Originally Posted by
makkal thilagam mgr
காவல்காரன் படத்தின் சிறப்பம்சங்கள் :
1. நமது பொன்மனச்செம்மல் எம். ஜி.ஆர். அவர்கள் சுடப்பட்டு, குரல் பாதிக்கப்பட்ட நிலையில் வசனங்கள் பேசி நடித்து வெளியான முதல் படம்.
2. குரல் பாதிக்கப்பட்ட நிலையில், தான் பேசும் வசனங்களை ஏற்று, இத்திரைக்கவியத்தை (காவல்காரன்) மக்கள் ஏற்றுக் கொண்டு வெற்றி பெறச் செய்தால் மட்டுமே, தான் தமிழ் திரை உலகில் நீடிக்க விரும்புவதாக நம் மக்கள் திலகம் அவர்கள் தெரிவித்தார்.
3. நமது புரட்சித்தலைவர் முகம் திரையில் தோன்றினால் மட்டுமே போதும், .வசனங்கள் எல்லாம் இரண்டாம் பட்சம் தான் என்று மக்கள் தீர்மானித்தது இந்த படத்துக்குப் பின்புதான்.
4. கருப்பு-வெள்ளையில் உருவான சாதாரண "காவல் காரன்" பட வெற்றியினை கண்டு, அப்போது தமிழ் திரையுலகமே வியந்தது.
5. "காவல் காரன்" பட வெற்றி, சுடப்படுவதற்கு முன்பு, தொடர்ச்சியாக நமது இதய தெய்வத்தை படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்த தயாரிப்பளர்களையும், வினியோகஸ்தர்களையும் மகிழ்சிக் கடலில் ஆழ்த்தியது.
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்