-
'சபதம்'
http://cf-images.emusic.com/music/im...94/600x600.jpg
'சபதம்' (1971)
தேவநாயகி பிலிம்ஸ் 'சபதம்' ஓர் அருமையான ஒரு படம். ரவிச்சந்திரன், கே.ஆர்.விஜயா, நாகேஷ், டி கே.பகவதி, வி.கே.ராமசாமி, சஹஸ்ரநாமம், அஞ்சலிதேவி, பண்டரிபாய் நடித்த இத்திரைப்படம் கதாநாயகிக்கு மிகவும் முக்கியத்துவம் அளித்த ஒரு படம். நடனத்தை சலீம் அமைத்திருப்பார். நமது பி.என்.சுந்தரம் ஒளிப்பதிவு இயக்குனராக பணியாற்றி இருப்பார். இயக்கம் நமது பிரிய பி.மாதவன்.[/COLOR][/B][/SIZE]
கதை
http://i.ytimg.com/vi/yPRAkU6T8zk/0.jpg
மிக நல்லவரான பெரிய மனிதர் செல்வநாயகத்திற்கு (டி கே.பகவதி) அவரைப் போலவே உருவ ஒற்றுமையும், குரல் ஒற்றுமையும் கொண்ட துரைசிங்கம் (டி கே.பகவதி) என்ற தறுதலை தம்பி. அண்ணனிடமிருந்து சொத்தை பாகம் பிரித்துக் கொண்டு குடி, காமம் என்று சொத்தை அழிக்கிறான் அவன். தம்பியின் போக்கு கண்டு, மனம் நொந்து, மறுபடியும் அவனைத் தன்னுடன் சேர்த்துக் கொள்கிறார் செல்வநாயகம். தன் மனைவி கண் தெரியாத ராஜேஸ்வரி (அஞ்சலிதேவி), மகன் முத்து மேல் அதிக பாசம் அவருக்கு. தம்பி துரைசிங்கத்திற்கு லஷ்மி (பண்டரிபாய்) என்ற பண்பான மனைவி.
வியாபார விஷயமாக அண்ணனும் தம்பியும் வெளியூர் புறப்பட, அந்த சந்தர்ப்பத்தைத் தனக்கு சாதமாக்கிக் கொள்கிறான் தம்பி. உருவ ஒற்றுமையைப் பயன்படுத்தி, அண்ணனைக் கொன்றுவிட்டு, அண்ணன் வேடத்தில் வந்து நல்லவன் போல ஊரில் கபடமாடுகிறான் துரைசிங்கம். ஊரும் அவனை செல்வநாயகம் என்று பரிபூரணமாக நம்பி ஏமாறுகிறது. குழந்தையுடன் இருக்கும் தன் அண்ணியை பைத்தியம் என்று பட்டம் கட்டி அவள் வீட்டை விட்டு ஓடும்படி செய்கிறான் செல்வநாயகம்.
தன் கணக்கப்பிள்ளை வள்ளிமுத்துவின் (சஹஸ்ரநாமம்) மகள் சிவகாமி (கே.ஆர்.விஜயா) என்ற பெண்ணின் மீது காமப் பித்து பிடித்து அலைந்து, அவளை ஆசைநாயகியாய் வைத்துக் கொள்ள வள்ளிமுத்துவிடமே அனுமதி கேட்கிறான். இல்லையென்றால் கொன்று விடுவதாக பயமுறுத்துகிறான். அவன் சுயரூபம் தெரிந்து கொண்ட வள்ளிமுத்து செய்வதறியாமல் திகைத்து தூக்கில் தொங்குகிறான். (உண்மையில் துரைசிங்கத்தால் தூக்கில் தொங்கவிடப் படுகிறான்) வெளியூரில் படிக்கும் சிவகாமி தன் தந்தை இறந்த சேதி கேட்டு துடிதுடித்துப் போகிறாள். தன் தந்தையின் கடிதம் மூலம் செல்வநாயகம் ஒரு காமுகன் என்று புரிந்து கொள்கிறாள். தந்தை சாவுக்குக் காரணமானவனை பழி வாங்கத் துடிக்கிறாள். ஆனால் செல்வநாயகம் போர்வையில் இருக்கும் துரைசிங்கம் ஊர்மக்களை அப்படியே தன்னை நல்லவன் என்று நம்பும்படி செய்திருக்கிறான். இதனால் சிவகாமி துரைசிங்கம் கெட்டவன் என்று ஆதாரத்துடன் ஊர் மக்களிடம் நிரூபித்தாலும் தன் சாமர்த்தியப் பேச்சாலும், பசுத்தோல் போர்த்திய புலி நடிப்பாலும் சிவகாமியின் ஆதாரங்கள் ஒவ்வொன்றையும் உடைத்தெறிகிறான் துரைசிங்கம். அவனை அயோக்கியன் என்று ஊர் மக்கள் முன்னிலையில் விரைவில் நிரூபிப்பதாக துரைசிங்கத்திடம் 'சபதம்' போடுகிறாள் சிவகாமி.
வீட்டை விட்டு ஓடிப்போன ஓடிப்போன ராஜேஸ்வரியின் மகன் முத்து (ரவிச்சந்திரன்) வளர்ந்து பெரியவனாகி எல்லா உண்மையையும் தன் தாயின் மூலம் அறிகிறான். முத்து சிவகாமியைக் காதலித்து துரைசிங்கம் மூலம் சிவகாமி பட்ட துயரங்களை அறிந்து கொள்கிறான். பாதிக்கப்பட்ட சிவகாமி, முத்து இருவரும் கூட்டணி அமைத்து, திட்டம் போட்டு துரைசிங்கம் வீட்டில் தம்பதிகளாக நுழைகிறார்கள். இவர்களுடன் துரைசிங்கத்தின் மகன் நாகேஷும் தன் தந்தையின் கபட நாடகத்தைத் தெரிந்து கொள்ள, மூவரும் துரைசிங்கத்துடன் ஆடு புலி ஆட்டம் விளையாட ஆரம்பிக்கிறார்கள். அவனுக்கெதிரான ஆதாரங்களைத் திரட்டி அவனை நிலைகுனிய வைத்து ஊருக்கு 'அவன் துரைசிங்கம்தான்...செல்வநாயகம் இல்லை' என்று புரிய வைக்கிறார்கள். இறுதியில் இறந்து போன செல்வநாயகமே உயிருடன் திரும்ப நேரில் வர, அதிர்ச்சியடைந்து தான் வாயாலேயே தன் அண்ணன் செல்வநாயகத்தைக் கொன்றதாக தன்னையுமறியாமல் ஊர் மக்கள் முன்னிலையில் கூறி காவலர் வசம் மாட்டிக் கொள்கிறான் துரை சிங்கம். ('புதிய பறவை' கோபால் போல) ஆனால் வந்தது உண்மையான அண்ணனா?..
இறுதியில் தன் 'சபத'த்தில் மாபெரும் வெற்றி காணுகிறாள் சிவகாமி.
'புன்னகை அரசி'க்கு இந்த மாதிரி சிவகாமி.ரோல் அல்வா சாப்பிடவது போல. கலக்கிவிடுவார். டி .கே.பகவதி நல்ல அண்ணனாகவும், கெட்ட தம்பியாகவும் அருமையான நடிப்பைத் தந்திருப்பார். படம் நெடுக கொஞ்சம் கூட அலட்டிக் கொள்ளாமல் அமைதியாகச் சிரித்தபடியே வில்லத்தனம் புரிவது ஏ.ஒன். இந்தப் படம் சென்னையில் பாரகன், கிரௌன், புவனேஸ்வரி ஆகிய தியேட்டர்களில் வெளியாகி வெற்றிகரமாக ஓடியது.
'தொடுவதென்ன தென்றலோ மலர்களோ'
என்றுமே சிரஞ்சீவித்துவம் நிறைந்து மனமெல்லாம் சுகந்த தென்றலை இனிமையாக வீசச் செய்யும் பாடல். மிகச் சிறந்த தமிழ்ப் பாடல்களின் வரிசையில் முன்னால் நிற்க போட்டி போடும் பாடல். நீங்கள் எவ்வளவு சோகத்தில் இருந்தாலும் இந்த பாட்டை ஒருமுறை கேளுங்கள். பிளாட் ஆகி விடுவீர்கள். குரலினிமையா... குழலினிமையா என்று போட்டி வைத்தால் பாலாவின் குரல்தான் இனிமை என்று ஒட்டுமொத்தமுமே கூக்குரல் எழுப்பும் அளவிற்கு அவரது வசந்த சுகந்த குரலால் பாராட்டு பெற்ற பாடல். 'சபத'மிட்டு சொல்கிறேன்.
http://www.stephenprayog.com/image/gkvenkatesh.jpg
இந்தப் படத்தின் மிகப் பெரிய பலமான தூண் இசையமைப்பாளர் ஜி.கே.வெங்கடேஷ். என்ன ஒரு திறமை! இவர் நம் திரையுலகிற்குக் கிடைத்த ஒரு குறிஞ்சி மலர். இசையமைப்பதோடு மட்டுமல்லாமல் வித்தியாசமான குரல் வளம் கொண்ட பாடகரும் கூட. இப்படத்தில் இடம் பெற்ற எஸ்.பி.பாலா தங்கக் குரலில் பாடிய சூப்பர் டூப்பர் ஹிட் பாடலான,
'தொடுவதென்ன தென்றலோ மலர்களோ'
பாடல் ஒன்று போதும் ஜி.கே.வெங்கடேஷ் அவரின் திறமையை காலம் முழுதும் பறைசாற்ற. நமக்கு இறப்பு என்று ஒன்று வரும்போது இந்தப் பாடலைக் கேட்டுக் கொண்டே கண் மூடினால் கண்டிப்பாக சொர்க்கம் கிடைக்கும்.
-
Nadigar Thilagam Film Appreciation Association..
Next Programme...
http://i1146.photobucket.com/albums/...pskjzhznee.jpg
-
தமிழ் சினிமா - அபூர்வ தகவல்கள்
உ.யிரோவியம் - ராணிமுத்துவில் வெளிவந்த ஒரு நாவல்..
உயிரோவியம் - இந்த வார்த்தையில் துவங்கும் ஒரு பாடல் ஊருக்கு உழைப்பவன் படத்திற்காக பதிவு செய்யப்பட்டது.
இந்த உயிரோவியம் ... இன்னும் என்ன செய்தியுள்ளது..
தெய்வமகன் படத்திற்கு முதலில் வைத்த பெயர் .
உயிரோவியம்
-
தமிழ் சினிமா - அபூர்வ தகவல்கள்
விட்டில் பூச்சி -
சுமதி என் சுந்தரி படத்திர்கு ஒரிஜினலாக வைத்த பெயர்...
-
தமிழ் சினிமா - அபூர்வ தகவல்கள்
தங்கத்திலே வைரம் -
சிவகுமார், கமலஹாசன் நடித்து வெளிவந்த திரைப்படம் என்பது தெரிந்திருக்கலாம். தெரியாத விஷயம்.
நடிகர் திலகம் இரு வேடங்களில் நடித்த மனிதனும் தெய்வமாகலாம் படத்திற்கு முதலில் வைக்கப்பட்ட டைட்டில் இது தான்.
-
-
https://scontent.fmaa1-2.fna.fbcdn.n...18&oe=56CDE881
இணையத்தில் முதன்முறையாக சிங்கப்பூர் சீமான் படத்தின் ஸ்டில்
-
இணையத்தில் முதன்முறையாக பால்குடம் படத்தின் ஸ்டில்...
https://scontent.fmaa1-2.fna.fbcdn.n...77&oe=56CEC38F
வாசு சார், மது சார், பால் குடம் படத்தின் வீடியோவைப் பார்க்காத குறையை இதைப் பார்த்து ஓரளவு திருப்திப் பட்டுக்கொள்ள வேண்டியதுதான்
-
தமிழ் சினிமா - அபூர்வ தகவல்கள்
மெல்லிசை மன்னர் இசையில் அமுதா படத்தில் ஒலித்த அன்பே அமுதா பாடலை மறக்க முடியுமா. பாடகர் திலகத்தின் குரலில் உயிரை உருக வைக்கும் அருமையான பாடல்.
அமுதா படத்திற்கு முதலில் வைத்த பெயர்...
குங்குமப் பொட்டு
-