http://i62.tinypic.com/2cyiip3.jpg
Printable View
திரு.யுகேஷ் பாபு. - nt திரியில் நீங்கள் தொடர்ந்து போடும் ஆரோக்கியமான பதிவுகள் மிகவும் பாராட்டப்பட வேண்டியவைகள் - எங்களில் சிலரைப்போல் நீங்களும் வெகு சுலபத்தில் உணர்ச்சி வசப்படக் கூடியவர் - இருந்தாலும் தவறாமல் அங்கு வந்து , பழையதை மனதில் வைத்துக்கொள்ளாமல் நீங்கள் ஆரோக்கியமாக பங்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று மிகவும் விரும்புகிறேன் - நீங்கள் அடுத்த தலைமுறையை சார்ந்தவர் - சண்டை சச்சரவுகள் , மனதை வருத்தும் கடின வார்த்தைகள் எங்களுடன் முடியட்டும் - நல்ல எண்ணங்களையும் , இருவர்களின் சாதனைகளையும் , நல்ல பண்புகளையும் உங்கள் தலை முறைக்கு எடுத்துச் செல்லுங்கள்- நீங்கள் இப்பொழுது நான் யாழ் இனிது , குழல் இனிது என்றால் ஒப்புக்கொள்ள மாட்டீர்கள் - உங்கள் மழலை செல்வத்தின் அருமையினால் - அழகாகவும் அருமையாகவும் வளர எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும் .
அன்புடன்
ரவி
http://i62.tinypic.com/33ll6qx.jpg
கடந்த 02/04/2015 முதல் மதுரை மீனாட்சி பாரடைசில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.
அவர்களின் " அன்பே வா " வெளியாகி தினசரி 4 காட்சிகள் வெற்றி நடை போட்டது.
அதன் புகைப்படங்கள் அனுப்பி உதவியவர் மதுரை திரு. எஸ். குமார்.
திரு முத்தையன் அம்மு - நீங்கள் பதிவுகள் போடுவதில் காட்டும் ஈடுபாடு , அதற்காக உங்களை வருத்திக்கொண்டு எடுத்துக்கொள்ளும் நேரம் , பதிவுகள் போடும் வேகம் என்னை மிகவும் மலைக்க வைக்கின்றது - இப்படிதான் நம் மனதிற்கு பிடித்தவரை பூஜிக்க வேண்டும் என்று ஒரு கட்டாயமும் இல்லை - செய்யும் பூஜையில் கவனம் இருக்க வேண்டும் , பக்தியும் ,அன்பும் இருக்க வேண்டும் - பூஜை செய்யும் முறைகள் வேறு படலாம் . நீங்களும் ஒரு வேறு பாடு பார்க்காமல் nt திரிக்கு வந்து பதிவுகளை போடுவதை பார்க்கும் பொழுது , மனதில் சொல்ல முடியாத மகிழ்ச்சி உண்டாகின்றது - மிகவும் நன்றி சார் .
அன்புடன்
ரவி
திரு வினோத்
MT திரிக்கு ஒரு founding father ஆக இருக்கும் நீங்கள் அதிகமாக எங்கும் தென் படுவதில்லையே இப்பொழுதெல்லாம் - ஏன் உங்களின் வேகம் குறைந்து விட்டது ?- செய்யும் தொழிலில் எவ்வளவு ஈடுபாடு காட்ட வேண்டும் என்பதை உங்கள் பதிவுகள் மூலம் தான் நான் கற்றுக்கொண்டேன் .
உங்களை அதிகம் பார்க்க முடியாதது எனக்கு , திருமண வீட்டில் நாதஸ்வரத்திர்க்கும் , மேளதிர்க்கும் பதிலாக புல்லாங்குழலை வைத்து சமாளிப்பதைப்போல உள்ளது . ஆரோக்கியமான பதிவுகளை போடும் நீங்கள் ஆரோக்கியமாக என்றும் இருக்க இறைவனை ப்ராத்தனை செய்கிறேன் .
அன்புடன்
ரவி
அன்பு நண்பர்களே,
கணினியின் செயல்பாடு கோளாறு காரணமாக சுமார் இரண்டு மூன்று வாரங்களாக நம் மய்யத்தில் பங்கு கொள்ள இயலவில்லை. தற்பொழுது தான் சரி செய்யப்பட்டது. தங்களுடைய பாகம் 15ஐக் கண்டவுடன் முதலில் பாராட்ட வேண்டும் என எண்ணினேன். அதற்கேற்ப என் முதல் பதிவு தங்களுக்கு பாராட்டாக அமைவதில் மகிழ்ச்சியே.
எம்.ஜி.ஆர். புகழ் பாடுவதில் தங்களுக்குள் உள்ள வேகம், ஈடுபாடு, ஆர்வம் யாவையும் மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்கக் கூடியவை. குறுகிய காலத்தில் ஒரு உத்வேகத்துடனும் ஒரு வைராக்கியத்துடனும் 10 பாகங்களுக்கும் மேல் நிறைவு செய்து தங்கள் பணியை செவ்வனே செய்துள்ளீர்கள். தங்கள் ஒவ்வொருவருக்கும் என் உளமார்ந்த பாராட்டுக்கள்.
http://i160.photobucket.com/albums/t...psttjd01f9.jpg
Thanks to Sri. Vivekanandan Krishnamoorthy, FB.