-
டியர் கார்த்திக், பம்மலார் மற்றும் நண்பர்களுக்கு,
தங்கள் நினைவுகள் என்னை நெகிழச் செய்து விட்டன. இன்று மாலை இந்திய நேரப்படி சுமார் 5.50 முதல் 7.30 வரை சென்னை சாந்தியில் சில நண்பர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தேன். பிற்பகல் 50வது ஆண்டை முன்னிட்டு ரசிகர்கள் மற்றும் பொது மக்களுடன் உணவு உபசரித்து நிர்வாகி அவர்கள் கொண்டாடிய செய்தியை என்னிடம் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார். இருட்டிய பிறகு சுமார் 7.00 மணியளவில் அங்கு காட்சியை காமிராவில் பதிந்து கொண்டு வீட்டுக்கு சென்று உடனடியாக இன்றே நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்துடன் பஸ்சில் பயணித்த போது என் நினைவுக்கு வந்தவர் சீதக்காதி அவர்கள், ஆம். கா.மு.ஷெரிப் அவர்களின் புதல்வர். பின்னர் வீட்டுக்கு வந்து கணினியில் இப்படங்களை ஏற்றி விட்டு இங்கு வந்து பார்த்தால் கார்த்திக் அவர்கள் அதே சீதக்காதி பற்றிய நினைவுகளை பகிர்ந்து கொண்டிருக்கிறார். இதைத் தான் ஒரே எண்ண ஓட்டம் என்பதோ.
சென்னை சாந்தி திரையரங்கின் 51வது ஆண்டு நுழைவை முன்னிட்டு இன்று எடுத்த புகைப்படம் இதோ தங்களின் பார்வைக்கு
http://i872.photobucket.com/albums/a...uda/snap03.jpg
அன்புடன்
ராகவேந்திரன்
-
நேற்று பொன் விழாவை நிறைவு செய்து இன்று முதல் வைர விழாவை நோக்கி வெற்றி நடை போட துவங்கி இருக்கும் எங்கள் சாந்தி நூற்றாண்டு விழாவும் காண மனங்கனிந்த வாழ்த்துகள். மிக விரைவில் "மன்னவன் வந்தானடி" என்ற ஒலி இங்கே கேட்கப் போகிறது என்ற இனிய செய்தி வந்திருக்கிறது. அது விரைவில் நடைபெறும் என எதிர்பார்ப்புடன் காத்திருப்போம்.
Sivan,
Welcome back and thanks for your kind words.
Karthik,
Emotional trip down memory lane! Good!
Regards
-
Im overjoyed to learn about "Shanti''s Golden Jubilee. Its like a second temple to us ( 1st is of course, Annai Illam, where our God lived and continues to live).
It would have been even more memorable had one of NT's film was screened this week in Shanti for this occasion. Being a "Pongal & holiday week" in TN, it would have been a gala celebrations by fans.
Regards
Shiv
-
நடிகர் திலகத்தின் தீவிர ரசிகரான நடிகர் சிலோன் சின்னையா அவர்கள் லண்டனில் இயற்கை ஏய்தினார். நடிகர் திலகத்துடன் பைலட் பிரம்நாத் படத்திலும், மற்றும் பொண்ணு ஊருக்கு புதுசு ,அகல் விளக்கு, ஆணிவேர், நீயின்றி நானில்லை, புதிய காற்று உட்பட பல படங்களில் நடித்துள்ளார். அவருடைய மறைவுக்கு நம்முடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
நடிகர் சிலோன் சின்னையா நடிகர் திலகத்துடன்
-
கண்ணிலே இருப்பதென்ன கன்னி இள மானே
காவியமோ ஓவியமோ கன்னி இளமானே
இந்த பாடலின் இரண்டொரு நிமிடங்களிலே நடிகர் திலகத்தின் அபார திறமை வெளிப்படுகிறது. அம்பிகாபதி எனக்கு மிகவும் பிடித்தமான கதைகளில் ஒன்று. திரைப்படத்தில் பானுமதியின் நடிப்பு தான் என்னை முதல் பார்வையில் கவர்ந்தது. சற்று நாட்களுக்கு முன்பு இந்த படலை யூடியுபில் பார்க்க நேர்ந்த பொழுது தான் கணேசனின் நடிப்பில் எவ்வளவு நுணுக்கம் பதுங்கி உள்ளது என்று உணர்ந்தேன்.
காதலியை பிரிந்த காதலன் கப்பல் பயணத்தில் பாடும் பாடல். சோகத்தின் சின்னமாகவே அவன் தோற்றமளிக்கிறான். கவின்ஞன் என்பதால் அவனை அறியாமலே செய்யுள் நாவில்நின்று புறப்படுகிறது. அந்த பாடலில் பிரிந்த காதலியின் உருவம் ஒளிர்கிறது. அனால் மெல்ல மெல்ல அமராவத்யிடம் கொண்ட காதல் அவன் இசை மீது கொண்ட காதலுக்கு வழி வகுக்கிறது. பாட்டின் வீரியம் பெருகப் பெருக இரண்டும் இணைகின்றன. ஒன்றின் மூலம் மற்றொன்று கண் முன்னே நிற்கின்றது. வாடி நின்ற முகம் மெல்ல புண் முறுவல் சூடி நிற்கின்றது. ஒன்றரை நிமிடங்களில் சிவாஜி இசையின் பயனையே தனது நடிப்பின் மூலம் உணர்த்தி விடுகிறார். மகத்தான கலைஞனின் அறிகுறி.
-
Wish you all a happy pongal
-
Wish you all a Happy Pongal
-
பொங்கும் மங்கலம் எங்கும் தங்கிட
அனைவருக்கும் இனிய தமிழர் திருநாள் வாழ்த்துகள்.
தீபக்,
நன்றி. இப்படி எப்போதோ ஒரு முறை வராமல் அடிக்கடி இந்த திரிக்கு இது போன்ற பதிவுகளுடன் வரலாமே!
அன்புடன்
-
ஆறோடும் மண்ணில் எங்கும் நீரோடும்
ஏரோடும் எங்கும் நம்ம தேரோடும்
போராடும் வேலை இல்லை
யாரோடும் பேதம் இல்லை
ஊரோடும் சேர்ந்துண்ணலாம்
அனைவருக்கும் உழவர் திருநாள், தமிழர் திருநாள், தைத்திங்கள் நல்வாழ்த்துக்கள்.
-
திரு மகேந்திராவின் நிகழ்ச்சி என் பார்வையில், முதல் பகுதி வசந்த் தொலைக்காட்சியில் வரும் 17.01.11 திங்கட்கிழமை மாலை 5.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது. பல்வேறு கலைஞர்களைப் பற்றித் தம் நினைவுகளைப் பகிர்ந்து கொள்கிறார். முதலில் நடிகர் திலகம்.
காணத் தவறாதீர்கள்