-
courtesy -thiru rajubhav- malasiya.
எம்ஜிஆர் நினைவு நாள்...
பல இடங்களில் சிறப்பு பூஜைகளும் பிரார்த்தனைகளும், ஏழை எளியோருக்கு உதவிகளும், ஆங்காங்கே ரத்த தானங்களும், அவர் பெயரால் மற்ற நல்லெண்ண நிகழ்வுகளும் நடைபெறுவது அவரது நல்ல உள்ளத்துக்கு மக்கள் காட்டும் அன்பின் அடையாளமாக போய்விட்டது. காலமாகி பல வருடங்கள் போனாலும், நம்மிடையே இன்றும் இருப்பது போன்ற உணர்வை மக்கள் ஒரு சிலருக்கே வழங்கி இருக்கின்றனர். அவர்களுள் ஒருவராக மக்கள் திலகம் திகழ்கிறார்.
எஸ்ட்ரோ எம்ஜிஆரின் "பெரிய இடத்துப் பெண்", "நம் நாடு" மற்றும் "எங்க வீட்டு பிள்ளை" திரைப்படங்களினை காண்பித்து அவரின் ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தியது. இது வாடிக்கையாக நடப்பதுதான் என்றாலும் தமிழ் நேசன் நாளிதழில் அவரைப்பற்றிய நினைவுகளை படித்துக்கொண்டு சிறு வயதில் அவரின் படங்கள் என்னுள் ஏற்படுத்திய மாற்றங்களை மனதுக்குள் அசைபோடுவது பசுமையான ஒன்றாக இருந்தது எனக்கு.
http://i45.tinypic.com/34dlsg3.png
எஸ்டேட்டின் பின்னனியில் வாழ்க்கையை தொடங்கியவன் நான். அறுபதாம் ஆண்டுகள் அவை. பந்து விளையாடும் திடலில் திரையினைக் கட்டி, புரொஜெக்டர்கள் மூலமாக தமிழ்ப் படங்களைக் காண்பித்து வந்த காலம் அது. அப்போது மக்களின் மாபெரும் ஹீரோவாக திகழ்ந்தவர் எம்ஜிஆர்.
சீனர், மலாய்க்காரர் என்ற பேதம் இல்லாமல் அனைவராலும் ரசிக்கப்பட்டவர். அதன் தாக்கம் இன்றளவும் நம் மலேசிய நாட்டில் உண்டு. அதற்கு ஒரு பெரிய எடுத்துக்காட்டு இன்றைய மலாக்கா மாநில முதல்வர்.
-
-
-
புத்தன் இயேசு காந்தி பிறந்தது பூமியில் எதற்காக
தோழா ஏழை நமக்காக
கங்கை யமுனை காவிரி வைகை ஓடுவது எதற்காக
நாளும் உழைத்து தாகம் எடுத்த தோழர்கள் நமக்காக
கேள்விக்குறி போல் முதுகு வளைந்து உழைப்பது எதற்காக
மானம் ஒன்றே பெரிதென எண்ணி பிழைக்கும் நமக்காக
(புத்தன் இயேசு )
நிழல் வேண்டும்போது மரம் ஒன்று உண்டு
பகை வந்தபோது துணை ஒன்று உண்டு
இருள் வந்தபோது விளக்கொன்று உண்டு
எதிர்காலம் ஒன்று எல்லோர்க்கும் உண்டு
உண்மை என்பது என்றும் உள்ளது
தெய்வத்தின் மொழியாகும்
நன்மை என்பது நாளை வருவது நம்பிக்கை ஒளியாகும்
(புத்தன் இயேசு )
பொருள் கொண்ட பேர்கள் மனம் கொண்டதில்லை
தரும் கைகள் தேடி பொருள் வந்ததில்லை
மனம் என்ற கோயில் திறக்கின்ற நேரம்
அழைக்காமல் அங்கே தெய்வம் வந்து சேரும்
அழுதவர் சிரித்ததும் சிரிப்பவர் அழுததும்
விதி வழி வந்ததில்லை
ஒருவருக்கென்றே உள்ளதை எல்லாம் இறைவன் தந்ததில்லை
(புத்தன் இயேசு )
-
-
-
Manthiri Kumari (1950) Tamil_
http://i48.tinypic.com/2u554i9.jpg
Manthiri Kumari (1950) Tamil_
The film was released in June 1950 and became a box office hit. Though MGR was the hero, it was S. A. Natarajan's role which received the most acclaim.
Karunanidhi's fiery dialogues became famous and stirred controversy.
The song 'Vaarai nee vaarai' sung by Trichy Loganathan and Jikki was the most popular song of the film.
The Film Features 'The Travancore Sisters' Lalitha, Padmini and Ragini
CAST:-
M. G. Ramachandran.....General Veera Mohan
S. A. Natrajan..................Parthiban
M. N. Nambiar.................The Rajaguru
G. Shakuntala..................Princess Jeevarekha
Madhuri Devi...................Amudhavalli
T. P. Muthulakshmi
A. Karunanidhi
K. S. Angamuthu
Sivasuriyan
K. V. Seenivasan
K. K. Soundar
Producer: T. R. Sundaram, Modern Theatres
Director: Ellis R. Dungan
Music: G. Ramanathan
Lyrics: Ka. Mu. Sheriff, A. Marudhakasi
Dance: Lalitha, Padmini, Ragini, Kamala Lakshman
-
-
நீண்ட நாட்களுக்கு பின்னர் சந்திரோதயம் விளம்பரம் காணும் வாய்ப்பை வழங்கிய அருமை நண்பர் திரு tfmlover சார்
மிக்க நன்றி . மேலும் பல மக்கள் திலகத்தின் படங்களின் அரிய விளம்பரங்களை பதிவிடும்படி கேட்டு கொள்கின்றேன்
நட்புடன்
esvee
-