PDA

View Full Version : Nadigar Thilagam : The Greatest Actor of the Universe & The One & Only BO Emperor



Pages : 1 2 [3] 4 5 6 7 8 9 10 11 12 13

pammalar
7th August 2012, 03:56 AM
திரைக்காவிய முதல் வெளியீட்டு விளம்பரங்கள் :11

நடிகர் திலகத்தின் 235வது காவியம்

சந்திப்பு [வெளியான தேதி : 16.6.1983]

வெள்ளிவிழாக் கொண்டாடிய மெகாஹிட் காவியம்

பொக்கிஷாதி பொக்கிஷம்

முதல் வெளியீட்டு விளம்பரம் : தினத்தந்தி : 12.6.1983
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC6271-1.jpg

தொடரும்...

பக்தியுடன்,
பம்மலார்.

pammalar
7th August 2012, 04:13 AM
லேட்டஸ்ட்

டிஜிட்டல் "கர்ணன்" காவியத்தின்
150வது நாள் மெகா வெற்றிவிழா

4.8.2012 : காமராஜர் அரங்கம் : சென்னை


http://www.youtube.com/watch?v=6uiiuI_5e0k


http://www.youtube.com/watch?v=yeiJyzLj-aU


http://www.youtube.com/watch?v=E0QYBBlRYFQ


http://www.youtube.com/watch?v=OKufaKeVw2c

இந்த வீடியோக்களை வழங்கிய 'www.behindwoods.com' இணையதளத்துக்கு நமது நெஞ்சார்ந்த நன்றி..!

தொடரும்...

பக்தியுடன்,
பம்மலார்.

pammalar
7th August 2012, 04:20 AM
லேட்டஸ்ட்

டிஜிட்டல் "கர்ணன்" காவியத்தின்
150வது நாள் மெகா வெற்றிவிழா

4.8.2012 : காமராஜர் அரங்கம் : சென்னை


http://www.youtube.com/watch?v=HWrsfH0rdhs


http://www.youtube.com/watch?v=mKtSkJipzTY

இந்த வீடியோக்களை வழங்கிய 'Star View'க்கு நமது நெஞ்சார்ந்த நன்றி..!

தொடரும்...

பக்தியுடன்,
பம்மலார்.

pammalar
7th August 2012, 04:31 AM
லேட்டஸ்ட்

டிஜிட்டல் "கர்ணன்" காவியத்தின் 150வது நாள் மெகா வெற்றிவிழா

http://chennaionline.com/movies/gallery/Events/Karnan-150-Days-Celebration-Gallery/20120806093421.col

http://chennaionline.com/video/movies/Nadigar-Thilagams-Karnan-150-days-celebration---Part-I/3719.col

http://blip.tv/chennaionline-/karnan-150th-day-clebration-part-1-6291272

தொடரும்...

பக்தியுடன்,
பம்மலார்.

pammalar
7th August 2012, 04:38 AM
லேட்டஸ்ட்

டிஜிட்டல் "கர்ணன்" காவியத்தின் 150வது நாள் மெகா வெற்றிவிழா

http://www.fulloncinema.com/gallery/karnan-150-days-celebration-stills/

http://images.behindwoods.com/photo-galleries-q1-09/tamil-photo-gallery/karnan-150-days-celebration/01-karnan-150-days-celebration-karnan.html

http://www.mysixer.com/?p=18999

தொடரும்...

பக்தியுடன்,
பம்மலார்.

pammalar
7th August 2012, 04:43 AM
லேட்டஸ்ட்

டிஜிட்டல் "கர்ணன்" காவியத்தின் 150வது நாள் மெகா வெற்றிவிழா

http://www.sify.com/movies/karnan-celebrates-150-days-news-tamil-migkLnchchi.html

http://www.tamiltvshows.net/2012/08/karnan-150th-day-celebration-video.html

http://www.koolstill.com/2012/08/karnan-150-days-celebration-stills.html

தொடரும்...

பக்தியுடன்,
பம்மலார்.

RAGHAVENDRA
7th August 2012, 07:00 AM
டியர் பம்மலார்,
நேற்று இரவு பயணம் முடிந்து வீடு திரும்பியதும் முதல் வேலையாக அமர்ந்தது நமது திரியில் உள்ள பதிவுகளைப் பார்க்கத் தான். மலைப்பு என்ற வார்த்தைக்கு பொருளாக தங்கள் உழைப்பைத் தான் சொல்ல வேண்டும். 4ம் தேதி விழா 4 மணி நேரம் என்றால் அதை நாங்கள் பார்வையிட தங்களுக்குத் தேவைப்படும் உழைப்பு 4 நாட்களும் அதற்கு மேலும். என்ன என்று சொல்வது.

நமக்காக வைத்திருந்த அழைப்பிதழில் ஒன்றினை மிகவும் வயது முதிர்ந்த ஒரு ரசிகருக்கு கிட்டத்தட்ட 70 வயதுக்கும் மேல் அவருக்கு இருக்கும், அவருக்கு கொடுத்து விட்டதனால் நம்முடைய அழைப்பிதழ் எண்ணிக்கையில் உபரி எதுவும் இல்லாத காரணத்தால் முரளி சாரின் அழைப்பிதழை மற்றொரு நண்பருக்கு தர வேண்டிய சூழ்நிலை. உபரி இருந்திருந்தால் மேலும் நமது நண்பர்களை அழைத்திருக்கலாம். மேலும் அடியேன் முன் கூட்டியே உள்ளே செல்ல வேண்டியது இருந்ததால், காத்திருந்து நண்பர்களை வரவேற்க இயலாத நிலைமை. இவற்றை நமது முரளி சார் நன்கு அறிந்திருப்பார் என நம்புகிறேன். அதனால் தான் அவருடைய அழைப்பிதழை மற்றொருவருக்குத் தரும் நிலைமை.

ஸ்வாமி சார் தங்களுடைய பதிவுகளின் மூலம் இந்த மய்யத்தின் சூப்பர் ஸ்டாராக விளங்குகிறீர்கள். பாராட்டுக்கள். தங்களுக்கும் வாசுதேவன் சாருக்கும் மீண்டும் மீண்டும் எங்கள் உளமார்ந்த நன்றிகள்.

ராகவேந்திரன்

RAGHAVENDRA
7th August 2012, 07:02 AM
கார்த்திக் சார்,
பம்மலார் பற்றிய தங்கள் பதிவுகள் ஒவ்வொருவருடைய உள்ளத்தையும் பிரதிபலிக்கிறது. பாராட்டுக்கள்.
அன்புடன்

RAGHAVENDRA
7th August 2012, 07:14 AM
அன்பு நண்பர்களே,
அன்று விழாவிற்கு வந்திருந்தவர்களுக்கு அன்றிருந்த சூழ்நிலை நன்கு தெரியும். பி.வாசுவின் உரையினால் ரசிகர்கள் கொந்தளிப்பின் உச்சிக்கே சென்று விட்டார்கள். வெள்ளைக் காகிதம் போன்ற அவருடைய அருமையான மிகச் சிறப்பான உரையில் ஒரு சின்ன புள்ளி போல் அமைந்த ஒரு கருத்து அன்றைய சூழலினை சற்று அசாதாரணமானதாக ஆக்கி விட்டது. தொடர்ந்து வந்த திரு ஒய்.ஜி.மகேந்திராவின் உரை தான் சற்று அந்த சூழ்நிலையைத் தணித்தது. அப்பேர்ப்பட்ட சூழ்நிலையை மிகவும் அருமையாக தனக்கே உரிய ஒரு பக்குவத்துடன் பிரபு அவர்கள் கையாண்டதுடன் அந்த பக்குவத்தை அவருடைய உரையிலும் வெளிப்படுத்தினார். நடிகர் திலகத்தின் கர்ணன் திரைப்படம் பல ரசிகர்களை ஈர்த்திருக்கிறது. பல புதிய தலைமுறையினரை ஈர்த்திருக்கிறது. அதில் அனைத்து கலைஞர்களின் ரசிகர்களும் அடங்குவர். எனவே இதை அந்த முறையில் அணுகிப் பார்த்தால் பிரபு அவர்களின் பேச்சில் இருந்த முதிர்ச்சி தென்படும். அது மட்டுமல்ல, கும்கி விழாவில் கமலும் ரஜனியும் அந்த யானையின் இரு தந்தங்கள் என்று ஒரு கருத்து சொல்லப் பட்ட போது, அந்த யானையின் முகமே எங்கள் அப்பாதான் என்று சிறப்பாக நடிகர் திலகத்தின் மேன்மையை வலியுறுத்தியவர் பிரபு, அதே கருத்தைத்தான் இந்த விழாவிலும் கூறினார்.

எனக்குத் தெரிந்து பிரபு அவர்களையும் நடிகர் திலகத்தின் குடும்பத்தைப் பற்றியும் குறை சொல்லவேண்டும் என்பதையே குறிக்கோளாகக் கொண்டிருக்கிற வர்களுக்கு நாம் இனிமேல் எந்த பதிலும் சொல்வதில் அர்த்தமில்லை. நடிகர் திலகத்தின் உண்மையான ரசிகர்கள் என்றைக்குமே அன்னை இல்லத்தையும் நடிகர் திலகத்தின் குடும்பத்தையும் குறை சொல்லும் மன வலிமை இல்லாதவர்கள். மற்றவர்களைப் பற்றி நான் ஒன்றும் சொல்ல விரும்பவில்லை. ஆனால் நம்மிடைய உள்ள மற்ற நண்பர்கள் இனிமேல் இது போன்ற கருத்துக்களைப் படிக்கும் போது சற்று சிந்தித்து அதற்கு ஆதரவு அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

என்னுடைய தனிப்பட்ட கருத்தின் அடிப்படையில் 4ம் தேதி நடந்த கர்ணன் 150-வது நாள் விழாவில் பிரபு அவர்களின் உரை மிகச் சிறப்பாக இருந்தது மட்டுமின்றி எந்த சூழ்நிலையையும் புரிந்து கொண்டு அதைக் கையாளும் விதத்தையும் அறிந்திருக்கும் அவருடைய அனுபவமிக்க முதிர்ச்சியைத் தான் காட்டுகிறது என்று நான் நம்புகிறேன்.

அன்புடன்

RAGHAVENDRA
7th August 2012, 07:46 AM
கர்ணன் திரைப்பட விழாவில் ரசிகர்கள் மற்றும் பத்திரிகை நிறுவனங்கள் சிறப்பு மலர்கள் வெளியிட்டன. அதில் ஒன்று நமது நண்பர் திரு விஜயன் என்கிற வந்தியத் தேவன் அவர்களின் மலரும் ஒன்று. இந்த மலர் முழுவதும் ரசிகர்கள் பங்களிப்புடன் வெளியிடப் பட்டது சிறப்பு. இதில் நமது நடிகர் திலகம் இணைய தளம் சார்பில், முரளி சார் மற்றும் நமது மய்யம் நண்பர்கள் சார்பில், மற்றும் நமது மற்றொரு மய்ய நண்பர் மகேஷ் சார்பில் மற்றும் நமது ஈடிணையற்ற பம்மலார் சார்பில் விளம்பரங்கள் இடம் பெற்றன. அவை நமது பார்வைக்கு.

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/Karnan%20150/VIJAYANBOOKCOVERF.jpg

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/Karnan%20150/vijayanbookvrmuraliads.jpg

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/Karnan%20150/vijayanbookmaheshad.jpg

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/Karnan%20150/vijayanbookpammalarad.jpg

joe
7th August 2012, 08:05 AM
வெள்ளைக் காகிதம் போன்ற அவருடைய அருமையான மிகச் சிறப்பான உரையில் ஒரு சின்ன புள்ளி போல் அமைந்த ஒரு கருத்து அன்றைய சூழலினை சற்று அசாதாரணமானதாக ஆக்கி விட்டது.
பி.வாசு-வின் அந்த ஒரு கருத்து என்ன ? பகிர முடியுமா?

Subramaniam Ramajayam
7th August 2012, 10:50 AM
A very very speacial thanks for pammalar on behalf of nt fans for having given wide and elaborate coverage of karnan 150 day function. Time andagain proved you are right person to give a lead for nt fans. Long live nadigarthilagam.

Thomasstemy
7th August 2012, 11:04 AM
அன்புள்ள சுப்பு,

கர்ணன் படத்திற்கு சம்மந்தம் இல்லாத இருவரை பற்றி பிரபு ஏன் பேச வேண்டும் என்று நியாயம் பேசும் போது அதே நியாயத்தை நாமும் கடைப் பிடிப்பதுதானே முறை? நாம் விவாதிக்கும் கருத்துக்கு சற்றும் சம்மந்தமில்லாத ஒருவரை பற்றி இங்கே தேவையில்லாமல் அவதூறாக பேசுவது எந்த விதத்தில் நியாயம்? நமக்கு ஒருவரை பிடிக்காமல் இருக்கலாம். அதற்காக தேவையில்லாமல் ஒரு மனிதரைப் பற்றி அதுவும் இந்த மையத்தின் ஹப்பர்களில் ஒருவரைப் பற்றி பேசுவதை தவிர்க்கலாமே!

சரியான முறையில் புரிந்துக் கொள்வீர்கள் என நம்பிக்கையுடன்

அன்புடன்

அன்புள்ள Murali Sir,

Happened to watch those in You Tube and got bit emotional when i immediately read the thread. Have realized Not to react on the face of it. However, I feel i did not get into any "அவதூறாக பேசுவது" sort of comment. Anyways, my feeling need not be right always. I take this opportunity to rectify, if it is so !

Sorry about that ! Shall ensure and adapt more caution, way forward.

சரியான முறையில் புரிந்து, அன்புடன்
:smokesmile:

Thomasstemy
7th August 2012, 11:09 AM
அன்பு நண்பர்களே,
அன்று விழாவிற்கு வந்திருந்தவர்களுக்கு அன்றிருந்த சூழ்நிலை நன்கு தெரியும். பி.வாசுவின் உரையினால் ரசிகர்கள் கொந்தளிப்பின் உச்சிக்கே சென்று விட்டார்கள். வெள்ளைக் காகிதம் போன்ற அவருடைய அருமையான மிகச் சிறப்பான உரையில் ஒரு சின்ன புள்ளி போல் அமைந்த ஒரு கருத்து அன்றைய சூழலினை சற்று அசாதாரணமானதாக ஆக்கி விட்டது. தொடர்ந்து வந்த திரு ஒய்.ஜி.மகேந்திராவின் உரை தான் சற்று அந்த சூழ்நிலையைத் தணித்தது. அப்பேர்ப்பட்ட சூழ்நிலையை மிகவும் அருமையாக தனக்கே உரிய ஒரு பக்குவத்துடன் பிரபு அவர்கள் கையாண்டதுடன் அந்த பக்குவத்தை அவருடைய உரையிலும் வெளிப்படுத்தினார். நடிகர் திலகத்தின் கர்ணன் திரைப்படம் பல ரசிகர்களை ஈர்த்திருக்கிறது. பல புதிய தலைமுறையினரை ஈர்த்திருக்கிறது. அதில் அனைத்து கலைஞர்களின் ரசிகர்களும் அடங்குவர். எனவே இதை அந்த முறையில் அணுகிப் பார்த்தால் பிரபு அவர்களின் பேச்சில் இருந்த முதிர்ச்சி தென்படும். அது மட்டுமல்ல, கும்கி விழாவில் கமலும் ரஜனியும் அந்த யானையின் இரு தந்தங்கள் என்று ஒரு கருத்து சொல்லப் பட்ட போது, அந்த யானையின் முகமே எங்கள் அப்பாதான் என்று சிறப்பாக நடிகர் திலகத்தின் மேன்மையை வலியுறுத்தியவர் பிரபு, அதே கருத்தைத்தான் இந்த விழாவிலும் கூறினார்.

எனக்குத் தெரிந்து பிரபு அவர்களையும் நடிகர் திலகத்தின் குடும்பத்தைப் பற்றியும் குறை சொல்லவேண்டும் என்பதையே குறிக்கோளாகக் கொண்டிருக்கிற வர்களுக்கு நாம் இனிமேல் எந்த பதிலும் சொல்வதில் அர்த்தமில்லை. நடிகர் திலகத்தின் உண்மையான ரசிகர்கள் என்றைக்குமே அன்னை இல்லத்தையும் நடிகர் திலகத்தின் குடும்பத்தையும் குறை சொல்லும் மன வலிமை இல்லாதவர்கள். மற்றவர்களைப் பற்றி நான் ஒன்றும் சொல்ல விரும்பவில்லை. ஆனால் நம்மிடைய உள்ள மற்ற நண்பர்கள் இனிமேல் இது போன்ற கருத்துக்களைப் படிக்கும் போது சற்று சிந்தித்து அதற்கு ஆதரவு அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

என்னுடைய தனிப்பட்ட கருத்தின் அடிப்படையில் 4ம் தேதி நடந்த கர்ணன் 150-வது நாள் விழாவில் பிரபு அவர்களின் உரை மிகச் சிறப்பாக இருந்தது மட்டுமின்றி எந்த சூழ்நிலையையும் புரிந்து கொண்டு அதைக் கையாளும் விதத்தையும் அறிந்திருக்கும் அவருடைய அனுபவமிக்க முதிர்ச்சியைத் தான் காட்டுகிறது என்று நான் நம்புகிறேன்.

அன்புடன்

அன்புள்ள Raghavendran Sir,

The same message that I had responded to Mr.Murali, am replying to you.

Happened to watch those in You Tube and got bit emotional when i immediately read the thread. Have realized Not to react on the face of it way forward.

what you had mentioned in right. Didnt think in that angle.

Sorry about that ! Shall ensure and adapt more caution, way forward.

சரியான முறையில் புரிந்து, அன்புடன்
:smokesmile:

kalnayak
7th August 2012, 11:11 AM
பம்மலாரே!
கர்ணன் 150-வது நாள் வெற்றி விழா நிகழ்ச்சிகளை பகிர்ந்து கொண்ட உங்களை என்னால் இப்படித்தான் சொல்லமுடியும்...
"கர்ணனுக்கு பக்தனாய் வாய்த்த மற்றொரு கர்ணன்"

selva7
7th August 2012, 11:32 AM
ரஜினி மற்றும் கமல் கலந்து கொண்டதாலே கும்கி ஆடியோ விழாவுக்கு ஊடகங்களில் பெரிய அளவுக்கு கவரேஜ் கிடைத்து உள்ளது. அதனால் கூட, கர்ணன் விழாவில் பிரபு அவ்வாறு பேசியிருக்கலாம். மேலும், கமல் கலந்து கொண்ட நிறைய விழாக்களில், நடிகர் திலகத்தைப் பற்றி இயல்பாகவே புகழ்ந்து பேசுவதை நாம் காணலாம். இந்நிலையில், கமல் பற்றி இங்கே எதிர் மறையாக விவாதிப்பது சரியா என்பதைப் பற்றி சிந்திக்கலாம்.

kid-glove
7th August 2012, 11:44 AM
Prabhu would have thanked Ajith-Vijay if he had the chance. :lol2: Imagine how we woulld all cringe if he had said 'YEn Thambi-nga' with those two on stage.

I want to know more about Rajini and Kamal betrayal in not doing more meaningful films with NT in 70's and 80's than supporting/guest roles. Too scared to get in the ring with Lion? Kamal and RAjini joking around in Apu Raja and Shiva sickens me, mudinja enga singathoda modhi paarunga da dei!

Even 90's, Padayappa was crap. Devar Magan was too short for NT.

vOnam please uttiru

HARISH2619
7th August 2012, 01:38 PM
கர்ணன் 150 வது நாள் வெற்றிவிழாவை நேரில் கண்டுகளித்த அனுபவத்தை வழங்கிய இத்திரியை ஆட்சி செய்யும் மூவேந்தர்களுக்கு (ராகவேந்திரா சார்,வாசு சார்,பம்மல் சார்) முக்கோடி நன்றிகள்.

vasudevan31355
7th August 2012, 04:08 PM
நடிகர் திலகத்தின் பதினோராம் ஆண்டு நினைவாக அப்பெருமகனாருக்கு ஒர் அர்ப்பணம்.(தொடர்ச்சிப் பதிவு)

சிங்காரச் சென்னையில் சிங்கத்தமிழனுக்கு சிலை எடுத்த விழா.

நமது நெஞ்சில் குடியிருக்கும் நம் அன்பு தெய்வத்தின் பதினோராவது ஆண்டு நினைவாஞ்சலியையொட்டி என்றுமே மறக்க முடியாத ஒரு நினைவுப் பதிவு. ஆம். சிங்கத்தமிழனுக்கு சென்னையில் சிலை எடுத்த விழா...கடந்த 2006 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 21-ஆம் நாள் வெள்ளிக்கிழமையன்று (நடிகர் திலகத்தின் நினைவு நாளன்று) நம் தெய்வ மகனுக்கு தமிழக அரசு சார்பில் அப்போதைய முதல்வர் கருணாநிதி அவர்களால் சிலை திறக்கப் பட்டது. சிலை திறப்பு விழாவின் காட்சிகளும், செய்திகளும் இப்போது நம் பார்வைக்கு.

இதழ்: தினகரன்

நாள்: 22 ஜூலை 2006

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/1-122.jpghttp://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/1a.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/1c.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/2-94.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/3-72.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/4-57.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/6-46.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/7-31.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/10-15.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/8-25.jpg


அன்புடன்,
வாசுதேவன்.

RAGHAVENDRA
7th August 2012, 06:08 PM
டியர் வாசு சார்,
சிலை திறப்பு விழா செய்தித் தொகுப்பினை மீண்டும் தந்து அசரவும் நினைவுகளை மலரவும் செய்து விட்டீர்கள். பாராட்டுக்கள். நன்றி.

கோவை நகர சிவாஜி ரசிகர்கள் சார்பில் வெளியிடப் பட்டுள்ள கர்ணன் 150வது நாள் சிறப்பு மலரின் முகப்பு

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/Karnan%20150/KARNANCBESOVNRF.jpg

vasudevan31355
7th August 2012, 08:11 PM
Thank u very much Harish sir.

'கர்ணன்' 150- ஆவது வெற்றி விழா நிகழ்ச்சிகள் அனைத்தையும் ஒன்று விடாமல் பகலென்றும், இரவென்றும் பாராது திரியில் பதிவிட்ட அன்பு பம்மலார் அவர்களையே அனைத்துப் பெருமைகளும் சாரும். ரசிக வேந்தரின் பங்கும் அபரிமிதமானது. சில சொந்த வேலைகளின் காரணமாக நான் விழாவிற்கு போக முடியாமல் போய் விட்டது. அதனாலென்ன? விழாவை நேரடியாகக் கண்டு களிப்பதைக் காட்டிலும் பல மடங்கு சிறப்பாக ரசித்து மகிழும் படி பம்மலார் தன் ஈடு இணையற்ற பதிவுகளின் மூலம் அசத்தி விட்டாரே! மறுபடி மறுபடி அவருக்கு என் இதயம் நெகிழ்ந்த நன்றிகள் நம் அனைவர் சார்பாகவும்.

RAGHAVENDRA
7th August 2012, 09:16 PM
கர்நாடக மாநில சிவாஜி பிரபு அறக்கட்டளையின் சார்பில் தினச்சுடர் நாளிதழில் இடம்பெற்ற விளம்பரத்தின் நிழற்படம்

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/Karnan%20150/dinasudarad01.jpg

pammalar
7th August 2012, 09:56 PM
டியர் பம்மலார்,
நேற்று இரவு பயணம் முடிந்து வீடு திரும்பியதும் முதல் வேலையாக அமர்ந்தது நமது திரியில் உள்ள பதிவுகளைப் பார்க்கத் தான். மலைப்பு என்ற வார்த்தைக்கு பொருளாக தங்கள் உழைப்பைத் தான் சொல்ல வேண்டும். 4ம் தேதி விழா 4 மணி நேரம் என்றால் அதை நாங்கள் பார்வையிட தங்களுக்குத் தேவைப்படும் உழைப்பு 4 நாட்களும் அதற்கு மேலும். என்ன என்று சொல்வது.

நமக்காக வைத்திருந்த அழைப்பிதழில் ஒன்றினை மிகவும் வயது முதிர்ந்த ஒரு ரசிகருக்கு கிட்டத்தட்ட 70 வயதுக்கும் மேல் அவருக்கு இருக்கும், அவருக்கு கொடுத்து விட்டதனால் நம்முடைய அழைப்பிதழ் எண்ணிக்கையில் உபரி எதுவும் இல்லாத காரணத்தால் முரளி சாரின் அழைப்பிதழை மற்றொரு நண்பருக்கு தர வேண்டிய சூழ்நிலை. உபரி இருந்திருந்தால் மேலும் நமது நண்பர்களை அழைத்திருக்கலாம். மேலும் அடியேன் முன் கூட்டியே உள்ளே செல்ல வேண்டியது இருந்ததால், காத்திருந்து நண்பர்களை வரவேற்க இயலாத நிலைமை. இவற்றை நமது முரளி சார் நன்கு அறிந்திருப்பார் என நம்புகிறேன். அதனால் தான் அவருடைய அழைப்பிதழை மற்றொருவருக்குத் தரும் நிலைமை.

ஸ்வாமி சார் தங்களுடைய பதிவுகளின் மூலம் இந்த மய்யத்தின் சூப்பர் ஸ்டாராக விளங்குகிறீர்கள். பாராட்டுக்கள். தங்களுக்கும் வாசுதேவன் சாருக்கும் மீண்டும் மீண்டும் எங்கள் உளமார்ந்த நன்றிகள்.

ராகவேந்திரன்

டியர் ராகவேந்திரன் சார்,

தங்களின் உயர்வான பாராட்டுதல்களுக்கும், பெருந்தன்மையான உள்ளத்துக்கும் எனது உளங்கனிந்த நன்றிகள்..!

டிஜிட்டல் "கர்ணன்" 150வது நாள் மெகா வெற்றிவிழா அன்று வெளியான 'இரு மலர்க'ளின் முகப்பு மற்றும் சில உள்பக்கங்களை பதித்து அசத்திவிட்டீர்கள். பாராட்டுக்கள்..!

அன்புடன்,
பம்மலார்.

pammalar
7th August 2012, 10:02 PM
A very very speacial thanks for pammalar on behalf of nt fans for having given wide and elaborate coverage of karnan 150 day function. Time andagain proved you are right person to give a lead for nt fans. Long live nadigarthilagam.

Thank you so much for your whole-hearted appreciation, Ramajayam Sir..!

pammalar
7th August 2012, 10:51 PM
லேட்டஸ்ட்

டிஜிட்டல் "கர்ணன்" காவியத்தின்
150வது நாள் மெகா வெற்றிவிழா

செய்தித்தாள் சிறப்பு பக்கங்கள்

சோனியா வாய்ஸ் : 1-15 ஆகஸ்ட் 2012
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC6292-1.jpg

தொடரும்...

பக்தியுடன்,
பம்மலார்.

pammalar
7th August 2012, 10:58 PM
லேட்டஸ்ட்

டிஜிட்டல் "கர்ணன்" காவியத்தின்
150வது நாள் மெகா வெற்றிவிழா

செய்தித்தாள் சிறப்பு பக்கங்கள்

சோனியா வாய்ஸ் : 1-15 ஆகஸ்ட் 2012
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC6293-1.jpg

தொடரும்...

பக்தியுடன்,
பம்மலார்.

pammalar
7th August 2012, 11:08 PM
பம்மலாரே!
கர்ணன் 150-வது நாள் வெற்றி விழா நிகழ்ச்சிகளை பகிர்ந்து கொண்ட உங்களை என்னால் இப்படித்தான் சொல்லமுடியும்...
"கர்ணனுக்கு பக்தனாய் வாய்த்த மற்றொரு கர்ணன்"

தங்களின் உச்சமான பாராட்டுக்கு எனது பணிவான நன்றிகள், கல்நாயக் சார்..!

pammalar
7th August 2012, 11:10 PM
கர்ணன் 150 வது நாள் வெற்றிவிழாவை நேரில் கண்டுகளித்த அனுபவத்தை வழங்கிய இத்திரியை ஆட்சி செய்யும் மூவேந்தர்களுக்கு (ராகவேந்திரா சார்,வாசு சார்,பம்மல் சார்) முக்கோடி நன்றிகள்.

மிக்க நன்றி, செந்தில் சார்..!

Murali Srinivas
7th August 2012, 11:48 PM
அன்புள்ள சுப்பு,

என் வேண்டுகோளை ஏற்று உங்கள் பதிவை எடிட் செய்ததற்கு மிக்க நன்றி. நான் உங்களிடம் அலைபேசியில் சொன்னது போல் நாம் சற்றே நிதானித்தால் பல நன்மைகளை அடையலாம்.

ராகவேந்தர் சார்,

எனக்குரிய விழா அனுமதி அட்டையை என் அன்பு நண்பருக்கு கொடுத்த உங்கள செயலுக்கு நான் மிகுந்த மகிழ்ச்சிதான் அடைந்தேன். அதே போல் நானோ நமது மற்ற மய்யத்தின் நண்பர்களோ கூட இதுவரை காணாத கர்ணன் மலரில் வெளி வந்த விளம்பரத்தை இங்கே பதிவிட்டதற்கு மிகக் நன்றி.

அன்புடன்

pammalar
7th August 2012, 11:54 PM
டியர் வாசுதேவன் சார்,

தங்களின் மனம் திறந்த பாராட்டுதல்களுக்கு எனது மனப்பூர்வமான நன்றிகள்..!

உணர்வுபூர்வ நிகழ்வாகத் திகழும், சிங்கத்தமிழனின் சென்னை சிலை திறப்புவிழா நிகழ்வின், 'தினகரன்' தொகுப்பின், தொடர்ச்சியினை பதித்தமைக்கு, உளப்பூர்வமான பாராட்டுக்கள்..!

அன்புடன்,
பம்மலார்.

pammalar
7th August 2012, 11:55 PM
லேட்டஸ்ட்

டிஜிட்டல் "கர்ணன்" காவியத்தின்
150வது நாள் மெகா வெற்றிவிழா

செய்தித்தாள் சிறப்பு பக்கங்கள்

சோனியா வாய்ஸ் : 1-15 ஆகஸ்ட் 2012
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC6294-1.jpg

தொடரும்...

பக்தியுடன்,
பம்மலார்.

pammalar
8th August 2012, 12:04 AM
லேட்டஸ்ட்

டிஜிட்டல் "கர்ணன்" காவியத்தின்
150வது நாள் மெகா வெற்றிவிழா

செய்தித்தாள் சிறப்பு பக்கங்கள்

சோனியா வாய்ஸ் : 1-15 ஆகஸ்ட் 2012
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC6297-1.jpg

தொடரும்...

பக்தியுடன்,
பம்மலார்.

pammalar
8th August 2012, 01:46 AM
லேட்டஸ்ட்

டிஜிட்டல் "கர்ணன்" காவியத்தின்
150வது நாள் மெகா வெற்றிவிழா

செய்தித்தாள் சிறப்பு பக்கங்கள்

சோனியா வாய்ஸ் : 1-15 ஆகஸ்ட் 2012
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC6298-1.jpg

தொடரும்...

பக்தியுடன்,
பம்மலார்.

pammalar
8th August 2012, 01:55 AM
லேட்டஸ்ட்

டிஜிட்டல் "கர்ணன்" காவியத்தின்
150வது நாள் மெகா வெற்றிவிழா

செய்தித்தாள் சிறப்பு பக்கங்கள்

சோனியா வாய்ஸ் : 1-15 ஆகஸ்ட் 2012
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC6295-1.jpg

தொடரும்...

பக்தியுடன்,
பம்மலார்.

pammalar
8th August 2012, 02:10 AM
திரைக்காவிய முதல் வெளியீட்டு விளம்பரங்கள் :12

நடிகர் திலகத்தின் 235வது காவியம்

சந்திப்பு [வெளியான தேதி : 16.6.1983]

வெள்ளிவிழாக் கொண்டாடிய மெகாஹிட் காவியம்

பொக்கிஷாதி பொக்கிஷம்

முதல் வெளியீட்டு விளம்பரம் : சினிமா எக்ஸ்பிரஸ் : 1983
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC6272-1.jpg

தொடரும்...

பக்தியுடன்,
பம்மலார்.

pammalar
8th August 2012, 02:18 AM
எமது மூவாயிரமாவது பதிவு (3000th Post)

காவியக் காட்சிகள் : 3

பொக்கிஷாதி பொக்கிஷம்

இருவர் உள்ளம்(1963)

'பேசும் படம்' இதழிலிருந்து...

[எமது மூவாயிரமாவது பதிவாக வெளிவரும் இந்த கிடைத்தற்கரிய விஷுவல் ஆவணப்பதிவை, பெருமதிப்புக்கும், மரியாதைக்குமுரிய நமது 'ஹப்' மாடரேட்டர்களுக்கு அன்புடன் Dedicate செய்கிறேன்..!]

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC6274-1.jpg

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC6275-1.jpg

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC6276-1.jpg

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC6277-1.jpg

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC6278-1.jpg

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC6279-1.jpg

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC6280-1.jpg

பக்தியுடன்,
பம்மலார்.

pammalar
8th August 2012, 02:46 AM
லேட்டஸ்ட்

டிஜிட்டல் "கர்ணன்" காவியத்தின்
150வது நாள் மெகா வெற்றிவிழா

4.8.2012 : காமராஜர் அரங்கம் : சென்னை

கண்கொள்ளாக் காட்சிகள்

சுந்தரத்தமிழன் புகழ்பாடும் சுவரொட்டிகள்
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC6224-1.jpg

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC6202-1.jpg

தொடரும்...

பக்தியுடன்,
பம்மலார்.

pammalar
8th August 2012, 03:06 AM
லேட்டஸ்ட்

டிஜிட்டல் "கர்ணன்" காவியத்தின்
150வது நாள் மெகா வெற்றிவிழா

4.8.2012 : காமராஜர் அரங்கம் : சென்னை

கண்கொள்ளாக் காட்சிகள்

பரவசமூட்டும் பதாகைகள்
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC6208-1.jpg

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC6201-1.jpg

தொடரும்...

பக்தியுடன்,
பம்மலார்.

goldstar
8th August 2012, 04:56 AM
எமது மூவாயிரமாவது பதிவு (3000th Post)

[எமது மூவாயிரமாவது பதிவாக வெளிவரும் இந்த கிடைத்தற்கரிய விஷுவல் ஆவணப்பதிவை, பெருமதிப்புக்கும், மரியாதைக்குமுரிய நமது 'ஹப்' மாடரேட்டர்களுக்கு அன்புடன் Dedicate செய்கிறேன்..!]


பக்தியுடன்,
பம்மலார்.

Congratulation and hats off to your dedication to our NT, long live NT fame and long live our Pammalar with good health and wealth.

Cheers,
Sathish

Richardsof
8th August 2012, 05:20 AM
DEAR 24X7 PAMMALAR SIR

CONGRATULATIONS ........3000 THREE THOUSAND ..... REALLY A GREAT HARD WORK AND EXCELLENT PERFORMANCE BY YOU. ONBEHALF OF MAKKAL THILAGAM MGR FANS WE ALL SALUTE TO YOUR POSTINGS AND DEDICATIONS.
HOPE WE CELEBRATE SHORTLY TOWARDS 4000......
WITH WISHES
esvee

vasudevan31355
8th August 2012, 05:41 AM
முத்தான மூவாயிரம் பதிவுகளைத் தந்து ஜொலி ஜொலிக்கும் எங்கள் அன்புப் பம்மலாருக்கு மனமுவந்த நல் வாழ்த்துக்கள்.

http://farm1.staticflickr.com/115/302511505_883d8d5a54_b.jpg

RAGHAVENDRA
8th August 2012, 06:57 AM
அன்பு மிக்க பம்மலார் சார்,
செப்டம்பர் 2009ல் தொடங்கிய தங்கள் சாம்ராஜ்ஜியத்தின் எல்லை விரிவடைந்து வருவது மட்டற்ற மகிழ்வைத் தருகிறது. மூவாயிரம் குறுநிலங்கள் தங்கள் ஆளுகையில் .. இவை மென்மேலும் தொடர்ந்து 5000, 10000 என்று வளரவேண்டும் என வாழ்த்துகிறேன்.

தங்களுக்காக அடியேனுடைய சிறிய காணிக்கை

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/misc/pammalargrtgs.jpg

uvausan
8th August 2012, 08:40 AM
Dear PAMMALAR - hearty congratulations - your dedication / committed cause amazing and we are all proud of you - kindly keep up

ScottAlise
8th August 2012, 10:59 AM
Hi Pammalar sir,
3000 posts is not a acheviement its a rare rest of rare feat which will take some time to supprass . Ur coverage of 150th event made us very exciting. I got a bit too emotional on hearing YG Mahendran's speech. He is one actor whose talent is not explored still he is the first pithan of NT

Hats of Y G M sir.
By the way what did Director P. Vasu said? I saw the clippings but could not find anything offensive.


Once again Hearty congaratulations Pammalar sir
What to say other than this?

KCSHEKAR
8th August 2012, 12:16 PM
டியர் பம்மலார்,

முத்தான மூவாயிரம் பதிவுகளைத் தொட்டிருக்கும் தங்களுக்கு பாராட்டுக்கள், வாழ்த்துக்கள். மூவாயிரம் பதிவு என்றாலும், பதிவு ஒவ்வொன்றும் ரசிகர்கள் ஒரு பொக்கிஷமாகப் பாதுகாக்கப்படவேண்டியதாக, ஆவணங்களை அள்ளித் தந்த தங்களுக்கு விண்ணிலிருக்கும் நடிகர்திலகத்தின் ஆசியும், பல்லாயிரக்கணக்கான அன்பு இதயங்களின் வாழ்த்துக்களும் என்றும் இருக்கும்.

RAGHAVENDRA
8th August 2012, 02:08 PM
நம்முடைய நடிகர் திலகம் இணைய தளத்தில் கர்ணன் 150 நாள் விழா நிகழ்ச்சிகளைப் பற்றிய தொகுப்பு

விழா நிழற்படங்கள் (http://www.nadigarthilagam.com/Karnan150celebMain.html)

விழா காணொளிகள் (http://www.nadigarthilagam.com/Karnan150celebvideos.html)

மலர்கள் பத்திரிகைகள் செய்திகளின் தொகுப்பு (http://www.nadigarthilagam.com/Karnan150celebmediacoverage.html)

சுவரொட்டிகள் பதாகைகள் ஆகியவற்றின் நிழற்படங்கள் (http://www.nadigarthilagam.com/postersbannersfansevents.html)

eehaiupehazij
8th August 2012, 02:19 PM
Hats off to you dear Pammalar Sir, for being the Padhivuththilagam of Nadigar Thilagam with a record of 3000 logs. For Sivaji fans Pammalar sir remains the bench mark and we are indebted to you.

vasudevan31355
8th August 2012, 03:19 PM
'சந்திப்பு' (16.6.1983)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_02_2VOB_000491271.jpg

நடிகர் திலகத்தின் 235-வது காவியம்

சந்திப்பை நாங்கள் சந்தித்த விதம்.(ஒரு வித்தியாச கடலூர் அனுபவம்)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_02_1VOB_001263318.jpg

முந்தைய 1983 இல் வெளி வந்த நடிகர் திலகத்தின் படங்களான பெஜவாடா பெப்புலி (தெலுங்கு), நீதிபதி, இமைகள் படங்களுக்குப் பிறகு வெளிவந்த 'சந்திப்பு' க்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள். 'இமைகள்' சரியாகப் போகாததால் சோர்ந்திருந்த ரசிகர்களுக்கு உற்சாக டானிக்காய் 'சந்திப்பு' அனைவரையும் சந்திக்கத் தயாராகி விட்ட நேரம். திரிசூலம், ரத்த பாசம் மற்றும் வா கண்ணா வா என்ற சிவாஜி புரடக்ஷன்ஸாரின் தொடர் வெற்றிக்குப் பின் அனைவரின் எதிர்பார்ப்புகளையும் ஏகத்துக்கு எகிற வைத்த படம் 'சந்திப்பு'.

இனி மேட்டருக்கு வருவோம். கடலூரில் 'சந்திப்பு' எந்தத் தியேட்டரில் ரிலீஸ் என்பதுதான் அந்த நேரத்தில் எங்களின் மில்லியன் டாலர் கேள்வியாக இருந்தது. நண்பர்கள் அனைவரும் மஞ்சை நகர் மைதானத்தில்தான் மாலை நேரங்களில் ஒன்று கூடுவோம். அங்குதான் தலைவர் சம்பந்தப்பட்ட அனைத்து டிஸ்கஷன்களும் நடக்கும். சென்னை ரசிகர்களுக்கு சாந்தி தியேட்டர் போல எங்களுக்கு மஞ்சை நகர் மைதானம் தான் சொர்க்கபுரி.

கடலூரில் அப்போது பாலாஜி, முத்தையா, நியூ சினிமா, வேல்முருகன், கிருஷ்ணாலையா, கமலம் என ஆறு தியேட்டர்கள். திரிசூலம், ரத்த பாசம் போன்ற புரடக்ஷன்ஸ் படங்கள் பாடலி தியேட்டரில் வந்து சக்கை போடு போட்டதால் அனைவரும் 'சந்திப்பு' பாடலியில்தான் வரும் என்று எதிர்பார்த்திருந்தோம்.
தினமும் பாடலி சென்று "படம் இங்குதானே" என்று கேட்டு தியேட்டர் ஊழியர்களை நச்சரிப்போம். "இன்னும் தெரியிலப்பா" என்ற பதில்தான் கிடைத்து வந்தது.

'சந்திப்பு' ரிலீஸ் ஆகும் முன் சரியாக ஒருவாரத்திற்கு முன்னர் கடலூரில் உள்ள மெயின் சுவர்களில் நாங்கள் கொஞ்சமும் எதிபாராத வகையில் 'சந்திப்பு' கமிங் போஸ்டர்ஸ். எங்களுக்கு ஒரே திகைப்பு. ஏனென்றால் படம் முத்தையா தியேட்டரில் என்று சுவர்களில் ஓட்டப் பட்டிருந்ததால். ஏன்?... முத்தையா தியேட்டருக்கு என்ன?... என்று நீங்கள் கேட்பது காதில் விழுகிறது. கடலூரில் மிகப் பழமை வாய்ந்த தியேட்டர் முத்தையா. மணிலாப் பயிர் மூட்டைகள் அடுக்கும் குடோனாக இருந்த இடம் தியேட்டராக அவதாரம் எடுத்தது. அந்தக் காலங்களில் தலைவர் மற்றும் எம்ஜியார் அவர்களின் படங்கள் பல அங்கே ரிலீஸ் ஆகியுள்ளன. ஆனால் காலப் போக்கில் தியேட்டரின் அழகு முற்றிலும் குறைந்து பழைய படங்கள் வாரத்திற்கு ஒன்று என்று திரையிடப்பட்டன. பின் கழுதை தேய்ந்து கட்டெறும்பானது போல மலையாள, மற்றும் ஆங்கில ஏடாகூடப் படங்கள் திரையிடப்பட்டு வந்தன.

இந்த நேரத்தில் முத்தையா தியேட்டரின் அமைப்பை பற்றி சொல்லியே ஆக வேண்டும். மணிலா குடோனாக இருந்ததால் தியேட்டரின் உள்ளே ராட்சஷ சைஸ்களில் இரும்புப் பில்லர்கள் தியேட்டர் முழுவதையும் ஆக்கிரமிப்பு செய்திருக்கும். எனவே படம் பார்க்கும் போது அந்தத் தூண்கள் படம் பார்க்கச் செய்யாமல் மறைக்கும். தியேட்டரில் maintenance என்பது மருந்துக்கும் கிடையாது. அழுக்கடைந்த ஒரு வேட்டி போல பழைய 35mm திரை... ஏனோ தானோவென ஒரு ப்ரொஜெக்டர்.. .சுத்தமே இல்லாத அந்தக் கால பழைய வேலையாட்கள்... தலைக்கு மேலே, சரியாகச் சொல்லப் போனால் தலையிலிருந்து பன்னிரண்டு அடிக்குமேல் தலையில் என்று அறுந்து விழுந்து ஆளைக் குளோஸ் பண்ணுமோ என்று பயமுறுத்தும் கட கடா... லொடா லொடா... மின்விசிறிகள். தியேட்டர் முழுவதற்கும் வெளிச்சம் தர தியேட்டரின் நடு சீலிங்கின் உச்சியில் ஒரு சாதா குண்டு பல்ப், அதைச் சுற்றி கிண்ணம் போன்ற ஷேடோ ஒன்று நீண்ட கம்பி ஒன்றில் முடுக்கப்பட்டு தொங்கிக் கொண்டிருக்கும். அந்த முத்தையா டாக்கீஸ் ஷேடோ லைட் மிகவும் புகழ் பெற்ற ஒன்று. இடைவேளையில் அந்த ஒரு லைட்டைத் தான் போடுவார்கள். (ட்யூப் லைட்டுகள் எதையும் போட மாட்டார்கள் மின்சார சிக்கனம் வேண்டி) அந்த லைட்டே தியேட்டரில் நடுநாயகமாய் எல்லா பகுதிகளுக்கும் மங்கிப்போன மஞ்சள் கலரில் போதுமான வெளிச்சத்தைத் தந்து கொண்டிருக்கும். ஒரு டூரிங் டாக்கீஸ் கூட நல்லயிருக்கும்டா சாமி. தியேட்டர் கெப்பாஸிட்டி வேறு அதிகம். ஹவுஸ்புல் என்ற போர்டையே அங்கு யாரும் பார்த்தது கிடையாது. எந்தப் படமாக இருந்தாலும் இடைவேளை வரைக்கும் கூட டிக்கெட் தருவார்கள். இடைவேளைக்கு மேல் தியேட்டர் சிப்பந்திகளிடம் கையில் ஏதாவது சில்லறை வெட்டி விட்டு உள்ளே சென்று படம் பார்க்கலாம்.

இப்போது நீங்களே சொல்லுங்கள். உங்களுக்கே கோபம் வருகிறதா இல்லையா? அப்படிப்பட்ட ஒரு கண்றாவி தியேட்டரில் 'சந்திப்பு' ரிலீஸ் என்றால் எங்கள் கதியைக் கொஞ்சம் நினைத்துப் பாருங்கள். போஸ்டரைப் பார்த்து விட்டு துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று அனைத்து ரசிகர்களும் முத்தையா நோக்கி ஓடினோம். மேனேஜரிடம் பேசினோம். "என்ன சார், தலைவர் படத்தை நீங்கள் ரிலீஸ் செய்கிறீர்களே" என்று பரிதாபமாகக் கேட்டோம்.
அவர் கொஞ்சமும் பதட்டப் படாமல் கூலாக, "ஆமாம் தம்பி... இங்க தான் படம் ரிலீஸ்... என்று பெருமையுடன் கூற எங்கள் முகத்தில் ஈயாடவில்லை. ஒருவர் முகத்தை ஒருவர் ஒருமாதிரி பார்த்துக் கொண்டோம்.

பின் ஒருவழியாக சமாளித்துக் கொண்டு "எப்படி சார்?... இவ்வளவு மோசமான தியேட்டரில் தலைவரின் படம், அதுவும் அவரது சொந்தப்படம், மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம்... சரிப்பட்டு வருமா? என்று கேட்டதும் மேனேஜர் "கவலைப்படாதீங்க... ஒங்க படத்துக்காகவே (எங்க படமாம்!) தியேட்டரை முழுதும் பழுது பார்க்கப் போறோம்... நாளையிலே இருந்து நாலு நாளைக்கு maintenance எடுக்கிறோம்... அப்புறம் பார்த்துட்டு சொல்லுங்க... ஜமாய்ச்சுடலாம்" என்றார் சிரித்தபடியே.

விதியை எண்ணி நொந்துகொண்டே ,"தலைவர் ஏன் இந்த பாடாவதி தியேட்டரில் போய் படத்தைக் கொடுத்தார்?... என்று புலம்பிக்கொண்டே வெளியே வந்தோம். வேறு வழியுமில்லை. எங்களால் ஒன்றும் செய்ய முடியாது. மனதை தேற்றிக்கொண்டு சந்திப்பை முத்தையாவில் சந்திக்கத் தயாரானோம். நான்கு நாட்களும் தியேட்டர் பராமரிப்பு பணிகள் நடப்பதை சிரமேற்கொண்டு கவனித்து வந்தோம். இதில் "இப்படிப் பண்ணுங்கள்... அப்படிப் பண்ணுங்கள்" என்று மேஸ்திரி மாதிரி ஐடியா வேறு.

தியேட்டர் முழுதும் முற்றிலுமாகப் புதுப்பிக்கப்பட்டது. திரையரங்கு முழுதும் வெள்ளை அடிக்கப்பட்டது. 35 mm ஸ்க்ரீன் தூக்கப்பட்டு சினிமாஸ்கோப் ஸ்க்ரீன் நிறுவப்பட்டது. ஓடி ஓடித் தேய்ந்த ப்ரொஜெக்டர் பழுது நீக்கப்பட்டு பளபளப்பானது. தியேட்டர் ஓரளவிற்கு சரியானது போலத் தோன்றியது. என்ன இருந்தாலும் கிழவிக்கு மேக்கப் போட்ட கதைதான்.

'சந்திப்பு' ரிலீசுக்கு முதல் நாள் முதல் தியேட்டர் களை கட்ட ஆரம்பித்து விட்டது. அக்கம் பக்கம், நகரப் பகுதி, கிராமப்பகுதி ரசிகர்கள் முதல் நாள் காலை பத்து மணிக்கெல்லாம் தியேட்டரில் கூட்டம் கூட்டமாக வந்து சேர ஆரம்பித்து விட்டார்கள். எங்கு பார்த்தாலும் ரசிகக் கண்மணிகள்தான். ஆளாளுக்குக் கொடிகள் என்ன... பேனர்கள் என்ன... மாலைகள் என்ன... தோரணங்கள் என்ன... வாழை மரங்கள் என்ன... சும்மா புகுந்து விளையாடி விட்டார்கள் நம் ரசிகர்கள். தியேட்டர் நிர்வாகிகளுக்கு ஒரே குஷி! இப்படி ஒரு தியேட்டர் அலங்காரத்தை அவர்கள் இதுவரை வாழ்நாளில் கண்டதில்லையே! தியேட்டர் முழுதும் அலங்காரங்களினால் நிரம்பி வழிகிறது. கொடிகளும், பேனர்களும் வண்டிகளில் வந்து இறங்கிக் கொண்டே இருக்கின்றன. கட்டத்தான் இடமில்லை. கிடைத்த இடத்திலெல்லாம் நம் கண்மணிகள் கொடிகளையும், தோரணங்களையும் கட்டி விட்டார்கள்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_02_3VOB_002493943.jpg

காங்கிரஸ் கட்சியினர் வேறு காங்கிரஸ் கொடிகளுடன் வந்து விட்டனர். ரசிகர் மன்ற ஷோ போடுவது அவர்கள்தானே!. மன்றம் அப்போது காங்கிரஸ் கட்சியின் பிடியில் அல்லவா சிக்குண்டு கிடந்தது?.. ரசிகர் ஷோ டிக்கெட்டுகள் முதல் நாளே காலி. டிக்கெட் விலை அப்படியே இரு மடங்கு. இரண்டு ரூபாய் டிக்கெட் நாலு ரூபாய். ஐந்து ரூபாய் டிக்கெட் பத்து ரூபாய். பிள்ளைகள் யாரும் தியேட்டரை விட்டு நகருவதாக இல்லை. தியேட்டர் வாசலில் இருக்கும் டீக்கடையில் செம வியாபாரம். திருவிழா போல முதல் நாளே அலங்காரம் செய்ய தியேட்டரில் அப்படி ஒரு கூட்டம். இதில் இந்தக் கூத்தையெல்லாம் வேடிக்கை பார்க்க பொது மக்கள் கூட்டம் வேறு, தியேட்டர் பஸ் ஸ்டேன்டை ஒட்டி இருந்ததால் பஸ்களில் இருந்து தலையை நீட்டி எட்டிப் பார்க்கும் கூட்டம் வேறு. எங்களுக்குப் பெருமை பிடிபடவில்லை. சந்தோஷத்தின் உச்சியில் இருந்தோம்.

இரவு பன்னிரண்டு மணியளவில் தியேட்டர் அலங்காரங்கள் செய்த களைப்பினால் அனைவரும் மிகவும் டயர்ட் ஆகி விட்டோம். போக முடிந்தவர்கள் அவரவர்கள் வீட்டிற்குப் போய் சாஸ்திரத்திற்கு ஒரு குட்டித் தூக்கம் போட்டுவிட்டு (தூக்கம் வருமா!..) காலையில் ஏதோ அவசரக் குளியல் போட்டுவிட்டு ஏழு மணிக்கெல்லாம் 'டாண்' என்று முத்தையாவில் வெள்ளையும் சள்ளையுமாக ஆஜர். ஏதோ கும்பகோணம் மகாமகத் திருவிழாவிற்குத்தான் வந்து விட்டோமோ என்று என்னும் அளவிற்கு எள் போட்டால் எண்ணையாகத்தான் வழியும் என்பது போல கட்டுக்கடங்காத ஜனத்திரள். ஒலிபெருக்கிகளில் "சிங்கத் தமிழனடா...எங்கள் அண்ணனடா... சிவாஜி என்னும் பெயரைக் கொண்ட நடிகர் திலகமடா"... போடு போடுவென்று போட்டுக் கொண்டிருந்தது. எங்கு பார்த்தாலும் "சிம்மக்குரலோன் வாழ்க... சிங்கத்தமிழன் வாழ்க" என ஒரே ஆர்ப்பரிப்பு. படம் பார்க்கப் போகிற ஆர்வத்தில் தியேட்டரின் சூழ்நிலையைப் பற்றியே மறந்து விட்டோம்.

சரியாக ஒன்பது மணிக்கெல்லாம் படம் போட்டு விட்டார்கள். 'உய்.. உய்' என்று ஒரே விசில் சத்தம். கைதட்டல்கள் காதைப் பிளக்கின்றன. "ஆனந்தம் விளையாடும் வீடு" பாடலில் தலைவர் வேட்டி சட்டையில் வரும் போது சும்மா அல்லோல கல்லோலம் தான். தியேட்டர் முழுவதும் ஒரே லாட்டரி சீட்டு கவுண்டர் பைல்கள்தான். தலைவர் உருவமே தெரியவில்லை. சீட்களில் உட்காராமல் ஆனந்தக் களிநடம் புரியும் ரசிகர்கள். தன்னை மறந்து இருக்கைகளின் மேல் எழுந்து நின்று குதிக்கும் வெறியர்கள். பூக்களை கூடைகளில் கொண்டு வந்து தலைவர் மேல் விசிறி வீசி மகிழும் விசிறிகள்.

புது பளபளக்கும் ஸ்க்ரீன் வேறு. தியேட்டரில் அமரும் இருக்கைகள் தவிர உட்காரும் கெப்பாஸிட்டி அளவிற்கு இருக்கைகள் கிடைக்காமல் அமர்ந்து படம் பார்ப்பவர்களின் எண்ணிக்கைக்கு ஈடாக நின்று கொண்டு படம் பார்க்கும் கூட்டம் வேறு. தியேட்டரின் மெகா சைஸ் தூண்கள் திரையை மறைப்பதால் அங்குட்டும் இங்குட்டும் தலைவர் முகத்தைப் பார்க்க அலைந்து மோதித் திரியும் அன்புப் பிள்ளைகள்... அவர்கள் செய்யும் ஆனந்தத் தொல்லைகள்...

சீனுக்கு சீன் கைத்தட்டல்கள். சந்தோஷக் கூச்சல்கள். இப்படியே படம் போய்க் கொண்டிருந்த போதுதான் அந்த சம்பவம் நடந்தது. சரியாக இடைவேளைக்கு முன்னால் ஒரு பத்து நிமிடங்கள் இருக்கும் கூச்சலும் கும்மாளமுமாக போய்க்கொண்டிருந்த படத்தின் ரீல் சரேலென அறுந்தது. ஓடிக் கொண்டிருக்கும் பிலிமை கத்தரிக்கோலால் கிராஸாக கட் செய்தது போல பிலிம் ரோல் அறுந்ததுதான் தாமதம். பிலிம் ரோல் அறுந்து கிழித்துக் கொண்டு தொங்குவது திரையில் வேறு பட்டவர்த்தனமாக ஒளிக் காட்சியாக தெரிகிறது. ஒரே கூச்சலும், குழப்பமும், கூக்குரல்களும் தாண்டவமாட ஆரம்பித்தது. சட்டென லைட்டுகள் போடப்பட்டன. யாருக்கும் ஒன்றும் புரியவில்லை.

புத்தம் புது திரைப்படம்... புதுப்பெட்டி... பராமரிப்பு செய்யப்பட்ட ப்ரொஜெக்டர். தொழிலில் வல்லுனரான இப்படத்திற்கென்றே பிரத்தியோகமாக நியமிக்கப் பட்ட ஆப்பரேட்டர்...இவ்வளவையும் மீறி படம் கட்டாகி விட்டது. சரமாரி வசைமாரி பொழிகிறது. எல்லோரும் எழுந்து நின்று திரும்பி ஆப்பரேட்டர் ரூமையே பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஆப்பரேட்டரை அவனே... இவனே... மவனே.. என்று அர்ச்சனை பாடுகிறார்கள். மூன்று நிமிடங்களில் அறுந்து போன பிலிம் ஒட்டப்பட்டு படம் மீண்டும் ஓடத் துவங்கியது. மறுபடி ஒரே ஆர்ப்பாட்டம்தான்... தலைவர் வரும் சீன்களில் எல்லாம் ரகளைதான். குதூகலம் தான்.

இடைவேளை விடப்பட்டது.. ஆத்திரம் தாங்காத ரசிகர்கள் தியேட்டர் கேண்டீனில் டீ குடித்துக் கொண்டே ஆப்பரேட்டரையும், தியேட்டர் நிர்வாகத்தையும் திட்டத் துவங்கினர். படத்தை இப்படி ஒட்டுகிறானே என்று எல்லோருக்கும் மூட் ஆட். இடைவேளை முடிந்து படம் தொடங்கியது. எல்லோரும் அந்தப் பேச்சை மறந்து விட்டு படத்தில் மூழ்க, சரியாக அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் மறுபடியும் பிலிம் சுருள் கிழிந்து தொங்கியது...மீண்டும் கட்.

அவ்வளவுதான் சாமி... வெறி கொண்ட வேங்கை போல ஆகி விட்டனர் ரசிகர்கள். சும்மா தியேட்டரின் இருக்கைகள் அனைத்தும் சட்ட சபையில் பறப்பது போல மேலும் கீழுமாய் அந்தரத்தில் பறக்க ஆரம்பித்து விட்டன. சேர்களும் பெஞ்ச்களும் ஒரு சேர உடைய ஆரம்பித்து விட்டன. யார் எதைத் தூக்கி அடிக்கிறார்கள் என்றே தெரியவில்லை. ஒன்றும் புரிய வில்லை. ஒரே ரணகளம். கூச்சல்... குழப்பம்... ரகளை....தியேட்டரின் இருக்கைகளுக்கு மேல் உள்ள மின்விசிறிகளின் மீது பெஞ்ச்கள் பறந்தன. அனைத்து மின் விசிறிகளின் இறக்கைகளும் கொத்துக் கிண்ணம் கவிழ்த்து வைத்தது போல கீழ்நோக்கி கவிழ்ந்து தொங்குகின்றன. அப்போதெல்லாம் தரை டிக்கெட் எடுப்பவர்களுக்கு அமர்வதற்காக நீண்ட பெஞ்ச்கள் வரிசையாகப் போடப்பட்டிருக்கும். ஒரு பெஞ்ச்சில் ஏழு அல்லது எட்டு பேர் அமரலாம். அந்த பெஞ்ச்களை நம் மக்கள் ஆளுக்கு ஒரு பக்கமாகப் பிடித்து மேலே தூக்கிக் கிடாச சீலிங் fan கள் எல்லாம் காலி. முதல் வகுப்பு, இரண்டாம் வகுப்பு இருக்கைகள் 'சர் சர்'ரென கிழிக்கப்பட்டு தியேட்டர் முழுதும் ஒரே பஞ்சு மயமும் தேங்காய் நார் மயமும் தான். தனக்கு முன் இருக்கும் இருக்கைகளை எட்டி எட்டி உதைத்து சின்னபின்னமாக்கினர் சிலர். பிளேடுகளால் பல இருக்கைகள் கிழிக்கப்பட்டன. தியேட்டரே நாஸ்தி. ஒரு சீட் கூடத் தேறாது. ரசிகர்களின் வெறித்தனத்தில் முத்தையா தியேட்டர் சூறையாடப்பட்டது. போலீஸ் வரவழைக்கப் பட்டு லத்தி சார்ஜ் நடக்க ஆரம்பித்தது. ஆளுக்கு ஆள் தலை தெறிக்க அங்கும் இங்கும் ஓட , மாட்டிக் கொண்டவர்கள் போலீசிடம் சக்கையாக வாங்க, தப்பித்தோம் பிழைத்தோம் என அனைவரும் ஒரே மூச்சில் தியேட்டரை விட்டு வெளியே ஓடிவந்து விட்டோம். பின் என்ன நடந்தது என்றே எங்களுக்குத் தெரியாது. பசி மயக்கம் வேறு. காதையும் கண்ணையும் அடைக்கிறது. ஒரு வழியாக அனைவரும் வழக்கமான மஞ்சை நகர் மைதானத்தில் ஒன்று கூடி தியேட்டர்காரனைத் திட்டித் தீர்த்துவிட்டோம். "நெனச்சது போலவே பழி வாங்கிட்டான்யா".. என்று கொட்டித் தீர்த்து விட்டோம். "மொத நாளே இப்படி படத்தை அறுத்து அறுத்து ஒட்டினானே... படம் ஓடுமா? என்று எல்லோர் முகங்களிலும் ஒரே கவலை ரேகை. பின் அடுத்த ஷோ ஓடவில்லை. ஓரளவிற்கு ஏதோ ஒப்பேற்றி மாலைக் காட்சி போலீஸ் பந்தோபஸ்தோடு. மறுபடி தொடங்கப்பட்டது. காலைக் காட்சிக்கு பந்தோபஸ்து வந்த போலீஸ்காரர்கள் யாருடைய கண்களிலாவது மாட்டிக் கொள்ளப் போகிறோம் என பயந்து பயந்து ஒருவழியாக தியேட்டரில் வேலை செய்யும் பழக்கமான ஒரு ஆளிடம் பணத்தை அடித்து உள்ளே சென்று விட்டோம்.
ஆனால் நிலைமை அவ்வளவு மோசம் இல்லை. 'கட்' ஆகாமல் படம் ஓடியது. ஆனால் கட்டுக்கடங்காத கூட்டம். மின்விசிறிகள் தொங்கியபடியே கிடந்தன. ஒரு மின்விசிறி கூட ஓடவில்லை.ஒரு சீட் கூட ஒழுங்காக இல்லை. ஆனால் படம் பார்க்கும் interest இல் யாரும் எதையும் கண்டு கொள்ளவில்லை.

படம் வந்து ஒரு வாரத்திற்கு பிறகு ஓரளவிற்கு தியேட்டர் நிர்வாகம் நிலைமையை சமாளித்தது. இருக்கைகள் ஓரளவிற்கு சரி செய்யப்பட்டுவிட்டன. ஆனால் கூட்டம்... கூட்டம்... தேர்க்கூட்டம்... திருவிழாக் கூட்டம்... ஆனால் யாருக்கும் டிக்கெட் இல்லை என்ற பேச்சுக்கே இடமில்லை. ஒவ்வொரு ஷோவிலும் குறைந்தது மூவாயிரம் பேர்களாவது 'சந்திப்பு' படம் பார்த்து (முதல் இரண்டு வாரங்களுக்கு), கடலூரில் அதுவும் முத்தையாவில் மிகப் பெரிய வெற்றிப்படமாக அமைந்து, ஐம்பது நாட்கள் அற்புதமாக ஓடி வசூல் சாதனை புரிந்து எங்கள் எல்லோரையும் காலரைத் தூக்கி விடச் செய்தது தலைவரின் 'சந்திப்பு'. அதுமட்டுமா? தியேட்டரில் பணி புரிந்த ஊழியர்கள் அனைவரும் ப்ளாக்கில் டிக்கெட் விற்று ஆளாளுக்கு குறைந்தது ஐந்து பவுன் செயினோ அல்லது மோதிரமோ போட்டுக் கொண்டு மகிழ்ந்து தலைவர் புகழ் பாடியது தனிக்கதை.

இப்ப சொல்லுங்க... சந்திப்பை நாங்க சந்திச்ச விதம் எப்படி?

{குறிப்பு: 'சந்திப்பு' பட முதல் நாள் அனுபவத்தை எழுத வாய்ப்பளித்த அன்பு பம்மலாருக்கு நன்றி!}

கார்த்திக் சார் தயைகூர்ந்து பொறுத்தருள்க...(உங்கள் job-ஐ நான் எடுத்துக் கொண்டதற்கு)


அன்புடன்,
வாசுதேவன்.

mr_karthik
8th August 2012, 05:23 PM
அன்புள்ள வாசுதேவன் சார்,

'சந்திப்பு' படத்தின் கடலூர் முத்தையா தியேட்டர் அனுபவம் மிக மிக அருமை. நாங்களே அங்கே நின்று அனைத்து நிகழ்வுகளையும் நேரில் பார்த்து மகிழ்ந்தது போல இருந்தது. சூப்பர் கமெண்ட்ரி.

முதலில் கடலூர் முத்தையா தியேட்டரின் முந்தைய கோலத்தை நீங்கள் விவரித்த விதமே அலாதி களை கட்டியது. பின்னர் சந்திப்பு படத்துக்காக 'மணிலாப்பயிறு குடோன்' புதுப்பிக்கப்பட்ட விவரமும், அதை மன்றத்துப்பிள்ளைகள் அலங்கரித்த விதமும் மிகவும் அருமையாக இருந்தன.

படம் ரிலீஸான அன்று தியேட்டருக்குள் நடந்தவைகளை விவரித்த விதம். அத்திரையரங்கின் உள்ளே நாங்களும் இருந்த உணர்வை ஏற்படுத்தியது. ரொம்ப ரொம்ப சுவாரஸ்யமான எழுத்து நடை. நான் மிகவும் ரசித்து ரசித்து படித்தேன். முன்பு நீங்கள் 'பாதுகாப்பு' படப்பிடிப்பை விவரித்த விதத்தை மிஞ்சும் வண்ணம் அமைந்துள்ளது. இவ்வளவு இடையூறுகளுக்கிடையேயும் அந்த ........வதி தியேட்டரில் சந்திப்பு 50 நாட்கள் ஒடியது, மற்ற தியேட்டர்களில் 100 நாட்கள் ஒடியதற்கு சமம்.

தியேட்டர் கெப்பாஸிட்டியைப் பார்த்தால், கடலூர் 'முத்தையா' மதுரை 'தங்க'த்துக்கு தம்பியாய் இருப்பார் போலும். நல்ல அனுபவம் வாய்ந்த விவரிப்பு.

அந்தக்கடைசி வரி மட்டும் தேவையில்லையென்று கருதுகிறேன். இன்னின்ன விஷயங்களை இன்னார்தான் பதிவிட வேண்டும் என்ற வரைமுறையெல்லாம் எதுவும் கிடையாது. நல்ல சுவாரஸ்யமான விஷயங்களை யார் வேண்டுமானாலும் பதிவிடலாம். அந்த சுதந்திரத்துக்காகத்தானே நாம் 'இங்கே' கூடியிருக்கிறோம்.

அற்புதமான பதிவுக்கு பாராட்டுக்கள், நன்றிகள்.

இன்னும் இதுபோன்ற சுவாரஸ்யமான அனுபவங்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.

mr_karthik
8th August 2012, 05:46 PM
அன்புள்ள பம்மலார் சார்,

'மூவாயிரம்' வெற்றிப்பதிவுகளைக்கடந்து வீறு நடைபோட்டுக்கொண்டிருக்கும் எங்கள் அருமை இளவல் 'பம்மலார்' சுவாமிநாதன் ஆகிய தங்களுக்கு இதயம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்.

வெட்டி விவாதங்களாலும், ஒருவரி கமெண்ட்டுகளாலும் ஆயிரக்கணக்கில் பதிவுகளை அடுக்கியவர்கள் பலர் இருக்கலாம். ஆனால் தங்களது பதிவுகள் மூன்றாயிரமும் (அருமைச்சகோதரர் சந்திரசேகர் அவர்கள் சொன்னதுபோல) மூவாயிரம் பொக்கிஷங்கள். அப்பதிவுகளை சேமித்து, சேமித்து ரசிகப்பெருமக்களின் பென்ட்ரைவ்களும், ஃப்ளாஷ் மெமோரிகளும் நிரம்பி வழிகின்றன. அத்தனையும் முத்தான, சத்தான பயனுள்ள பதிவுகள், ஆவணப்பொக்கிஷங்கள்.

மூவாயிரமாவது பதிவாக தாங்கள் அளித்துள்ள 'இருவர் உள்ளம்' திரைக்காவியத்தின் கிடைத்தற்கரிய பேசும் படம் இதழ்த் தொகுப்பு, நம் இருவர் உள்ளமும் நினைப்பது ஒன்றையே, அது நடிகர்திலகத்தின் புகழ்பாடுவதே என்பதை உணர்த்துகிறது.

நீங்கள் இடப்போகும் இன்னும் பல ஆயிரம் பதிவுகளையும், அவற்றில் இடம்பெறவிருக்கும் கனவிலும் நினையாத பொக்கிஷங்களையும் காண காத்துக்கிடக்கிறோம். அதற்காக தாங்கள் பூரண உடல்நலத்துடன் பல்லாண்டுகள் வாழ்ந்து சேவை செய்திட வாழ்த்துகிறோம்.

RAGHAVENDRA
8th August 2012, 06:12 PM
டியர் வாசு சார்,
அசத்தல் என்றால் இது தான். நண்பர் கார்த்திக் சொன்னதை 100க்கு 1000 மடங்கு அப்படியே ஏற்றுக் கொள்ளலாம். ஒரே பதிவில் கிட்டத் தட்ட 1500 வார்த்தைகளில் சந்திப்பின் சந்திப்பை சூப்பராக சொல்லி யுள்ளீர்கள். மற்றவர்களுக்கு கிட்டத் தட்ட 75 பதிவுகள் - ஒரு பதிவுக்கு 20 வார்த்தைகள் என்ற கணக்கில் வைத்துக் கொண்டால் - தேவைப் படும் விஷயத்தை ஒரு பதிவில் சொல்லி கலக்கி விட்டீர்கள். இது போல் இன்னும் பல தியேட்டர் அனுபவங்களையும் மன்ற அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள். ஆவலுடன் காத்திருக்கிறோம்.

அன்புடன்
ராகவேந்திரன்

vasudevan31355
8th August 2012, 07:24 PM
அன்பு பம்மலார் சார்,

வார்த்தைகள் வரவில்லை தங்களை வாழ்த்த. நெஞ்சமெல்லாம் நிறைந்து போய் சந்தோஷக் கடலில் மிதப்பது போல ஒரு உணர்வு. 3000 பதிவுகள் என்பது சாதாரண ஒரு விஷயமல்ல. ஒரு சீரிய அர்ப்பணிப்பு. தெய்வத்தின் மேல் உள்ள ஈடுபாடு, வாஞ்சை. கருமமே கண்ணாக ஒன்றே செய் அதை நன்றே செய் என்பதை வெகு அழகாக, படு நேர்த்தியாக பளிங்கு போன்ற தங்கள் பதிவுகள் மூலம் நிரூபித்துக் கொண்டு வருகிறீர்கள். பிரம்மிப்பாகத்தான் இருக்கிறது. உலகெங்கும் உள்ள உத்தமரின் ரசிகர்களின் பார்வையில் பம்மலாரின் பதிவுகள் படாமல் போகாது என்றால் அது மிகையல்ல. மூவாயிரத்துக்குப் பின்னால் உள்ள உழைப்பு அசுரத்தனமானது. பசி நோக்காமல், கண் துஞ்சாமல், ஓய்வெடுக்காமல், ஒழிச்சல் இல்லாமல், கால நேரம் பார்க்காது எக்காலமும், எந்த நேரமும் ஆவணங்கள்... ஆவணங்கள்.... பதிவுகள்....பதிவுகள் என்று எங்களுக்கு பதிவு அன்னமிட்ட அன்புச் சகோதரராய் அள்ளி வழங்கிய தாங்கள் மூன்று லட்சம் பதிவுகளானாலும் சளைக்க மாட்டாமல் பதிவுப் பணி புரிய நல் உடல் ஆரோக்கியத்தையும், வளத்தையும் நம் ஆண்டவர் தங்களுக்கு அளித்து காலமெல்லாம் தங்கள் மூலம் எங்களையெல்லாம் மகிழ்ச்சிக் கடலில் மிதக்க வைக்கப் போவது உறுதி. மூவாயிரம் பதிவுகளுக்கும் தனித்தனியே என் மூவாயிரம் நன்றிகள். தொடர்க தங்கள் தொண்டு. வாழிய தாங்கள் வளமுடன்.

நெஞ்சு நிறைய வாழ்த்தும்.
அன்புச் சகோதரன் வாசுதேவன்.

vasudevan31355
8th August 2012, 07:37 PM
அன்பு பம்மலார் சார்,

'சந்திப்பு' சினிமா எக்ஸ்பிரஸ் முதல் வெளியீட்டு விளம்பரப் பதிவு முத்தான மூவாயிரம் பதிவுகளை அளித்த தங்களை நம் இறைவனார் தம் இரு கரங்களினாலும் நெஞ்சு நிறைய வாழ்த்துவது போல அமைந்தது எவ்வளவு பொருத்தம்!

தங்களது 3000- ஆவது அசத்தல் மற்றும் ஸ்பெஷல் பதிவான 'இருவர் உள்ளம்' 'பேசும் படம்' பதிவுகள் அப்படியே அள்ளிக்கொண்டு போகின்றன.
இருவர் உள்ளங்களை மட்டுமல்ல... இரண்டு கோடி உள்ளங்களை மகிழ்வுறச் செய்யும் அற்புதப் பதிவு. சூப்பர்.

சுந்தரத்தமிழன் புகழ்பாடும் சுவரொட்டிகள், பதாகைகள் படு அமர்க்களம். அழகான பதிவுகளுக்கு அன்பு நன்றிகள்.

மறந்து விட்டேன். நண்பர்கள் தினத்தை முன்னிட்டு தாங்கள் கடந்த 5 -8-2012 அன்று அளித்திருந்த தலைவரும், ஜெமினியும் இணைந்த பா.ப. தீரும் ஸ்டில் தூள். 'உனக்காக நான்' எனக்காக நீ என்று வாழும் நம்மை நினைவு படுத்துவது போல் 'ராமு ஐ லவ் யூ' பாடலை நம் நட்பின் அடையாளமாக வீடியோவாக அளித்ததற்கு நன்றி!

Subramaniam Ramajayam
8th August 2012, 07:52 PM
VASU sir
SANDIPPU essay simply superb. more than the movie we have enjoyed MUTHAIAH theatre experience.

joe
8th August 2012, 08:40 PM
VasuDevan,
Very nice write up on Santhippu experience .. Bus Stand-kku pakkathula oru Bridge-kku keeLa irukkume ..antha theatre thaan Muthaih-vaa ?

kalnayak
8th August 2012, 08:41 PM
மூவாயிரம் பதிவளித்த பம்மலாரே! முப்பதினாயிரம், மூன்று லக்ட்ஷம், முப்பதுலக்ட்ஷம், ... என பலப்பல கடந்து செல்ல, பல்லாண்டு வாழ்ந்து நடிகர் திலகம் புகழ் பாடிட வாழ்த்துகள்.

வாசுதேவனாரே!
கடலூர் முத்தையா திரைஅரங்கு 'சந்திப்பு' வெளியீடு விவர கலாட்டா கொண்டாட்டத்தை எழுதி எனது நினைவுகளையும் கிளறி விட்டீர்கள். நான் உங்களை போல் அதிதீவிர ரசிகனில்லை தான் (படம் வெளியானபோது சற்றே சிறுவன்). வீட்டிலும் ரசிகனாய் இப்படி கொண்டாட அனுமதிக்க மாட்டார்கள். ஆனால் வாய்ப்பு கிடைத்தால் நடிகர் திலகத்தின் திரைப்படங்களை பார்க்கத்தவற மாட்டேன். நானும் கடலூரில் குறிப்பிட்ட காலம் வாழ்ந்தவன்தான். முத்தையா திரை அரங்கை நன்கு அறிவேன். கடலூர் திரை அரங்குகளுக்குள் நடிகர் திலகத்தின் திரைப்படங்களை வெளியிடுவதற்கு போட்டியிருக்கும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அதிலும் இந்த குடோன் முத்தையா திரை அரங்க நிர்வாகிகளுக்கு நடிகர் திலகத்தின் படங்களை திரை இடுவதற்கு பயங்கர பேராசை. எப்படியோ சிவாஜி பிலிம்ஸ் தயாரிப்பு 'சந்திப்பு' படத்தை வெளியிடுவதற்கு அவர்களுக்கு வாய்ப்பு கிடைத்துவிட்டது. பேராசை பேரு நஷ்டமாகி விட்டது. இந்த ரகளை ஆகிவிட்டது. நானும் ரசிகர்களின் ரகளையை பிறர் சொல்ல கேட்டிருக்கிறேன். இப்போது நீங்கள் உறுதி செய்து விட்டீர்கள்.

நானும் 'சந்திப்பு' வெளியான முதல் வாரத்திலேயே இதே முத்தையாவில் ஒரு நாள் இரவு காட்சிக்கு எனது தந்தையாருடன் சென்று பார்த்து வந்திருக்கிறேன். எனது அப்பா கூட்டம் எப்படி என்று பார்க்க வரிசையினை சுற்றி பார்க்க போய், எனது அப்பாவின் கட்டுமஸ்த்தான உடலை பார்த்து மப்டி-யில் போலிஸ் வந்திருப்பதாக நினைத்து ஒருவர் பயந்து 'போலிஸ், போலிஸ்' என்று கத்தி கியூ-வில் குறுக்கே புக நினைத்தவர்கள் கியூ-வை விட்டு விலகி ஓடி ஒழுங்காக வரிசையில் நின்று டிக்கட் எடுத்து சென்றதும், நாங்கள் எளிதாக டிக்கட் எடுத்ததும் இப்போதும் என் நினைவில் புன்னகை தவழ வைக்கிறது.

joe
8th August 2012, 08:57 PM
சந்திப்பு வெளியான போது நான் 5-வது வகுப்பு மாணவன் என நினைக்கிறேன் ..சந்திப்பு படத்தை பார்த்தே ஆக வேண்டும் என வீட்டில் நான் அடம் பிடிக்க அம்மா என் அண்ணணிடம் என்னை நாகர்கோவிலுக்கு கூட்டிச்சென்று சந்திப்பை சந்திக்க அனுமதி தந்தார்கள் .அண்ணனும் என்னை நாகர்கோவில் ராஜேஷ் திரையரங்குக்கு அழைத்துச் செல்ல கூட்டமென்றால் கூட்டம் அப்படி ஒரு கூட்டம் ..அரங்கு நிறைந்தது என சொல்லப்பட நானோ கிட்டத்தட்ட அழும் நிலையில் :lol: ..வேறு வழியில்லாமல் வந்தது வந்தோம் என அண்ணன் அழைத்துச் சென்ற படம் தங்கம் திரையரங்கில் 'மெல்லப் பேசுங்கள்' .பின்னர் மீண்டும் அடம் பிடித்து எப்படியோ சந்திப்பு பார்த்த பின்னர் தான் ஓய்ந்தேன் .

அப்போதெல்லாம் கல்யாணம் மற்றும் சுபகாரியங்களுக்கு ஊர் முழுக்க ஒலிபெருக்கி கட்டி பாட்டு போடும் போது ஒரு பெட்டி நிறைய ஒலித்தட்டுகள் இருக்கும் ..அதன் கவர் அந்த படத்தின் ஸ்டிகளோடு அருமையாக இருக்கும் ..சந்திப்பு ஒலிவட்டு கவரில் இருக்கும் படத்தை பார்ப்பதற்காகவே ஒலி அமைப்பாளரை போய் நச்சரித்ததெல்லாம் நினைவுக்கு வருகிறது .. ஷோலாப்பூர் ராஜா ..ஷோலாப்பூர் ராணி :)

ScottAlise
8th August 2012, 09:32 PM
Vasu sir,
Excellent write up on Santhipu. More than the movie your writing was nice .Expecting more from you

RAGHAVENDRA
8th August 2012, 09:42 PM
டியர் பம்மலார் சார்,
இருவர் உள்ளம் அற்புதத் திரைக்காவியத்தின் பேசும் பட நிழற்படங்கள் தங்களுடைய மூவாயிரமாவது பதிவாய் அமைந்து முத்திரை பதித்தது மிகப் பொருத்தம். புத்தி சிகாமணி பெற்ற பிள்ளை ஆயிற்றே, கண்ணெதிரே தோன்றினார், கனிமுகத்தைக் காட்டினார், தண் தமிழைக் காட்டினார், தனித்துவத்தை நிலை நாட்டினார்....

வாழ்த்துக்கள் மீண்டும் மீண்டும் ....

அன்புடன்
ராகவேந்திரன்

RAGHAVENDRA
8th August 2012, 09:44 PM
மலேசிய சிவாஜி கணேசன் கலை மன்றம் சார்பில் நடைபெற்ற நடிகர் திலகம் சிவாஜி நினைவு நாள் அனுசரிப்பு நிகழ்வில், சென்னைப் பல்கலைக்கழக முனைவர் பட்ட ஆய்வாளர் திரு மருது மோகன் ஆற்றிய சிறப்புரையினை நாம் இங்கு காணொளியாய் பகிர்ந்து கொள்ளலாம். முதலில் பாகம் 1.


http://youtu.be/cft1NcCONXw

Thomasstemy
8th August 2012, 10:07 PM
Thalaivarin Pillaigalukku (Yennayum Sayrthudhaan)Samarpanam :

Sri. Marudu Mohan Avargal, delivered an ever admiring, extraordinary, out of the world, classic speech about our Thalaivar on the event of NADIGAR THILAGAM's MEGA BLOCKBUSTER KARNAN's 150 Days Celebration at Kamarajar Arangam, Chennai.

His speech was not aimed at just to get the front bencher's whistle blow and claps, but to make everyone to think and understand logically "Why Nadigar Thilagam will always remain superior forever, when compared to any actor across the globe?

Yaam Petra Indha Inbam Iv-vaiyagam Pera vayndum !!

http://www.youtube.com/watch?v=6BtPVMfrJgM

Anbudan,
:smokesmile:

Thomasstemy
8th August 2012, 10:13 PM
Thalaivarin Pillaigalukku (Yennayum Sayrthudhaan)Samarpanam :

Sri. Marudu Mohan Avargal, delivered an ever admiring, extraordinary, out of the world, classic speech about our Thalaivar on the event of NADIGAR THILAGAM's MEGA BLOCKBUSTER KARNAN's 150 Days Celebration at Kamarajar Arangam, Chennai.

His speech was not aimed at just to get the front bencher's whistle blow and claps, but to make everyone to think and understand logically "Why Nadigar Thilagam will always remain superior forever, when compared to any actor across the globe?

Yaam Petra Indha Inbam Iv-vaiyagam Pera vayndum !!!

http://www.youtube.com/watch?v=Mn0XmWW10tw

Anbudan,
:smokesmile:

Thomasstemy
8th August 2012, 10:27 PM
லேட்டஸ்ட்

டிஜிட்டல் "கர்ணன்" காவியத்தின்
150வது நாள் மெகா வெற்றிவிழா

4.8.2012 : காமராஜர் அரங்கம் : சென்னை

இந்த வீடியோக்களை வழங்கிய 'Star View'க்கு நமது நெஞ்சார்ந்த நன்றி..!

தொடரும்...

பக்தியுடன்,
பம்மலார்.

Dear Pammalar Sir,

Good Evening !

The two videos was good and thanks, a very many for displaying it for us to enjoy. Ungaludaya Sevai Magaththaanadhu endru koorinaal migai aagaadhu.

Andha irendu video clippings polavae, Thiru.Marudu Mohan avargal, Nadigar Thilagaththai patri uraiththadhu, "Pattathu Yaanai Pattabhishegathil Veerunadai Poattadhu Pola irundhadhu". Neengal Adhanai Kandu Kaliththu, kaettu inbura vendum enbadharkaaga,ungal special....

Part - 1


http://www.youtube.com/watch?v=6BtPVMfrJgM

Paasaththudan,
:smokesmile:

Thomasstemy
8th August 2012, 10:34 PM
லேட்டஸ்ட்

டிஜிட்டல் "கர்ணன்" காவியத்தின்
150வது நாள் மெகா வெற்றிவிழா

4.8.2012 : காமராஜர் அரங்கம் : சென்னை


இந்த வீடியோக்களை வழங்கிய 'www.behindwoods.com' இணையதளத்துக்கு நமது நெஞ்சார்ந்த நன்றி..!

தொடரும்...

பக்தியுடன்,
பம்மலார்.

Anbulla Pammalar Sir,

Thiru.Marudu Mohan Avargaludaya Urai Part - 2

http://www.youtube.com/watch?v=6BtPVMfrJgM

Anbudan,

:smokesmile:

Thomasstemy
8th August 2012, 10:42 PM
Anbulla Pammalar Avargalukku,

3000 Padhivugal.....Bale !!

Idhai Namadhu Deivam Nadigar Thilagam Aridhaaramitta Karnan Paaniyil Sollavendum Endraal...."Padhivida-therindhavargal-eppadi padhivuseidhuvitaargal..Aahaa!!

Ungallukku, Engal Anaivarin Nandriyaiyum, oru paatu paadi ...Adhuvum Namadhu Nadigar Thilagaththin meedhu alavatra Madhippum, Mariyadhayum vaiththirundha, Makkal Kalaignar Thiru.Jaishankar avargal thiraipada paadal vaayilaaga

http://www.youtube.com/watch?v=wKQJuI7XqCY&feature=related


Anbudan,
:smokesmile:

Murali Srinivas
8th August 2012, 10:44 PM
சுவாமி,

மூவாயிரம் முப்பதினாயிரம் ஆகட்டும்
முக்கனியாய் முத்தமிழாய் உங்கள் புகழ் ஓங்கட்டும்!

வாசு சார்,

நான் முன்னரே சொல்லியிருக்கிறேன். இப்போதும் சொல்கிறேன். உங்கள் எழுத்து நடையில் அதிலும் குறிப்பாக ஒரு நிகழ்வினை நேரலையாக விவரிக்கும் போது ஒரு வசீகரம் அதில் ஒளிந்திருக்கிறது. எந்த வித தடைகளும் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் ஒரு ஆற்றொழுக்கு என்று அதை குறிப்பிடலாம். சந்திப்பு ஓபனிங் ஷோ அனுபவங்கள் போன்ற மேலும் பல பதிவுகளை தாருங்கள்!

அன்புடன்

pammalar
9th August 2012, 01:24 AM
Congratulation and hats off to your dedication to our NT, long live NT fame and long live our Pammalar with good health and wealth.

Cheers,
Sathish

Dear goldstar,

My sincere thanks for your warmest wishes & special compliments..!

Best Wishes & Regards,
Pammalar.

pammalar
9th August 2012, 01:27 AM
DEAR 24X7 PAMMALAR SIR

CONGRATULATIONS ........3000 THREE THOUSAND ..... REALLY A GREAT HARD WORK AND EXCELLENT PERFORMANCE BY YOU. ONBEHALF OF MAKKAL THILAGAM MGR FANS WE ALL SALUTE TO YOUR POSTINGS AND DEDICATIONS.
HOPE WE CELEBRATE SHORTLY TOWARDS 4000......
WITH WISHES
esvee


Dear esvee Sir,

My innumerable thanks for your sincere wishes & special appreciation..!

Thru your post, I am privileged to get the blessings of Makkal Thilagam also..!

Thru this post, I personally thank MT Fans Fraternity for showering me their best wishes & compliments..!

Warm Wishes & Regards,
Pammalar.

pammalar
9th August 2012, 01:52 AM
லேட்டஸ்ட்

டிஜிட்டல் "கர்ணன்" காவியத்தின்
150வது நாள் மெகா வெற்றிவிழா

செய்தித்தாள் சிறப்பு பக்கங்கள்

சோனியா வாய்ஸ் : 1-15 ஆகஸ்ட் 2012
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC6296-1.jpg

தொடரும்...

பக்தியுடன்,
பம்மலார்.

pammalar
9th August 2012, 01:54 AM
லேட்டஸ்ட்

டிஜிட்டல் "கர்ணன்" காவியத்தின்
150வது நாள் மெகா வெற்றிவிழா

செய்தித்தாள் சிறப்பு பக்கங்கள்

சோனியா வாய்ஸ் : 1-15 ஆகஸ்ட் 2012
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC6302-1.jpg

தொடரும்...

பக்தியுடன்,
பம்மலார்.

anm
9th August 2012, 02:16 AM
நமது nt அவர்களது புகழ் பாடும் நமது திரியின் மூன்று தெய்வங்களே!!! (திரு. பம்மலார், திரு. வாசு & திரு. ராகவேந்திரா),

இத்தனை நாட்களும் இந்த புதிய திரியை என்னால் கண்டு பிடிக்க முடியவில்லை, மன்னியுங்கள், இப்பொழுதுதான் கண்டேன், பேருவகை கொண்டேன், தன்யனானேன்!!!!!

பம்மலார் சார், நீங்கள் செய்துள்ள ௩௦௦௦ பதிவுகளுக்கும் ஓராயிரம் நன்றிகள்!!! வாழ்த்துக்கள்!!!!

Anm

pammalar
9th August 2012, 02:26 AM
லேட்டஸ்ட்

டிஜிட்டல் "கர்ணன்" காவியத்தின்
150வது நாள் மெகா வெற்றிவிழா

செய்தித்தாள் சிறப்பு பக்கங்கள்

சோனியா வாய்ஸ் : 1-15 ஆகஸ்ட் 2012
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC6301-1.jpg

தொடரும்...

பக்தியுடன்,
பம்மலார்.

pammalar
9th August 2012, 02:35 AM
லேட்டஸ்ட்

டிஜிட்டல் "கர்ணன்" காவியத்தின்
150வது நாள் மெகா வெற்றிவிழா

செய்தித்தாள் சிறப்பு பக்கங்கள்

சோனியா வாய்ஸ் : 1-15 ஆகஸ்ட் 2012
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC6299-1.jpg

தொடரும்...

பக்தியுடன்,
பம்மலார்.

pammalar
9th August 2012, 02:45 AM
முத்தான மூவாயிரம் பதிவுகளைத் தந்து ஜொலி ஜொலிக்கும் எங்கள் அன்புப் பம்மலாருக்கு மனமுவந்த நல் வாழ்த்துக்கள்.

http://farm1.staticflickr.com/115/302511505_883d8d5a54_b.jpg

டியர் வாசுதேவன் சார்,

தங்களின் சரமாரியான ஒளிரும் பாராட்டுப் பதிவுகளுக்கும், வளமான வாழ்த்துக்களுக்கும், எனது சிரம் தாழ்த்திய பணிவான நன்றிகள்..!

தாங்கள் வழங்கிய அன்புப்பரிசு ஓர் அபூர்வப்பரிசு..!

பாசத்துடன்,
பம்மலார்.

pammalar
9th August 2012, 02:59 AM
அன்பு மிக்க பம்மலார் சார்,
செப்டம்பர் 2009ல் தொடங்கிய தங்கள் சாம்ராஜ்ஜியத்தின் எல்லை விரிவடைந்து வருவது மட்டற்ற மகிழ்வைத் தருகிறது. மூவாயிரம் குறுநிலங்கள் தங்கள் ஆளுகையில் .. இவை மென்மேலும் தொடர்ந்து 5000, 10000 என்று வளரவேண்டும் என வாழ்த்துகிறேன்.

தங்களுக்காக அடியேனுடைய சிறிய காணிக்கை

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/misc/pammalargrtgs.jpg

டியர் ராகவேந்திரன் சார்,

தங்களின் பாராட்டுதல்களுக்கும், வாழ்த்துக்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்..!

இந்த எளியவனைக்கூட, தாங்கள் வழங்கிய பாராட்டுப்பதிவில் ஒரு சக்கரவர்த்தியாக சித்தரித்தது, தங்களின் உயர்ந்த உள்ளத்துக்கு ஓர் எடுத்துக்காட்டு..! அடியேன் என்றென்றும், நமது இதயதெய்வத்தின் ஒரு சிறுதொண்டனே..!

தாங்கள் வழங்கிய அன்புப்பரிசு ஓர் உணர்வுபூர்வமான பரிசு..!

நமது அண்ணலின் அன்புக்கரங்களில் அடியேனது பெயரைத் தவழச் செய்தது, கண்களில் ஆனந்தக்கண்ணீரை வரவழைத்துவிட்டது..!

பாசத்துடன்,
பம்மலார்.

pammalar
9th August 2012, 03:01 AM
Dear PAMMALAR - hearty congratulations - your dedication / committed cause amazing and we are all proud of you - kindly keep up

Thank You Sir for your compliments & wishes..!

pammalar
9th August 2012, 03:04 AM
Hi Pammalar sir,
3000 posts is not a acheviement its a rare rest of rare feat which will take some time to supprass . Ur coverage of 150th event made us very exciting. I got a bit too emotional on hearing YG Mahendran's speech. He is one actor whose talent is not explored still he is the first pithan of NT

Hats of Y G M sir.
By the way what did Director P. Vasu said? I saw the clippings but could not find anything offensive.


Once again Hearty congaratulations Pammalar sir
What to say other than this?

Thank You Very Much Mr. ragul for your compliments & wishes..!

pammalar
9th August 2012, 03:18 AM
டியர் பம்மலார்,

முத்தான மூவாயிரம் பதிவுகளைத் தொட்டிருக்கும் தங்களுக்கு பாராட்டுக்கள், வாழ்த்துக்கள். மூவாயிரம் பதிவு என்றாலும், பதிவு ஒவ்வொன்றும் ரசிகர்கள் ஒரு பொக்கிஷமாகப் பாதுகாக்கப்படவேண்டியதாக, ஆவணங்களை அள்ளித் தந்த தங்களுக்கு விண்ணிலிருக்கும் நடிகர்திலகத்தின் ஆசியும், பல்லாயிரக்கணக்கான அன்பு இதயங்களின் வாழ்த்துக்களும் என்றும் இருக்கும்.

டியர் சந்திரசேகரன் சார்,

தங்களின் பொன்னான பாராட்டுக்களுக்கும், மேன்மையான வாழ்த்துக்களுக்கும் எனது தங்கமான நன்றிகள்..!

அன்புடன்,
பம்மலார்.

pammalar
9th August 2012, 03:23 AM
Hats off to you dear Pammalar Sir, for being the Padhivuththilagam of Nadigar Thilagam with a record of 3000 logs. For Sivaji fans Pammalar sir remains the bench mark and we are indebted to you.

Thank you so much sivajisenthil Sir for your whole-hearted appreciation & kind wishes..!

pammalar
9th August 2012, 03:35 AM
அன்புள்ள பம்மலார் சார்,

'மூவாயிரம்' வெற்றிப்பதிவுகளைக்கடந்து வீறு நடைபோட்டுக்கொண்டிருக்கும் எங்கள் அருமை இளவல் 'பம்மலார்' சுவாமிநாதன் ஆகிய தங்களுக்கு இதயம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்.

வெட்டி விவாதங்களாலும், ஒருவரி கமெண்ட்டுகளாலும் ஆயிரக்கணக்கில் பதிவுகளை அடுக்கியவர்கள் பலர் இருக்கலாம். ஆனால் தங்களது பதிவுகள் மூன்றாயிரமும் (அருமைச்சகோதரர் சந்திரசேகர் அவர்கள் சொன்னதுபோல) மூவாயிரம் பொக்கிஷங்கள். அப்பதிவுகளை சேமித்து, சேமித்து ரசிகப்பெருமக்களின் பென்ட்ரைவ்களும், ஃப்ளாஷ் மெமோரிகளும் நிரம்பி வழிகின்றன. அத்தனையும் முத்தான, சத்தான பயனுள்ள பதிவுகள், ஆவணப்பொக்கிஷங்கள்.

மூவாயிரமாவது பதிவாக தாங்கள் அளித்துள்ள 'இருவர் உள்ளம்' திரைக்காவியத்தின் கிடைத்தற்கரிய பேசும் படம் இதழ்த் தொகுப்பு, நம் இருவர் உள்ளமும் நினைப்பது ஒன்றையே, அது நடிகர்திலகத்தின் புகழ்பாடுவதே என்பதை உணர்த்துகிறது.

நீங்கள் இடப்போகும் இன்னும் பல ஆயிரம் பதிவுகளையும், அவற்றில் இடம்பெறவிருக்கும் கனவிலும் நினையாத பொக்கிஷங்களையும் காண காத்துக்கிடக்கிறோம். அதற்காக தாங்கள் பூரண உடல்நலத்துடன் பல்லாண்டுகள் வாழ்ந்து சேவை செய்திட வாழ்த்துகிறோம்.

டியர் mr_karthik,

தங்களின் இதயபூர்வமான பாராட்டுதல்களுக்கும், வளமான வாழ்த்துக்களுக்கும் எனது எண்ணிலடங்கா நன்றிகள்..!

தாங்கள் குறிப்பிட்டுள்ளது போல், நமது நடிகர் திலகத்தின் புகழ் பாடுவதே நமது லட்சியம்..!

இந்த எளியவன் இடுகை செய்யும் ஒவ்வொரு ஆவணப்பதிவையும் மனமாரப் பாராட்டி, உற்சாகமும், ஊக்கமும் அளித்துக் கொண்டிருக்கும் பாராட்டுத்திலகமே, நீவீர் வாழிய பல்லாண்டு..!

பாசத்துடன்,
பம்மலார்.

pammalar
9th August 2012, 03:47 AM
கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துக்கள் !!!

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/Krishna1-1.jpg

பக்தியுடன்,
பம்மலார்.

pammalar
9th August 2012, 04:24 AM
டியர் வாசுதேவன் சார்,

உள்ளத்தில் உள்ளதை அப்படியே - மிச்சம் வைக்காமல் - உச்சமாகப் பாராட்டும் தங்களின் பெருங்குணத்துக்கு அடியேன் தலைவணங்குகிறேன்..!

"சந்திப்பு" : கடலூர் 'முத்தையா' : இமாலய பதிவு..!

இக்காவியத்தை வெளியான ஒரு மாதம் கழித்து முதன்முதலில் சென்னை 'சாந்தி'யில் எனது குடும்பத்தினருடன் பார்த்தேன்..! [படம் பார்க்கச் சென்றபோது, தின்பதற்கு 'பாப்கார்ன்' கூட வேண்டாம், "சந்திப்பு" பாட்டுப்புத்தகம்தான் வேண்டும் என்று இடைவேளையின்போது அடம்பிடித்தது நன்றாக நினைவிருக்கிறது]. பின்னர் மூன்று மாதங்கள் கழித்து இன்னொரு முறை குடும்பத்தினரோடு திருமயிலை 'காமதேனு'வில் பார்த்தேன். ஆனால் ரிலீஸ் ஆன அன்றே, 11 வயது சிறுவனாக, தங்களின் அன்புக்கரங்களைப் பிடித்துக் கொண்டு, தங்களுடன் அமர்ந்து-ஓடி-ஆடி இன்று "சந்திப்பு" திரைக்காவியத்தை, கடலூர் 'முத்தையா'வில் பார்த்துவிட்டேன்..! Pastஐயும், Presentஐயும் இணைக்கும் Perfect Bridge தாங்கள்..!

கடலூரில், இக்காவியம் வெளியாவதற்கு முன் இருந்த நிலவரம், வெளியாகும்போது இருந்த எதிர்பார்ப்புகள், வெளியான பின் ஏற்பட்ட களேபரங்கள், ஆரவாரங்கள், கொண்டாட்டங்கள் என ஒரு பதிவில் எத்தனை விஷயங்கள்..! சிகர பதிவை ஸ்டில்களோடு அளித்து சிறப்பு செய்துவிட்டீர்கள், பாராட்டுக்கள்..!

காலசக்கரத்தை பின்னோக்கி அப்படியே 'லைவ்'வாக சுழற்ற கடவுளாலும், நமது கலைக்கடவுளாலும் மட்டும்தான் முடியும் என்று எண்ணியிருந்தேன். இதோ நானும் இருக்கிறேன் என்று வந்துவிட்டீர்கள் நீங்கள், வாழ்த்துக்கள்..!

பாசத்துடன்,
பம்மலார்.

pammalar
9th August 2012, 04:30 AM
மூவாயிரம் பதிவளித்த பம்மலாரே! முப்பதினாயிரம், மூன்று லக்ட்ஷம், முப்பதுலக்ட்ஷம், ... என பலப்பல கடந்து செல்ல, பல்லாண்டு வாழ்ந்து நடிகர் திலகம் புகழ் பாடிட வாழ்த்துகள்.

வாசுதேவனாரே!
கடலூர் முத்தையா திரைஅரங்கு 'சந்திப்பு' வெளியீடு விவர கலாட்டா கொண்டாட்டத்தை எழுதி எனது நினைவுகளையும் கிளறி விட்டீர்கள். நான் உங்களை போல் அதிதீவிர ரசிகனில்லை தான் (படம் வெளியானபோது சற்றே சிறுவன்). வீட்டிலும் ரசிகனாய் இப்படி கொண்டாட அனுமதிக்க மாட்டார்கள். ஆனால் வாய்ப்பு கிடைத்தால் நடிகர் திலகத்தின் திரைப்படங்களை பார்க்கத்தவற மாட்டேன். நானும் கடலூரில் குறிப்பிட்ட காலம் வாழ்ந்தவன்தான். முத்தையா திரை அரங்கை நன்கு அறிவேன். கடலூர் திரை அரங்குகளுக்குள் நடிகர் திலகத்தின் திரைப்படங்களை வெளியிடுவதற்கு போட்டியிருக்கும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அதிலும் இந்த குடோன் முத்தையா திரை அரங்க நிர்வாகிகளுக்கு நடிகர் திலகத்தின் படங்களை திரை இடுவதற்கு பயங்கர பேராசை. எப்படியோ சிவாஜி பிலிம்ஸ் தயாரிப்பு 'சந்திப்பு' படத்தை வெளியிடுவதற்கு அவர்களுக்கு வாய்ப்பு கிடைத்துவிட்டது. பேராசை பேரு நஷ்டமாகி விட்டது. இந்த ரகளை ஆகிவிட்டது. நானும் ரசிகர்களின் ரகளையை பிறர் சொல்ல கேட்டிருக்கிறேன். இப்போது நீங்கள் உறுதி செய்து விட்டீர்கள்.

நானும் 'சந்திப்பு' வெளியான முதல் வாரத்திலேயே இதே முத்தையாவில் ஒரு நாள் இரவு காட்சிக்கு எனது தந்தையாருடன் சென்று பார்த்து வந்திருக்கிறேன். எனது அப்பா கூட்டம் எப்படி என்று பார்க்க வரிசையினை சுற்றி பார்க்க போய், எனது அப்பாவின் கட்டுமஸ்த்தான உடலை பார்த்து மப்டி-யில் போலிஸ் வந்திருப்பதாக நினைத்து ஒருவர் பயந்து 'போலிஸ், போலிஸ்' என்று கத்தி கியூ-வில் குறுக்கே புக நினைத்தவர்கள் கியூ-வை விட்டு விலகி ஓடி ஒழுங்காக வரிசையில் நின்று டிக்கட் எடுத்து சென்றதும், நாங்கள் எளிதாக டிக்கட் எடுத்ததும் இப்போதும் என் நினைவில் புன்னகை தவழ வைக்கிறது.

தங்களது அன்புக்கும், உயர்ந்த உள்ளத்துக்கும், பாராட்டுக்கும், வாழ்த்துக்களுக்கும் எனது தலையாய நன்றிகள், கல்நாயக் சார்..!

தங்களது "சந்திப்பு" அனுபவம் சூப்பர்..!

pammalar
9th August 2012, 04:36 AM
டியர் பம்மலார் சார்,
இருவர் உள்ளம் அற்புதத் திரைக்காவியத்தின் பேசும் பட நிழற்படங்கள் தங்களுடைய மூவாயிரமாவது பதிவாய் அமைந்து முத்திரை பதித்தது மிகப் பொருத்தம். புத்தி சிகாமணி பெற்ற பிள்ளை ஆயிற்றே, கண்ணெதிரே தோன்றினார், கனிமுகத்தைக் காட்டினார், தண் தமிழைக் காட்டினார், தனித்துவத்தை நிலை நாட்டினார்....

வாழ்த்துக்கள் மீண்டும் மீண்டும் ....

அன்புடன்
ராகவேந்திரன்

டியர் ராகவேந்திரன் சார்,

ரசிகவேந்தராகிய தங்களின் கவித்துவமான பாராட்டுதல்களையும், வாழ்த்துக்களையும் பெற அடியேன் புண்ணியம் செய்திருக்க வேண்டும்..!

தங்களுக்கு எனது ஆத்மார்த்தமான நன்றிகள்..!

பாசத்துடன்,
பம்மலார்.

pammalar
9th August 2012, 04:55 AM
Anbulla Pammalar Avargalukku,

3000 Padhivugal.....Bale !!

Idhai Namadhu Deivam Nadigar Thilagam Aridhaaramitta Karnan Paaniyil Sollavendum Endraal...."Padhivida-therindhavargal-eppadi padhivuseidhuvitaargal..Aahaa!!

Ungallukku, Engal Anaivarin Nandriyaiyum, oru paatu paadi ...Adhuvum Namadhu Nadigar Thilagaththin meedhu alavatra Madhippum, Mariyadhayum vaiththirundha, Makkal Kalaignar Thiru.Jaishankar avargal thiraipada paadal vaayilaaga

http://www.youtube.com/watch?v=wKQJuI7XqCY&feature=related


Anbudan,
:smokesmile:



டியர் பாரிஸ்டர் சார்,

நடிகர் திலகம் குறித்த ஆய்வுகளை மேற்கொண்டுவரும், நமது இதயதெய்வத்தின் ஆராய்ச்சியாளர், திரு.மருதுமோகன் அவர்களின் உணர்வுபூர்வமான அதே சமயம் அறிவுபூர்வமான சிறப்புரைகளை, [டிஜிட்டல் "கர்ணன்" 150வது நாள் கோலாகல வெற்றிவிழாவில் அவர் பேசியதை], வீடியோக்களாக மீண்டும் இங்கே இடுகை செய்தமைக்கு இனிய நன்றிகள்..!

தங்களின் பலமான 'பலே' பாராட்டுக்கு எனது பொன்னான நன்றிகள்..!

எனக்கு மிகவும் பிடித்த, மெல்லிசை மாமன்னரின் ஹம்மிங்குடன் கூடிய பாடகியர் திலகம் பாடிய நமது மக்கள் கலைஞரின் கீதத்தின் சுட்டியை பதித்தமைக்கு ஸ்பெஷல் தேங்க்ஸ்..!

அனைவரையும் கவர்ந்த அந்த அற்புதப்பாடல் அப்படியே காணொளியாக:


http://www.youtube.com/watch?v=wKQJuI7XqCY

அன்புடன்,
பம்மலார்.

pammalar
9th August 2012, 04:59 AM
சுவாமி,

மூவாயிரம் முப்பதினாயிரம் ஆகட்டும்
முக்கனியாய் முத்தமிழாய் உங்கள் புகழ் ஓங்கட்டும்!

வாசு சார்,

நான் முன்னரே சொல்லியிருக்கிறேன். இப்போதும் சொல்கிறேன். உங்கள் எழுத்து நடையில் அதிலும் குறிப்பாக ஒரு நிகழ்வினை நேரலையாக விவரிக்கும் போது ஒரு வசீகரம் அதில் ஒளிந்திருக்கிறது. எந்த வித தடைகளும் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் ஒரு ஆற்றொழுக்கு என்று அதை குறிப்பிடலாம். சந்திப்பு ஓபனிங் ஷோ அனுபவங்கள் போன்ற மேலும் பல பதிவுகளை தாருங்கள்!

அன்புடன்

டியர் முரளி சார்,

தங்களின் முத்தான-சத்தான பாராட்டுக்களுக்கும்-வாழ்த்துக்களுக்கும் எனது முதன்மையான நன்றிகள்..!

அன்புடன்,
பம்மலார்.

pammalar
9th August 2012, 05:04 AM
நமது nt அவர்களது புகழ் பாடும் நமது திரியின் மூன்று தெய்வங்களே!!! (திரு. பம்மலார், திரு. வாசு & திரு. ராகவேந்திரா),

இத்தனை நாட்களும் இந்த புதிய திரியை என்னால் கண்டு பிடிக்க முடியவில்லை, மன்னியுங்கள், இப்பொழுதுதான் கண்டேன், பேருவகை கொண்டேன், தன்யனானேன்!!!!!

பம்மலார் சார், நீங்கள் செய்துள்ள ௩௦௦௦ பதிவுகளுக்கும் ஓராயிரம் நன்றிகள்!!! வாழ்த்துக்கள்!!!!

Anm

'கண்டேன் திரியை' எனக் களிப்போடு வந்து, தெய்வீகமான பாராட்டுக்களையும், மேன்மையான வாழ்த்துக்களையும் தந்து, எங்களை மகிழ்ச்சிக்கடலில் மூழ்கவைத்த ஆனந்த் சார், தங்களுக்கு எங்களது ஆனந்தமான நன்றிகள்..!

pammalar
9th August 2012, 05:11 AM
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல்

கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா ! கிருஷ்ணா !


http://www.youtube.com/watch?v=sPFnxjnsJug

பக்தியுடன்,
பம்மலார்.

Richardsof
9th August 2012, 06:14 AM
SIVANDHA MANN AND NEELAVANAM MOVIE ACTRESS TODAY's photos.
http://i45.tinypic.com/a14d9v.jpg

vasudevan31355
9th August 2012, 07:46 AM
அனைவருக்கும் இனிய கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துக்கள்.

http://bharatjanani.com/wp-content/uploads/2011/08/Krishna-Janmashtami.gif

'கிருஷ்ண ஜெயந்தி' அரிய சிறப்புப் பாடல்.

இணையத்தில் முதன் முறையாக

'அன்பளிப்பு' திரைக்காவியத்தில் நடிகர் திலகம் கோகுலாஷ்டமி அன்று கிருஷ்ணன் வேடமணிந்து நட்சத்திர நடிகர்களுடன் குறும்புத்தனத்துடன் அட்டகாசங்கள் செய்யும் அரிய அற்புதப் பாடல். கிட்டத்தட்ட பலரும் மறந்திருக்கக் கூடும். எனவே கிருஷ்ண ஜெயந்தியான இன்று நாம் எல்லோரும் நடிகர் திலகத்துடன் சேர்ந்து பாடி ஆடி மனம் மகிழலாமா...

அதுமட்டுமல்ல... போனஸ் விருந்தாக நடிகர் திலகம் சிக்கென்ற பெர்முடாஸ் அணிந்து உரியடிக்கும் போட்டியில் கலந்து கொண்டு அதகளம் செய்யும் காட்சியையும் கண்டு உற்சாகம் கொள்ளலாம்.

"கோபாலன் எங்கே உண்டோ கோகுலம் அங்கே உண்டு...கிருஷ்ணாரி ராமாரி"


http://www.youtube.com/watch?v=vTZvsa0MVuU&feature=player_detailpage


அன்புடன்,
வாசுதேவன்.

goldstar
9th August 2012, 05:13 PM
http://i1075.photobucket.com/albums/w424/sathish1972/NT_MGR.png

vasudevan31355
9th August 2012, 06:44 PM
அன்பு கார்த்திக் சார்,

'சந்திப்பு' கட்டுரையை தாங்கள் ரசித்துப் படிக்கும் அளவிற்கு என்னால் எழுத முடிந்தது பெரும் பாக்கியமே! நல்ல விஷயங்கள் எங்கிருந்தாலும் ஓடோடி வந்து பாராட்டி மெச்சும் தங்கள் உயர்குணம் எல்லாவற்றையும் விட போற்றுதலுக்குரியது. மனம் மகிழ்ந்து தாங்கள் பதிவைப் பாரட்டியதற்கு நெஞ்சமெல்லாம் நிறைந்த எனது ஆழ்ந்த, அன்பான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இதெற்கெல்லாம் காரணகர்த்தாக்கள் நீங்கள், சாரதா மேடம், ராகவேந்திரன் சார், அன்புச் சகோதரர் ஆருயிர் பம்மலார் சார், அன்பு முரளி சார், பிரபு ராம் சார் போன்ற அற்புதமான பதிவாளர்கள் அல்லவா! இத்தருணத்தில் அனைவரையும் நன்றியோடு நினைத்துப் பார்க்கிறேன். மீண்டும் தங்களுக்கு என் கனிவான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

pammalar
9th August 2012, 06:51 PM
அன்றைய நடிகைகளான ராஜஸ்ரீ மற்றும் காஞ்சனா இருவரும், இணைந்து அமர்ந்திருக்கும் இன்றைய ஃபோட்டோவை, இடுகை செய்தமைக்கு இனிய நன்றிகள், esvee சார்..!

நதியும் மதியும் இணைந்திருக்கும் அருமையான ஃபோட்டோவுக்கு நன்றி, கோல்ட்ஸ்டார்..!

vasudevan31355
9th August 2012, 06:53 PM
டியர் ராகவேந்திரன் சார்,

'சந்திப்பு' பதிவு பற்றிய தங்களின் உயரிய பாராட்டுதல்களுக்குத் தலை வணங்குகிறேன். ரசிக வேந்தராகிய தங்களது உற்சாகமூட்டும் மனப்பான்மைக்கும், உன்னத பாராட்டுதல்களுக்கும் மிக்க நன்றி!

நடிகர் திலகம் சிவாஜி நினைவு நாள் அனுசரிப்பு நிகழ்ச்சியில் நடிகர் திலகத்தைப் பற்றி திரு மருது மோகன் ஆற்றிய சிறப்புரையினை நாம் இங்கு காணொளியாய் வழங்கியதற்கு என் அன்பான நன்றிகள்.

pammalar
9th August 2012, 06:54 PM
டியர் வாசுதேவன் சார்,

கிருஷ்ண ஜெயந்தி சிறப்புப் பாடலாக "அன்பளிப்பு(1969)" பாடலை அன்பளிப்பாக அளித்த தங்களை என்ன சொல்லிப் பாராட்டுவது..! [இப்பாடலுடன் ஒரு போனஸ் காட்சி வேறு..!]

நன்றி ! நன்றி ! நன்றி !

அன்புடன்,
பம்மலார்.

vasudevan31355
9th August 2012, 06:58 PM
அன்பு சுப்பிரமணியம் ராமஜெயம் சார்,

எங்கள் எல்லோருக்கும் சீனியர் ரசிகரான தங்களது மகிழ்வான பாராட்டுதல்களை தங்களுடைய ஆசீர்வாதங்களாய் எண்ணிக்கொண்டு பூரிக்கிறேன். மிக்க நன்றி சார்!

vasudevan31355
9th August 2012, 07:15 PM
முத்தான முரளி சார்,

'சந்திப்பு' பதிவைப் பற்றி தாங்கள் பாராட்டியுள்ள விதம் உண்மையிலேயே என் கண்களைக் குளமாக்கி விட்டது. பழுத்த அனுபவம் வாய்ந்த தங்களின் உயரிய எழுத்துப் பதிவுகளுக்கு என்றுமே நான் முதல் ரசிகன். தங்களைப் போன்ற சிறந்த பதிவாளர்களை முன்னுதாரணமாய் எடுத்துக் கொண்டு பதிவுகளை அளிப்பதில் மிகுந்த பெருமையும், பேருவகையும் அடைகிறேன். தங்களின் அற்புதமான பாராட்டிற்கு நன்றி கலந்த ஆனந்தக் கண்ணீரை சமர்ப்பிக்கிறேன்.

vasudevan31355
9th August 2012, 07:37 PM
அன்பு பம்மலார் சார்

இவ்வளவுதானா?...இன்னும் ஏதாவது பாக்கி இருக்கிறதா? டிஜிட்டல் "கர்ணன்" காவியத்தின் 150 வது நாள் மெகா வெற்றிவிழா பதிவுகளைப் பற்றித்தான் கேட்கிறேன். யம்மாடி!... மலை போல் வந்து குவியும் பதிவுகள். சலிக்காமல் தங்கள் சீரிய உழைப்பால் வந்து கொண்டிருக்கும் 'கர்ணன்' விழா பற்றிய பதிவுகளை எத்தனை முறை பார்த்தாலும், படித்தாலும் சலிக்கவில்லை. விழா நிகழ்வுகள் பற்றி தாங்கள் திரியில் பதிவு செய்திருக்கும் அத்தனை பதிவுகளையும் ஒன்று திரட்டி ஒரு மெகா புத்தகமாகவே வெளியிட்டு விடலாம் போல. எண்ணிலடங்கா எமப்பதிவுகளுக்கு எத்தனை கோடி நன்றிகள் சொன்னாலும் ஈடாகுமோ?

கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துக்களுக்காக 'படிக்காத மேதை'யின் பக்காவான ஸ்டில்லை பளிங்கு போல் அளித்ததற்கு நன்றி.

'சந்திப்பு' காவியத்தை என்னுடன் கைகோர்த்து முத்தையாவில் பல்வேறு சிரமங்களுக்கிடையில் கண்டு களித்ததற்கு நன்றி! ஆமாம் சார்! தங்களின் மடை திறந்த வெள்ளம் போன்ற பாராட்டுப் பதிவுகள் மூலம் என்னை திக்கு முக்காடச் செய்து விட்டீர்கள். அதற்காக ஆயிரமாயிரம் நன்றிகள் தங்களுக்கு.

கேட்டதும் கொடுக்கும் அன்பு பம்மலார் அவர்கள் "கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா ! கிருஷ்ணா !" வை ஜெயந்தி அன்று தந்ததில் ஆச்சரியம் என்ன?

vasudevan31355
9th August 2012, 07:40 PM
டியர் ஆனந்த் சார்,

தங்களது மேலான அன்பிற்கு மிக்க நன்றி! நமெக்கெல்லாம் ஒரே தெய்வம்தான்.

vasudevan31355
9th August 2012, 07:54 PM
டியர் ஜோ சார்,

உளம் கனிந்த நன்றிகள் சார். தங்களின் சந்திப்பு பட அனுபவம் மிக்க சுவையாக இருந்தது. ஐந்தாம் வகுப்பு மாணவராய் இருக்கும் போதே நடிகர் திலகத்தை சந்திக்க வேண்டும் என்ற தங்களின் பேரவா ஒன்று போதும் தங்களை நடிகர் திலகத்தின் உயரிய ரசிகர் என்று உலகிற்கு எடுத்துக் காட்ட. நானும் நீங்கள் சொன்னது போல் ஒலி அமைப்பாளரை ஒருமுறை இம்சை செய்து 'நீதி' இசைத்தட்டு முகப்பை எப்படியோ வாங்கிக் கொண்டு வந்து விட்டேன். பத்திரமாகப் பாதுகாத்தும் வருகிறேன்.

நீங்கள் கடலூர் அடிக்கடி வருவீர்களோ! அனேகமாக நீங்கள் குறிப்பிடும் தியேட்டர் நியூசினிமா என்று நினைக்கிறேன். அதுதான் ஆற்றுப் பாலத்தின் கீழே அமைந்துள்ளது. முத்தையா பஸ் ஸ்டாண்ட் பக்கத்திலேயே இருக்கிறது. இப்போது முற்றிலும் பாழ் பட்ட நிலையில். தியேட்டர் எப்போதோ இழுத்து மூடப் பட்டு விட்டது. ஒருபகுதி டூ வீலர் (கட்டண)ஸ்டாண்டாக பயன்பட்டுக் கொண்டிருக்கிறது.

RAGHAVENDRA
9th August 2012, 07:56 PM
மலேசியா சிவாஜி கணேசன் கலை மன்றம் நடத்திய நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நினைவு நாள் நிகழ்ச்சியில் திரு மருது மோகன் அவர்கள் ஆற்றிய உரையின் தொடர்ச்சி - பாகம் 2 நம் பார்வைக்காக


http://youtu.be/haiNDSDShZ0

pammalar
9th August 2012, 08:00 PM
திரைக்காவிய முதல் வெளியீட்டு விளம்பரங்கள் :13

நடிகர் திலகத்தின் 235வது காவியம்

சந்திப்பு [வெளியான தேதி : 16.6.1983]

வெள்ளிவிழாக் கொண்டாடிய மெகாஹிட் காவியம்

பொக்கிஷாதி பொக்கிஷம்

சென்னையில் '307 CHF Shows' விளம்பரம் : தினகரன் : 20.7.1983
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC6304-1.jpg

தொடரும்...

பக்தியுடன்,
பம்மலார்.

RAGHAVENDRA
9th August 2012, 08:04 PM
டியர் வாசுதேவன் சார்,
கோபாலன் எங்கே உண்டோ கோபியர் அங்கே உண்டு -
நடிகர் திலகம் எங்கே உண்டோ நாமெல்லாம் அங்கே உண்டு
என்று
சொல்லாமல் சொல்லி கிருஷ்ண ஜெயந்தி பண்டிகையை நடிகர் திலகத்தின் பாடலுடன் அமர்க்களமாக எல்லோரும் கொண்டாட செய்து விட்டீர்கள்.
பாராட்டுக்கள்.

vasudevan31355
9th August 2012, 08:04 PM
டியர் கல்நாயக் சார்,

'சந்திப்பு' பதிவு தங்கள் நினைவுகளைக் கிளறி விட்டதனால் தங்களிடமிருந்து ஒரு ஜோரான பதிவு கிடைத்தது.. தாங்களும், தங்கள் தந்தையும் சந்திப்பை எங்கள் ஊரில் பார்த்த விதம் அருமை. எங்கள் ஊர்க்காரர்கள் கொஞ்சூண்டு ஏமாளிகள்தான். அதை எப்படியோ தெரிந்து கொண்டு நைசாக, சாமர்த்தியமாக டிக்கெட்எடுத்து விட்டீர்கள். அருமையாக எழுதுகிறீர்களே! ஏன் கன்டின்யூ செய்யக் கூடாது?

RAGHAVENDRA
9th August 2012, 08:06 PM
எள்ளி நகையாடியோரை எங்கே எனக் காணாமல் செய்த வெற்றிக் காவியமான சந்திப்பு திரைப்படத்தை எல்லோரும் அறியும் வண்ணம் செய்த வாசு சாருக்கும் அதனுடைய வெற்றியை 307 தொடர் அரங்கு நிறைவு காட்சி விளம்பரம் மூலம் ஆணித்தரமாக நிரூபித்த பம்மலாருக்கும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் எத்தனை முறை சொன்னாலும் சலிக்காது.

பாராட்டுக்கள் பம்மலார், வாசு சார்.

அன்புடன்
ராகவேந்திரன்

pammalar
9th August 2012, 08:07 PM
டியர் வாசுதேவன் சார்,

இதயத்தின் அடித்தளத்திலிருந்து தாங்கள் தொடர்ந்து அளித்துக் கொண்டிருக்கும் இதயபூர்வமான பாராட்டுக்கள், எனக்கு ஊக்கத்தையும், உற்சாகத்தையும் மிகப் பெரிய அளவில் தந்து கொண்டிருக்கின்றன. தங்களுக்கு எனது உளப்பூர்வமான நன்றிகள்..!

அன்புடன்,
பம்மலார்.

vasudevan31355
9th August 2012, 08:58 PM
இன்று ஒரு சொந்த வேலையின் காரணமாக நெய்வேலியில் இருந்து கடலூர் செல்ல நேரிட்டது. 'சந்திப்பு' படத்தைப் பற்றிய நினைவுகளே நெஞ்சில் நிழலாடிக் கொண்டிருந்ததால் சரி முத்தையா திரையரங்கை ஒரு முறை இப்போது பார்த்துவிட்டுத்தான் வருவோமே என்று டூ வீலரை முத்தையா தியேட்டர் பக்கம் திருப்பினேன். நேராக தியேட்டருக்கே சென்று பார்த்தேன். மிகப் பரிதாபமான நிலையில் முற்றிலும் சீர்குலைந்து சிதலமடைந்து சிதைந்து போய் இருந்தது. மேற்கூரைகளெல்லாம் சுனாமியில் பிய்க்கப்பட்ட நிலையில் இருந்தன. சந்திப்பை அந்தத் தியேட்டரில் கண்ட விதம் மனதில் நிழலாடியது. ஏதோ சொல்ல முடியாததொரு லேசான சோகம் என்னை என்னமோ செய்தது. சிறிது நேரம் தியேட்டரை உற்றுப் பார்த்து விட்டு தியேட்டரை செல் காமிராவில் 'க்ளிக்' செய்தேன். பின் திரும்ப வந்து விட்டேன். திரும்ப வந்து கொண்டிருக்கும் போதே தியேட்டரை கண்ணிலிருந்து மறையும் வரை, வண்டியை ஒட்டியபடியே (ஜாக்கிரதையாகத்தான்) திரும்பத் திரும்பப் பார்த்தபடியே வந்தேன். மனம் சற்று வலித்தது உண்மை.

இன்றைய முத்தையா தியேட்டர்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/IMG0269A.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/IMG0270A.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/IMG0273A.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/IMG0275A.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/IMG0277A.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/IMG0281A.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/Photo0121.jpg

vasudevan31355
9th August 2012, 09:04 PM
3000 கண்ட பதிவரசர் போட்ட 307 chf ஷோஸ் 'சந்திப்பு' சூப்பரோ சூப்பர்.

RAGHAVENDRA
9th August 2012, 09:05 PM
டியர் வாசு சார்,
கடலூர் முத்தையா திரையரங்கைப் பற்றி அருமையான பதிவினை அளித்து, இன்று அதனைக் காட்சியாகவும் தந்து அசத்தி விட்டீர்கள். என்ன தான் வார்த்தைகளும் வாக்கியங்களும் அமைத்தாலும் ஒரு படம் ஓராயிரம் கதை சொல்லும் என்பதை தாங்கள் பதிவிட்ட நிழற்படம் நிரூபித்து விட்டது. அன்றைய நாட்கள் .... வருமா திரும்பவும் ?

Never .....

RAGHAVENDRA
9th August 2012, 09:08 PM
நம்முடைய நடிகர் திலகம் இணைய தளத்தில் கர்ணன் 150வது நாள் விழா வெவ்வேறு பிரிவுகளாகப் பிரிக்கப் பட்டு பக்கங்கள் அமைக்கப் பட்டுள்ளன. இணைப்புகள் இங்கே ...
நிழற்படங்கள்
http://www.nadigarthilagam.com/Karnan150celebMain.html

காணொளிகள்
http://www.nadigarthilagam.com/Karnan150celebvideos.html

பத்திரிகைகள் தொலைக்காட்சிகள் இணையதளங்களில் விழா பற்றிய செய்தி
http://www.nadigarthilagam.com/Karnan150celebmediacoverage.html

ரசிகர்களின் சுவரொட்டிகள், கொண்டாட்டங்கள், பதாகைகள் போன்றவை
http://www.nadigarthilagam.com/postersbannersfansevents.html

J.Radhakrishnan
9th August 2012, 09:19 PM
டியர் பம்மலார் சார்,

3000 பதிவுகள் மேலும் 30 ,000 ஆக எல்லாம் வல்ல நம் இறைவன் தங்களுக்கு அருள் புரிவார்.

vasudevan31355
9th August 2012, 09:22 PM
சந்திப்பு பதிவுக்காக அயல் நாட்டிலிருந்து அலைபேசியின் வழியே பாராட்டி மகிழ்ந்த கோல்ட் ஸ்டாருக்கு என் அன்பார்ந்த நன்றிகள். அதே போல வினோத் சாருக்கும் (esvee) என் ஆத்மார்த்தமான நன்றிகள்.

vasudevan31355
9th August 2012, 09:26 PM
Dear Satish sir,

wonderful still from 100 days Jalli kattu function. Thanks.

J.Radhakrishnan
9th August 2012, 09:29 PM
டியர் வாசு சார்,

தங்களின் சந்திப்பு பதிவு மிக அற்புதம், தங்கள் அதை விவரித்த விதத்தில் பம்மலார் கூறியது போல் நாங்களும் தங்களுடன் திரைபடத்தை கண்ட உணர்வு ஏற்ப்பட்டது. மேலும் தற்போதைய முத்தையா திரை அரங்கின் புகை படத்தை பார்க்கும் போது தங்கள் சொன்னது போல் மனம் சற்று வலித்தது.

joe
9th August 2012, 09:33 PM
நீங்கள் கடலூர் அடிக்கடி வருவீர்களோ!
தனிச்செய்தி அனுப்பியிருக்கிறேன் :)

vasudevan31355
9th August 2012, 10:13 PM
தனிச்செய்தி அனுப்பியிருக்கிறேன் :)

டியர் ஜோ சார்,

பார்த்து விட்டேன். பதில் மடல் தனிச் செய்தியில் பார்க்கவும். நன்றி!

pammalar
9th August 2012, 10:32 PM
நடிகர் திலகத்துக்கு கௌரவம் : 1

ஃபிரான்ஸ் அளித்த அங்கீகாரம்

'செவாலியே' விருது விழா

22.4.1995 [சனிக்கிழமை]

எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியம் : சேப்பாக்கம் : சென்னை

தமிழக முதல்வர் கலைச்செல்வி டாக்டர் ஜெ. ஜெயலலிதா அவர்கள் தலைமை வகிக்க, ஃபிரான்ஸ் நாட்டுத் தூதர் திரு. ஃபிலிப் பெடிட் அவர்கள், தங்கள் நாட்டின் மிகமிக உயர்ந்த விருதான 'செவாலியே' விருதை, உலக நடிகர் திலகத்துக்கு வழங்கினார். சிங்காரச் சென்னையில் மிகப் பிரம்மாண்டமான முறையில் நடைபெற்ற இந்த விழாவுக்கு, இந்தியத் திரையுலகமே திரண்டு வந்து, நமது சிங்கத்தமிழனை வாழ்த்தி, பெருமை தேடிக் கொண்டது. அந்தக் கோலாகலமான விழாவின் வரலாற்று ஆவணங்கள் இனி வரிசையாக:

பொக்கிஷாதி பொக்கிஷம்

வரலாற்று ஆவணம் : தினத்தந்தி : 23.4.1995
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC6305-1.jpg

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC6306-1.jpg

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC6307-1.jpg

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC6309-1.jpg

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC6310-1.jpg

தொடரும்...

பக்தியுடன்,
பம்மலார்.

Thomasstemy
9th August 2012, 10:54 PM
இன்று ஒரு சொந்த வேலையின் காரணமாக நெய்வேலியில் இருந்து கடலூர் செல்ல நேரிட்டது. 'சந்திப்பு' படத்தைப் பற்றிய நினைவுகளே நெஞ்சில் நிழலாடிக் கொண்டிருந்ததால் சரி முத்தையா திரையரங்கை ஒரு முறை இப்போது பார்த்துவிட்டுத்தான் வருவோமே என்று டூ வீலரை முத்தையா தியேட்டர் பக்கம் திருப்பினேன். நேராக தியேட்டருக்கே சென்று பார்த்தேன். மிகப் பரிதாபமான நிலையில் முற்றிலும் சீர்குலைந்து சிதலமடைந்து சிதைந்து போய் இருந்தது. மேற்கூரைகளெல்லாம் சுனாமியில் பிய்க்கப்பட்ட நிலையில் இருந்தன. சந்திப்பை அந்தத் தியேட்டரில் கண்ட விதம் மனதில் நிழலாடியது. ஏதோ சொல்ல முடியாததொரு லேசான சோகம் என்னை என்னமோ செய்தது. சிறிது நேரம் தியேட்டரை உற்றுப் பார்த்து விட்டு தியேட்டரை செல் காமிராவில் 'க்ளிக்' செய்தேன். பின் திரும்ப வந்து விட்டேன். திரும்ப வந்து கொண்டிருக்கும் போதே தியேட்டரை கண்ணிலிருந்து மறையும் வரை, வண்டியை ஒட்டியபடியே (ஜாக்கிரதையாகத்தான்) திரும்பத் திரும்பப் பார்த்தபடியே வந்தேன். மனம் சற்று வலித்தது உண்மை.

இன்றைய முத்தையா தியேட்டர்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/IMG0269A.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/IMG0270A.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/IMG0273A.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/IMG0275A.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/IMG0277A.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/IMG0281A.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/Photo0121.jpg

Dear Vasudevan Sir,
Arumayaana Padhippu....Nadigar Thilagaththin AdhiradiVetrikaaviyam Santhippu oliparappiya Muthiah theater indru..Muthaiyaiyo aagivitadhu kandu enakkum manam valikkiradhu.

Satru Sindhiththoamae aanal, Indraya Thamizh Thirai Ulagin Unmai nilai puriyum. Endru Thagudhiilladha Nadigargalukku, Koadigalaai kotti producers kodukka arambithaargaloe, andrilirundhudhaan theater urimayalargalum sari thaiyaaripaalargalum sari Therukoadikku Vandhu Vittargal..!!

Hmm! Naana Sonnaen Theerppu..Satta Nool Dhaan Endhan Kaapu !!
"Am in the hands of Law ! Am not responsible if there is a Flaw"

:smokesmile:

pammalar
9th August 2012, 11:58 PM
டியர் பம்மலார் சார்,

3000 பதிவுகள் மேலும் 30 ,000 ஆக எல்லாம் வல்ல நம் இறைவன் தங்களுக்கு அருள் புரிவார்.

தங்களின் அன்பான பாராட்டுக்கும், மனமார்ந்த வாழ்த்துக்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள், ஜேயார் சார்..!

pammalar
10th August 2012, 04:15 AM
டியர் வாசுதேவன் சார்,

தங்களின் அன்பான பாராட்டுக்கு நன்றி..!

1983-ம் ஆண்டு, ஜூன் 16-ம் நாள், "சந்திப்பு" வெளியீட்டின்போது கடலூர் 'முத்தையா'வில் நிகழ்ந்தவை, உள்ளத்தில் பரபரப்பை உண்டாக்கியது என்றால், இன்று 9.8.2012 அன்று, தங்களால் இடுகை செய்யப்பட்டுள்ள அந்தத் திரையரங்கின் நிழற்படங்கள், இதயத்தை கனக்கச் செய்துவிட்டது. பார்க்கும் எங்களுக்கே இப்படி என்றால், தங்களுக்கு எப்படி இருக்கும் என்பது புரிகிறது. இந்த நிழற்படஙகளை எடுக்க தாங்கள் மேற்கொண்ட பெருமுயற்சிக்கு பெருவாரியான நன்றிகள்..!

அன்புடன்,
பம்மலார்.

pammalar
10th August 2012, 04:16 AM
டியர் ராகவேந்திரன் சார்,

தங்களின் இதயங்கனிந்த பாராட்டுக்கு நன்றி..!

திரு. மருதுமோகன் அவர்கள் தூள் கிளப்பிக் கொண்டிருக்கிறார், பாராட்டுக்களுடன் கூடிய நன்றிகள்..!

அன்புடன்,
பம்மலார்.

pammalar
10th August 2012, 04:17 AM
நமது பத்தாவது பாக நடிகர் திலகம் திரியில், அடியேனுக்கு பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்த அடிகளாருக்கு அன்பான நன்றிகள்..!

கைபேசியில் பாராட்டி வாழ்த்திய அன்புள்ளம் திரு.சித்தூர் வாசுதேவன் அவர்களுக்கு கனிவான நன்றிகள்..!

vasudevan31355
10th August 2012, 07:21 AM
Cinema Express 16-11-2011

http://www.hindu.com/fr/2009/05/15/images/2009051550300201.jpg

திரு வி.சி.குகநாதன் அவர்களின் கட்டுரை.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/e1.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/e2-1.jpg
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/e4.jpg

vasudevan31355
10th August 2012, 07:39 AM
என்றென்றும் மறக்க இயலாத 'எங்கமாமா' காவியப் பாடல்கள் (மிகத் தெள்ளத் தெளிவாக)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/EngaMama-1.jpg

கொள்ளை அழகு கொஞ்சும் கோமகனின் கோமேதகப் பாடல்கள்.

crystal clear ஆக எங்க மாமா காவியத்தின் பாடல்களை மிக அழகாவும், நேர்த்தியாகவும் சமீபத்தில் தரவேற்றி நம்மை சந்தோஷத்தில் மிதக்க வைக்கும் ராஜ் வீடியோ விஷனுக்கு நமது திரியின் சார்பில் உளம் கனிந்த நன்றி!

"நான் தன்னந்தனிக் காட்டு ராஜா... என் தோட்டத்தில் எத்தனை ரோஜா"...


http://www.youtube.com/watch?feature=player_embedded&v=YzqHAAsA9h0

"சொர்க்கம் பக்கத்தில்"....(ஸ்டைல் கிங்கின் அற்புத அசத்தல் மூவ்மென்ட்களில்)


http://www.youtube.com/watch?feature=player_embedded&v=7KqCOT4Qito

"செல்லக்கிளிகளாம் பள்ளியிலே... செவ்வந்திப் பூக்களாம் தொட்டிலிலே"....


http://www.youtube.com/watch?feature=player_embedded&v=yglkhIIxBf8

"என்னங்க ...சொல்லுங்க" .... (கலக்கல் டூயட்)


http://www.youtube.com/watch?feature=player_embedded&v=AcbTAGVyVFg

"பாவை பாவைதான் ... ஆசை ஆசைதான்" (ஜெயலலிதாஅவர்களின் அற்புத நடத்தில்)


http://www.youtube.com/watch?feature=player_embedded&v=TdzBf6IvccU

"எல்லோரும் நலம் வாழ நான் பாடுவேன்... நான் வாழ யார் பாடுவார்?"...


http://www.youtube.com/watch?v=vo00ogHbydI&feature=player_embedded

Richardsof
10th August 2012, 09:21 AM
[http://i45.tinypic.com/vwtslc.png

http://i50.tinypic.com/2s9t8bt.png
http://i46.tinypic.com/35jlf29.png
http://i50.tinypic.com/2s9evlg.png
http://i46.tinypic.com/4lt5cm.png

Richardsof
10th August 2012, 11:21 AM
http://i49.tinypic.com/2vjom7o.png

mr_karthik
10th August 2012, 12:37 PM
அன்புள்ள வாசுதேவன் சார்,

'சந்திப்பு' திரைப்பட அனுபவத்தைப் பதித்ததைத் தொடர்ந்து, அத்திரைக்காவியம் வெளியான கடலூர் முத்தையா தியேட்டரின் இன்றைய நிலையையும் பல்வேறு கோணங்களில் படம் பிடித்து, அவற்றை சுடச்சுட இங்கே பதிவிட்டு தங்கள் முந்தைய பதிவுக்கு மேலும் சிறப்பு சேர்த்து விட்டீர்கள். அத்திரையரங்கின் இன்றைய கோலம் தங்களைப்போலவே எங்களையும் வருத்தமுறச்செய்தது. (பொதுவாக எங்காவது ஒரு தியேட்டர் மூடப்படுகிறது, இடிக்கப்படுகிறது என்றால் , அது நான் இதுவரை கண்டிராத தியேட்டராக இருந்தாலும், என் மனது வலிக்கும். ஒரு தியேட்டர் மூடப்படுகிறது என்றால், திரையுலக பொற்காலத்தின் ஒரு ஏடு கிழிக்கப்படுகிறதென்று அர்த்தம்). அந்த வகையில், சென்னையில் நாங்கள் படம் பார்த்து மகிழ்ந்த முக்கால்வாசி தியேட்டர்கள் இப்போது இல்லை.

சென்னையில் நடிகர்திலகத்தின் கோட்டைகளாக விளங்கிய சாந்தி, கிரௌன், புவனேஸ்வரி அரங்குகளில் இப்போது சாந்தி மட்டும்தானே இருக்கிறது. மற்ற இரண்டு கோட்டைகளும் இப்போது இல்லையே. அதிலும் சாந்தியை விட அதிகமாக நடிகர்திலகத்தின் படங்கள் வெளியான ( சாந்திக்கு முன் சித்ரா, கிரௌன், சயானி காம்பினேஷனிலும் கிரௌன் இருந்தது) வடசென்னை மிண்ட் ஜங்க்ஷன் 'கிரௌன்' தியேட்டர், எங்கள் கண்ணெதிரிலேயே இடித்து தரை மட்டமாக்கப்பட்டபோது எங்கள் மனம் என்ன பாடுபட்டிருக்கும். அந்தத்திரையரங்கினுள் அமர்ந்து எத்தனை படங்களைக் கண்டு களித்திருப்போம். எவ்வளவு வாழ்த்தொலிகள் முழங்கிய இடம் அது.

அதுபோல புரசைவாக்கம் 'புவனேஸ்வரி' அரங்கும். இடிக்கப்படுவதற்கு முன் அப்பகுதி வழியாகச்செல்ல நேர்ந்தபோது, தியேட்டர் மூடப்பட்டு பல காலம் ஆகியிருந்ததால் பாழடைந்து பிரதான நுழைவாயில் உள்பட பட இடங்களில் புதர்கள் மண்டிக்கிடந்தது. எவ்வளவு பொலிவுடன் அந்த ஏரியாவுக்கே அழகு சேர்த்த அரங்கம் அது. அதன் நிலையைப்பார்த்து கண்ணீர் விட்டபடியே சென்றேன். இப்போது அதுவும் இடிக்கப்பட்டுவிட்டதாக கேள்விப்பட்டேன். அதுபோல மற்ற கோட்டைகளான திருச்சி பிரபாத் அரங்கும், மதுரை நியூ சினிமா அரங்கும் கூட இப்போது இல்லை.

மன்னர்கள் மறையும்போது அவர்கள் ஆட்சி செய்த கோட்டைகளை விட்டுச்செல்வது வழக்கம். நமது மன்னரோ கோட்டைகளையும் தன்னோடு எடுத்துச்சென்று விட்டார்.

mr_karthik
10th August 2012, 01:16 PM
இடிக்கப்படுவதற்கு முன், பாழடைந்த நிலையில் சென்னை புவனேஸ்வரி தியேட்டர்....

KCSHEKAR
10th August 2012, 01:26 PM
திரு.வாசுதேவன் சார்,

கடலூர் முத்தையா தியேட்டர் நினைவுகளைப் பதிவு செய்து, எங்களின் பழைய நினைவுகளையும் கிளரிவிட்டீர்கள்.

திரு.கார்த்திக் அவர்கள் குறிப்பிட்டதுமாதிரி, புவனேஸ்வரி, மேகலா, பாரகன், பிளாசா போன்ற திரையரஙகங்கள் இருந்த பகுதிகளைக் கடந்து செல்லும்போது, நமது எண்ணங்கள் எங்கோ செல்கிறது.

தஙளுடைய எஙக மாமா பதிவு அருமை.

KCSHEKAR
10th August 2012, 01:30 PM
டியர் பம்மலார்,

செவாலியெ விருது வழங்கும் விழா பற்றிய பத்திரிகைப் பதிவு அருமை.

அதுபோல், நடிகர்திலகத்தின் அருமையான புகைப்படம், மற்றும் பாடல் இணைப்பு மூலம் சிறப்பான கிருஷ்ண் ஜெயந்தி வாழ்த்துக்க்ள் சொன்ன்து சிறப்பு

KCSHEKAR
10th August 2012, 01:34 PM
A MUST WATCH--GOOD SUBTITLING

(KARNAN subtitled by Rekha Haricharan)

Thanks to Mr.Y.G.M to sending me the link.

http://www.youtube.com/watch?v=oNMNQFyksoI

HARISH2619
10th August 2012, 01:36 PM
திரு பம்மல் சார்,
விலைமதிப்பில்லாத 3000 பதிவுகளை அதுவும் மிக குறுகிய காலத்தில் அளித்து எங்களையெல்லாம் மகிழ்ச்சிகடலில் ஆழ்த்தி கொண்டிருக்கும் தங்களுக்கு பலகோடி நன்றிகள்.

திரு வாசு சார்,
'சந்திப்பு' அனுபவம் அபாரம்.எவ்வளவு எளிமையான நடையில் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் நெஞ்சைவிட்டு அகலாத வண்ணம் ஆழமாக பதித்துவிட்டீர்கள்,நன்றி.

KCSHEKAR
10th August 2012, 01:37 PM
Dear Esvee Sir,

Thanks to you for posting Rare Stills of NT & function stills.

kalnayak
10th August 2012, 02:23 PM
டியர் கல்நாயக் சார்,

'சந்திப்பு' பதிவு தங்கள் நினைவுகளைக் கிளறி விட்டதனால் தங்களிடமிருந்து ஒரு ஜோரான பதிவு கிடைத்தது.. தாங்களும், தங்கள் தந்தையும் சந்திப்பை எங்கள் ஊரில் பார்த்த விதம் அருமை. எங்கள் ஊர்க்காரர்கள் கொஞ்சூண்டு ஏமாளிகள்தான். அதை எப்படியோ தெரிந்து கொண்டு நைசாக, சாமர்த்தியமாக டிக்கெட்எடுத்து விட்டீர்கள். அருமையாக எழுதுகிறீர்களே! ஏன் கன்டின்யூ செய்யக் கூடாது?

vasudevan sir,
நான் 1978-க்குப்பின் கிட்டத்தட்ட 15 ஆண்டு காலங்கள் கடலூரில் வசித்தவன். இப்போது வசிக்காவிட்டாலும் நானும் கடலூர்காரன் என்று நினைப்பதினால், கடலூர்காரர்கள் கொஞ்சூண்டு ஏமாளிகள் என்றால் நானும் அந்த கொஞ்சூண்டு ஏமாளிதான். அந்த சம்பவத்தில் கூட ஒரு தவறு திருத்திகொள்ளப்பட்டது என்று தான் நினைக்கிறேன். தவறாக சொல்வதற்கு ஒன்றுமில்லை

கடலூரின் எல்லாத்திரை அரங்குகளிலும் நடிகர் திலகத்தின் பல படங்களை பார்த்து மகிழ்ந்தவன் நான். OT-யில் கமர் திரை அரங்கிற்கு சென்றது மட்டும் மிகக்குறைவு. மற்றபடி பின்னால் வந்த பாதிரிக்குப்பம் திரை அரங்கில் (பெயர் நினைவில் இல்லை) கூட படங்களை பார்த்திருக்கிறேன். முன்பே சொன்னதுபோல் வீட்டில் திரைப்படங்கள் பார்ப்பதில் கட்டுப்பாடு இருந்ததினாலும், அப்போது சிறியவன் என்பதினாலும் எனது அனுபவங்கள் மிகக்குறைவுதான். எனது எழுத்தை பாராட்டி மீண்டும் எழுதத்தூண்டிய தங்களுக்கு எனது நன்றியை காணிக்கையாக்குகிறேன். வாய்ப்பு கிடைக்கும்போது நிச்சயம் எழுதுகிறேன். மற்றபடி உங்களோடு ஒப்பிட முடியாத அளவிற்கு இன்னும் நான் மிகச்சிறியவனே.

அன்புடன்.

mr_karthik
10th August 2012, 02:47 PM
அன்புள்ள பம்மலார் சார்,

தாங்கள் பதித்துள்ள 'செவாலியர்' விருது வழங்கும் விழா ஆவணங்கள் படு சூப்பர். அந்த தினத்தந்தி செய்தியில் சிதம்பரம் ஸ்டேடியத்தில் 'விழாவைக்காண ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் கூடியிருந்தனர்' என்று குறிப்பிட்டிருக்கிறார்கள் அல்லவா?. அவர்களில் நானும் ஒருவனாக இருந்து அந்த விழாவைக் கண்டுகளித்தேன் (அந்த வகையில் நான் 'லட்சத்தில் ஒருவன்').

இப்போது படிக்கும்போது அந்த மலரும் நினைவுகள் மனதில் வந்து அலை மோதுகின்றன. எவ்வளவு மகிழ்ச்சியான நாட்கள் அவை..!!. அந்த விழா குறித்து ஆனந்த விகடன் கவரேஜில் ஒரு விஷயம் குறிப்பிட்டிருந்தார்கள். ஜெயலலிதா முதல்முறையாக முதலமைச்சராக இருந்தபோது நடந்த விழா அது. அன்றைய காலகட்டத்தில் அவர் கலந்துகொள்ளும் எந்த விழாவானாலும் ஒரு பத்துபேராவது அவர் காலில் விழுந்து எழுவது வழக்கம். ஆனால் செவாலியர் விருது விழாவில் திரையுலகத்தினர் ஒருவர்கூட அவர் காலில் விழவில்லை என்று குறிப்பிட்டிருந்தார்கள்.

அதுமட்டுமல்லாது, விழாவில் அனைவரும் 'புரட்சித்தலைவி அவர்களே' என்று விளித்துக்கொண்டிருந்தபோது, நடிகர்திலகம் தனக்கு வழங்கப்பட்ட காஃபியை ஜெ.யிடம் நீட்டி "அம்மு, சாப்பிடுறியா?" என்று படு கேஷுவலாக கேட்க, நடிகர்திலகம் ஒருமையில் அழைத்ததை மிகவும் ரசித்த ஜெயலலிதா, புன்சிரிப்புடன் காஃபியை மறுத்து விட்டாராம். அதையும் விகடனில் குறிப்பிட்டிருந்தனர்.

mr_karthik
10th August 2012, 05:08 PM
அன்புள்ள வாசுதேவன் சார்,

'எங்க மாமா' படத்தைப்பற்றிய குகநாதனின் கட்டுரையைத் தந்த சூட்டோடு, அப்படத்தின் பாடல் காட்சிகளையும் தந்தமைக்கு மிக்க நன்றி. பாடல் காட்சிகளைஅனைத்தும் நீங்கள் குறிபிட்டதுபோல மிகத்தெளிவாக அமைந்துள்ளன. ஒவ்வொரு பாடலிலும் மெல்லிசை மன்னரின் அசுர உழைப்பு தெரிகிறது. குறிப்பாக 'பாவை பாவைதான்' பாடலில் இசையை அள்ளிக் கொட்டியிருக்கிறார். 'என்னங்க சொல்லுங்க' பாடலை இன்னும் சற்று சிறப்பாகப் படமாக்கியிருக்கலாம். குறிப்பாக இரண்டாவது சரணத்தில் இருவருக்கும் உடையலங்காரம் ரொம்ப சுமார்தான். அதுமட்டுமல்ல அந்த இரண்டாவது சரணத்தில், கலைச்செல்வியின் உடையும் சிகையலங்காரமும் திடீரென்று அவருக்கு வயதாகி விட்டது போலக்காட்டும்.

'சொர்க்கம் பக்கத்தில்' பாடலில் தலைவரின் உடல்வாகும், ட்ரெஸ்ஸும், ஸ்டைலும், நடன அசைவுகளும் சூப்பர். நடனத்தில் தேரந்த வெண்ணிற ஆடை நிர்மலாவை மிஞ்சுவார் தலைவர். இப்பாடலில் அவரது ஒல்லியான உடல்வாகைப்பற்றி நமது சாரதா அடிக்கடி சொல்லி மகிழ்வார். 'செல்லக்கிளிகளாம் பள்ளியிலே', 'நான் தன்னந்தனிக்காட்டு ராஜா', 'எல்லோரும் நலம் வாழ' பாடல்களைப்பற்றி சொல்ல்வே வேண்டாம். எல்லா டி.வி.சேனல்களிலும் வாரம் ஒருமுறையாவது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது.

இப்படத்தை முதலில் எம்.ஜி.ஆரை நடிக்க வைத்து தயாரிக்கலாம் என்று குகநாதன் சொன்ன செய்தியைப்படித்ததும் ஒரு விஷயம் நினைவுக்கு வந்தது. ஜெயந்தி பிலிம்ஸ் அதிபர் கனகசபைக்கும், ஜேயார் மூவீஸ் அதிபர்கள் சங்கரன் - ஆறுமுகத்துக்கும் ஏற்கெனவே மதுரை ஏரியா திரைப்பட விநியோகத்தில் சற்று மனவருத்தம். இந்நிலையில் இந்தியில் வந்த 'பிரம்மச்சாரி' படத்தை தமிழில் எம்.ஜி.ஆரை வைத்து எடுக்க கனகசபை முயற்சித்தபோது, அதன் உரிமையை ஜேயார் மூவீஸார் வாங்கி விட்ட்டதையும் அதை நடிகர்திலகத்தை வைத்து 'எங்க மாமா' என்ற பெயரில் தமிழில் தயாரிக்கத்துவங்கியதையும் அறிந்து மனப்புழுக்கமடைந்தவர், இந்தியில் வந்த 'ஜிக்ரி தோஸ்த்' படத்தின் உரிமையை வாங்கி வந்து எம்.ஜி.ஆரை இரட்டை வேடங்களில் நடிக்கவைத்து 'மாட்டுக்கார வேலன்' என்ற பெயரில் தயாரித்தார்.

ஏற்கெனவே 'புதிய பூமி'யில் ஜேயார் மூவீஸுடன் ஏற்பட்ட மனக்கசப்பில் இருந்த எம்.ஜி.ஆர். மாட்டுக்கார வேலனுக்கு அதிக கால்ஷீட்டுகள் கொடுத்து மளமளவென்று படத்தை முடித்தார். நடிகர்திலகத்தின் படம் சீக்கிரம் முடிந்து விடுமென்றறிந்து அதற்குப்போட்டியாக விட வேண்டுமென்று படப்பிடிப்பை முடுக்கி விட, அதிசயமாக 'எங்க மாமா'வுக்குப்பிறகு துவங்கிய 'மாட்டுக்கார வேலன்' அதற்கு முன்னமேயே தயாராகி 1969 இறுதியிலேயே தணிக்கையும் ஆகி விட்டது. ஆனால் டிசம்பரில் வெளியிடவில்லை. 'எங்க மாமா' பொங்கலுக்கு ரிலீஸாகிறது என்பதால் அதே நாளில் வெளியிட காத்திருந்தனர்.

இந்த தாமதத்தை எம்.ஜி.ஆரும் கண்டுகொள்ளவில்லை. அதற்கு பல காரணங்கள் இருந்தன. அப்போது ஓடிக்கொண்டிருந்த 'நம் நாடு' படத்துக்கு போதிய இடைவெளி கொடுத்தது போலவும் ஆனது. ஜேயார் மூவீஸ் சங்கரன் ஆறுமுகம் சகோதரகளுக்கு இடையூறு செய்தது போலவும் ஆனது. தன்னுடைய தொழில் போட்டியாளரான சிவாஜியை எதிர்கொண்டது போலவும் ஆனது. (நடிகர்திலகத்தும், மக்கள் திலகத்துக்கும் தீபாவளி வெளியீடுகளான சிவந்த மண், நம்நாடு படங்களுக்குப்பின் பொங்கல் வரையில் வேறு படங்கள் வரவில்லை).

1970 பொங்கலன்று 'எங்க மாமா' மற்றும் 'மாட்டுக்கார வேலன்' வெளியானது. மாட்டுக்காரவேலன் அமோக வெற்றி பெற்று வெள்ளிவிழாப்படமாக அமைய, 'எங்க மாமா' பத்து வாரங்களைத்தொட்டு சுமாரான வெற்றியையே பெற்றது. ஒரு வெற்றிப்படத்துக்குரிய எல்லா அம்சங்களும் இருந்தும் போதிய விளம்பரமின்மை போன்ற காரணங்களால் எங்க மாமா சூப்பர் வெற்றியைப்பெற முடியவில்லை. அதே சமயம் மா.வேலன் எம்.ஜி.ஆர்.ரசிகர்களுக்கு மட்டுமல்லாது எல்லோருக்கும் பிடிக்கக்கூடிய படமாக அமைந்து போனது. அத்ற்கு முந்தைய படமான நம்நாடு படம் முழுக்க அரசியல் நெடி வீசியதற்கு நேர் மாறாக மாட்டுக்கார வேலனில் ஒரு அரசியல் வசனம் கூட இல்லாமல் ஜனரஞ்சகமான படமாக அமைந்து போனது.

ஜேயார் மூவீஸ் சங்கரன் ஆறுமுகத்தை தோற்கடித்ததில் ஜெயந்தி பிலிம்ஸ் கனசபைக்கு திருப்தி. நடிகர்திலகத்தின் படத்தை வெற்றி கொண்டதில் எம்.ஜி.ஆர். தரப்புக்கு மகிழ்ச்சி. அடுத்து என்னவாயிற்று?.

எங்கமாமா படத்தையடுத்து 'ஞான ஒளி' படத்தை ஜேயார் மூவீஸ் தயாரிக்கத் துவங்க, மாட்டுக்கார வேலனையடுத்து 'ராமன் தேடிய சீதை' படத்தை ஜெயந்தி பிலிம்ஸ் கனக சபை தயாரிக்கத் தொடங்கினார். ஞான ஒளி கருப்பு வெள்ளைப்படம். வெளிப்புறக்காட்சிகள் கொடைக்கானலில் படமாக்கப்பட்டன. ஆனால் ராமன் தேடிய சீதை கலரில் எடுக்கப்பட்டது மட்டுமல்லாது வெளிப்புறக்காட்சிகள் காஷ்மீரில் எடுக்கப்பட்டன. இரண்டும் ஒரே சீராக தயாரிப்பு நடந்து வர, கனகசபைக்கு மீண்டும் ஆசை. ஜேயார் மூவீஸ் படத்தை இம்முறையும் எதிர்கொண்டு தோற்கடிக்க வேண்டுமென்று.

நடிகர்திலகம் தொட்டதெல்லாம் பொன்னாகிய 1972 மார்ச் 11-ல் ஞான ஒளி வெளியானது. ஆனால் அதே நாளில் தேவர் தனது 'நல்ல நேரம்' படத்தை வெளியிட எம்.ஜி.ஆரிடம் ஒப்புதல் வாங்கிவிட்டதால், அதே நாளில் கனகசபையால் ரா. சீதையை வெளியிட முடியவில்லை. (ஒரே நாளில் இரண்டு படங்களை வெளியிட நடிகர்திலகமா என்ன?). ஞான ஒளி, நல்ல நேரம் இரண்டும் வெற்றி. ஒருமாதம் தாமதித்து ஏப்ரல் 13 அன்று ராமன் தேடிய சீதையை வெளியிட்டார் கனகசபை. தன் படத்தை வெளியிட்டதும் அப்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்த ஞான ஒளி படுத்து விடும் என்று கணக்குப்போட்டார். ஆனால் அது தப்புக்கணக்காகிப்போனது.

இம்முறை கனகசபைதான் கவிழ்ந்து போனார். ஞான ஒளியை வீழ்த்த முடியவில்லை. ராமன் தேடிய சீதைதான் வீழ்ந்தது. பின்னாலேயே மே 6 அன்று இன்னொரு கருப்பு வெள்ளைப்படமான 'பட்டிக்காடா பட்டணமா' வந்து நெருக்க, கனகசபையின் பேராசை நிராசையானது. அதோடு எம்.ஜி.ஆருக்கு முழுக்கு போட்டுவிட்டு, சாமான்யர்களை வைத்து 'அன்புச்சகோதரர்கள்' படத்தை எடுக்கப்போய்விட்டது ஜெயந்தி பிலிம்ஸ் நிறுவனம்.

pammalar
10th August 2012, 06:38 PM
டியர் வாசுதேவன் சார்,

vcgன் கைவண்ணத்தில், 'சினிமா எக்ஸ்பிரஸ்' 16-30 நவம்பர் 2011 இதழில் வெளியான நமது vcgன் "எங்க மாமா" காவியக்கட்டுரை மிக அருமை. 'தயாரிப்பாளர்களுக்கு நல்ல லாபத்தைக் கொடுத்த திரைக்காவியம்' என அவர் கூறியிருப்பது மனதுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது.

தெள்ளத் தெளிவான "எங்க மாமா" பாடல் வீடியோக்கள் பிரமாதம்..!

அன்புடன்,
பம்மலார்.

kalnayak
10th August 2012, 07:43 PM
டியர் வாசுதேவன் சார்,
முத்தையா திரை அரங்க நிழற்பட காட்சிகள், சற்றே சோகத்தை ஏற்படுத்தி நினைவை பின்தள்ளுகின்றன. ஊரின் பிரதான இடத்தில் அமைந்தும் எடுபடாத அரங்கம், வரலாற்று சோகமாய் இன்னும் அங்கே நின்று கொண்டு இருக்கிறது. இன்றைய காலக்கட்டத்தில் நல்ல அரங்குகளே தாக்குப்பிடிக்க முடியாத போது, முத்தையாவெல்லாம் இப்படி நிற்பதுதான் எனக்கு மிகுந்த ஆச்சர்யத்தை அளிக்கிறது. அதை ஏன் மாற்று உபயோகப் படுத்தவில்லை? உங்கள் நிழற்படத்தில் பார்க்கும்போது அதன் சிறிய பகுதிதான் இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக பயனாவதாக தெரிகிறது.

8௦களில் தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகையின் போது இங்கே புது திரைப்படங்கள் வெளியிடப்பட்டன. இங்கே ஆரம்ப காலத்து ரஜினி (அன்னை ஓர் ஆலயம், ரங்கா), கமல் (தாயில்லாமல் நானில்லை) படங்களும் மற்றவர்களின் புது திரைப்படங்களும் திரையிடப்பட்டன. மற்ற படி நீங்கள் சொன்னது போல் பழைய படங்கள் நிறையவும், மலையாளப் படங்களும், தெலுங்கு டப்பிங் படங்களும், அரிதாக சில ஆங்கிலப் படங்களும் திரையிடப்பட்டன.

நடிகர் திலகத்தின் பிரபலமான பல படங்களை இங்கே பார்த்திருக்கிறேன். நினைவில் நின்ற சில: உத்தம புத்திரன், பாகப்பிரிவினை, படிக்காத மேதை, பாலும் பழமும், கர்ணன்... என்ன சொல்வது? அடுத்த முறை கடலூர் வரும்போது அந்த உயர்ந்த சுவர்களை பார்த்து நினைவுகளை பின்தள்ளி பள்ளி, கல்லூரி வாழ்க்கையை அசை போட்டு வரவேண்டியதுதான்.

அன்புடன்.

pammalar
10th August 2012, 07:45 PM
திரைக்காவிய முதல் வெளியீட்டு விளம்பரங்கள் :14

நடிகர் திலகத்தின் 235வது காவியம்

சந்திப்பு [வெளியான தேதி : 16.6.1983]

வெள்ளிவிழாக் கொண்டாடிய மெகாஹிட் காவியம்

பொக்கிஷாதி பொக்கிஷம்

'35 நாட்களில் 75 லட்சம் ரூபாய் வசூல்' விளம்பரம் : தினத்தந்தி : 29.7.1983
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC6344-1.jpg
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC6345-1.jpg

தொடரும்...

பக்தியுடன்,
பம்மலார்.

kalnayak
10th August 2012, 07:53 PM
டியர் வாசுதேவன் சார்,
நீங்கள் வழங்கிய திரு. V.c. குகநாதனின் எங்க மாமா கட்டுரை அற்புதம். மற்றும் தெளிவான பாடல் காட்சிகளின் 'லிங்க்' களும் சிறப்பு. நன்றிகள் பல.

அன்புடன்.

pammalar
10th August 2012, 08:04 PM
டியர் esvee சார்,

ஏவிஎம் பொன்விழாவில் நடிகர் திலகம் : அனைத்து நிழற்படங்களும் கண்கொள்ளாக் காட்சிகள்..!

இடுகை செய்தமைக்கு இனிப்பான நன்றிகள்..!

அன்புடன்,
பம்மலார்.

Richardsof
10th August 2012, 09:20 PM
http://i49.tinypic.com/nxufpu.png

RAGHAVENDRA
10th August 2012, 10:42 PM
டியர் வினோத் சார்,
இது வரையில் இந்த மய்யத்தில் எனக்கு நினைவு தெரிந்து நான் பார்த்திராத மிக மிக மிக அபூர்வமான பொக்கிஷமான ஸ்டில்லைத் தந்து அசத்தியுள்ளீர்கள்.. உண்மையிலேயே இந்த நால்வர் இணைந்து வெளிவந்திருக்கக் கூடிய மிக அபூர்வமான ஸ்டில் இது... தங்களுக்கு கோடான கோடி பாராட்டுக்களும் நன்றிகளும்...

அன்புடன்

vasudevan31355
10th August 2012, 11:10 PM
டியர் ராகுல்ராம்,

'சந்திப்பு' பதிவிற்கான தங்கள் அன்புப் பாராட்டிற்கு என் மனமார்ந்த நன்றி!

vasudevan31355
10th August 2012, 11:11 PM
டியர் ராதாகிருஷ்ணன் சார்,

தங்கள் அன்பான பாராட்டிற்கு என் மனம் குளிர்ந்த நன்றிகள்.

vasudevan31355
10th August 2012, 11:18 PM
டியர் சந்திரசேகரன் சார்,

பதிவுகளுக்கான தங்கள் பாராட்டுதல்களுக்கு உளம் கனிந்த நன்றிகள். ஆங்கில சப் டைட்டிலோடு "உள்ளத்தில் நல்ல உள்ளம்" கண்டு மகிழச் செய்ததற்கு நன்றிகள். ஒய்.ஜி.எம் சாருக்கும் நன்றி!

vasudevan31355
10th August 2012, 11:29 PM
டியர் ராகவேந்திரன் சார்,

தங்களின் அன்பு பாராட்டு மழையில் நனையச் செய்து விட்டீர்கள். அதற்காக என் மனப்பூர்வமான நன்றிகளை தங்களுக்கு சமர்ப்பிக்கிறேன். நல்ல பதிவுகள் எங்கெல்லாம் உண்டோ அங்கெல்லாம் தங்கள் அன்பும், ஆதரவும் நிச்சயம் உண்டு என்பதை சொல்லவும் வேண்டுமோ! தாங்கள் கூறியுள்ளது போல் என்ன தான் வார்த்தைகளும் வாக்கியங்களும் அமைத்து ஒரு விஷயத்தை விளக்கினாலும் ஒரு படம் அவ்வளவு விஷயங்களையும் எவ்வளவு அற்புதமாக எடுத்துரைத்து விடுகிறது! அன்றைய நாட்கள் திரும்ப வருமா என்று நீங்கள் ஏக்கத்துடன் கேட்டிருப்பது அந்தக் காலங்களில் நாம் எவ்வளவு சந்தோஷமாக சுற்றித் திரிந்தோம் என்பதை உள்ளடக்கியுள்ளது. சந்தோஷங்களை நமக்கு அள்ளிக்கொட்டிய அந்த அருமை நாயகனுக்குத்தான் அவ்வளவு பெருமைகளும் போய்ச் சேரும்.

vasudevan31355
10th August 2012, 11:44 PM
டியர் வினோத் சார்,

'கம்பீரத் திலகம்' கலந்து கொண்ட ஏ.வி.எம் நிறுவன் விழாவின் ஸ்டில்கள் ஒவ்வொன்றும் கண் கொள்ளாக் காட்சிகள். நடிக தெய்வத்திற்குத்தான் அந்த தூய வெள்ளை கதாரடை எவ்வளவு பாந்தமாகப் பொருந்துகிறது அவர் வெள்ளை மனது போல! அற்புதமான ஸ்டில்களுக்கு ஆழ்ந்த நன்றிகள். அந்த விழாவின் வீடியோக் காட்சிகள் தங்களிடம் உள்ளனவா?

தெய்வப் பிறவியின் புகழ் பெற்ற ஸ்டில்லை பதிப்பித்தமைக்கு மிக்க நன்றி! நடிகர் திலகம் குடையை பின்னால் பிடித்துக் கொண்டு ssr ஐ
விடும் அந்த 'லுக்' குக்காகவே லட்சம் முறை இந்த ஸ்டில்லை கண்டு அனுபவித்து மகிழலாம். அதே போல இருதிலகங்களும் தத்தம் அன்பு மனைவியரோடு நிற்கும் புகைப்படம் இதுவரை காணாதது. அதற்கு என்னுடைய ஸ்பெஷல் நன்றிகள்.

vasudevan31355
11th August 2012, 12:07 AM
அன்பு கார்த்திக் சார்,

நன்றிகள் பல. வாவ்!. எங்க மாமா பற்றிய விளக்கங்கள் டாப்பிலும் டாப். சும்மா டாக்ஸிக்காரனின் மீட்டர் போல ஸ்பீடோ ஸ்பீட். இரு தயாரிப்பாளர்களுக்கும் நடந்த பனிப்போரை பக்காவாக விளக்கி விட்டீர்கள். எத்தனை உள்குத்துக்கள் நடந்திருக்கின்றன? நீயா நானா போட்டிகள், விட்டேனா பார் என்ற சவால்கள், போட்டியில் சற்று பின்வாங்கியவர் மறுபடியும் மண்ணைக் கவ்விவிடுவார் என்ற தவறான கணிப்பு, தராசுத் தட்டு ஒருபக்கமாகவே சாயாது மறுபக்கமும் சாயும் என்று தெரிந்து புரிந்து கொள்ளாத அறியாமை, சூது வாது சூழ்ச்சிகள், இடையில் எனது உயிர்ப்படமான 'ஞானஒளி' பண்ணிய ரகளை, 'பட்டிக்காடா பட்டணமா'வின் பட்டி தொட்டி படு வெற்றி என அனைத்தையும் ஒரு சேரத் தொட்டு விட்டீர்கள். அற்புதமாக வெளிவராத பல உண்மைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளீர்கள். இதற்குத்தான் எங்கள் கார்த்திக் சார் வேணுமென்பது.

சபாஷ் சார்! நிறைய விஷயங்களை தங்கள் உன்னதப் பதிவு மூலம் தெரிந்து கொண்டோம். இப்போது என்னையே நான் பாராட்டிக் கொள்கிறேன். எங்க மாமா பதிவை தற்செயலாக நான் போடப் போனதினால் தானே இப்படி ஒரு அற்புத விஷயங்களைக் கொண்ட கட்டுரையை தங்களிடமிருந்து இன்று பெற முடிந்தது? (இன்றில்லா விட்டாலும் என்றாவது ஒருநாள் பதியத்தான் போகிறீர்கள்) கவிழ்ந்து போன கனகசபை அன்புச் சகோதரர்களை வைத்து அருமையாக மீண்டும் நல்ல காசு பார்த்தார்.

vasudevan31355
11th August 2012, 12:11 AM
ஹரீஷ் சார்,

ஹேப்பி...ஹேப்பி...ஹேப்பி.

நன்றி...நன்றி...நன்றி.

எப்போது நமது அடுத்த 'சந்திப்பு'?

pammalar
11th August 2012, 12:31 AM
டியர் சந்திரசேகரன் சார்,

பாராட்டுக்கு நன்றி..!

நல்ல உள்ளம் படைத்தவரான தங்களிடமிருந்து 'உள்ளத்தில் நல்ல உள்ளம்' வீடியோ பதிவு வந்தது கூடுதல் சிறப்பு..!

ஆங்கில சப்-டைட்டில்களை அம்சமாக வழங்கியுள்ள திருமதி. ரேகா ஹரிசரண் அவர்களுக்கு நமது பாராட்டுக்கள்..!

அன்புடன்,
பம்மலார்.

pammalar
11th August 2012, 12:33 AM
திரு பம்மல் சார்,
விலைமதிப்பில்லாத 3000 பதிவுகளை அதுவும் மிக குறுகிய காலத்தில் அளித்து எங்களையெல்லாம் மகிழ்ச்சிகடலில் ஆழ்த்தி கொண்டிருக்கும் தங்களுக்கு பலகோடி நன்றிகள்.

திரு வாசு சார்,
'சந்திப்பு' அனுபவம் அபாரம்.எவ்வளவு எளிமையான நடையில் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் நெஞ்சைவிட்டு அகலாத வண்ணம் ஆழமாக பதித்துவிட்டீர்கள்,நன்றி.

டியர் செந்தில் சார்,

தங்களின் இதயபூர்வமான பாராட்டுக்கும், அன்பான வாழ்த்துக்களுக்கும் எனது எல்லையில்லா நன்றிகள்..!

அன்புடன்,
பம்மலார்.

vasudevan31355
11th August 2012, 01:20 AM
டியர் கல்நாயக் சார்,

கடலூர் OT- யில் இருந்த கமர் திரையரங்கை அற்புதமாக ஞாபகம் வைத்துள்ளீர்கள். தங்கள் நினைவாற்றலுக்கு ஒரு அன்பு ஷொட்டு. நான் பேபி கிளாஸ் (அப்போதைய L.K.G) முதல் 10th std வரை படித்தது (St.David High School) கடலூர் ஓல்ட் டவுன் என்று கூறப்படும் OT- யில் தான். சொந்த ஊராகையால் பல படங்கள் பார்க்கும் வாய்ப்பு. கமர் தியேட்டர் பிரபல .....கடத்தல் புகழ் ஹாஜி மஸ்தான் அவர்களின் தியேட்டர். கேள்விப்பட்டிருப்பீர்கள் என நினைக்கிறேன். 'பேசும் தெய்வம்' இங்கு ரிலீஸ் ஆன தலைவரின் முதல் படம்.

கடலூர் துறைமுகத்திற்கே இந்த ஒரு தியேட்டர் தான். மீனவர்கள், சிமென்ட் சாக்கு தைப்பவர்கள், தீக்குச்சி அடுக்கும் தொழிலாளிகள், இறால் தோல் உரிப்புப் பணியாளர்கள், மீன் வலை பின்னுபவர்கள் என்று பல்வேறு சிறு தொழில்கள் நடத்தும் உண்மை உழைப்பாளிகளின் உறைவிடம் இந்த ஊர். பகல் காட்சியை விட இரவுக் காட்சிக்கு நாள் முழுதும் உழைத்துக் களைத்த தொழிலாளிகள் கவலைகள் மறக்க கமருக்கு படையெடுப்பது வழக்கம். சும்மா ஜெகஜோதியாய் இருக்கும் சார்!

பாட்டி வீட்டில் தங்கி படித்தேனா...அவர்களும் தங்கள் வீட்டாரைப் போல கண்டிப்பானவர்களா.. அதனால் இரவுக் காட்சிக்கு தலைவர் படம் பார்க்க போகும் போது என்னுடைய ரூமில் நான் படுக்கும் பெஞ்ச்சில் பாயை நன்றாக ஆள் போல சுருட்டி வைத்து விட்டு, தலைக்கு பதிலாக தண்ணீர் சொம்பை பாயின் தலைப்பகுதியில் வைத்து விட்டு, அதன் மேல் போர்வையை முழுதுமாகப் போட்டு மூடிவிட்டு, அப்படியே நான் படுத்திருப்பது போன்ற செட்டப்பை பக்காவாகப் பண்ணிவிட்டு, தோட்டத்துப் பக்கம் வழியாக காம்பவுண்ட் சுவர் ஏறிக் குதித்து படம் பார்க்க கம்பி நீட்டி விடுவேன். படம் முடிந்து வீட்டிற்கு வந்து பூனை போல் சுவர் ஏறிக் குதித்து ஒன்றும் தெரியாத பிள்ளை போல வந்து படுத்துக் கொள்வேன். அதெல்லாம் ஒரு காலம் சார். அந்த திரில்லே தனி... கமரில் தலைவரின் கிரஹப்பிரவேசம், என்னை ஆட்டிப்படைத்த படமான கருடா சௌக்கியமா, வா கண்ணா வா, துணை போன்ற காவியங்கள் ரிலீஸ் ஆகியுள்ளன.

கமர் தியேட்டரைப் பற்றி எழுதிவிட்டு என்னை கலங்க வைத்து விட்டீர்களே! இருந்தாலும் ஆனந்தக் கலங்கல்கள் தான். ஞாபகப்படுத்தி மகிழ வைத்ததற்கு நன்றியோ நன்றிகள். (ப்ச்...அந்த கமர் தியேட்டர் முற்றிலுமாக கொஞ்ச நாட்களுக்கு முன்புதான் தரையோடு தரையாக இடிக்கப் பட்டு செங்கல் குவியல்களாகக் கிடக்கிறது சார்)

நீங்கள் குறிப்பிட்டிருந்த 'பாதிரிக்குப்பம்' ஊரில் முன்பு ஒரு 'டூரிங்' டாக்கீஸ் இருந்தது. திருப்பாதிரிப்புலியூரிலிருந்து சரியாக மூன்று கிலோமீட்டர்கள் இருக்கும். அந்த 'டூரிங்' டாக்கீஸ் பெயர் 'ஜெகதாம்பிகா'. பின்னாட்களில் அது எடுக்கப்பட்டு அந்த இடத்தில் பெரிய தியேட்டர் கட்டப்பட்டு அதற்கு 'முருகாலயா' என்று பெயர் வைக்கப்பட்டது. அந்த ஏரியாவிற்கு அது ஒரே தியேட்டர் என்பதால் நன்றாகவே தியேட்டர் ஓடிக்கொண்டிருந்தது. அதுவும் அது நம்ம தலைவரின் கோட்டை. நம் படங்கள் அங்கு பட்டையைக் கிளப்பும். அங்கு படம் பார்த்த அனுபவங்களை எழுதினால்... நேரம் வரும் போது எழுதலாம்...பின்னாட்களில் ஏற்பட்ட புரட்சி மாறுதல்களால்(!)அந்த தியேட்டரும் கல்யாண மண்டபமாகிப் போய் பல ஆண்மகன்களின் சுதந்திரத்தைப் பறித்துக் கொண்டிருக்கிறது தற்சமயம் வரையிலும்.

முத்தையா பங்குதாரார்களின் பிரச்னைகளால் அப்படியே இடி விழுந்தாற்போல நிற்கிறது. அதனால்தான் மாற்று ஏற்பாடுகள் எதுவும் நடக்க வில்லை. இப்போது பிரச்சனை தீந்து விட்டதகாக் கூறுகிறார்கள். இனி மாற்று ஏதாவது ஏற்படலாம்.

என்ன ஒரு இரண்டு நாட்களாய் நம்ம திரியில் ஒரே தியேட்டர்கள் மயமாகவே இருக்கிறதே! சரி ! கடலூரில் எந்த ஏரியாவில் இருந்தீர்கள் என்று கூற முடியுமா?

தவறே இல்லாமல் அழகாகத் தமிழ் வரைகிறீர்களே! கடலூர்காரரா!.. கொக்கா!... ஒப்பீடெல்லாம் எதற்கு சார்... நாமெல்லோருமே ஒன்றுதான். வாய்ப்பை உருவாக்கிக் கொண்டு எழுதுங்கள். தங்கள் பதிவுகளை வேறொரு திரியில் ரசித்துப் படித்து தங்கள் காமெடி சென்ஸை நினைத்து நினைத்து சிரித்து மகிழ்ந்தவன் நான். அந்த 'அண்ணன்' ஒன்று போதாதா. இப்போது புரியுமே...

கடலூர் வந்து கல்லூரி வாழ்க்கையின் நினைவுகளை அசை போடும் அதே வேளையில் அப்படியே எங்கள் இல்லத்திற்கும் வந்து எங்களைப் பெருமைப் படுத்துங்கள்.

சூப்பர் சார். தற்சமயம் விடைபெறுகிறேன். தங்களது பதிவுகளுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்களும், நன்றிகளும்.

vasudevan31355
11th August 2012, 01:42 AM
தி கிரேட் பம்மலார் சார்,

நடிகர் திலகத்துக்கு 'செவாலியே' விருது வழங்கும் விழா 'தினத்தந்தி' ஆவணத்தைப் பதிவிட்டு அந்த மகானுக்கு ஆவ(ண)ன மரியாதை செய்து எங்களையும் கோலாகலப் படுத்தியுள்ளீர்கள். மாசறு பொன்னிற்கு, பாசத்தின் ஊற்றுக்கு உலக மரியாதை கிடைக்கச் செய்த அலங்கார, அற்புத, அதிசய, ஆர்ப்பாட்ட, ஆரவார, ஆணித்தரமான விழா நிகழ்வுகளை அற்புதமாகப் பதித்து அத்தோடு நில்லாது வரிசையாக ஆவணங்களின் 'செவாலியே' தொகுப்பு வைரப் பதிவுகள் அணிவகுத்து வரும் என்ற பேரின்ப அதிர்ச்சியை வேறு ஊட்டியுள்ளீர்கள். கைம்மாறு கருதாமல் பணி புரியும் பம்மலார் சார்! (அன்பு) மாற்று யாரும் வையகத்தில் இல்லை தங்களுக்கு.

நன்றி சொல்ல வார்த்தையின்றித் தவிக்கும்

pammalar
11th August 2012, 02:38 AM
டியர் கல்நாயக் சார்,

தங்களின் இடுகைகள் தகவலார்ந்த பதிவுகளாக ஒளிர்கின்றன. காமெடியாக பதிப்பதில் கலக்கும் தாங்கள், சீரியஸான பதிவுகளையும் சிறப்பாகத் தருகிறீர்கள். வாழ்த்துக்கள்..! தங்களுக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் இது போன்று இனிய பதிவுகளை இங்கே இடலாமே..!

அன்பு கலந்த எதிர்பார்ப்புடன்,
பம்மலார்.

pammalar
11th August 2012, 02:43 AM
டியர் mr_karthik,

'செவாலியே விருது விழா' ஆவணப்பதிவுக்கு தாங்கள் வழங்கிய அன்பான பாராட்டுக்கு எனது கனிவான நன்றி..! இவ்விழா குறித்து 'விகட'னில் வந்த (அகடவிகட) விவரங்களைத் தந்து அசத்திவிட்டீர்கள்..!

தாங்கள் பதித்த, இடிப்பதற்கு முன் உள்ள சென்னை 'புவனேஸ்வரி' அரங்கின் தோற்றம், இதயத்தை இன்று மீண்டும் கனக்கச் செய்தது. தாங்கள் எழுதியது போல் நமது மன்னர் தமது கோட்டைகளையும் தம்மோடு எடுத்துச் சென்றுவிட்டாலும், இன்று மீண்டும் புதுப்பொலிவோடு பற்பல புதுக்'கோட்டை'களில் வெற்றிக்கொடி நாட்டி வருகிறார். இதன்மூலம் நமக்கெல்லாம் மீண்டும் மிகுந்த மகிழ்ச்சியையும், பெருமையையும் தந்து கொண்டிருக்கிறார்.

தங்களை இனி 'தமிழ்த் திரையுலக வரலாற்று விற்பன்னர்' என்றே விளிக்கலாம். 1969 முதல் 1972 வரையிலான காலகட்ட சுவாரஸ்யங்களை எத்தனை அழகாகத் தந்துள்ளீர்கள். கடலை கமண்டலத்துக்குள் கொண்டுவந்த 'கார்த்திகேயன்' நீங்கள்..! அத்தனை விஷயங்களையும் ஒரு அருமையான பதிவில் அடக்கிவிட்டீர்களே, பாராட்டுக்கள்..!

[எந்தவொரு பதிவிலும் தங்களின் ஹியூமருக்கும், பஞ்ச்சுக்கும் பஞ்சமில்லை].

அன்புடன்,
பம்மலார்.

pammalar
11th August 2012, 02:46 AM
தி கிரேட் பம்மலார் சார்,

நடிகர் திலகத்துக்கு 'செவாலியே' விருது வழங்கும் விழா 'தினத்தந்தி' ஆவணத்தைப் பதிவிட்டு அந்த மகானுக்கு ஆவ(ண)ன மரியாதை செய்து எங்களையும் கோலாகலப் படுத்தியுள்ளீர்கள். மாசறு பொன்னிற்கு, பாசத்தின் ஊற்றுக்கு உலக மரியாதை கிடைக்கச் செய்த அலங்கார, அற்புத, அதிசய, ஆர்ப்பாட்ட, ஆரவார, ஆணித்தரமான விழா நிகழ்வுகளை அற்புதமாகப் பதித்து அத்தோடு நில்லாது வரிசையாக ஆவணங்களின் 'செவாலியே' தொகுப்பு வைரப் பதிவுகள் அணிவகுத்து வரும் என்ற பேரின்ப அதிர்ச்சியை வேறு ஊட்டியுள்ளீர்கள். கைம்மாறு கருதாமல் பணி புரியும் பம்மலார் சார்! (அன்பு) மாற்று யாரும் வையகத்தில் இல்லை தங்களுக்கு.

நன்றி சொல்ல வார்த்தையின்றித் தவிக்கும்

இத்தகைய இமாலய பாராட்டுதல்களைப் பெற அடியேன் என்ன புண்ணியம் செய்தேனோ...

ஆருயிர்ச் சகோதரரே, நன்றி..நன்றி..நன்றி..!

pammalar
11th August 2012, 03:30 AM
திரைக்காவிய மறு வெளியீட்டு விளம்பரங்கள் : 6

நடிகர் திலகத்தின் முழுமுதற்காவியம்

பராசக்தி [முதல் வெளியீட்டுத் தேதி : 17.10.1952]

முதல் வெளியீட்டில் வெள்ளிவிழாவையும் தாண்டி அயல்நாடான இலங்கையில் 42 வாரங்கள் [294 நாட்கள்] ஓடிய மகாமெகாஹிட் காவியம்

பொக்கிஷாதி பொக்கிஷம்

மறு வெளியீட்டு விளம்பரம் : தினகரன்(திருச்சி) : 14.8.1997
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC6281-1.jpg

முதல் வெளியீட்டில்,
திருச்சி : வெலிங்டன் : 245 நாட்கள்,
குடந்தை : டைமண்ட் : 50 நாட்கள்
[குடந்தையில் சற்றேறக்குறைய 45 வருட இடைவெளியில் மீண்டும் அதே திரையரங்கில்...!]

பக்தியுடன்,
பம்மலார்.

vasudevan31355
11th August 2012, 06:54 AM
அன்பு பம்மலார் சார்,

'சந்திப்பு' திரைக்காவியத்தின் '35 நாட்களில் 75 லட்சம் ரூபாய் வசூல்' 'தினத்தந்தி' விளம்பர கட்டிங் எங்களுக்கு தாங்கள் அளித்த பொற்கிழி. விலைமதிப்பில்லாதது. பொற்கிழி வழங்கிய பொன்னான கைகளுக்கு நன்றிகள். இந்த நேரத்தில் 'திரிசூலம்' மெகா ஹிட் காவியம் '6 வாரங்களில் 60 லட்ச ரூபாய்' வசூல் ஈட்டிய 'தினத்தந்தி' விளம்பரம் நினைவுக்கு வருகிறது. நோக்கம் புரிகிறதா? நன்றிகள் சார்.

RAGHAVENDRA
11th August 2012, 07:23 AM
80க்குப் பிறகு .... வசூலில் சாதனை படைத்த படங்களின் மூலம் தன்னுடைய ஆளுமையை நிரூபித்தார் நடிகர் திலகம் என்பதற்கு சந்திப்பு வசூல் ஒரு சாட்சி. தங்களுக்கு உளமார்ந்த பாராட்டுக்கள் பம்மலார் சார்.

வாசு சார்,
கடலூர் திரையரங்குகளின் நினைவுகளை எடுத்துரைத்து இலவசமாக கடலூருக்கு அதுவும் Time Machineல் சுற்றிக் காட்டி விட்டீர்கள். சூப்பரோ சூப்பர்.

திரிசூலம் வசூல் எம்.ஜி.ஆர். அவர்களின் சத்துணவுத் திட்டத்திற்கு முக்கிய பங்கு வகித்தது என்பது அந்நாளில் பிரசித்தம்.

பம்மலார் சாரே,
திரியின் வேகம் மலைக்க வைக்கிறது.. இன்னும் ஓரிரு நாளில் 25,000 பார்வையாளர் எண்ணிக்கையைத் தாண்டி விடும்...ஜூலை 22 முதல் ஆகஸ்ட் 10 வரையிலான கால கட்டத்தில் 20 நாட்களில் 23000 பதிவுகள். ஒரு நாளைக்கு சராசரியாக குறைந்த பட்சம் 1000 பார்வையாளர்களை ஈர்த்து வரும் வேகம். பாகம் பத்திலேயே தொடர்ந்திருந்தால் கூட இந்நேரம் நிச்சயமாக அடுத்த பாகத்தைத் தொடர்ந்திருக்கும். எப்படி யிருந்தாலும் புதிய திரியின் வரவு உண்டு. அது சற்று முன்னமேயே வந்து விட்டது.

விரைவில் இத்திரியின் இரண்டாம் பாகத்தையும் சந்திப்போம் என்பதில் ஐயமில்லை. பாராட்டுக்கள் மீண்டும் மீண்டும்.

டியர் கார்த்திக்,
தங்களுடைய பதிவுகள் ஒவ்வொன்றும் அந்தக் காலகட்டத்திற்கே அழைத்து செல்கின்றன. இந்தப் பக்கம் குளோப்பில் சிவந்த மண், அந்தப் பக்கம் வெலிங்டனில் எங்க மாமா, மிட்லண்டில் விளையாட்டுப் பிள்ளை, மூன்று படங்கள் ஒரே சமயத்தில் சென்னையில் ஓடிக் கொண்டிருக்கும் போதே வியட்நாம் வீடு வருகையின் அறிவிப்பு ... இப்படி இருந்தால் எங்கிருந்து படங்கள் 100 நாட்களைக் காணும். எங்க மாமா படம் கடைசி நாள் வரையில் இரு வகுப்புகள் நிறைவு பெற்றுத் தான் ஓடிக் கொண்டிருந்தது.

இப்படி ஒரே சமயத்தில் மூன்று படங்களும் அதற்கு மேலும் புதிய படங்கள் அதுவும் பல முறை ஓடியது நடிகர் திலகத்திற்கு மட்டும் தான் சாத்தியம்.

அன்புடன்
ராகவேந்திரன்

RAGHAVENDRA
11th August 2012, 07:25 AM
நடிகர் திலகத்தைப் பற்றி ராஜு ஆரோக்கியசாமி என்கிற ரசிகர் வரைந்துள்ள கவிதை

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/articles%20on%20NT/rajuarokpoem.jpg

RAGHAVENDRA
11th August 2012, 07:27 AM
பம்மலார் சார்
பராசக்தி மறு வெளியீட்டு விளம்பரம் ... அட்டகாசம்...
முதல் வெளியீட்டு விளம்பரம் மட்டுமல்ல், மறு வெளியீட்டு விளம்பர ஆவணங்களிலும் தங்களை மிஞ்ச முடியாது என்பதைப் போல் தங்கள் பொக்கிஷங்களை பாதுகாத்து வருகிறீர்கள் ...
மீண்டும் மீண்டும் ... பாராட்டுக்கள்...

Richardsof
11th August 2012, 08:24 AM
http://i46.tinypic.com/34xgt1v.png
இனிய நண்பர் திரு சந்திர சேகர் சார்

தங்களின் அன்பு பாராட்டுக்கு மிக்க நன்றி .

இனிய நண்பர் திரு .ராகவேந்திரன் சார் அவர்களுக்கு,
தங்களின் பாராட்டுக்கு இதயங்கனிந்த நன்றிகள் .

ஆவண திலகம் திரு பம்மலார் அவர்களுக்கு

உங்களின் அன்பு பாராட்டுக்கு நன்றி .
இனிய நண்பர் திரு .வாசுதேவன் சார்
தங்களின் பாராட்டுக்கு நன்றி . ஏவிஎம் வீடியோ தொகுப்பு dvd விரைவில் உங்களுக்கு வந்து சேரும் .
என்றும் அன்புடன்
esvee

vasudevan31355
11th August 2012, 08:35 AM
நம்ம தலைவருடைய ஸ்டைல்தான் என்ன! ப்பா...என்ன ஒரு அழகு!

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/avm.jpg

RAGHAVENDRA
11th August 2012, 08:54 AM
வாசு சார், பெருந்தலைவருடன் தலைவர் ஸ்டில் சூப்பர்...
இந்த போஸில் அவரை போட்டோவில் பார்ப்பவர்களுக்கே அவ்வளவு மகிழ்வுணர்வு இருக்குமென்றால், இதே ஸ்டைலில் அவரை பல முறை நேரில் பார்த்திருக்கும் நாமெல்லாம் என்ன புண்ணியம் செய்திருப்போம் ...
நினைக்கும் போதே பெருமையாகவும் மலைப்பாகவும் உள்ளது ..

அவருடன் வாழ்ந்து, அவருடன் பழகி, அவருக்குத் தொண்டாற்றி ..

வள்ளுவர் கூறியது போல் பிறவிப் பயன் என்று ஒன்றிருந்தால், அது இதுவாகத் தான் இருக்கும் ...

vasudevan31355
11th August 2012, 09:11 AM
உண்மைதான் ராகவேந்திரன் சார். அந்த மதிவதன முகத்தைக் கண்டாலே உச்சி முதல் பாதம் வரை ஏற்படும் சிலிர்ப்பை சொல்லி மாளாது. உணர்ச்சிப் பிரவாகமெடுக்கிறது. எல்லா அம்சங்களும் அவருக்கு எப்படிப் பொருந்தியிருக்கின்றன!. இப்படியெல்லாம் ஒரு அதிசயப் பிறவி இனிமேல் பிறக்க முடியுமா! அந்த மகா மாமனித தெய்வம் வாழ்ந்த காலத்தில் வாழும் பெருமையை நாம் அடைந்தது என்னே ஒரு பெரும் பாக்கியம்! நடிகராக அவரை விட்டு விட்டுப் பார்த்தால் அதைவிட மனிதராக எல்லா விஷயங்களிலும் மேலோங்கி நிற்கிறார் என்றுதான் ஆணித்தரமாக சொல்லத் தோன்றுகிறது. கண்கள் பனிக்கின்றன சார்.

ScottAlise
11th August 2012, 09:16 AM
Anbai Thedi

I was searching for this movie long time as I saw this movie long time back around 10 years back. After seeing the pictures in thread my interest grew more. Luckily I saw the movie today.
Sivaji is a youngster who dreams all day imaging anything and everything he sees thereby lands in trouble and everyone plays pranks on him . He stays with his uncle Major, sister Vijayakumari, daughter Indira, Cho.
He is bullied by his uncle’s sister, servants, co worker. His only solace is cho, baby Indira ,his sister and fruit vendor Jayalalitha.
He is innocent to a great extent that even his servants beat him. His uncle’s sister is engaged to Srikanth,working in Major’s factory who plans to kidnap Major’s daughter with Manohar and kidnaps her toy store. She is presumed dead. Major gives all properties to NT, NT revelas that his daughter is kidnapped.Major& his family leave their home gives curses that if was a saint then he would curse NT baby to death based on manuneethi chozan cow story NT decides to sacrifice his baby .Jayalalitha agrees.
What happens next?
Does NT becomes brave? Does NT baby is sacrificed? Will the family unite forms the climax.
Performance:
Major as usual good.
Vijayakumari just apt
Jayalalitha acted well just like other NT movies especially last half an hour explaining his desire not to sacrifice his child
Cho comedy satire on politics evokes laughter along with manorama especially his reference to Indira would have brought either whistle or commotion in theatre. Cho also sends solid support to story. His VPKB dialogue and reveals his secret is laugh riot
Retention of
Ramu is helped by Indira
Could Pammalar, Ragavenderan,Vasu sirs throw light on this Cho comedy track about his satire.
Last but least NT
NT shows various facets in this movie Navarasas
In the beginning he is innocent, helpless but at the same time nice & happy person

Buddha one act play is very inspiring. To see NT & JJ in those 7 min play is absolute treat particularly Buddhist preachings uttered by NT is a gem.
NT portrayal is finest underplay wonder why this movie didn’t celebrate 100 days.
Those who say NT overacts cannot handle subtle roles can very well see this movie to verify it
One of our hubbers say Muktha films has mixed track record of hits & flops with NT .
Hits or flops Muktha films give variety to NT multidimensional acting skills & explore his talents

vasudevan31355
11th August 2012, 09:29 AM
Ragul,

http://static2.dmcdn.net/static/video/173/470/22074371:jpeg_preview_medium.jpg?20110812114011

short and sweet. keep it up.

RAGHAVENDRA
11th August 2012, 10:06 AM
Dear Raghul,
Happy that you chose a rare movie of NT neglected much by even his so called die hard fans. I saw this on the first day, Deepavali of 1974 at Villivakkam Royal, special morning show for fans since couldn't get ticket at Devi Paradise. To be frank, I liked this movie very much. The frequent dreams were one of the reasons for the failure of the movie, if at all it can be said so. In every movie, Muktha had created a disease or phobia for the main character. In Thava Pudhalvan, hero would be blind. In Niraikudam heroine would be blind. In Arunothayam the hero would suffer with stomach pain and like that. In Anbai thedi the phobia of dream was the weakness of the character played by NT, which he essayed with utmost dedication and reality.
The film had class songs composed by Mellisai Mannar, sung by T.M.S., P.Susheela, Jayalalitha, Pushpalatha.

Here are the video of the songs:

Buddhi ketta ponnu onnu

http://www.dailymotion.com/video/xd54oz_puthikettaponnu-anbai-thedi_creation

Chithra mandapathil

http://youtu.be/ig46cl5coVo

Sippiyile Muthu
http://www.oruwebsite.com/music_videos/anbai-thedi/sippiyile-muththu-video_84df74973.html

Ammavum Appavum

http://youtu.be/Fy3jEzr8Rbc

movie link

http://www.dailymotion.com/video/xs2zho_anbai-thedi_shortfilms

kalnayak
11th August 2012, 10:25 AM
அன்பு வாசுதேவன் சார்,
உங்கள் நினைவை நானும் கிளறிவிட்டேன் போல. சுகமான ரகசியங்களை வெளிப்படுத்தி எல்லோரையும் சிந்திக்க வைக்கின்றீர். பெரும்பான்மையோருக்கு இப்படிப்பட்ட அனுபவங்கள் இருக்கும்.
நாங்கள் கடலூர் புதுப்பாளையத்தில் வசித்தோம். தங்கள் அன்பான அழைப்பிற்கு தலை வணங்குகிறேன். நிச்சயம் சந்திப்போம். மேலும் பல விவரங்கள் பேசுவோம். உங்கள் உற்சாக தூண்டுதல்களுக்கும், பாராட்டிற்கும் மீண்டும் மீண்டும் நன்றி.

அன்புடன்.

kalnayak
11th August 2012, 10:44 AM
டியர் கல்நாயக் சார்,

தங்களின் இடுகைகள் தகவலார்ந்த பதிவுகளாக ஒளிர்கின்றன. காமெடியாக பதிப்பதில் கலக்கும் தாங்கள், சீரியஸான பதிவுகளையும் சிறப்பாகத் தருகிறீர்கள். வாழ்த்துக்கள்..! தங்களுக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் இது போன்று இனிய பதிவுகளை இங்கே இடலாமே..!

அன்பு கலந்த எதிர்பார்ப்புடன்,
பம்மலார்.

வரலாற்று ஆவணங்களை, நிகழ்ச்சிகளை, கொண்டாட்டங்களை பதிவு இடுவதில் மாமன்னரான பம்மலார் அவர்களே,
நான் எழுதியது மிக மிகக் குறைவு என்றாலும், தங்கள் பாராட்டு என்னை மிகுந்த உற்சாகமூட்டுகிறது. நேரம், வாய்ப்பு கிடைக்கும் சமயங்களில் உங்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய எனக்குத் தெரிந்தவைகளை பதிவாய் இடுகிறேன்.
எழுதத்தூண்டி, உற்சாகம் ஊட்டும் தங்களுக்கும், வாசுதேவனாருக்கும் கடமைப் பட்டவனாகினேன். மீண்டும் மீண்டும் நன்றி, நன்றி.
அன்புடன்.

RAGHAVENDRA
11th August 2012, 01:17 PM
நடிகர் திலகமும் நடிப்புக் கோட்பாடும்

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/VCGCSS.jpg


His system of actinghas developed an international reach.
அவருடைய நடிப்பு முறை உலக அளவிலான வீச்சை ஏற்படுத்தி வளர்த்த்து.


He treated theatre-making as a serious endeavour, requiring dedication, discipline and integrity.
அர்ப்பணிப்பு, ஒழுக்கம், ஒருங்கிணைப்பு ஆகியவை உண்மையாக தேவைப்பட்ட நாடக உருவாக்கத்தை அவர் ஒரு தவமாக்க் கருதி மேற்கொண்டார்.


Throughout his life, he subjected his own acting to a process of rigorous artistic self-analysis and reflection.
தன்னுடைய நடிப்பினை கலைத்தன்மைக்குட்பட்ட தீவிர சுயபரிசோதனைக்கும் அதன் வெளிப்பாட்டிற்கும் தன் வாழ்நாள் முழுமையாக உட்படுத்திக் கொண்டார்..


His development of a theorized praxis – in which practice is used as a mode of inquiry and theory as a catalyst for creative development – identifies him as the first great theatre practitioner.
பழக்கம் என்பதை கேள்வி வடிவமாகவும் கோட்பாடு என்பது ஆக்கபூர்வமான உருவாக்கத்திற்கான விளக்கமாகவும் அடிப்படையாக்க் கொண்டு அவர் உருவாக்கிய கோட்பாடு செயலாக்கம் – அவரை முதன்மையான சிறந்த நாடக தொழிலராக அறிய வைக்கிறது.

மேற்கண்ட வாசகங்கள் ஸ்டானிஸ்லாவ்ஸ்கி அவர்களைப் பற்றி விக்கிபீடியா (http://en.wikipedia.org/wiki/Constantin_Stanislavski)இணைய தளத்தில் அறிமுகமாக உள்ளவை. ஒவ்வொரு வார்த்தையும் நடிகர் திலகத்திற்கு எந்த அளவிற்குப் பொருந்துகிறது.

இது நம்முடைய அலசலின் துவக்கம் தான். இனி வரும் காலங்களில் ஸ்டானிஸ்லாவ்ஸ்கி நடிப்புக் கோட்பாடு பற்றியும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களுடைய நடிப்பிற்கும் உள்ள ஒற்றுமை அல்லது வேற்றுமை அல்லது இரண்டும் ... என்பதை நாம் தொடர்ந்து பார்க்கலாம்.

அன்புடன்

mr_karthik
11th August 2012, 03:05 PM
அன்புள்ள பம்மலார் சார், வாசுதேவன் சார் மற்றும் ராகவேந்தர் சார்....

எனது பதிவுகளைப் பாராட்டியமைக்கு மிக்க நன்றி.

பம்மலார் அவர்களே, தாங்கள் தவணைமுறையில் தந்துகொண்டிருக்கும் 'சந்திப்பு' வெற்றிக்காவியத்தின் விளம்பரப்பதிவுகள் அனைத்தும் சூப்பர். ஒன்றையொன்று மிஞ்சுகின்றன. ராகவேந்தர் அவர்கள் சொன்னதுபோல, 80க்கு முன்பே தலைவரின் சாதனைகள் முடிந்துவிட்டதுபோல பரப்பப்பட்டு வரும் மாயையை இவை தகர்த்து வருகின்றன. 'சந்திப்பு' வெள்ளிவிழாப்படம் என்பது நம்மில் பலருக்கே தெரியவில்லை என்பதுதான் சோகம். அந்த குறையை தங்கள் ஆவணங்கள் போக்கி வருகின்றன.

எங்க மாமா பற்றி பதிவுகள் இடப்படும் இவ்வேளையில் 'எங்க மாமா'வின் ஆவணப்பதிவுகளையும் தரலாமே. நம்முடைய வனவாச காலத்தில் இடம்பெற்ற படங்களில் அதுவும் ஒன்றல்லவா?. தங்களின் 'பராசக்தி' மறுவெளியீட்டு விளம்பரம் அட்டகாசம். மறுவெளியீடுகளின் விளம்பரங்களையும் தாங்கள் பத்திரப்படுத்தி வைத்திருப்பது வியக்க வைக்கிறது.

கலக்குங்கள்.....

mr_karthik
11th August 2012, 03:42 PM
அன்புள்ள வாசுதேவன் சார் & கல்நாயக் சார்...

நீங்களிருவரும் என் இரு கைகளையும் பிடித்துக்கொண்டு கடலூர் திரையரங்குகளுக்கு மினி சுற்றுலா அழைத்துச்சென்றுவிட்டீர்கள். நல்ல தெளிவான நடை. அங்கங்கே நகைச்சுவை செருகல்கள். படிக்க அருமையாக இருந்தது. நான் கடலூர் வழியாக பேருந்துகளிலும், தொடர் வண்டிகளிலும் சென்றிருந்தபோதிலும், அங்கே இறங்குவதற்கோ, தங்குவதற்கோ இதுவரை வாய்ப்பு அமைந்ததில்லை. இருப்பினும் தங்கள் எழுத்துக்கள் மூலமாகவும், நிழற்படங்கள் மூலமாகவும் கடலூரை மானசீகமாக தரிசிக்க வைத்து விட்டீர்கள்.

மிக்க நன்றி. இதுபோன்ற சுவாரஸ்யப் பதிவுகளை இருவரும் தொடர்ந்து அள்ளி வழங்குங்கள்.

mr_karthik
11th August 2012, 04:21 PM
அன்புள்ள ராகவேந்தர் சார்,

'அன்பைத்தேடி' திரைப்பட பாடல்களை காணொளியாய் வழங்கியமைக்கு நன்றிகள். 'புத்திகெட்ட பொண்ணு ஒண்ணு' பாடலில் நடிகர்திலகமும் கலைச்செல்வியும் மிக வித்தியாசமான உடையலங்காரத்துடன் ஆடும் அழகு அருமை. மெல்லிசை மன்னரின் மிகவும் வித்தியாசமான இசையும், என்.பாலகிருஷ்ணனின் கண்ணுக்கு குளிர்ச்சியான ஒளிப்பதிவும் பாடலின் தரத்தை உயர்த்திக்காட்டின.

'சித்திர மண்டபத்தில்' பாடல் காட்சியில் க்யூட்டான ஃபுல்சூட்டில் நடிகர்திலகமும், மிஸ்மெட்ராஸ் எம்ப்ளத்துடன் எங்கள் கலைச்செல்வியும் செம தூள். (இந்த வார்த்தை நீங்கள் உள்பட பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தலாம். நடிகர்திலகத்தின் இணைகளில் தேவிகாவுக்கு அடுத்தபடியாக, எனக்கு மிகவும் பிடித்தவர் 'கலைச்செல்வி' ஜெயலலிதா. அதே சமயம் அரசியலில் எனக்கு அறவே பிடிக்காதவர் 'புரட்சித்தலைவி (?)' ஜெயலலிதா). அதுவும் இப்பாடலில் ஜெ. சொந்தக்குரலில் கொஞ்சுவார். இப்பாடலிலும் மெல்லிசை மன்னர் மற்றும் பாலகிருஷ்ணன் அணி அசத்தியிருந்தனர்.

நீங்கள் அன்பைத்தேடி படத்தை முதல்காட்சி வில்லிவாக்கம் ராயல் தியேட்டரில் பார்த்தது போல, அந்த தீபாவளிக்கு கும்பகோணத்துக்கு அத்தை வீட்டுக்குச்சென்றிருந்த நான், இப்படத்தை கும்பகோணம் 'செல்வம்' தியேட்டரில் முதல் காட்சி பார்த்தேன். பின்னர் சென்னை வந்தபின் தேவிபேரடைஸ் தியேட்டரிலும் பார்த்தேன்.

தங்கள் பதிவுகள் அனைத்துக்கும் நன்றிகள்.

mr_karthik
11th August 2012, 04:35 PM
'நட்புத்திலகம்' வினோத் (esvee) அவர்களே,

தங்களின் அசத்தல் பதிவுகளை நடிகர்திலகம் திரியிலும், மக்கள் திலகம் திரியிலும் தொடர்ந்து கண்டுகளித்து வருகிறேன். அவற்றில் பல நிழற்படங்கள் உண்மையிலேயே மிக அரிதானவை. அதுபோல திரையரங்குகளின் நிழற்படங்களும் சூப்பர். அவ்வப்போது இடம்பெறும் விளம்பரப்பதிவுகளும் அப்படியே. தங்கள் வரவுக்குப்பின் மக்கள் திலகம் திரி புத்துயிர் பெற்றதோடு வேகமும் எடுத்துள்ளது.

தொடர்ந்து தொய்வின்றி அசத்துங்கள்.

HARISH2619
11th August 2012, 06:30 PM
ஹரீஷ் சார்,



எப்போது நமது அடுத்த 'சந்திப்பு'?


திரு வாசு சார்,
'சிவபெருமான்' அருளால் வாசுதேவனார் பெங்களூர் வந்தால் விரைவில் நமது 'சந்திப்பு'

vasudevan31355
11th August 2012, 09:00 PM
நடிகர் திலகத்தின் நாயகிகள்.(ஒரு விஷுவல் தொடர்)

(தொடர்-3)

நடிகர் திலகத்தின் நாயகிகள் (3) கிருஷ்ண குமாரி.

படம்: 'திரும்பிப்பார்' '

நடிகை சௌகார் ஜானகி அவர்களின் தங்கை கிருஷ்ண குமாரி. தமிழை விட தெலுங்கில் வெற்றிக்கொடி நாட்டியவர். காந்தாராவ், என்.டி. ராமாராவ் போன்ற நட்சத்திர நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். 'மாயாஜால மன்னன்' விட்டலாச்சார்யா அவர்களின் அன்றைய ஆஸ்தான நடிகை என்றும் சொல்லலாம். நல்ல அழகான நடிகை. நடிகர் திலகத்துடன் முழுப் படத்தில் ஜோடியாக நடிக்க வாய்ப்பு கிடைக்கா விட்டாலும் 'திரும்பிப்பார்' திரைக்காவியத்தில் சில காட்சிகளில் ஜோடியாக வருவதால் நடிகர் திலகத்தின் நாயகியர் லிஸ்டில் சேருகிறார்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/1-123.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/3-73.jpg

(ஜோடிகள் தொடரும்)

அன்புடன்,
வாசுதேவன்.

pammalar
11th August 2012, 11:20 PM
அன்பு பம்மலார் சார்,

'சந்திப்பு' திரைக்காவியத்தின் '35 நாட்களில் 75 லட்சம் ரூபாய் வசூல்' 'தினத்தந்தி' விளம்பர கட்டிங் எங்களுக்கு தாங்கள் அளித்த பொற்கிழி. விலைமதிப்பில்லாதது. பொற்கிழி வழங்கிய பொன்னான கைகளுக்கு நன்றிகள். இந்த நேரத்தில் 'திரிசூலம்' மெகா ஹிட் காவியம் '6 வாரங்களில் 60 லட்ச ரூபாய்' வசூல் ஈட்டிய 'தினத்தந்தி' விளம்பரம் நினைவுக்கு வருகிறது. நோக்கம் புரிகிறதா? நன்றிகள் சார்.

அன்புக்குரிய நெய்வேலியாரே,

அடியேன் வழங்கியது பொற்கிழியானாலும் அதனை பெறும் நீங்கள் 'தருமி'யல்ல..! எப்படியோ நானும் 'கருமி'யல்ல..! அதுசரி, கடலூரில் 'உருமி'யை ஊதித் தள்ளிவிட்டுத்தானே நமது 'கொடை வள்ளல்' நான்கு காட்சிகளில் உலா வந்தார். தருமி, கருமி, உருமி...அய்யா சாமி...,பட்டாக்கத்தி பைரவபாஷையில் 'எல்லாம் ஒரு ஜாலிக்குத்தான்...!'

தங்களுடைய பாராட்டுக்கு அன்பான நன்றி..!

ரொம்ப ரொம்ப ஜாலிமூடில்,
பம்மலார்.

pammalar
11th August 2012, 11:24 PM
பம்மலார் சாரே,
திரியின் வேகம் மலைக்க வைக்கிறது.. இன்னும் ஓரிரு நாளில் 25,000 பார்வையாளர் எண்ணிக்கையைத் தாண்டி விடும்...ஜூலை 22 முதல் ஆகஸ்ட் 10 வரையிலான கால கட்டத்தில் 20 நாட்களில் 23000 பதிவுகள். ஒரு நாளைக்கு சராசரியாக குறைந்த பட்சம் 1000 பார்வையாளர்களை ஈர்த்து வரும் வேகம். பாகம் பத்திலேயே தொடர்ந்திருந்தால் கூட இந்நேரம் நிச்சயமாக அடுத்த பாகத்தைத் தொடர்ந்திருக்கும். எப்படி யிருந்தாலும் புதிய திரியின் வரவு உண்டு. அது சற்று முன்னமேயே வந்து விட்டது.

விரைவில் இத்திரியின் இரண்டாம் பாகத்தையும் சந்திப்போம் என்பதில் ஐயமில்லை. பாராட்டுக்கள் மீண்டும் மீண்டும்.

ராகவேந்திர ஐயா,

அளித்த பாராட்டுக்களுக்கு அடியேன் அளிக்கும் நன்றிகளை பிடித்துக் கொள்ளுங்கள். 'நன்றிகள்' ஓடிவிடப் போகின்றன..!

விடாக்கண்டர்...கொடாக்கண்டர்...என்றால் அது நீங்கள்தான் ஐயா..! புலிபோல் பாய்ந்துவந்து புள்ளிவிவரங்களை அள்ளி அளித்த தாங்கள் உண்மையிலேயே 'புள்ளிவிவரப்புலி'தான்..!

கவிஞர் ராஜூ ஆரோக்கியசுவாமியின் அருமையான கவிதை ஆரோக்கியமான முறையில் நமது கலையுலக சுவாமியை ஆராதனை செய்கிறது..! [நமது திரியில் ஏதாவது 'கவிதை' என்றாலே எனக்கு தெனாலிராமன் பூனைக்கு [கோ] பால் வைத்த க[வி]தையாய் கொஞ்சம் பயமாகவே இருக்குது].

[இக்கவிதையில் கீழ்க்கண்ட வரிகளை திரும்பத் திரும்பப் படித்தேன். அவ்வரிகள் அவ்வளவு என்னை ஈர்த்தன.]

"நீயும் நீரும் ஒன்று...
இல்லை...இல்லை...
நீர் பாத்திரவடிவங்கொள்ளும்..
நீயோ பாத்திரமாகவே மாறிவிடுவாய்...!"

செம ஜாலிமூடில்,
பம்மலார்.

pammalar
11th August 2012, 11:26 PM
திரைக்காவிய முதல் வெளியீட்டு விளம்பரங்கள் :15

நடிகர் திலகத்தின் 235வது காவியம்

சந்திப்பு [வெளியான தேதி : 16.6.1983]

வெள்ளிவிழாக் கொண்டாடிய மெகாஹிட் காவியம்

பொக்கிஷாதி பொக்கிஷம்

50வது நாள் விளம்பரம் : தினத்தந்தி : 4.8.1983
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC6350-1.jpg

தொடரும்...

பக்தியுடன்,
பம்மலார்.

pammalar
12th August 2012, 03:07 AM
டியர் esvee சார்,

தாங்கள் வழங்கிய பாராட்டுக்கும், பட்டத்துக்கும் எனது பணிவான நன்றிகள்..!

அன்புடன்,
பம்மலார்.

pammalar
12th August 2012, 03:14 AM
டியர் வாசுதேவன் சார்,

'திரு. ஏவிஎம், கர்மவீரர், கலைக்குரிசில்' ஸ்டில், சூப்பர் ஸ்டில் சார்..!

'நடிகர் திலகத்தின் நாயகியர்' மெகா தொடரில் நடிகை கிருஷ்ணகுமாரி குறித்த குறிப்பும், "திரும்பிப் பார்(1953)" புகைப்படங்களும் திவ்யம்..!

அன்புடன்,
பம்மலார்.

pammalar
12th August 2012, 03:16 AM
Dear Mr. ragul,

A very nice write-up on ANBAI THEDI..! Expecting more of this kind from you..!

Warm Wishes & Regards,
Pammalar.

vasudevan31355
12th August 2012, 06:58 AM
நடிகர் திலகத்தைப் பற்றி ராஜு ஆரோக்கியசாமி என்கிற ரசிகர் வரைந்துள்ள கவிதை அருமை. ஆத்மார்த்தமான அர்ப்பணிப்பு. அவருக்கு நம் உளமார்ந்த பாராட்டுக்கள். கவிதையைப் பதிப்பித்த ரசிக வேந்தருக்கு நன்றிகள்

vasudevan31355
12th August 2012, 07:04 AM
டியர் ராகவேந்திரன் சார்,

'நடிகர் திலகமும் நடிப்புக் கோட்பாடும்' சூப்பர். ஸ்டானிஸ்லாவ்ஸ்கி அவர்களின் நடிப்புக் கோட்பாடு நடிகர் திலகத்திற்கு அச்சு அசலாகப் பொருந்துவதை தாங்கள் குறிப்பிட்டிருப்பது அழகு. துவக்கமே தூள். தொடர்ந்து தாங்கள் அளிக்கவிருக்கும் தொடர்களைக் காண வெகு ஆவலாய் உள்ளோம். நன்றி!

அன்பைத் தேடும் எங்களுக்கு தங்கள் 'அன்பைத் தேடி' தேடிக் கொடுத்த தங்களுக்கு தலையாய நன்றிகள்.

vasudevan31355
12th August 2012, 07:08 AM
டியர் வினோத் சார்,

நீதி கேட்கும் எங்கள் குணசேகரனை சும்மா 'கும்'மென்று பதித்ததற்கு நன்றி! ஏவிஎம் வீடியோ தொகுப்பு dvd க்காக தவம் கிடக்கிறேன். விரைவில் வந்து சேரும் என்று வயிற்றில் பால் வார்த்த தங்கள் பொன்னான உள்ளத்திற்கு நன்றி!

vasudevan31355
12th August 2012, 07:13 AM
டியர் ஹரிஷ் சார்,

இந்தத் 'திருவிளையாடல்' தானே வேண்டாம் என்பது?. தாங்கள் முதலில் இங்கு வந்து ஒரு முறை தரிசனம் தாருங்கள்.

vasudevan31355
12th August 2012, 07:26 AM
அன்புக்குரிய பம்மலாரே!

எதிர்பார்ப்பு நிறைவேறி விட்டது. எங்கள் முத்தையா திரையரங்கில் 'சந்திப்பு' சாதனை படைத்த அந்த 50- ஆவது நாள் 'தினத்தந்தி' விளம்பரம் கடந்த மூன்று நாட்கள் பட்ட வேதனையை புறமுதுகு காட்டி ஓடச் செய்து விட்டது. மனம் லேசாகி ஆகாயத்தில் மிதப்பது போன்றதொரு உணர்வு. பெருமை பொங்க வைக்கும் இந்த அற்புதப் பதிவை அளித்த தங்களுக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப தேங்க்ஸ். அடுத்தவர்களை சந்தோஷப்படுத்திப் பார்க்கும் தங்கள் பொன்னான மனம் வாழ்க! வசூல் பிரளயத்திற்கு மறு பெயர் நம் 'வணங்காமுடி' தானோ!

Richardsof
12th August 2012, 07:37 AM
The great nadigar thilagam.

ஆர்.எம்.வீரப்பனின் சத்யா மூவிஸ் தயாரித்த 'புதிய வானம்' படத்தை ஆர்.வி.உதயகுமார் டைரக்ட் செய்தார். ஆர்.வி.உதயகுமார், தனது படங்களுக்கு பாடல்களும் எழுதுவது உண்டு.

'புதிய வானம்' படத்திலும் அவர் பாடல் எழுதினார். அதில், 'எளிமையும், பொறுமையும் புரட்சித் தலைவனாக்கும் உன்னை' என்ற வரிகள் வருகின்றன.

அதாவது, எம்.ஜி.ஆரை புகழும் பாடல்! அதை சிவாஜிகணேசன் பாடவேண்டும்!

பாடலைப் படித்துப் பார்த்த ஆர்.எம்.வீரப்பன், 'இதை சிவாஜி பாடுவாரா? எனக்கு சந்தேகமாக இருக்கிறது. ஏதாவது நினைத்துக் கொள்வாரோ என்று பயமாகவும் இருக்கிறது!' என்றார்.

'ஒருவேளை சிவாஜி இந்தப் பாடல் வரிகளை விரும்பாவிட்டால், அதற்கு மாற்றாக வேறு பாடலும் வைத்திருக்கிறேன்' என்று உதயகுமார் கூறினார்.

பாடலை கொண்டு போய் சிவாஜிக்குப் போட்டுக் காட்டினார்.

அதன்பின் நடந்தது பற்றி உதயகுமார் கூறியதாவது:-

'எம்.ஜி.ஆர். பற்றிய வரிகள் வரும்போது, சிவாஜி முகத்தில் எவ்வித மாற்றமும் இல்லை. பாடல் முழுவதும் முடிந்ததும், 'புரட்சித் தலைவனாக்கும் உன்னை என்று எழுதியிருக்கிறாயே! அப்படி எழுதும்படி வீரப்பன் சொன்னாரா?' என்று கேட்டார்.

'இல்லை. நானாகத்தான் எழுதினேன்' என்று நான் பதில் அளித்தேன். 'இந்தப் பாடலை நான் பாடவேண்டும். அவ்வளவுதானே? தாராளமாகப் பாடுகிறேன். அண்ணன் மறைந்துவிட்டார். அவர் புகழைப் பாடுவதற்குக் கொடுத்து வைத்திருக்க வேண்டும்' என்று சிவாஜி கூறினார்.

அந்தப்பாடல் காட்சி படப்பிடிப்பின்போது, எம்.ஜி.ஆர். ஸ்டைலில் விரலைக் காட்டி நடிக்க வேண்டும் என்றேன். அதேபோல நடித்தார். நான் நெகிழ்ந்து போய்விட்டேன்.'

இவ்வாறு உதயகுமார் கூறினார்.

'புதிய வானம்' வெற்றிப்படமாக அமைந்தது.

uvausan
12th August 2012, 09:57 AM
Karnan is going full house today at satyam - hope to have another celebration soon by this month end

Richardsof
12th August 2012, 11:04 AM
http://i50.tinypic.com/919dh4.pngMY EXPERIENCE WITH NAMNADU AND SIVANDHA MANN CELEBRATION AT TIRUVANNAMALAI -1969- DEEPAVALI FESTIVAL .

மறக்க முடியாத - 1969 - மக்கள் திலகம் - நடிகர் திலகம் தீபாவளி திருவிழா .

திருவண்ணமலையில் நம்நாடு - மீனாக்ஷி - சிவந்த மண் - பாலசுப்ரமணியம் திரையரங்குகளில் வெற்றி பவனி .
1969 .....மதியின் ரசிகர்களும் நதியின் ரசிகர்களும் போட்டி போட்டு கொண்டு தீபாவளி நாளை எதிர் பார்த்து காத்திருந்த நாட்கள் அது ...
எங்க வீட்டு பிள்ளை மகத்தான வெற்றிக்கு பிறகு மக்கள் திலகத்தின் நம்நாடு 1966 ஆண்டில் துவங்கி நீண்ட கால தயாரிப்பில் பிரமாண்ட படமாக உருவாகி வந்தது .
மக்கள் திலகம் - ஜெயலலிதா - ரங்கராவ் - அசோகன் - தங்கவேலு - ராமதாஸ் - நாகையா-
பகவதி - பண்டரிபாய் என்று எராளமான நட்சத்திர பட்டாளம் .
மெல்லிசை மன்னரின் அட்டகாசமான பாடல்கள் - குறிப்பாக லாங் PLAY எனப்படும் இரண்டு பாடல்கள் 1 .நினைத்ததை நடத்தியே முடிப்பவன் .... 2 .VANGHAYYA வாத்தியார் அய்யா என்ற இரண்டு சூப்பர் பாடல்கள் படம் வருவதற்கு முன்பே பட்டி தொட்டி எங்கும் பிரபலமானது . CENSOR பிடியில் சிக்கிய இப்படம் பலவேறு காட்சிகள் வெட்டப்பட்டு வெளியானது .
மே மாதம் வெளிவந்த அடிமைபெண் வெள்ளி விழா வெற்றி மிதப்பில் இருந்த என்போன்ற மதியின் ரசிகர்கள் நம்நாடு வெற்றியினை எதிர்நோக்கி இருந்தோம் .
திருவண்ணாமலை - மீனாக்ஷி திரை அரங்கம் ஊருக்கு நடுவில் அமைந்திருந்தது
பெஞ்ச் டிக்கெட் .O . 43 பைசா ./ 0 .60 பைசா ./ RS 1 .10 / பால்கனி .RS 1 . 90 .
ஏடுகளில்பல மாதங்களாக நம்நாடு படத்தினை பற்றி பல விதமான ஆர்வமான செய்திகள் தினத்தந்தி , திரை உலகம் , முரசொலி , பேசும் படம் , பொம்மை , திரைநீதி போன்ற வந்த வண்ணம் இருந்தது . நாளுக்கு நாள் எங்களின் ஆர்வமும் அதிகரித்து கொண்டே போனது .

நடிகர் திலகத்தின் சிவந்த மண் நிலையும் அதே நிலைமைதான் ..ஏடுகளில்பல மாதங்களாக சிவந்த மண் படத்தினை பற்றி பல விதமான ஆர்வமான செய்திகள் தினத்தந்தி , மதி ஒளி , முரசொலி , பேசும் படம் , பொம்மை , சுதேசமித்திரன் ,நவமணி , நவசக்தி , போன்ற ஏடுகளில் செய்திகள் வந்த வண்ணம் இருந்தது . மேலும் தென் இந்தியாவின் வெளி நாட்டில் எடுக்கப்பட்ட முதல் தமிழ் படம் ...மிகவும் பிரபல மான பாடல்கள் என்று எதிர் பார்க்கப்பட்ட படம் .
சமூக சீர் திருத்த கருத்துகள் கொண்ட லட்சிய படம் மதியின் .. நம்நாடு
புரட்சி மூலம் நாட்டை காப்பாற்றும் வீரனின் கதை -- நதியின் சிவந்த மண் .

இரண்டு ரசிகர்களின் மன நிலை ஆர்வம் ... கொண்டாட்டம் .. கேட்கவா வேண்டும் .

அந்த இனிய நாளும் வந்தது .... தீபாவளி திரு நாள் .....
மீனாக்ஷி தரிசனம் ..
நம்நாடு முதல் நாள் இரவே திரையரங்கில் களை கட்டியது ஆயிரக்ககணக்கில் ரசிகர்கள் கூட்டம் மீனாக்ஷி அரங்கில் சங்கமம் ...நூற்றுக்கணக்கான ஸ்டார்ஸ் , மற்றும் தோரணங்கள் கட்டப்பட்டு பட்டாசுகள் வெடித்து ரசிகர்கள் ஆரவாரமாய்
முதல் காட்சி பார்க்க உள்ளே மக்கள் வெள்ளத்தில் போராடி டிக்கெட் பெற்று உள்ளே சென்று அமர இடமில்லாமல் நின்று கொண்டே மக்கள் திலகத்தின் நம்நாடு பார்த்து மகிழ்ந்த அனுபவம் இன்றும் என்றும் மறக்க முடியாத ஒன்றாகும் .
நம்நாடு துவக்கம் முதல் இறுதி வரை அருமையான காட்சிகள் , இனிமையான பாடல்கள் ,இனிமையான இன்னிசை , மதியின் நடிப்பு , என்ற பல்வேறு அம்சங்களுடன் தீபாவளி விருந்தாக வந்த நம்நாடு மாபெரும் வெற்றி சித்திரமாகும் .

நடிகர் திலகத்தின் சிவந்த மண் .
மீனாக்ஷி அரங்கில் எந்த அளவிற்கு ஆர்பாட்டங்கள் இருந்ததோ அதே அளவு பாலசுப்ரமணியர் திரைஅரங்கில் நடிகர்திலகம் ரசிகர்கள் கூட்டம் அலைமோதி
திருவண்ணாமலை நகரமக்கள் திக்கு முக்காடி போனார்கள் என்பது உண்மை

மக்கள் திலகமும் நடிகர் திலகமும் தங்களுடைய ரசிகர்களுக்கு தீபாவளி விருந்தாக தங்கள் படங்களை வழங்கி ரசிகர்களை ஆனந்த வெள்ளத்தில் மிதக்க விட்ட அவர்களின் சாதனை களை என்றென்றும் மறக்க முடியாது
http://i45.tinypic.com/218kf8.jpg http://i47.tinypic.com/23maqt1.jpg http://i50.tinypic.com/28r02n5.jpg

EVER REMEMBERANCE
esvee
.



..




.

pammalar
12th August 2012, 03:57 PM
நடிகர் திலகத்துடன் திரு. ஏவிஎம்

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/NTAVM-1.jpg

12.8.2012 : அமரர் ஏ.வி.மெய்யப்பன் அவர்களின் 33வது ஆண்டு நினைவு தினம்.

பம்மல் ஆர். சுவாமிநாதன்.

pammalar
12th August 2012, 04:08 PM
டியர் ராகவேந்திரன் சார்,

திரு. ராகுல்ராம் பதிவுக்கு மேலும் மெருகூட்டும் வகையில் தாங்கள் பதித்துள்ள "அன்பைத் தேடி(1974)" பாடல் காணொளிகள் கனஜோர்.

'நடிகர் திலகமும் நடிப்புக் கோட்பாடும்' நெடுந்தொடரின் தொடக்கமே தூக்கிக் கொண்டு போய்விட்டது. தொடருங்கள்..,காத்திருக்கிறோம்..!

அன்புடன்,
பம்மலார்.

RAGHAVENDRA
12th August 2012, 06:27 PM
டியர் எஸ்வீ சார்,
1969 - மறக்க முடியாத ஆண்டு ... நடிகர் திலகத்தின் அத்தனை படங்களும் வெற்றிப் படங்களாய் அமைந்த ஆண்டு ... குருதட்சணை மற்றும் சற்றே தொய்வடைந்தது. தொடர்ச்சியாக வெளிவந்த படங்களின் எண்ணிக்கையால் ந.தி.யின் படங்களுக்கு அவர் படங்களே வில்லனாய் அமைந்த பல ஆண்டுகளில் 1969ம் ஒன்று ... பெரும் வசூலுடன் வெற்றி நடை போட்ட தங்க சுரங்கம் ... திருடன் என அனைத்துமே வெற்றிகரமாய் அமைந்தன. அந்த ஆண்டுக்கு அனைவரையும் அழைத்துச் சென்று விட்டீர்கள் .... நன்றி ...

அன்புடன்

RAGHAVENDRA
12th August 2012, 06:29 PM
டியர் பம்மலார் மற்றும் வாசு சார்,
அன்பைத் தேடி படக் காணொளி இணைப்புகளுக்கும் நடிப்புக் கோட்பாடு தொடருக்குமான தங்களுடைய பாராட்டுக்கு உளமார்ந்த நன்றி. தங்கள் அனைவரின் ஆதரவை ஆவலுடன் எதிர்நோக்குகிறேன்.
அன்புடன்

RAGHAVENDRA
12th August 2012, 06:40 PM
நடிகர் திலகமும் நடிப்புக் கோட்பாடுகளும்

நுழைவாயில்


"THE METHOD." Those are words which struck terror into the souls of many a Hollywood actor in the 1950s, exactly as the phrase "Talking Pictures" sobered up numerous film players in the late 1920s (and in a few cases did just the opposite, sending them straight to the bottle). Seemingly overnight, the acting style known as "the Method" blew into Hollywood, arriving with a tornado-like force not unlike that big wind which sent Dorothy Gale off to Oz - sending numerous A-, B- and C-grade actors scurrying off to learn this new acting style in order to save their careers.

What was, and is, "the Method"? It's a process by which actors behave naturally, stripping themselves of all artifi ce, using their emotional memory of past experiences and feelings to create a character's motivation. (It's worth noting that the man considered one of the greatest of all screen actors, Spencer Tracy, had been giving naturalistic performances for years, using a method quite his own.) Interestingly, this "Method" we'll be looking at on TCM this month was far from new at the time Americans embraced it. It started in Russia in the late 1890s, nurtured there by producer-director-theoretician Konstantin Stanislavsky, and was famously given new life (with adjustments) in America by the legendary Group Theatre in New York in the 1930s, then in the 1940s by several teachers such as Lee Strasberg, David Lewis and Elia Kazan at N.Y.'s Actors Studio.

reproduced from: http://www.tcm.com/this-month/article/275593%7C0/The-Method-And-the-Movies-Method-Acting-In-Hollywood.html

டொர்னடோ புயலைப் போல் திரையுலகைத் தாக்கிய அந்த வார்த்தை அனைத்து ரக நடிகர்களையும் தங்கள் வாழ்வாதாரத்தைக் காக்க, நடிப்பைக் கற்றுக்கொள்ள திக்கெட்டாய்ப் பறக்க வைத்தது. அது METHOD என்ற வார்த்தை.

METHOD - இது பொதுவான வார்த்தை அல்லவா ... இதற்கு ஏன் அவ்வளவு பரபரப்பு ... கேள்வி வரும் ... நியாயம்.
METHOD - இந்த வார்த்தையில் என்ன சிறப்பு ... இது ஏன் திரையுலகினரை பாதிக்க வேண்டும்...

METHOD என்பது ஒரு கோட்பாடு என்பதன் சின்னமாகும் ... ஸ்டானிலாவ்ஸ்கி வகுத்த நடிப்புக் கோட்பாடு System அல்லது METHOD என அழைக்கப் பட்டது. அதனுடைய தாக்கம் உலக அளவில் பரவி ஹாலிவுட்டை பரபரக்க வைத்தது என்றால் அந்த கோட்பாட்டின் மகிமை விளங்கும். ருஷ்ய நடிகர் ஸ்டானிலாவ்ஸ்கி வகுத்த கோட்பாடுகள் நடிப்பு என்கிற கலையின் பொதுவான பரிணாமங்களை வகுத்தளித்து அதன் மூலம் உலகமெங்கும் அது ஏற்றுக் கொள்ளத் தக்க வகையில் அமைந்தது. குறிப்பாக பேசும் படம் அறிமுகமான கால கட்டத்தில் அந்த கால நடிகர்கள் பெரும்பான்மையோர் இதனை ஒரு இலக்கணமாக ஏற்று நடித்தார்கள்.

தொடரும்

RAGHAVENDRA
12th August 2012, 08:06 PM
அபூர்வமான வாய்ப்பு ... இது வரை பார்க்காதவர்களுக்கு

எம் எம் மூவீஸ் - கெய்சர் கிரியேஷன்ஸ்

நடிகர் திலகம், சாருஹாசன், கார்த்திக், ஜீவிதா மற்றும் பலர் நடித்த

ராஜ மரியாதை ...


http://youtu.be/3zoMfW_tHeE

pammalar
12th August 2012, 08:12 PM
"ராஜ மரியாதை(1987)" காவியக் காணொளிக்கு ராஜராஜ நன்றிகள், ராகவேந்திரன் சார்..!

pammalar
12th August 2012, 08:14 PM
வரலாற்று ஆவணங்களை, நிகழ்ச்சிகளை, கொண்டாட்டங்களை பதிவு இடுவதில் மாமன்னரான பம்மலார் அவர்களே,
நான் எழுதியது மிக மிகக் குறைவு என்றாலும், தங்கள் பாராட்டு என்னை மிகுந்த உற்சாகமூட்டுகிறது. நேரம், வாய்ப்பு கிடைக்கும் சமயங்களில் உங்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய எனக்குத் தெரிந்தவைகளை பதிவாய் இடுகிறேன்.
எழுதத்தூண்டி, உற்சாகம் ஊட்டும் தங்களுக்கும், வாசுதேவனாருக்கும் கடமைப் பட்டவனாகினேன். மீண்டும் மீண்டும் நன்றி, நன்றி.
அன்புடன்.

கல்நாயக்கரே,

ஆ..எத்தினியாவது பார்ட்..ஆ.. நாபகம் வந்துச்சு..பத்தாவது பார்ட் ந.தி. திரியில ஒரு தபா பிராமின் பாஷலயும், உன்னொரு தபா 'செங்கோட' பாஷலயும் பேசுனீங்கல்ல.. அதுக்காக இந்த தபா உங்குல்கு replyஇ 'பலே மருது' மெட்ராஸ் பாஷையிலே..இன்னா..okவா..

மாமன்னர்ன்னு எனுக்கு ஐஸ் வச்சதுக்கு தேங்க்ஸ்..எனுக்கு பின்னாடி இன்னா 'படையா'குது. கூசாம 'மன்னருகின்னரு'ன்னு அட்ச்சு உடுறீங்க..அப்பப்ப ஏதாவது வந்து இங்க ஏதணும்..தெர்தா..அட இன்னா அதுக்குல்ல டபாய்க்கிறீங்க..உங்ககூட படா பேஜாராகுது.

உங்க 'அண்ணன்' கைல சொல்லி வைங்க..ஒயிங்கா இர்க்க சொல்லி.. இன்னா..வர்ட்டா..ஐய..

ரொம்ப ஜாலியாகவும், மிகுந்த உரிமையுடனும்,
உங்கள் பம்மலார்.

pammalar
12th August 2012, 08:16 PM
நடிகர் திலகத்துக்கு கௌரவம் : 2

ஃபிரான்ஸ் அளித்த அங்கீகாரம்

'செவாலியே' விருது விழா

22.4.1995 [சனிக்கிழமை]

எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியம் : சேப்பாக்கம் : சென்னை

தமிழக முதல்வர் கலைச்செல்வி டாக்டர் ஜெ. ஜெயலலிதா அவர்கள் தலைமை வகிக்க, ஃபிரான்ஸ் நாட்டுத் தூதர் திரு. ஃபிலிப் பெடிட் அவர்கள், தங்கள் நாட்டின் மிகமிக உயர்ந்த விருதான 'செவாலியே' விருதை, உலக நடிகர் திலகத்துக்கு வழங்கினார். சிங்காரச் சென்னையில் மிகப் பிரம்மாண்டமான முறையில் நடைபெற்ற இந்த விழாவுக்கு, இந்தியத் திரையுலகமே திரண்டு வந்து, நமது சிங்கத்தமிழனை வாழ்த்தி, பெருமை தேடிக் கொண்டது. அந்தக் கோலாகலமான விழாவின் வரலாற்று ஆவணங்கள் தொடர்கின்றன:

பொக்கிஷாதி பொக்கிஷம்

வரலாற்று ஆவணம் : தினத்தந்தி : 23.4.1995
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC6424-1.jpg

தொடரும்...

பக்தியுடன்,
பம்மலார்.

pammalar
12th August 2012, 09:14 PM
அன்புள்ள பம்மலார் சார், வாசுதேவன் சார் மற்றும் ராகவேந்தர் சார்....

எனது பதிவுகளைப் பாராட்டியமைக்கு மிக்க நன்றி.

பம்மலார் அவர்களே, தாங்கள் தவணைமுறையில் தந்துகொண்டிருக்கும் 'சந்திப்பு' வெற்றிக்காவியத்தின் விளம்பரப்பதிவுகள் அனைத்தும் சூப்பர். ஒன்றையொன்று மிஞ்சுகின்றன. ராகவேந்தர் அவர்கள் சொன்னதுபோல, 80க்கு முன்பே தலைவரின் சாதனைகள் முடிந்துவிட்டதுபோல பரப்பப்பட்டு வரும் மாயையை இவை தகர்த்து வருகின்றன. 'சந்திப்பு' வெள்ளிவிழாப்படம் என்பது நம்மில் பலருக்கே தெரியவில்லை என்பதுதான் சோகம். அந்த குறையை தங்கள் ஆவணங்கள் போக்கி வருகின்றன.

எங்க மாமா பற்றி பதிவுகள் இடப்படும் இவ்வேளையில் 'எங்க மாமா'வின் ஆவணப்பதிவுகளையும் தரலாமே. நம்முடைய வனவாச காலத்தில் இடம்பெற்ற படங்களில் அதுவும் ஒன்றல்லவா?. தங்களின் 'பராசக்தி' மறுவெளியீட்டு விளம்பரம் அட்டகாசம். மறுவெளியீடுகளின் விளம்பரங்களையும் தாங்கள் பத்திரப்படுத்தி வைத்திருப்பது வியக்க வைக்கிறது.

கலக்குங்கள்.....

டியர் mr_karthik,

நமது நடிகர் திலகத்தின் திரைக்காவிய முதல் வெளியீட்டு ஆவண பொக்கிஷங்களான விளம்பரங்களை,

மலர் மாலைகளாக வழங்கியபோது தாங்கள் மனமாரப் பாராட்டினீர்கள்...,

கதம்ப மாலைகளாகக் கட்டி அளித்தபோது அதைக்கண்டு தாங்கள் களிப்புடன் புகழ்ந்துரைத்தீர்கள்...,

தற்பொழுது ஒவ்வொரு ஆவணத்தையும், ஒவ்வொரு மலராக சற்றும் அதன் மணம் குன்றாமல் கொடுக்கும்போது, 'தவணை முறை'யில் தருகிறீர்கள் என்று ஒரு செல்ல இடி இடித்து பாராட்டுகிறீர்களே..தங்களது 'பஞ்ச்' பாராட்டை மிகமிக ரசித்தேன். [கோபப்பட வேண்டாம்..எல்லாம் ஒரு ஜாலிக்காகத்தான்..!]

"சந்திப்பு"க்குப்பின் "எங்க மாமா"வை எல்லோரையும் சந்திக்கச் செய்து விடவேண்டியதுதான்..!

"அன்பைத் தேடி(1974)" பாடல் காட்சிகள் பற்றிய தகவல் துளிகள் மிக அருமை..!

தங்களின் கலக்கல் பாராட்டுதல்களுக்கு எனது கனிவான நன்றிகள்..!

ஜாலிலோ ஜிம்கானா,
ஜீ..பூம்..பா..

pammalar
12th August 2012, 09:31 PM
அன்புக்குரிய பம்மலாரே!

எதிர்பார்ப்பு நிறைவேறி விட்டது. எங்கள் முத்தையா திரையரங்கில் 'சந்திப்பு' சாதனை படைத்த அந்த 50- ஆவது நாள் 'தினத்தந்தி' விளம்பரம் கடந்த மூன்று நாட்கள் பட்ட வேதனையை புறமுதுகு காட்டி ஓடச் செய்து விட்டது. மனம் லேசாகி ஆகாயத்தில் மிதப்பது போன்றதொரு உணர்வு. பெருமை பொங்க வைக்கும் இந்த அற்புதப் பதிவை அளித்த தங்களுக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப தேங்க்ஸ். அடுத்தவர்களை சந்தோஷப்படுத்திப் பார்க்கும் தங்கள் பொன்னான மனம் வாழ்க! வசூல் பிரளயத்திற்கு மறு பெயர் நம் 'வணங்காமுடி' தானோ!

டியர் வாசுதேவன் சார்,

தங்களது ரொம்ப ரொம்ப ரொம்ப பாராட்டுக்கு எனது கொஞ்சூண்டு தேங்க்ஸ்..!

அன்புடன்,
பம்மலார்.

pammalar
12th August 2012, 09:32 PM
அருமையான பதிவுகளை தொடர்ந்து இங்கே அளித்துவரும் esvee சார், தங்களுக்கு எங்களது அன்பான நன்றிகள்..!

pammalar
12th August 2012, 11:01 PM
காவியக் காட்சிகள் : 4

பொக்கிஷாதி பொக்கிஷம்

வாணி ராணி(1974)

'பேசும் படம்' இதழிலிருந்து...

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC6425-1.jpg

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC6426-1.jpg

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC6427-1.jpg

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC6428-1.jpg

பக்தியுடன்,
பம்மலார்.

vasudevan31355
13th August 2012, 09:33 AM
நடிகர் திலகத்தின் ஸ்டைல் சண்டைக் காட்சிகள் (வீடியோ தொடர்) 4.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_01_2VOB_000373490.jpg

படம்: தங்கச் சுரங்கம்

வெளிவந்த ஆண்டு: 1969

தயாரிப்பு: E.V.ராஜன் ('தங்கச்சுரங்கம்' காவியத்தில் கதாநாயகர் நடிகர் திலகத்தின் பெயரும் படத் தயாரிப்பாளர் பெயர் 'ராஜன்'தான்)

சண்டைப் பயிற்சி: திருவாரூர் M.S.தாஸ்

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_01_1VOB_000236875.jpg

இயக்கம்: ராமண்ணா

இந்த அற்புதமான சண்டைக்காட்சியை அன்பு கார்த்திக் சாருக்கு ஆனந்தத்தோடு சமர்ப்பிக்கிறேன்.

சும்மா பொறி பறக்கும் சண்டைக்காட்சி. படு ஸ்லிம்மாக காலேஜ் மாணவன் போல் நடிகர் திலகம். பாரதியை விசாரணை செய்யும் இடத்தில் பேச்சுக் கொடுத்தபடியே ஒளிந்திருக்கும் எதிரிகளை கண்டு பிடித்து கொடுக்கும் "அட்டாக்"... ஸ்டைலாகவும், லாவகமாகவும் புகுந்து விளையாடும் நம் தங்க ராஜாவின் 'கும் கும்' குத்துக்கள்... சும்மா சுறுசுறுப்பும், விறுவிறுப்பும் நிறைந்த நெத்தியடி பைட். ஜேம்ஸ்பாண்டுக்கே உரிய ஜாக்கிரதை உணர்வு... புத்திசாலித்தன பிரதிபலிப்பு... வேகம்... விவேகம் என ஒருசேரக்கலந்து கலைக்குரிசில் கலக்கும் கலக்கல் பைட்.

என்ன ஒரு ஸ்டைலான கலக்கல் டிரஸ்! எதிரிகளை துவம்சம் புரிந்து விட்டு பாரதியிடம் வந்து "மேடம், இதெல்லாம் உங்க ஏற்பாடா?... இவங்கல்லாம் உங்க ஆட்களா?...எப்படி நம்ம விளையாட்டு! (இந்த இடத்தில் அவரது முகத்தில் பொங்கி வழியும் அந்தப் பெருமையைப் பார்க்க வேண்டுமே!) இப்பவாவது உண்மையை சொல்லுங்க,"... என்று கைகளில் உள்ள கிளவுசைக் கழற்றிய படியே ஷர்ட் பாக்கெட்டிலிருந்து 'தம்' மை எடுத்து, படு ஸ்டைலாக வாயில் வைத்து, மேட்ச் பாக்ஸை எடுத்து, பாரதி அணிந்துள்ள மேலாடையின் பின்புறமுள்ள கொக்கியில் வத்திக்குச்சியை உரசி சிகரெட்டை பற்ற வைக்கும் அந்த அட்டகாச அமர்க்கள ஸ்டைலை என்னவென்று சொல்வது! ஸ்டைலில் எல்லோருக்கும் 'அப்பன்' அல்லவா அவர்! அனைத்து நடிகர்களுக்கும், ஏன் அனைத்து மனிதர்களுக்கும் 'ரோல் மாடல்' நடிகர் திலகம் தானே!

முதன்முறையாக இணையத்தில் தரவேற்றி உங்களுக்காக


http://www.youtube.com/watch?v=Ti7xJd4q18c&list=UUzu2kbRXnmwh4-gNJWeCCdg&feature=player_detailpage

அன்புடன்,
வாசுதேவன்.

KCSHEKAR
13th August 2012, 11:34 AM
KARNAN, Housefull show - 150th Day at Sathyam Theatre (12-08-2012)

http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/304582_3070152732539_15092490_n.jpg

RAGHAVENDRA
13th August 2012, 11:39 AM
டியர் பம்மலார்,
செவாலியே விழா மற்றும் வாணி ராணி பதிவுகள் தொடர்ந்து தங்களுடைய புகழ்க் கிரீடத்தில் வைரக்கற்களாய் மின்னுகின்றன. பாராட்டுக்கள்.

மது ஒழிப்பு இயக்கத்தின் சார்பில் திரு முத்துக்குமார் அவர்கள் வெளியிட்டுள்ள போஸ்டர்

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/muthukumarposter.jpg

RAGHAVENDRA
13th August 2012, 11:40 AM
டியர் வாசுதேவன் சார்
ஸ்டைலோ ஸ்டைல் ..சூப்பர் ஸ்டைல் ... நான் நடிகர் திலகத்தின் சண்டைக் காட்சியை மட்டும் சொல்ல வில்லை ... அந்தக் காட்சியை நீங்கள் தந்திருக்கும் விதத்தையும் சேர்த்துத் தான் சொல்கிறேன்.

பாராட்டுக்கள்.

uvausan
13th August 2012, 12:56 PM
Dear KC

Kindly correct me - it is 159 days on 12th Aug and not 150th day - we all enjoyed all your great contributions , Pammalar and others on 4th event which was meant for celebrating 150th day - every day matters to celebrate yet another milestone. Regards

mr_karthik
13th August 2012, 01:27 PM
அன்புள்ள வாசுதேவன் சார்,

முதலில் பிடியுங்கள் பாராட்டுக்களை.. என்ன ஒரு அட்டகாசமான ஸ்டண்ட் காட்சி. இதற்காகத்தான் தாங்கள் சண்டைக்காட்சிகள் சீரியலைத் துவக்கியபோதே, 'தங்கச்சுரங்கம் ஓட்டல் அறை சண்டைக்காட்சியை மறாவாமல் வையுங்கள்' என்று வேண்டுகோள் விடுத்தேன். (நான் கேட்காவிட்டாலும் நீங்கள் மறக்க மாட்டீர்கள் என்பது தெரியும்). ஆனால் அதை எனக்கே டெடிகேட் செய்த தங்கள் அன்பினைப்பார்த்து சிலிர்த்துப்போனேன். இரண்டு ஸ்டண்ட்மென்களின் கழுத்தைக் கட்டிக்கொண்டு தொங்கும்போது டூப் இல்லாமல் தானே செய்திருக்கும் அழகு. அடி ஒவ்வொன்றும் இடியாக இறங்கும் வேகம். எதைச்சொல்வது எதைவிடுவது..?.

கடைசியில் நீங்கள் குறிப்பிட்ட சிகரெட் பற்ற வைக்கும் ஸ்டைலைப்பற்றி ஒரு விஷயம். தங்கச்சுரங்கம் வெளியானதிலிருந்து இயன்றவரை எப்போது எங்கே மறுவெளியீடு ஆனாலும் பார்த்துவிடுவதி வழக்கமாகக் கொண்டிருந்தேன். அப்போது வீடியோ எல்லாம் ஏது?. அப்படி ஒருமுறை ஒட்டேரி சரவணா தியேட்டரில் மறுவெளியீட்டில் பார்த்துக் கொண்டிருக்கும்போது, நம் ரசிகர் அல்லாத ஒருவர் அந்த சிகரெட் பற்றவைக்கும் ஸ்டைலைப்பார்த்து விட்டு, 'அட, இவர் அப்பவே இதெல்லாம் செஞ்சுட்டாருப்பா. இதைப்பார்த்துதால் நம்ம ஆள் காப்பியடிச்சிருப்பார் போலிருக்கு' என்று தன்னையும் அறியாமல் உண்மையை வெளியிட்டார். கேட்டுக்கொண்டிருந்த எனக்குப் பெருமையாக இருந்தது.

'தங்கை' படத்திலேயே நடிகர்திலகத்தின் படங்களில் சண்டைக்காட்சிகள் இடம்பெறுவது துவங்கியபோதிலும், இடையில் 68-ல் வெளியான கலாட்டா கல்யாணம், லட்சுமி கல்யாணம், உய்ர்ந்த மனிதன் படங்களில் சண்டைக்காட்சிகள் இல்லாமல், அப்படி இருந்தாலும் அவ்வளவு சுவாரஸ்யம் இல்லாமல் இருந்த நேரத்தில் 'தங்கச்சுரங்கம்' மற்றும் 'திருடன்' படங்களில்தான் மீண்டும் அதிவேக சண்டைக்காட்சிகள் இடம்பெற்றன. பின்னர் இது தொடர்ந்தது. இரண்டு படங்களுக்குமே திருவாரூர் தாஸ் அவர்கள்தான் சண்டைப்பயிற்சியாளர். 'திருடனில், திருடிய குழந்தையைத் திருப்பிக்கேட்குமிடத்தில் நடக்கும் சண்டை அதியற்புதம். இதில் திருவாரூர் தாஸ் அவர்களே நடிகர்திலகத்துடன் சண்டை போடுவார். அதேபோல ஓடும் ரயிலின் கூரைமீது நடக்கும் சண்டையும்.

ஒரு சங்கடமான விஷயத்தையும் இங்கே சொல்ல வேண்டும். இடையில் 'சிவந்த மண்' படத்துக்கு மாற்று முகாம் ஸ்டண்ட் மாஸ்ட்டரை ஸ்ரீதர் ஒப்பந்தம் செய்ய, அவரு வரும்போதே எவ்வளவு சொதப்ப முடியுமோ அவ்வளவு சொதப்பும்படியாக துர்ப்போதனை செய்யப்பட்டு இங்கே அனுப்பப் பட்டார். அவரும் அதை செவ்வனே செய்து தன் விசுவாசத்தைக் காட்டிக்கொண்டார். அதனால்தான் விமானத்தில் தேங்காயுடன் போடும் சண்டையும் சரி, தனக்கு துரோகம் செய்த செஞ்சிகிருஷ்ணனுடன் செயற்கை ஆற்றோரத்திலும் ஆற்றுக்குள்ளேயும் நடக்கும் சண்டையும் சரி, கிளைமாக்ஸில் நம்பியாருடன் நடக்கும் பலூன் சண்டைக்காட்சியும் சரி சுவாரஸ்யமில்லாமல் போனது. சிறையிலிருந்து தப்பிக்கும்போது நடக்கும் சண்டைக்காட்சி மட்டுமே சற்று ஆறுதலாக இருந்தது.

அருமையான 'தங்கச்சுரங்கம்' சண்டைக்காட்சியை பதிவிட்டு, அதையும் எனக்கு டெடிகேட் செய்த தங்கள் பரந்த மனதுக்கு இதயம் நிறைந்த நன்றிகள்.

vasudevan31355
13th August 2012, 01:56 PM
அன்பு பம்மலார் சார்,

அமரர் ஏ.வி.மெய்யப்பன் அவர்களின் 33வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு தாங்கள் வழங்கியுள்ள 'நடிகர் திலகத்துடன் திரு. ஏவிஎம்'
நிழற்படம் விருந்து. இருவருக்கும் இடையே உள்ள ஆழமான நட்பை இந்த நிழற்படம் அழகாகப் பிரதிபலிக்கிறது.

'செவாலியே' விருது விழா 'தினத்தந்தி' பதிவு பரமானந்தம். அனைத்து திரையுலக கலைஞர்களும் நடிகர் திலகத்தை வானளாவப் புகழ்ந்திருப்பது எல்லையில்லா மகிழ்ச்சியை அளிக்கிறது.

'வாணி ராணி' பேசும்படப் பதிவுகள் வாவ். கிரேட்!

vasudevan31355
13th August 2012, 01:56 PM
டியர் ராகவேந்திரன் சார்,

'நடிகர் திலகமும் நடிப்புக் கோட்பாடுகளும்' நுழைவாயில் அற்புதம். ஸ்டானிலாவ்ஸ்கி வகுத்த நடிப்புக் கோட்பாட்டுகளுக்கு உலக அளவில் எவ்வளவு அங்கீகாரம் கிடைத்தது என்று தாங்கள் விளக்கியிருப்பது அருமை! பல அறிவு சார்ந்த விஷயங்கள் வரத் தொடங்கியுள்ளன. நன்றிகள் சார்.

'ராஜ மரியாதை' முழு படத்தையும் காண வைத்ததற்கு மிக்க நன்றிகள்.

vasudevan31355
13th August 2012, 01:57 PM
டியர் வினோத் சார்,

சிவந்த மண், நம்நாடு பற்றிய பதிவுகள் நன்று.

mr_karthik
13th August 2012, 02:16 PM
அன்புள்ள பம்மலார் சார்,

தங்கள் நகைச்சுவையை நானும் ரசித்தேன். 'சந்திப்பை'த்தொடர்ந்து எங்கமாமாவை சந்திக்க இருக்கிறோம் என்ற செய்தி தேனாய் இனித்தது. செவாலியே விருது விழாவின் தொடர் செய்திகளின் ஆவணங்களைப பதிவிட்டு அசத்தியுள்ளீர்கள்.

அத்துடன், எதிர்பாரா வண்ணம், 'வாணி ராணி' திரைக்காவியத்தின் பேசும்படம் இதழின் சிறப்புப் பக்கங்களை அதிரடியாக பதிவிட்டு ஆச்சரியப்படுத்தியுள்ளீர்கள். அனைத்தும் மிக மிக அருமை.

பாராட்டுக்கள், நன்றிகள்.

vasudevan31355
13th August 2012, 02:43 PM
'வாணி ராணி' பத்திரிகை விளம்பரம்


http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/v2-2.jpg

vasudevan31355
13th August 2012, 02:48 PM
'வாணி ராணி' கல்கி விமர்சனம்

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/v1-4.jpg

('வாணி ராணி' ஆவணங்களைத் தந்து உதவிய 'வியட்நாம்' கோபால் அவர்களுக்கு நன்றி!)

Thanks Gopal sir.

vasudevan31355
13th August 2012, 03:22 PM
'வாணி ராணி' யின் மூலம் 'சீதா அவுர் கீதா' ஹிந்தி ஆகும். 1972-இல் வெளிவந்த இப்படத்தின் நாயகிகள் கனவுக்கன்னி ஹேமமாலினி மற்றும் கனவுக்கன்னி ஹேமமாலினி. தர்மேந்திரா ஏற்றிருந்த கழைக்கூத்தாடி ரோலை நம்மவரும், சஞ்சீவ்குமார் ஏற்றிருந்த டாக்டர் ரோலை முத்துராமன் அவர்களும், ஹேமமாலினி ரோல்களை வாணிஸ்ரீயும் ஏற்று திறம்பட நடித்திருந்தனர். மியூசிக் ஹிந்தியில் ஆர்.டி. பர்மன். தமிழில் 'திரை இசைத் திலகம்' அவர்கள். G.P. SIPPY அவர்கள் தயாரிப்பில் வெளிவந்து ஹேமமாலினியின் மார்க்கெட்டை எங்கோ கொண்டு போய் தூக்கி நிறுத்திய படம்.

'சீதா அவுர் கீதா'

http://i887.photobucket.com/albums/ac76/desiess/Punjabi/front-36.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/v4-2.jpg

தலைவர் பின்னி எடுத்த கழைக்கூத்தாடி ரோலில் தர்மேந்திரா

http://i887.photobucket.com/albums/ac76/desiess/Punjabi/2-53.png

'கீதா' வாக அட்டகாசம் புரியும் ஹேமமாலினி

http://cinemachaat.files.wordpress.com/2012/03/geeta-and-sword.png

முத்துராமன் ரோலில் சஞ்சீவ்குமார்.

http://img171.imageshack.us/img171/3462/snapshot2yh.png

'வாணி ராணி'யில் முத்துராமனும், வாணிஸ்ரீயும் ஸ்கேட்டிங் செய்து கொண்டே பாடுவதாக வரும் "பூமியில் தென்றல் பொன்னாடை போடுது" பாடல் வீடியோ.


http://www.youtube.com/watch?v=zONNoTx_1NA&feature=player_detailpage

'சீதா அவுர் கீதா' ஹிந்தியில் சஞ்சீவ் குமாரும், ஹேமமாலினியும் ஸ்கேட்டிங் செய்து கொண்டே பாடுவதாக வரும் "ஒ சாத்தி சல்".... பாடல் வீடியோ.


http://www.youtube.com/watch?v=0w5yv7-cPfs&feature=player_detailpage

KCSHEKAR
13th August 2012, 03:28 PM
Dear KC

Kindly correct me - it is 159 days on 12th Aug and not 150th day - we all enjoyed all your great contributions , Pammalar and others on 4th event which was meant for celebrating 150th day - every day matters to celebrate yet another milestone. Regards

Aug -12 is 150th day (150th day celebrated in advance) (Re-release date is March 16)

vasudevan31355
13th August 2012, 03:30 PM
'வாணி ராணி'யில் 'முல்லை பூ பல்லக்கு போவதெங்கே' கம கமக்கும் கானம்.


http://www.youtube.com/watch?v=x62UuhIMT4w&feature=player_detailpage

KCSHEKAR
13th August 2012, 03:34 PM
டியர் வாசுதேவன் சார்,

வாணி ராணி - 'சீதா அவுர் கீதா' என்று உங்களுடைய பதிவுகள் கலக்கல்.

சண்டைக்காட்சிகள் தொடர் விறுவிறுப்பாகச் செல்கிறது. நன்றி.

kalnayak
13th August 2012, 03:46 PM
டியர் ராகவேந்திரன் சார்,

நீங்கள் எழுதிக் கொண்டிருக்கும் 'நடிகர் திலகமும் நடிப்புக் கோட்பாடுகளும்' தொடர் சிறப்பாக துவங்கப்பட்டுள்ளது. அனைவரது எண்ணங்களிலும் நிற்கும் வகையில் அமைந்துள்ளது. தொடர்ந்து அனைவரது பாராட்டையும் பெறும் என்பதில் துளியளவும் சந்தேகமே இல்லை. நடிப்பு கோட்பாடு கட்டுரை நடிகர் திலகத்தை தவிர்த்து யாரை வைத்து எழுத முடியும். அதுவும் அவரின் தீவிர ரசிகரால் எழுதப்படுவது அவருக்கும் அவரது ரசிகர்களுக்கும் மட்டுமே சாத்தியமாகும்.

'இங்கிவரை நாம் பெறவே என்ன தவம் செய்து விட்டோம்?' என்பது நடிகர் திலகத்தை தமிழகம் பெற்றதற்கு மட்டுமல்ல தங்களையும் இத்திரி பெற்றதற்கு கேட்கப்பட வேண்டிய கேள்வியாகும்.

அன்புடன்.

kalnayak
13th August 2012, 04:10 PM
இந்த திரியின் சிறப்பே, நடிகர் திலகத்தின் திரைப்படத்தின் கதையின் மூலம் என்ன, அது வேற்று மொழி திரைப்படமாயின் அது வெற்றிபடமா?, அதில் நடித்த நடிகர்களின் நடிப்பு எவ்வாறு இருந்தது?, மற்ற தொழில் நுட்ப கலைஞர்கள் பங்கு எப்படி? நடிகர் திலகத்தின் படம் பின்பு எந்த மொழியில் திரைப்படமாக்கப்பட்டது?, அதில் பங்கேற்றவர்களின் திறமை எப்படி? போன்ற விபரங்கள், ஒப்பீடுகள் - நடிகர் திலகத்தின் ரசிகர்கள் எவ்வளவு ஞானம் உடையவர்களாய் இருக்கிறார்கள் என்பதை பறை சாற்றுகிறது. வாசுதேவன் சாரின் 'வாணி ராணி' அலசல் இதை மீண்டும் நிரூபிக்கிறது.

நானும் இந்த படத்தை பார்த்திருக்கிறேன். 'முல்லை பூ பல்லக்கு' மிகவும் பிரபலமான நல்ல பாடல். இதில் nt அவர்கள் கௌரவ வேடத்தை விட சற்றே பெரிய வேடத்தில் நட்புக்காக நடித்திருப்பார். இந்த படமும் நன்றாக 100-நாட்கள் ஓடி வெற்றி கண்டது. 'கல்கி' இதழின் பாராட்டிற்கு மேல் வேறு என்ன நான் சொல்ல?

KCSHEKAR
13th August 2012, 04:21 PM
டியர் பம்மலார்,

சந்திப்பு, செவாலியெ விருது விழா செய்திகள் தொடர்ச்சி, மற்றும் 'வாணி ராணி' - பேசும்படம் இதழின் சிறப்புப் பக்கம் என்று தஙகளின் ஆவணப் பதிவுகள் அருமை. பாராட்டுக்கள்.

kalnayak
13th August 2012, 04:31 PM
கல்நாயக்கரே,

ஆ..எத்தினியாவது பார்ட்..ஆ.. நாபகம் வந்துச்சு..பத்தாவது பார்ட் ந.தி. திரியில ஒரு தபா பிராமின் பாஷலயும், உன்னொரு தபா 'செங்கோட' பாஷலயும் பேசுனீங்கல்ல.. அதுக்காக இந்த தபா உங்குல்கு replyஇ 'பலே மருது' மெட்ராஸ் பாஷையிலே..இன்னா..okவா..

மாமன்னர்ன்னு எனுக்கு ஐஸ் வச்சதுக்கு தேங்க்ஸ்..எனுக்கு பின்னாடி இன்னா 'படையா'குது. கூசாம 'மன்னருகின்னரு'ன்னு அட்ச்சு உடுறீங்க..அப்பப்ப ஏதாவது வந்து இங்க ஏதணும்..தெர்தா..அட இன்னா அதுக்குல்ல டபாய்க்கிறீங்க..உங்ககூட படா பேஜாராகுது.

உங்க 'அண்ணன்' கைல சொல்லி வைங்க..ஒயிங்கா இர்க்க சொல்லி.. இன்னா..வர்ட்டா..ஐய..

ரொம்ப ஜாலியாகவும், மிகுந்த உரிமையுடனும்,
உங்கள் பம்மலார்.

கலக்கிட்டீங்க பம்மலாரே!!!

உங்கள் மற்றும் ரசிக சகோதரர்களின் பங்களிப்பு தொடராத அத்தருணத்தில், எல்லோரையும் வேண்டிக்கொள்ள அவ்வாறு அவதாரம் எடுத்துக்கொள்ள வேண்டியாதாகியது. நானும் 'பலே பாண்டியா' மருது-வின் மதராஸ் பாஷையில் எனது விண்ணப்பத்தை எழுதி பதிவிடும் போது, சில குறைகளை கண்டு, அவைகளை தவிர்த்து பின்னர் பதிக்கலாம் என்றெண்ணி, விட்டுவிட்டேன். பின்னர் இத்திரியை கண்டதால் தேவை இல்லாமல் ஆகிப்போனது. இப்போது நீங்கள், நான் விட்டுவிட்ட அதே பாஷையில் பதில் அளிக்கின்றீர். என்ன இருந்தாலும் மதராஸ்வாசி ஆயிற்றே நீர் - உங்கள் மதராஸ் பாஷை... ஆஹா அற்புதம்!!!

mr_karthik
13th August 2012, 07:12 PM
பம்மலார் அவர்களும், வாசுதேவன் அவர்களும் 'வாணி ராணி' படம் பற்றிய பல்வேறு ஆவனங்களைப் பதித்துவரும் இவ்வேளையில், வசந்த மாளிகை வெள்ளிவிழாவில் இரு கதாநாயகிகளுக்குள் நடந்த உரையாடல் நினைவுக்கு வருகிறது. (நான் பத்திரிகையில் படித்தது. அது குமுதமா அல்லது பொம்மையா என்பது நினைவில் இல்லை).

'வசந்த மாளிகை' வெள்ளிவிழாவில் கலந்துகொள்வதற்காக அதன் இந்திப்பதிப்பான 'பிரேம்நகர்' படத்தில் நடித்து வந்த ராஜேஷ்கன்னா மற்றும் ஹேமாமாலினி வந்திருந்தனர்.

அப்போது, ஏற்கெனவே வசந்தமாளிகையில் நடித்தவரும் அப்போது வாணிராணி படத்தில் நடித்து வந்தவருமான வாணிஸ்ரீயும், ஏற்கெனவே சீதா அவுர் கீதாவில் நடித்தவரும், அப்போது பிரேம்நகர் படத்தில் நடித்து வந்தவருமான ஹேமாமாலினியும் அருகருகே அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.

அப்போது வாணிஸ்ரீ கேட்டாராம் "அந்த சீலிங் ஃபேன் காட்சியில் எப்படி நடித்தீர்கள்?. நான் நடித்தபோது என் வெயிட் தாங்காமல் மூன்று முறை சீலிங்ஃபேன்களின் இறக்கை வளைந்து கீழே விழுந்து விட்டேன். நல்லவேளையாக முன்னெச்சரிக்கையாக கீழே நிறைய ஸ்பாஞ்ச் போட்டு வைத்திருந்ததால் அடிபடாமல் தப்பினேன். நீங்க நடித்தபோது அப்படி ஏதும் நிகழ்ந்ததா?" என்று கேட்க...

அதற்கு ஹேமாமாலினி "எனக்கு எந்தப்பிரச்சினையும் இல்லை. ஏனென்றால் எனக்காக நல்ல கனமானதும் அகலமானதுமான ஒரு ஃபேனையே ஷூட்டிங்குக்காகவே தயார் செய்து விட்டார்கள். அதனால் நான் கீழே விழும் நிலை ஏற்படவில்லை. ஏன், இங்குள்ள தயாரிப்பாளரோ அல்லது டைரக்டரோ முன்பே இதுபற்றிக்கேட்டிருக்கலாமே" என்று கூலாக பதில் சொன்னாராம்.

RAGHAVENDRA
13th August 2012, 09:35 PM
டியர் ராகவேந்திரன் சார்,

நீங்கள் எழுதிக் கொண்டிருக்கும் 'நடிகர் திலகமும் நடிப்புக் கோட்பாடுகளும்' தொடர் சிறப்பாக துவங்கப்பட்டுள்ளது. அனைவரது எண்ணங்களிலும் நிற்கும் வகையில் அமைந்துள்ளது. தொடர்ந்து அனைவரது பாராட்டையும் பெறும் என்பதில் துளியளவும் சந்தேகமே இல்லை. நடிப்பு கோட்பாடு கட்டுரை நடிகர் திலகத்தை தவிர்த்து யாரை வைத்து எழுத முடியும். அதுவும் அவரின் தீவிர ரசிகரால் எழுதப்படுவது அவருக்கும் அவரது ரசிகர்களுக்கும் மட்டுமே சாத்தியமாகும்.

'இங்கிவரை நாம் பெறவே என்ன தவம் செய்து விட்டோம்?' என்பது நடிகர் திலகத்தை தமிழகம் பெற்றதற்கு மட்டுமல்ல தங்களையும் இத்திரி பெற்றதற்கு கேட்கப்பட வேண்டிய கேள்வியாகும்.

அன்புடன்.

டியர் கல்நாயக்,
தங்களுடைய பாராட்டுரை உள்ளபடியே எனக்கு மகிழ்ச்சியினையும் அச்சத்தினையும் ஒரு சேர தருகிறது. தங்களுடைய அன்புரையும் பாராட்டுரையும் மேலும் ஊக்கமும் தெம்பும் தருகின்றன. அதே நேரத்தில் அதனைத் தொடர்ந்து தக்க வைக்க வேண்டும் என்கிற அச்சமும் உருவாகிறது. ஆனால் அந்த அச்சமே ஒரு வகையில் உந்து சக்தியாகவும் மாறி எண்ணத்தில் வலு சேர்க்கிறது. தங்களுக்கு என் உளமார்ந்த நன்றி.

அன்புடன்
ராகவேந்திரன்

RAGHAVENDRA
13th August 2012, 09:37 PM
டியர் கார்த்திக்,
தாங்கள் கூறியது போல் வாணி ராணி மின் விசிறி காட்சி மிகப் பிரசித்தம். குறிப்பாக ஹிந்தி திரைப்படத்தின் விளம்பரங்களில் கூட அந்தக் காட்சி இடம் பெற்றது பசுமையாக நினைவில் உள்ளது.

தொடர்ந்து தங்களுடைய நினைவுகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.

அன்புடன்
ராகவேந்திரன்

RAGHAVENDRA
13th August 2012, 09:42 PM
இன்று வந்த தகவலின் படி, திருவிளையாடல் திருக்காவியம் மிகவும் சிறப்பாக வந்துள்ளதாக தெரிகிறது. இன்று மாலை அப்படத்தின் சில காட்சிகள் சோதனையாக திரையிடப் பட்டதாகவும் தொழில் நுட்பம் மிக அற்புதமாக கையாளப் பட்டுள்ளதாகவும் தகவல். அதுவும் குறிப்பாக ஒலியமைப்பு மிகத் துல்லியமாக அமைந்துள்ளதென சொல்கிறார்கள். ஒளியமைப்புகள் ஜெர்மனியிலும் ஒலியமைப்பு லண்டனிலும் நவீனப் படுத்தப் பட்டுள்ளதாகவும் தகவல். மேலும் சில காட்சிகள் கிராபிக்ஸ் அட்டகாசமாக செய்துள்ளார்கள் எனவும் கூறப் படுகிறது.

சுருங்கச் சொல்லின், கர்ணனை விட இன்னும் சிறப்பாக வந்துள்ளதாக சொல்கிறார்கள். சரியான முறையில் சற்று கால அவகாசம் எடுத்துக் கொண்டு promote செய்தால், கர்ணனை விட மேலும் அதிக அளவில் வெற்றி பெறுவதற்கான சாத்தியக் கூறுகள் மிகவும் பிரகாசமாக உள்ளன.

ஆவலுடன் காத்திருப்போம்.

vasudevan31355
13th August 2012, 09:44 PM
அன்பு கார்த்திக் சார்,

தொடர் மழையாக தாங்கள் அளித்து வரும் பாராட்டுக்களுக்கும், ஊக்கத்திற்கும் என் உள்ளம் கனிந்த நன்றிகள். நடிகர் திலகத்தின் ஸ்டன்ட் காட்சிகளை தொகுத்தளிக்க வேண்டும் என்பது என் நீண்ட நாளைய அவா. ரசனை சிகரமான தாங்கள் உள்ளம் மகிழ்ந்து பாராட்டியுள்ளது பெரு மகிழ்ச்சியை அளிக்கிறது. பல நேரங்களில் உங்கள் ரசனையை கண்டு நான் வியந்து போய் இருக்கிறேன். என்ன இது நம் மனதில் உள்ளதை எல்லாம் (சொல்ல முடிந்தவற்றையும் சரி... சொல்ல முடியாதவற்றையும் சரி) இவர் கண்ணாடி போல் பிரதிபலித்து விடுகிறாரே என்று மலைப்பாகக் கூட தோன்றும். பொதுவாகவே நம் ரசிகர்களுக்கு நம் தலைவரைப் பற்றிய பொதுவான சில கண்ணோட்டங்கள் ஒத்துப் போகும். உதாரணமாக அவர் பட்டையை கிளப்பிய காவியங்களில் அவரது முக பாவங்கள், ஸ்டைல், நடை உடை பாவனை என்று ரசனை என்பது எல்லோரும் சிலாகிக்கும் அளவிற்கு ஒற்றுமை இருக்கும்.

ஆனால் சில விஷயங்களில் அதையும் தாண்டிய ரசனைகள், அவரைப் பற்றிய விருப்பு வெறுப்புகள், இது இப்படி இருந்திருக்கலாம்... இப்படி செய்யாமல் இருந்திருக்கலாம் என்று அவரது விஷயங்களிலும், அவர் சார்ந்த அல்லது சாராத பல விஷயங்களிலும் தங்கள் கருத்துக்கள் அப்படியே என் கருத்துக்களுடன் ஒத்துப் போவதை நினைக்கையில் ஆச்சர்யமாக இருக்கும். உதாரணத்திற்கு உங்களுடைய இன்றைய பதிவையே எடுத்துக் கொள்ளுங்களேன். சிவந்த மண்ணில் தேங்காயுடன் தான் தலைவர் மோத வேண்டுமா? தேங்காய் சீனிவாசன் ஒரு சீரியஸான வில்லனா? அவ்வளவு எதிர்பார்ப்புகளுக்குள்ளான ஒரு படத்திற்கு ஒரு காமெடி நடிகருடன் சண்டைக்காட்சி, அதுவும் படத்தின் முதல் சண்டைக்காட்சி. எப்படி விறுவிறுப்பாக வந்திருக்க வேண்டியது? அவ்வளவு பெரிய இயக்குனருக்கு இது தெரியாமல் போனது ஆச்சரியமே! அது போல பலூன் சண்டைக்காட்சி... தலைவரின் உழைப்பு வீணாக்கப் பட்டிருக்கும். பார்த்துப் பார்த்து படத்தை இழை இழையாக செதுக்கி முக்கியமான விஷயங்களில் கோட்டை விட்டு விடுவார்கள். அது ஒரு ஆக்ஷன் ஓரியண்டட் படம். சண்டைக்காட்சிகளுக்கு மிக முக்கியத்துவம் உள்ள படம். அதில் போய் சொதப்புவார்கள். ஆனால் நீங்கள் கூறியுள்ளது போல அந்த ஜெயில் சண்டைக்காட்சியில் தலைவர் தூள் பரத்தி விடுவார் என்பது பெரிய ஆறுதல். அவர் எல்லாவற்றிக்கும் ரெடி... ஆனால் மற்றவர்கள் அறிந்தோ அறியாமலோ செய்யும் தவறுகளுக்கு அவர் தலைதான் உருளும். சிவந்த மண்ணிற்காக டோட்டல் டீமும் செலுத்திய உழைப்பு அபாரத்திலும் அபாரம். ஆனால் இது போன்ற விஷயங்களில் போதிய கவனம் செலுத்தியிருந்தால் பிரம்மாண்ட வெற்றி பெற்ற சிவந்த மண் இன்னும் பல உச்சங்களைத் தொட்டிருக்கும் என்பது திண்ணம். இது போன்ற பல கருத்துக்களில் நம் இருவருக்கும் ஒற்றுமை உண்டு. எங்க மாமாவில் கூட நான் பலமுறை 'என்னங்க' பாடலில் (ஜெயலிதா அவர்களின் மேக்கப் மற்றும் டிரஸ்} நீங்கள் குறிப்பிட்ட அந்தக் கருத்துக்களை அப்படியே மனதில் நினைத்தது தான்.

இன்னுமொரு உதாரணம். 'பாவை பாவைதான்' பாடல். அதைப்பற்றிய தங்கள் கருத்து அப்படியே என் மனதின் பிரதிபலிப்பு. கலைச்செல்வியின் உழைப்பு இப்பாடலில் அசாத்தியமானது. பாடலின் நடுவே வரும் ட்யூன்களில் அவர் தன்னுடன் நடனமாடும் அந்த டான்ஸ் மாஸ்டருக்கு ஈடு கொடுத்து அந்த மாஸ்டர் செய்யும் செய்கைகளை அப்படியே மாறாமல் அலட்சியமாக நெற்றியில் கைகளை வைத்து, எதையோ தேடுவது போல் தேடும் பாவனை காண்பித்து, பின் கிணற்றில் தண்ணீர் இறைக்க ராட்டினம் வழியே கயிறை இரு கைகளாலும் இழுப்பது போன்றதொரு மூவ்மெண்ட்டும், அதற்குப் பின் வாழைப்பழத்தை உரித்து அதை மேல் நோக்கித் தட்டி விடுவது போன்ற போன்ற மூவ்மென்ட்டும் அருமையாகச் செய்து காண்பிப்பார். மெல்லிசை மன்னர் வேறு இந்த இடத்தில் அதகளப் படுத்துவார். இந்தப் பாடல் என்றால் எனக்கு அப்படி உயிர். உங்களுக்குப் பிடித்தது போன்றே தலைவர் ஜெயலலிதா ஜோடி என்னையும் வெகுவாகக் கவர்ந்த ஜோடி. இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். எழுத முடியாத விஷயங்களை துணிச்சலாக தாங்கள் பதியும் போது "அப்பாடா! நாம் நினைத்தோம்... இவர் எழுதி விட்டார்... என்று ஒரு திருப்தி உண்டாகும்.

இதெல்லாம் எதற்கு சொல்கிறேன் என்றால் என்னுடைய பல எண்ணங்கள் அப்படியே தங்களுடன் ஒத்துப் போவதை ஆச்சர்யத்துடன் பகிர்ந்து கொள்ளத்தான். இரண்டு எண்ணங்கள் ஒன்றாக இருக்கும் போது (நடிகர் திலகத்தைப் பொறுத்த மட்டில்) அந்த சந்தோஷப் பரிமாற்றங்களுக்கு ஈடு இணை உண்டோ நடிகர் திலகத்தைத் தவிர.

vasudevan31355
13th August 2012, 09:58 PM
அன்பு கார்த்திக் சார்,

ராணியும்,கீதாவும் 'வசந்த மாளிகை' வெள்ளிவிழாவில் சந்தித்து பேசிக் கொண்டதை பத்திரிக்கையில் படித்து, நினைவு வைத்து, அதை நீங்கள் இங்கே பதித்தது அருமை! அந்த சீலிங் ஃபேன் காட்சி பற்றி இரு நடிகைகளும் பேசிக்கொண்டது சுவையான ஒரு சம்பாஷனை. பாருங்களேன்! ஹேமமாலினி மற்றும் வாணிஸ்ரீ இருவரும் சீலிங் ஃபேன்களில் எப்படி தொங்குகிறார்கள் என்று!

http://im.rediff.com/movies/2009/may/25sl3.jpg http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/va1.jpg

RAGHAVENDRA
14th August 2012, 06:50 AM
டியர் வாசு சார்,
வாணி ராணி மின் விசிறி காட்சியினை இரு மொழி வடிவங்களிலிருந்தும் நிழற்படங்களாக பதித்து அசத்தி விட்டீர்கள். சூப்பர்.
அன்புடன்

RAGHAVENDRA
14th August 2012, 06:53 AM
கடந்த சில காலமாக encrypted முறையில் குறிப்பிட்ட பகுதிகள் / சந்தாதாரர்களுக்கு வழங்கப் பட்ட SUN LIFE என்கிற பழைய தமிழ்த் திரைப்பட சேனல் தற்போது விரிவு படுத்தப் பட்டு நேற்று முதல் சன் டிடிஹெச் மற்றும் கேபிள் தொலைக்காட்சி நேயர்களுக்கும் வழங்கப் பட்டு வருகிறது. முழுக்க முழுக்க தமிழ்த் திரைப்பட பழைய பாடல்கள் இடம் பெற்று வருகின்றன.

vasudevan31355
14th August 2012, 07:30 AM
The one & only Nadigar thilagam.

என்றைக்குமே நான் தான் நெ.1 என்கிறாரோ நம் இதய தெய்வம்?

http://cineidentity.com/wp-content/uploads/2011/09/SIVAJI_142837f.jpg

RAGHAVENDRA
14th August 2012, 09:08 AM
http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/rare%20images/NS01.jpg

எவரெவர் மனதில் என்னென்ன இருக்கும்
எவனுக்கடா தெரியும் ...

--- வாணி ராணி படத்தில் கண்ணதாசன்

என்கிறாரோ நடிகர் திலகம்.
வாசு சார் தூள் கிளப்புங்க...

vasudevan31355
14th August 2012, 10:13 AM
நடிகர் திலகம் சிவாஜியும், 'இசைக்குயில்' லதாஜியும்.(ஒரு நெகிழ்ச்சிப் பதிவு)

இந்தப் பதிவை அன்பு பம்மலார் அவர்களுக்கு dedicate செய்கிறேன்.

http://im.rediff.com/movies/2009/sep/14look2.jpg

"இந்தி பின்னணிப் பாடகி 'இசைக்குயில்' லதா மங்கேஷ்கர் அவர்கள் நடிகர் திலகத்தின் உடன் பிறவா சகோதரி என்பது அனைவரும் அறிந்த ஒன்று. நடிகர் திலகத்தின் குடும்பமும், லதாஜியின் குடும்பமும் மிக மிகப் பாசப் பிணைப்புகளால் இணைக்கப்பட்ட குடும்பங்கள். ஒவ்வொரு வருடமும் லதா மற்றும் அவரது தங்கை ஆஷா இருவரும் தலைவருக்கு சகோதர வாஞ்சையுடன் 'ராக்கி' கட்டி மகிழ்வது வழக்கம். இன்றளவில் கூட நடிகர் திலகம் மறைந்தும் கூட இரு குடும்பத்தாருக்கும் உள்ள நட்பு அப்படியே தொடர்கிறது. நடிகர் திலகத்தின் புதல்வர் திரு ராம்குமார் அவர்கள் கூறுவதாவது...

https://encrypted-tbn3.google.com/images?q=tbn:ANd9GcRCGM3SjH8WEH4pdtFjio9ih6cvHfVqp D9kYQkxFiJSHM2FEIrg

"1950-களில் எங்களது சிவாஜி ப்ரொடக்ஷன்ஸ் ஹிந்திப் படங்களை மட்டுமே தயாரித்தது. அந்தப் படங்களில் லதா மற்றும் ஆஷா சகோதரிகள் மிக அற்புதமாக பாடி வந்தனர். ஆனால் அவர்கள் அப்பாவை சந்தித்ததே இல்லை. ஒரு முறை ஆஷாஜி சென்னை வந்த சமயத்தில் நடிகர் திலகத்தின் "பாவ மன்னிப்பு" திரைக்காவியத்தை காண நேர்ந்தது. அப்பாவின் நடிப்பில் கிறங்கிப் போன ஆஷாஜி பம்பாய் சென்றதும் முதல் வேலையாக தன் குடும்பத்தாரிடம் நடிகர் திலகத்தின் அபார நடிப்புத் திறமையையும், 'பாவ மன்னிப்பு' திரைக்காவியத்தையும் பற்றி சிலாகித்துக் கூறியுள்ளார். உடனே லதாவின் குடும்பம் நார்த் சென்ட்ரல் மும்பையில் உள்ள 'அரோரா' தியேட்டரில் 'பாவ மன்னிப்பு' காவியத்தைக் கண்டு வியந்து போயினர்..அவர்கள் பார்த்த முதல் தமிழ்ப் படமும் 'பாவ மன்னிப்பு' தான். படத்தின் இடைவேளையின் போது லதாஜியின் குடும்பத்தினர் அனைவரது கண்களிலும் கண்ணீர். லதாஜியின் குடும்பத்தினருக்கு தமிழ் வேறு தெரியாது. அப்படி இருந்தும் அப்பாவின் நடிப்பையே மொழியாகக் கொண்டு படத்தில் நடிகர் திலகத்தின் நடிப்பைப் பார்த்து ஆச்சர்யப்பட்டு போய் விட்டனர். தங்களின் அப்பா திரு. தினாநாத் மங்கேஷ்கர் அவர்களை அப்படியே நடிகர் திலகம் ஞாபகப் படுத்துவதாக அவர்கள் அப்போது உணர்ந்துள்ளனர். அவர்களுக்கு நடிகர் திலகத்தை உடனே பார்க்க வேண்டும் என்ற கட்டுக்கடங்காத ஆர்வம் ஏற்பட்டது.

'இசைக்குயில்' சகோதரிகள்

http://1.bp.blogspot.com/_jWAYRoTKSUY/TQUEZuDXP5I/AAAAAAAABAI/jqvq6m3j1RQ/s1600/abc.jpg http://im.rediff.com/movies/2009/sep/14look1.jpg

அடுத்த நாளே HMV (His Master Voice) நிறுவனத்தின் உதவியுடன் நடிகர் திலகத்தை சந்திக்க சென்னைக்கு விமானத்தில் பயணமாகி விட்டார்கள் இசைக்குயில்கள். அன்னை இல்லம் வந்து நடிகர் திலகத்தை மனமகிழ்வுடன், சகோதர வாஞ்சையுடன் அணைத்து, 'ராக்கி' கயிறு கட்டி, அன்புப் பெருக்கில் கண்ணீர் பொழிந்தனர். அப்போது தொடங்கிய நட்பு ஆலவிருட்சமாய் வளர்ந்து இன்று வரை தொடர்கிறது. சகோதரிகள் இருவரும் அப்பாவை 'அண்ணா' என்றும் அம்மாவை 'அண்ணி' என்றும் உரிமையோடு அன்புடன் அழைப்பார்கள். அப்பா இப்போது நம்மிடையே இல்லாவிடினும் லதா குடுமத்தினருடனான எங்களது நட்பு அப்படியே நீடிக்கிறது. என்னுடைய ஆறாவது வயதில் நான் அவர்களை முதன் முதலில் சந்தித்திருக்கிறேன். ஆனால் சரியாக நினைவில்லை. பின் என்னுடைய பதிமூன்றாவது வயதில் அதாவது 1960-இல் சந்தித்தது நினைவில் இருக்கிறது. 1968-இல் என்னுடைய சகோதரியின் திருமணத்திற்கு இரு சகோதரிகளும் வந்தனர். அப்போது நான் பெங்களூர் போர்டிங் ஸ்கூலில் படித்துக் கொண்டிருந்தேன். என்னுடைய படிப்பு முடிந்த பிறகு 1970- களில் அவர்களுடன் நல்ல பரிச்சயம் ஏற்பட்டது.

(தனது அன்பு மகள் சாந்தி அவர்களின் திருமணத்திற்கு வருகை புரிந்த 'இசைக்குயில்' சகோதரிகளை கூலிங் க்ளாஸ் அணிந்த படு ஸ்டைலான, ஸ்லிம்மான நடிகர் திலகம் குனிந்து ஜாலியான வணக்கத்துடன் வரவேற்கும் அழகைப் பாருங்கள்).

'இதயக்கனி' சினிமா ஸ்பெஷல் இதழில் வெளிவந்த நிழற்படம்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/ln.jpg

ஆஷாஜி எப்போதும் ஜாலியாக இருப்பார்கள். ஆனால் லதாஜி ரிசர்வ்ட் டைப். ஆஷாஜி அவர்களை 'மாஜி' என்றும் லதாஜி அவர்களை 'தீதீ' (didi)என்றும் அழைப்பேன்.

மும்பையில் 'திரிசூலம்' ஷூட்டிங் நடந்த போது சகோதரிகள் இருவரும் நேரிடையாக செட்டுக்கு வந்து ஷூட்டிங் பார்த்து மகிழ்ந்தனர். ஷூட்டிங் முடிந்தவுடன் அப்பாவும், அம்மாவும் தெற்கு மும்பையில், பெடர் ரோட்டில் உள்ள அவர்கள் இல்லத்தில் தங்கி மகிழ்ந்தனர். லதாஜியும், ஆஷாஜியும் மராத்தியிலும், இந்தியிலும் அப்பாவிடம் பேச, அப்பா பதிலுக்கு தனக்குத் தெரிந்த இந்தியை அவிழ்த்து விட ஒரே வேடிக்கைதான். அப்பா மிகவும் திறமைசாலி மற்றும் புத்திசாலி. அவர்களுக்குள் உள்ள அந்த சகோதர பாசத்தைக் கண்டும், சந்தோஷமாக சிரித்துப் பேசி குதூகலிப்பதைக் கண்டு நான் மகிழ்ந்தும், வியந்தும் போய் இருக்கிறேன். அம்மாவுக்கு இந்தி தெரியாது. இருந்தாலும் அவர்கள் சகோதரிகள் இருவருடனும் தமிழிலேயே உரையாடி மகிழ்வார்கள். எங்களுடன் மன மகிழ்வுடன் ஏராளமான நாட்களை எங்களுக்காக செலவிட்டுள்ளார்கள் 'இசைக்குயில்கள்'.

தளபதி திரு ராம்குமார் அவர்களுக்கு நன்றி!


'தமிழில்' உங்களுக்காக அன்புடன் அளிப்பது

உங்கள் 'நெய்வேலி' வாசுதேவன்.

eehaiupehazij
14th August 2012, 10:18 AM
In Sivandha Mann Director Shridhar tried his hands in a different way to present NTs skills, particularly in stunt scenes like the helicopter chase which is in line with Sean Connery's original Bond flick From Russia with Love. Like Connery NT also tried without a stunt double for him particularly taking risk in the close shots of helicopter approaching him near to his heads. The flight fight was tried in line with Connery's Goldfinger climax fight but it proved futile in Sivandha Mann! and Thanga surangam was a copy mixture of many Bond movies and Dean Martin's Silencers! However, in both these movies NT's versatility was proved in many scenes by way of his characterizations!

vasudevan31355
14th August 2012, 11:02 AM
டியர் ராகவேந்திரன் சார்,

அப்படிப் போடுங்க அருவாள. தெய்வ கடாட்சமாய் பழனி விபூதியுடன் காட்சியளிக்கும் மனித தெய்வத்தின் இந்த (தலைவர் கையொப்பமிட்ட) புகைப்படம் இப்போது என் டெஸ்க்டாப்பை பக்தி மனம் கமழ அலங்கரித்துக் கொண்டிருக்கிறது. பழனி மலை அடிவாரத்தில் 'சித்தானந்தா' விபூதி ஸ்டால்களில் தலைவரின் இந்த புகைப்படத்தைப் பார்த்திருக்கிறேன். இந்தப் புகைப்படத்தைப் பார்த்து சில மணித்துளிகள் நின்று தலைவரை வணங்கிச் சென்றது நினைவுக்கு வந்து விட்டது. கோடி கோடியான நன்றிகள் தங்களுக்கு. அந்த பழனி ஆண்டவனும், நம் ஆண்டவரும் தங்களுக்கு நல்லாசிகளை அருள்பாலித்துக் கொண்டே இருப்பார்கள்.

KCSHEKAR
14th August 2012, 04:12 PM
அனைவருக்கும் இனிய சுதந்திரதின நல்வாழ்த்துக்கள்.

http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/IndependanceDayFunctionChennai.jpg

mr_karthik
14th August 2012, 07:29 PM
அன்புள்ள வாசுதேவன் சார்,

எனது பதிவுக்கு பதிலளிக்கும் விதமாக மிக விரிவான விளக்கமான பதிவையளித்து, முடிவில் நம் இருவரின் எண்ணங்கள் பலவிதங்களிலும் ஒன்றாக ஒத்துப்போவதாக முடித்திருந்த விதம் அருமை. மிக்கநன்றி.

இசைக்குயில் லதாஜிக்கும் நடிகர்திலகத்துக்குமான பாசப்பிணைப்பை, பல்வேறு நிகழ்ச்சிகளுடனும், தங்கள் பதிவுக்கு வலுசேர்க்கும் வகையில் பல்வேறு நிழற்படங்களுடனும் விவரித்த விதம் அற்புதம்.

நடிகர்திலகம் எப்போது பம்பாய் சென்றாலும் தங்கையின் இல்லத்துக்கு விஜயம் செய்யாமல் வரமாட்டார். அதுபோல லதாஜி சென்னை வரும் நேரங்களிலெல்லாம் உடன்பிறவா அண்ணனின் அன்னை இல்லத்துக்கு வராமல் செல்ல மாட்டார். அந்த அளவுக்கு 'பாசமலர்கள்' இருவரும்.

வாணி ராணியில் இடம்பெற்ற சீலிங்ஃபேன் காட்சியைப்பற்றி இரு கதாநாயகிகளும் உரையாடியதை நான் சொன்னதும், உடனடியாக இந்தி மற்றும் தமிழ்ப்படங்களின் ஸ்டில்களை, அதுவும் ஒரே போஸில் தேடிப்பிடித்து பதிப்பித்த தங்கள் வேகத்துக்கும் சுறுசுறுப்புக்கும் ஸ்பெஷல் பாராட்டுக்கள்.

pammalar
14th August 2012, 09:13 PM
திரைக்காவிய முதல் வெளியீட்டு விளம்பரங்கள் :16

நடிகர் திலகத்தின் 235வது காவியம்

சந்திப்பு [வெளியான தேதி : 16.6.1983]

வெள்ளிவிழாக் கொண்டாடிய மெகாஹிட் காவியம்

பொக்கிஷாதி பொக்கிஷம்

100வது நாள் விளம்பரம் : தினத்தந்தி(சென்னை) : 23.9.1983
[இந்த விளம்பரத்தில் இடதுபுறஓரம் உள்ள இளையதிலகத்தின் படம் 'கட்' ஆகி இருப்பதற்கு பிரபு ரசிகர்கள் மன்னிக்கவும்]
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC6444-1.jpg

குறிப்பு:
100 நாட்களும் அதற்கு மேலும் ஓடி விழாக் கொண்டாடிய திரையரங்குகள்:
1. சென்னை - சாந்தி - 100 நாட்கள்
2. சென்னை - கிரௌன் - 100 நாட்கள்
3. சென்னை - புவனேஸ்வரி - 100 நாட்கள்
4. மதுரை - சுகப்ரியா - 175 நாட்கள்
5. திருச்சி - காவேரி + ருக்மணி - 72 நாட்கள் + 28 நாட்கள் - 100 நாட்கள்

தொடரும்...

பக்தியுடன்,
பம்மலார்.

pammalar
14th August 2012, 09:28 PM
திரைக்காவிய முதல் வெளியீட்டு விளம்பரங்கள் :17

நடிகர் திலகத்தின் 235வது காவியம்

சந்திப்பு [வெளியான தேதி : 16.6.1983]

வெள்ளிவிழாக் கொண்டாடிய மெகாஹிட் காவியம்

பொக்கிஷாதி பொக்கிஷம்

100வது நாள் விளம்பரம் : தினத்தந்தி(மதுரை) : 23.9.1983
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC6447-1.jpg

குறிப்பு:
100 நாட்களும் அதற்கு மேலும் ஓடி விழாக் கொண்டாடிய திரையரங்குகள்:
1. சென்னை - சாந்தி - 100 நாட்கள்
2. சென்னை - கிரௌன் - 100 நாட்கள்
3. சென்னை - புவனேஸ்வரி - 100 நாட்கள்
4. மதுரை - சுகப்ரியா - 175 நாட்கள்
5. திருச்சி - காவேரி + ருக்மணி - 72 நாட்கள் + 28 நாட்கள் - 100 நாட்கள்

தொடரும்...

பக்தியுடன்,
பம்மலார்.

pammalar
14th August 2012, 10:39 PM
டியர் வாசுதேவன் சார்,

'ராஜன்' fightஐ பதிவிட்டு 'ராஜராஜ பதிவாளர்' எனும் பட்டத்திற்கு சொந்தக்காரராகிவிட்டீர்கள்..!

நமது ரசிகர்கள் மட்டுமல்லாது, பொதுவான சினிமா ரசிகர்களுக்கே, இந்த சண்டைக்காட்சி அவர்களது மனம் கவர்ந்த ஒன்றாகும். நமது அன்புச்சகோதரர் mr_karthik அவர்களின் இதயத்தில் நிரந்தரமாக இடம்பெற்றிருக்கும் இந்த அதியற்புத சண்டைக்காட்சியை அவருக்கு Dedicate செய்தது சாலப்பொருத்தம். நமது நடிகர் திலகம் இக்காட்சியில் அழகுக்கிளி (அடிகளாரே, குஷிதானே..!) பாரதியுடன் பாந்தமாக பேசிக் கொண்டே சற்றே backsideல் handglovesகளை சரி செய்து கொண்டே நடக்கும்(நகரும்) அந்த ஸ்டைலோ ஸ்டைல் ஆஹா..அதன் பிறகு அநாயாசமாக எதிரிகளை மொத்தோ மொத்து என்று மொத்தும் மொத்து என்ன, மொத்திய பிறகு அழகுக்கிளியிடம் ஒரு அநாயாச கம்பீரக் குரலில் செய்யும் எகத்தாளம் என்ன..அழகுக்கிளியின் உடையில் தீக்குச்சியை உரசி சிகரெட்டை பற்ற வைக்கும் அந்த அசாத்திய மிடுக்கு என்ன..Stupendous..! ஸ்டைல் சக்கரவர்த்தி to the core..!

அடியேனது பதிவுகளைக் கண்டு தாங்கள் வழங்கிய மனமுவந்த பாராட்டுக்களுக்கு, தங்களுக்கு எனது மலையளவு நன்றிகள்..!

அன்புடன்,
பம்மலார்.

vasudevan31355
14th August 2012, 10:56 PM
டியர் சந்திர சேகரன் சார்,

தங்கள் அன்புப் பாராட்டிற்கு என் அன்பு நன்றிகள். சுதந்திர தினத்தை முன்னிட்டு நடிகர் திலகம் சமூக நலப் பேரவை சார்பாக நடக்கவிருக்கும் மாணவ மாணவியர்க்கு கல்வி உபகரணங்கள் அளிக்கும் நலத்திட்ட விழா இனிதே நடைபெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

vasudevan31355
14th August 2012, 10:59 PM
அன்பு கார்த்திக் சார்,

பதிவுகளுக்கான தங்கள் உயரிய பாராட்டுதல்களுக்கு மிக்க நன்றி!

vasudevan31355
14th August 2012, 11:14 PM
அன்பு பம்மலார் சார்,

தங்கள் மனமுவந்த 'ராஜ'பாராட்டுதல்களுக்கு ரகளையான என் நன்றிகள்.

'சந்திப்பு' 100ஆவது நாள் விளம்பரங்கள் செம தூள்மா. சும்மா பிச்சுகிட்டு ஓடுன படமாச்சே! விளம்பர கட்டிங்க பாக்கறச்சே என்ன ஒரு சந்தோசம் தெரியுமா... அட்டகாசமா பதிஞ்சதுக்கு ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்மா. கீழ தந்திருக்கிற புள்ளி வெவரம் சும்மா அதிருதும்மா...ரொம்ப நன்றிம்மா. எல்லாம் ஒரு ஜாலிக்குதாம்மா...

vasudevan31355
14th August 2012, 11:32 PM
அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்

http://www.goodlightscraps.com/content/15thaug-2011/independence-day-38.gif

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/bakath.jpg

சுதந்திர தின சிறப்புப் பாடல்.

"நான் யார்...
அன்று நான் யார்...

விடுதலை என்னும் வேள்வித் தீயில் கருகியவன்...
உயர் வீர சுதந்திரம் வந்தது கண்டு உருகியவன்"...


http://www.youtube.com/watch?v=VF7VPpAQfSA&feature=player_detailpage

pammalar
15th August 2012, 02:57 AM
http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/rare%20images/NS01.jpg

எவரெவர் மனதில் என்னென்ன இருக்கும்
எவனுக்கடா தெரியும் ...

--- வாணி ராணி படத்தில் கண்ணதாசன்

என்கிறாரோ நடிகர் திலகம்.
வாசு சார் தூள் கிளப்புங்க...

டியர் ராகவேந்திரன் சார்,

தங்களின் பளபளக்கும் பாராட்டுக்கு எனது ஜொலிஜொலிக்கும் நன்றிகள்..!

தெய்வீக நடிகரின் 'பழனி எஸ். சித்தனாதன்' திருநீற்றுத் தோற்றம் அப்படியே என்னை கைகூப்பி வணங்கச் செய்துவிட்டது. தங்கள் மூலம் எங்களுக்கு நடிகர் திலகத்தின் 'தெய்வ தரிசனம்' சார்..!

[இந்த அரிய புகைப்படம் 14.4.1960 அன்று படம் பிடிக்கப்பட்டிருந்தாலும், ஃப்ரேம் போட்டு வடிவமைக்கப்பட்டது 1966 அல்லது அதற்கு பிறகுதான் இருக்கும். ஏனென்றால், 26.1.1966 அன்று தானே நமது நடிகர் திலகத்துக்கு நமது இந்திய அரசு 'பத்மஸ்ரீ' விருதை வழங்குவதாக அறிவித்தது.]

அன்புடன்,
பம்மலார்.

pammalar
15th August 2012, 03:07 AM
டியர் வாசுதேவன் சார்,

'கல்கி'யில் வெளிவந்த "வாணி ராணி(1974)" விளம்பரம் மற்றும் விமர்சனம் மனதிற்கு இதம்..!

"வாணி ராணி(1974)" நிழற்படங்கள், காணொளிகள் ஆகியவற்றை அளித்ததோடு நில்லாது அக்காவியத்தின் மூலக்காவியமான ஹிந்தி "சீதா அவுர் கீதா(1972)"வின் ஸ்டில்களையும், வீடியோக்களையும் அளித்து இருபெரும் வெற்றிக்காவியங்களுக்கும் பெரும்பெருமை சேர்த்துவிட்டீர்கள்..! Dream Girlன் ரசிகர்களுக்கு செம treat..! தங்களுக்கு எனது மனம் நிறைந்த பாராட்டுக்கள்..!

"சந்திப்பு" ஆவணங்களுக்கு அளித்த பாராட்டு டாப்டக்கர்மா..!

அன்புடன்,
பம்மலார்.

pammalar
15th August 2012, 03:24 AM
பம்மலார் அவர்களும், வாசுதேவன் அவர்களும் 'வாணி ராணி' படம் பற்றிய பல்வேறு ஆவனங்களைப் பதித்துவரும் இவ்வேளையில், வசந்த மாளிகை வெள்ளிவிழாவில் இரு கதாநாயகிகளுக்குள் நடந்த உரையாடல் நினைவுக்கு வருகிறது. (நான் பத்திரிகையில் படித்தது. அது குமுதமா அல்லது பொம்மையா என்பது நினைவில் இல்லை).

'வசந்த மாளிகை' வெள்ளிவிழாவில் கலந்துகொள்வதற்காக அதன் இந்திப்பதிப்பான 'பிரேம்நகர்' படத்தில் நடித்து வந்த ராஜேஷ்கன்னா மற்றும் ஹேமாமாலினி வந்திருந்தனர்.

அப்போது, ஏற்கெனவே வசந்தமாளிகையில் நடித்தவரும் அப்போது வாணிராணி படத்தில் நடித்து வந்தவருமான வாணிஸ்ரீயும், ஏற்கெனவே சீதா அவுர் கீதாவில் நடித்தவரும், அப்போது பிரேம்நகர் படத்தில் நடித்து வந்தவருமான ஹேமாமாலினியும் அருகருகே அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.

அப்போது வாணிஸ்ரீ கேட்டாராம் "அந்த சீலிங் ஃபேன் காட்சியில் எப்படி நடித்தீர்கள்?. நான் நடித்தபோது என் வெயிட் தாங்காமல் மூன்று முறை சீலிங்ஃபேன்களின் இறக்கை வளைந்து கீழே விழுந்து விட்டேன். நல்லவேளையாக முன்னெச்சரிக்கையாக கீழே நிறைய ஸ்பாஞ்ச் போட்டு வைத்திருந்ததால் அடிபடாமல் தப்பினேன். நீங்க நடித்தபோது அப்படி ஏதும் நிகழ்ந்ததா?" என்று கேட்க...

அதற்கு ஹேமாமாலினி "எனக்கு எந்தப்பிரச்சினையும் இல்லை. ஏனென்றால் எனக்காக நல்ல கனமானதும் அகலமானதுமான ஒரு ஃபேனையே ஷூட்டிங்குக்காகவே தயார் செய்து விட்டார்கள். அதனால் நான் கீழே விழும் நிலை ஏற்படவில்லை. ஏன், இங்குள்ள தயாரிப்பாளரோ அல்லது டைரக்டரோ முன்பே இதுபற்றிக்கேட்டிருக்கலாமே" என்று கூலாக பதில் சொன்னாராம்.

டியர் mr_karthik,

தங்களுடைய அருமையான பாராட்டுக்கு எனது மனங்கனிந்த நன்றிகள்..!

ஹேமமாலினி - வாணிஸ்ரீ பரஸ்பர உரையாடல் பற்றிய தகவல் ரொம்ப சுவாரஸ்யம்..!

அன்புடன்,
பம்மலார்.