-
இசைக் கலைஞர்கள் இறைவனின் தூதுவர்கள் - டி.ஆர். பாப்பா
தவிர்க்க இயலாததால் சற்று இடைவெளி ... .. இனி தொடர்கிறேன்..
எதையும் தாங்கும் இதயம்... அண்ணா அவர்களால் மிகவும் பிரபலமான சொற்றொடர்.. இப்படத்தின் கதை வசனம் அவரே தான். டி.ஆர். பாப்பாவின் இசையில் அனைத்துப் பாடல்களும் நெஞ்சில் என்றும் நிலைத்திருக்கும். துளி விஷம் படப் பாடலான உள்ளம் தேடாதே என்ற பாடல் எதையும் தாங்கும் இதயம் படப்பாடலாக பரவலாக ஒரு கருத்து நிலவி வருகிறது. இதை தவிர்த்துப் பார்த்தால் மற்ற பாடல்களும் அருமையான பாடல்கள். குறிப்பாக இன்று நாம் காணப் போகும் காதல் கதை பேசிடுவோம் மெலடி என்ற வார்த்தைக்கு மற்றோர் சிறந்த உதாரணமாகும்.
கே.ஆர்.ராமசாமி, எஸ்.எஸ்.ஆர்., விஜயகுமாரி, முத்துராமன், எம்.ஆர்.ராதா, சந்திரகாந்தா, பி.எஸ்.சரோஜா உள்பட பலர் நடித்துள்ளனர். இயக்கம் ப.நீலகண்டன். பாடல்கள் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம், தஞ்சை ராமய்யா தாஸ், மருதகாசி, ஆத்மநாதன். இவர்களுடன் வாலியின் பெயரும் உள்ளது. எந்தப் பாடல் எனத் தெரியவில்லை.
பாடியவர்கள் கே.ஆர்.ஆருடன், டி.எம்.எஸ், பி.சுசீலா, ஏ.எல்.ராகவன், பிலீலா, சூலமங்கலம் ராஜலக்ஷ்மி, எஸ்.ஜானகி பொன்னுசாமி.
இனி பாடலைப் பார்ப்போம் கேட்போம்..
http://www.youtube.com/watch?v=5uop9DmlJEU
-
Charunivedita Has Good taste in Music.His choices are greatly appreciated and some of his choices.
எனக்குப் பிடித்த பாடகர்கள்
https://www.youtube.com/watch?v=7sWcyONXaXc
அற்புதமான டூயட். 66 வயது ஆன Laurent Voulzy & Manu Katche.
Lys and Love 2011-இல் வெளிவந்த ஆல்பம். வயது 66 ஆனாலும் இன்னமும் Voulzy-இன் குரல் 20 வயது பெண்ணைப் போலவே உள்ளது.
https://www.youtube.com/watch?v=bJMg...df2Z-n&index=3
மனு காட்சேவின் ட்ரம் சோலோ:
https://www.youtube.com/watch?v=XP_iWAtU4A8
மனு: Song for her :
https://www.youtube.com/watch?v=w53U7QMkbgM
Harmony வேறு விதமாக இருக்கும்…
Number one : Manu
https://www.youtube.com/watch?v=L-UXOkpUSqU
Manu keep on tripping: https://www.youtube.com/watch?v=VyvQDOtfeJI
Aimer jusqu’a l’impossible by Tina Arena. இவர் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவர். 47 வயது.
https://www.youtube.com/watch?v=luQMODtfhZI
டீனா அரெனாவின் ஃப்ரெஞ்ச் பாடல்கள் ஆங்கிலப் பாடல்களை விட நன்றாக உள்ளன. அவர் குரல் ஃப்ரெஞ்சுக்குத்தான் மிகவும் நன்றாகப் பொருந்துகிறது. Je m’appelle Bagdad (என் பெயர் பாக்தாத்)
https://www.youtube.com/watch?v=1q4F3g5mC1U
வாநிநா https://www.youtube.com/watch?v=kSTvxJ3obPg
எனது தேசிய கீதங்களில் ஒன்று… don’t cry for me argentina :
https://www.youtube.com/watch?v=4SrXFRWPEk4
Windmills of your mind…
https://www.youtube.com/watch?v=wdovT7t3nZY
Tal இஸ்ரேலிலிருந்து ஃப்ரான்ஸில் வாழ்பவர். இவர் முகத்தைப் பார்த்தால் நம் பக்கத்து வீட்டுப் பெண்ணைப் போல் இருக்கிறார். Le sens de la vie
https://www.youtube.com/watch?v=b3UdMliT0ko
m.pokara and tal duet
https://www.youtube.com/watch?v=N8mugelTLH0
இன்னொரு டூயட்: Envole moi
https://www.youtube.com/watch?v=sy4J_8uelpg
Tal தனியாக மிக எளிமையாக ஆடம்பரமே இல்லாமல்:
https://www.youtube.com/watch?v=DdQLuf02sa4
M.Pokara பிரமாதமாக ஸ்டெப்ஸ் போட்டபடி பாடுகிறார். Dangerous live…
https://www.youtube.com/watch?v=NOKs24kq2XI
மைக்கேல் ஜாக்ஸன் பாடி உலகம் முழுவதற்குமான ஒரு பாடலாகக் கொண்டாடப்பட்ட We are the world என்ற பாடலை நண்பர்களுடன் சேர்ந்து ஒரு சிறிய அறையில் பாடுகிறார் தால்.
https://www.youtube.com/watch?v=ZcwNulyiBLg
Je Prends le Large என்ற பாடல். தால்.
https://www.youtube.com/watch?v=ta41PEpotFw
Le Sens de la Vie with L’ALGERINO
https://www.youtube.com/watch?v=3TuC2kPhDww
Je Prends Le Large
https://www.youtube.com/watch?v=12kw5w2tVjs
-
இந்த மன்றத்தின் இசை ஞானம், திரைப் பட பாடல்களின் தரத்தை அலசும் திறன், பண்பு இவை என்னை மிகவும் ஈர்க்கிறது. வேடிக்கையாக உள்ளே நுழைந்தேன். ஆனால், இந்த திரை இசைக் களஞ்சியங்களை பார்க்கும்போது பிரமிப்பாக உள்ளது. மேலும் மேலும் சிறக்க எனது வாழ்த்துக்கள்.:smile2::smile2:
-
அன்பு முரளீதரன் சார்,
http://www.actc94.com/images/tamil%20welcome%20logo.jpg
இந்த மதுர கானங்கள் திரிக்கு புதிய வரவான உங்களை மன மகிழ்ச்சியுடன் வருக வருக என்று வரவேற்கிறேன்.
தங்கள் வளமான வாழ்த்துதல்களுக்கு நன்றி!
இந்தத் திரி சகோதரத்துவத்துடன் கூடிய அன்பான கூட்டு முயற்சி. இந்தக் குடும்பத்தில் இணையும் தங்களை மறுபடி வாழ்த்தி தங்கள் மேலான பங்களிப்புகளைத் தருமாறு நண்பர்கள் அனைவர் சார்பாகவும் கேட்டுக் கொள்கிறேன்.
நன்றி!
-
'இளையராஜா என்றும் இனிய ராஜா' (தொடர் 15)
http://www.upperstall.com/files/imag...a-stills-1.jpg
இன்றைய இளையராஜா தொடரில் 'சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு'
http://i.ytimg.com/vi/RLj-mqVImL0/hqdefault.jpg
இந்தப் படத்திலும் ராஜாவின் அற்புத ஆற்றல்கள் பரவிக் கிடக்கின்றன பாடல்கள் வடிவிலே. படம் சொத்தையோ, மொக்கையோ அது பற்றி நமக்கேன் கவலை? ஆனால் ராஜா இருக்கையில் பாடல்களைப் பற்றியும் நமக்கேன் வீண் கவலை?
சிவக்குமார், ஸ்ரீதேவி, மீரா, ஜெயமாலினி, ஜெயதேவி, சத்யப்ரியா நடித்த இப்படத்திற்கு கதை மகரிஷி. வசனம் அலட்டல் ஆரூர்தாஸ். பாடல்கள் வாலி. ஒளிப்பதிவு விநாயகம். இசை இளையராஜா என்று டைட்டில் காண்பிக்கும் போது பொம்மை ஒன்று கைதட்டுவது போன்று ராஜாவுக்கு ராஜ மரியாதை செய்திருப்பார்கள். இதிலிருந்தே ராஜா 1977 இல் எப்படி தமிழ் சினிமாவில் தன்னுடைய தனித்துவ இசை சாம்ராஜ்ய கொடி நாட்டி 'தனிக்காட்டு ராஜா'வாகக் கோலோச்சத் துவங்கினார் என்பதைப் புரிந்து கொள்ளலாம். இதுவும் தேவராஜ்-மோகன் இயக்கத்தில் வெளிவந்த படம்தான்.
இதில் தேவராஜ்- மோகனின் இயக்கம் பெரிதாக ஒன்றும் சொல்வதற்கு இல்லை. ஒரு கருப்பு வெள்ளைப் படம். மகரிஷி, சுஜாதா இப்படி யாருடைய கதையாவது ஒன்று. இருக்கவே இருக்கிறார்கள் சிவக்குமார், ஸ்ரீதேவி, மீரா போன்ற நட்சத்திரங்கள். ஆழமான முற்போக்கு சிந்தனைகள் எதுவும் கிடையாது. ரொம்ப லோ பட்ஜெட்டில் படங்கள். 'வளவள' 'சவசவ' இழுவைக் காட்சிகள்
ஆனால் நம்பியது இளையராஜாவை மட்டுமே. மற்றதெல்லாம் பின்னர் தான். தேவராஜ் மோகன் போன்ற இயக்குனர்களும், உப்பு சப்பில்லாத இது போன்ற பல படங்களும் இன்றளவும் நம்மால் பேசப்படுவது இளையராஜா என்ற அற்புத சிருஷ்டியால் மட்டுமே. இதை யாராலும் மறுக்க இயலாது.
சரி விஷயத்திற்கு வருவோம்.
இந்த 'சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு' படத்தில் என்னென பாடல்கள்?
பார்த்து விடலாம்.
1. சிவக்குமார் பெண் பார்க்க வரும் போது ஸ்ரீதேவி குழந்தை போல விவரமில்லாமல் ஆடிப் பாடும் பாடல்.
அத்தை மகன் முத்தழகன்
அரும்பு மீசை கொத்தழகன்
வந்தானம்மா ஒரு பெண் பார்க்கத்தான்
சுசீலா அம்மாவின் குத்துப் பாடல். இது நன்றாகவே இருக்கும். அப்போதெல்லாம் இசையரசிக்கு ராஜா எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார் என்று இந்த இளையராஜா தொடரை தொடர்ந்து வாசிப்பவர்கள் புரிந்து கொள்ளலாம்.
https://www.youtube.com/watch?v=GoTR...yer_detailpage
2. பாலா, சுசீலா குரல்களில் உற்சாகமாய் ஒலிக்கும் ராஜாவின் அற்புத கைவண்ணத்தில் உருவான பாடல். மீரா, சிவக்குமார் இருவருக்குமான காதல் டூயட்.
ஒரு காதல் தேவதை
இரு கண்கள் பூமழை
இவள் ராஜ வம்சமோ
ரதிதேவி அம்சமோ
ஒரு காதல் நாயகன்
மலர் மாலை சூடினான்
இரு கண்ணில் ஆயிரம்
தமிழ்க் கவிதை பாடினான்
கலக்கல் பாடல். இந்தப் பாடலை அனைவரும் எக்காலத்திலும் விரும்பிக் கேட்பீர்கள் என்று தெரியும். 'மாமல்லன் என்னைக் கொஞ்சும் சிவகாமி நீயாக'... என்று வாலி வளமாக வரிகளை அமைத்திருப்பார். உற்சாகம் கொப்பளிக்கும் பாடல்.
https://www.youtube.com/watch?v=R_2YfVyKqSA&feature=player_detailpage
3. அடுத்து குமரியாய் இருந்தாலும் குழந்தை போலவே குணத்தில் இருக்கும் ஸ்ரீதேவியிடம் ஜெயதேவி அன்பாய், ஆறுதலாய்ப் பாடும்,
கண்ணன் என்ன சொன்னான்
சிறு பிள்ளையே
கண்ணீர் வரக் காரணம் ஏன்
கொடி முல்லையே
கட்டழகுப் பெட்டகமே
இளம் தென்றலே
கண் வளராய் என் மடியில்
பாடும் தாலாட்டுப் பாடல். சுசீலா அம்மாவின் நெகிழ்ச்சியான குரலில். அருமையான பாடல். இந்தப் பாடலின் டியூன் மிகவும் சிரமமானது. வரிகள் முடிவது போலத் தோன்றி முடியாமல் எங்கெங்கோ இனிமையாகப் பயணித்துத் தொடரும். வயலின் அருமையாக யூஸ் செய்யப்பட்டிருக்கும். குழலும் அருமையாக அமைதியாக ஒலிக்கும். மனதிற்கு ஒருவித சாந்தியும் இப்பாடலைக் கேட்டால் ஏற்படும்.
https://www.youtube.com/watch?v=0lVX_Z15NF8&feature=player_detailpage
4. அப்போதைய வியாபார தந்திரத்தில் வழக்கம் போல ஜெயமாலினியின் காபரே நடனப் பாடல் ஒன்று இதிலும் உண்டு. ராஜா சுசீலாவை தைரியமாகப் காபரேவுக்காகப் பாட வைத்திருப்பார். காபரே பாடல் என்றாலும் கண்ணியப் பாடகி இப்பாடலை கண்ணியமாகவே பாடி கவர்வார். இந்தப் பாடல் சுசீலா அம்மாவின் புகழ் பாடுவது போல வாலி அவர்களால் எழுதப்பட்டிருக்கும். இசை அம்சமோ அம்சம்.
உலகில் எனக்குத்தான் அதிக ரசிகர்கள்
ஓராயிரம் நூறாயிரம்
நான் ஒருத்திதான் அவர்களின் காதலி
https://www.youtube.com/watch?v=6goaX6_ICyw&feature=player_detailpage
-
மதுர கானக் கடலில் முத்தெடுக்க வருகை புரிந்துள்ள முரளீதரன் சாருக்கு
நல்வாழ்த்துக்கள்.
கோபு.
-
சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு பாடல்களை கேட்டு நாமும் சாய்தாடத்தானே செய்வோம்
வாசு ஜி தூள் கிளப்பி விட்டீர்கள்.
எல்லாமே அற்புத பாடல்கள். இசையரசியும் சரி, வாலி ஐயாவும் சரி, ராஜாவும் சரி பிண்ணியிருப்பார்கள்.
-
சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு வும் மகரிஷி எழுதி மாலைமதியில் படித்த நினைவு..( மாலைமதி நாவல் வரிசையாய்ப் படமானது கொஞ்சம் சர்ப்ரைஸ் தான்.. வணக்கத்துக்குரிய காதலியே ராஜேந்திர குமார், புவனா ஒரு கேள்விக்குறி மகரிஷி, சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு மகரிஷி.. அப்புறம் வட்டத்துக்குள் ஒரு சதுரம் மகரிஷி விகடனோ குமுதமோ இணைப்பு என நினைக்கிறேன்.. நதியைத் தேடி வந்த கடல் இதுவும் மகரிஷி ஆனந்த விகடனின் இலவச இணைப்பு) மகரிஷி இரா.வேங்கட சாமி என்ற பெயரில் கல்கி தீபாவளி மலரில் பிறந்த நாள் என்று ஒரு மறு ஜன்மக் கதை எழுதினார்.. அதையே ஜோதி வந்து பிறந்தாள் என்று நாவலாக குமுதத்தில் தொடர்ந்தார்..(கோபுலு படங்கள்)
இனி பாடல்கள்..
ஒரு காதல் தேவதை இருகண்கள் பூமழையும்,
கண்ணன் என்ன சொன்னான்
சிறு பிள்ளையே
கண்ணீர் வரக் காரணம் ஏன்
கொடி முல்லையே
கட்டழகுப் பெட்டகமே
இளம் தென்றலே
கண் வளராய் என் மடியில்
இரண்டும் கேட்டிருக்கிறேன்..இந்தப் படம் தான் எனத் தெரியாது.. படமும் பார்த்ததில்லை..!
அத்தைமகன் முத்தழகன் இப்போது தான் பார்க்கிறேன் அண்ட் உலகில் எனக்குத் தான் அதிகம் ரசிகர்கள்..இப்போது தான் கேட்கிறேன்! தாங்க்ஸ் வாசு சார்..:)
-
கோபால் சார்.. ஒரேயடியாகப் பாடல்களாய்ப் போட்டு அசத்திவிட்டீர்கள்.. ஆங்கிலப்பாடல்கள் பற்றி ஓரளவிற்கு (இத்தனூண்டு!) தெரிந்தாலும் ஃப்ரெஞ்ச் பாடல்கள் பற்றி சுத்தமாகத் தெரியாது..
கீழிருந்து மேல் என்று குன்ஸாக ப.வீ.பெண்ணான ட்டால் லின் மூன்று பாடல்கள் கேட்டேன்..// Tal இஸ்ரேலிலிருந்து ஃப்ரான்ஸில் வாழ்பவர். இவர் முகத்தைப் பார்த்தால் நம் பக்கத்து வீட்டுப் பெண்ணைப் போல் இருக்கிறார். //Le sens de la vie Envole moi Je Prends le Large மூன்றுமே எனக்குப் பிடித்திருந்தன.. மீதத்தையும் கேட்பேன்..கேட்டுச் சொல்கிறேன்..வித்யாசமான குரல்வளத்தை அறிமுகப் படுத்தியதற்கு நன்றி..
-
கோபால் சார்
டீனா வின் பாடல்கள் ஃபிரெஞ்சுப் படங்களில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன என கேள்விப்பட்டிருக்கிறேன். சரியான விவரம் தெரியாது. கூற முடியுமா.