தலைவர் ரசிகர்களுக்கு என் வணக்கம்.. உலக சினிமா என்ற தலைப்பில் திரு எஸ் ராமகிருஷ்ணன் நிகழ்த்திய பேருரைகளின் இறுதி நாளில் "சார்லி சாப்ளின்" பற்றி அவர் சுமார் இரண்டு மணி நேரம் பேசினார்.நன்றாக இருந்தது.(என்னால் இந்த ஒரு நாள் மட்டும்தான் போக முடிந்தது) ஆனால்,ஆனால்... நம்,பிரபு,ஸ்ரீனிவாஸ்,கோபால்,ராகவேந்தர்,பார்த்தசாரத ி போன்றோர் எழுதும் விமரிசனங்களின் ஆழத்தோடும்,கூர்மையோடும் ஒப்பிட்டால் இந்த பேருரை மிக சாதாரணம் என்பது என் துணிபு.The opposite of Best is good எனும் வாக்கியத்தின் பொருள் இதுதான்.உலகின் மிகச்சிறந்த கலைஞரின் பரம ரசிகராக இருக்கும் தகுதி ஒன்றே, அந்த ரசிகரையும் உலகின் மிகச்சிறந்த ரசிகராகவும்,விமரிசனராகவும் ஆக்கிவிடுவது தெளிவாகிறது. பன்னிரண்டு கை வேலவனைப்பெற்றவனை நமக்கு திரையில் காட்டிய அந்த பரமேஸ்வரனின் பாதம் வணங்க,இந்த 12-12-12 ஐ விட வேறு ஒரு சரியான நாள் கிடைக்குமா என்ன?
Send an Instant Message to IliFiSRurdy Using...