HOW TRUE HOW TRUE! :clap: :clap: :clap:Quote:
Originally Posted by joe
VERY WELL written JOE.
Loved ESP the last few lines.
Printable View
HOW TRUE HOW TRUE! :clap: :clap: :clap:Quote:
Originally Posted by joe
VERY WELL written JOE.
Loved ESP the last few lines.
சக்தி :thumbsup:Quote:
Originally Posted by Shakthiprabha
நடிப்புலக மேதை சிவாஜி
- அனுஷிராம்
அக்டோபர் 01, 2004
தமிழ்நாட்டில் நடிப்புக் கலைக்கு இலக்கணம் வகுத்த கோமகன் பிறந்து இன்றுடன் 77 வருடங்கள் பூர்த்தியாகின்றன. சினிமாதான் சகலமும் என்றாகி விட்ட தமிழ் சமுதாய சூழலில், ஒரு ஐம்பதாண்டு காலம் தனது நடிப்பால் அனைவரையும் கட்டிப் போட்டவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.
தீந்தமிழை வளர்த்தவர்கள், பரப்பியவர்கள் என்ற வகையில் சான்றோர் பலரை நம்மால் சுட்டிக்காட்ட இயலும். ஆனால் அமிழ்தினும் இனிதான தமிழை, தமிழ் மக்களுக்கு உச்சரிக்க கற்றுத் தந்தவர் என்றால் அந்தப் பெருமை சிவாஜி கணேசன் ஒருவரையே சாரும். கலைஞர் கருணாநிதியின் கன்னல் தமிழ் வசனங்களை தனது சிம்மக் குரலால் சாஸ்வதமாக்கியவர் சிவாஜி.
தமிழ் சினிமாவில் யாருக்கும் கிடைக்காத ஒரு அரிய அமைப்பு சிவாஜிக்கு வாய்த்தது. அவர் பராசக்தியில் அறிமுகமாகியபோது கோலிவுட்டில் கதாநாயகர்கள் பஞ்சம். அதை சிவாஜியும், அவரை திரையுலகினரும் நன்கு பயன்படுத்திக் கொண்டனர்.
ஆக்ஷன் படம் என்றால் எம்ஜிஆர், காதல் படம் என்றால் ஜெமினி என்று இருந்த நிலையில், தன் மீது எந்த முத்திரையும் விழாமல் பார்த்துக் கொண்டார் சிவாஜி. அதன் காரணமாக சரித்திரம், புராணம், நகைச்சுவை, வில்லன், காதல், குடும்பம் என்று சகலவிதமான ரோல்களில் அவரால் பிரகாசிக்க முடிந்தது.
படங்களில் நடிக்கும் போது, ஏற்று நடிக்கும் கதாபாத்திரமாகவே மாறிவிடுவது சிவாஜியின் வழக்கம். அதனால் தான் இன்றுவரை சிவபெருமான், வ.உ.சி., கட்டபொம்மன், கர்ணன், ராஜராஜ சோழன், அப்பர் ஆகியோரை சிவாஜியின் உருவில் தமிழ் மக்கள் கண்டு வருகிறார்கள். சிவாஜியை இந்த உயரத்திற்கு கொண்டு சென்றதில் அவரது நாடக அனுபவம், பாடி லாங்வேஜ், கர்ஜிக்கும் குரல் ஆகியவை முக்கிய காரணங்கள்.
சராசரி தமிழனின் உயரம்தான் சிவாஜிக்கும். ஆனால் தனது அற்புதமான பாடி லாங்க்வேஜ் மூலம் 6 அடிக்கும் அதிகமாக விஸ்வரூபம் எடுக்கும் திறன் அவருக்கு இருந்தது. வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் நடித்ததற்காக ஆசிய- ஆப்ரிக்க திரைப்பட விழாவில் இரண்டு கண்டங்களிலும் சிறந்த நடிகர் விருதுக்கு சிவாஜி தேர்வு செய்யப்பட்டார். விருதை வாங்க சிவாஜி மேடைக்குச் சென்றபோது, தேர்வுக்குழுவினர் ஆச்சர்யப்பட்டனர்.
சிவாஜியின் உயரம் இவ்வளவுதானா? ஆனால் படத்தில் அதிக உயரமாகத் தெரிகிறாரே என்று கேட்டார்கள். அதனால் தான் நடிகர் கமல் ஒரு பேட்டியில், என்னிடம் சிவாஜியின் உயரம் எவ்வளவு என்று கேட்டால், ஐந்து அடியிலிருந்து ஆறரை அடி வரை என்று கூறுவேன். அவர் அப்பராக நடித்தால் 5 அடியில் இருப்பார். ராஜராஜ சோழனாக நடித்தால் 6 அடிக்கு மேல் இருப்பார் என்று கூறினார்.
சிவாஜி படிக்காதவர் என்றாலும் வக்கீல், போலீஸ், தொழிலதிபர் என்று எந்த வேடத்தில் நடித்தாலும் அந்த வேடத்திற்கு ஏற்ப நாகரீக நடை, உடை பாவனைகளிலும் ஆங்கில உச்சரிப்பிலும் கலக்குவார். தமிழ்நாட்டில் இருக்கும்போது வேஷ்டி, சட்டை அணியும் பழக்கமுடைய சிவாஜி, வெளிநாடு செல்லும்போது கோட், சூட் அணிந்து டீக்காக செல்வார். அப்போது அவருடைய தோரணை ஒரு சீமான் போல் இருக்குமாம்.
ஒரு முறை சிவாஜியும் அவரது மகன் ராம்குமாரும் அமெரிக்கா சென்றார்கள். அப்போது சிவாஜியின் தோரணையைப் பார்த்து, அவரை அமெரிக்க கஸ்டம்ஸ் அதிகாரிகள் அதிகம் சோதிக்காமல் விட்டுவிட்டார்கள். அவருக்குப் பின்னால் வந்த ராம்குமாரை குடைந்து விட்டார்களாம். இதை ராம்குமார் வியப்புடன் ஒரு பேட்டியில் கூறினார்.
சிவாஜியிடம் இன்னொரு சிறப்பம்சம், ஒவ்வொரு கேரக்டரிலும் அவர் காட்டும் வித்தியாசம். கிழவர் வேடத்தில் சிவாஜி எத்தனையோ படங்களில் நடித்துள்ளார். ஆனால் திருவருட்செல்வர் படத்தின் அப்பர் வேடம், நவராத்திரி டாக்டர் வேடம், தெய்வமகன் அப்பா வேடம், தேவர் மகன் அப்பா வேடம் என ஒவ்வொன்றிலும் பாடி லாங்குவேஜ், வசன உச்சரிப்பு ஆகியவற்றில் பெரும் வித்தியாசம் காட்டியிருப்பார். இதே வித்தியாசத்தை நாயகன் கமல், ஒரு கைதியின் டைரி கமல், இந்தியன் கமலிடம் காணமுடியாது.
பொதுவாக சிவாஜி மீது கூறப்படும் குற்றச்சாட்டு அவர் ஓவர் ஆக்டிங் பண்ணுகிறார் என்பது. இதற்கு பதிலளிக்கும் முன்பு, உலகின் தலைசிறந்த நடிகர்களுள் ஒருவராக மதிக்கப்பட்ட, மறைந்த ஹாலிவுட் நடிகர் மார்லன் பிராண்டோ, நடிப்பிற்கு விளக்கமாக கூறியதை குறிப்பிட விரும்புகிறேன். அஞிணாடிணஞ் டிணாண்ஞுடூஞூ டிண் ணிதிஞுணூ என்றார் பிராண்டோ. இயல்பிலிருந்து திரிந்தது தானே நடிப்பு.
மேலும் சிவாஜி, நாடகத்துறையில் இருந்து சினிமாவிற்கு வந்தவர். நாடக மேடையில் மிதமிஞ்சிய நடிப்பு மட்டுமே வேண்டப்படும். அளவுக்கதிகமான பாடி லாங்வேஜ் மூலம் மட்டுமே கடைசி வரிசை ரசிகர்கள் வரை கதாபாத்திரத்தை கொண்டு சேர்க்க முடியும். அப்படி நடித்துப் பழக்கப்பட்டவர், சினிமாவில் நுழைந்தபோது அவரிடம் தேவையான அளவு நடிப்பை இயக்குநர்கள் பெற்றிருக்க வேண்டும். சிவாஜி ஒரு காட்டாறு. அதற்கு அணை கட்ட மறந்து விட்டு, வேகம் அதிகமாக இருக்கிறது என்று ஆற்றின் மீது குறை கூறுவது சரியில்லை.
எந்த வடிவிலும் குடம் செய்வதற்கு ஏதுவாக குழைவான மண்ணாக சிவாஜி இருந்தார். அவரிடம் இருந்து தேவையான அளவை தங்களுக்கு எடுத்துக் கொண்டு, சரியாகப் பயன்படுத்தியது பாரதிராஜாவும் (முதல் மரியாதை), கமலும் (தேவர்மகன்) தான். நடிக்கவே தெரியாதவர் நம்பர் ஒன் இடத்தைப் பிடித்து, அதன் மூலம் அரியாசனத்தைப் பிடிக்கும் அவலம் எல்லாம் நேர்ந்த தமிழ்நாட்டில், ஓவர் ஆக்டிங் என்ற பெயரில் ஒரு உன்னத கலைஞனை குறைத்து மதிப்பது முற்றிலும் சரியானதில்லை.
இப்போது இருக்கும் நடிகர்கள் யாவரும், சிவாஜியின் பாதிப்பின்றி தங்களால் ஒரு படத்தில் கூட நடிக்க முடியாது என்று கூறுவதிலிருந்து அந்த மகாநடிகனின் சிறப்பு தெளிவாகும். இவர்கள் மட்டுமென்ன, இனி வரும் நடிகர்கள் கூட சிவாஜியைப் புறக்கணிக்க முடியாது. ஏனென்றால் அவர் நடிப்புலகின் அரிச்சுவடி.
http://thatstamil.oneindia.in/specia...ys/sivaji.html
நமது கலை மரபின் சிறந்த பிரதிநிதி
ஞாநி
நடிப்பில் மிகப் பெரிய வெற்றியையும், அரசியலில் மிகப் பெரிய தோல்வியையும் சந்தித்தவர் சிவாஜிகணேசன். −ரண்டுக்குமான காரணங்கள் நமது கவனத்துக்குரியவை.
அரசியலில் சிவாஜி தனது வழிகாட்டிகளாக முழுமையாக ஏற்றுக் கொண்ட தலைவர்களாக −ருவரை மட்டுமே குறிப்பிட முடிகிறது. ஒருவர் காமராஜர், மற்றவர் வி.பி. சிங். பெரியார், அண்ணா, நேரு, −ந்திராகாந்தி, ராஜீவ்காந்தி என்று பல அரசியல் தலைவர்களுடன் அவர் உறவாடிய போதும், காமராஜரை மட்டுமே தன் முழுமையான தலைவராக அவர் பல சமயங்களில் பிரகடனம் செய்து வந்தார்.
சிவாஜிகணேசன் ஓர் அனைத்திந்திய அரசியல் கட்சியின் மாநிலத் தலைமைப் பொறுப்பை ஏற்றுச் செயல்பட்டது என்பது ஒரே ஒருமுறைதான். வி.பி. சிங்கின் தலைமையில் −யங்கிய ஜனதாதளத்தின் தமிழகத் தலைவராக அவர் −ருந்தார். காமராஜர், வி.பி.சிங்க போன்றவர்களின் அரசியல் கொள்கைகளும் வழிமுறைகளும் வேறுவிதமான அரசியலால் ஓரங்கட்டப்பட்ட நிலையில், அவர்களை ஆதரித்த சிவாஜியும் அரசியலில் வேரூன்ற முடியாததில் ஆச்சரியமில்லை.
தமிழக ஜனதா தளத்தின் தலைவராக சிவாஜி −ருந்த போது (1991) தேர்தல் பிரசாரத்துக்கான ஆடியோ வீடியோக்களைத் தயாரித்துத் தரும் பொறுப்பு அக்கட்சி நண்பர்கள் சிலரால் எனக்குத் தரப்பட்டது.
சிறு வயது முதல் சிவாஜியின் படங்களின் ரசிகனாக −ருந்து வந்த எனக்கு அவரை −யக்கும் வாய்ப்பாக அது −ருந்தது. மண்டல் கமிஷன் என்பது என்ன? ஏன் −ட ஒதுக்கீடு தேவை? மண்டல் எப்படி அறிவியல் பூர்வமாகத் தனது அறிக்கையைத் தயாரித்திருக்கிறார் முதலிய விவரங்களைத் தெரிவிக்கும் ஓர் உரையையே பிரசார ஆடியோ கேசட்டாகத் தயாரித்தோம். சுமார் 40 நிமிட உரையை சிவாஜி பதிவு செய்தார். வீடியோ கேசட்டின் தொகுப்பு உரையையும் அவரே கேமரா முன்பு வழங்கினார்.
−ந்தப் பதிவுகளைச் செய்வதற்கு முன்பு அவர் காட்டிய தொழில் பூர்வமான அக்கறை, உழைப்பு என்னால் மறக்க முடியாதவை. நான் எழுதி வந்த முழு உரையையும் பல முறை தனக்குப் படித்துக் காட்டச் சொன்னார். பிறகு அவர் எனக்குப் படித்துக் காட்டினார். குரல் ஏற்ற −றக்கங்கள், சொற்களுக்கான அழுத்தம், உச்சரிப்புத் தெளிவு ஒவ்வொன்றும் சரியாக −ருக்கிறதா? நான் விரும்பியபடி அமைகிறதா என்று நடுநடுவே கேட்பார். சில −டங்களில் கரடுமுரடான சொற்சேர்க்கையைத் தானே மாற்றி அமைத்து, அப்படி மாற்றி வைத்துக் கொள்ளலாமா என்று அனுமதி கேட்பார்.
ஐம்பதாண்டு கால அனுபவத்துக்குப் பிறகும், அவர் முதல் நாள் நடிக்க வந்தவனைப் போல அன்று காட்டிய சிரத்தையும், உழைப்பும்தான் அவருடைய கலையுலக வெற்றியின் ரகசியம்.
சிவாஜிக்குப் பிறகு, திரையுலகுக்கோ, நாடக மேடைக்கோ நடிக்க வந்த எந்த நடிகரிடமும் அது வர்த்தக சினிமாவானாலும் சரி, நவீன நாடக −யக்கங்களானாலும் சரி, அவருடைய பாதிப்பு −ல்லாமல் −ருக்கவே முடியாது. அந்த அளவுக்குப் பல தலைமுறைகளைப் பாதித்தவர் அவர். ஆனால் அவருக்கு முன்னோடி என்று ஒருவரும் −ல்லை.
சிறுவயதிலேயே நாடக மேடைக்கு வந்து விட்டார். அங்கு பயின்ற தமிழ், கடைசி வரை அவருடைய தெளிவான உச்சரிப்புக்கு ஆதாரமாக அமைந்தது. ஏராளமான ஆங்கிலப் படங்களை ரசிகராக அவர் பார்த்திருக்கிறார். ஆனால் அதில் எந்த நடிகரையும் அவர் பிரதி செய்தது கிடையாது. தன்னுடைய பாணி நடிப்பை அவர் தாமாகவேதான் உருவாக்கிக் கொண்டவர்.
சிவாஜியின் நடிப்பு மிகைநடிப்பு, செயற்கையானது என்ற விமர்சனம் அவர் கோலோச்சிய காலம் முதல் −ன்று வரை பல தரப்புகளில் கூறப்பட்டு வருவதுதான். ஆனால் அந்த விமர்சனங்கள் எல்லாம் தமிழ்க் கலையை, −ந்தியக் கலையை, −வற்றின் மரபுகளின் அடிப்படையில் பார்காமல், ஐரோப்பியக்கலை மரபின் ஊடாகப் பார்ப்பதிலிருந்து எழுபவை.
தமிழக, −ந்தியக் கிராமியக் கலை மரபுகள் மேற்கத்திய யதார்த்த பாணிக்கு முரண்பட்டவை. −ங்கு தெருக்கூத்தானாலும், யட்சகானமானாலும், ஜாத்ராவானாலும், எல்லாமே ஆங்கிலத்தில் Stylisation எனப்படும் அலங்காரபாணியைச் சேர்ந்தவை.
நமது புராணங்கள் எப்படி யதார்த்தத்துக்கு அப்பாற்பட்ட கற்பனைகள் மூலம் யதார்த்த வாழ்க்கை உண்மைகளை விளக்குகின்றனவோ, அதேபோல, கலைகளிலும், நடிப்பு என்பது யதார்த்தம் மீறிய பாணி மூலம் அசல் வாழ்க்கையைத் தரிசிக்கச் செய்வதாக −ருப்பதே நமது மரபு.
அந்த மரபின் மிகச் சிறந்த பிரதிநிதியாக, ஒப்பாரும் மிக்காரும் −ல்லாத கலைஞனாக விளங்கியவர் சிவாஜி. அவருடைய மிகச் சிறந்த படங்களைப் பார்த்த பிறகும் கூட என் மனதில் எஞ்சும் முக்கியமான வருத்தம் சிவாஜியின் முழு ஆற்றலையும் பயன்படுத்திக் கொள்ளப் போதுமான கதாசிரியர்களும், −யக்குநர்களும், வர்த்தகச் சூழலும் கடைசி வரை அவருக்கு வாய்க்கவில்லையே என்பதுதான்.
சிவாஜிக்கு வாய்க்காமல் போன −ன்னொன்று அவருக்கு உரிய அனைத்திந்திய அங்கீகாரத்தைப் பெற்றுத்தரக்கூடிய அரசியல் செல்வாக்கு. பத்மஸ்ரீ, பத்மபூஷன், மாநிலங்களவை உறுப்பினர் பதவி அவருடைய அவ்வப்போதைய காங்கிரஸ் சார்பின் அடிப்படையில் தரப்பட்டிருந்தாலும், −ந்திய அரசு அவருடைய பிரதான தொழிலான நடிப்பில் அவருக்கு உரிய அங்கீகாரத்தை நீண்ட காலம் அளிக்கவே −ல்லை. வியட்நாம் வீடு, எதிரொலி, எங்கிருந்தோ வந்தாள், எங்க மாமா, சவாலே சமாளி என்று பலவகைப் படங்களை அவர் தந்த அதே சமயத்தில் −தில் எந்தப் படத்துக்கும் ஈடாக −ல்லாத ஒரு ரிக்ஷாக்காரனுக்காக எம்.ஜி.ஆருக்கு தில்லியின் 'பாரத்' விருது தரப்பட்டது. (எம்.ஜி.ஆரே அந்தப் படத்தை விட வேறு பல படங்களில் சிறப்பாக நடித்திருந்த போதும் அப்போது அந்த விருது கிடைக்க அரசியலே காரணம்).
சிவாஜியைவிட மிகக் குறைவான பங்களிப்பைச் செய்தவர்களுக்கெல்லாம் தாதா சாகிப் பால்கே விருது கொடுத்துத் தீர்ந்த பிறகுதான் அவருக்கு பால்கே விருது கிட்டியது.
பிரெஞ்ச் அரசு செவாலியே விருது கொடுத்த பிறகு தான் சிவாஜிக்கு −ந்தியாவில் அரசின் உலகத் திரைப்பட விழாவைத் தொடங்கி வைக்கும் வாய்ப்புத் தரப்பட்டது.
சிவாஜிக்குக் கிடைத்த விருதுகள், கிடைக்காத விருதுகள், எல்லாவற்றை விடவும் முக்கியமானது திரைப்படச் சரித்திரத்தில் அவருக்குக் கிடைத்துள்ள −டம்தான். உலக அளவில், நடிப்பு முறைகளில், ஸ்டானிஸ்லாவ்ஸ்கி பாணி என்றெல்லாம் பல வகைகள் பேசப்படுகின்றன. தமிழ் சினிமாவைப் பொறுத்தமட்டில் என்றென்றைக்கும் சிவாஜி பாணி என்ற ஒரு வகை −னி நிரந்தரமாகிவிட்டதுதான் அவருடைய பெருமை.
நன்றி : தினமணி
சிவாஜி விட்டுச் சென்ற தடம்
தெ.மதுசூதனன்
1931 அக்டோபர் 31 செலுலாயிட் ·பிலிம் தமிழ் மொழியிலும் பேசவும் பாடவும் ஆரம்பித்தது. முதல் பேசும்படம் காளிதாஸ். −தன் பின்னர் உருவான படங்கள் பேசவும் பாடவும் தொடங்கி நூறு சதவிகிதம் தமிழ்பேசும் படம் என்ற விளம்பரங்களுடன் 1935க்கு பின்னர் பல்வேறு படங்கள் வெளிவந்தன. தியாகராஜபாகவதர், பி.யூ. சின்னப்பா போன்ற நட்சத்திர அந்தஸ்து மிக்க கதாநாயகர்கள் தோன்றினர்.
−வர்கள் செல்வாக்கும் மதிப்பும் மிக்க கலைஞர்களாக தமிழ் சினிமாவின் வளர்ச்சிக்கு உறுதுணை புரிந்தனர். பின்னர் எம்.ஜி.ஆர். சிவாஜி என்னும் நட்சத்திர திலகங்கள் தமிழ்ச்சினிமாவின் திசைப்போக்கை வழி நடத்தினர். சினிமா பார்க்கும் பார்வையாளர்கள சிவாஜி, எம்.ஜி.ஆர். ரசிகர்கள் குழாம் என பிளவுபட்டு நிற்கும் போக்கும் உருவாகியது.
1952−ல் பராசக்தி படத்தில் சிவாஜி கதாநாயகனாக அறிமுகமானார். −தைத் தொடர்ந்து சினிமாவில் பல்வேறு வேடங்களில் நடித்து 'சிவாஜிபாணி' என தனியே அடையாளப்படுத்தும் தனித்தன்மை துலங்கும் வகையில் நடிப்புக்கு ஓர் −லக்கணம் வகுத்துக் கொடுத்தார்.
பகவத்சிங், திருப்பூர்குமரன், வ.உசி. சிதம்பரம்பிள்ளை, வீரபாண்டிய கட்டப்பொம்மன், ராஜராஜசோழன் போன்ற வரலாற்று நாயகர்களாகவும்; அப்பர், சிவன், நாரதர் என்று கடவுள் பாத்திரமாகவும்; தொழிலாளி, விவசாயி, ரவுடி, கொள்ளைக்காரன், வக்கீல், நீதிபதி, காவல்துறை அதிகாரி, குருக்கள், பாதிரியார், குடும்பத்தலைவன் என பல்வேறு வேடங்களில் நடித்து வந்தார். −துவரை சிவாஜி ஏற்று நடித்திராத பாத்திரங்கள் எவை எவை என்றே கணக்கிட வேண்டும். அந்தளவிற்கு அவர் ஏற்றுள்ள பாத்திரங்களின் எண்ணிக்கை உள்ளது.
சமுதாயத்தின் பல்வேறு பிரதிநிதிகளை - பாத்திரங்களை ஏற்று தனது நடிப்பினால் உயிரூட்டி வந்த நடிகர். அசல் நன்றாகவும் உண்மையானதாகவும் −ருக்கும்படி தன்னை ஒவ்வொரு படத்திலும் மெருகூட்டிக் கொண்ட கலைஞன் சிவாஜி. −துவரை 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து சாதனைச் சக்கரவர்த்தியாக நடிப்புலகில் வரலாற்றுச் சுவடுகள் பதித்துள்ளார்.
தமிழ்மண்ணின், தமிழ்க்கலாசாரத்தின் உயிர்ப்பின் ஆழத்துக்குள் உள்நுழைந்து மீண்டும் மீண்டும் தனக்கான பிறவியை எடுத்து வந்த மகா கலைஞன். அந்த நடிப்புச் சுடர் தனது 74வது வயதில் (21 ஜூலை 2001) அணைந்துவிட்டது.
1.10.1927 −ல் பிறந்த சிவாஜி தஞ்சையை பூர்வீகமாக கொண்டிருந்தாலும் விழுப்புரத்திலேயே −வரது குடும்பம் வாழ்ந்து வந்தது. பள்ளிக்கு கல்வி கற்க அனுப்ப பெற்றோர் எவ்வளவோ முயன்றனர். ஆனால் சிவாஜிக்கு படிப்பில் அவ்வளவு ஆர்வம் −ருக்கவில்லை. மாறாக நாடகத்தில் நடிப்புத்துறையில் ஆர்வமாக −ருந்தார்.
1935ல் தனது ஏழாவது வயதில் நாடகஅரங்கில் நடிக்கத் தொடங்கினார். யதார்த்தம் பொன்னுசாமிப்பிள்ளை நாடகக் கம்பெனி, எம்.ஆர்.ராதா கம்பெனி, என்.எஸ்.கே. சபா, கே.ஆர்.ராமசாமி நாடகக் கம்பெனி, சக்தி நாடக சபா ஆகியவைகளில் தனது நடிப்புத் திறமையால் பிரகாசித்தார். −ந்த நாடகப் பள்ளிகளில் நன்கு தேர்ந்து பட்டை தீட்டப்பட்ட நல்ல கலைஞராக, நடிகராக சிவாஜி வெளிப்பட்டார்.
1945ல் தந்தை பெரியார் முன்னிலையில் அறிஞர் அண்ணாவின் சிவாஜி கண்ட −ந்துராஜ்யம் நாடகத்தில் சிவாஜி வேடத்தில் நடித்தார். அவருடைய சிறப்பான நடிப்பைக் கண்டு பாராட்டி, ''வி.சி. கணேசன் −ன்று முதல் சிவாஜிகணேசன்'' ஆகிறார் என்று பெரியார் கூறினார். அன்று தொடங்கிய சிவாஜி கணேசன் உச்சரிப்பு தமிழ்ச் சமூகத்தின் முக்கிய குறியீடாக, உயிர்ப்பு மையமாக மாறிற்று.
1951ல் ஏவிஎம் படப்பிடிப்பு நிலையத்தில் காலடி எடுத்து வைத்தார். பராசக்தி படம் மூலம் அறிமுகமாகி தமிழ்த்திரை உலகில் தனக்கென்று தனித்த முத்திரை பதித்து தமிழ்ச் சினிமா வரலாற்றில் ஓர் சகாப்தமானார். அவரது பாதிப்பு −ன்றி நடிப்புத்துறையில் யாரும் நுழைந்துவிட முடியாதளவிற்கு சிவாஜிபாணி நடிப்பு பலரது நடிப்பில் வெளிப்பட்டிருந்தது.
−துவரை தமிழ்த்திரை உலகம் கண்டிராத ஒரு நடிகனின் உருவாக்கம், ஆளுமை தமிழ் மரபின் ஊடாக வெளிப்பட்டு அந்த மரபின் தலைமுறைக் கையளிப்பின் பிரதிநிதியாகவும் சிவாஜி விளங்கினார். ஆழ்மனதும், உள்ளுணர்வும் ஒருங்கிணையும் போது வெளிப்படக்கூடிய படைப்பு உந்துதல், பாத்திரப் பிரக்ஞை −துவரையிலான நாடகப் பயிற்சியால் மேலும் மேலும் மெருகு பெற்று 'கதாபாத்திரமாக வாழ்தல்' சிவாஜிக்கு −யல்பாகியது. −துவே நடிப்பின் −லக்கணம் கண்ட −லக்கியமாக சிவாஜி பரிணமிப்பதற்கும் காரணமாயிற்று.
சிவாஜி நடிப்பு −லக்கணம், நடிப்பு முறைமை சார்ந்த சிந்தனைப் பள்ளி தமிழில் உருவாவதற்கும் சாதகமான சூழல் உருவாகியது. தெளிவான வசன உச்சரிப்பு, உடல்மொழி சிவாஜியின் தனித்தன்மையாயிற்று. ஒரு நடிகனின் உருவாக்கம், அதனூடு வெளிப்படும் ஆளுமைச்சக்தி யாவை என்பதையெல்லாம் உணர்ந்து கொள்ள சிவாஜியின் தடங்கள் ஆழமானவை அகலமானவை.
''நீ நன்றாக நடிக்கலாம். நீ மோசமாக நடிக்கலாம். ஆனால் முக்கியமானது என்னவென்றால் நீ உண்மையாக நடிக்க வேண்டும்'' .
''உண்மையாக நடிக்க வேண்டுமென்பதன் பொருள் சரியாக தர்க்கரீதியாக முரண்பாடற்று சிந்தித்து கடினமாக உழைத்து உணர்ந்து பாத்திரத்தோடு ஒன்றி நடிப்பதாகும்''.
''−த்தகைய உளவியல் போக்குகளை எடுத்துக் கொண்டு நீங்கள் ஏற்றுக் கொண்டிருக்கிற பாத்திரத்தின் ஆன்மீக மற்றும் புறவாழ்க்¨க்கு ஏற்றாற் போல பொருந்தச் செய்ய வேண்டும். அதைத்தான் கதாபாத்திரமாகவே வாழ்தல் என்கிறோம்.''
''படைப்புத் தொழிலில் −துவே தலையாய முக்கியத்துவம் பெற்றது. உள்ளுணர்வுத் தூண்டுதலை ஏற்படுத்தும் பல வழிகளைத் திறப்பதோடு கதாபாத்திரமாகவே வாழ்வதால் நடிகரின் ஒரு முக்கிய குறிக்கோளையும் நிறைவேற்ற உதவுகிறது. பாத்திரத்தின் புறவாழ்க்கையை மட்டும் வெளிப்படுத்துவது அவருடைய வேலை அல்ல. அவருடைய சொந்த மானுடப் பண்புகளை அந்த −ன்னொரு மனிதனின் வாழ்க்கைக்கு ஏற்றாற் போல் மாற்ற வேண்டும். ஆத்மார்த்தமாக அதில் தன்னை அர்ப்பணிக்க வேண்டும். நமது கலையின் அடிப்படை நோக்கமே மனித ஆன்மாவின் அகவாழ்வைப் படைப்பதும் கலைவடிவாக அதை வெளிப்படுத்துவதும் ஆகும்.''
−வ்வாறு ரஷ்யக் கலைஞர் ஸ்டனிஸ்லவீஸ்கி ஒரு நடிகனின் உருவாக்கம் பற்றிய சிந்தனையாக முன்வைக்கின்றார். −தனை சிவாஜி தன் −யல்பான நடிப்பில் நன்கு வெளிப்படுத்தியுள்ளார். சிவாஜி ஸ்டனிஸ்லவீஸ்கி யாரென்பதைக்கூட அறியார். ஆனால் சுயம்புவாக தான் கண்டடைந்த நடிப்பு முறைமை அதற்கான −லக்கணம் ஸ்டனிஸ்லவீஸ்கியின் நடிப்பு முறைமையுடன் ஒத்துப்போவது ஆச்சரியமாக −ருக்கிறது.
சிவாஜியின் நடிப்பு மிகை நடிப்பு, செயற்கையானது என்ற விமரிசனம் பலராலும் −ன்றுவரை முன்வைக்கப்பட்டு வருகிறது. −ந்தப் பார்வை மேற்கத்திய அளவுகோள்கள் ஊடாக பார்க்கும் பார்வையினால் வெளிப்படுவது. கீழைத்தேச −ந்தியக் கலை தமிழ்க் கலைமரபுகளின் செழுமையின் தொடர்ச்சியில் −ருந்து −தனைப் பார்க்கும் போது 'யதார்த்தம் மீறிய பாணி' −ந்த மரபுகளின் விளைச்சலாகவே உள்ளது.
ரஷ்ய கலாச்சாரம் பின்புலத்தில் −ருந்து கண்டடைந்த நடிப்பு முறைமை பற்றிய ஸ்டனிஸ்லவீஸ்கியின் பாணி உலகளவில் −ன்று பரவலாக பேசப்படுகிறது. அதுபோல் தமிழில் சிவாஜி பாணி என்பதாக பேசக்கூடிய அத்தனை சாத்தியங்களையும் தன்னளவில் தமிழ்க் கலாசாரம் வெளிப்படுத்தி உள்ளதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்
தமிழ்ச் சமூகமும் அதன் சினிமாவும் என்னும் ரீதியில் நாம் சிந்திக்கும் பொழுது சிவாஜி பற்றிய சிந்தனையாக அது திசை திருப்புவதும் தவிர்க்க முடியாது. அந்தளவிற்கு தமிழ்ச் சினிமாவின் திசைப் போக்கின் வழிநடத்தலில் 'சிவாஜி பாணிக்கு' −ன்றுவரை ஒரு மவுசு −ருப்பதை கண்டு கொள்ள முடிகிறது.
உலக அளவில் நடிப்பு முறைமைகளில் பல்வேறு நடிப்பு பாணி −ருப்பது போல், தமிழில் 'சிவாஜி பாணி' என்ற ஒருவகை 'சிந்தனைப் பள்ளி'யாக மாறிவிட்டது. −துவே தமிழ் சினிமாவின் வரலாற்றின் சிவாஜி விட்டுச் சென்ற தடம்.
http://archives.aaraamthinai.com/spe...vaji/pg-04.asp
நடிகர் திலகம் மறைவுற்றபோது தொலைக்காட்சியில் திரையுலகப் பிரமுகர் ஒருவர் (சிவகுமார் என்று நினைவு) சொன்னது:
தில்லானா மோகனாம்பாள் எடுக்க ஏ.பி. நாகராஜனுக்கு மிகுந்த தைரியம் தேவைப்பட்டது. காரணங்கள்: 1. அந்தச் சமயத்தில் கதநாயகன் மீசையில்லாமல் இருக்கவே முடியாது. மக்கள் ஒதுக்கிவிடுவார்கள். சிக்கலாருக்கு மீசை கிடையாது.
2.சமகாலப் படங்களே வரவேற்கப்படும் நிலை. புராணக்கதையில்லாவிட்டாலும், சமீந்தார்காலக் கதையாயிற்றே.
3. போதாக்குறைக்கு முழுக்க முழுக்க கருநாடக இசையையும் பரத நாட்டியத்தையும் அடிப்படையாய்க் கொண்டது. பொதுசனம் வரவேற்குமா என்ற பெரிய கேள்வி.
எல்லாவற்றிற்கும் துணிந்து எடுத்த நாகராஜனின் வெற்றி இசரித்திரமானது. தயாரிப்பாளர்களும், விநியோகிப்போரும் சில சமயம் இயக்குநருமேகூட மக்களின் ரசனைக்குக் கட்டளைக்கல்லல்ல.
கொசுறு செய்தி: படம் முதலில் வந்தபோது ஸ்ரீவைகுண்டம் பெருமாள் கோவில் நாதஸ்வரக்காரர் என்னிட்ம் சொன்னது: "சிவாஜி உண்மயாவே அதை வாசிக்கறாருங்க. நடிக்கலை". இசை தெரியாத என்னளவே இசைக்கத்தெரிந்த அவரும் பிரமித்துப் போயிருந்தார்.
அவன்தான் மேதை.
அன்புடன்
மதுரபாரதி
http://www.treasurehouseofagathiyar.net/13900/13975.htm
நடிப்புத்தலைவன் மேல சக நடிகர்கள் வைத்திருந்த மதிப்பு:
"நான் ஒன்றும் சினிமாவில் பெரிதாக சாதித்து விடவில்லை. என் நடிப்பு முழுக்க அப்படியே சிவாஜி சாரை காப்பியடித்துதான் நடிக்கிறேன். நான் மட்டுமல்ல. எல்லா நடிகர்களும் அப்படித்தான். ஆனால் ஒன்னு, என்னைப்போல சிலபேர் பகிரங்கமா சொல்லிக்கொள்வோம். மற்றவர்கள் சொல்லாமல் காப்பியடிப்பார்கள். அவருடைய நடிப்பில் பத்தில் ஒரு பங்கு கூட என்னால் நடிக்க முடியவில்லை என்பது இன்னொரு உண்மை"
- நடிகர் விஜயகுமர்.
*********************************************
நிருபர்: "அன்புள்ள அப்பா படத்தில் உங்க ரோல் ரொம்ப சின்னதாக இருந்ததே. அது உங்களுக்கு வருத்தமாக இருந்ததா?"
நடிகர் ரகுமான்: "அட நீங்க என்ன சார்...!, சிவாஜி என்ற இமயத்தின் பக்கத்தில் நின்று ஒரு போட்டோ எடுத்துக்கொள்ள முடியுமா என்று ஏங்கியவன் நான். இப்போ எனக்கு அவரோட நடிக்கவே வாய்ப்பு கிடைச்சிருக்கு. இதுல சின்ன ரோலாவது, பெரிய ரோலாவது?. எதிர்காலத்தில் எல்லோரிடமும் 'நானும் சிவாஜி சார் கூட நடிச்சேன்'னு பெருமையா சொல்லிக்குவேன்".
*************************************************
நிருபர் : "படிக்காதவன் படத்தில் ரஜினி சார் கூட நடிக்கும்போது பயமாக இருந்ததா?"
நடிகர் விஜய் பாபு: "ஒருவேளை நானும் ரஜினி சாரும் மட்டும் நடித்திருந்தால் அவர் மேல பயம் இருந்திருக்கும். ஆனால் அந்தப்படத்தில் பெரிய சிங்கமாக சிவாஜி சார் இருந்தார். அதனால். அவர் மேல் இருந்த பய பக்தியில் ரஜினிசார் மேல் எனக்கு பயம் வரவில்லை"
naan idhai vazhi mozhigiraen.Quote:
Originally Posted by saradhaa_sn
ippadi pottu sangadapada vakkareengale Joe :D
Joe, great poem. There is one line I need to check. I will PM you.
As for the poll, I voted for Versatility. Yellarum all of the above option keetkuraangga. I think Versatily means all of the above. If you can do all that, then you are versatile. Ambuduthe!
Joe,
With Balaji and groucho promising to do reviews often, saradhaa would come out again with top posts,karthik,jilaba would be contributing, dhanusu would link us to all about NT in the net and you without saying would be as active as ever, I am enjoying and hope to sit back and enjoy the unfolding. I am very happy that this thread is very active. Hope this continues.
Regards
PS: SP! Nice lines. It could have been bit longer.