ராஜேஷ்ஜி
ராஜாவும் வந்திடுவார்
ரோஜாப்பூ தந்திடுவேன்
அதை ஆசையாக முடிப்பாரு சடையிலே
'கைதியின் காதலி' எல்.விஜயலஷ்மிக்கு சுசீலா அம்மா அழகாகக் குரல் தந்திருப்பார். கேஷுவலான பாடல்.
Printable View
ராஜேஷ்ஜி
ராஜாவும் வந்திடுவார்
ரோஜாப்பூ தந்திடுவேன்
அதை ஆசையாக முடிப்பாரு சடையிலே
'கைதியின் காதலி' எல்.விஜயலஷ்மிக்கு சுசீலா அம்மா அழகாகக் குரல் தந்திருப்பார். கேஷுவலான பாடல்.
Rajeshji,
p.m. anuppiyirukken. paarkkavum.
வாசுதேவன் சார்!
கை கொடுங்கள். 'தீவார்' பாடல் கொடுத்து (keh dhoon thumhe) திக்கு முக்காடச் செய்து விட்டீர்கள். என்ன உற்சாகமான பாடல்! தினம் தினம் நான் கேட்டு மகிழும் பாடல். தேங்க்ஸோ தேங்க்ஸ். அதுவும் நீத்து சிங்கின் அந்த 'ஹாங்' எக்ஸ்ப்ரெஷன் ஏ ஒன். பாடல், ஜீப் இரண்டுமே ஜெட் வேகத்தில் பறக்கும். again thanks.
ராஜேஷ்ஜி!
இதோ உங்கள் மனம் மகிழ ஒரு பதிவு.
நம் இசையரசியின் புகழ் பாடும் பதிவு 'வண்ணத்திரை' 29-9-2014 இதழில். முன்னம் சுப்பையா நாயுடு பதிவளித்திருந்தேன். படித்தீர்களா?
http://i1087.photobucket.com/albums/...%20-2/1-55.jpg
http://i1087.photobucket.com/albums/...%20-2/2-54.jpg
http://i1087.photobucket.com/albums/...%20-2/3-38.jpg
http://i1087.photobucket.com/albums/...%20-2/5-18.jpg
Enjoy the super hit song of Shashi Kapoor & Sharmila duet.
http://youtu.be/txCnbxkiknI
Enjoy the super hit song from the movie Shaan
http://youtu.be/RbPDSKqKPCQ
Enjoy the song of one & only Shammi Kapoor from the movie Junglee. His actions in the song which is unique and no one in hindi filmworld can match.
http://youtu.be/JBtbEE9V9qw
ஹையாங்க் வாசுகுருஜி.. ஞான் இப்ப நோக்கிட்டில்லா.. சாயந்திரம் நோக்குமாக்கும்..ம்ம் ஜோதிகா கன்னம்னா சொல்லியிருந்தேன்..குஷ்பு பிடிக்குமா.. சரி அப்ப எம் என் எம் ல அடுத்த பாட் அது தான்! :)
வலி லிட்டில் பிட் இருக்கு..பட் ஆண்ட்டி பயாட்டிக்ஸ் எடுத்துக்கறதால உடம்பெல்லாம் வெல வெலன்னு இன்னும் இருக்கு.. ஆனா வேலைக்கு வந்தாச்சு..!
Fantastic melody and everyone will enjoy it.
http://youtu.be/jDTvgX8bMuA
எம்.என்.எம் – 6
***
குழந்தையை எப்படிக் கொஞ்சுவோம்..?
சில்லு, பட்டு, செல்லப்பாப்பு, ஜிஞ்சும்மா பட்டும்மா சின்னு சிரி சிரி சிரிடா செல்லம்..பாரேன் அப்பா முகம்பாத்து எப்படிச் சிரிக்குதுன்னு..இந்த பார் ஊர்ல இருந்து ஒனக்கு ஒண்ணுமே வாங்கித்தராத மாமா வந்திருக்கார் பாரு..பாரு..அட ஏண்டா அழ ஆரம்பிக்கறே அடப் போக்கிரி..! மாமா நம்ம மாமாதான்.. அடுத்த தடவை ஒனக்குச் செய்ன் வாங்கிண்டு வருவார்..!..”
ஆக, போக்கிரி என்பது விஷமம் செய்யும் பயல்.. ஆகாத மாமா என்றவுடன் அழுகிறான். பொடியன்!
வளர வளர குழந்தைத் தனம் மறைந்து அதே குழந்தையாயிருந்த பெரிய பையன் கெட்ட செயல்கள் செய்தால் அவன் பெரிய போக்கிரிப்பா அவன்கிட்ட வெச்சுக்காதே என்பார்கள்.. ஸோ போக்கிரித் தனம் என்பது கெட்ட அல்லது விஷமத் தனமான செயல்கள் எனச் சொல்லலாம்..
இதுவே பெண்களிடம் எப்படி வரும்.. வெடுக் வெடுக்கெனப் பேசும் பெண் துடுக்கானவள்.. துடுக்குத்தனம் மிக்கவள்..போக்கிரித்தனம் கலந்த பெண் என்றால் விஷமத் தனம் செய்பவள்..ஆனால் இந்தப்பெண்கள் போக்கிரித்தனம் செய்வதெல்லாம் தன் மனம் கவர்ந்தவனிடம் மட்டுமே..
இந்த ஆண்கள் இருக்கிறார்களே..அப்பாவிகள்..சாதுக்கள்..ரொம்ப ரொம்ப நல்லவர்கள்! அவர்களை வம்பிழுத்து க் கெட்டவர்கள் ஆக்குவது எல்லாம் இந்தப் பெண்கள் தான்..அதுவும் பேச்சால் செய்ய மாட்டார்கள்..ஒரு பார்வை ஒரு சிரிப்பு..பேச்சென்றால் பட்டும் படாமல் தாமரை இலை தண்ணீர் போல ஒன்றுமே தெரியாத மாதிரி அப்ப்பிராணியாட்டம் முகத்தை வைத்துக் கொண்டு பேசும் ஓரிரு வார்த்தைகள்..
போதாதா ஆண்கள் டபக்கென க் கீழே விழுவதற்கு.. மயங்கி காதலி மேலேயும் விழுவார்கள் காதலர்கள்..
அது என்ன போக்கிரிப் பார்வை..
கோர்த்திருக்கும் முத்தெனவே குறுநகையாய்ப் பல்வரிசை
…கொண்டுவந்த பொன்னுதட்டை மடித்தபடி நின்றவளும்
ஆர்ப்பரிக்கும் மனவலையை மென்மையுடன் கட்டிவைத்து
…அள்ளுகின்ற விழிமலரைக் கண்ணிமையால் கணம்மறைத்து
தேர்ந்தவொரு சிற்பியவன் வார்த்தெடுத்த சிற்பமது
…திகட்டாத அழகுடனே சட்டென்றே அசைவதுபோல்
கூர்மையதைக் கொண்டுவிட்ட வேல்விழியால் பார்த்திடவும்
..குழம்பிடுவான் வாலிபனும் தோகையவள் செய்கையினால்..
அப்புறம் என்ன ஆகும்.. கிள்ளாத திரியோட இருக்குற சரவெடி மேல டப்புன்னு ஒரு பொறி பட்டுச்சுன்னா என்ன ஆகுமோ..அதான்..
**
இந்தப் பாட்டுலயும் அப்படித் தான்.. போக்கிரிப் பார்வை பார்க்கிறது குஷ்பு.. பத்திக்கற சரவெடி கார்த்திக்.. (இருவருமே இந்தப் பாடலில் அழகு.. )
படம் இது நம்ம பூமி..பாடியவர்கள் மனோ ஸ்வர்ண லதா.. இசை இளையராஜா..
இந்தப்பாட்டு முன்னாலெல்லாம் எனக்குத் தெரியாது.. நல்ல பாட்டுக்காக(?!) தேடிக்கொண்டிருந்த போது கிடைத்தது..என்னவொரு மெலடி..
வரிகளும் கவித்துவமாய் இருக்கிறது.. வாலியாய் இருக்கும் என நினைக்கிறேன்..
சொக்கத் தங்கம் என்பது .999 தான்.. சொக்க வெள்ளியும் .999 தான்.. சொக்கத் தங்கத்தில் நகை செய்யலாம் என்று சொன்னாலும் கஷ்டம் தான்..டபக்கென ஒடிந்து விடும் அதுபோலவே சொக்க வெள்ளி.. பாத்திரங்கள் எல்லாம் செய்வது கஷ்டம்..
**
இனி பாடல் வீடியோவும்.. பாடல் வரிகளும்..
http://www.youtube.com/watch?feature...&v=ycJ3XgRoh60
ஒரு போக்கிரி ராத்திரி பார்க்கிற பார்வை தான்
எனை தாக்குது கேக்குது பூக்குது ஆசை தான்..
பிறக்குது சபலம் சபலம்
கொடுப்பது சுலபம் சுலபம்..
மனக் காயங்கள் ஆறாதோ காதலால் தான்
ஒரு ஆறுதல் தேடினேன் ஆதலால் தான்
கல்லூரி வாசலிலே நட்டு வைத்த காதல் விதை
காயாகிக் கனிந்துவரும் காலமுள்ள காலம் வரை
கல்யாணப் பந்தலுக்கு காத்திருக்கும் நாளும் இது
கண்ணா உன் கையணைக்கப் பூத்திருக்கும் காடு இது
சிங்கார மேடை தான் சொக்க வெள்ளிப் பாற்குடம்
சிந்தாமல் நீ இதை அள்ளுகின்ற நாள் வரும்..
எப்போது ஆரம்பம் அந்தப்புர நாடகம்
ஏனிந்த தாமதம் இன்னும் சொல காரணம்
காத்திரு கண்ணே கொடி நாட்டலாம் ஹோய்
காதலே இன்பம் எனக் காட்டலாம் ஹோய்
என்னோடு நீ இருந்தால் நெஞ்சுக்கொரு நிம்மதிதான்
இல்லாமல் தனித்திருந்தால் நொந்துபட்ட பைங்கிளிதான்
எப்போதும் என்மனது உன்னைச் சுற்றிக்கோலமிடும்
தன்னந்தனியே இருந்தால் தத்தளித்து ஓலமிடும்
என் கூந்தல் வேண்டுது உன்னுடைய பூச்சரம்
என்னாள் என் கைவரும் உன்னுடைய மோதிரம்
என் தேகம் யாவுமே உன்னுடைய சீதனம்
பார்த்தாலும் தீருமோ உன் அழகு நூதனம்
காதலால் கூவும் ஓர் பூங்குயில் ஹோய்
பூங்குயில் மேவும் இளம் ஆண்குயில் ஹோய்
ஒரு போக்கிரி ராத்திரி பார்க்கிற பார்வை தான்
எனை தாக்குது கேக்குது பூக்குது ஆசை தான்..
பிறக்குது சபலம் சபலம்
கொடுப்பது சுலபம் சுலபம்..
மனக் காயங்கள் ஆறாதோ காதலால் தான்
ஒரு ஆறுதல் கூறினேன் ஆதலால் தான்
*
எங்குமே பாடல் வரிகள் கிடைக்கவில்லை..எனில் வீடியோவை திரும்பத் திரும்பக் கேட்டு எழுதியதில் பாட்டும் மிகப் பிடிக்க ஆரம்பித்துவிட்டது.. உங்களுக்கும் பிடிக்கும்..
(அப்புறம் வரட்டா)