http://i58.tinypic.com/4goup4.jpg
Printable View
குமுதம் பத்திரிகை பதில் கொடுக்கும் போது கூட அந்த நடிகர் பெயர் சந்திரமோகன் என்று சொல்லவில்லை அதை கூட நமது நல்ல தகவல் பதிவாளர் எஸ்வி அவர்கள் தான் சொல்ல வேண்டி உள்ளது .
சந்திரமோகன் நடித்த 'சிறி சிறி முவ்வா' என்ற ஒரு நல்ல தெலுகு படத்தை பார்த்தால் போதுமே
எல்லாமே நுனி புல் reporters
நமது மக்கள் திலகம் ,நடிகர் திலகம் மற்றும் எல்லா ஹப் பதிவுகளை பார்த்தாலே படித்தாலே எல்லா விஷயங்களிலும் தகவல் கிடைக்கும்
தமிழகத்தில் அரசு சார்ந்த தொலைக்காட்சி மட்டுமே இருந்த போது எம்.ஜி.ஆர் படங்கள் ஞாயிறு மாலை 5.30 மணிக்கு ஒளிபரப்பினால் திரையரங்குகளில் பகல், மாலைக் காட்சி வசூல் பாதிக்கும். அதிலும் அன்பே வா, ஆயிரத்தில் ஒருவன், எங்க வீட்டுப்பிள்ளை ஆகிய படங்களை வண்ணத்திலேயே ஒளிபரப்பிய போது திரையரங்கு உரிமையாளர்கள் அலறுவார்கள். தொலைக்காட்சி நிலையத்திற்கு கடிதம் எழுதி எம்.ஜி.ஆர். படங்களை தாமதமாக ஒளிபரப்ப கேட்டுக் கொள்வார்கள். இப்போது தனியார் தொலைக்காட்சிகளில் பழைய படங்களில் எம்.ஜி.ஆர் படங்களே அதிகம் ஒளிபரப்பாகின்றன.
Courtesy net
பின்னர் டைரக்டர் ஏ.பி.நாகராஜனின் 'நவரத்னம்' படத்தில் ஜெயசித்ரா நடித்தார். இந்த படத்தில் 9 கதாநாயகிகளை எம்.ஜி.ஆர் சந்திக்கும் நிலை ஏற்படும். அதில் பவளாயி என்ற கேரக்டரில் ஜெயசித்ரா நடித்தார். படத்தில் நடிக்கும் போது ஜெயசித்ரா குளத்தில் குதிப்பது போல ஒரு காட்சி எடுத்தனர்.
இது குறித்து ஜெயசித்ரா கூறும்போது, 'நான் குளத்துக்குள் குதிப்பதற்கு முன்பு தண்ணீர் அழுக்காக இருக்கிறதே என்று லேசாக கூறினேன். இது அருகே நின்ற எம்.ஜி.ஆருக்கு கேட்டு இருக்கிறது. உடனே, அந்தக் குளத்தில் இருந்த தண்ணீர் அனைத்தையும் மாற்றி, புதுத்தண்ணீர் நிரப்ப எம்.ஜி.ஆர் உத்தரவிட்டார். அது மட்டும் இல்லாமல் எனக்கு நீச்சல் தெரியாது என்பதால், கீழே பலகையை போட்டு உள்ளே கயிறு போட்டுக்கொடுத்தார்' என்றார்.
Courtesy malaimalar