Originally Posted by
Gopal,S.
ஆனால் தமிழ் பட உலகம் நட்சத்திர பிடியில் சிக்கிய பிறகு, ஒரு நடிகர் என்பதையும் மீறி, ஒரு கதாநாயக நடிகர் , சக நடிகர்கள்,கதை-வசனகர்த்தாக்கள்,பாடலாசிரியர்,இசையமைப்பாளர்,இயக்குன ர் போன்றவர்களை தேர்ந்தெடுத்து அனைத்திலும் பங்கு பெற்று, வியாபார ,வெளியீட்டு விஷயங்களிலும் பங்கு பெற வேண்டிய அவசியங்கள் உருவானது .(விரும்பதகாததெனினும்).இந்த முறையில் மிக பாதிப்படைந்த ஒரு மகா மேதை நம் NT போன்றவர்கள். NT ,ஒரு தயாரிப்பாளரின்,இயக்குனரின் நடிகர். எந்த விதமாகவும்,அவரை உபயோகித்து,மிக சிறந்த படைப்புகளை உருவாக்கி ,உலகையே திரும்பி பார்க்க செய்திருக்க முடியும்.ஆனால் அந்த அப்பாவி மேதை ,பல உப்புமா தயாரிப்பாளர்களுக்கு பணம் பண்ணும் இயந்திரமாக, ஓயாது உழைத்து , வியாபார உத்திகளன்றி, மாதம் ஒன்றாக நடித்து குவித்தார். ஆனால் இவ்வளவு தடைகளை மீறி பேர் சொல்லும் 50 மிக மிக தரமான படங்கள் நமக்கு கிடைத்தது சிவாஜி என்ற ஒரே ஒரு உலக மேதையின் (One man Army ) சாதனை என்பதில் மாற்று கருத்தே இருக்க முடியாது.