Originally Posted by
Murali Srinivas
சுப்பு,
மீண்டும் ஒரு Nit picking. தவறாக நினைக்க வேண்டாம். இதை முன்பே ஒரு முறை சொல்ல வேண்டும் என்று நினைத்திருந்தேன்.
தேசிய விருதுகளைப் பொறுத்தவரை சிறந்த நடிகர் விருது நமது நடிகர் திலகத்திற்கு கிடைக்கவில்லையே என்ற மனக் குறை நம் அனைவரின் மனத்திலும் நிரந்தரமாக உள்ள ஒன்று. ஆனால் அதே நேரத்தில் நமது திரி என்று சொன்னாலே உண்மையான வரலாற்றுக் குறிப்புகள் இடம் பெறும் திரி எனபது இந்த திரியை வாசிக்கும் உலகெங்கும் உள்ள மனிதர்கள் ஒப்புக் கொள்ளும் fact. ஆகவே தவறு என்று தெரியாமலே வரும் மாறுப்பட்ட தகவல்களை நாம் அளிக்காமல் இருக்க வேண்டும்.
இந்த நீண்ட முன்னுரைக்கு காரணம் நமது நாட்டில் திரைப்பட தேசிய விருதுகள் 1954 முதலே வழங்கப்பட்டு வந்தபோதிலும் அந்த தேசிய விருதுகளில் சிறந்த நடிகர் மற்றும் நடிகைக்கான விருது என்ற பிரிவு தொடங்கப்பட்டதே 1967 முதல்தான். எனவே தமிழ் திரையுலகில் நடிகர் திலகத்தின் முதல் 15 ஆண்டுகள் உழைப்பை உரசிப் பார்க்க அப்போது சிறந்த நடிகர் விருது இல்லாமல் போய் விட்டது.
எனவேதான் 1961-ம் ஆண்டு பாவ மன்னிப்பு பாச மலர் மற்றும் கப்பலோட்டிய தமிழன் ஆகிய மூன்று படங்களுக்கு வெவேறு பிரிவில் அடங்கிய தேசிய விருதுகள் கிடைத்த போதும் சிறந்த நடிகர் விருது இல்லாததால் நடிகர் திலகத்தின் கழுத்தை அலங்கரிக்கும் பாக்கியம் அந்த விருதுக்கு இல்லாமல் போனது.
அதே நேரத்தில் 1967 முதல் நடிகர் திலகம் தேர்வு குழுவினரால் புறக்கணிக்கப்பட்டார் என்பது யாராலும் மறைக்க முடியாத வரலாற்று உண்மை.
எந்த திரியில் எப்படிப்பட்ட செய்திகள் வந்தாலும் நமது திரியில் தெரியாமல் கூட தவறான தகவல்கள் இடம் பெற வேண்டாம். எப்போதும் உண்மையான செய்திகளையே பகிர்ந்து கொள்வோம் என்ற எண்ணத்தில் இதை பதிவு செய்கிறேன். சரியான கோணத்தில் புரிந்து கொள்வீர்கள் என்ற நம்பிக்கையுடன் தவறாக நினைக்க வேண்டாம் என உங்களை கேட்டுக் கொண்டு
அன்புடன்