VM in the news
Quote:
நீர்ப்பறவை திரைப்பட பாடல் சர்ச்சை தொடர்பாக கிறிஸ்தவர்கள் கோபமடைந்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டதால் வைரமுத்துவின் திருவான்மியூர் வீட்டின் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
Printable View
VM in the news
Quote:
நீர்ப்பறவை திரைப்பட பாடல் சர்ச்சை தொடர்பாக கிறிஸ்தவர்கள் கோபமடைந்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டதால் வைரமுத்துவின் திருவான்மியூர் வீட்டின் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
"அப்படி என்ன தான் எழுதினார்"னு தேட ஆரம்பித்தபோது கண்ட ஒரு வேடிக்கையான வரி :
http://www.magicalsongs.net/2012/10/...avai-song.html
:lol:Quote:
உனது வேர்வை என் மார்புக்குள்
பிசுக்கு பிசுக்கென்று கிடக்குதே
ஈர வேர்வைகள் தீரவும்
எனது உயிர் பசை காய்வதா
VM's mAnE-thEnE seems to be vErvai.
I guess the "christian" org is making problem for this song:
http://www.magicalsongs.net/2012/10/...ng-lyrics.html
:lol2:Quote:
கிச்சு கிச்சு பண்ணும் கிறிஸ்தவ பெண்ணே
பச்சை முத்தம் தர வரவில்லையா
ஒரு கன்னம் தர மறு கன்னம் காட்டு
திருமறை வரி நினைவில்லையா
இதுக்கெல்லாம் ஒரு போராட்டமா?
:)
ilayaraja's veena, flute & guitar
enchantment they define!
ilayaraja with vairamuthu & bala!
http://www.youtube.com/watch?v=gOzYPReSq1k
பூமியெங்கும் பூந்தோட்டம் நாம் காண வேண்டும்,
புதுத் தென்றலோ
பூக்களில் வசிக்கும்!
ஆகாய மேகங்கள் நீர் ஊற்ற வேண்டும்,
அந்த மழையில்
மலர்களும் குளிக்கும்!
LOVER OF NATURE - POET VAIRAMUTHU!
From KUMUDAM - 27-10-2010!
http://www.freeimagehosting.net/im4lu
http://www.freeimagehosting.net/c1l8o
வடுகப்பட்டியாரின் முகநூல் பக்கத்திலிருந்து..
இன்று கவியரசு கண்ணதாசன் நினைவுதினம்
கவியரசு கண்ணதாசன் மறைந்தபோது எழுதிய கவிதை
ஒரு
தேவகானம்
முடிந்து விட்டது
எங்கள்
தமிழ்ச்சங்கம்
கலைந்து விட்டது
சரஸ்வதியின்
வீணையில்
ஆனந்த நரம்பொன்று
அறுந்து விட்டது
அந்த விமானத்தில்
எங்கள் ராஜ குயிலின்
கூடுமட்டுமே
கொண்டு வரப்படுகிறது
வார்த்தைக்கு ருசிதந்த
வரகவியே
உன்னை
வரவேற்கக் காத்திருந்த
வர்ணமாலைகளை
உன்
சடலத்தின்மேல் சாத்தவா?
எழுத முடியவில்லை
என்னால்
கண்ணீரின்
கனம் தாங்காமல்
வார்த்தைகள்
நொண்டுகின்றன
காற்றுக்கு
நன்றியில்லையா?
கவிதை வரிகளால்
காற்று மண்டலத்தையே
இனிப்பாக்கினாயே
உனது சுவாசத்துக்கு
அந்தச்
சண்டாளக் காற்று ஏன்
சம்மதிக்க மறுத்தது?
அந்நிய மண் என்பதால்
மரணம் – உன் உயிரை
அடையாமல் தெரியாமல்
அள்ளிப் பருகியதா?
எத்தனை இலக்கியம்
எழுதிய விரல்
எத்தனை கவிதைகள்
முழங்கிய குரல்
எத்தனை கருத்தை
நினைத்த மனம்
ஓ
மரணத்தின் கஜானாவே
நீ திருடிய பொக்கிஷத்தைத்
திருப்பிக் கொடுத்து விடு
என் தாய்க் கவிஞனே
உன்னை இனி தரிசிப்பதெப்படி?
சாவின் மாளிகைக்கு
ஜன்னல்களும் கிடையாதே
நீ காதலைப் பாடினாய்
அது
இளமையின் தேசிய கீதமானது
நீ சோகம் பாடினாய்
அது
ஆயிரங் கண்ணீருக்கு
ஆறுதல் ஆனது
நீ தத்துவம் பாடினாய்
வாழ்க்கை தனது
முகமூடியைக் கழற்றி
முகத்தைக் காட்டியது
அரசியல் – உன்னை
பொம்மையாக நினைத்தபோதும்
நீ
உண்மையாகத் தானிருந்தாய்
உன் எழுத்து
ஒரு
கால் நூற்றாண்டுக்
கலாசாரத்தில் கலந்திருக்கிறது
“மரணத்தின் பின் என்னை
விமர்சியுங்கள்” என்று
வேண்டிக் கொண்டவனே
இன்று மரணத்தையன்றி
வேறொன்றையும் எமக்கு
விமர்சிக்க வலிமையில்லை
எவரேனும் இறந்தால்
உன் இரங்கற்பாப் படித்து
இதயம் ஆறுவோம்
இன்று இரங்கற்பாவே
இறந்து விட்டதே
உன்னை சந்தித்துப் பேசும்
சர்க்கரைப் பொழுதுகளில்
உன்
கண்களில் வெளிச்சத்தைக்
காதலித்தேனே
இனி அந்த வெளிச்சம் -
உன்
இமைகளைப் பிரித்தாலும்
இருக்குமா?
முப்பது வருஷத் தென்றலே
நீ நின்றுவிட்டதால் -
மனசில் புழுக்கம்
விழிகளில் வியர்வை
உன்
பூத உடலில் விழும்
பூவிலுள்ள தேனெல்லாம்
கண்ணீராய் மாறிவிடும்
கவிஞனே ..
உன்னைச் சந்திப்பது இனிமேல்
சாத்தியமில்லையா?
உடைந்த இருதயம்
ஒட்டாதா?
சொர்க்கத்தில் சந்திக்கலாம்
என்று
சொல்லுகிறார்களே
இந்த மூட நம்பிக்கை
நிஜமாய் இருந்தால்
எனக்கு நிம்மதி கிடைக்கலாம்
கடல் படத்தின் "நெஞ்சுக்குள்ள ஒம்ம முடிஞ்சிருக்கேன்" பாடலை ஷக்திஸ்ரீ கோபாலன் பாடியதை கேட்டு எழுதியிருக்கேன். வைரமுத்துவின் பாடல் வடிவம் எப்படி இருக்கிறது என பொறுத்திருந்துதான் பார்க்கணும். கவிஞரின் கவிதை வரிகள் அங்கங்கே சில திருத்தங்கள் செய்யப்பட்டிருக்கிறது சந்தங்களுக்கு ஏற்ப. பாடலின் முதல் வரி "உள் நெஞ்சுக்குள்ள" என்றே இருந்திருக்கலாம். இன்னும் கவி நயம் கூடியிருக்கும்.
நெஞ்சுக்குள்ள ஒம்ம முடிஞ்சிருக்கேன்
இங்க எத்திசையில் எம்பொழப்பு விடிஞ்சிருக்கோ
வெல்லப் பார்வ வீசிவிட்டீர் முன்னாடி - இந்த
தாங்காத மனசு தண்ணிபட்ட கண்ணாடி
வண்ண மணியாரம் வலதுகை கெடியாரம்
ஆனை புலியெல்லாம் அடக்கும் அதிகாரம்
நீர்போனபின்னும் நெழல்மட்டும் போகலையே போகலையே
நெஞ்சுக் குழியிலே வந்து விழுந்திருச்சே
அப்ப நிமிந்தவதான் அப்புறமா குனியலையே குனியலையே
கொடக்கம்பி போல மனம் குத்திருக்குதே
நெஞ்சுக்குள்ள ஒம்ம முடிஞ்சிருக்கேன்
நெஞ்சுக்குள்ள ஒம்ம முடிஞ்சிருக்கேன்
இங்க எத்திசையில் எம்பொழப்பு விடிஞ்சிருக்கோ
பச்சி ஒறங்கிருச்சு பால் தயிராத் தூங்கிருச்சு
இச்சி மரத்து மேல எலகூடத் தூங்கிருச்சு
காசநோய்க்காரிகளும் கண்ணுறங்கும் வேளையில
ஆசநோய் வந்தமக அரநிமிசம் தூங்கலையே
நெஞ்சுக்குள்ள ஒம்ம முடிஞ்சிருக்கேன்
எங்கே எத்திசையில் எம்பொழப்பு விடிஞ்சிருக்கோ
ஒருவாய் எறங்கலயே உள்நாக்கு நனையலயே
ஏழெட்டு நாளா எச்சில் உறங்கலயே
ஏழ இளஞ்சிருக்கி எதோ சொல்ல முடியலயே
ரப்பர் வளவிக்கெல்லாம் சத்தமிட வாயில்லையே
நெஞ்சுக்குள்ள ஒம்ம முடிஞ்சிருக்கேன்
எங்கே எத்திசையில் எம்பொழப்பு விடிஞ்சிருக்கோ
வெல்லப் பார்வ வீசிவிட்டீர் முன்னாடி - இந்த
தாங்காத மனசு தண்ணிபட்ட கண்ணாடி
வண்ண மணியாரம் வலதுகை கெடியாரம்
ஆனை புலியெல்லாம் அடக்கும் அதிகாரம்
நீர்போனபின்னும் நெழல்மட்டும் போகலையே போகலையே
நெஞ்சுக் குழியிலே வந்து விழுந்திருச்சே
அப்ப நிமிந்தவதான் அப்புறமா குனியலையே குனியலையே
கொடக்கம்பி போல மனம் குத்திருக்குதே
நெஞ்சுக்குள்ள ஒம்ம முடிஞ்சிருக்கேன்
நெஞ்சுக்குள்ள ஒம்ம முடிஞ்சிருக்கேன்
இங்க எத்திசையில் எம்பொழப்பு விடிஞ்சிருக்கோ
சித்திரை நெலா
பாடல்: விஜய் ஜேசுதாஸ்
சித்திரை நெலா
ஒரே நெலா
பரந்த வானம்
படைச்ச கடவுளு
எல்லாமே ஒத்தையில நிக்குதுடே
நீ கூட ஒத்தையில நிக்கிறடே
எட்டு வை மக்கா
எட்டு வச்சு ஆகாசம்
தொட்டு வை மக்கா
[சித்திரை நெலா...]
மனிதன் நினைத்தால் வழி பிறக்கும்
மனதிலிருந்தே ஒளி பிறக்கும்
புதைக்கின்ற விதையும்
முயற்சி கொண்டால்தான்
பூமியும்கூட தாழ் திறக்கும்
[எட்டு வை மக்கா...]
கண்களிலிருந்தே
காட்சிகள் தோன்றும்
களங்களிலிருந்தே
தேசங்கள் தோன்றும்
துயரத்திலிருந்தே
காவியம் தோன்றும்
தோல்வியிலிருந்தே
ஞானங்கள் தோன்றும்
சூரியன் மறைந்தால்
விளக்கொன்று சிரிக்கும்
தோணிகள் கவிழ்ந்தால்
கிளை ஒன்று கிடைக்கும்
[சித்திரை நெலா...]
மரமொன்று விழுந்தால்
மறுபடி தழைக்கும்
மனம் இன்று விழுந்தால்
யார் சொல்லி நடக்கும்
பூமியைத் திறந்தால்
புதையலும் இருக்கும்
பூக்களைத் திறந்தால்
தேன்துளி இருக்கும்
[மனம் இன்று விழுந்தால்..]
நதிகளைத் திறந்தால்
கழனிகள் செழிக்கும்
நாளையைத் திறந்தால்
நம்பிக்கை சிரிக்கும்
[சித்திரை நெலா...]
தொட்டு வை - really?
சும்மா இருக்குறதுக்கு தொட்டு வைக்கலாம்ல அப்டீன்ற மாதிரி.
வரவர இவர் ரம்பம் தாங்கலை. முன்ன மாதிரி சரியா வந்து உர்காரமாட்டேங்குது.
இவர் மகர் எழுதன பாட்டு நல்லாருக்கு: அன்பின் வாசலே. Simple and fits the song and makes it better than the sum of the parts.
கவிஞரிடத்தில் எனக்கு இன்னமும் பிடித்தது சொற்கட்டுமானம் தான். ஒரு வரியை தொடர்ந்து அடுத்த வரியின் ஆரம்பம் அல்லது இறுதி இப்படித்தான் இருக்கும்னு நாம் நினைத்தால் அங்கு வேறு மாதிரி எழுதியிருப்பார். இந்த முரண்பாடுகள்தான் அவரின் பெரிய பலம்.
மூங்கில் தோட்டம் மூலிகை வாசம்
நெறஞ்ச வானம் நீ பாடும் கீதம்
பௌர்ணமி இரவு பனி விழும் காடு
ஒத்தையடி பாதை ஒங்கூட பொடிநட
சின்னச்சின்ன வார்த்தைகள். ஆனால் நம்மில் பரப்பும் கற்பனைத் தளமோ நீளம்.