gangaikarai mannanadi - varusham 16
certain songs we have to watch in the theatre to get the complete feel of it.. this is one such great song.. what an ambience :thumbsup:
http://music.cooltoad.com/music/song.php?id=336724
கண்மணியே ராதை எனும் காதலியே
நான் விரும்பும் பெண்மணியே
ஆடை கட்டும் பைங்கிளியே
கண்ணன் வந்தான் பாட்டிசைக்க
கவலைகளை விட்டு விடு
கால் சலங்கை சத்தமிட மேடையிலே வட்டமிடு..............
கங்கைகரை மன்னனடி
கண்ணன் மலர் கண்ணனடி
வங்க கடல் வண்ணனடி
உள்ளம் கவர் கள்வனடி
நெஞ்சில் எழும் அலைகளிலே
நீச்சல் இடும் இளைஞனடி
வஞ்சி கொடி மடியினிலே
மஞ்சம் இடும் தலைவனடி
உள்ளத்தை எடுத்தேன்
உன் கையில் கொடுத்தேன்
வெள்ளத்தை பிரிந்த
மீனை போல் துடித்தேன்
கங்கைகரை மன்னனடி
கண்ணன் மலர் கண்ணனடி
வங்க கடல் வண்ணனடி
உள்ளம் கவர் கள்வனடி
தத்தும் சிறு தாமரை பாதங்கள் நடைதான் பயில
கத்தும் கடல் நீரலை போல் குழல்தான் நெளிய
இல்லையென யாவரும் கூறிடும் இடைதான் ஒடிய
இன்பம் என என் விழி பார்த்தது இமைதான் விரிய
கால் சதங்கை பாடுதடி
நாள் வரத்தான் வாடுதடி
கால் சதங்கை பாடுதடி
நாள் வரத்தான் வாடுதடி
முன்னம் பல ஜன்மம் வழியே உண்டானது உன் உறவே
இன்னும் எனை தொட்டு தொடர்ந்தே பந்தாடுது உன் நினைவே
உயிர் வாடும் பெண்ணா
வா வா கண்ணா
கங்கைகரை மன்னனடி
கண்ணன் மலர் கண்ணனடி
வங்க கடல் வண்ணனடி
உள்ளம் கவர் கள்வனடி
நெஞ்சில் எழும் அலைகளிலே
நீச்சல் இடும் இளைஞனடி
வஞ்சி கொடி மடியினிலே
மஞ்சம் இடும் தலைவனடி
உள்ளத்தை எடுத்தேன்
உன் கையில் கொடுத்தேன்
வெள்ளத்தை பிரிந்த
மீனை போல் துடித்தேன்
கங்கைகரை மன்னனடி
கண்ணன் மலர் கண்ணனடி
வங்க கடல் வண்ணனடி
உள்ளம் கவர் கள்வனடி
சந்தம் தரும் ஆடலும் பாடலும் சுகமாய் மலரும்
சுட்டும் விழி பார்வையில் ஆயிரம் நிலவாய் பொழியும்
அங்கம் ஒரு ஆலிலை போல் இங்கு நடனம் புரியும்
அன்பே என மாதவன் தோள் தொட நெடுநாள் உருகும்
காத்திருப்பாய் கை அணைக்க
காதலியாள் மெய் அணைக்க
காத்திருப்பாய் கை அணைக்க
காதலியாள் மெய் அணைக்க
கண்ணன் மனம் அந்தபுரமே
வந்தாடிடும் முத்துச்சரமே
அச்சம் விடும் பச்சை கிளியே
அவள் பால் இனம் உணர்த்தும் கனியே
நாளும் ஓதும்
காதல் வேதம்
கங்கைகரை மன்னனடி
கண்ணன் மலர் கண்ணனடி
வங்க கடல் வண்ணனடி
உள்ளம் கவர் கள்வனடி
நெஞ்சில் எழும் அலைகளிலே
நீச்சல் இடும் இளைஞனடி
வஞ்சி கொடி மடியினிலே
மஞ்சம் இடும் தலைவனடி
உள்ளத்தை எடுத்தேன்
உன் கையில் கொடுத்தேன்
வெள்ளத்தை பிரிந்த
மீனை போல் துடித்தேன்
உள்ளத்தை எடுத்தேன்
உன் கையில் கொடுத்தேன்
வெள்ளத்தை பிரிந்த
மீனை போல் துடித்தேன்
aadi velli thedi unnai ( moondru mudichchu )
http://music.cooltoad.com/music/song.php?id=193716
ஆடி வெள்ளி தேடி உன்னை நான் அடைந்த நேரம்
கோடி இன்பம் நாடி வந்தேன் காவிரியின் ஓரம்
காவிரியின் ஓரம்...
ஆடி வெள்ளி தேடி உன்னை நான் அடைந்த நேரம்
கோடி இன்பம் நாடி வந்தேன் காவிரியின் ஓரம்
ஓரக்கண்ணில் ஊர வைத்த தேன் கவிதை சாரம்
ஓரக்கண்ணில் ஊர வைத்த தேன் கவிதை சாரம்
ஓசையின்றி பேசுவது ஆசை என்னும் வேதம்
ஆசை என்னும் வேதம்...
ஆசை என்னும் வேதம்...
வேதம் சொல்லி மேளம் இட்டு மேடை கண்டு ஆடும்
மெத்தை கொண்டு தத்தை ஒன்று வித்தை பல நாடும்
வேதம் சொல்லி மேளம் இட்டு மேடை கண்டு ஆடும்
மெத்தை கொண்டு தத்தை ஒன்று வித்தை பல நாடும்
நாடும் உள்ளம் கூடும் எண்ணம் பேசு மொழி மௌனம்
ராகம் தன்னை மூடி வைத்த வீணை அவள் சின்னம்
வீணை அவள் சின்னம்...
வீணை அவள் சின்னம்...
சின்னம் மிக்க அன்னகிளி வண்ண சிலை கோலம்
என்னை அவள் பின்னி கொள்ள என்று வரும் காலம்
காலம் இது காலம் என்று காதல் தெய்வம் பாடும்
கங்கை நதி பொங்கும் கடல் சங்கமத்தில் கூடும்
சங்கமத்தில் கூடும்...
ஆடி வெள்ளி தேடி உன்னை நான் அடைந்த நேரம்
கோடி இன்பம் நாடி வந்தேன் காவிரியின் ஓரம்
காவிரியின் ஓரம்...
vizhiyil en vizhiyil ( ram lakshman )
http://music.cooltoad.com/music/song.php?id=167374
விழியில் என் விழியில் ஒரு பூ பூத்தது
பூ இங்கு பெண்ணானது
பூ இன்று ஒண்ணானது
இதழோடு இதழ் சேர
இதழோடு இதழ் சேர
அம்மம்மா அப்பப்பா என்ன ஆனந்தம் தம் தம் தம்
விழியில் உன் விழியில் ஒரு பூ பூத்ததோ
பூ இங்கு பெண்ணானதோ
பூ இன்று ஒண்ணானதோ
தம் தம் தந்தம் தொட்டு
தாம் தாம் தாளம் இட்டு
சம் சம் நெஞ்சம் கொஞ்சுதோ
தை தை தத்தை ஒன்று
கை கை பின்ன கண்டு
பொய் பொய் வெட்கம் கொண்டதோ
நாலில் ஒன்று நாணம் அதை பாராட்டு
நில் நில் காலம் உண்டு
சொல் சொல் நேரம் கண்டு
இன்பம் இன்பம் கொள்ளை இன்பம்
விழியில் என் விழியில் ஒரு பூ பூத்தது
பூ இங்கு பெண்ணானதோ
பூ இன்று ஒண்ணானதோ
தேன் தேன் உன்னைத்தானே
நான் நான் உண்ணத்தானே
ஏன் ஏன் அன்பு தொல்லையோ
வா வா அள்ளி கொண்டு
போ போ இன்னும் என்ன
கேள் கேள் ஒன்றும் இல்லையோ
மடியில் பாயும் நதியே என்னை நீராட்டு
பொன் பொன் அங்கம் துள்ள
கண் கண் கவ்வி கொள்ள
இன்பம் இன்பம் கொள்ளை இன்பம்
விழியில் உன் விழியில் ஒரு பூ பூத்ததோ
பூ இங்கு பெண்ணானது
பூ இன்று ஒண்ணானது
இதழோடு இதழ் சேர
அம்மம்மா அப்பப்பா என்ன ஆனந்தம் தம் தம் தம்
விழியில் என் விழியில் ஒரு பூ பூத்ததோ
பூ இங்கு பெண்ணானது
பூ இன்று ஒண்ணானதோ