் அவர் எத்தனை படங்களில் நம் தலைவருடன் பங்கேற்றார் என்பதையும் குறிப்பிட்டால் நன்று.

pammalar
1st August 2012, 10:49 PM
டியர் வாசுதேவன் சார்,

தங்களின் இதயபூர்வமான பாராட்டுக்களுக்கு எனது இதயம் நிறைந்த நன்றிகள்..!

இறைவனாரின் இனிய நிழற்படங்கள், ஒரு கோவிலுக்கு சென்று வந்தது போன்ற உணர்வை ஏற்படுத்தியது..!

'நடிகர் திலகத்தின் நாயகியர்' விஷுவல் தொடருக்கு எனது பரிபூரணமான நல்வாழ்த்துக்கள்..! ஆரம்பமே அமர்க்களம்..! அவரது வெள்ளித்திரை முதல் நாயகியான பண்டரிபாய் அவர்களோடு இந்நெடுந்தொடரைத் தாங்கள் துவக்கியிருப்பது மிகப் பொருத்தமான ஒன்று..! தொடர்ந்து அசத்துங்கள்..! கண்டு களிக்க காத்திருக்கிறோம்..!

அன்புடன்,
பம்மலார்.

pammalar
1st August 2012, 11:32 PM
டியர் mr_karthik,

நான் மகிழ்ச்சி அடைவேன் என்பதற்காக தங்களது நட்சத்திர கிரிக்கெட் பதிவில், வந்திருந்த இந்திய அணிவீரர்களைக் குறிப்பிட்டு எழுதியிருந்ததற்கும், தங்களின் மனமார்ந்த பாராட்டுக்கும் எனது ஸ்பெஷல் நன்றிகள்..!

அன்புடன்,
பம்மலார்.

RAGHAVENDRA
1st August 2012, 11:52 PM
டியர் வாசுதேவன் சார்
ராதாகிருஷ்ணன் சார் கூறியது போல் உடன் நடித்த கதாநாயகி நடிகை நடித்த படங்களைப் பற்றியும் இங்கு கூறலாம்.

அதற்கேற்ப, முதலில் கதாநாயகியாக அல்லது முக்கிய வேடத்தில் நடித்த நடிகைகளின் பெயர்களைப் பார்ப்போமா

Ambika Maadhavi Saarada
Anjali Devi Maalavika Saavitthiri
Bhanumathi, P. Madhuri Devi Saritha
Bharathi Malin Ponsekha Saroja Devi
Chandirakala Manjula Saroja, B.S.
Deepika Manorama Simran
Devika Meena Soundharya
Geetha Mynavathi Sowcar Janaki
Girija Nadhiya Sri Ranjani
Gouthami Nirmala Sripriya
Jamuna Oorvasi Srividhya
Jayachithra Padhmapriya Suhaasini
Jayalalitha Padmini Sujatha
Jayasudha Pandari Bai Usha Nandini
Jeevitha Raadha Vaanishree
Kaanchana Raadhika Vadivukkarasi
Kajal Kiran Rajamma, M.V. Varalakshmi, G
Krishnakumari Revathi Vijaya, K.R.
Lakshmi Roja Vijayakumari
Lalitha Rukmini Vyjayanthimala
M.N.Rajam
Names left out in the above list:
Vyjayanirmala, Latha, Sridevi
Home

J.Radhakrishnan
1st August 2012, 11:55 PM
டியர் பம்மலார் சார்,

தலைவரின் காவியங்களில் இது வரை அதிகம் அறியப்படாத "வளர்பிறை" பற்றிய தங்களின் பதிவு அரிதான ஒன்றாகும்!

பதிவிட்டமைக்கு நன்றி!

pammalar
2nd August 2012, 12:08 AM
[http://i48.tinypic.com/2vs3tps.jpg

டியர் esvee சார்,

'தினத்தந்தி' நாளிதழின், 23.4.1965 [வெள்ளிக்கிழமை] தேதியிட்ட இதழின் பக்கத்தை பார்த்துக் களித்துவிட்டு, ஒரே வார்த்தையில் பாராட்ட வேண்டுமென்றால் 'அதியற்புதம்' என்றுதான் சொல்ல வேண்டும். மக்கள் திலகத்தின் மகாமெகாஹிட் காவியமான "எங்க வீட்டுப் பிள்ளை"யின் 100வது வெற்றித் திருநாள் [23.4.1965] விளம்பரம் வெளிவந்த பேப்பராயிற்றே..! தாங்கள் மடித்துக் கொடுத்துள்ள பக்கத்தின் மறுபக்கத்தில் முழுப்பக்க விளம்பரமாக "எங்க வீட்டுப் பிள்ளை" 100வது நாள் விளம்பரம் வந்திருக்கக்கூடும்..! இந்த விளம்பரத்தின் (என்னிடம் உள்ள) நகல் வடிவை, சில தினங்களுக்குமுன், அடியேன் மக்கள் திலகம் திரியில் இடுகை செய்திருந்தது தங்களுக்கு நினைவிருக்கும்..!

தாம்பரம் 'எம்.ஆர்.' அரங்கில் புதிய காவியமாக நடிகர் திலகத்தின் "சாந்தி" அன்று [23.4.1965] வெளியாகிறது...அதற்கு முந்தையதினம்தான் அக்காவியம் சென்னை[சாந்தி, மஹாராணி, சயானி] மற்றும் தென்னகமெங்கும் ரிலீசாகியிருக்கிறது. 'சித்ரா'வில், காதல் மன்னனின் "பூஜைக்கு வந்த மலர்" [வெளியான தேதி : 12.3.1965] திரைப்படத்தை எடுத்துவிட்டு நடிகர் திலகத்தின் "தங்கமலை ரகசியம்", 'காமதேனு'வில் நடிகர் திலகத்தின் "குங்குமம்", சைதை 'ஜெயராஜ்' அரங்கில் மக்கள் திலகத்தின் "படகோட்டி", மேலும் சில அரங்குகளில் மற்ற நட்சத்திரங்களின் திரைப்படங்கள் என இந்த ஆவணம் நம்மை சொர்க்கபுரிக்கு அழைத்துச் செல்கிறது. இடுகை செய்த தங்களுக்கு இனிய நன்றிகள்..!

அன்புடன்,
பம்மலார்.

pammalar
2nd August 2012, 12:22 AM
டியர் பம்மலார் சார்,

தலைவரின் காவியங்களில் இது வரை அதிகம் அறியப்படாத "வளர்பிறை" பற்றிய தங்களின் பதிவு அரிதான ஒன்றாகும்!

பதிவிட்டமைக்கு நன்றி!

பாராட்டுக்கு நன்றி, ஜேயார் சார்..!

pammalar
2nd August 2012, 04:47 AM
டியர் வாசுதேவன் சார்,

தாங்கள் தொடர்ந்து வனப்போடு வழங்கவுள்ள 'நடிகர் திலகத்தின் நாயகியர்' விஷுவல் தொடர் சார்ந்து, அக்கதாநாயகியர் நமது நடிகர் திலகம் குறித்துக் கூறிய கருத்துரைகளை, முடிந்த வரை, வரலாற்று ஆவணப் பொக்கிஷப்பதிவுகளாக அடியேன் வழங்கலாமே என்ற எண்ணம் உதயமானது. அந்த எண்ணம் செயல்வடிவம் பெற்றுள்ளது எமது அடுத்த பதிவில்..! இதற்கு காரணகர்த்தாவாக விளங்கிய தங்களுக்கு எனது கனிவான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்..!

அன்புடன்,
பம்மலார்.

pammalar
2nd August 2012, 04:57 AM
நடிகர் திலகம் பற்றி பிரபலங்கள் : 1

பாசத்திலகம் பற்றி நடிகை பண்டரிபாய்

பொக்கிஷாதி பொக்கிஷங்கள் : இரு அரிய ஆவணங்கள்

வரலாற்று ஆவணம் : நடிகன் குரல் : ஆகஸ்ட் 1962
[நடிகர் திலகம் சிவாஜி கணேசன் உலக வெற்றி உலா மலர்]
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC6178-1.jpg

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC6179-1.jpg

வரலாற்று ஆவணம் : தினத்தந்தி [ஞாயிறு மலர்] : 2.9.2001
[இந்த ஆவணத்தை தெளிவாகப் படிக்க பதிவிறக்கம் (Download) செய்து படிக்கவும்]
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC6180-1.jpg

பக்தியுடன்,
பம்மலார்.

vasudevan31355
2nd August 2012, 06:26 AM
டியர் ராகவேந்திரன் சார்,

தங்களின் வளமான ஆதரவிற்கு என் தலை வணங்கிய நன்றிகள். தங்களைப் போன்ற அன்பு உள்ளங்களின் சப்போர்ட் இருக்கும் வரையில் இங்கு எனக்கும், அன்பு பம்மலார் சாருக்கும் என்ன கவலை? வானத்தையே வில்லை வளைத்து விடலாமே! நீங்கள் கூறியுள்ளது போல பல்வேறு கோணங்களில் நமது இதய தெய்வத்தை அலசவேண்டும் என்பதே என் அவா. அதற்கு முதல் ஆதரவு தங்களுடையதும், பம்மலாருடயதும் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. மற்ற அன்பு நண்பர்களின் ஆதரவிற்கும் நன்றி.

நீங்கள் கூறியுள்ளது போல நடிகர் திலகத்தின் ஸ்டைல் சண்டைக்காட்சிகள் தொடர் கண்டிப்பாக நூறு சதவிகிதம் இங்கே தொடரும் என்று மனம் நிறைந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். அது என்னுடைய நெடுநாள் கனவு. விருப்பம்.

தாங்கள் அளித்துள்ள நடிகர் திலகத்துடன் நடித்த நாயகிகள் பட்டியல் மலைப்பைத் தருகிறது. அத்தனை நடிகைகளின் பெயர்களையும் அழகாகச் செதுக்கி வைத்து விட்டீர்கள். அதற்காக மிக்க நன்றிகள்.

vasudevan31355
2nd August 2012, 06:31 AM
டியர் ராதாகிருஷ்ணன் சார்,

தங்களது மேலான ஆதரவிற்கு என் அன்பு நன்றிகள்.

vasudevan31355
2nd August 2012, 06:57 AM
அன்பு பம்மலார் சார்,

தங்களது உயரிய பாராட்டிற்கும், வாழ்த்துகளுக்கும் நன்றிகள்.

இன்று காலை நமது திரியை ஒப்பன் செய்து பார்த்த போது எனது கண்களை என்னால் நம்பவே முடியவில்லை. what a sweet shock! பார்த்தால் வளர்பிறை. அப்படியே ஆடிப் போய் விட்டேன். சர்ப்ரைஸ் பதிவுகளின் சாம்ராஜ்ய சக்கரவர்த்தி அல்லவா தாங்கள்?

நீண்ட நாட்களாக நிறைவேறாத ஆசையாய் இருந்த வளர்பிறை கனவுகள் இன்று தங்களால் நனவானது. இனி தேய்பிறை என்ற சொல்லுக்கே இடமில்லை. பேசும்பட வளர்பிறை ஆவணம் நமது திரியின் வளர்ச்சியை உச்சத்துக்கு கொண்டு செல்லப் போவது நிஜம். பலபேர் வளர்பிறை திரைப்படத்தை பார்த்திருக்க முடியாது. மறு வெளியீடு என்பது அபூர்வம். ஆனால் தங்கள் மூலமாக நிழற்படங்களைக் காண முடிந்ததே என்று அனைவரும் நிச்சயம் சந்தோஷமடைவார்கள். சற்றே குண்டான அழகு முகத்துடன் படு வித்தியாசமான ஹேர்ஸ்டைலோடு தலைவர் காட்சியளிப்பது சூப்பர். அற்புதமான வித்தியாசப் பதிவுக்கு அனந்த கோடி நன்றிகள்.

'நடிகர் திலகத்தின் நாயகியர்' விஷுவல் தொடருக்கு தாங்கள் அளித்திருக்கும் ஆதரவை எண்ணி எண்ணிப் பெருமை கொள்கிறேன். நான் எந்த முயற்சி எடுத்தாலும் ஓடோடி வந்து பாராட்டு மழை பொழிவதிலும் சரி... அதற்கு உற்ற உறுதுணையாய் அனைத்து உதவிகளை செய்வதிலும் சரி... தாங்களும் ராகவேந்திரன் சாரும் ஈடு இணையில்லாதவர்கள் என்பதுதான் பொருத்தமாக இருக்கும். முதல் பதிவாக நடிகர் திலகத்தின் முதல் நாயகி திருமதி பண்டரிபாய் அவர்களின் பேட்டியை மிகச் சரியான தருணத்தில் கூடவே வந்து, உடனே வெளியிட்டு அசத்தியதற்கு நன்றிகள்.

'நடிகர் திலகத்தின் நாயகியர்' விஷுவல் தொடருக்கு மிக மேட்சாக தாங்கள் சம்பந்தப்பட்ட நாயகியர் நடிகர்திலகத்தினுடனான தங்களுடைய அனுபவங்களை பகிர்ந்து கொண்ட பத்திரிக்கையின் ஆவணங்களை இங்கே பதிப்பித்திருப்பது, பதிக்கப் போவது இரட்டிப்பு மகிழ்ச்சியை அளிக்கிறது. இப்போதுதான் 'நடிகர் திலகத்தின் நாயகியர்' விஷுவல் தொடருக்கே முழுப் பெருமையும் கிடைக்கிறது. அதற்கு காரணமான தங்களூக்கும், அதற்கு பேருதவி புரியும் தங்கள் ஆவணங்களுக்கும், அந்த ஆவணங்களைத் தாங்கி பெருமையடைந்திருக்கும் தங்கள் ஆவணக் காப்பறைக்கும் எனது கோடி கோடியான நன்றிகள்.

(குறிப்பு: வளர்பிறை பதிவை நமது அன்பு ராகவேந்திரன் சார் அவர்களுக்கு தாங்கள் dedicate செய்தது சாலப் பொருத்தம். ஏனெனில் ரசிகவேந்தருக்கு உயிர் போன்ற படம் இது. வளர்பிறையைப் பற்றி பல்வேறு சமயங்களில் ராகவேந்திரன் சார் தொலைபேசியிலும், நேரிலும் சிலாகித்து பேசியுள்ளார். இப்படத்தின் வீடியோ எங்கும் இல்லை. அதற்கான் முயற்சியில் பகீரதப்பிரயத்தனம் செய்தும் பாச்சா பலிக்கவில்லை. உலகெங்கும் வலை போட்டு தேடியாயிற்று. கிடைத்தபாடில்லை. என்றாவது ஒருநாள் கிடைக்காமலா போய் விடப் போகிறது என்ற நம்பிக்கையில் இன்று வரை முயற்சி செய்து வருகிறோம். அப்படி கிடைத்து விட்டால் அதன் முதல் பிரதி நமது ரசிக வேந்தருக்குத்தான். அவர்தான் வளர்பிறையின் அதிதீவிர ரசிகர். திரியின் வளர்ச்சிக்கும் வேந்தர்).

vasudevan31355
2nd August 2012, 08:40 AM
அன்பு பம்மலார் சார்,

தாங்கள் பதிவிட்டிருந்த பண்டரிபாய் அவர்களின் பேட்டியில் அவர்கள் குறிப்பிட்டிருந்த கண்கள் பற்றிய நினைவலைகள் என் கண்களைக் குளமாக்கி விட்டது. இப்போது தான் கண்கள் கதையை முழுமையாகத் தெரிந்து கொண்டேன். பல தெரியாத விஷயங்கள் உங்கள் செயற்கரிய பதிவுகளால்தான் தெரிய வருகின்றன. அப்போதே பாசமலர் ரேஞ்சுக்கு கண்கள் கவிதையாய் கலக்கியிருப்பது இப்போதுதான் புரிகிறது. நடிகர் திலகத்தின் நடிப்பை திருமதி பண்டரிபாய் அவர்கள் குறிபபிட்டிருப்பதைப் படிக்கும் போது எப்போது அந்தக் காவியத்தை பார்ப்போம் என்ற ஆவல் மேலிடுகிறது. கண்கள் பூத்துப் போக காத்திருக்க வேண்டியதுதானா?

by the by 'பட்டாக்கத்தி பைரவன்' என்ன மட்டமானவரா ... ஏன்... அவருக்கென்ன?... அவரைப்பற்றி எழுதக்கூடாதா?... ஏதோ குதிரை கடிவாளத்தைக் கட்டிக்கொண்டு ஒரே நேர்க்கோட்டில் பயணிப்பதைப் போல பட்டாக்கத்தி பைரவன் என்றால் அது ஒரு மட்டமான படம் மோசமான படம் என்பது சிலருக்கு வழக்கமாகி விட்டது. அது மோசமான படமாகவே இருந்து விட்டுப் போகட்டும். அதில் இவருடைய நடிப்பின் முத்திரைகள் எவ்வளவு இருக்கிறது தெரியுமா... உருவ அமைப்பு சற்று வித்தியாசமாகிப் போனதால் அந்தப் படத்தின் சிறப்பம்சங்கள் எடுபடாமல் போய்விட்டன...ஏதோ வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று பேசாமல் இப்போது ஒருமுறை நேரம் கிடைத்தால் அப்படத்தைப் பார்க்கட்டும். வெகு வித்தியாசமான பல மூவ்மென்ட்களை அப்படத்தில் காணலாம். அதற்காக பட்டாக்கத்தி பைரவன் ஒரு சூப்பர் படம் என்று நான் வாதிட வில்லை. அந்தப் படத்திலுள்ள சிறப்பம்சங்களை எழுதினால் என்ன தவறு? இந்தப் படத்திலும் அவர் மிகச் சிறப்பாக பல இடங்களில் செய்திருக்கிறார் என்பதை மறைக்க என்னால் இயலாது.

தம்பி என்று தெரியாமல் ஜெய்கணேஷை கட்டிவைத்து சித்திரவதை செய்யும் போது தாய் சௌகார் வந்து உண்மையை சொன்னவுடன் முகத்தில் பல்வேறு உணர்சிகளை அனாயாசமாய் படரவிட்டு "என்ன கொக்கி போட்டு இழுக்குற"...என்று இழுத்துக் கேட்கும் பாணி இதுவரை அவர் எந்தப் படத்திலும் செய்யாதது.

Richardsof
2nd August 2012, 09:24 AM
1972- BOMMAI MAGAZINE



ARTICLE ABOUT NT IN CHITHRA POURNAMI MOVIE.




http://i45.tinypic.com/2qx4vhy.jpg

Richardsof
2nd August 2012, 09:27 AM
http://i48.tinypic.com/126aan5.jpg

Richardsof
2nd August 2012, 09:30 AM
http://i48.tinypic.com/w70co4.jpg

Richardsof
2nd August 2012, 09:54 AM
ALL DEAR FRIENDS, HOPE YOU ALL WILL CELEBRATE NT IN MANNAVAN VANDHANADI [1975-2012] , TODAY 37TH ANNIVERSARY. 02-08-1975
http://i49.tinypic.com/4zyumb.jpg

goldstar
2nd August 2012, 10:25 AM
ALL DEAR FRIENDS, HOPE YOU ALL WILL CELEBRATE NT IN MANNAVAN VANDHANADI [1975-2012] , TODAY 37TH ANNIVERSARY. 02-08-1975


Thank you Vinod sir.

Can we also get NT's release/re-release theater cut outs like you put on MT thread please?

Cheers,
Sathish

KCSHEKAR
2nd August 2012, 11:13 AM
Dear Pammalaar,

Valarpirai from Pesumpadam and Pandaribai's interview are very nice. Thanks.

KCSHEKAR
2nd August 2012, 11:15 AM
Dear Vasudevan Sir,

Heroin's of Nadigarthilagam - your visual serial is very nice. Thanks

Richardsof
2nd August 2012, 12:32 PM
Thank you Vinod sir.

Can we also get NT's release/re-release theater cut outs like you put on MT thread please?

Cheers,
Sathish


Dear sathish

i will try to get NT MOVIES cutouts and paper cuttings in different sources if it is available.
cheers
esvee

KCSHEKAR
2nd August 2012, 12:36 PM
I have seen this rare still of NT in one of my friend's facebook.

http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/NTRareStill.jpg

KCSHEKAR
2nd August 2012, 12:39 PM
Dear Mr.Vinod (esvee)

Article about Chitra Pournami from Bomai is very nice. Thanks

vasudevan31355
2nd August 2012, 01:46 PM
Dear chandrasekaran sir,

Thanks a lot. Rare N.T stiil is simply superb. Thanks for the sharing.

Dear esvee sir,

Thanks for 'bommai' chitra pournami pages. 'Mannavan vanthanadi' one of my favourite movie.

mr_karthik
2nd August 2012, 02:04 PM
அன்புள்ள பம்மலார் சார்,

தாங்கள் அதிரடியாகத் தந்துள்ள 'வளர்பிறை' காவியத்தின் பேசும்படம் இதழ்கள் மட்டில்லா மகிழ்ச்சியைத் தருகின்றன. கிடைத்தற்கரிய இந்த ஆவனங்கள் என் குழந்தைப்பருவ நினைவுகளைத்தூண்டுகின்றன. நான் இதுவரை இப்படத்தைப் பார்த்ததில்லை. காரணம் இதுவரை கண்ணில் படாததே.

என் சின்னஞ்சிறு பிராயத்தில், நாங்கள் குடியிருந்த சென்னை மண்ணடி தம்புச்செட்டித்தெருவிலிருந்து பக்கத்திலுள்ள பவழக்காரத்தெருவுக்கு பால் வாங்கச்செல்லும்போது, அத்தெருவிலிருந்த, வெகு ஆண்டுகளாக வெள்ளையடிக்கப்படாமல் இருந்த வீட்டின் சுவரில் உயரத்தில் இரு பெரிய போஸ்ட்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. அவற்றில் ஒன்று நடிகர்திலகம் நடித்த "வளர்பிறை" இன்னொன்று நாகேஸ்வரராவ், சாவித்திரி நடித்த "மஞ்சள் மகிமை". (அப்போது அதில் நடித்தவர்கள் யார் என்பதெல்லாம் துல்லியமாகத்தெரியாது. அதில் பெரிய படமாக இருப்பவர் சிவாஜி என்பது மட்டும் தெரியும். அவ்வளவு சிறிய வயது). மழை வெயில் படாத தாழ்வாரம் போன்ற இடத்தில் ஒட்டப்பட்டிருந்ததால் பல ஆண்டுகளாக அந்த போஸ்ட்டர்கள் அப்படியே இருந்தன. நானே எப்படியும் ஒரு ஐந்து வருடங்கள் அவற்றைப்பார்த்திருப்பேன்.

அதன்பிறகு வளர்பிறை பற்றிய எந்த ஒரு சிறு துணுக்கைக்கூட பார்த்ததில்லை. இப்போதுதான் சுமார் இரண்டு ஆண்டுக்கு முன்பு நமது ராகவேந்தர் சார் அளித்த பாட்டுப்புத்தக மேல் அட்டையையும், சகோதரி கிரிஜா அவர்களின் தளத்தில் வளர்பிறை படத்தின் சிறு விளம்பரத்தையும் பார்த்தபோது, எனக்கு அன்று அரைக்கால்சட்டை போட்டுக்கொண்டு திரிந்த காலத்தில் பார்த்த மெகா போஸ்ட்டர் நினைவில் நிழலாடியது. இப்போது தாங்கள் அள்ளித்தந்துள்ள பொக்கிஷப்பதிவுகள் மூலம் மீண்டும் இளம் பிராய நினைவுகளுக்குச் சென்றுவிட்டேன்.

(அந்த இளம்பிராய போஸ்ட்டர் நினைவுகளுக்காகவே, பின்னொருமுறை 'மஞ்சள் மகிமை' பிராட்வேயில் மறு வெளியீட்டின்போது பார்த்தேன். நல்ல படம். 'ஆகாய வீதியில் அழகான வெண்ணிலா' போன்ற பாடல்களைக்கேட்டபோது என் சிறுவயது நினைவுகளை எண்ணி கண்கள் கசிந்தன).

'வளர்பிறை'தான் இன்னும் காணக்கிடைக்கவில்லை. ராகவேந்தர் சார் முன்பு எழுதிய குறிப்புகளிலிருந்து இது ஒரு அற்புதமான படம் என்பதை உணர்கிறேன். எப்போது பார்க்க முடியுமோ தெரியவில்லை.

mr_karthik
2nd August 2012, 02:51 PM
அன்பு வாசுதேவன் சார்,

தாங்கள் அதிரடியாகத்துவக்கியிருக்கும், 'நடிகர்திலகத்தின் கதாநாயகிகள்' தொடர் ஒரு இன்ப அதிர்ச்சி. அட்டகாசமான துவக்கம். நீங்கள் மட்டும் எப்படி வித்தியாசமாக சிந்திக்கிறீர்கள் என்று ஆச்சரியமாக இருக்கிறது.

முன்பு நடிகர்திலகம் தனது படங்களில் இசைத்திருந்த இசைக்கருவிகளை ஸ்டில்களுடன் தந்து அசத்தினீர்கள் . சுமார் 60 ஸ்டில்களைத் தந்து ஆச்சரியப்படுத்தினீர்கள். அடுத்து அவர் பல்வேறு படங்களில் நடித்த ஸ்டண்ட் சீன்களை வீடியோவகத்தந்து அசர வைத்தீர்கள். இப்போது இது புதிய தொடர். முதலில் பண்டரிபாய் பற்றி நீங்கள் பதித்ததும், அதற்காகவே காத்திருந்தது போல பம்மலார் அவர்கள் பண்டரிபாயின் பேட்டிக்கட்டுரை வடிவத்தை தந்து இன்பத்தில் மூழ்கடித்துள்ளார்.

தங்களின் புதிய தொடருக்கு இதயம் நிறைந்த பாராட்டுக்கள், நன்றிகள்.

KCSHEKAR
2nd August 2012, 03:31 PM
Ananda Vikatan - 08-08-2012

http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/AnandhaVikatanPg1.jpg
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/AnandhaVikatanPg2.jpg
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/AnandhaVikatanPg3.jpg

parthasarathy
2nd August 2012, 05:23 PM
அன்புள்ள திரு. ராகவேந்தர், திரு. பம்மலார், திரு. வாசு, திரு. கார்த்திக் (உங்களுடைய கிரிக்கெட் வர்ணனை அற்புதம்!) அவர்களே,

உங்கள் எல்லோரையும், நடிகர் திலகத்தின் புதிய வேறொரு திரியில் சந்திப்பதில் ஒரு விதத்தில் மகிழ்ச்சி - மறு விதத்தில், சிறிது வருத்தமாகத் தான் இருக்கிறது.

என்னைப் பொறுத்த வரை, அனைத்து வித விஷயங்களும் - பட ஆவணங்கள், வீடியோ பதிவுகள், ஆய்வுக் கட்டுரைகள், கருத்துப் பரிமாற்றங்கள் - போன்றவை அனைத்தும் ஒரே திரியில் இருந்தால் தான் அது அறுசுவை உண்டி.

அன்புடன்,

இரா. பார்த்தசாரதி

goldstar
2nd August 2012, 06:05 PM
Dear all,

Rare photo of NT with Rajkapoor and Devika.

http://i1075.photobucket.com/albums/w424/sathish1972/NT_Devika.png

Karthik sir, this is for you.

Cheers,
Sathish

vasudevan31355
2nd August 2012, 06:09 PM
நடிகர் திலகத்தின் நாயகியர். (ஒரு விஷுவல் தொடர் பதிவு)

(தொடர்-2)

நடிகர் திலகத்தின் இரண்டாவது காவியமான 'பணம்' படத்தில் அவரது நாயகி 'நாட்டியப் பேரொளி' பத்மினி அவர்கள். ராசியான ஜோடியாக ரசிகர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட இந்த ஜோடி பல சரித்திர சாதனை புரிந்த காவியங்களைக் கொடுத்தது. நடிகர் திலகம் பத்மினி ஜோடி கன கச்சிதமான ஜோடி என்று மக்களால் பெரும் பாராட்டையும் வரவேற்பையும் பெற்றது. பத்மினி அவர்களை செல்லமாக நமது தலைவர் 'பப்பி' என்றுதான் கூப்பிடுவார் என்பது அனைவர்க்கும் தெரிந்ததே. அந்த அளவிற்கு நெருங்கிய நட்பைக் கொண்ட இந்த ஜோடி திரையுலகைக் கலக்கியது. வெற்றி மேல் வெற்றிகளைக் குவித்தது. கேரளா சகோதரிகள் என்று செல்லமாக அழைக்கப்பட்ட லலிதா, பத்மினி, ராகினி ஆகிய மூவரும் சிறுவயதிலேயே திரைத்துறையில் நுழைந்து ஒரு பாடலுக்கான நடனக் காட்சிகளில் நடிக்கத் துவங்கி, பின் திரையுலகையே ஆக்கிரமிப்பு செய்த சகோதரிகள். 'பணம்' காவியத்தில் நடிகர் திலகத்தின் இரண்டாவது ஜோடியாக நடித்த அதிர்ஷ்டத்தை அடைந்த பெருமை பத்மினி அவர்களை சாரும்.

நடிகர் திலகத்தின் நாயகியர் (2) 'நாட்டியப் பேரொளி' பத்மினி

படம்: 'பணம்'

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/panam.jpg

முதன் முதலாக நடிகர் திலகத்துடன் நாட்டியப் பேரொளி இக்காவியத்தில் இணைந்ததால் இந்தப் பாடல் இத்தொடருக்கு அழகு சேர்க்கும் என்று நம்புகிறேன். டூயட்டாக இல்லாவிட்டாலும் நடிகர் திலகமும், பத்மினி அவர்களும் ஜோடியாகவே இப்பாடலில் வருவதால் இந்த ஸ்பெஷல் பாடல்.

"குடும்பத்தின் விளக்கு... நல்ல குடும்பத்தின் விளக்கு"...(எம். எல். வசந்த குமாரி அவர்களின் அற்புதக் குரலில்)


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=5I_zunnmHeI

(ஜோடிகள் தொடரும்)

அன்புடன்,
வாசுதேவன்.

RAGHAVENDRA
2nd August 2012, 06:17 PM
டியர் பார்த்தசாரதி சார்,
தங்களுடைய வரவு மிகவும் மகிழ்வூட்டுகிறது. வருகைக்கு நன்றி.


அன்புள்ள திரு. ராகவேந்தர், திரு. பம்மலார், திரு. வாசு, திரு. கார்த்திக் (உங்களுடைய கிரிக்கெட் வர்ணனை அற்புதம்!) அவர்களே,

உங்கள் எல்லோரையும், நடிகர் திலகத்தின் புதிய வேறொரு திரியில் சந்திப்பதில் ஒரு விதத்தில் மகிழ்ச்சி - மறு விதத்தில், சிறிது வருத்தமாகத் தான் இருக்கிறது.

என்னைப் பொறுத்த வரை, அனைத்து வித விஷயங்களும் - பட ஆவணங்கள், வீடியோ பதிவுகள், ஆய்வுக் கட்டுரைகள், கருத்துப் பரிமாற்றங்கள் - போன்றவை அனைத்தும் ஒரே திரியில் இருந்தால் தான் அது அறுசுவை உண்டி.

அன்புடன்,

இரா. பார்த்தசாரதி

வரவேற்கத் தக்க கருத்து தான். ஆனால் சொல்ல வேண்டிய நேரத்தில், சொல்ல வேண்டிய இடத்தில், சொல்ல வேண்டியவர்களிடம் சொல்லி யிருந்தால் பயன் கிட்டியிருக்க வாய்ப்புண்டு.

RAGHAVENDRA
2nd August 2012, 07:17 PM
டியர் சந்திரசேகர்,
ஆனந்த விகடன் பக்கங்கள், நெல்லை நிகழ்ச்சிகளின் நிழற்படங்கள் என தங்களுடைய அர்ப்பணிப்புகள் அனைத்தும் பாராட்டத் தக்கவை வாழ்த்துக்கள்.

RAGHAVENDRA
2nd August 2012, 07:20 PM
டியர் வாசுதேவன் சார்,
நாயகியர் தொடரில் தங்களுடைய பங்கு ... சூப்பர்... தொடக்கமே அருமையாக உள்ளது. பணம் சேர்த்து வைத்த ஜோடி அவர்களை உச்சியில் கொண்டு சென்றுள்ளது. பணத்தில் ஜோடி சேர்ந்த நடிகர் திலகம் நாட்டியப் பேரொளி ஜோடி தமிழ்த் திரையுலகில் தனி முத்திரை பதித்து போல், மற்றொரு ஜோடி விஸ்வநாதன்-ராமமூர்த்தி, இவர்களும் தங்களுக்கென்று உயர்ந்த இடத்தில் தனி ராஜ்ஜியத்தை அமைத்துக் கொண்டு அங்கிருந்தவாறு அனைவரையும் பார்த்துக் கொண்டுள்ளனர். தங்களுடைய ஒவ்வொரு பதிவிலும் ஈடுபாடு ஜொலிக்கிறது. பாராட்டுக்கள்.

RAGHAVENDRA
2nd August 2012, 07:40 PM
டியர் பம்மலார்,
என்னென்று சொல்ல,,, அதை எப்படிச் சொல்ல...கோடான கோடி நன்றிகள்...
வளர்பிறை திரைப்படத்தைப் பொருத்த வரை நான் மட்டுமல்ல, அத்தனை ரசிகர்களும் என் கருத்தில் உடன் படுவார்கள் என்பது திண்ணம்.
உதாரணத்திற்கு கூண்டு திறந்ததம்மா பாடலைக் கேளுங்கள்.

http://musictub.com/album.php?id=12898&title=Valarpirai%20-%20Tamil_Movie_Songs

பாடல் வரிகள்.. கவியரசர் கண்ணதாசன்


தொகையறா

கன்னத்தில் முத்தமிட்டு
கையணைத்துத் தாலாட்டி
கண்ணழகு பார்த்து கனிந்தாயே - பிள்ளை
இனம் பிரிந்த மான் போல
இங்கே கலங்கி நிற்க
தான் பிரிந்து சென்றாயே தாயே

பல்லவி

கூண்டு திறந்ததம்மா - தாய்ப்
பறவை பறந்ததம்மா
கூடிய துணையும் குஞ்சும் தனியே
வாடிக் கலங்குதம்மா
-- கூண்டு திறந்ததம்மா...

சரணம் 1

தாரம் பிரிந்து
தாயும் மறைந்து
வாயும் இழந்தால் வாழ்வேது..
வஞ்சகர் நடுவே
வாழ்ந்திடும் தந்தை
நெஞ்சினில் உனக்கு இடமேது
--- கூண்டு திறந்ததம்மா...

சரணம் 2

பால் போல் வெளுத்து
நூல் போல் இளைத்து
பத்தியம் இருந்து செத்தாளே
பாசம் கோபம்
ஆசைகள் இடையே
பாலம் போட்டவள் சென்றாளே
அள்ளி அணைத்தவள்
அன்புக் கைகளை
கொள்ளியில் வைத்திட வந்தாயே
உள்ளம் கனிந்து
உலவிடும் தாய்க்கு
ஒரு பிடி அரிசியைத் தந்தாயே
-- கூண்டு திறந்ததம்மா..


வாய் பேசாத ஊனம் வாட்டும் போது அன்பு காட்டிய மனைவி சந்தர்ப்ப வசத்தால் பிரிந்து விடுகிறாள். தாய் காலமாகிறாள். தந்தை இவனை சேர்ப்பதில்லை. இப்படிப் பட்ட சூழலில் அந்த கதாபாத்திரத்தின் உள்ளத்தை அப்படியே வரிகளில் கொண்டு வந்து விட்டார் கவியரசர். அதுவும் படத்தின் கதையையே இந்த வரிகளில்

தாரம் பிரிந்து
தாயும் மறைந்து
வாயும் இழந்தால் வாழ்வேது..
வஞ்சகர் நடுவே
வாழ்ந்திடும் தந்தை
நெஞ்சினில் உனக்கு இடமேது

சொல்லி விட்டார். இந்த சூழலில் இந்தப் பாடல் பின்னணியில் அசரீரி இவரைப் பார்த்துப் பாடுவது போல் ஒலிக்கும். வாயசைப்பு இல்லை. அத்தனை உணர்வுகளையும் ஒரு சேர இந்த காட்சியில் கொண்டு வரவேண்டும். மனைவி பிரிவினால் ஏற்பட்ட துயரம், தாய் பிரிவினால் ஏற்பட்ட துக்கம், தந்தையின் பாசம் இல்லாத ஏக்கம் இப்படி பல விதமான உணர்வுகளை பிரதிபலிக்க எந்தக் கண்ணாடியால் முடியும் நடிகர் திலகம் என்ற கண்ணாடி மட்டும் தான். படம் பார்க்காவிட்டாலும் கூட அவருடைய இந்த தோற்றத்தையும் இந்த பாடலில் அவருடைய உணர்வு பூர்வமான நடிப்பு எவ்வாறு இருக்கும் என்பதை யூகித்து பாருங்கள்... அந்த யூகத்திலேயே நீங்கள் உணர்ச்சி வசப் பட்டு விடுவீர்கள். ஆனால் அவர் தான் யூகத்திற்கப்பாற்பட்டவராயிற்றே... ஏகத்துக்கும் நம்மை கட்டிப் போடுபவராயிற்றே...

அமைதியான முகத்திலேயே அத்தனை உணர்வுகளையும் வரவைத்து நம்மையும் அந்த சூழலில் கலந்து விட செய்வார்.

சும்மாவா சொன்னார்கள் நடிகர் திலகம் என்று..

நாம் என்னதான் எழுதினாலும் அந்தக் காட்சியை நாம் காணும் போது தான் நம்மால் அதை உணர முடியும் என்பதற்கு இந்தப் பாடல் ஒரு சான்று.

பம்மலாருக்கு கோடான கோடி நன்றிகள்.

அன்புடன்
ராகவேந்திரன்

RAGHAVENDRA
2nd August 2012, 07:55 PM
டியர் கார்த்திக்,
தங்களுடைய மலரும் நினைவுகள் சூப்பர்... உண்மையிலேயே அந்தக் காலத்தில் பல படங்கள் நம் நினைவுகளை விட்டு மறைந்தாலும் அவற்றின் சுவடுகள் போல் அந்தப் போஸ்டர்கள் மறைவதில்லை. 1969ல் தெய்வ மகன் படத்தின் போஸ்டர் ஒன்று சென்னை ஒயிட்ஸ் சாலையில் ராயப்பேட்டை மணிக்கூண்டு சந்திப்பில் சத்யம் திரையரங்கிற்காக செல்லும் திசையில் இடது புறம் ஒரு மரம் இருக்கும் அதன் அருகே அந்த சர்ச்சின் சுவற்றில் ஒட்டப் பட்டிருந்தது. கிட்டத் தட்ட 1987 வரை அந்தப் போஸ்டர் அங்கிருந்தது. பல ஆண்டுகள் அங்கிருந்த போஸ்டர் எனக்கு மகிழ்ச்சியாகவும் இருக்கும் அதே சமயம் ஆச்சரியமாகவும் இருக்கும். பல ஆண்டுகள் கழித்து அங்கே அந்த மரமருகே ஒரு பெரியவர் நடைபாதையில் குடியிருந்தார். அவரிடம் கேட்டேன். அதற்கு அவர் சொன்ன பதிலை வைத்து எந்த அளவிற்கு நடிகர் திலகம் ரசிகர்களைக் கொண்டிருக்கிறார் என்பதை அறியலாம். தெய்வ மகன் அந்த போஸ்டரில் விஜய் கேரக்டர் அன்புள்ள நண்பரே தோற்றத்தில் இருக்கும். அது அந்த முதியவருக்கு மிகவும் பிடித்தமானதாம். வறுமையின் காரணமாக நடைபாதையிலேயே வாழ்க்கையைக் கழித்து வந்தாராம். அவ்வப்போது இடத்தை மாற்றுவாராம். அவர் ஒரு தீவிர சிவாஜி ரசிகராம். தெய்வ மகன் போஸ்டரைப் பார்த்ததிலிருந்து இடத்தை மாற்றாமல் அங்கேயே இருந்து வாழ முடிவெடுத்தாராம். காலையில் எழுந்தால் முதலில் அந்தப் போஸ்டரைத் தான் பார்ப்பாராம். அன்றிலிருந்து அங்கேயே இருந்து எந்தப் படத்துக்கு யார் போஸ்டர் ஒட்ட வந்தாலும் தெய்வ மகன் போஸ்டரை எடுக்கவோ கிழிக்கவோ அல்லது அதன் மேல் வேறு போஸ்டர் ஒட்டவோ விடமாட்டாராம். அந்த அளவிற்கு அதனைப் பாதுகாத்து பல ஆண்டுகள் அங்கே வாழ்ந்திருக்கிறார்.

ஒரு நாள் அந்தப் பக்கம் போன போது அந்தப் போஸ்டரைக் காணவில்லை. அந்த முதியவரையும் காணவில்லை. சற்றுத் தள்ளி சாலை ஓரத்தில் டீக்கடை வைத்திருந்த ஒருவரிடம் டீ சாப்பிட்டுக் கொண்டே [டீ சாப்பிட்டதே அந்த சாக்கில் அந்த முதியவரைப் பற்றி விசாரிக்கத் தான்] அவரிடம் முதியவரைப் பற்றிக் கேட்டேன். அப்படியே அந்தப் போஸ்டரையும் விசாரித்தேன். அவர் சொன்ன பதில் ..

சார் அந்தக் கிழவர் கொஞ்ச நாளைக்கு முன்னால் இறந்து விட்டார். இறக்கும் போது அந்தப் போஸ்டரை சேதமடையாமல் அப்படியே எடுத்து நடைபாதையின் மீது போட்டு அதன் மேல் படுத்தார். படுக்கும் போது சொன்னது, நான் போயிட்டா இந்தப் போஸ்டரை சேதப் படுத்திடுவாங்க..

டீயாலும் அந்த செய்தியாலும்

நெஞ்சம் கனத்து விட்டது.

P_R
2nd August 2012, 07:58 PM
வரவேற்கத் தக்க கருத்து தான். ஆனால் சொல்ல வேண்டிய நேரத்தில், சொல்ல வேண்டிய இடத்தில், சொல்ல வேண்டியவர்களிடம் சொல்லி யிருந்தால் பயன் கிட்டியிருக்க வாய்ப்புண்டு.
நேராகவே சொல்லலாமே சார்.

மீண்டும் பேசி கசப்பைக் கிளரவேண்டாம் என்று இருந்தேன். ஆனால் என்னவோ என் நெருக்கடியால் தான் திரி பிளந்தது போன்று சொல்லாமல் சொல்லப்படுகிறது. அதனால் குறைந்தபட்சம் ஒரு தன்னிலை விளக்கமாவது கொடுக்கவேண்டும் என்று நினைப்பதால் இந்த இடுகை.

தனி திரி வேண்டுகோளை நான் முன்வைத்தது உண்மைதான். மறுக்கவில்லை. அதை ஒரு யோசனையாக மட்டுமே முன்வைத்தேன்.

அதேபோல, அதற்கு வந்த எதிர்வினைகளைப் பார்த்து அந்த வேண்டுகோளை முற்றிலும் விலக்கிக்கொண்டேன் அல்லவா?
நீங்களே சொல்லுங்கள்.

அது உங்கள் திரி. எப்போதாவது வந்துபோகும் என்னைப் போன்றவர்கள் எங்கள் எதிர்பார்ப்புகளை உங்கள் எல்லார் மீது திணிக்கக்கூடாது என்றுகூட தெளிவாக சொல்லியிருந்தேன்.

இதுபோல தனி திரி தொடங்குவது உங்கள் விருப்பம் சார்ந்தது. இது எங்கள் கட்டாயத்தால் என்பதுபோல சொல்வது சரியல்ல.

என்னவோ, Archive பதிவுகளை யாருமே விரும்புவதில்லை என்று நான் சொன்னது போல, 'எத்தனை பேர் படிக்கிறார்கள் பார்த்தாயா, இப்போதாவது சிலருக்கு புரியும்' என்று ஒரு இடுகை. Punching a straw man!
'மேதாவித்தனம் இங்கு இருக்காது' என்று ஒரு இடுகை.
'எழுதுகிறேன் என்று ஜம்பமாய்ச் சொன்னவர்கள் எங்கே காணோம்?' என்று ஒரு இடுகை.

இதற்கெல்லாம் என்ன எதிர்வினை ஆற்றுவது?
இப்படிப்பட்ட சூழல் உருவாக, நான் ஆரம்ப காரணமாக இருந்ததற்காக வருந்துகிறேன்.அவ்வளவு தான்.
இதற்குமேல் எனக்கு சொல்வதற்கு வேறேதும் இல்லை.

திரி இணைப்பதோ, தனித்து இயங்குவதோ எல்லாம் இப்போதும் உங்கள் விருப்பம் சார்ந்தது மட்டுமே.
மீண்டும் சொல்கிறேன்: அது உங்கள் திரி.

Loosen up. Have fun. :wave:

RAGHAVENDRA
2nd August 2012, 09:22 PM
டியர் பிரபு சார்,
நான் முன்னமேயே சொன்னேன். திரி தனியாகப் பிரித்தாலும் அப்படியே தொடர்ந்தாலும் அதைப் பற்றி நான் மாற்றுக் கருத்து எதுவும் கொள்ள வில்லை என்று கூறியிருந்தேன். அதில் மாற்றமில்லை. அதைக் கூட நான் கூறினேன், நிர்வாகக் காரணமாக இருந்தால் சரி என்று. ஆனால் தாங்கள் தான் அதில் நிர்வாகக் காரணம் எதுவும் இல்லை, உள் நோக்கம் இருப்பதாகக் கூறியிருந்தீர்கள்.

தற்போதைய என் பதிவில் தாங்கள் சுட்டிக் காட்டிய வார்த்தைகள் பொதுவானவை தான், தங்களுக்கெனத் தனியாக அல்லவே. அப்படித் தங்களுக்கு மட்டும் நான் கூறவேண்டுமென்றால் தனி மடல் உள்ளதே. அதில் நம் முடைய உள்ளங்களைப் பரிமாறிக் கொள்ளலாமே. தங்களுடைய ஆலோசனைக்கு அவரவர் கருத்தை உடனடியாக நானும் பம்மலாரும் வாசுதேவனும் மற்றும் சில நண்பர்களும் உடனடியாக வெளிப்படுத்தினோம். இந்த வாதப் பிரதிவாதங்களெல்லாம் தனியே பிரிக்கப் பட்டு தற்போது அவையெல்லாம் முடக்கப் பட்டு விட்ட பின் வரும் கருத்துக்களுக்குத் தான் பதில் தர நேரிடுகிறது. அதைத் தான் அப்போதே சொல்லியிருக்கலாமே என்று சுட்டிக் காட்டினேன். இதில் தாங்கள் வருத்தப் பட எதுவும் இல்லை. இது பொதுவான கருத்து, இப்போது சொல்வதை அப்போதே சொல்லியிருக்கலாமே என்கிற ஒரு பொதுவான அபிப்ராயமே தவிர யாரையும் குறிப்பிடுவன அல்லவே.

தங்களுடைய எழுத்துக்களுக்கு அனைவரையும் போல் நானும் ஒரு ரசிகன் என்பது உறுதி. அதனால் அதிலும் என்னுடைய அபிப்ராய பேதம் எதுவும் இல்லை.

பொதுவாகவே ஆலோசனைகள் ஏற்றுக் கொள்ளப் படுவதும் அதனை வேண்டாம் என்று சொல்வதும் சகஜம். ஆனால் அந்தக் கருத்துப் பரிமாற்றங்களில் சில நேரங்களில் வெளிப்படும் குணாதிசயங்களே விளைவுகளுக்குக் காரணமாகின்றன என்பது தங்களுக்குத் தெரியாததல்லவே.

எனவே தாங்கள் மன வருத்தப் படுவதில் எந்தக் காரணமும் இல்லை, தங்கள் மேல் இங்கு யாருக்கும் கோபமும் இல்லை. அதனால் தாங்கள் என்றும் நமது நெஞ்சங்களில் இடம் பிடித்தவர்களில் ஒருவர் என்பதும் திண்ணம்.

அன்புடன்
ராகவேந்திரன்

vasudevan31355
2nd August 2012, 09:35 PM
போஸ்ட்டர் என்றதும் நினைவுக்கு வருகிறது. 'திரிசூலம்' வெளியீட்டிற்கு ஒரு வாரத்துக்குமுன் கடலூரில் பாடலி தியேட்டரில் படம் ரிலீஸ் என்று கன்பார்ம் செய்து கொண்டோம். நேராக பாடலி சென்று நாங்கள் ரசிகர் மன்றங்களை சேர்ந்தவர்கள் என்று கூறி தியேட்டரில் பணி புரியும் ஊழியர்களிடம் கொஞ்சம் சில்லறை அடித்து போஸ்டர்கள் வாங்கினோம். (படம் வெளிவருமுன் தியேட்டரின் உள்ளே போஸ்ட்டர் போர்டில் போஸ்ட்டர்கள் ஒட்டப்பட்டு விட்டன). அதில் இரண்டு முக்கியமான போஸ்டர்களை நான் லாவிக்கொண்டேன். இரண்டும் ஆயில் பிரிண்ட் போஸ்டர்கள். ஒன்றில் தலைவர் (தந்தை ராஜசேகரன்) ஆள் வைத்து தன்னை சாட்டையால் அடித்துக் கொள்ளும் போஸ்டர். மற்றொன்று போஸ்டரின் மேல் பகுதியில் நேர்ப் போஸில் தந்தை நடிகர் திலகம் தாடியுடன், கீழே வலது இடதாக சங்கர் மற்றும் குரு இருவரும் (தலைப்பகுதிகள் மட்டும்) சைட் போஸ்களில் உள்ள போஸ்டர்.

பத்திரமாக வீட்டிற்குக் கொண்டு வந்து எனது அறையில் அந்த இரண்டு போஸ்டர்களையும் மைதா மாவு பசை கொண்டு ஒட்டி வைத்து விட்டேன். நான் எனது தாத்தா வீட்டில் தங்கிப் படித்துக் கொண்டிருந்ததால் தாத்தாவிற்கு வீட்டின் அறையினில் போஸ்ட்டர் ஒட்டியிருந்தது பிடிக்கவில்லை. ஓயாது திட்டி கொண்டே இருப்பார். ஆனால் நான் போஸ்டர்களை ஏதாவது செய்தால் நடப்பதே வேறு என்று அவரை பயமுறுத்திக் கொண்டே இருப்பேன். "இவன் அவன் ஆளுக்காக எது வேணும்னாலும் செய்வான்" என்று என் தாத்தா ஒன்றுமே பேசுவதில்லை. காலையில் எழுந்திரும் போது கண்களைத் திறக்காமல் அந்த மூன்று நடிகர் திலகங்களையும் கொண்ட அந்த போஸ்டரைப் பார்த்தபடிதான் கண் விழிப்பேன். பிறகுதான் மற்ற வேலைகள் எல்லாம். பிறகு கால வெள்ளத்தில் அவையெல்லாம் அழிந்து விட்டன. ராகவேந்திரன் சார் சொன்ன அந்த வயதானவர் இறக்கும் தருவாயில் கூட கண்ணும் கருத்துமாக அவருக்கு விருப்பமான தலைவர் போஸ்டரைப் பாதுகாத்தாரே... ஆனால் நாம் எல்லா வசதிகள் இருந்தும் ஒழுங்காகப் பாதுகாக்க முடிய வில்லையே என்ற குற்ற உணர்வில் வெட்கித் தலை குனிகிறேன்.

pammalar
2nd August 2012, 09:52 PM
டியர் வாசுதேவன் சார்,

தங்களின் பாராட்டுப் பதிவுகள் மூலம் என்னைப் பாராட்டு மழையில் நனையச் செய்தமைக்கு தூய்மையான நன்றிகள்..! "வளர்பிறை" வீடியோ கூடிய விரைவில், தங்கள் பெருமுயற்சிக்கு ஏற்றாற்போல், தங்கள் அன்புக்கரங்களை வந்து அலங்கரிக்கும், வாழ்த்துக்கள்..!

தாங்கள் கூறியது சரி, "கண்கள்(1953)", ஐம்பதுகளில் வெளியான பாசமலர்.

"பட்டாக்கத்தி பைரவன்(1979)" பற்றி யாராவது பாதகமாகக் கூறினார்களென்றால், அதற்கு பதிலளிப்பதற்காக தங்கள் பதிவையே பட்டாக்கத்தி போல் கூர்மையாக்கி விடுகின்றீரே..! ஒரே ரகளைதான் போங்கள்..!

அன்புடன்,
பம்மலார்.

vasudevan31355
2nd August 2012, 10:01 PM
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/anjalaidevi-55.jpg?t=1343925047
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/anjalaidevi-56.jpg

joe
2nd August 2012, 10:22 PM
இதற்கெல்லாம் என்ன எதிர்வினை ஆற்றுவது?
எதிர்வினை ஆற்றாமல் கடந்து செல்வது தான் நல்லது


இப்படிப்பட்ட சூழல் உருவாக, நான் ஆரம்ப காரணமாக இருந்ததற்காக வருந்துகிறேன்.
வருந்த கூட தேவையில்லை .பல தெளிவுபடுத்தலுக்குப் பின்னரும் நீங்கள் இப்படித் தான் நினைத்தீர்கள் என (நீங்கள் எத்தனை முறை மறுத்தாலும்) உங்களுக்கே சொல்லப்பட்டு ஒரு சூழல் வம்படியாக உருவாக்கப்பட்டதென்றால் அதற்கு நீங்கள் எப்படி பொறுப்பாக முடியும் ? இன்னும் சொல்லப்போனால் , சொல்லப்பட்ட கருத்துகள் திரிக்கப்பட்டு ஏதோ நீங்கள் வற்புறுத்தியது போல ஒரு எதிர்மறை பிம்பம் உங்கள் மீது சாத்தப்பட்டதற்கு மட்டுமே நீங்கள் வருந்த வேண்டும். அதையும் கடந்து போவது ஒன்றே வழி.

pammalar
2nd August 2012, 10:27 PM
அன்புள்ள திரு. ராகவேந்தர், திரு. பம்மலார், திரு. வாசு, திரு. கார்த்திக் (உங்களுடைய கிரிக்கெட் வர்ணனை அற்புதம்!) அவர்களே,

உங்கள் எல்லோரையும், நடிகர் திலகத்தின் புதிய வேறொரு திரியில் சந்திப்பதில் ஒரு விதத்தில் மகிழ்ச்சி - மறு விதத்தில், சிறிது வருத்தமாகத் தான் இருக்கிறது.

என்னைப் பொறுத்த வரை, அனைத்து வித விஷயங்களும் - பட ஆவணங்கள், வீடியோ பதிவுகள், ஆய்வுக் கட்டுரைகள், கருத்துப் பரிமாற்றங்கள் - போன்றவை அனைத்தும் ஒரே திரியில் இருந்தால் தான் அது அறுசுவை உண்டி.

அன்புடன்,

இரா. பார்த்தசாரதி

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/Geethacharam_Lord_Krishna_Tamil.jpg

வருகைக்கு நன்றி, சாரதி சார்..!

pammalar
3rd August 2012, 12:31 AM
"சித்ரா பௌர்ணமி" கறுப்பு-வெள்ளை மற்றும் வண்ணப்படங்களை உள்ளடக்கிய 'பொம்மை' இதழ் ஆவணப்பதிவுக்கு ஸ்பெஷல் தேங்க்ஸ், esvee சார்..!

மிக்க நன்றி, சந்திரசேகரன் சார்..! தாங்கள் Facebookகிலிருந்து இங்கு இடுகை செய்துள்ள நமது நடிகர் திலகத்தின் நிழற்படம் மிகமிக அரிய ஒன்று..!

pammalar
3rd August 2012, 03:37 AM
அன்புள்ள பம்மலார் சார்,

தாங்கள் அதிரடியாகத் தந்துள்ள 'வளர்பிறை' காவியத்தின் பேசும்படம் இதழ்கள் மட்டில்லா மகிழ்ச்சியைத் தருகின்றன. கிடைத்தற்கரிய இந்த ஆவனங்கள் என் குழந்தைப்பருவ நினைவுகளைத்தூண்டுகின்றன. நான் இதுவரை இப்படத்தைப் பார்த்ததில்லை. காரணம் இதுவரை கண்ணில் படாததே.

என் சின்னஞ்சிறு பிராயத்தில், நாங்கள் குடியிருந்த சென்னை மண்ணடி தம்புச்செட்டித்தெருவிலிருந்து பக்கத்திலுள்ள பவழக்காரத்தெருவுக்கு பால் வாங்கச்செல்லும்போது, அத்தெருவிலிருந்த, வெகு ஆண்டுகளாக வெள்ளையடிக்கப்படாமல் இருந்த வீட்டின் சுவரில் உயரத்தில் இரு பெரிய போஸ்ட்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. அவற்றில் ஒன்று நடிகர்திலகம் நடித்த "வளர்பிறை" இன்னொன்று நாகேஸ்வரராவ், சாவித்திரி நடித்த "மஞ்சள் மகிமை". (அப்போது அதில் நடித்தவர்கள் யார் என்பதெல்லாம் துல்லியமாகத்தெரியாது. அதில் பெரிய படமாக இருப்பவர் சிவாஜி என்பது மட்டும் தெரியும். அவ்வளவு சிறிய வயது). மழை வெயில் படாத தாழ்வாரம் போன்ற இடத்தில் ஒட்டப்பட்டிருந்ததால் பல ஆண்டுகளாக அந்த போஸ்ட்டர்கள் அப்படியே இருந்தன. நானே எப்படியும் ஒரு ஐந்து வருடங்கள் அவற்றைப்பார்த்திருப்பேன்.

அதன்பிறகு வளர்பிறை பற்றிய எந்த ஒரு சிறு துணுக்கைக்கூட பார்த்ததில்லை. இப்போதுதான் சுமார் இரண்டு ஆண்டுக்கு முன்பு நமது ராகவேந்தர் சார் அளித்த பாட்டுப்புத்தக மேல் அட்டையையும், சகோதரி கிரிஜா அவர்களின் தளத்தில் வளர்பிறை படத்தின் சிறு விளம்பரத்தையும் பார்த்தபோது, எனக்கு அன்று அரைக்கால்சட்டை போட்டுக்கொண்டு திரிந்த காலத்தில் பார்த்த மெகா போஸ்ட்டர் நினைவில் நிழலாடியது. இப்போது தாங்கள் அள்ளித்தந்துள்ள பொக்கிஷப்பதிவுகள் மூலம் மீண்டும் இளம் பிராய நினைவுகளுக்குச் சென்றுவிட்டேன்.

(அந்த இளம்பிராய போஸ்ட்டர் நினைவுகளுக்காகவே, பின்னொருமுறை 'மஞ்சள் மகிமை' பிராட்வேயில் மறு வெளியீட்டின்போது பார்த்தேன். நல்ல படம். 'ஆகாய வீதியில் அழகான வெண்ணிலா' போன்ற பாடல்களைக்கேட்டபோது என் சிறுவயது நினைவுகளை எண்ணி கண்கள் கசிந்தன).

'வளர்பிறை'தான் இன்னும் காணக்கிடைக்கவில்லை. ராகவேந்தர் சார் முன்பு எழுதிய குறிப்புகளிலிருந்து இது ஒரு அற்புதமான படம் என்பதை உணர்கிறேன். எப்போது பார்க்க முடியுமோ தெரியவில்லை.

டியர் mr_karthik,

தன்யனானேன் சார், தன்யனானேன்..! "வளர்பிறை" விஷுவல் ஆவணப்பதிவு தங்களின் குழந்தைப்பருவ நினைவுகளை தூண்டியதாக தாங்கள் குறிப்பிட்டதைக் கண்டு மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தேன். அந்த நினைவுகள் வரும்போதெல்லாம், 'அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே' என்கின்ற உவகையும், அந்த ஃப்ளாஷ்பேக்கிலிருந்து மீண்டு வரும்போது 'இந்த நாள் அன்றுபோல் இன்பமாய் இல்லையே' என்ற ஏக்கமும் கொள்ளாதார் இவ்வுலகில் யார்? தங்களின் ஞாபகசக்திக்கு பிடியுங்கள் ஒரு 'சபாஷ்'. தங்களுடைய இனிய நினைவுகளை இங்கே பதித்ததற்கு நன்றி..!

தங்களுடைய அந்த தித்திப்பான நினைவுகளை மேலும் விஸ்தரிக்க, இதோ தங்களுக்காகவும், வாசு சாருக்காகவும், "மஞ்சள் மகிமை(1959)"யிலிருந்து கானகந்தர்வர் கண்டசாலா-பாடகியர் திலகம் பி.சுசீலாவின் பின்னணிக் குரல்களில், திரை இசை மாமேதை மாஸ்டர் வேணுவின் இசையில், நம் அனைவரையும் கவர்ந்த 'ஆகாய வீதியில் அழகான வெண்ணிலா'. [ஆக்கம் : உடுமலை நாராயண கவிராயர்]


http://www.youtube.com/watch?v=Em6XbRpn4r4

வேணு இசையில் வந்த இந்த கானம், நிஜமாகவே வேணுகானம்தான்..! அமிதாப்பையும் கவர்ந்த நடிகையின் நடிப்பு அநாயாசத்தைப் பற்றிப் பற்பல அத்தியாயங்களே எழுதலாம், What an actress..!

[நெய்வேலியாரே, வாய்பிளந்து கண்டசாலாவின் குரலில் மயங்கி, நீங்கள் கேட்டுக் கொண்டிருப்பது என் மனக்கண்ணில் தெரிகிறது. தங்களுக்காகவே இதோ இன்னும் இரு பாடல்கள்:]

நமது நடிகர் திலகத்தின் அதியற்புத நடிப்பில், மெல்லிசை மாமன்னர்கள் விஸ்ராமின் இசையில், கானகந்தர்வரின் கம்பீர கமக்கக் குரலில், 'உல்லாசம் தேடும் எல்லோரும் ஓர் நாள்' பாடல், "தெனாலிராமன்(1956)" திரைக்காவியத்திலிருந்து...

இப்பாடலை இயற்றியவர் கவிஞர் தமிழ்மன்னன்..!


http://www.youtube.com/watch?v=aE80C7G9xAo

நடிகர் திலகம்- சகலகலாவல்லி பானுமதி இணையில், கானகந்தர்வரின் இசையில்-பின்னணிக் குரலில், "கள்வனின் காதலி(1955)"யிலிருந்து 'வெயிற்கேற்ற நிழலுண்டு'. [ஆக்கம் : கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை]


http://www.youtube.com/watch?v=Lwimqfw8E9U

mr_karthik அவர்களே, "வளர்பிறை"யை இதுவரை பார்க்கவில்லை என்று கவலைகொள்ள வேண்டாம். நெய்வேலியாரின் தொடர் திரைக்காவியத் தேடலில், இக்காவியத்தின் பிரதி உலகத்தின் எந்த இண்டுஇடுக்கில் இருந்தாலும் அதை அப்படியே அவர் 'லபக்'கிக் கொண்டுவந்துவிடுவார்.

கவலையை விடுங்கள்..!

தங்களின் இதயங்கனிந்த பாராட்டுக்களுக்கு எனது இனிய நன்றிகள்..!

அன்புடன்,
பம்மலார்.

Richardsof
3rd August 2012, 08:23 AM
http://i47.tinypic.com/2dse8sx.jpg

vasudevan31355
3rd August 2012, 08:42 AM
Dear esvee sir,

WoV. Fantastic stills. Thank u very much.

Richardsof
3rd August 2012, 10:46 AM
[http://i47.tinypic.com/1z1u5mt.jpg

vasudevan31355
3rd August 2012, 01:36 PM
1986-இல் வெளிவந்த பொம்மை (ஜனவரி 1-15) இதழில் வெளிவந்த நடிக தெய்வம் அவர்களின் அற்புதக் கட்டுரை.

சில தினங்களுக்கு முன் நம் ராகவேந்திரன் சார் 'ஆனந்தக்கண்ணீர்' திரைப்படத்தைப் பற்றிய ஒரு அருமையான பதிவை அளித்திருந்தார்கள். அப்போதுதான் மேற்கண்ட பொம்மை இதழில் நடிகர் திலகம் 'ஆனந்தக்கண்ணீர்' காவியம் பற்றியும், தன்னுடைய கேரக்டரின் சிறப்புத்தன்மை பற்றியும், இதர அருமையான விஷயங்களையும் கட்டுரையாக வடித்துத் தந்திருந்தது நினைவுக்கு வந்தது. இப்போது அந்த அருமையான நடிகர் திலகத்தின் எழில்மிகு கட்டுரை நம் பார்வைக்கு.

இந்தக் கட்டுரைப் பதிவை நம் அன்பு ராகவேந்திரன் சாருக்கு ஆனந்தக் கண்ணீருடன் அன்பளிப்பாக அளிக்கிறேன்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/6-45.jpg

பக்கம் 22

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/1-121.jpg

பக்கம் 23

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/6_0005.jpg

பக்கம் 24

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/6_0013.jpg

பக்கம் 25

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/6_0014.jpg


அன்புடன்,
வாசுதேவன்.

vasudevan31355
3rd August 2012, 02:19 PM
அன்பு பம்மலார் சார்,

கண்ணான கண்டசாலா அவர்களின் குரலில் தேனாய் இனிக்கும் 'மஞ்சள்மகிமை''(ஆகாய வீதியில் அழகான வெண்ணிலா) படப் பாடலை பதிப்பித்து தூக்கத்தைக் கெடுத்ததற்கு பிடியுங்கள் அன்பு சாபம்...அதுமட்டுமல்ல கவின்மிகு கண்டசாலா அவர்களைப் பெருமைப்படுத்தும் 'உல்லாசம் தேடும்' மற்றும் 'வெயிற்கேற்ற நிழலுண்டு' என்ற அற்புதமான இரு நடிகர் திலகத்தின் பாடல் காட்சிகளையும் அள்ளித் தந்து வீசும் தென்றல் காற்றாய் மனதை வருடியதற்கு முத்தான நன்றிகள்.

RAGHAVENDRA
3rd August 2012, 03:33 PM
நடிப்பில் என்றைக்குமே காம்ப்ரமைஸ் ஆகாத நடிகர் திலகத்தின் காம்பரமைஸ் கல்யாணராமய்யர் பாத்திரத்தைப் பற்றி அவரே சிலாகித்து எழுதியதை பொம்மை இதழிலிருந்து இங்கே நிழற்படமாக அளித்து அதை அடியேனுக்கு அர்ப்பணம் செய்த வாசுதேவன் சாருக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்களும் நன்றிகளும். இயக்குநர் கா பரத், இந்த படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் நடிகர் திலகம் அளித்த ஈடுபாட்டை உணர்வுப் பெருக்குடன் நினைவு கூர்வார். 1980களிலிருந்து தன் கடைசி படமான பூப்பறிக்க வருகிறோம் வரை, ஒவ்வொரு படத்திலும் பல்வேறு புதிய பரிணாமங்களை அளித்தவர் நடிகர் திலகம். அந்த கால கட்டத்தில் பல படங்களில் அவருடைய சிறந்த காட்சிகள் மக்களை சென்றடையாவண்ணம் செய்தவை, திசை திருப்பிய விமர்சனங்களும், அதனை சீர்தூக்கிப் பாராமல் மேம்போக்காக அப்படியே ஏற்று விமர்சிக்கும் நம்மிடையே இருக்கும் சில ரசிக சிகாமணிகளும் தான் என்றால் அது மிகையில்லை. இப்படிப் பல படங்களை வாசு சார் தயவாலும் பம்மலார் தயவாலும் நாம் அறிய முடிகிறது. தங்கள் இருவருக்கும் மற்றும் இதே போல் இத்திரியில் பங்கேற்று பதிவுகளைத் தரும் அனைத்து நண்பர்களுக்கும் உளமார்ந்த நன்றிகள்.

அடுத்த பதிவில் ....

பாருங்கள்...

RAGHAVENDRA
3rd August 2012, 03:49 PM
நடிகர் திலகமும் நடிப்புக் கோட்பாடுகளும்

புதிய தொடர்

http://www.kryingsky.com/Stan/Biography/images/StanEarly.gif


நடிப்பிற்கு இலக்கணம் வகுத்தவர், நடிகர் திலகம் என்றெல்லாம் நாம் புகழும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் நடிப்பில் இலக்கணம் உள்ளதா, அப்படி என்றால் அதில் உள்ள இலக்கணம் என்ன, அவருடைய நடிப்பு எந்த வகையை சேர்ந்தது, அல்லது எந்த விதத்தை சார்ந்தது, இப்படி பல்வேறு விவாதங்கள் கருத்துப் பரிமாற்றங்கள், எதிர்காலத்தில் வரக் கூடும். வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்பது போல் அவருடைய நடிப்பை மிகை என்று வர்ணிக்கும் நண்பர்களுக்கும், அவர்களுக்குத் துணை போகக் கூடிய நமது ரசிக நண்பர்களுக்கும் இந்தத் தொடர் தெளிவைத் தரும் என்று நான் நம்புகிறேன். இந்தத் தொடரை மிக விரைவில் தொடங்க நினைத்துள்ளேன். நடிப்பைப் பற்றியும் அதன் கோட்பாடுகளைப் பற்றியும் உலக அளவில் இலக்கணம் போல் விளங்குவது ஸ்டானிலாவ்ஸ்கி எழுதியுள்ள நூலாகும். இவருடைய காலம் 1863-1938. திரைப் படம் என்பது அறிவியல் ரீதியாக உலக அளவில் மக்களை சென்றடையத் தொடங்கிய கால கட்டத்தில் தான் இவருடைய வாழ்க்கை காலமாகும். இவருடைய நாடு ருஷ்யா. இவர் மறைந்த போது நடிகர் திலகம் 10 வயது குழந்தை. கல்வி யறிவில் நாட்டமின்றி நாடகத் துறைக்கு சென்று தன் வாழ்க்கையத் தொடங்கிய காலம் என்று கொள்ளலாம். கிட்டத் தட்ட படிக்காத மேதையாக விளங்கிய நடிகர் திலகம், நிச்சயமாக ஸ்டானிலாவ்ஸ்கி கோட்பாடுகளைப் படித்து தன் நடிப்பை அமைத்தவர் இல்லை என்பது தெளிவாகிறது. அப்படிப் பட்ட நடிகர் திலகத்தின் நடிப்பில் ஸ்டானிலாவ்ஸ்கியின் பல கோட்பாடுகள் விளக்கமாகவும் உதாரணமாகவும் அமைந்துள்ளன என்பது வியப்புக்குரிய செய்தியாகும். அந்த கோட்பாடுகளையும் நடிகர் திலகத்தின் நடிப்பையும் ஒரு சேர ஆய்ந்து எழுதுவதே இத்தொடரின் நோக்கம். எங்கெங்கு சாத்தியமோ அங்கங்கு காட்சிகளும் துணைக்கு இணைக்கப் படலாம்.

இத்தொடருக்கு தங்கள் ஆதரவை எதிர்பார்க்கிறேன்.

அன்புடன்

KCSHEKAR
3rd August 2012, 04:18 PM
நடிகர் திலகமும் நடிப்புக் கோட்பாடுகளும்

புதிய தொடர்



திரு.ராகவேந்திரன் சார்,

ஆவலுடன் எதிர்நோக்குகிறேன். வாழ்த்துக்கள்.

ஏற்கனவே பம்மலாரின் ஆவணப் பொக்கிஷங்கள் தொடராக வெளிவந்து ரசித்துக்கொண்டிருக்கிறோம். அடுத்து வாசு சாரின் நடிகர்திலகத்தின் நாயகிகள் தொடர் தற்போது உஙகளின் இந்த அறிவிப்பு மேலும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

mr_karthik
3rd August 2012, 04:39 PM
அன்புள்ள பம்மலார் சார்,

என்னுடைய கடந்தகால நினைவுப்பதிவைப் படித்ததும், மனமுவந்து பாராட்டியதுடன், நான் குறிப்பிட்டிருந்த மஞ்சள் மகிமை பாடலையும் கூடவே இரண்டு கண்டசாலா பாடல்களையும் அள்ளித்தந்த தங்களை எப்படிப்பாராட்டுவதென்று தெரியவில்லை. அவ்வளவு பழைய பாடல்களை உடனுக்குடன் தேடியெடுத்து பதிவது என்பது சாதாரண காரியமா?. எல்லாவகையிலும் மற்றவர்களை மகிழ்விப்பதில் தங்களுக்கு ஈடு இணை இல்லையென்றே கூறலாம். 'ஆகாய வீதியில்' பாடலைக் கண்ணுற்றபோது காலங்களைக்கடந்து மீண்டும் சிறுவனானேன் என்பது உண்மை.

இதயம் நிறைந்த பாராட்டுக்கள், நன்றிகள்.

mr_karthik
3rd August 2012, 04:59 PM
அன்புள்ள ராகவேந்தர் சார்,

முதலில் தங்களின் புதிய தொடருக்கு இதயம் நிறைந்த வாழ்த்துக்கள்.

ஏற்கெனவே பம்மலாரின் ஆவணப்பதிவுகள் தொடர், வாசுதேவரின் 'நடிகர்திலகத்தின் ஸ்டண்ட் காட்சிகள் தொடர்', மற்றும் 'நடிகர்திலகத்தின் நாயகியர் தொடர்', இப்போது தங்களின் 'நடிப்புக்கு இலக்கணம் தொடர். தொலைக்காட்சி சேனல்களில் அடுத்தடுத்து சீரியல்கள் வருவது போலிருக்கிறது. நமது திரி அறுசுவை உணவு என்பதையெல்லாம் தாண்டிச் சென்று கொண்டிருக்கிறது.

அடுத்து, ராயப்பேட்டை மணிக்கூண்டு 'போஸ்ட்டர்' முதியவரின் ஈடுபாடு கண்களில் நீரை வரவழைத்தது. நடிகர்திலகத்துக்கு எப்பேற்பட்ட ரசிகர்களெல்லாம் இருந்திருக்கிறார்கள் என்றெண்ணும்போது நானெல்லாம் என்ன சுண்டைக்காய் என்ற உணர்வுதான் வருகிறது. நான் ராயப்பேட்டை புதுக்கல்லூரியில்தான் பட்டப்படிப்பு படித்ததால், நீங்கள் சொல்லும் அந்த இடம் எனக்கு மிகவும் பரிச்சயமான இடம். அந்த சர்ச்சின் காம்பவுண்ட் மீது கண்ணாடிப்பெட்டியினுள் ஒரு பைபிள் புத்தகத்தை திறந்து வைத்து தினமும் இரண்டு பக்கங்கள பொதுமக்கள் பார்வைக்கு வைத்திருப்பார்கள். கல்லூரிக்கு மாலை வகுப்பை கட் அடித்து விட்டு, மவுண்ட் ரோடு தியேட்டர்களுக்கு படம் பார்க்க அந்த வழியே நடந்துதான் நாங்கள் செல்வது வழக்கம். கட் அடிக்காத காலங்களில் மாலை வகுப்பு முடிந்து நண்பர்களுடன் 'சாந்தி தியேட்டர் சங்கமத்துக்கு' நடந்து செல்வதும் அந்த வழியேதான். சென்னைக் கல்லூரிகளிலேயே 'தியேட்டர் வளம் செறிந்த இடம்' புதுக்கல்லூரிதான் என்பது தங்களுக்கு தெரியாததல்ல.

அந்த இடத்தில் ஒட்டப்பட்டிருந்த தெய்வமகன் போஸ்ட்டரை அந்த முதியவர் இறக்கும் வரை பாதுகாத்து, இறந்த பின்னும் எடுத்துச்சென்றார் என்பது உண்மையிலேயே அதிசயிக்கத்தக்க ஒரு நிகழ்வு என்பதில் ஐயமில்லை. இதுபோல இன்னும் எத்தனை ஆயிரம் ரசிகர்கள் எங்கெல்லாம் இருந்தார்களோ, இருக்கிறார்களோ.

mr_karthik
3rd August 2012, 05:21 PM
அன்புள்ள வாசுதேவன் சார்,

பொம்மை இதழின் 'ஆனந்தக்கண்ணீர்' பக்கங்களை பதிவிட்டமைக்கு மிக்க நன்றி. நடிகர்திலகத்தின் மனந்திறந்த வாசகங்கள் மனதைப்பிசைந்தன. ரொம்பவே கஷ்ட்டப்பட்டு செய்த பல பாத்திரங்கள் மக்களின் ஆதரவு கிடைக்காமல் போனதில் அந்தக்கலைஞனின் மனம் எவ்வளவு வேதனைப்பட்டது என்பதை அறிய முடிகிறது. முன்பு திருவருட்செல்வர் படத்தைப்பற்றிய கருத்துக்கூறிய போதும் "மாசில் வீணையும் மாலை மதியமும் வீசு தென்றலும் இருந்தும் பட்ட பாட்டுக்கு பலன் எங்கே?" என்று கேட்டிருந்தார்.

முத்தாய்ப்பாக, 'தன் படத்தைப்பார்த்து ரசிகனின் கண்களில் இருந்து வரும் ஆனந்தக்கண்ணீர்தான் தனக்கு கோடிகள்' என்று முடித்திருப்பது, ரசிகனின் பாராட்டை அவர் எவ்வளவு மதிக்கிறார் என்பதைக்காட்டுகிறது.

முத்தான பக்கங்கங்களை பதிவிட்ட தங்களுக்கு சத்தான பாராட்டுக்கள், நன்றிகள்.

vasudevan31355
3rd August 2012, 06:22 PM
டியர் ராகவேந்திரன் சார்,

என்ன ஒரு இன்ப அதிர்ச்சி! தங்களது புதிய தொடர் பற்றிய தங்களின் அறிவிப்பு நிஜமாகவே ஓர் இன்ப அதிர்ச்சிதான். நடிப்புக்கு இலக்கணம் வகுத்த நம் அன்பு தெய்வத்தை முன்னிறுத்தி தாங்கள் தொடங்கவுள்ள புதிய தொடர் தொடர்களின் இலக்கணமாக திகழப் போவது திண்ணம். ஸ்டானிலாவ்ஸ்கியின் நடிப்புக்கலையின் பல கோட்பாடுகளை கேள்விக்கூடப் படாமல் தன் அங்க அசைவுகள் மூலம் அதனை விளக்கமாகவும், மிகத் தெளிவாகவும், மிக எளிமையாகவும் பாமரர் முதல் படித்தவர் வரை கொண்டு சேர்த்த பெருமையுடைய ஒரே நடிகர் நமது இதய தெய்வம். ஸ்டானிலாவ்ஸ்கி மட்டும் நடிகர் திலகத்தின் காலத்தில் உயிரோடு இருந்திருந்து, அவரின் நடிப்பைப் பார்த்து விட்டு, நடிப்பிலக்கணம் பற்றிய நூலை எழுத முனைந்திருப்பாரேயானால் அவர் எழுத நினைக்கும் அந்த நூலில் ஒரே ஒரு வரிதான் இருந்திருக்கும். அது திரு.சிவாஜி கணேசன்.

தங்கள் புதிய தொடர் தொடங்கலுக்கு என் அன்பான, மகிழ்ச்சியுடன் கூடிய நிறைவான வாழ்த்துக்கள்.

'ஆனந்தக் கண்ணீர்' பதிவிற்கான தங்கள் மனம் நிறைந்த பாராட்டுதல்களுக்கு அன்பு நன்றிகள்.

vasudevan31355
3rd August 2012, 06:30 PM
அன்பு கார்த்திக் சார்,

'ஆனந்தக்கண்ணீர்' பதிவை முழுவதுமாகப் படித்து தங்கள் அழகான கருத்துகளை அருமையாக எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு மேன்மையான நன்றிகள். நீங்கள் முன்பு நடிகர் திலகம் திரியில் நீங்கள் விரும்பிக் கேட்டிருந்த, தங்களின் மனம் கவர்ந்த ஒரு பதிவு வெகு விரைவில் இங்கு ஜொலிக்கப் போகிறது. அதுவரை கொஞ்சம் சஸ்பென்ஸாகவே இருக்கட்டுமே! ப்ளீஸ்.

vasudevan31355
3rd August 2012, 06:56 PM
நடிகர் திலகத்தின் நாயகியர்.(விஷுவல் தொடர்)

(தொடர்-2 இன் தொடர்ச்சி...)

நடிகர் திலகத்தின் நாயகியர் (2) 'நாட்டியப் பேரொளி' பத்மினி

படம்: 'மரகதம்'

http://www.thehindu.com/multimedia/dynamic/00111/cptb30MARAGATHAM1_j_111909f.jpg

நடிகர் திலகமும், நாட்டியப் பேரொளியும் இணைந்த, பெரும் வரவேற்பைப் பெற்ற கிளாசிக் டூயட்.

"கண்ணுக்குள்ளே உன்னைப் பாரு... எந்தன் கண்ணுக்குள்ளே உன்னைப் பாரு"...


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=z7110AGgpb0

(நடிகர் திலகம், நாட்டியப் பேரொளி ஜோடி அட்டகாசம் தொடரும்...)

pammalar
3rd August 2012, 07:30 PM
டியர் வாசுதேவன் சார்,

'நடிகர் திலகத்தின் நாயகியர்' விஷுவல் நெடுந்தொடரில், நடிகர் திலகத்துடன் நாட்டியப் பேரொளி காட்சியளிக்கும் 'பணம்' நிழற்படமும், பாடல் வீடியோவும் கண்களுக்கு விருந்து. அன்னை இல்லம் எனும் நல்லதொரு குடும்பத்திற்கும், அகிலமெங்கும் உள்ள அன்புள்ளங்களின் இல்லங்களிலும் திருவிளக்காக நிரந்தர ஒளிவீசிக் கொண்டிருக்கும் நமது இதயதெய்வத்துக்கு, 'குடும்பத்தின் விளக்கு நல்ல குடும்பத்தின் விளக்கு' கானம் சரியான சமர்ப்ப்ணம்..! MLV-ன் வாய்ஸ் PSLV ராக்கெட்..!

இதே போன்று "மரகதம்" நிழற்படமும், 'எந்தன் கண்ணுக்குள்ளே உன்னைப் பாரு' பாடல் வீடியோவும் மிகச் சிறந்த செலக்ஷன்..!

தமக்குத் திரையுலகில் முதன்முதலில் நடிக்க வாய்ப்பளித்ததற்காக, நமது நடிகர் திலகம், திருமதி. அஞ்சலிதேவி அவர்களை 'Boss' என்றே மரியாதைதோடு அழைப்பார். தாங்கள் பதித்திருந்த, நடிகை அஞ்சலிதேவியின் கருத்துரை 'நச்'..!

எல்லாவற்றுக்கும் சிகரமாக விளங்குகிறது நமது அன்பு அண்ணலின் 'பொம்மை [1-15 ஜனவரி 1986]' இதழ் அற்புதக் கட்டுரை. அட்டைப்படமே தூக்கிக்கொண்டு போய்விட்டது. தனது கடந்தகால இதயப்புண்களை, எவர் இதயமும் புண்படாமல், எடுத்தியம்ப முடியுமானால் அது நமது அண்ணலால் மட்டுமே முடியும். அருமையான இக்கட்டுரையில் பல இடங்கள் இதயத்தை ஈர்த்தன..

திரைப்பட கேரக்டர்கள் பற்றிச் சொல்லும்போது, 'தோட்டம் ஒன்றுதான்..அதில் நிறைய பூச்செடிகள் இருக்கு..',

பலவித கேரக்டர்கள் செய்வதைப் பற்றிக் குறிப்பிடும்போது, 'கேரக்டர்கள் பலவிதமானவை..ஆனால் ஆக்டர் ஒருவர்தானே..', [உண்மை, எல்லாவிதமான கதாபாத்திரங்களையும் நடித்துக் காட்ட ஸாரி வாழ்ந்து காட்ட 'ஆக்டர்' என்று இவர் ஒருவர்தானே இருக்கிறார். அதனால்தானோ என்னவோ, பண்டித நேரு இவரைப் பார்க்கும்போதெல்லாம் 'ஹலோ ஆக்டர்' என்றே விளித்திருக்கிறார் போலும்].

'சாதிகள் இல்லையடி பாப்பா' என்கின்ற பாரதியின் வாக்கிற்கிணங்க வாழ்ந்தவரல்லவா நம் வாழ்வியல் திலகம். அதனை எத்துணை நேர்த்தியோடு எடுத்துரைக்கிறார், 'வாழ்க்கையின் ஆரம்பத்திலிருந்தே எனக்கு ஜாதி உணர்வு இருந்ததில்லை'.

'சோதனைகள் நேரும்போது compromise பண்ணவேண்டியது ஒரு கலைஞனின் கடமை' எனக் கரெக்டாகக் கூறும் நடிகர் திலகம், அவர் ஜெயக்கொடி நாட்டிய சினிமா உலகம் சோஷியலிசத்தை அமல்படுத்தியது எனக் குறிப்பிட்டிருப்பது சத்தியமான வார்த்தை. குறிப்பாக சிவாஜி-எம்.ஜி.ஆர் காலகட்டங்களில் திரையுலகில் சமதர்மம் ஓங்கி உயர்ந்திருந்தது என்பது மறுக்க முடியாத உண்மை.

திருட்டு வீடியோ பிரச்னை பற்றி அன்றே எவ்வளவு ஆழமாக அலசியிருக்கிறார். திரையுலகில் ஒற்றுமை இன்றியமையாதது என்பதனை எவ்வளவு அழகாக எடுத்துவைக்கிறார்.

இக்கட்டுரையின் முடிவில் அவர் எழுதியிருக்கும் வைர வரிகள் ஒவ்வொரு அன்புள்ளத்தின் கண்களிலும் ஆனந்தக்கண்ணீரை கண்டிப்பாக வரவழைத்துவிடும். [என் கண்களிலும் வழிந்தோடும் ஆனந்தக்கண்ணீரைத் துடைத்தபடியேதான் இவ்வரிகளை எழுதுகிறேன்.]

வழங்கிய ஒவ்வொரு பதிவிலும் பல முத்திரைகளைப் பதித்துள்ள தங்களுக்கு எனது நன்றி முத்தாரங்கள்..!

அன்புடன்,
பம்மலார்.

mr_karthik
3rd August 2012, 07:59 PM
அன்பு பம்மலார் சார் & வாசுதேவன் சார்,

அஞ்சலிதேவியை பாஸ் என்று அழைப்பது மட்டுமல்ல, அஞ்சலிதேவியின் தயாரிப்பான 'பூங்கோதை'யில் தனக்கு முதல் வாய்ப்பு வழங்கியதற்கு நன்றிக்கடனாக, பின்னாளில் அஞ்சலிதேவி தெலுங்கில் தயாரித்த 'பக்த துக்காராம்' படத்தில் மராட்டிய மாவீரன் சத்ரபதி சிவாஜி ரோலில் பணம் பெற்றுக்கொள்ளாமல் இலவசமாக நடித்துக்கொடுத்தார் நமது நடிகர்திலகம்.

vasudevan31355
3rd August 2012, 08:45 PM
சூப்பர் கார்த்திக் சார்.

அருமையான தகவலுக்கு நன்றி! 'பக்த துக்காராம்'படத்தை ஞாபகப்படுத்தி விட்டீர்கள். இன்று இரவு தலைவர் போர்ஷனை மட்டும் பார்த்து விட வேண்டியதுதான்.

vasudevan31355
3rd August 2012, 09:22 PM
'பக்த துக்காராம்' stills

'வீர சிவாஜி'யாக நமது 'நடிகர் திலகம்' சிவாஜி கணேசன்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/BTCDCOVER.jpg

http://2.bp.blogspot.com/-3S7EG2zwCCA/UBGaS6a57DI/AAAAAAAAGA4/d-ceVCPHq0o/s1600/bhakta-tukaram.png

Thomasstemy
3rd August 2012, 09:43 PM
சூப்பர் கார்த்திக் சார்.

அருமையான தகவலுக்கு நன்றி! 'பக்த துக்காராம்'படத்தை ஞாபகப்படுத்தி விட்டீர்கள். இன்று இரவு தலைவர் போர்ஷனை மட்டும் பார்த்து விட வேண்டியதுதான்.

Dear Vasudevan sir,
Indha Color la Thalaivar, Chatrapathi Sivaji dress poattu, oru walk viduvaar paarunga...Mavanae...Andha Maratiya Mannan Photlaerndhu Veliya Vandhu Thalaivara Kattipudichu uchchi mugarndhu vaazhthitupovaaru..Avlo Kalakkala irukkum...In one song sequence, you can see so many thalaivar all chatrapathi sivaji's in horses destroying enemies....Pinniduvaaru...We will be confused as to which Chatrapathi to see..because we have only 2 eyes..whereas in frame around 100 chatrapathi sivaji would come...!!!!! Guest Rolennu Paeru...But as usual, yellarayum Guest maadhiri treat pannittu poiduvaaru...!!

pammalar
3rd August 2012, 09:43 PM
டியர் ராகவேந்திரன் சார்,

"வளர்பிறை" விஷுவல் ஆவணப்பதிவுக்கு, தாங்கள் வழங்கிய பாராட்டுதல்களுக்கு எனது இதமான நன்றிகள்..!

இக்காவியத்தின் பாடல்கள் ஒவ்வொன்றும் உண்ர்ச்சிப்பிரவாகம்..! ஆடியோ சுட்டிக்கு ஸ்பெஷல் தேங்க்ஸ்..!

'கூண்டு திறந்ததம்மா' பாடல் வரிகளை அளித்ததோடு மட்டுமல்லாமல், அப்பாடற்காட்சி பற்றிய விளக்கமும், அதில் நமது வாழ்வியல் திலகம் வாழ்ந்துகாட்டியுள்ளவிதம் பற்றிய கருத்துரையையும் தந்து அசத்திவிட்டீர்கள்..! பாராட்டுக்கள..!

திரியின் இரு கண்களான தாங்கள் மற்றும் நமது நெய்வேலியார் பங்களிப்புகளால், நமது நடிகர் திலகம் திரி ராக்கெட் வேகத்தில் பயணிக்கிறது.

அன்புடன்,
பம்மலார்.

Thomasstemy
3rd August 2012, 09:45 PM
Anbulla Pammalar Sir
Naan Anupiyadhu Kadidham alla ....!
Ullam !!!
Adhil ulladhellam ezhuthum alla !!
Ennam !!!
Manadhil irupadhanai Veliyil Solla !!!

Naan Anupiyadhu Kadidham Alla !!!!! Ullam!!!!! :smokesmile:
[/B][/SIZE]

pammalar
3rd August 2012, 09:51 PM
நடிகர் திலகமும் நடிப்புக் கோட்பாடுகளும்

புதிய தொடர்

http://www.kryingsky.com/Stan/Biography/images/StanEarly.gif

நடிப்பிற்கு இலக்கணம் வகுத்தவர், நடிகர் திலகம் என்றெல்லாம் நாம் புகழும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் நடிப்பில் இலக்கணம் உள்ளதா, அப்படி என்றால் அதில் உள்ள இலக்கணம் என்ன, அவருடைய நடிப்பு எந்த வகையை சேர்ந்தது, அல்லது எந்த விதத்தை சார்ந்தது, இப்படி பல்வேறு விவாதங்கள் கருத்துப் பரிமாற்றங்கள், எதிர்காலத்தில் வரக் கூடும். வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்பது போல் அவருடைய நடிப்பை மிகை என்று வர்ணிக்கும் நண்பர்களுக்கும், அவர்களுக்குத் துணை போகக் கூடிய நமது ரசிக நண்பர்களுக்கும் இந்தத் தொடர் தெளிவைத் தரும் என்று நான் நம்புகிறேன். இந்தத் தொடரை மிக விரைவில் தொடங்க நினைத்துள்ளேன். நடிப்பைப் பற்றியும் அதன் கோட்பாடுகளைப் பற்றியும் உலக அளவில் இலக்கணம் போல் விளங்குவது ஸ்டானிலாவ்ஸ்கி எழுதியுள்ள நூலாகும். இவருடைய காலம் 1863-1938. திரைப் படம் என்பது அறிவியல் ரீதியாக உலக அளவில் மக்களை சென்றடையத் தொடங்கிய கால கட்டத்தில் தான் இவருடைய வாழ்க்கை காலமாகும். இவருடைய நாடு ருஷ்யா. இவர் மறைந்த போது நடிகர் திலகம் 10 வயது குழந்தை. கல்வி யறிவில் நாட்டமின்றி நாடகத் துறைக்கு சென்று தன் வாழ்க்கையத் தொடங்கிய காலம் என்று கொள்ளலாம். கிட்டத் தட்ட படிக்காத மேதையாக விளங்கிய நடிகர் திலகம், நிச்சயமாக ஸ்டானிலாவ்ஸ்கி கோட்பாடுகளைப் படித்து தன் நடிப்பை அமைத்தவர் இல்லை என்பது தெளிவாகிறது. அப்படிப் பட்ட நடிகர் திலகத்தின் நடிப்பில் ஸ்டானிலாவ்ஸ்கியின் பல கோட்பாடுகள் விளக்கமாகவும் உதாரணமாகவும் அமைந்துள்ளன என்பது வியப்புக்குரிய செய்தியாகும். அந்த கோட்பாடுகளையும் நடிகர் திலகத்தின் நடிப்பையும் ஒரு சேர ஆய்ந்து எழுதுவதே இத்தொடரின் நோக்கம். எங்கெங்கு சாத்தியமோ அங்கங்கு காட்சிகளும் துணைக்கு இணைக்கப் படலாம்.

இத்தொடருக்கு தங்கள் ஆதரவை எதிர்பார்க்கிறேன்.

அன்புடன்

டியர் ராகவேந்திரன் சார்,

'உண்மை ஒருநாள் வெளியாகும் அதில் உள்ளங்களெல்லாம் தெளிவாகும்' என்பதற்கேற்ப தங்களின் புதிய தொடர் பல சிறந்த விஷயங்களை தெள்ளத்தெளிவாக்கப்போகிறது எனபது திண்ணம். 'நடிகர் திலகமும் நடிப்புக் கோட்பாடுகளும்' நெடுந்தொடர் மாபெரும் வெற்றி காண மனப்பூர்வமான நல்வாழ்த்துக்கள்..!

அன்புடன்,
பம்மலார்.

RAGHAVENDRA
3rd August 2012, 09:55 PM
டியர் வாசு சார்,
நாயகியர் தொடர் கலக்குகிறீர்கள்.. பத்மினி வரிசையில் கனவும் பலித்தது, பாடல் நான் வணங்கும் தெய்வம் படத்தில் மிகவும் அருமையாக இருக்கும். அந்தக் காலத்தில் பெண்கள் கணவனை தெய்வமாக மதித்தார்கள் என்பதாய் பொருள் கூறும் பாடல் நினைவுக்கு வருகிறது. மரகதம் ... ஆஹா.. இதில் இந்த பாடலும் இதனுடன் கூட மற்றொரு பாடலான புன்னகை தவழும் மதிமுகமோ பாடலும் அட்டகாசமாய் இருக்கும். இவையன்றி மாலை மயங்குகின்ற நேரம், குங்குமப் பூவே, காவிரி பாயும் கன்னித் தமிழ் நாடு என்று எஸ்.எம்.எஸ். இசை ராஜ்ஜியம் கொடி கட்டிப் பறக்கும்.
தொடருங்கள்..

அதே போல் பக்த துக்காராம் ஸ்டில்லும் சூப்பர்.

நடிகர் திலகத்தின் அபூர்வ படமொன்று facebookல் ஒரு நண்பரின் இணையப் பக்கத்தில் இருந்தது, நம் பார்வைக்கு
http://a6.sphotos.ak.fbcdn.net/hphotos-ak-ash4/428914_427432153975978_785630183_n.jpg

அன்புடன்

RAGHAVENDRA
3rd August 2012, 09:59 PM
டியர் பம்மலார்,
தங்களுடைய ஆதரவான வார்த்தைகளுக்கும் மற்றும் வாசுதேவன், கார்த்திக் உள்பட நண்பர்களுக்கும் உளமார்ந்த நன்றி.

J.Radhakrishnan
3rd August 2012, 10:22 PM
டியர் ராகவேந்தர் சார்,

தங்களின் புதிய தொடரை காண ஆவல் மேலிடுகிறது, திரு வாசு அவர்கள் கூறியது போல் ஸ்டானிலாவ்ஸ்கி மட்டும் நடிகர் திலகத்தின் காலத்தில் உயிரோடு இருந்திருந்து, அவரின் நடிப்பைப் பார்த்திருந்தால் நடிப்பின் இலக்கணமே நம் தலைவர் தான் என எழுதி வைத்து விட்டு போய் இருப்பார்.

pammalar
3rd August 2012, 10:30 PM
திரைக்காவிய முதல் வெளியீட்டு விளம்பரங்கள் :10

நடிகர் திலகத்தின் 62வது காவியம்

ராஜபக்தி [வெளியான தேதி : 27.5.1960]

பொக்கிஷாதி பொக்கிஷம்

'இன்று முதல்' விளம்பரம் : தினமணி : 27.5.1960
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5815-1.jpg

பக்தியுடன்,
பம்மலார்.

pammalar
3rd August 2012, 10:34 PM
திரைக்காவிய மறு வெளியீட்டு விளம்பரங்கள் : 5

நடிகர் திலகத்தின் 62வது காவியம்

ராஜபக்தி [முதல் வெளியீட்டுத் தேதி : 27.5.1960]

பொக்கிஷாதி பொக்கிஷம்

மறு வெளியீட்டு குறும்பிரசுர விளம்பரம்
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC6181-1.jpg

பக்தியுடன்,
பம்மலார்.

vasudevan31355
3rd August 2012, 10:36 PM
டியர் பாரிஸ்டர் சார்,

மிக்க நன்றி! 'பக்த துக்காராம்' காவியத்தில் நான் என்ன என் மனதில் நினைத்துக் கொண்டிருக்கிறேனோ அதை அப்படியே நூறு சதவிகிதம் நீங்கள் உங்கள் எண்ணங்களாக பிரதிபலித்ததைக் கண்டு படுஆச்சரியத்தில் மூழ்கி விட்டேன். ஒரு வீர சிவாஜி பல வீர சிவாஜிக்களாய் பெருகி குதிரைகளில் வந்து எதிரிகளை துவம்சம் செய்து தூள் பரத்தும் போது நீங்கள் சொன்ன 'மவனே'தான் அதை பாராட்டும் உச்ச வார்த்தையாய் இருக்கும்.'Matrix' ஆங்கிலப் பட சீரியல்களில் ஒரு வில்லன் பலப்பல வில்லன்களாகப் பெருகி சண்டையிடுவதை அன்றே 'பக்த துக்காராம்' படத்தில் தலைவரை வைத்து செய்து காட்டி விட்டார்கள். தலைவர் சும்மா அசாதாராணமாய் குதிரையேற்றம் செய்து அதகளப் படுத்துவார். அதே போல துக்காராம் தன் முன் குற்றவாளியாய் நிறுத்தப்படும் போது அவர் குற்றவாளியா இல்லையா என்று முடிவெடுக்க முடியாமல் திணறும் கட்டங்களில் நடிப்பில் அனைவரையும் திணற வைப்பார். அந்த ஒப்பனை தான் எவ்வளவு அழகு! தங்களுடைய அதிரடி ரசனைக்காக தலைவரின் அற்புதமான ஸ்டில் ஒன்றை தங்களுக்கு அன்புப் பரிசாக வழங்குகிறேன்.

http://1.bp.blogspot.com/_FfRMg1SjfNM/SX3mX7KmB3I/AAAAAAAALmc/2wJl_lfA3ls/s1600/3.png

pammalar
3rd August 2012, 11:15 PM
அன்புள்ள பம்மலார் சார்,

என்னுடைய கடந்தகால நினைவுப்பதிவைப் படித்ததும், மனமுவந்து பாராட்டியதுடன், நான் குறிப்பிட்டிருந்த மஞ்சள் மகிமை பாடலையும் கூடவே இரண்டு கண்டசாலா பாடல்களையும் அள்ளித்தந்த தங்களை எப்படிப்பாராட்டுவதென்று தெரியவில்லை. அவ்வளவு பழைய பாடல்களை உடனுக்குடன் தேடியெடுத்து பதிவது என்பது சாதாரண காரியமா?. எல்லாவகையிலும் மற்றவர்களை மகிழ்விப்பதில் தங்களுக்கு ஈடு இணை இல்லையென்றே கூறலாம். 'ஆகாய வீதியில்' பாடலைக் கண்ணுற்றபோது காலங்களைக்கடந்து மீண்டும் சிறுவனானேன் என்பது உண்மை.

இதயம் நிறைந்த பாராட்டுக்கள், நன்றிகள்.

டியர் mr_karthik,

தங்களின் இதயம் நிறைந்த பாராட்டுக்களுக்கும், பெருந்தன்மை கொண்ட உயர்ந்த உள்ளத்துக்கும், எனது இரு கரம் கூப்பிய, சிரம் தாழ்த்திய நன்றிகள்..!

அன்புடன்,
பம்மலார்.

pammalar
4th August 2012, 03:14 AM
டியர் வாசுதேவன் சார்,

நமது அன்புச்சகோதரர் mr_karthik, "பக்த துக்காராம்(1973)" தெலுங்குத் திரைக்காவியத்தைப் பற்றிக் கூறிய உடனேயே சுடச்சுட விருந்து பரிமாறிவிட்டீர்கள்..! இரண்டு இமேஜுகளும் Excellent..!

நமது பாரிஸ்டர் சார் அக்காவியத்தில் சத்ரபதி சிவாஜியாக வாழ்ந்துகாட்டிய நமது இதயதெய்வம் சிங்கத்தமிழன் சிவாஜியின் performanceஐ பற்றிப் பட்டையைக் கிளப்ப அவருக்குத் தாங்கள் கண் இமைக்கும் நேரத்தில் அன்புப்பரிசாக அக்காவியத்தின் ஒரு அருமையான ஸ்டில்லுடன் மேலதிக விவரங்களையும் உடனே கொடுத்து ஒரே அதகளம்வேறு..!

கலக்கலோ கலக்கல் சார்..!

இத்திரியைத் தாங்கி நிற்கும் கல்தூண் நீங்கள்..! நீவீர் வாழ்க வளமுடன்..!

அன்புடன்,
பம்மலார்.

pammalar
4th August 2012, 03:24 AM
நடிகர் திலகத்தின் அபூர்வ படமொன்று facebookல் ஒரு நண்பரின் இணையப் பக்கத்தில் இருந்தது, நம் பார்வைக்கு
http://a6.sphotos.ak.fbcdn.net/hphotos-ak-ash4/428914_427432153975978_785630183_n.jpg
அன்புடன்

இந்த ஸ்டில்போன்று, 1990களில் எடுக்கப்பட்ட தாடி வைத்த ஸ்டில்களிலெல்லாம் நம்து நடிகர் திலகம், ஒரு மகான் போலவே காட்சியளிப்பார். கலையுலக மகானின் தரிசனத்தை கண்கள் குளிரக் காணச் செய்த Facebook நண்பருக்கும், நமது ராகவேந்திரன் சாருக்கும் மனமார்ந்த நன்றிகள்..!

pammalar
4th August 2012, 03:35 AM
இன்று 4.8.2012 சனிக்கிழமை மாலை சென்னையில் அகில இந்திய சிவாஜி மன்றம் சார்பில் கோலாகலமாக நடைபெறும் டிஜிட்டல் "கர்ணன்" காவியத்தின் 150வது நாள் மெகா வெற்றிவிழா சீரோடும் சிறப்போடும் பிரம்மாண்டமாக நடைபெற இதயங்கனிந்த இனிய நல்வாழ்த்துக்கள் !

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/KarnanDi6-1.jpg

அன்புடன்,
பம்மலார்.

Thomasstemy
4th August 2012, 07:27 AM
Dear Pammalar Sir,

Very many thanks for the posts. I was just looking at the time and it says, 3:35am. Ungaludaya sayvai manapanmayai ninaithu pulagangidham adayum adhey neraththil, thanguludaya aarogyathayum karuthil kollumaaru panivanbudan kayttukollgiraen. Nadigar Thilagaththai poal, moondru shift neengalum seigireergal piragu irandoe alladhu moondru manineramoe thookam endraal, udal aarogyam ennavadhu? Suvar irundhaaldhaanae sithiram theetta mudiyum enbadhu ullangi nellikani allava sir

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/KarnanDi6-1.jpg

அன்புடன்,
பம்மலார்.[/QUOTE]

RAGHAVENDRA
4th August 2012, 07:45 AM
http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/Sathyam150ad.jpg

Subramaniam Ramajayam
4th August 2012, 08:13 AM
KARNAN 150 DAYS ADV. VERY GRAND. NEJAMELLAM INIKKIRATHU INDHA NAALAI NINAIKKA. nadigarthilathu naam seluthum magathana anjali. Evenafter lifetime doing wonders. great NADIGARTHILAGAM PROUD TO BE HIS FANS.

Richardsof
4th August 2012, 08:51 AM
OUR WARM WISHES TO ALL NT FANS ON THE EVE NT IN KARNAN 150 TH DAY CELEBRATION TO DAY AT CHENNAI.

RARE PHOTO - MT & NT IN THENNINDHIYA NADIGAR SANGAM FUNCTION. http://i49.tinypic.com/2hrpav7.jpg

Richardsof
4th August 2012, 09:31 AM
அமெரிக்காவில் சிவாஜியின் கர்ணன்! ரீலிஸ் ஆனது!


!அமெரிக்கா, சான்பிரான்சிஸ்*கோவில் சிவாஜியின் கர்ணன் படம் இன்று (ஆகஸ்ட் 3) ரீலிஸ் ஆனது. வார இறுதி நாளாக இருப்பதால் இதைக் காண ரசிகர்கள் பெருமளவில் கூடுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிவாஜியின் கர்ணன் படம் நவீன டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் புதுப்பிக்கப்பட்டு தமிழகம் முழுவதும் ரிலீஸ் செய்யப்பட்டது. 48 வருடத்துக்கு முன்பு வந்த இப்படத்துக்கு இப்போதும் வரவேற்பு இருந்தது. தியேட்டர்களில் பல வாரங்கள் ஹவுஸ் புல் காட்சிகளாக நிரம்பின. சென்னையில் 125 நாட்களை தாண்டி ஓடியது. ரூ.5 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை புரிந்தது.

இதனால் இப்படத்தை அமெரிக்காவிலும் ரிலீஸ் செய்ய முடிவு செய்யப்பட்டது. இன்று (ஆகஸ்ட் 3) அமெரிக்காவில் ரீலிஸ் ஆனது. தமிழில் மட்டுமின்றி ஆங்கில சப்டைட்டிலுடனும் வெளியிடுகிறார்கள். சிவாஜியின் வீர பாண்டிய கட்டபொம்மன் படமும் நவீன தொழில் நுட்பத்தில் தயாராகிறது. ஓரிரு மாதங்களில் இப்படத்தை ரிலீஸ் செய்ய உள்ளனர் என்பது கூடுதல் தகவல்.

mr_karthik
4th August 2012, 12:10 PM
அன்புள்ள பம்மலார் சார்,

'ராஜபக்தி' படத்தின் முதல் வெளியீட்டு விளம்பரமும் மறு வெளியீட்டு விளம்பரமும் தூள். அதிலும் மறு வெளியீட்டு விளம்பரத்தின் மேலே காணப்படும் வாசகங்கள் அருமை. இந்தபடத்தையும் இன்னும் பார்க்கும் வாய்ப்புக்கிடைக்கவில்லை. இப்படத்துக்கு நெடுந்தகடு வெளிவந்திருப்பதாக அறிகிறேன்.

மறு வெளியீட்டு விளம்பரத்தில் மற்றொரு உண்மை தெரிந்தது. ஒரே படத்தில் பானுமதி, பத்மினி, வைஜயந்திமாலா, பண்டரிபாய், ஈ.வி.சரோஜா என்று ஐந்து கதாநாயகிகள் நடித்திருப்பது ஆச்சரியமூட்டுகிறது. இவர்கள் ஐவரும் ஒன்றாக நடித்தது 'ராஜபக்தி' ஒரே படமாகத்தான் இருக்கும் என்று நம்புகிறேன்.

பொக்கிஷப்பதிவுகளுக்கு நன்றி.

mr_karthik
4th August 2012, 12:29 PM
இன்று நடைபெற இருக்கும் நடிகர்திலகத்தின் சீரிய காவியமான "கர்ணன்" திரைக்காவியத்தின் 150-வது நாள் வெற்றிவிழா பூரண வெற்றியடைய வாழ்த்துக்கள்.

விழா நிகழ்ச்சிகளை முழுமையாக பம்மலார், முரளியார், ராகவேந்திரர் ஆகியோர் இங்கே பதிவிடுவார்கள் என்று வெளியூர்வாசிகளான நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம்.

சாந்தியில் நல்ல கூட்டத்துடன் ஓடிக்கொண்டிருக்கும்போதே படத்தை எடுத்து விட்டு 'சத்யம்' திரையரங்கில் ஓடி சாதனை புரிய வைத்த திவ்யா பிலிம்ஸாருக்கு மீண்டும் மீண்டும் நன்றி. (மாறாக சாந்தியில் ஓடியிருந்தால் 'சாதனை' என்று ஒப்புக்கொள்ளவே மாட்டார்கள். 'ஓட்டினார்கள்', 'ஓட்டினார்கள்' என்று வாய்கூசாமல் பிதற்றுவார்கள். மிகப்பெரிய அரங்கமான சத்யம் அரங்கில் ஓடி சாதனை புரிய வைத்ததன் மூலமாக, பிதற்றும் வாய்களுக்கு ரிவிட் அடித்த திவ்யா பிலிம்ஸாருக்கு இந்த நல்ல நாளில் மீண்டும் நன்றி).

RAGHAVENDRA
4th August 2012, 12:52 PM
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/Old%20Tamil%20Film%20Stills/OON.jpg

மேடை, தொலைக்காட்சி, திரைப்பட நடிகரான திரு எம்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி என்கிற எம்.ஆர்.கே. அவர்கள் மிகவும் எளிமையான மனிதர். அவர் வாதத்தில் விழும் வரை சைக்கிளில் தான் எங்கும் செல்வார். படப்பிடிப்பு என்றால் கூட பஸ்சிலோ அல்லது ஆட்டோவிலோ தான் பயணிப்பார். பழகுவதற்கு இனிமையானவர். குரல் எப்போதுமே கணீரென்று தான் ஒலிக்கும். பழைய பாடல்கள், பக்திப் பாடல்கள் சேகரிப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். ஸ்ரீதரின் ஒரு ஓடை நதியாகிறது படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றியதுடன் ரகுவரனைப் பற்றி ஸ்ரீதரிடம் சொன்னதும் அவர் தான். நல்ல மனிதர்.

அவருடைய மறைவில் தமிழ்த்திரையுலகம் ஒரு அனுபவ மிக்க குணசித்திர நடிகரை இழந்து விட்டது.
மேலே உள்ள படம் ஒரு ஓடை நதியாகிறது படத்திலிருந்து.

அவருடைய ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.

joe
4th August 2012, 12:53 PM
Karnan Continues its run for second week in Singapore

HARISH2619
4th August 2012, 01:53 PM
திருவிளையாடலை டிஜிட்டல் வடிவத்துக்கு மாற்றும்போது நான்கு பாடல்களை மட்டும் வெட்டினால் போதும் என்பது என் கருத்து .
அவை : 'ஞானப்பழத்தை பிழிந்து','பொதிகை மலை','நீல சேலை' ,'இல்லாததொன்றில்லை'
நான்குமே தேனினும் இனிய பாடல்கள்தான் என்பதில் மாற்று கருத்தில்லை ஆனால் படம் ஆரம்பித்த அரை மணி நேரத்தில் நான்கு பாடல்கள் (நம சிவாய வாழ்க,ஞானப்பழத்தை,பழம் நீயப்பா,பொதிகை)என்றால் இன்றைய தலைமுறையினருக்கு ஆரம்பத்திலேயே ஒரு சலிப்பு ஏற்பட்டுவிடுமோ என்ற பயம் ஏற்படுகிறது

அதே போல் இடைவேளைக்கு பிறகும் நிறைய பாடல்கள் உள்ளதால் மேற்சொன்ன பாடல்களை வெட்டினால் நல்லது என்பது என் கருத்து

evocyucifovu
4th August 2012, 03:29 PM
காவியக் காட்சிகள் : 1



பொக்கிஷாதி பொக்கிஷம்

கர்ணன்

பேசும் படம் : ஜனவரி 1964

இந்த மிகமிக அரிய விஷுவல் ஆவணப்பதிவை அமெரிக்கா-கனடா-மலேசியா-சிங்கை வாழ் அன்புத் தமிழ் மக்களுக்கு Dedicate செய்கிறேன்..!

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC6140-1-1.jpg

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC6141-1-1.jpg

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC6142-1-1.jpg

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC6143-1-1.jpg

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC6144-1-1.jpg

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC6145-1-1.jpg

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC6146-1-1.jpg

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC6147-1-1.jpg

பக்தியுடன்,
பம்மலார்.

VOw!!!!!!! What a fantastic collection of Sivaji Ganesan stills in this historical movie.
All are great. In Present genaeration no body could think of even dressing like that.
To be kept in safe custody for future Generations.

We are seeing first time colour stills of Devika who looks very cute,beautiful and best suited for Sivaji.
Even in this film stills i find savitri is next to Devika.

vasudevan31355
4th August 2012, 08:58 PM
இன்று 150-ஆவது வெற்றிநாள் காணும் கர்ணனுக்கு களிப்புடன் கூடிய வாழ்த்துக்கள்.

http://cdn1.supergoodmovies.com/FilesFive/karnan-re-release-creates-waves-0a3c685d.jpg

pammalar
5th August 2012, 01:36 AM
dear pammalar sir,

very many thanks for the posts. I was just looking at the time and it says, 3:35am. Ungaludaya sayvai manapanmayai ninaithu pulagangidham adayum adhey neraththil, thanguludaya aarogyathayum karuthil kollumaaru panivanbudan kayttukollgiraen. Nadigar thilagaththai poal, moondru shift neengalum seigireergal piragu irandoe alladhu moondru manineramoe thookam endraal, udal aarogyam ennavadhu? Suvar irundhaaldhaanae sithiram theetta mudiyum enbadhu ullangi nellikani allava sir


டியர் பாரிஸ்டர் சார்,

தங்களின் அபரிமிதமான அன்பிற்கும், இந்த எளியவன் மேல் தாங்கள் கொண்டுள்ள அக்கறைக்கும் மனப்பூர்வமான நன்றிகள்..!

தங்கள் அன்புக்கட்டளையை கருத்தில் கொள்கிறேன். கூடியவிரைவில் அதனை செயல்படுத்துகிறேன்..!

அன்புடன்,
பம்மலார்.

pammalar
5th August 2012, 02:30 AM
அன்புள்ள பம்மலார் சார்,

'ராஜபக்தி' படத்தின் முதல் வெளியீட்டு விளம்பரமும் மறு வெளியீட்டு விளம்பரமும் தூள். அதிலும் மறு வெளியீட்டு விளம்பரத்தின் மேலே காணப்படும் வாசகங்கள் அருமை. இந்தபடத்தையும் இன்னும் பார்க்கும் வாய்ப்புக்கிடைக்கவில்லை. இப்படத்துக்கு நெடுந்தகடு வெளிவந்திருப்பதாக அறிகிறேன்.

மறு வெளியீட்டு விளம்பரத்தில் மற்றொரு உண்மை தெரிந்தது. ஒரே படத்தில் பானுமதி, பத்மினி, வைஜயந்திமாலா, பண்டரிபாய், ஈ.வி.சரோஜா என்று ஐந்து கதாநாயகிகள் நடித்திருப்பது ஆச்சரியமூட்டுகிறது. இவர்கள் ஐவரும் ஒன்றாக நடித்தது 'ராஜபக்தி' ஒரே படமாகத்தான் இருக்கும் என்று நம்புகிறேன்.

பொக்கிஷப்பதிவுகளுக்கு நன்றி.

டியர் mr_karthik,

தங்களின் மலர்ந்த பாராட்டுக்களுக்கு எனது மனம் நிறைந்த நன்றிகள்..!

"ராஜபக்தி"யின் குறுந்தகடு, மதுரை 'மாடர்ன் சினிமா' கம்பெனியால் வெளியிடப்பட்டுள்ளது. தாங்கள் சரியாக குறிப்பிட்டதுபோல், பானுமதி, பத்மினி, வைஜயந்திமாலா, பண்டரிபாய், ஈ.வி.சரோஜா ஆகிய ஐம்பெரும் நடிகைகள் ஒன்றாக இணைந்து பணியாற்றிய ஒரே திரைக்காவியம் இதுதான்.

தாங்கள் முத்தமிழறிஞரின் அபிமானியாக-விசுவாசியாக இருப்பதால், "ராஜபக்தி" மறுவெளியீட்டு விளம்பரத்தில், மேலே காணப்படும் வாசகங்கள் தங்கள் கவனத்தை ஈர்க்கும் என்று யூகித்தேன். என் யூகம் சரியாகிவிட்டது. என்னே ஒரு Telepathy Effect..!

அன்புடன்,
பம்மலார்.

pammalar
5th August 2012, 02:37 AM
நடிகர் எம்.ஆர்.கே. மறைவுக்கு நமது இதய அஞ்சலி.

அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனையும், இதயதெய்வத்தையும் இறைஞ்சுவோம்.

pammalar
5th August 2012, 02:41 AM
Karnan Continues its run for second week in Singapore

Thanks for the great information, Mr. joe..!

pammalar
5th August 2012, 02:44 AM
VOw!!!!!!! What a fantastic collection of Sivaji Ganesan stills in this historical movie.
All are great. In Present genaeration no body could think of even dressing like that.
To be kept in safe custody for future Generations.

We are seeing first time colour stills of Devika who looks very cute,beautiful and best suited for Sivaji.
Even in this film stills i find savitri is next to Devika.

Thanks for the comments, Mr. SUBBUIR..!

pammalar
5th August 2012, 02:51 AM
லேட்டஸ்ட்

டிஜிட்டல் "கர்ணன்" காவியத்தின்
150வது நாள் மெகா வெற்றிவிழா

காமராஜர் அரங்கம் ஹவுஸ்ஃபுல் ஹவுஸ்ஃபுல் !!!

இன்று 4.8.2012 ஸ்திரவாரமான சனிக்கிழமை மாலை 5 மணியிலிருந்து இரவு 9 மணி வரை, சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில், டிஜிட்டல் "கர்ணன்" திரைக்காவியம் மறுவெளியீட்டில், 150 நாட்கள் மிகமிக வெற்றிகரமாக ஓடியுள்ளதை கொண்டாடும் வகையில் பிரம்மாண்டமான வெற்றி விழா நடைபெற்றது. அகில இந்திய சிவாஜி மன்றம் நடத்திய இந்த கோலாகலமான விழா நடைபெற்ற 'காமராஜர் அரங்கம்' ஹவுஸ்ஃபுல். பல அன்புள்ளங்கள் இருக்கைகள் கிடைக்காமல் நின்று கொண்டும் விழாவை கண்டு களித்தனர். சென்னை மட்டுமல்லாது தமிழகமெங்குமிருந்து அன்புள்ளங்கள் திரண்டு வந்திருந்தனர். புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மஹாராஷ்டிராவிலிருந்தும் கணிசமான நல்லிதயங்கள் விழாவில் பங்கேற்றனர். 'காமராஜர் அரங்கம்', நுழைவாயிலிலிருந்து உட்புறம் வரை பக்தகோடிகளின் பதாகைகளால் அழகுற அலங்கரிக்கப்பட்டிருந்தன. விழா தொடங்குவதற்கு முன்னும், பின் தொடங்கியவுடன் அரங்கினுள்ளேயும் அண்ணலின் புகழ்பாடும் அன்புள்ளங்களின் கோஷங்கள் விண்ணைப் பிளந்தன. வாணவேடிக்கை, மலரலங்காரம், கற்பூர ஆரத்தி என்று பூஜாவிதாநங்களும் விமரிசையாய் நடைபெற்றன. மொத்தத்தில், ஒரு உணர்வுபூர்வமான நல்லிதயங்களின் நற்சங்கமமாக, இந்த விழா எல்லோர் மனதுக்கும் ஒரு நிறைவைத் தந்தது.

தொடரும்...

பக்தியுடன்,
பம்மலார்.

pammalar
5th August 2012, 02:55 AM
லேட்டஸ்ட்

டிஜிட்டல் "கர்ணன்" காவியத்தின் 150வது நாள் மெகா வெற்றிவிழா

http://news.webindia123.com/news/articles/India/20120804/2037861.html

பக்தியுடன்,
பம்மலார்.

pammalar
5th August 2012, 03:20 AM
லேட்டஸ்ட்

டிஜிட்டல் "கர்ணன்" காவியத்தின்
150வது நாள் மெகா வெற்றிவிழா

4.8.2012 : காமராஜர் அரங்கம் : சென்னை

கண்கொள்ளாக் காட்சிகள்

மலரலங்காரம்
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC6191.jpg

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC6190.jpg

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC6189.jpg

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC6188-1.jpg

தொடரும்...

பக்தியுடன்,
பம்மலார்.

pammalar
5th August 2012, 03:29 AM
லேட்டஸ்ட்

டிஜிட்டல் "கர்ணன்" காவியத்தின்
150வது நாள் மெகா வெற்றிவிழா

4.8.2012 : காமராஜர் அரங்கம் : சென்னை

கண்கொள்ளாக் காட்சிகள்

மஹாதீபாராதனை
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC6182.jpg

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC6184.jpg

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC6183.jpg

தொடரும்...

பக்தியுடன்,
பம்மலார்.

pammalar
5th August 2012, 04:10 AM
லேட்டஸ்ட்

டிஜிட்டல் "கர்ணன்" காவியத்தின்
150வது நாள் மெகா வெற்றிவிழா

செய்தித்தாள் சிறப்பு பக்கங்கள்

மாலை மலர் : 4.8.2012

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC6249-1.jpg

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC6250-1.jpg

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC6251-1.jpg

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC6252-1.jpg

தொடரும்...

பக்தியுடன்,
பம்மலார்.

pammalar
5th August 2012, 04:30 AM
லேட்டஸ்ட்

டிஜிட்டல் "கர்ணன்" காவியத்தின்
150வது நாள் மெகா வெற்றிவிழா

செய்தித்தாள் சிறப்பு பக்கம்

தினச்சுடர் : பெங்களூரூ : 3.8.2012

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC6253-1.jpg

தொடரும்...

பக்தியுடன்,
பம்மலார்.

pammalar
5th August 2012, 04:49 AM
லேட்டஸ்ட்

டிஜிட்டல் "கர்ணன்" காவியத்தின்
150வது நாள் மெகா வெற்றிவிழா

4.8.2012 : காமராஜர் அரங்கம் : சென்னை

கண்கொள்ளாக் காட்சிகள்

பரவசமூட்டும் பதாகைகள்
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC6203.jpg

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC6227.jpg

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC6220.jpg

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC6205.jpg

தொடரும்...

பக்தியுடன்,
பம்மலார்.

pammalar
5th August 2012, 04:59 AM
லேட்டஸ்ட்

டிஜிட்டல் "கர்ணன்" காவியத்தின்
150வது நாள் மெகா வெற்றிவிழா

4.8.2012 : காமராஜர் அரங்கம் : சென்னை

விழா இரண்டு இனிய பகுதிகளைக் கொண்டதாய் அமைந்தது. முதல் பகுதியாக, மாலை 5 மணி முதல் 7 மணி வரை, 'உதயராகம் u.k. முரளி இன்னிசைக் குழு'வின் இசைக் கச்சேரி சிறப்பாக நடைபெற்றது. மற்றொரு பகுதியாக, இரவு 7 மணி முதல் 9 மணி வரை, சிறப்பு விருந்தினர்கள் புடை சூழ, அவர்களின் புகழுரைகளோடு "கர்ணன்" வெற்றிவிழா களை கட்டியது. இவை குறித்த தொகுப்பு தொடர்ந்து பதிக்கப்படும்.

தொடரும்...

பக்தியுடன்,
பம்மலார்.

RAGHAVENDRA
5th August 2012, 05:10 AM
டியர் பம்மலார் சார்
ஊனின்றி உறக்கமின்றி ஓயாது உழைத்து நடிகர் திலகத்தின் புகழ் பாடுவதை வாழ்வின் லட்சியமாகக் கடைப்பிடித்து வரும் தங்கள் அர்ப்பணிப்பு என்னென்று சொல்வது.. கர்ணன் விழா பற்றிய நிழற்படங்களை உடனுக்குடன் பதிவு செய்துள்ளது ..

சூப்பர்..

அடியேன் வெளியூர் பயணம் செய்வதால் ஓரிரு தினங்கள் இங்கு வர முடியாது. எனவே நான் வரும் போது ஏகப் பட்ட செய்திகள் நிழற்படங்கள் வரவேற்கக் காத்திருக்கும்...

நன்றி

RAGHAVENDRA
5th August 2012, 05:13 AM
http://galleries.celebs.movies.2.pluzmedia.in/albums/pictures/uploads/Kollywood/2012/Aug/04/Karnan_Movie_150_Days_Celebration/680_Karnan_Movie_150_Days_Celebrationf6520adab0c39 17aae84473adba1f2e1.jpg

http://galleries.celebs.movies.2.pluzmedia.in/albums/pictures/uploads/Kollywood/2012/Aug/04/Karnan_Movie_150_Days_Celebration/680_Karnan_Movie_150_Days_Celebrationc13cfc0847e33 9afa5071f1897dfa4cf.jpg

http://galleries.celebs.movies.2.pluzmedia.in/albums/pictures/uploads/Kollywood/2012/Aug/04/Karnan_Movie_150_Days_Celebration/680_Karnan_Movie_150_Days_Celebration9a09512a39737 7058d9d72581adeba8a.jpg

http://galleries.celebs.movies.2.pluzmedia.in/albums/pictures/uploads/Kollywood/2012/Aug/04/Karnan_Movie_150_Days_Celebration/680_Karnan_Movie_150_Days_Celebration83b18c0852128 0a7968bd4edfe0263fd.jpg

http://galleries.celebs.movies.2.pluzmedia.in/albums/pictures/uploads/Kollywood/2012/Aug/04/Karnan_Movie_150_Days_Celebration/680_Karnan_Movie_150_Days_Celebration535079d342d86 8aa001c4cda5d766822.jpg

RAGHAVENDRA
5th August 2012, 05:16 AM
http://44.img.v4.skyrock.net/1348/80801348/pics/3106555675_2_11_WRnq4Ryc.jpg

http://05.wir.skyrock.net/wir/v1/profilcrop/?c=isi&im=%2F1348%2F80801348%2Fpics%2F3106555675_2_15_B8R T2nc7.jpg&w=198&h=131

http://05.wir.skyrock.net/wir/v1/profilcrop/?c=isi&im=%2F1348%2F80801348%2Fpics%2F3106555675_2_5_pO3e eFj4.jpg&w=298&h=197

http://05.wir.skyrock.net/wir/v1/profilcrop/?c=isi&im=%2F1348%2F80801348%2Fpics%2F3106555675_2_7_XKfP vHpG.jpg&w=198&h=131

RAGHAVENDRA
5th August 2012, 05:18 AM
http://g.ahan.in/tamil/Karnan%20Movie%20150%20Days%20Celebration/Karnan%20Movie%20150%20Days%20Celebration%20(24).j pg

http://g.ahan.in/tamil/Karnan%20Movie%20150%20Days%20Celebration/Karnan%20Movie%20150%20Days%20Celebration%20(3).jp g

http://www.tamilomovie.net/albums/04%20Aug%202012%202/Karnan%20Movie%20150%20Days%20Celebration/normal_Karnan_Movie_150_Days_Celebration281229.jpg

pammalar
5th August 2012, 05:39 AM
டியர் பம்மலார் சார்
ஊனின்றி உறக்கமின்றி ஓயாது உழைத்து நடிகர் திலகத்தின் புகழ் பாடுவதை வாழ்வின் லட்சியமாகக் கடைப்பிடித்து வரும் தங்கள் அர்ப்பணிப்பு என்னென்று சொல்வது.. கர்ணன் விழா பற்றிய நிழற்படங்களை உடனுக்குடன் பதிவு செய்துள்ளது ..

சூப்பர்..

அடியேன் வெளியூர் பயணம் செய்வதால் ஓரிரு தினங்கள் இங்கு வர முடியாது. எனவே நான் வரும் போது ஏகப் பட்ட செய்திகள் நிழற்படங்கள் வரவேற்கக் காத்திருக்கும்...

நன்றி

டியர் ராகவேந்திரன் சார்,

தங்கள் சித்தம் என் பாக்கியம்..!

தங்களுக்கு எனது ஆத்மார்த்தமான நன்றி..!

தாங்கள் பதித்துள்ள விழா நிழற்படங்களுக்கு ஸ்பெஷல் தேங்க்ஸ்..!

தங்களின் வெளியூர் பயணம் வெற்றிகரமாக அமைய வாழ்த்துக்கள்..!

அன்புடன்,
பம்மலார்.

pammalar
5th August 2012, 05:40 AM
லேட்டஸ்ட்

டிஜிட்டல் "கர்ணன்" காவியத்தின்
150வது நாள் மெகா வெற்றிவிழா

4.8.2012 : காமராஜர் அரங்கம் : சென்னை

கண்கொள்ளாக் காட்சிகள்

பரவசமூட்டும் பதாகைகள்
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC6214.jpg

தொடரும்...

பக்தியுடன்,
பம்மலார்.

pammalar
5th August 2012, 05:45 AM
லேட்டஸ்ட்

டிஜிட்டல் "கர்ணன்" காவியத்தின்
150வது நாள் மெகா வெற்றிவிழா

4.8.2012 : காமராஜர் அரங்கம் : சென்னை

அன்புள்ளங்கள் அளித்த குறும்பிரசுரம் (Notice)

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC6255-1.jpg

தொடரும்...

பக்தியுடன்,
பம்மலார்.

pammalar
5th August 2012, 05:47 AM
லேட்டஸ்ட்

டிஜிட்டல் "கர்ணன்" காவியத்தின்
150வது நாள் மெகா வெற்றிவிழா

4.8.2012 : காமராஜர் அரங்கம் : சென்னை

அன்புள்ளங்கள் அளித்த குறும்பிரசுரம் (Notice)

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC6254-1.jpg

தொடரும்...

பக்தியுடன்,
பம்மலார்.

vasudevan31355
5th August 2012, 07:15 AM
"கர்ணன்" காவியத்தின் 150வது நாள் வெற்றிவிழா

http://galleries.celebs.movies.2.pluzmedia.in/albums/pictures/uploads/Kollywood/2012/Aug/04/Karnan_Movie_150_Days_Celebration/Karnan_Movie_150_Days_Celebration2376901779344b90f 64ca0e14a86d793.jpg

http://galleries.celebs.movies.2.pluzmedia.in/albums/pictures/uploads/Kollywood/2012/Aug/04/Karnan_Movie_150_Days_Celebration/Karnan_Movie_150_Days_Celebration6ecc23e37f17137a2 85468c6af16fcab.jpg

http://galleries.celebs.movies.2.pluzmedia.in/albums/pictures/uploads/Kollywood/2012/Aug/04/Karnan_Movie_150_Days_Celebration/Karnan_Movie_150_Days_Celebration5cd5171cf406168a6 cc7ec78e1cf9b26.jpg

http://galleries.celebs.movies.2.pluzmedia.in/albums/pictures/uploads/Kollywood/2012/Aug/04/Karnan_Movie_150_Days_Celebration/Karnan_Movie_150_Days_Celebration5c02286ea5780ed22 4d3d965d5093fe2.jpg

http://galleries.celebs.movies.2.pluzmedia.in/albums/pictures/uploads/Kollywood/2012/Aug/04/Karnan_Movie_150_Days_Celebration/Karnan_Movie_150_Days_Celebration4ea718a749dffe6d0 2072c71f5319b60.jpg

http://galleries.celebs.movies.2.pluzmedia.in/albums/pictures/uploads/Kollywood/2012/Aug/04/Karnan_Movie_150_Days_Celebration/Karnan_Movie_150_Days_Celebration4e84b29b13211cb18 3b607f222236657.jpg

http://galleries.celebs.movies.2.pluzmedia.in/albums/pictures/uploads/Kollywood/2012/Aug/04/Karnan_Movie_150_Days_Celebration/Karnan_Movie_150_Days_Celebration4b3cf4e3716f90c6b 4ea5bd7781f2331.jpg

http://galleries.celebs.movies.2.pluzmedia.in/albums/pictures/uploads/Kollywood/2012/Aug/04/Karnan_Movie_150_Days_Celebration/Karnan_Movie_150_Days_Celebration33d3fc24ec55d5a1e 657de8ea32d2fc4.jpg

http://galleries.celebs.movies.2.pluzmedia.in/albums/pictures/uploads/Kollywood/2012/Aug/04/Karnan_Movie_150_Days_Celebration/Karnan_Movie_150_Days_Celebration15c7712b0728186e9 9a961b1c0046ca6.jpg

http://galleries.celebs.movies.2.pluzmedia.in/albums/pictures/uploads/Kollywood/2012/Aug/04/Karnan_Movie_150_Days_Celebration/Karnan_Movie_150_Days_Celebration14da43699677b6f7c ac8b3f3a8b77b2b.jpg

Thanks to plus media

vasudevan31355
5th August 2012, 07:29 AM
இந்த சந்தோஷமான தருணத்தில் 'கர்ணன்' வேலூரில் (ராஜா திரையரங்கு) வெளியாகி ஐம்பதாவது நாள் வெற்றிநடை போட்ட போது நம் அன்பு ரசிகர்கள் உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ்ந்த அளப்பரிய கொண்டாட்டங்களை இப்போது நினைவு கூர்ந்து மகிழ்ச்சியடையலாம்.


http://www.youtube.com/watch?v=WiZh2C5k6N0&feature=player_detailpage

joe
5th August 2012, 08:20 AM
Pammalar , Raghavendra Sir,
Thanks for the excellent updates on Karnan 150.

vasudevan31355
5th August 2012, 09:04 AM
நடிகர் எம்.ஆர்.கே. காலமானார் ('தினமணி') (5-8-2012)

http://www.dinamani.com/Images/article/2012/8/4/mrk.jpg

சென்னை, ஆக.3: நடிகர் எம்.ஆர்.கே என்ற எம்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி (72) உடல்நலக் குறைவால் சென்னையில் வெள்ளிக்கிழமை காலமானார்.

சென்னை திருவல்லிக்கேணியில் குடும்பத்தினருடன் வசித்து வந்த எம்.ஆர்.கே. கடந்த சில மாதங்களாக பக்கவாத நோயால் அவதிப்பட்டு வந்தார். வீட்டிலிருந்தவாறே சிகிச்சை மேற்கொண்டு வந்த அவர், வெள்ளிக்கிழமை பிற்பகலில் காலமானார்.

வி.கோபாலகிருஷ்ணனின் நாடகக் குழுவில் ஏராளமான மேடை நாடகங்களில் நடித்த அனுபவம் பெற்ற எம்.ஆர்.கே., கே.விஜயன் இயக்கத்தில் சிவாஜி கணேசன் நடித்த "காவல் தெய்வம்' படத்தின் மூலம் 1969-ம் ஆண்டு திரையுலகில் அறிமுகமானார். அதன் பிறகு தொடர்ச்சியாக நடித்து வந்த அவர் ஸ்ரீதர் இயக்கிய "ஒரு ஓடை நதியாகிறது' படத்தில் இணை இயக்குநராகப் பணியாற்றினார். ரஜினிகாந்துடன் "தர்மத்தின் தலைவன்', "அதிசயப்பிறவி', "அருணாச்சலம்', கமல்ஹாசனுடன் "மகராசன்', விக்ரமுடன் "தில்', "சாமி' உள்பட முன்னணி நடிகர்களுடன் 100-க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார். 500-க்கும் மேற்பட்ட மேடை நாடகங்களிலும் ஏராளமான தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார்.

மறைந்த எம்.ஆர்.கே.க்கு ஒரு மகன், மகள் உள்ளனர். மனைவி சுலோசனா 2008-ம் ஆண்டு காலமாகிவிட்டார். எம்.ஆர்.கே.யின் இறுதிச் சடங்கு சென்னையில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

vasudevan31355
5th August 2012, 02:02 PM
'தினமணி' குறிப்பிட்டது போல நடிகர் திலகத்தின் 'காவல் தெய்வம்' காவியத்தில் எம்.ஆர்.கே என்ற எம்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி அறிமுகமானார். முதல் படமே நடிகர் திலகத்தின் படம். இந்த அற்புத பாக்கியத்தைப் பெற்ற எம்.ஆர்.கே 'வீட்டுல எலி வெளியில புலி' என்ற சிவகுமார் ஹீரோவாக நடித்த படத்தில் முழு வில்லனாக நடித்து புகழ் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. அன்னாரது ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவோம்.

'காவல் தெய்வம்' படத்தில் ஐயாராக வேடமேற்று நிற்பவர்தான் எம்.ஆர்.கே.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_05_1VOB_002006553.jpg

mr_karthik
5th August 2012, 03:18 PM
அன்புள்ள பம்மலார் சார்,

'கர்ணன்' திரைக்காவியத்தின் 150-வது வெற்றித்திருநாள் கொண்டாட்டங்களை சுடச்சுட தந்து மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தி விட்டீர்கள். நிழற்படங்கள் அனைத்தும் சூப்பராக அமைந்துள்ளது. செய்தித்தாள் விளம்பரங்கள், அன்புள்ளங்கள் வெளியிட்ட குறும்பிரசுரங்கள், டிஜிட்டல் பேனர்கள், சுவரொட்டிகள், தீப ஆராதனைகள், வெற்றிக்கேடயங்களுடன் வி.ஐ.பிக்கள் என அனைத்தையும் விடாது தொகுத்து அளித்துள்ளீர்கள். என்ன ஒரு சேவை மனப்பான்மை. விழாவில் கலந்துகொண்ட அன்புள்ளங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

வழக்கமாக திரைப்படங்களுக்கு வெளியீட்டு நாளன்று கொண்டாட்டம் இருக்கும், அதையடுத்து வெற்றிவிழா நாளன்று கொண்டாட்டம் இருக்கும். ஆனால் நமது டிஜிட்டல் 'கர்ணனுக்கோ' வெளியிட்ட நாளிலிருந்து தினம் தினம் கொண்டாட்டம்தான், திருவிழாதான். தினம் தினம் ஏதாவதொரு பத்திரிகையில் கர்ணன் பற்றிய செய்திகள் வந்துகொண்டே இருந்தன. எந்தப்படத்துக்கும் கிடைக்காத பெரிய பேறு இது.

சத்யம் திரையரங்குக்கு வெற்றிக்கேடயம் வழங்கப்பட்டதா என அறிய விரும்புகிறேன். ஏனென்றால் வி.ஐ.பி.க்களுக்கு வழங்கப்படும் ஷீல்டுகள் அவரவர்கள் வீடுகளுக்குள் போய் முடங்கி விடும். திரையரங்குகளுக்கு வழங்கப்படும் கேடயங்கள் மட்டுமே ரசிகர்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு, அத்திரையரங்கில் படம் பார்க்க வரும் ரசிகர்களுக்கு ஆண்டாண்டு காலத்துக்கும் கர்ணன் வெற்றியை பறைசாற்றிக்கொண்டிருக்கும்.

பம்மலார் அவர்களே, நேற்றிரவு பத்து மணிவரை காமராஜர் அரங்கத்தில் இருந்திருப்பீர்கள். (அதற்கு மேலும் இருந்திருக்கலாம்). அதன்பிறகு உங்களது பதிவுகளைப்பார்த்தால் நள்ளிரவு 11.45 மணியிலிருந்து விடியற்காலை 3.20 வரை பதிவுகளை இட்டிருக்கிறீர்கள். தங்கள் உடல் நலம் குறித்து எங்கள் அனைவரையும் கவலைகொள்ள வைக்கிறீர்கள். பதிவுகளை சுடச்சுட தரலாம், தவறில்லை. அதற்காக உங்கள் உடல நலனைப்பொருட்படுத்தாமல் கொதிக்கக் கொதிக்கத் தரவேண்டுமா?. பதிவுகளும், திரியும், நாங்களும் எங்கும் ஓடிவிடப்போவதில்லை. ஓய்வெடுக்க வேண்டிய நேரத்தில் கட்டாய ஓய்வெடுங்கள். இது எங்களது அன்பு வேண்டுகோள்.

pammalar
5th August 2012, 03:33 PM
லேட்டஸ்ட்

டிஜிட்டல் "கர்ணன்" காவியத்தின்
150வது நாள் மெகா வெற்றிவிழா

4.8.2012 : காமராஜர் அரங்கம் : சென்னை

இளைய திலகம் டாக்டர் பிரபு அவர்களின் வாழ்த்துரை


http://www.youtube.com/watch?v=IdfFoW7gm7I

இந்த வீடியோவை வழங்கிய 'தமிழ் திரை'க்கு நமது நெஞ்சார்ந்த நன்றி..!

தொடரும்...

பக்தியுடன்,
பம்மலார்.

pammalar
5th August 2012, 03:39 PM
லேட்டஸ்ட்

டிஜிட்டல் "கர்ணன்" காவியத்தின்
150வது நாள் மெகா வெற்றிவிழா

4.8.2012 : காமராஜர் அரங்கம் : சென்னை

சிவாஜி வெறியர் திரு.ஒய்.ஜி.மகேந்திரா அவர்களின் சிறப்புரை


http://www.youtube.com/watch?v=9nQjoaPosNw


http://www.youtube.com/watch?v=J4bvXg24li4

இந்த இரு வீடியோக்களை வழங்கிய 'தமிழ் திரை'க்கு நமது நெஞ்சார்ந்த நன்றி..!

தொடரும்...

பக்தியுடன்,
பம்மலார்.

pammalar
5th August 2012, 03:49 PM
லேட்டஸ்ட்

டிஜிட்டல் "கர்ணன்" காவியத்தின்
150வது நாள் மெகா வெற்றிவிழா

4.8.2012 : காமராஜர் அரங்கம் : சென்னை

சிவாஜி ஆராய்ச்சியாளர் திரு.மருதுமோகன் அவர்களின் உணர்வுபூர்வமான உரை


http://www.youtube.com/watch?v=Mn0XmWW10tw


http://www.youtube.com/watch?v=6BtPVMfrJgM

இந்த வீடியோக்களை வழங்கிய 'தமிழ் திரை'க்கு நமது நெஞ்சார்ந்த நன்றி..!

தொடரும்...

பக்தியுடன்,
பம்மலார்.

kid-glove
5th August 2012, 04:03 PM
Hair-rising speech and performance (his best?), YGM! :shock:

pammalar
5th August 2012, 04:03 PM
லேட்டஸ்ட்

டிஜிட்டல் "கர்ணன்" காவியத்தின் 150வது நாள் மெகா வெற்றிவிழா

http://timesofindia.indiatimes.com/entertainment/regional/tamil/news-interviews/Sivaji-fans-celebrate-150-days-of-Karnan/articleshow/15362300.cms

பக்தியுடன்,
பம்மலார்.

pammalar
5th August 2012, 04:08 PM
லேட்டஸ்ட்

டிஜிட்டல் "கர்ணன்" காவியத்தின் 150வது நாள் மெகா வெற்றிவிழா

http://movies.sulekha.com/tamil/karnan/events/karnan-movie-150-days-celebration/picture/1.htm

பக்தியுடன்,
பம்மலார்.

pammalar
5th August 2012, 04:11 PM
லேட்டஸ்ட்

டிஜிட்டல் "கர்ணன்" காவியத்தின் 150வது நாள் மெகா வெற்றிவிழா

கலக்கல் நிழற்படங்களின் தொகுப்பு

http://kalakkalcinema.com/tamil_events_list.php?id=3983

பக்தியுடன்,
பம்மலார்.

pammalar
5th August 2012, 04:19 PM
லேட்டஸ்ட்

டிஜிட்டல் "கர்ணன்" காவியத்தின் 150வது நாள் மெகா வெற்றிவிழா

அருமையான புகைப்படங்களின் அணிவரிசை

http://pluzmedia.in/galleries/kollywood/54857/karnan-movie-150-days-celebration-photos

பக்தியுடன்,
பம்மலார்.

pammalar
5th August 2012, 04:23 PM
லேட்டஸ்ட்

டிஜிட்டல் "கர்ணன்" காவியத்தின் 150வது நாள் மெகா வெற்றிவிழா

http://cineshadow.skyrock.com/3106555675-Karnan-150-days-Celebration-Stills.html

பக்தியுடன்,
பம்மலார்.

pammalar
5th August 2012, 06:24 PM
டியர் வாசுதேவன் சார்,

தாங்கள் பதித்த, டிஜிட்டல் "கர்ணன்" 150வது நாள் பிரம்மாண்ட வெற்றிவிழா நிழற்படங்களுக்கு, நெஞ்சார்ந்த நன்றிகள்..!

"காவல் தெய்வம்" காவிய எம்.ஆர்.கே. நிழற்படம், அவருக்கு செலுத்தப்பட்ட சரியான அஞ்சலி.

அன்புடன்,
பம்மலார்.

pammalar
5th August 2012, 06:27 PM
லேட்டஸ்ட்

டிஜிட்டல் "கர்ணன்" காவியத்தின் 150வது நாள் மெகா வெற்றிவிழா

அசத்தலோ அசத்தல் புகைப்படத் தொகுப்பு

http://www.searchtamilmovies.com/2012/08/karnan-150-days-celebration-stills.html

பக்தியுடன்,
பம்மலார்.

pammalar
5th August 2012, 06:32 PM
லேட்டஸ்ட்

டிஜிட்டல் "கர்ணன்" காவியத்தின் 150வது நாள் மெகா வெற்றிவிழா

மெகா புகைப்படத் தொகுப்பு

http://www.indiaeveryday.in/gallery/t/6000/karnan-movie-150-days-celebration-gallery.htm

பக்தியுடன்,
பம்மலார்.

pammalar
5th August 2012, 06:42 PM
லேட்டஸ்ட்

டிஜிட்டல் "கர்ணன்" காவியத்தின் 150வது நாள் மெகா வெற்றிவிழா

http://www.kollytalk.com/stills/karnan-movie-150-days-celebration-stills/

பக்தியுடன்,
பம்மலார்.

pammalar
5th August 2012, 06:45 PM
லேட்டஸ்ட்

டிஜிட்டல் "கர்ணன்" காவியத்தின் 150வது நாள் மெகா வெற்றிவிழா

மெகா புகைப்படத் தொகுப்பு

http://movies.sulekha.com/tamil/karnan/events/karnan-movie-150-days-celebration/picture/thumbnails.htm

பக்தியுடன்,
பம்மலார்.

pammalar
5th August 2012, 06:47 PM
Pammalar , Raghavendra Sir,
Thanks for the excellent updates on Karnan 150.

Thanks for your compliments, Mr. joe..!

pammalar
5th August 2012, 06:50 PM
லேட்டஸ்ட்

டிஜிட்டல் "கர்ணன்" காவியத்தின் 150வது நாள் மெகா வெற்றிவிழா

http://peacockcinema.com/wordpress/?attachment_id=3958

பக்தியுடன்,
பம்மலார்.

pammalar
5th August 2012, 06:55 PM
லேட்டஸ்ட்

டிஜிட்டல் "கர்ணன்" காவியத்தின் 150வது நாள் மெகா வெற்றிவிழா

http://www.newkerala.com/news/newsplus/worldnews-62199.html#.UB5zOfZlQkQ

பக்தியுடன்,
பம்மலார்.

vasudevan31355
5th August 2012, 07:02 PM
அன்பு பம்மலார் சார்,

உடல்நிலையைக் கூடப் பொருட்படுத்தாமல் ஆவி பறக்க "கர்ணன்" காவியத்தின் 150-வது நாள் மெகா வெற்றிவிழா நிகழ்ச்சிகளின் தொகுப்பை ஒன்று விடாமல் மிக அழகாகப் பதிவிட்டு, அதோடு நில்லாமல் கர்ணனின் வெற்றியை பறை சாற்றும் அனைத்து இணையதளங்களில் வெளியாகியுள்ள அனைத்து தகவல்களையும் சுட்டிகளாகக் கொடுத்து, திரியிலும் கர்ணன் போல விஸ்வரூப வெற்றி அடைந்துள்ளீர்கள். அதற்கான தங்கள் உழைப்பு அபாரம். செய்தித்தாள்கள், மற்றும் பத்திரிக்கை செய்திகளும் கலக்கலோ கலக்கல். ஆனால் அன்பு ஹப்பர்கள் வேண்டுகோளின் படி தங்கள் உடல்நிலை மிக முக்கியம். அதையும் மனதில் கொள்ளுங்கள். ராட்சஷப் பதிவுகளுக்கு மகிழ்வான நன்றிகள்.

pammalar
5th August 2012, 07:03 PM
லேட்டஸ்ட்

டிஜிட்டல் "கர்ணன்" காவியத்தின் 150வது நாள் மெகா வெற்றிவிழா

http://www.bharatmovies.com/vo/karnan-movie-150-days-celebration.htm

பக்தியுடன்,
பம்மலார்.

pammalar
5th August 2012, 07:05 PM
லேட்டஸ்ட்

டிஜிட்டல் "கர்ணன்" காவியத்தின் 150வது நாள் மெகா வெற்றிவிழா

பிரம்மாண்ட புகைப்படத் தொகுப்பு

http://moovstills.com/karnan-movie-150-days-celebration/

பக்தியுடன்,
பம்மலார்.

vasudevan31355
5th August 2012, 07:12 PM
அன்பு ராகவேந்திரன் சார்,


கர்ணன் விழா பற்றிய நிழற்படங்களை வெளியிட்டு அசத்தியதற்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

vasudevan31355
5th August 2012, 07:14 PM
அன்பு பம்மலார் சார்,

தங்கள் அன்புப் பாராட்டிற்கு என் மனமார்ந்த நன்றிகள்.

pammalar
5th August 2012, 07:17 PM
லேட்டஸ்ட்

டிஜிட்டல் "கர்ணன்" காவியத்தின்
150வது நாள் மெகா வெற்றிவிழா

4.8.2012 : காமராஜர் அரங்கம் : சென்னை

அன்புள்ளங்கள் அளித்த குறும்பிரசுரம் (Notice)

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC6257-1.jpg

தொடரும்...

பக்தியுடன்,
பம்மலார்.

pammalar
5th August 2012, 07:22 PM
லேட்டஸ்ட்

டிஜிட்டல் "கர்ணன்" காவியத்தின்
150வது நாள் மெகா வெற்றிவிழா

4.8.2012 : காமராஜர் அரங்கம் : சென்னை

அன்புள்ளங்கள் அளித்த குறும்பிரசுரம் (Notice)

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC6256-1.jpg

தொடரும்...

பக்தியுடன்,
பம்மலார்.

pammalar
5th August 2012, 07:37 PM
அன்புள்ள பம்மலார் சார்,

'கர்ணன்' திரைக்காவியத்தின் 150-வது வெற்றித்திருநாள் கொண்டாட்டங்களை சுடச்சுட தந்து மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தி விட்டீர்கள். நிழற்படங்கள் அனைத்தும் சூப்பராக அமைந்துள்ளது. செய்தித்தாள் விளம்பரங்கள், அன்புள்ளங்கள் வெளியிட்ட குறும்பிரசுரங்கள், டிஜிட்டல் பேனர்கள், சுவரொட்டிகள், தீப ஆராதனைகள், வெற்றிக்கேடயங்களுடன் வி.ஐ.பிக்கள் என அனைத்தையும் விடாது தொகுத்து அளித்துள்ளீர்கள். என்ன ஒரு சேவை மனப்பான்மை. விழாவில் கலந்துகொண்ட அன்புள்ளங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

வழக்கமாக திரைப்படங்களுக்கு வெளியீட்டு நாளன்று கொண்டாட்டம் இருக்கும், அதையடுத்து வெற்றிவிழா நாளன்று கொண்டாட்டம் இருக்கும். ஆனால் நமது டிஜிட்டல் 'கர்ணனுக்கோ' வெளியிட்ட நாளிலிருந்து தினம் தினம் கொண்டாட்டம்தான், திருவிழாதான். தினம் தினம் ஏதாவதொரு பத்திரிகையில் கர்ணன் பற்றிய செய்திகள் வந்துகொண்டே இருந்தன. எந்தப்படத்துக்கும் கிடைக்காத பெரிய பேறு இது.

சத்யம் திரையரங்குக்கு வெற்றிக்கேடயம் வழங்கப்பட்டதா என அறிய விரும்புகிறேன். ஏனென்றால் வி.ஐ.பி.க்களுக்கு வழங்கப்படும் ஷீல்டுகள் அவரவர்கள் வீடுகளுக்குள் போய் முடங்கி விடும். திரையரங்குகளுக்கு வழங்கப்படும் கேடயங்கள் மட்டுமே ரசிகர்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு, அத்திரையரங்கில் படம் பார்க்க வரும் ரசிகர்களுக்கு ஆண்டாண்டு காலத்துக்கும் கர்ணன் வெற்றியை பறைசாற்றிக்கொண்டிருக்கும்.

பம்மலார் அவர்களே, நேற்றிரவு பத்து மணிவரை காமராஜர் அரங்கத்தில் இருந்திருப்பீர்கள். (அதற்கு மேலும் இருந்திருக்கலாம்). அதன்பிறகு உங்களது பதிவுகளைப்பார்த்தால் நள்ளிரவு 11.45 மணியிலிருந்து விடியற்காலை 3.20 வரை பதிவுகளை இட்டிருக்கிறீர்கள். தங்கள் உடல் நலம் குறித்து எங்கள் அனைவரையும் கவலைகொள்ள வைக்கிறீர்கள். பதிவுகளை சுடச்சுட தரலாம், தவறில்லை. அதற்காக உங்கள் உடல நலனைப்பொருட்படுத்தாமல் கொதிக்கக் கொதிக்கத் தரவேண்டுமா?. பதிவுகளும், திரியும், நாங்களும் எங்கும் ஓடிவிடப்போவதில்லை. ஓய்வெடுக்க வேண்டிய நேரத்தில் கட்டாய ஓய்வெடுங்கள். இது எங்களது அன்பு வேண்டுகோள்.

டியர் mr_karthik,

தங்களின் உயர்ந்த பாராட்டுதல்களுக்கு எனது உளப்பூர்வமான நன்றிகள்..!

தாங்கள் குறிப்பிட்டுள்ளது போல் நமது மறுவெளியீட்டு டிஜிட்டல் "கர்ணன்" திரைக்காவியத்துக்கு தினந்தோறும் திருவிழாதான்..!

டிஜிட்டல் "கர்ணன்" 150வது நாள் கோலாகல வெற்றிவிழாவில், சென்னை 'சத்யம்' சினிமாஸ் மேலாளர் திரு. முனி கன்னையா அவர்களுக்கு, 150வது நாள் வெற்றிக்கேடயம் வழங்கப்பட்டது. 'சத்யம்' திரையரங்கம் சார்பில் அவர் இதைப் பெற்றுக் கொண்டார்.

அன்புச்சகோதரராகிய தங்களின் அன்பு வேண்டுகோளுக்கு அவசியம் செவி சாய்க்கிறேன். தங்களின் எல்லையில்லா அன்பிற்கும், அடியேன் மேல் உள்ள அக்கறைக்கும் எனது இதயபூர்வமான நன்றிகள்..!

அன்புடன்,
பம்மலார்.

pammalar
5th August 2012, 11:07 PM
நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள் !!!

"பார்த்தால் பசி தீரும்(1962)" அரிய நிழற்படம்
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/PPT1-1.jpg


"உனக்காக நான்(1976)" பாடல் வீடியோ:


http://www.youtube.com/watch?v=CFj4Tb9KEYw

உலகெங்கிலும் உள்ள நமது 'மய்யம்' இணையதள நண்பர்கள் அனைவருக்கும் இதயங்கனிந்த இனிய நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள் ! நமது நட்பு இன்று போல் என்றும் பொலிவோடு தொடரட்டும் !

அன்புடன்,
பம்மலார்.

pammalar
5th August 2012, 11:47 PM
அன்பு பம்மலார் சார்,

உடல்நிலையைக் கூடப் பொருட்படுத்தாமல் ஆவி பறக்க "கர்ணன்" காவியத்தின் 150-வது நாள் மெகா வெற்றிவிழா நிகழ்ச்சிகளின் தொகுப்பை ஒன்று விடாமல் மிக அழகாகப் பதிவிட்டு, அதோடு நில்லாமல் கர்ணனின் வெற்றியை பறை சாற்றும் அனைத்து இணையதளங்களில் வெளியாகியுள்ள அனைத்து தகவல்களையும் சுட்டிகளாகக் கொடுத்து, திரியிலும் கர்ணன் போல விஸ்வரூப வெற்றி அடைந்துள்ளீர்கள். அதற்கான தங்கள் உழைப்பு அபாரம். செய்தித்தாள்கள், மற்றும் பத்திரிக்கை செய்திகளும் கலக்கலோ கலக்கல். ஆனால் அன்பு ஹப்பர்கள் வேண்டுகோளின் படி தங்கள் உடல்நிலை மிக முக்கியம். அதையும் மனதில் கொள்ளுங்கள். ராட்சஷப் பதிவுகளுக்கு மகிழ்வான நன்றிகள்.

டியர் வாசுதேவன் சார்,

தங்களின் அன்பான பாராட்டுக்கு எனது அகம் குளிர்ந்த நன்றிகள்..!

தங்கள் மற்றும் நமது நண்பர்களின் அன்பு வேண்டுகோளினை நிச்சயம் கருத்தில் கொள்கிறேன்..!

அன்புடன்,
பம்மலார்.

pammalar
5th August 2012, 11:51 PM
லேட்டஸ்ட்

டிஜிட்டல் "கர்ணன்" காவியத்தின் 150வது நாள் மெகா வெற்றிவிழா

மகாமெகா புகைப்படத் தொகுப்பு

http://www.cineshadow.com/?p=32924

பக்தியுடன்,
பம்மலார்.

pammalar
5th August 2012, 11:53 PM
லேட்டஸ்ட்

டிஜிட்டல் "கர்ணன்" காவியத்தின் 150வது நாள் மெகா வெற்றிவிழா

http://www.galatta.com/tamil/news/and-its-150-days-for-karnan/61571/

பக்தியுடன்,
பம்மலார்.

pammalar
6th August 2012, 12:36 AM
லேட்டஸ்ட்

டிஜிட்டல் "கர்ணன்" காவியத்தின்
150வது நாள் மெகா வெற்றிவிழா

4.8.2012 : காமராஜர் அரங்கம் : சென்னை

அன்புள்ளங்கள் அளித்த குறும்பிரசுரம் (Notice)

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC6263-1.jpg

தொடரும்...

பக்தியுடன்,
பம்மலார்.

pammalar
6th August 2012, 12:59 AM
லேட்டஸ்ட்

டிஜிட்டல் "கர்ணன்" காவியத்தின்
150வது நாள் மெகா வெற்றிவிழா

செய்தித்தாள் சிறப்பு பக்கங்கள்

மாலை மலர் : 4.8.2012

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC6258-1.jpg

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC6259-1.jpg

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC6260-1.jpg

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC6262-1.jpg

தொடரும்...

பக்தியுடன்,
பம்மலார்.

pammalar
6th August 2012, 04:12 AM
லேட்டஸ்ட்

டிஜிட்டல் "கர்ணன்" காவியத்தின்
150வது நாள் மெகா வெற்றிவிழா

செய்தித்தாள் சிறப்பு பக்கங்கள்

மாலை மலர் : 4.8.2012
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC6267-2.jpg

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC6268-1.jpg

தொடரும்...

பக்தியுடன்,
பம்மலார்.

pammalar
6th August 2012, 04:21 AM
லேட்டஸ்ட்

டிஜிட்டல் "கர்ணன்" காவியத்தின்
150வது நாள் மெகா வெற்றிவிழா

செய்தித்தாள் சிறப்பு பக்கங்கள்

மாலை மலர் : 4.8.2012
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC6265-1.jpg


தினச்சுடர் : பெங்களூரூ : 3.8.2012
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC6266-1.jpg

தொடரும்...

பக்தியுடன்,
பம்மலார்.

pammalar
6th August 2012, 04:28 AM
லேட்டஸ்ட்

டிஜிட்டல் "கர்ணன்" காவியத்தின் 150வது நாள் மெகா வெற்றிவிழா

தினத்தந்தி : 5.8.2012
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC6264-1.jpg

தொடரும்...

பக்தியுடன்,
பம்மலார்.

pammalar
6th August 2012, 04:37 AM
லேட்டஸ்ட்

டிஜிட்டல் "கர்ணன்" காவியத்தின் 150வது நாள் மெகா வெற்றிவிழா

மாலை மலர் : 5.8.2012
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC6269-1.jpg

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC6270-1.jpg

தொடரும்...

பக்தியுடன்,
பம்மலார்.

rajeshkrv
6th August 2012, 06:09 AM
fantastic speech by YGM.

KCSHEKAR
6th August 2012, 11:36 AM
டியர் பம்மலார்,

கர்ணன் 150 வது நாள் விழாவைப் பற்றி ஒரு முழுமையான பதிவை மிகவும் சிரமப்பட்டு, சுடச் சுட அளித்துள்ளீர்கள். உங்களுக்கு இதயப்பூர்வமான நன்றிகள்.

mr_karthik
6th August 2012, 12:22 PM
அன்புள்ள பம்மலார் சார்,

நன்றி சொல்ல வார்த்தைகளே இல்லை. இது சம்பிரதாய வார்த்தைகள் அல்ல, இதயத்தின் அடித்தளத்திலிருந்து வருபவை. விழாவில் கலந்துகொள்ள முடியாத என்போன்ற பல்லாயிரக் கணக்கானவர்களை மானசீகமாக விழாவைத்தரிசிக்கச் செய்து விட்டீர்கள்.

'கர்ணன்' திரைக்காவியத்தின் 150-வது நாள் வெற்றி விழாவைப்பற்றி மட்டுமே கிட்டத்தட்ட அறுபது பதிவுகள். அதுவே ஒரு சாதனை. அவற்றில் அடங்கியுள்ள பொக்கிஷங்கள்தான் எத்தனை எத்தனை.....

கர்னன் வெற்றி விழா நிகழ்ச்சியின் புகைப்படத்தொகுப்பு...

வி.ஐ.பி.க்களின் சிறப்பு உரை (காணொளியாக)...

ரசிகப்பிள்ளைகள் வெளியிட்ட குறும்பிரசுங்களின் அணிவகுப்பு...

கர்ணன் வெற்றிவிழா பற்றி எந்தெந்த இணைய தளங்களிலெல்லாம் செய்திகள், நிழற்படங்கள் வந்துள்ளனவோ அவற்றை தேடித்தேடி இங்கு கொண்டுவந்து குவித்த உழைப்பு... அவற்றின் இணைப்புகளைத்தந்ததன் மூலம் அனைவரின் சிரமங்களைக்குறைக்க நீங்கள் எடுத்துக்கொண்ட அளவுக்கதிகமான சிரமங்கள்....

வெற்றி விழாவன்று செய்தித்தாள்களின் அன்புள்ளங்கள் வெளியிட்ட விளம்பரங்கள்....

கர்ணன் விழா பற்றி பல்வேறு செய்தித்தாள்களில் வந்த செய்தித்தொகுப்புக்கள் மற்றும் நிழற்படங்கள்....

அப்பப்பா... பட்டியல் போடும் எனக்கே மூச்சு வாங்குகிறதே, இவற்றைத் தேடித்தேடிக்கொணர்ந்து, அனைத்தையும் ஸ்கேன் செய்து தளத்தில் பதிப்பதென்பது எவ்வளவு பெரிய இமாலய சாதனை...!!!!!!!!!!!!!!!!.

கர்ணன் புரிந்த சாதனைக்கு கொஞ்சமும் குறைவில்லாத சாதனை, எங்கள் பம்மலார் படைத்திருப்பது. முந்தாநாள் மாலை நாங்கள் சென்னையில் இருந்த உணர்வை உண்டாக்கி விட்டீர்கள்.

""மவனே...., நீ ரசிகன்யா""

uvausan
6th August 2012, 01:39 PM
Dear Mr.Pammalar - no words to praise you and your efforts - the collection efforts are awesome and amazing . As said by many well wishers in this thread , kindly do take care of your health . Was there any mention about karnan's reaching yet another milestone of 175days at satyam shortly ? Eager to listen specches of YGP and others on this occasion . TMS and Srikazhi Govindarajan 's son , raghavan and Actor Seran were not seen around. Is actor Seran lying low after his thundering speech in trailor show of karnan? Our CM should also be proud for her mother's acting in this movie .. Regards

sivank
6th August 2012, 02:05 PM
Thank you so much Mr. Pammalar for your coverage of the 150th day celebration of Karnan. I enjoyed it so much. Thank you again sooooooooooo much for your selfless and tireless efforts. Take care

mr_karthik
6th August 2012, 05:23 PM
கர்ணன் விழாவில் பிரபுவின் பேச்சைப் படித்தேன். இன்னமும் எந்த இடத்தில் எதைப்பேசவேண்டும் என்று விவரம் தெரியாதவராகத்தான் இருக்கிறார். 'கும்கி' விழாவில் ஏற்கெனவே கமல் மற்றும் ரஜினிக்கு நன்றி தெரிவித்தாகி விட்டது. இப்போது இந்த விழாவில் இல்லாதவர்களைப்பற்றி, கர்ணனின் மிகப்பெரிய வெற்றி பற்றி வாயே திறக்காதவர்கள் பற்றி இந்த விழாவில் குறிப்பிட வேண்டிய அவசியமென்ன?. அதிலும் அந்த திருவையாறு விஷயம் இவ்விழாவுக்கு கொஞ்சமும் தேவையோ அவசியமோ இல்லாதது. ரசிகர்களின் மனதில் வெந்தபுண்ணில் வேல் பாய்ச்சுவது போல் இருந்தது.

அடுத்து நடிகர்திலகம் நினைவு மண்டபம் பற்றி சும்மா சும்மா ஒப்புக்கு பேச வேண்டாமென்று யாராவது சொல்லுங்கள். அது இலங்கைத்தமிழர் பிரச்சினை போல, காவிரிநீர் பிரச்சினை போல காலத்துக்கும் பேசிப்பேசி ஓய்ந்து போக வேண்டியதே தவிர நடக்கப்போவதில்லை.

அரசு ஒதுக்கிய இடத்தில் மணிமண்டபம் அமைக்கத்தான் அரசின் அனுமதி தேவை. தனிப்பட்ட முறையில் நினைவு இல்லம் அமைத்து அவரைப்பற்றிய வரலாற்று ஏடுகளை, அரிய புகைப்படங்களை, பரிசுப்பொருட்களை, படங்களின் வெற்றிக்கேடயங்களை ரசிகர்களின் பார்வைக்கு வைத்திட, அவரது பிறந்த நாள், நினைவு நாட்களின்போது ரசிகர்களும் மற்றவர்களும் வந்து அஞ்சலி செலுத்த (சுருக்கமாக சொன்னால் எம்.ஜி.ஆர். நினைவு இல்லம் போல) அமைத்திட யாருடைய அனுமதியும் தேவையில்லை.

தங்களுக்கு இவ்வளவு வளமான வாழ்வைத் தந்துவிட்டுச்சென்ற தந்தைக்கு, 'சந்திரமுகி' லாபத்தில் இரண்டு கோடி ஒதுக்கி நினைவு இல்லம் அமைக்க முடியவில்லை. சும்மா சும்மா விழாக்களில் மட்டும் அதை நினைவு படுத்துவது யாரை ஏமாற்றச்செய்யும் நாடகம்?.

Thomasstemy
6th August 2012, 06:18 PM
[QUOTE=mr_karthik;922317]கர்ணன் விழாவில் பிரபுவின் பேச்சைப் படித்தேன். இன்னமும் எந்த இடத்தில் எதைப்பேசவேண்டும் என்று விவரம் தெரியாதவராகத்தான் இருக்கிறார். 'கும்கி' விழாவில் ஏற்கெனவே கமல் மற்றும் ரஜினிக்கு நன்றி தெரிவித்தாகி விட்டது. இப்போது இந்த விழாவில் இல்லாதவர்களைப்பற்றி, கர்ணனின் மிகப்பெரிய வெற்றி பற்றி வாயே திறக்காதவர்கள் பற்றி இந்த விழாவில் குறிப்பிட வேண்டிய அவசியமென்ன?. அதிலும் அந்த திருவையாறு விஷயம் இவ்விழாவுக்கு கொஞ்சமும் தேவையோ அவசியமோ இல்லாதது.

அடுத்து நடிகர்திலகம் நினைவு மண்டபம் பற்றி சும்மா சும்மா ஒப்புக்கு பேச வேண்டாமென்று யாராவது சொல்லுங்கள். அது இலங்கைத்தமிழர் பிரச்சினை போல, காவிரிநீர் பிரச்சினை போல காலத்துக்கும் பேசிப்பேசி ஓய்ந்து போக வேண்டியதே தவிர நடக்கப்போவதில்லை.


Dear Karthik,

I second your views.

:smokesmile:

rajeshkrv
6th August 2012, 09:00 PM
[QUOTE=mr_karthik;922317]கர்ணன் விழாவில் பிரபுவின் பேச்சைப் படித்தேன். இன்னமும் எந்த இடத்தில் எதைப்பேசவேண்டும் என்று விவரம் தெரியாதவராகத்தான் இருக்கிறார். 'கும்கி' விழாவில் ஏற்கெனவே கமல் மற்றும் ரஜினிக்கு நன்றி தெரிவித்தாகி விட்டது. இப்போது இந்த விழாவில் இல்லாதவர்களைப்பற்றி, கர்ணனின் மிகப்பெரிய வெற்றி பற்றி வாயே திறக்காதவர்கள் பற்றி இந்த விழாவில் குறிப்பிட வேண்டிய அவசியமென்ன?. அதிலும் அந்த திருவையாறு விஷயம் இவ்விழாவுக்கு கொஞ்சமும் தேவையோ அவசியமோ இல்லாதது.

அடுத்து நடிகர்திலகம் நினைவு மண்டபம் பற்றி சும்மா சும்மா ஒப்புக்கு பேச வேண்டாமென்று யாராவது சொல்லுங்கள். அது இலங்கைத்தமிழர் பிரச்சினை போல, காவிரிநீர் பிரச்சினை போல காலத்துக்கும் பேசிப்பேசி ஓய்ந்து போக வேண்டியதே தவிர நடக்கப்போவதில்லை.


Dear Karthik,

I definitely second your opinion. I am unable to understand, why this Prabhu is behind Rajinikanth and Kamalahasan. I can understand if people like Mohanraman talk about Rajini (or) Kamal to get a chance in their film. Still, am sure, Prabhu is in some "Maayai".

With reference to Thiruvayaaru, What difference it would have made if Kamal and Rajini together did "Pracharam"? Nadigar Thilagam 30,000 votes excess vaangi win panni irupaara? Certainly Not !! Prabhu should remember and keep in mind about one fact.

Post the Mega Success of Karnan re-release, Kamal speaks so many things about Karnan to Prabhu.

If Kamal's interest is genuine, he would be the first person to attend this 150 days celebration because, this is the First Tamil Film of 2012 to become a block-buster in re-release and also celebrate 150 days amidst so many new releases.

Had he come and said that "Karnan was equally a big hit in 1964 but now has become blockbuster multifolds, then I will admit he is Genuine.

First, Radhika Sarathkumar herself, should not have been invited for this yet she was invited and she should have agreed and that is why the name was printed whereas she had got all publicity by including her name in invitation card and finally DITCHED. That itself, is a mahakevalam for her.

"Manimandapam", I can bet, will never come till such time Sarathkumar, Radharavi etc., are members of the Nadigar Sangam, even if the government allots a Vasthu compliant land. All these guys are bloody Jealous of Nadigar Thilagam and his popularity even today and how come they will come forward to do a noble task?


I agree though Kamal and Rajini are NT fans part of the family when they did not do anything for this Karnan effort why should u thank them. Thank YGM and the team who came up with this novel idea..

Prabhu is following the usual cinema formula of pleasing others while YGM just said "There is only one Nadigar all others are Nadigan" he was not afraid of anyone

joe
6th August 2012, 09:00 PM
Btw, why didn't Radhika the function when her name was included ? what about Cheran , it seems he also missing?

joe
6th August 2012, 09:03 PM
Prabhu is following the usual cinema formula of pleasing others while YGM just said "There is only one Nadigar all others are Nadigan" he was not afraid of anyone

Simple .. YGM can say so as he will be taken as NT veriyan , whereas Prabhu will be taken as NT's son .

rajeshkrv
6th August 2012, 09:07 PM
Simple .. YGM can say so as he will be taken as NT veriyan , whereas Prabhu will be taken as NT's son .

NT's son is fine but need not thank people who were not part of it .. that's all

joe
6th August 2012, 09:15 PM
NT's son is fine but need not thank people who were not part of it .. that's all
அவரோட பையன் படத்தோட ஆடியோ விழாவுக்கு அவங்க ரெண்டு பேரும் வந்ததால நன்றி பாராட்டுறாரு ..அந்த விழாவுக்கு அழைத்தது போல இந்த விழாவுக்கு அழைத்தார்களா என அவரையும் இந்த விழா அமைப்பாளர்களையும் தான் கேட்கணும் .. அழைக்காமலே வர வேண்டியது தானே ? என்று கேள்வி வரும் ..அவர்கள் தான் பதில் சொல்லணும் .

eehaiupehazij
6th August 2012, 09:34 PM
sorry to say this. why should we search for a black cat in darkness when our eyes are blind? Prabhu still has not developed the art of public addressing. Kamal and Rajini may be the kings in their domains but NT has proved his place in the hearts of fans. Prabhu may think that prasing kamal and rajini may help promote his son's career with theirfans

Subramaniam Ramajayam
6th August 2012, 09:41 PM
kartik sir'
your writeup about karnan function worth. As you said the function turned out to be kumki inaugral one at the end which would have been avoided and the speakers especially prabhu not mentioned the highlights of karnan was very much disappointing for us. one more thing ramkumar was not invited for talks. the highlight was MARUDU MOHAN'S SPEACH ABOUT HIS OBSERVATIONS OF NADIGARTHILAGAM DESERVES LOT OF KUDOS AND PROVED HIScalibre DOIND PHD ABOUT NT.
HOWEVER THE FUNCTION WAS VERY COLORFUL AND HOUSEFULL AUDIENCE AS USUAL.

pammalar
6th August 2012, 11:51 PM
fantastic speech by YGM.

Thank You Sir..!

pammalar
6th August 2012, 11:53 PM
லேட்டஸ்ட்

டிஜிட்டல் "கர்ணன்" காவியத்தின்
150வது நாள் மெகா வெற்றிவிழா

செய்தித்தாள் சிறப்பு பக்கங்கள்

மாலை மலர் : 4.8.2012
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC6283-1.jpg

தொடரும்...

பக்தியுடன்,
பம்மலார்.

Murali Srinivas
6th August 2012, 11:57 PM
பல நாட்கள் காத்திருந்து விழாவிற்கு வர வேண்டும் என்று எண்ணியிருந்து கடைசி நேரத்தில் தவிர்க்க முடியாத வெளியூர் பயணம் மேற்கொள்ள நேர்ந்ததால் வெற்றி விழாவிற்கு வர முடியாமல் போனது. [எனது அனுமதி அட்டையை எனது மதுரை நண்பர் சந்திரசேகர் அவர்களுக்கு கொடுத்து அவரை விழாவை காண வைத்ததற்கு ராகவேந்தர் சாருக்கு நன்றி.

விழாவை நேரில் காணாமல் போன குறையை தீர்த்து வைத்த சுவாமிக்கு இதயங்கனிந்த நன்றி!

அன்புடன்

Murali Srinivas
6th August 2012, 11:59 PM
அன்புள்ள சுப்பு,

கர்ணன் படத்திற்கு சம்மந்தம் இல்லாத இருவரை பற்றி பிரபு ஏன் பேச வேண்டும் என்று நியாயம் பேசும் போது அதே நியாயத்தை நாமும் கடைப் பிடிப்பதுதானே முறை? நாம் விவாதிக்கும் கருத்துக்கு சற்றும் சம்மந்தமில்லாத ஒருவரை பற்றி இங்கே தேவையில்லாமல் அவதூறாக பேசுவது எந்த விதத்தில் நியாயம்? நமக்கு ஒருவரை பிடிக்காமல் இருக்கலாம். அதற்காக தேவையில்லாமல் ஒரு மனிதரைப் பற்றி அதுவும் இந்த மையத்தின் ஹப்பர்களில் ஒருவரைப் பற்றி பேசுவதை தவிர்க்கலாமே!

சரியான முறையில் புரிந்துக் கொள்வீர்கள் என நம்பிக்கையுடன்

அன்புடன்

pammalar
7th August 2012, 12:03 AM
டியர் பம்மலார்,

கர்ணன் 150 வது நாள் விழாவைப் பற்றி ஒரு முழுமையான பதிவை மிகவும் சிரமப்பட்டு, சுடச் சுட அளித்துள்ளீர்கள். உங்களுக்கு இதயப்பூர்வமான நன்றிகள்.

மிக்க நன்றி, சந்திரசேகரன் சார்..!

pammalar
7th August 2012, 12:05 AM
லேட்டஸ்ட்

டிஜிட்டல் "கர்ணன்" காவியத்தின்
150வது நாள் மெகா வெற்றிவிழா

செய்தித்தாள் சிறப்பு பக்கங்கள்

மாலை மலர் : 4.8.2012
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC6282-1.jpg

தொடரும்...

பக்தியுடன்,
பம்மலார்.

pammalar
7th August 2012, 12:16 AM
அன்புள்ள பம்மலார் சார்,

நன்றி சொல்ல வார்த்தைகளே இல்லை. இது சம்பிரதாய வார்த்தைகள் அல்ல, இதயத்தின் அடித்தளத்திலிருந்து வருபவை. விழாவில் கலந்துகொள்ள முடியாத என்போன்ற பல்லாயிரக் கணக்கானவர்களை மானசீகமாக விழாவைத்தரிசிக்கச் செய்து விட்டீர்கள்.

'கர்ணன்' திரைக்காவியத்தின் 150-வது நாள் வெற்றி விழாவைப்பற்றி மட்டுமே கிட்டத்தட்ட அறுபது பதிவுகள். அதுவே ஒரு சாதனை. அவற்றில் அடங்கியுள்ள பொக்கிஷங்கள்தான் எத்தனை எத்தனை.....

கர்னன் வெற்றி விழா நிகழ்ச்சியின் புகைப்படத்தொகுப்பு...

வி.ஐ.பி.க்களின் சிறப்பு உரை (காணொளியாக)...

ரசிகப்பிள்ளைகள் வெளியிட்ட குறும்பிரசுங்களின் அணிவகுப்பு...

கர்ணன் வெற்றிவிழா பற்றி எந்தெந்த இணைய தளங்களிலெல்லாம் செய்திகள், நிழற்படங்கள் வந்துள்ளனவோ அவற்றை தேடித்தேடி இங்கு கொண்டுவந்து குவித்த உழைப்பு... அவற்றின் இணைப்புகளைத்தந்ததன் மூலம் அனைவரின் சிரமங்களைக்குறைக்க நீங்கள் எடுத்துக்கொண்ட அளவுக்கதிகமான சிரமங்கள்....

வெற்றி விழாவன்று செய்தித்தாள்களின் அன்புள்ளங்கள் வெளியிட்ட விளம்பரங்கள்....

கர்ணன் விழா பற்றி பல்வேறு செய்தித்தாள்களில் வந்த செய்தித்தொகுப்புக்கள் மற்றும் நிழற்படங்கள்....

அப்பப்பா... பட்டியல் போடும் எனக்கே மூச்சு வாங்குகிறதே, இவற்றைத் தேடித்தேடிக்கொணர்ந்து, அனைத்தையும் ஸ்கேன் செய்து தளத்தில் பதிப்பதென்பது எவ்வளவு பெரிய இமாலய சாதனை...!!!!!!!!!!!!!!!!.

கர்ணன் புரிந்த சாதனைக்கு கொஞ்சமும் குறைவில்லாத சாதனை, எங்கள் பம்மலார் படைத்திருப்பது. முந்தாநாள் மாலை நாங்கள் சென்னையில் இருந்த உணர்வை உண்டாக்கி விட்டீர்கள்.

""மவனே...., நீ ரசிகன்யா""

டியர் mr_karthik,

தங்களுடைய இதயத்தின் அடித்தளத்திலிருந்து தாங்கள் வழங்கியுள்ள இதயபூர்வமான பாராட்டுப் பதிவுக்கு எனது இதயங்கனிந்த நன்றிகள்..!

"மவனே...., நீ ரசிகன்யா" என தாங்கள் மிகுந்த உரிமையோடும், உணர்ச்சிப்பெருக்கோடும் எழுதியிருந்ததை படித்து படித்து ரசித்து மகிழ்ந்தேன்..!

அன்புடன்,
பம்மலார்.

kid-glove
7th August 2012, 12:16 AM
[QUOTE=BaristerRajinikanth;922444]

I agree though Kamal and Rajini are NT fans part of the family when they did not do anything for this Karnan effort why should u thank them.


Prabhu would have thanked Ajith-Vijay if he had the chance. :lol2: Imagine how we woulld all cringe if he had said 'YEn Thambi-nga' with those two on stage.

I want to know more about Rajini and Kamal betrayal in not doing more meaningful films with NT in 70's and 80's than supporting/guest roles. Too scared to get in the ring with Lion? Kamal and RAjini joking around in Apu Raja and Shiva sickens me, mudinja enga singathoda modhi paarunga da dei!

Even 90's, Padayappa was crap. Devar Magan was too short for NT.

pammalar
7th August 2012, 12:21 AM
லேட்டஸ்ட்

டிஜிட்டல் "கர்ணன்" காவியத்தின்
150வது நாள் மெகா வெற்றிவிழா

செய்தித்தாள் சிறப்பு பக்கங்கள்

மாலை மலர் : 4.8.2012
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC6285-1.jpg

தொடரும்...

பக்தியுடன்,
பம்மலார்.

vasudevan31355
7th August 2012, 12:24 AM
http://www.angelfire.com/pa3/ppp/images/uthth1.jpg

Dear Pammalar Sir,

http://i25.photobucket.com/albums/c60/b0nebag/GreatJob.gif

http://img94.imageshack.us/img94/2959/thankyou8250.jpg

pammalar
7th August 2012, 12:24 AM
லேட்டஸ்ட்

டிஜிட்டல் "கர்ணன்" காவியத்தின்
150வது நாள் மெகா வெற்றிவிழா

செய்தித்தாள் சிறப்பு பக்கங்கள்

மாலை மலர் : 4.8.2012
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC6284-1.jpg

தொடரும்...

பக்தியுடன்,
பம்மலார்.

pammalar
7th August 2012, 12:37 AM
Dear Mr.Pammalar - no words to praise you and your efforts - the collection efforts are awesome and amazing . As said by many well wishers in this thread , kindly do take care of your health . Was there any mention about karnan's reaching yet another milestone of 175days at satyam shortly ? Eager to listen specches of YGP and others on this occasion . TMS and Srikazhi Govindarajan 's son , raghavan and Actor Seran were not seen around. Is actor Seran lying low after his thundering speech in trailor show of karnan? Our CM should also be proud for her mother's acting in this movie .. Regards

My sincere thanks for your whole-hearted appreciation & kind words, Sir..!

We all hope that DIGITAL KARNAN would go for a Silver Jubilee run..!

pammalar
7th August 2012, 02:04 AM
லேட்டஸ்ட்

டிஜிட்டல் "கர்ணன்" காவியத்தின்
150வது நாள் மெகா வெற்றிவிழா

செய்தித்தாள் சிறப்பு பக்கங்கள்

மாலை மலர் : 4.8.2012
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC6286-1.jpg

தொடரும்...

பக்தியுடன்,
பம்மலார்.

pammalar
7th August 2012, 02:09 AM
Thank you so much Mr. Pammalar for your coverage of the 150th day celebration of Karnan. I enjoyed it so much. Thank you again sooooooooooo much for your selfless and tireless efforts. Take care

Thank you so much for your kind words & compliments, Mr. sivank..!

pammalar
7th August 2012, 02:22 AM
லேட்டஸ்ட்

டிஜிட்டல் "கர்ணன்" காவியத்தின்
150வது நாள் மெகா வெற்றிவிழா

செய்தித்தாள் சிறப்பு பக்கங்கள்

மாலை மலர் : 4.8.2012
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC6287-1.jpg

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC6288-1.jpg

தொடரும்...

பக்தியுடன்,
பம்மலார்.

pammalar
7th August 2012, 02:49 AM
பல நாட்கள் காத்திருந்து விழாவிற்கு வர வேண்டும் என்று எண்ணியிருந்து கடைசி நேரத்தில் தவிர்க்க முடியாத வெளியூர் பயணம் மேற்கொள்ள நேர்ந்ததால் வெற்றி விழாவிற்கு வர முடியாமல் போனது. [எனது அனுமதி அட்டையை எனது மதுரை நண்பர் சந்திரசேகர் அவர்களுக்கு கொடுத்து அவரை விழாவை காண வைத்ததற்கு ராகவேந்தர் சாருக்கு நன்றி.

விழாவை நேரில் காணாமல் போன குறையை தீர்த்து வைத்த சுவாமிக்கு இதயங்கனிந்த நன்றி!

அன்புடன்

பாராட்டுக்கு நன்றி, முரளி சார்..!

pammalar
7th August 2012, 03:10 AM
லேட்டஸ்ட்

டிஜிட்டல் "கர்ணன்" காவியத்தின்
150வது நாள் மெகா வெற்றிவிழா

செய்தித்தாள் சிறப்பு பக்கங்கள்

மாலை மலர் : 4.8.2012
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC6289-1.jpg

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC6291-1.jpg

தொடரும்...

பக்தியுடன்,
பம்மலார்.

pammalar
7th August 2012, 03:14 AM
http://www.angelfire.com/pa3/ppp/images/uthth1.jpg

Dear Pammalar Sir,

http://i25.photobucket.com/albums/c60/b0nebag/GreatJob.gif

http://img94.imageshack.us/img94/2959/thankyou8250.jpg

My sincere & special thanks for your love & affection &
Himalayan Appreciation, Vasudevan Sir..!

pammalar
7th August 2012, 03:54 AM
லேட்டஸ்ட்

டிஜிட்டல் "கர்ணன்" காவியத்தின்
150வது நாள் மெகா வெற்றிவிழா

4.8.2012 : காமராஜர் அரங்கம் : சென்னை


http://www.youtube.com/watch?v=pLpcv0JWET4

இந்த வீடியோவை வழங்கிய 'Star View'க்கு நமது நெஞ்சார்ந்த நன்றி..!

தொடரும்...

பக்தியுடன்,
பம்மலார்.