http://i65.tinypic.com/qn5wtz.jpg
Printable View
மக்கள் திலகத்தின் 125 வது திரைப்படம் ''நாளை நமதே '' 4.7.1975
இன்று 42 வது ஆண்டு துவக்கம் .
http://i66.tinypic.com/21abv2t.jpg
ஒரு கதா பாத்திரத்தின் பெயர் சங்கர் வித்தியாசமான ஒப்பனையில் தலைவர் தூள் கிளப்பிஇருப்பார் .
மற்றொரு கதா பாத்திரத்தின் பெயர் விஜய் ,சங்கர் கதா பாத்திரத்தின் நேர் எதிர் .முதலில் சங்கர் கதா பாத்திரம் பற்றி சொல்கிறேன். தலைவர் ஒருவித சோகத்தை முகத்தில் படம் முழுக்க தாங்கி வருவார் அவர் சிரித்து நடித்தது என்றால் இரண்டு காட்சிகள் ஒன்று இறுதி பாடல் காட்சியில் தன் தம்பிகளை பார்த்ததும் மிகுந்த பரவசம் அடைந்து சிரிப்பார் இன்னொரு காட்சி படம் முடியும்போது எல்லோரும் நடந்து வரும்பொழுது தலைவர் மக்களுக்கு டாட்டா காட்டி சிரித்துகொண்டே போகசொல்லுவார் .
அந்த போலீஸ் ஸ்டேஷன் காட்சியில் தலைவர் கோபால கிருஷ்ணனன் அவர்களை தேடி வரும் பொழுது இன்ஸ்பெக்டர் அவர் ரிலீஸ் ஆகி போய்விட்டார் என்று சொல்லும் காட்சியில் தலைவர் நாற்காலியை தூக்கி அடித்து கோபத்தை வெளி காட்டும் காட்சி மிகவும் அற்புதமாக இருக்கும் . அதே போல் உணவகத்தில் கண்ணன் வெண்ணிற ஆடை நிர்மலாவினை வம்புக்கு இழுக்கும் காட்சியில் தலைவர் பிஸ்கட் சாப்பிட்டு கொண்டு நாகேஷிடம் பிஸ்கட் எடுத்து கொடுக்கும் காட்சி அதை தொடர்ந்து சண்டை காட்சி படு சூப்பர் .http://i67.tinypic.com/2lbl02h.jpg
நம்பியாருக்காக தலைவர் திருட போகும் காட்சியில் நம்பியார் மகன் வழி எப்படி செல்வது என்று சொல்லும் பொழுது தலைவர் சொல்லுவார் என் வழி தனி வழி என்று இன்று அந்த வசனத்தை மிகுந்த இசை பின்னணியுடன் சொல்கிறார்கள் ஆனால் எங்கள் தலைவர் மிக சாதரணமாக சொல்லிவிட்டு போவார் .
அதே போல் ஓட்டல் வாசலில் தன் தம்பியை அடித்து துரத்தும் பொழுது தலைவர் தன தம்பியின் வாயில் வழியும் ரத்தத்தை லேசாக துடைத்து தன் தலையில் தேய்த்து கொண்டு இந்த நாயிகளிடம் உனக்கு என்ன வேலை என்று சொல்லும்பொழுது திரையரங்கில் விசில் சத்தம கதை பிளக்கும் .
அதே போல் தலைவர் தான் கொள்ளையர்களிடம் கொள்ளையடித்த பணத்தை அனாதை ஆசிரமத்திற்கு கொடுக்கும் பொழுது நாகேஷ் இப்படி எல்லாத்தையும் கொடுத்துவிட்டால் நாளை உங்கள் தம்பிகளுக்கு சேர்த்து வைக்க வேண்டாமா என்று சொல்லும்பொழுது அந்த அனாதை ஆசிரமத்தில் என் தம்பிகள் இருந்தால் என்று தலைவர் கேள்வி எழுப்புவார் .
லதாவினை தலைவர் கடத்தி செல்லும்பொழுதும் சரி லதாவினை தப்பிக்க செய்யும் பொழுதும் வரும் காட்சியில் தலைவர் கலக்கி இருப்பார் தலைவரின் அந்த சங்கர் கதாபாத்திரதிற்கு வசனங்கள் அவ்வளவாக இருக்காது ஆனால் body language மிக அற்புதமாக இருக்கும்.
இறுதி கட்ட காட்சியில் நம்பியாரிடம் தலைவர் பேசும் வசனங்கள் எக் காலத்திற்கும் பொருத்தமான வசனங்கள் மேலும் நம்பியார் ரயில்வே தண்டவாளத்தில் கால் மாட்டி கொள்ளும்பொழுது தலைவர் அவரை காப்பாற்ற முயற்சி எடுக்கும் காட்சி simply சூப்பர் அதனால் தான் நாங்கள் எல்லோரும் அவரை தெய்வமாக வழிபடுகிறோம் .
நாளை நமதே விஜய் கதாபாத்திரம்
என்ன ஒரு இளமையான கதாபாத்திரம் லதாவுடம் அவர் செய்யும் குறும்புகள் கல்லூரி மாணவனின் குறும்பையும் மிஞ்சும் எல்லா பாடல் காட்சியும் இந்த தலைவருக்கு கொடுக்கபட்டது . அதிலும் நான் ஒரு மேடை பாடகன் பாடல் தலைவரின் நடன காட்சி ரசிகர்களை இன்றும் திரைஅரங்கு மேடை மீது ஆட செய்யும் .
நான் சபை ஏறும் நாள் வந்தது
நாம் சந்திக்கும் நிலை வந்தது
என் சங்கீதம் தாய் தந்தது !!
தேன் சந்தங்கள் தமிழ் தந்தது
நானும் அன்பான நண்பர்கள் முன்பாக
இந்நேரம் பண்பாட வந்தேன்
நெஞ்சில் உண்டான எண்ணத்தை
உல்லாச வண்ணத்தை பாட்டாக தந்தேன்
பாட பாட ராகம் வரும்
பார்க்க பார்க்க மோகம் வரும்
நான் எல்லோரும் தருகின்ற நல்வாக்கை துணை கொண்டு
செல்வாக்கை பெறுகின்றவன் !!
courtesy - thiru yukesh babu