திரு கோபால் அவர்களுக்கு என் மனம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்! :)
Printable View
திரு கோபால் அவர்களுக்கு என் மனம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்! :)
வாசு ஜி, இளையராஜாவின் பாடல் அருமை.
கோபால்ஜிக்கு உங்களது வாழ்த்து அருமை
இதோ உங்களுக்கு ஒன்றல்ல இரண்டு பரிசுகள்
ப்ரியதமா என்ற திரையில் இசையரசியின் குரலில் ....
http://www.youtube.com/watch?v=ov-Rbr9a_Fc
அனாதா திரைப்படத்தில் பாபுராஜ் அவர்களின் இசையில் இசையரசியின் குரலில் அற்புத பாடல்
http://www.youtube.com/watch?v=Ci85Ty4OdYQ
Rajesh: Here is இசையரசியின் real "ப்ரியதமா..." :)
http://www.youtube.com/watch?v=pRxGLMhF_R8
ராஜேஷ் வாசு சார் ராக தேவன் PaadalkaLukku Nandri…
ஓடி விளையாடு தாத்தா – க்ளைமேக்ஸ் மட்டும் வித்யாசமாக இருக்கும்.. மதுரை நியூசினிமா மேட்னி (ஆரம்பிச்சுட்டான்யா ஆரம்பிச்சுட்டான்).. சின்ன நாக்கு சிமிழி மூக்கு அப்போதே பிடிக்கும்.. குட்..ஆனால் அது இளையராஜா இசை எனத் தெரியாது..தாங்க்ஸ் வாசு சார்..
அப்புறம் சி.க வாழ்க்கையில் ஒரு சோக (?!) நிகழ்வு.. நேற்று மேற்புறத்தில் இருந்த ஒரு பல் தானாகவே எதையோ உண்ணும் போது உடைந்துவிட, டாக்டர் பணத்தையும் பல்லையும் பிடுங்கி விட்டார்.. அனஸ்தீஸியா கொடுத்ததனால் கன்னம் ஜோதிகா கன்னம் போல கொழுக் மொழுக்கென்று ஆகி, பின் யாருடனும் பேச முடியாமல் (போதாக்குறைக்கு நேற்று வீட்டில் ஒரு கெட் டுகெதர் வேறு) டூயட் காட்சிகளில் சிவகுமார் எக்ஸ்ப்ரஷன் போல உம்மென்று முகத்தை வைத்துக் கொண்டு இருந்தேன்.. காலையில் பரவாயில்லை..உடம்பு தான் மாமியார் வீட்டுக்கு முதன் முதலில் போகும் மணப்பெண்ணின் மன நிலை போல வெல வெல என்று இருக்கிறது..ம்ம்
அப்புறம் வரட்டா..:)
raagadevan, thanks . yes we've already discussed shakuntala songs . priyathama is absolute stunner by PS,Devarajan,Vayalar combination
காலை வணக்கம்
தேனிசைத்தென்றலின் முத்துக்கள் -18
கே.எஸ்.ரவிக்குமாரின் ஆரம்ப காலகட்டம் அது. சரவணன், ரஞ்சிதா, இதயம் நல்லெண்ணை சித்ரா நடித்த பொண்டாட்டி ராஜ்ஜியம் படம்
ரஞ்சிதா கொஞ்சம் நன்றாக நடித்த படம் இது.
இதில் அணிலுக்கு மூணு கோடு போட்ட ராமரே என்ற பாடல் மிகவும் அழகான நல்ல பாடல்
ஜானகியும் பாலுவும் பாடிய பாடல். தேவாவின் இசையில்
http://sim04.in.com/62/1b65555a654a7...4d9c_pt_xl.jpg
http://www.4shared.com/mp3/OzrO_28Ic...otta_-_Po.html
மிட் நைட் மசாலா – 5 (அமெரிக்கால மிட் நைட்ங்க்ணா)
**
தலைவி தனியாய் இருக்கிறாள் ..மாலைமயங்குகிற நேரம்.. தலைவனையோ காணவில்லை..
வெளியில் வந்து வானத்தைப்பார்த்தால் மேகம் மறைத்திருக்கிறது..கொஞ்சம் சாம்பல் நிறமாய்ச் சிரிக்கிறது வானம்..
அவளுக்கோ கோபம் வருகிறது..
ஏன் சிரிக்கிறாய் வானமே
உனை நினைத்துத் தான்..எதற்கிந்த அலங்காரம்.. எழில்பூக்கும் சேலை, கூந்தலிலே பூத்த மலர், இதழ்களிலே வண்ணச் சாயம் கண்களிலே எதிர்பார்ப்பு..கன்னமோ கொஞ்சம் இன்னும் சிவக்க, இளமையோ கொஞ்சம் தவிப்பது போல் இருக்கிறதே.. ஏனடி யார் வரவுக்காய்க் காத்திருக்கிறாய்..உன் தலைவன் தானே..வந்துவிடுவானா என்ன..
ஏன் இப்படி அச்சானியமாய்ப் பேசுகிறாய் வானமே.. அவர் வருகிறேன் என்று சொல்லியிருக்கிறார்.. நானும் அவர் வரவை எண்ணி ஏங்கியிருக்கிறேன்..வந்துவிடுவார்..
சரி பெண்ணே..உனக்காக வேண்டுமானால் ஒன்று செய்யட்டுமா..
என்ன.. மழை பொழிய வைக்கப் போகிறாயா.. என் உடற்சூட்டை மன வெப்பத்தைத் தணிக்க முடியுமா அதனால்.. சும்மா கம்முனு உன் வேலையைப் பார்..
வானம் சற்றே துணுக்குற்றது.. ச்சும்மா பாவம் ஸேடா இருக்குதே பொண்ணுன்னு பேச்சுக் கொடுத்து சமாதானப் படுத்தினால்..இவள் இப்படிச் சொல்கிறாளே..சரி சரி நம் வேலையைக் காண்பிப்போம்.. என நினைத்து..ஓ மை விண்ட் என தோஸ்த்தைக் கூப்பிட..
இந்தக் கான்வர்சேஷனைக் கேட்டிருந்த காற்றும் மெல்லியதாய் அடிக்க, மழைச் சாரலும் சிச்சிறிதாய் அவள் மேல் பட ஆரம்பிக்க…
மெல்லியளாள் தேகமோ அந்த ஊதக் காற்றினால் சாந்தமடையவில்லை.. கொதிக்க ஆரம்பிக்கிறது..ஆமாம் காற்று தெரியும்.. அது என்ன ஊதக் காற்று..
காற்றென்றால் என்னசொல கலந்துவிட்ட வாழ்வினிலே
…கலகலப்பாய் உடலினுக்கு ஆதார மருந்தன்றோ
ஆற்றலுடன் வேகமாய் அடிக்கின்ற காற்றினையே
…ஆன்றோர்கள் சொலிவைத்தார் அளப்பறியா புயலென்று
ஆற்றாமை பெருமூச்சு அனல்காற்று என்பதெலாம்
…சூட்சுமமாய் சூரியனும் சுட்டெரித்தால் வருமன்றோ
ஊற்றாகப் பெய்யுமழை தொடங்குதற்கு முன்னாலே
…உணர்வுகளைத் தூண்டிவிடும் ஊதக்காற் றென்பார்கள்
யெஸ்.. மெலிதாய்க் குளிரெடுக்க வைக்கும் காற்று.. மன்மதனுக்குக் கணை எய்வதற்கு ஏற்ற காற்று..அவனும் தலைவியின் அவஸ்தையைப் பார்க்கிறான்..அத்துடன் தூரத்தே தலைவனையும் பார்த்து விடுகிறான்..ஆஹா பேஷ் பேஷ்..என நினைத்து தன் மலரம்புகளை தலைவி தலைவன் மீது எய்யும் தருணம் தலைவனும்
தலைவியருகில் வந்து விட…
பின்ன என்னாச்சுங்க்ணா..
ஆசையும் பொறந்துச்சு..பாட்டும் பொறந்துச்சாக்கும்..
**
காத்து காத்து ஊதக்காத்தும் வீசுதே
பாத்து பாத்து ஜன்னல் கதவும் சாத்துதே
ஆடை மூடும் இந்த தேகமே
ஆசை மீறும் நேரமே
கூந்தல் மீது சூடும் பூவை கொண்டுவந்த மன்னவா
ஊஞ்சல் மீது ஆடும் பூவை உந்தன் மீது தூவவா
கண்மூடும் நேரம் கூட காதல் தேவி ஞாபகம்
நீ பார்த்த பார்வையாலே மாறும் எந்தன் ஜாதகம்
மூச்சும் முனகல் பேச்சும் புதிதாய் ராகம் போடும்
பாடலாய் பாவமாய் ஜீவனோடு வாழலாம்
என் வாழ்வில் பார்த்ததில்லை உன்னைப்போல கண்ணனை
உன் கைகள் தீண்டும் போது நெஞ்சில் இன்ப வேதனை
முன் வாசல் வந்த போது
கண்கள்கோலம் போட்டது
உன் நெஞ்சில் சாய்ந்த போது
உதயகீதம் கேட்டது
தேகம் சாந்தி ஆச்சு
தேவை மீறிப் போச்சு
போதுமே தேவனே மீதமில்லை ஏதுமே..
*
என் புருஷன் தான் எனக்குமட்டும் தான் படத்தில் விஜயகாந்த் ரேகா.. பாடலைப்பாடியவர்கள் இளையராஜா லலிதாசாகரி..
கொஞ்சம் மென்மையாய் மனதை வருடி பின் வன்மையில் முடியும் பாடல்..
http://www.youtube.com/watch?feature...&v=GaE5gpsMAZQ
அப்புறம் வரட்டா.. :)
நன்றி ராஜேஷ்ஜி!
தங்களின் இரண்டு பரிசுகளையும் பெற்றுக் கொண்டேன். மகிழ்ச்சி தரக்கூடிய பரிசுகள். இன்னும் பார்க்கவில்லை. பார்த்து விட்டுப் பதிகிறேன்.
'அணிலுக்கு மூணு கோடு போட்ட ராமரே' எனக்கும் மிகப் பிடித்தமே! இந்தப் படத்தில்தானே சித்ரா ரஞ்சிதாவை அடிக்கடி 'இங்கே கொஞ்சம் வாயேன்' என்று ரகசியமாய்த் தள்ளிக் கொண்டு சரவணனுக்கு எதிராக தூபம் போடுவார்?
இளைய ராஜா இசையில் எனக்கு பிடித்த நடிகர்திலகத்தின் பாட்டு. சுகமான இசை அருமையான நடிகர்திலகத்தின் நடிப்பு அதற்கு ஈடு கொடுக்கும் விஜயாவின் நடிப்பு என்று ஒரு அற்புதமான பாடல்.
http://youtu.be/b35qMps703A
http://youtu.be/WMSYkTPkAlE
இளைய ராஜா இசையில் எனக்கு பிடித்த அற்புத டூயட் பாட்டு. துள்ளலான நடிகர்திலகம்
ஸ்ரீப்ரியா இணைந்த ஒரு இனிய பாடல். கேட்க கேட்க இனிக்கும் பாடல்.