திரை உலக சித்தர் சிவாஜி
தொடர்கிறது....
நடிகர் திலகத்தின் படங்களில் பெரும்பான்மையானவை குடும்பத்துடன் பார்க்கும்படியான திரைப்படங்கள். அன்றும் செரி...இன்றும் செரி ! தாய் தந்தையார் நல்ல திரைபடத்திர்ற்கு தனது பிள்ளைகுட்டிகளுடன் திருவிழாவிற்கு செல்வது போல குதூகலத்துடனும் உற்சாகத்துடனும் சென்றார்கள், செல்கிறார்கள் என்றால் அது நடிகர் திலகத்தின் திரைப்படத்திற்கு மட்டுமே !
அதற்க்கு காரணம், நடிகர் திலகம் என்றுமே தன்னுடைய திரைப்படத்தில் குடிக்காதே, புகைபிடிகாதே, திருடாதே என்று மேம்போக்காக அறிவுரை உரைக்கமாட்டார். காரணம் நம் எல்லோருக்கும் அடிபடயிலயே இது தெரிந்த விஷயம்தான்.
எல்லாவற்கும் தெரியும் குடிப்பது கெடுதல்,
புகைபழக்கம் தீயது,
திருடுவது நல்ல நெறி அல்ல என்று...!
காரணம் நம் பெற்றோர் நமக்கு அறிவுறுத்துவார்கள், அவர்கள் கடமையுனற்சியுடைய குடும்பத்தின் மீது அக்கறை கொண்ட நல்ல பெற்றோராயின் !
இது போன்ற அறிவுரைகள் எல்லாம், பஸ் ரோட்டில்தான் ஓடும், விமானம் ஆகாயத்தில் தான் பறக்கும், கப்பல் தண்ணீரில் தான் மிதந்து செல்லும் என்பதுபோன்ற ரகத்தை சேர்ந்த அறிவுரைகள்.
நடிகர் திலகத்தின் திரைப்படங்களை பார்தோமென்றால், ஒவ்வொரு மனிதனும் அவனுடைய குடும்பத்தில் நடக்கின்ற விஷயங்களை பிரதிபலிப்பது போல இருக்கும். ஒரு மனிதன் சந்திக்கும் பிரச்சனைகள், அதிலிருந்து எவ்வாறு விடுபடுகிறான்,
குடும்பம் என்றால் உண்மையில் என்ன?
எந்த அளவில் ஒரு தலைவனும் தலைவியும் விட்டுகொடுத்து வாழவேண்டும் குடுப்பம் என்ற தேரை நகர்த்த !
அண்ணன் தங்கை உறவு, பாசம் எத்தகையதாக இருக்கவேண்டும்,
கணவன் மனைவி பாசம் எத்தகையதாக இருக்கவேண்டும்,
தந்தை மகன் பாசம் எப்படி எந்த நிலையில் இருக்கவேண்டும்,
குடும்பம் பெரிதா கடமை பெரிதா?
இப்படி பலதரப்பட்ட விஷயங்கள் நம் சித்தர் திரைப்படங்களில் மக்களுக்கு அவர்கள் வாழ்விற்கு அவர்கள் குடும்பத்தை பொருப்புள்ளபடி கொண்டுசெல்வதற்கு துணை நிற்கும்படி அமைந்திருக்கும். அதனால் தான் இன்றளவும் பெரும்பான்மையான குடும்பபொறுப்பு அதிகம் உள்ள குடும்பங்கள் நடிகர் திலகம் திரைப்படங்கள் மட்டுமே விரும்புவார்கள்.
ஆகையால் குடும்பக்கதை என்று வரும்போது கூடுமானவரையில் வன்முறைகாட்சிகள் பெரும்பான்மையாக தவிர்க்கபட்டிருக்கும்.
ஒரு காலகட்டத்தில் நடிகர் திலகதிற்கு சண்டை வராது என்று ஒரு சிலர் எள்ளி நகயாடியபோது, அவர்கள் முகத்தில் கரிபூசியது போல, கன்னத்தில் பளார் என்று அறைவிழுந்ததுபோல தன்னுடைய படங்களில் சண்டைகாட்சிகள் அமையும் வண்ணம் பார்த்துகொண்டார் !
நாம் பொதுவாக ஒரு சில நாயகர்கள் படங்களை பார்த்தால், அதுவும் சண்டைகாட்சிகளை பார்க்கும்போது அந்த சண்டைகாட்சி ஒருதளைபட்சமாகவே இருக்கும்.
அதாவது...நாயகன் மூன்று அடிக்கு மேல் வாங்கவே மாட்டார். வில்லன் எவ்வளவு ஆஜானுபாகுவாக திறமையாளனாக இருந்தாலும் வேண்டுமென்றே இப்படி அந்த வில்லனுடைய பராக்கிரமம் அமுக்கபட்டிருப்பது அப்பட்டமாக தெரியும்.
சண்டைகாட்சி 3 நிமிடம் என்றால் அதில் நாயகன் முதலில் வாங்கும் மூன்று அடிகளோடு சரி...அதற்க்கு பிறகு...மொத்த அடியும் வில்லனுக்கு தான் விழும்.
வில்லனுக்கு இந்தகதி என்றால் அவன் அடியாட்களோ...அடி வாங்க மட்டுமே குறுக்கும் நெடுக்குமாக வந்து வந்து அடிவாங்கிகொள்வார்கள்...
இதை படிப்பவர் யாராக இருந்தாலும் சிறிது யோசித்து கூறுங்கள்? இது இயற்கையான அல்லது இயற்கையாக அமைக்கப்பட்ட சண்டைகாட்சியா?
நம் சித்தரோ உச்சத்தில் இருக்கும் நடிகன் - நினைத்திருந்தால் சண்டைகாட்சியில் வில்லனுக்கு சம சந்தர்ப்பம் கொடுக்காமல், தான் மட்டுமே வில்லனை அடித்துகொண்டிருக்கலாம்... ஆனால் சண்டைகாட்சிகளில் அதுபோல செயர்க்கைதன்மையை ஒருபோதும் நம் நடிகர் திலகம் புகுத்தியதில்லை.
நடிகர் திலகத்தின் மற்றும் மக்கள் கலைஞர் ஜெய்ஷங்கர் இவர்கள் இருவர் படங்களில் மட்டுமே பெரும்பான்மையான சண்டைகாட்சிகள் "மிக" "மிக" "இயற்கையாய்" அமைக்கப்படும்.
வில்லன்கள் உண்மையிலயே மிகவும் பலசாலிகளாக இருப்பார்கள்...வில்லன் மட்டும் அல்ல அந்த வில்லனின் அடியாட்கள் கூட மிகுந்த பலசாலிகளாக காட்சியளிப்பார்கள். வெறும் கும்..கும்...என்று குத்து மட்டுமே வாங்கும் சதைபிண்டங்களாக என்றுமே அவர்களை படங்களில் காட்டியதில்லை.
நம் நடிகர் திலகம் எதற்குமே விதிவிலக்கானவர் அல்லவா ! முதல் படத்திலயே புரட்சி என்ற வார்த்தையை திரை உலகிற்கு அறிமுகபடுத்தி, அதை வருடா வருடம் புழக்கத்தில் விட்டவர் ஆயிற்றே !
அவர் திரைப்படங்களில் வரும் சண்டைகாட்சிகளிலும் புதுமை புரட்சி செய்தார் ! அந்த புரட்சி என்னவென்றால் வில்லன்களுக்கு வில்லனின் அடியாட்களுக்கு சமபலம் பொருந்திய சண்டைகாட்சியை அமைக்க விடுவது ! எவ்வளவு பெரிய புரட்சி பாருங்கள்..அதுவரை திரை உலகம் சண்டைகாட்சிகளில் கண்டிராத புரட்சி !
நடிகர் திலகத்தின் இயற்கையான, வில்லனை சமபலம் வாய்ந்தவனாக பார்பவர்கள் கருதவைக்கும் சண்டைகாட்சி
சண்டைகாட்சிகளின் சுவாரஸ்யம் குறையாமல் இருக்கவேண்டுமென்றால் நாயகன் முகத்தை சீரியஸ் ஆகா வைத்துக்கொள்ளவேண்டும். அதுதான் இயற்க்கை. நம் நடிகர் திலகமும் சண்டைகாட்சியில் ஈடுபடும்போது அந்தகாட்சிகுண்டான முக்கியத்துவம் அந்த சண்டைகாட்சியில் தெரியும்.
சிரித்துகொண்டு...புன்வுருவலுடன் ஒரு சண்டைகாட்சியை செய்தால் அந்த சண்டைகாட்சியின் முக்கியத்துவமே போய்விடும். அதன் நம்பகத்தன்மையே கேள்விகுரியாகிவிடுகிறது !
உதாரணமாக நாம் ஒரு இரண்டு ஆட்களுடன் கைகலப்பில் ஈடுபடும்போது சிரித்துகொண்டா கைகலப்பில் ஈடுபடுவோம்..இல்லை நம்மிடம் சண்டைபிடிப்பவர் சிரித்துகொண்டு அடிக்கவருவாரா ? இரெண்டுமே இல்லை. காரணம் இதுதான் நடைமுறை.
அந்த இயற்கைத்தன்மையை நன்கு உணர்ந்ததால்தான் நடிகர் திலகம் சண்டைகாட்சி இயற்கைதன்மையுடன் தென்படுகிறது..!
தர்மம் எங்கே திரைப்படத்தில் வில்லன் மற்றும் அடியாட்களை எவ்வளவு பலசாலிகளாக காட்டியிருக்கிறார்கள் பாருங்கள். வேறு ஏதாவது நடிகராக இருந்தால்.....? இருந்தால் என்ன...! 3 அடி formula தான்..!
http://www.youtube.com/watch?v=9-HE9HfJ1Eo
என்தம்பி திரைப்படத்தில் மேலைநாட்டு FENCING முறையில் அமைந்திருக்கும் வாள்பயிற்சி பாலாஜியுடன்
http://www.youtube.com/watch?v=YJfmdyg2Eco
தங்கசுரங்கம் திரைப்படத்தில் வில்லன் அடியாட்களுடன் ...
இதில் சண்டை முடிந்தபிறகு பாரதியுடன் உரையாடல் தொடங்கும்போது நடிகர் திலகம் cigarette பட்ற்றவைக்கும் ஸ்டைல் பாருங்கள். இவரன்றோ பல ஸ்டைல்களின் முன்னோடி...!
http://www.youtube.com/watch?v=Ti7xJd4q18c
தங்கை திரைப்படத்தில் இயற்கையான சண்டைகாட்சி பயில்வானுடன்
http://www.youtube.com/watch?v=vJEu0_q9uiA
ராஜா திரைப்படத்தில் உண்மையான மல்யுத்த வீரனுக்கு மதிப்புகொடுக்கும் வகையில் சம சந்தர்ப்பம் கொண்ட சண்டைகாட்சி
http://www.youtube.com/watch?v=YCcymIVgvf4
திருடன் திரைப்படத்தில் உயிருக்கு போராடும் தாய்க்காக தான் திருடி கொடுத்த குழந்தையை தன சகஆட்களிடமிருந்து கவர்ந்து அந்த தாயிடம் கொடுக்க போராடும் பதட்டமான சண்டைகாட்சி..எவ்வளவு இயற்கைதன்மை சண்டைகாட்சியில் ஆஹா..!
http://www.youtube.com/watch?v=IL464qpBbRA
சொர்க்கம் திரைப்படத்தில் ரயிலில் வரும் வில்லன் அடியாட்களுடனான சண்டைகாட்சி...அடியாட்கல்தானே...கதாநாயகன் தான் அடித்துகொண்டிருப்பான் என்று எண்ணவேண்டாம்..பாருங்கள்..எவ்வளவு இயற்கைதன்மையுடன் எடுக்கபட்டிருக்கும் சண்டைகாட்சி. வில்லன் அடியாட்கள் கூட சரிக்கு சரியாக அடிகொடுபார்கள்...வெறும் dummy பீஸ் ஆக அடிமட்டும் வாங்காமல்.
http://www.youtube.com/watch?v=g74zRNWwfkY
அனைத்திற்கும் சிகரம் வைத்தாற்போல் துளிகூட டூப் நடிகர் பயன்படுத்தாமல் உண்மையான மல்யுத்த வீரருடன் " மல்யுதம் " செய்யும் நடிகர் திலகம். நடிகர் திலகத்தின் உடற்கட்டு இதில் "V " வடிவம் போல அமைந்து இருக்கும். இதைபோல இயற்கையான மல்யுத்த காட்சி எந்த திரைப்படத்திலும் எந்த கதானாயகரும் செய்ததில்லை.
http://www.youtube.com/watch?v=uOOftnJMs0Y
வீடியோ உதவி - வேறு யார் ? நம்முடைய நெய்வேலியார்தான் ! நன்றி...நன்றி..நன்றி...நெய்வேலியார் அவர்களே !
தொடரும்......!