தலைவரே,
பொங்கும் கடலோசை ஒரு marvellous composition .ஆனால் வலஜியில் அவர் கொடி நாட்டியது பொட்டு வைத்த முகமோ தான்(சுமதி என் சுந்தரி).
மெல்லிசை மன்னர் இசையில் பளீர் பாடல்கள் (குறிப்பிட்ட படங்களை தவிர) நீராட நேரம் நல்ல நேரம், பொங்கும் கடலோசை.
Printable View
டியர் வாசு சார்,
அன்று சிந்திய ரத்தம் படத்தில் ஜெய் - பத்மப்ரியா பாடல் காட்சியைப் பதிவிட்டதற்கு. பின்னாளைய படங்களில் இவருக்கு கொஞ்சம் ஹேமாமாலினி சாயலும் கொஞ்சம் ஜெயமாலினி சாயலும் இருந்தது (பத்மமாலினி..?)
'அன்று சிந்திய ரத்தம்' படத்தின் பெயரைச் சொல்லும்போதே நினைவுக்கு வரும் இன்னொரு ஜெய் படம் 'துணிவே துணை'. மெல்லிசை மன்னரின் இசையில் பாடல்கள் அனைத்தும் சுவை.
தயான் ஆக வேடமிட்டு ராஜசுலோச்சனாவின் கோட்டைக்குள் நுழையும் இன்ஸ்பெக்டர் ஜெய், அங்கிருக்கும் ஒரு அழகியைத் திருமணம் செய்துள்ள விரும்ப, அவள் வேறு யாருமல்ல, இன்ஸ்பெக்டர் ஜெய்யின் காதலி ஜெயப்ரபா. தன் காதலன் என்று தெரியாமலே தயானை திருமணம் செய்துகொள்கிறாள். (தவறு, பலவந்தமாக ராஜசுலோச்சனாவால் செய்விக்கப்படுகிறாள்).
திருமண ரிஸப்ஷனில் தோழிகளால் பாடப்படும் பாடல். ராட்சசி ஈஸ்வரியின் குரலில் (இதற்கெல்லாம் அவரை விட்டால் வேறு யார்)
கல்லில் பூவெடுப்பொம்
காற்றில் நாறெடுப்போம்
இங்கு சட்டம் உண்டு திட்டம் உண்டு
எங்களுக்குள் மட்டும் உண்டு பாடு
இந்த வெட்கத்தை விட்டோடி
அந்த சொர்க்கத்தைக் கொண்டாடி.
"படித்தால் மட்டும் போதுமா புகழ்" ராஜி ,,அப்பாடா தள்ளாத வயசில் ஸ்ப்ரிங் பெட்டில் என்னா வெளாட்டு வெளாடும் .யப்பா ....
ராகத்தை வைத்து ஒருவர் எவ்வளவு கட்டுடைத்து அதிசயம் நிகழ்த்தலாம் என்ற fusion வகை பாடல் . படம் தோல்வியடைந்தால் என்ன?இந்த பாடல் என்றுமே வென்று அதிசயம் கொடுக்கும்.
ஹம்சத்வனி என்ற ராக அடிப்படை.
ஏழைக்கும் காலம் வரும் 1975
சாரதா combines
ராஜேந்தர் பாபு என்பவர் டைரக்டர்
இவர் வேறு எதாவது படம் இயக்கினார என்று தெரியவில்லை
மெல்லிசை மாமணி குமார் இரண்டு பாட்டு ரொம்ப அருமை
முத்துராமன்,ஸ்ரீலட்சுமி, சுபா, நம்ம ஸ்ரீகாந்த் (இது வரைக்கும் இவருக்கு 3 பட்டம் இந்த திரியில் வழங்கப்பட்டு உள்ளது தென்னாட்டு ஒமேர்ஷேரிப்,
தென்னாட்டு சத்ருகன்,அந்நாளைய முரட்டு ஆனழகன் வேறு எதாவது விடுபட்டு உள்ளதா கார்த்திக் சார் )
இந்த கதை கொஞ்சம் நினைவில் உண்டு
ஸ்ரீகாந்த் வெகுளி அவரை எல்லாரும் ஏமாத்துவாங்க
நம்ம முத்துராமன்,சுபா எல்லோரும் சேர்ந்து தான் அவரை கடைசியில்
வந்து உதவி செய்து எல்லா சொத்துகளையும் காப்பாத்துவாங்க
முத்துராமனை விட நம்ம ஸ்ரீகாந்த் செம அழகு
பாலாவின் குரலில்
"ஓராயிரம் கற்பனை நூறாயிரம் சிந்தனை ராகமே பாவமே தாளமே
ஓடி வா ஓடி வா "
மீண்டும் சுசீலாவின் குரலில்
"ஓராயிரம் கற்பனை நூறாயிரம் சிந்தனை ராகமே பாவமே தாளமே
ஓடி வா ஓடி வா "
ஜேசுதாஸ் சுசீலாவின் குரலில்
மோகம் என்னும் ராகம் பாடும்முத்துப் பல்லக்கு
முப்பாலுக்கும்அப்பால் போகும் எந்தன் கண்ணுக்கு
தித்திக்கின்ற தேனில் செய்த சின்னப்பெண்ணுக்கு
தெய்வம் தந்த சொந்தம் உண்டு எந்தன் நெஞ்சுக்கு
இந்த பாடலில் முத்துராமன் ஜோடி ஸ்ரீலட்சுமி னு ஒரு நடிகை
ஸ்ரீகாந்த் ஜோடி சுபா
https://www.youtube.com/watch?v=ddcUDbK-8ய்க்
https://www.youtube.com/watch?v=ச்வழ்க்75சஜ்5கே
கார்த்திக் சார்,
நம்ம ரெண்டு பேருக்கும் இன்னைக்கு நேரம் சரியில்லைன்னு நினைக்கிறேன். வரும் முன் காக்க. கையில் கல்லெடுத்து ஒருவர் ரெடி.
நன்றி கிருஷ்ணா சார்!
நீங்கள் ஏற்கனவே முன் ஜாக்கிரதையாய் இருக்கிற மாதிரி தெரியுதே! தலைவரேன்னு போட்டுட்டீங்களே!:)