Thank you so much for your magnanimous gesture, esvee sir..! Kindly continue to enrich & enthrall us thru your posts..!
Our sincere & special thanks to all Makkal Thilagam fans for showering their warmest wishes on us on this glorious occasion.!
தன்னடக்கத்தின் உறைவிடமாகத் திகழும் mr_karthik என்கிற திரு_கார்த்திகேயன் அவர்களே,
நாங்கள் எல்லாம் திரியின் தூண்கள் என்றால் தாங்கள் நமது திரியின் அசைக்க முடியாத கல்தூண்..! தாங்கள் தங்கள் பதிவில் குறிப்பிட்டுள்ள அனைவரது கூட்டுமுயற்சியால்தான் இத்தகைய பிரம்மாண்ட வெற்றி சாத்தியமாயிற்று..!
தங்களின் பாராட்டுக்களுக்கும், வாழ்த்துக்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்..! அவை நமது திரியை வெற்றிப் பாதையில் செலுத்துவதற்கு மிகப் பெரிய ஊக்கசக்தியாய் விளங்குகிறது..! வரலாற்று விற்பன்னரான தங்களிடமிருந்து தகவலார்ந்த பதிவுப் பொக்கிஷங்களை மேலும் மேலும் எதிர்பார்க்கிறோம்..!
'இது ஆரம்ப சாதனை மட்டுமே..... இன்னும் பெரிய அளவில் தொடரும், உங்கள் அனைவரின் ஒத்துழைப்போடு' என தாங்கள் வழங்கிய நல்வாக்கு நிச்சயம் பலிக்கும்..!
[125வது மற்றும் 150வது காவிய ஆவணங்கள் தயார் நிலையில்...!]
பாசத்துடன்,
பம்மலார்.
நடிகர் திலகத்தின் அன்பு நெஞ்சங்கள் http://i50.tinypic.com/b3olsh.jpg திரு ராகவேந்திரன் , திரு. பம்மலார், திரு வாசுதேவன் ,திரு கார்த்திக் , திரு சந்திர சேகர் ,பாரிஸ்டர் ரஜினிகாந்த்
உங்களின் அன்பு பாராட்டுதலுக்கு நன்றி ..நடிகர்திலகத்தின் எல்லா ஆவணங்களையும் உடனுக்குடன் விரிவான தகவல்களுடன் . புதுமையான வடிவில் ,பலரும் பார்த்திராத சுவையான செய்திகள் ,நிழற் படங்கள் , வீடியோ பாடல் காட்சிகள், கருத்துக்கள் . என்று
மீடியா& பிரஸ் விட மின்னல் வேகத்தில் பதிவுகளை 24X7 என்ற அளவினையும் தாண்டி வழங்கி வரும் உங்களின் சேவைக்கு மக்கள் திலகத்தின் அன்பு உள்ளங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கின்றோம் .
விரைவில் உயர்ந்த மனிதன் ,..........சவாலே சமாளி .......... அவன்தான் மனிதன் ......
திரிசூலம் ....200
அன்புடன்
esvee
எம் ஜி ஆர் அவர்களின் திரியின் ஒளி விளக்காகத் திகழும் வினோத் சார், இத்திரியின் 100 பக்க சிறப்பினை எட்டியமைக்கு உளமுவந்து பாராட்டுதல்களை நல்கிய தங்களுக்கு நம் அனைவரின் சார்பிலும் நன்றிகள். விரைவில் எம் ஜி ஆர் திரியின் பாகம் 3- புதிய பாகத்தினைத் தாங்கள் துவக்க வேண்டும் என அன்பு வேண்டுகோள் விடுக்கிறேன்.
டியர் பம்மலார், வாசு சார், கார்த்திக் சார், முரளி சார், சந்திரசேகர் சார், ராமஜெயம் சார், பெயர் விட்டுப் போன நண்பர்கள், இது வரை இங்கு பதிவிடாத நண்பர்கள், இனிமேல் இங்கு பங்கு கொள்ளப் போகும் அன்பர்கள் அனைவருக்கும் நம் அனைவரின் சார்பிலும் என் சார்பிலும் பாராட்டுக்களும் நன்றிகளும் உரித்தாகட்டும்.
மாடரேட்டர் பிரபுராம் அவர்களுக்கு சிறப்பான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். உண்மையில் இந்த சாதனைக்குக வித்திட்டவரே அவர் தான். எனவே அவருக்குத் தான் முதல் நன்றி. மேலும் மேலும் அவருடைய சிறப்பான மொழியாற்றலில் தோய்ந்த ஆய்வுப் பதிவுகளையும் படங்களின் திறனாய்வுகளையும் இங்கே தரவேண்டும் என அன்புடன் வேண்டுகோள் விடுக்கிறேன்.
ராகவேந்திரன்
திரு சந்திரசேகரன் சார்,
தங்களுக்கு நெஞ்சம் நிறைந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் .தங்களின் கனவான நடிகர்திலகத்தின் மணிமண்டபம் முயற்சி விரைவில் வெற்றிபெற இறைவனை பிரார்த்திக்கிறேன் .
அன்பு பம்மலார் சார்,
தங்கள் அன்பிற்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.
நமது திரியின் வெற்றிகரமான நூறாவது பக்கத்துக்கு பொருத்தமான பதிவாக 'செவாலியே' விருது விழாவில் 'என் வாழ்நாளில் இந்த நாளை மறக்க முடியாது' என்ற தலைவரின் ஏற்புரையை பதிவிட்டு கலக்கியுள்ளீர்கள். தலைவரின் உணர்ச்சிகரமான உரை நெஞ்சை கனக்க வைத்து விட்டது.
100வது பக்கம் : 100வது காவியம் : 100வது நாள் விளம்பரம் பலே ஜோர். 'நவராத்திரி' நூறாவது நாள் விளம்பரம் நல்ல தேர்வு.
நூறாவது பக்க பக்கா பதிவுகளுக்கு தங்களுக்கு மார்க் நூற்றுக்கு நூறு. நன்றிகள். திரி தொடங்க காரணாமாயிருந்த தங்களுக்கு மீண்டும் என் நன்றிகள்.
டியர் வினோத் சார்,
தங்கள் உயரிய அன்பிற்கும், பண்பிற்கும் மனமார்ந்த நன்றிகள். நடிகர் திலகம் திரியின் வியக்கத்தகு வெற்றியில் தங்களுக்கு பெரும் பங்கு உண்டு என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. அதற்காக என்னுடைய சந்தோஷமான நன்றிகள். மக்கள் திலகம் திரி தங்கள் அசுர உழைப்பால் முன்னூறு பக்கங்களை விரைவில் கடக்கப் போவது உறுதி.
அருமை கார்த்திக் சார்,
தங்கள் உயரிய பாராட்டுதல்களுக்கு நன்றி!
101...1001 செமப் பொருத்தம். அற்புதமான பதிவுகளினால் திரியின் வெற்றியில் முக்கியப் பங்கு தங்களுக்கு உண்டு என்பதை நினைக்கும் போது மனம் மிக்க சந்தோஷம் கொள்கிறது. உழைப்பு...உழைப்பு... உழைப்பு... நமது திரியின் வெற்றிக்கு தாரக மந்திரம். அசுர வெற்றியின் மகிழ்ச்சிகளைத் தங்களுடன் சந்தோஷத்துடன் பகிர்ந்து கொள்கிறேன். தங்களது அற்புதமானபதிவுகளுக்கு மீண்டும் மீண்டும் என் நன்றிகள்.
திரியின் பிதாமகரே! அன்பு ராகவேந்திரன் சார்,
தங்களது ஆதரவினாலும், ஆசீர்வாதங்களினாலும் அன்பு பம்மலார் ஆரம்பித்து வைத்த இந்தத் திரி வெற்றி பவனி வந்து கொண்டிருக்கிறது. திரியை வழி நடத்த பல்வேறு வழிகளிலும் வழி காட்டிய தங்களுக்கு என் தலை வணங்கிய நன்றிகள். தங்களின் அன்புப் பாராட்டுதல்களுக்கு என் பாசமான நன்றிகள்.
டியர் சந்திரசேகரன் சார்,
தங்கள் அன்புள்ளத்திற்கு நன்றி! தங்களின் சமூக நலப் பணிகள் தொடரவும், தாங்கள் வாழ்வாங்கு வாழவும் வாழ்த்தும்
வாசுதேவன்