-
Avan Than Manithan
Thanks Swamy. Just recalling Avan Than Manithan released in same the theatre Madurai Meenakshi (1989) nearly 21 years ago. We watched this movie with so much "allapparai" on Friday/Sunday shows. This movie run for 2 weeks continuous and made huge collections and broken any re-release movies collections. Again and again proved NT is real box office king...
Cheers,
Sathish
-
பொங்கல் திருநாள் தொடங்கி வசந்த் தொலைக்காட்சியில் திரு ஒய்.ஜீ. மகேந்திரா அவர்கள் பங்கேற்கும் என் பார்வையில் என்ற புதிய நிகழ்ச்சி வர இருக்கிறது. இதில் திரையுலகில் தான் சந்தித்த, தன்னை மிகவும் பாதித்த, தான விரும்பிய, பல்வேறு கலைஞர்களையும் நிகழ்ச்சிகளையும் நேயர்களுடன் பகிர்ந்து கொள்கிறார். நடிகர் திலகம், ஜெமினி கணேசன், மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி., இயக்குநர்கள் ஸ்ரீதர், ஜெய்சங்கர், நாகேஷ், கே.பாலச்சந்தர் உட்பட பல்வேறு கலைஞர்களைப் பற்றி அவர் உரையாட இருக்கிறார்.
அனைவரும் நிகழ்ச்சிகளைக் கண்டு தங்கள் கருத்துக்களை இங்கே பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்.
ராகவேந்திரன்
-
MAGNA SOUND has released following films of Nadigar Thilagam in DVD format:
PENNIN PERUMAI
VIDIVELLI
Moserbaer in its three-in-one DVD has released Thirumbi Paar.
Raghavendran
-
hi everybody, Hai Raghavendra Sir, HI Murali hi shek how r u
-
Ilyathilagam Sir first Kannada movie called Boss is releasing in Karnataka on 14th Jan
-
Hi Folks,
it has been a long time since I peeped in this section. Lot of new informations has been provoded by our brothers and sister. It was mind blowiong what sharadha wished for New year. simply great. Very good narrations by Murali which were as usual accurate.
I recently happened to visit Paris and met a friend at his home. As we were talking I could hear the film Naan Petra Selvam was running as a video. My friend´s mother a great NT fan was watching the movie. As I heard the film my mind went back to the time as I watched this movie as I was a school kid. Infact the famous Dharumi scene in Thiruvilaiyadal would be played in this movie as a stage play. NT played the role of Nakkerar and Siva. The dialogues were the same which was not a problem since APN wrote the dialogues for this film as well. He just made it bigger for the later Thiruvilaiyadal. Anyway it was great watching NT playing Nakkerar and the way how he was against the Lord himself.
Another thing about this film which I liked most is Ka. Mu. Sheriff´s songs. Naan petra selvam and vaazhndhaalum yesum thaanzhndhaalum yesum.
-
Murali sir,
Thanks for your nice review about the movie' Lakshmi KalyAnam' and as usual the related incidents and additonal informations. Your review tempted me to watch it again, and I will do it very soon.
No doubt 'Lakshmi KlayAnam' is a nice family story, in which NT had no pair and duet songs, but fully a serious roll.
Thanks again for selecting this movie for analysis.
Raghavendar sir,
Your calender is very nice and an useful one. Thanks.
-
2011 சென்னை புத்தகக் காட்சி களை கட்டியுள்ளது. கலைஞன் பதிப்பகத்தின் கிளைப் பிரசுரமான "அநுராகம்", தமிழ்த் திரையுலக பிரபலங்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியே புத்தகம் வெளியிட்டுள்ளது. இந்த வரிசையில், நமது நடிகர் திலகத்திற்கும், "நடிகர் திலகம் சிவாஜி கணேசன்" என்ற தலைப்பில் ஒரு புத்தகம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதன் விலை 12 ரூபாய். இந்தத் திரையுலக பிரபலங்கள் வரிசையில் எந்தப் புத்தகத்தை வாங்கினாலும் விலை 12 ரூபாய் தான்.
கிடைக்குமிடம் : சென்னை புத்தகக் காட்சி, "அநுராகம்" ஸ்டால் [ஸ்டால் எண் : 128-129] (புத்தகக் காட்சி 17.1.2011 திங்கள் வரை உண்டு)
புத்தகக் காட்சி முகவரி : புனித ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளி, பச்சையப்பன் கல்லூரி எதிரில், சென்னை - 600030.
பதிப்பக முகவரி : "அநுராகம்", 19, கண்ணதாசன் சாலை, தி.நகர், சென்னை - 600017.
அன்புடன்,
பம்மலார்.
-
பொன்விழா ஆண்டின் நிறைவில் சீரோடும் சிறப்போடும் பீடு நடை போடும் சென்னை "சாந்தி" திரையரங்கம் மென்மேலும் பற்பல விழாக்களைக் காண மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்!
-
'சாந்தியின் பொன்விழா நிறைவு'
12.01.1961-ம் ஆண்டு தமிழ்நாடு முதமைச்சர் பெருந்தலைவர் காமராஜ் அவர்களால் திறந்து வைக்கப்பட்ட சென்னை சாந்தி திரையரங்கம், நேற்றுடன் தனது 50 ஆண்டுகளை வெற்றிகரமாகப்பூர்த்தி செய்து, இன்று 51-வது வெற்றி ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.
சென்னை அண்ணாசாலையின் ஒரு அடையாளச்சின்னமாகத் திகழ்ந்துகொண்டிருக்கும், அத்திரையரங்குடன் நம்முடைய நினைவுகள்தான் எத்தனை பசுமையானவை..!. எத்தனை திரைப்படங்களை அங்கு கண்டு களித்திருப்போம். எத்தனை நண்பர்களுடன் அளவளாவியிருப்போம். சாந்தி திரையரங்க வளாகம் என்பது, நடிகர்திலகத்தின் ரசிகர்களுடைய 'சங்கமக்கூடம்'. தமிழ்நாட்டின் எந்தத்திரையரங்கில் நடிகர்திலகத்தின் படம் ஓடிக்கொண்டிருந்தாலும் அங்கு விவாதிக்கப்படும். தகவல்கள் பறிமாறிக்கொள்ளப்படும்.
கால ஓட்டத்தின் காரணமாக ஆளுக்கொரு திக்கில் ஓடிப்போனோம். ஆனாலும் நினைவுகள் மட்டும் பசுமையாக நெஞ்சில் உறைந்து நிற்கின்றன. முன்னொருமுறை நண்பர் ராகவேந்தர் அவர்கள், கவிஞர் கா.மு.ஷெரீப் அவர்களின் மகன் சீதக்காதி பற்றிக் குறிப்பிட்டபோது என்னுடைய எண்ணமும் பின்னோக்கிப்பாய்ந்தது. காரணம் எனக்கும் அவர் நண்பர். எங்களூக்கு மட்டுமல்ல, அந்த காலகட்டத்தில் அந்த வளாகத்தில் கூடி நின்ற அனைவருக்கும் நண்பர். நடிகர்திலகத்தைக் குறை சொல்வோரை 'உண்டு, இல்லை'யென்றாக்கி விடும் தீவிர ரசிகர் அவர்.
1975 - 85 பத்தாண்டுகள், நாங்கள் சாந்தி வளாகத்துக்கு செல்லாத மாலை நேரங்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். "கோவை கீதாலயாவில் அண்ணன் ஒரு கோயில் முந்தாநாள் ஈவ்னிங் ஷோவோடு கண்டினியூ புல் முடிஞ்சு போச்சாம். முந்தாநாள் நைட்ஷோ புல் ஆகலையாம்" என்பன போன்ற தகவலகளை சூட்டோடு சூடாக பறிமாறிகொண்ட இனிய காலங்கள் இனி வரப்போவதில்லை. அலங்காரில் பைலட் பிரேம்நாத் புல் ஆகும்வரை நின்று பார்த்துவிட்டு, பேசிக்கொண்டே நடந்து, தாய்வீடான சாந்திக்குத் திரும்பிய அந்த நாட்கள் இனி கிடைக்கப்போவதில்லை. மிட்லண்டில் கவரிமான் சரியாகப்போகவில்லை என்று கவலைதோய்ந்த முகத்தோடு பேசிக்கொண்ட நாட்கள் இனி வரப்போவதில்லை. ரிஷிமூலத்தையும், பில்லாவையும் ஒப்பிட்டுப்பேசிய ஒரு மாற்று ரசிக நண்பரோடு விவாதத்தில் ஈடுபட்ட நாட்கள் இனி திரும்பி வரப்போவதில்லை.
ஆனால் அந்த பசுமையான நினைவுகள் எங்கள் நெஞ்சங்களில் உறைந்திருக்கின்றன. இறுதிக்காலம் வரை அது அழியாது, மறையாது.