அன்பு நண்பர்களே,
பம்மலார் கூறியது போல், வேறு யாரையாவது மனதில் வைத்து, தவறுதலாக நடிகர் திலகத்தின் பெயரை அந்த அழைப்பிதழில் குறிப்பிட்டிருக்க வாய்ப்புண்டு. எப்படியிருந்தாலும் நாம் எவ்வளவு போ் முடியுமோ அவ்வளவு பேர் மின்னஞ்ல் மூலம் நம்முடைய மனக்குமுறலை அவர்களுக்கு தெரியப் படுத்தினால் நன்று.
டியர் பம்மலார்,
ஆணித்தரமாக, அழுத்தந் திருத்தமாக தங்கள் கருத்தைப் பதிந்துள்ளீர்கள். பாராட்டுக்கள். பெருந்தன்மை என்ற சொல்லுக்கு இலக்கணமாக விளங்கியவர் நடிகர் திலகம்.
பெயர் குறிப்பிட விரும்பவில்லை. இந்த அழைப்பிதழ் வாசகத்தைப் பற்றி ஒரு பழம்பெரும் நடிகர் மிகவும் மனம் வெதும்பி வேதனைப் பட்டார். நடிகர் திலகத்தின் மேல் அவர் வைத்திருக்கும் அபார மரியாதை, மதிப்பினைப் பார்க்கும் போது நமக்கு, நெகிழ்வு, வியப்பு போன்ற அனைத்து உணர்வுகளும் ஒரு சேர ஏற்பட்டன.
அன்புடன்