Originally Posted by
KALAIVENTHAN
திரு.ஆர்.கே.எஸ்.,
உங்களுக்கு நன்கு தெரிந்த உதாரணத்தையே சொல்கிறேனே. சவாலே சமாளி படத்தில் நடிகர் திலகம் திரு.சிவாஜிகணேசன் அவர்கள் பாடும் ‘நிலவைப் பார்த்து வானம் சொன்னது..’ பாடல் எனக்கும் மிகவும் பிடித்த பாடல். அதில் ‘ஆலயம் செல்வோம் அங்கே அனுமதியில்லை, நீ அந்தக் கூட்டமே இதில் அதிசயம் இல்லை........’ என்று பாடுவாரே.அப்படி ஆலயம் செல்லக்கூட அனுமதி இல்லாத காலம் இருந்தது. (மதுரையில் மீனாட்சி அம்மன் கோயிலில் காங்கிரஸ் தலைவராக இருந்த வைத்தியநாத அய்யர் தலைமையிலான ஹரிஜன ஆலய பிரவேசம் கூட திராவிட இயக்கத்தின் தாக்கத்தால் பெரியாரின் வைக்கம் போராட்டத்தால் நடந்ததுதான்)
இதை விடக் கொடுமை தென் மாவட்டங்களில் உயர்குடிப் பெண்களைத் தவிர மற்ற பெண்கள் மாராப்பு அணிய தடை விதிக்கப்பட்டு அதற்காக தோள் சீலைக் கலகம் நடந்த வரலாறெல்லாம் உண்டு.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்