Originally Posted by
MGR Roop
குன்றனைய புகழ்கொண்ட குணக்குன்றே
முடியரசர்க் கில்லாத செல்வாக்கு எல்லாம்
முழுமையுடன் பெற்று விளங்கும் முழு மதியே!
படிமிசை நீ பெற்ற கீர்த்தியெல்லாம்
பார்க்கின்றாள் -வானிருக்கும் சத்யா அன்னை
மடிமிசை உனைச் சுமந்த நாள் நினைத்து -மகிழ்ச்சியில்
வடிக்கின்றாள் கண்ணீர் தன்னை!
கொன்றாலும் நிலைத்திருக்கும் தருமம் என்று
குருடர்களுக்கு எடுத்துரைத்த மறு பிறப்பே !
வென்றாலும் வெல்வாரும் இல்லா வகையில்
எந்நாளும் ஒளிவீசும் தன்மதியே !
தென்னாடும்,தென்னவரும் உள்ளவரை
மன்னா! உன் திருநாமம் துலங்க வேண்டும்!
உன்னாலே உயர்வடைந்த என் போன்றோர்
உள்ளங்கள் அதைக் கண்டு மகிழ வேண்டும்.
Who wrote this poem?