உண்மை! மற்றவர்கள் எல்லாம் இடைவேளைக்குப் பின் வரும் ஆனந்த் ஆகி விட்டார்கள் ஒரு நபரால். ஒரே ஒரு நபரால். ஆனால் ஒரு உபாத்தியாரைத் தவிர. ஜம்பம் பலிக்கிலேயே ஆனந்து பலிக்கிலேயே!
Printable View
வாசு சார்
ராகவேந்தர் சார் சொன்ன "குதிரை குட்டி கோழியை தின்றதாம் நம்புங்கள் நீங்கள்" பாடல் நிறைய பேர் அறியாத பாடல்
அந்தரங்கம் திரைபடத்தில் வரும் "ஞாயிறு ஒளி மழையே திங்கள் குளிக்க வந்தாள்" பாடலை பற்றி தான் நிறைய பேருக்கு தெரியும்
அதிலும் சிலர் அதை யேசுதாஸ் பாடியது என்று ஒரு ப்ளாக் இல் எழுதி இருந்தார்கள்
"கண்ணு பட போகுதடி கட்டிகடி சேலையை
பொண்ணுக்கே ஆசை வரும் போட்டுகடி ரவிக்கையை "
சொந்தம் பாடல் வரியில் ராட்சசியின்
"என் கண்ணு என் செல்லம்" என்று ராகவேந்தர் சார் ஐ பாராட்ட வார்த்தைகள் இல்லை
வாசு சார்
"வண்டிக்காரன் மகன்" திரை படத்தில் வரும்
பாலாவின் பெப்பி பாடல் "கார்த்திகை மாதம் கார்கால மேகம் .... பள்ளியறை "
விருத்தம் உடன் "படுத்தாள் புரண்டாள் உறக்கம் இல்லை "
பாடலில் வரும் "மடல் கொண்ட வீணை
லேடி ஹம்மிங் வாய்ஸ் யார் சார்
சொந்தம் (1973)
http://i1.ytimg.com/vi/f67Hgr_9Ak0/hqdefault.jpg
"கண்ணு படப் போகுது கட்டிக்கடி சேலையை
எட்டுக் கண்ணு விட்டெரிக்கும் உன்னக் கண்டா
உன் கட்டாணி முத்துப் பல்லு எனக்கு உண்டா
வானம் பார்க்காத மஞ்சள் நிலா
வண்டு தட்டாத முல்லை இது
தட்டான் தட்டாத தங்கத்து மேனி
ராஜா இல்லாத ராணி
பச்ச முள்ளு பூவாப் போகும் உன்னக் கண்டா
இது பட்டாளத்துச் சக்கரவர்த்தி பொன்னுக்குண்டா
(சுசீலாம்மாவின் 'ஹஹாஹஹா.... யயாயய்யா'.... ஹம்மிங் ஹம்சமான ஹம்சம்)
தெற்கு திசை பார்த்து நீராடினால்
சேரன் மாப்பிள்ளை வருவானென்பார்
தேடும் மாப்பிள்ளை யாரென்று சொன்னால்
சேர்த்துத் தருவேன்டி கண்ணு
கண்ணதாசா!
மனுஷரா நீர்!
அடடா!
ராட்சஸி மற்றும் கண்ணியப் பாடகியின் காதுகளைக் குளிரவைக்கும் குற்றால சுகப் பாடல்.
ஷிப்ட்டுக்கு புறப்படுமுன் 5 முறை பார்த்து விட்டேன்.
இரவு தூக்கம் தொலைந்தது.
கிருஷ்ணா சார்!
1000 நன்றிகள் உங்களுக்கு.
https://www.youtube.com/watch?featur...&v=SOE1yARKmC4
கிருஷ்ணா சார்!
நான் இனிமே வரல்ல இந்த ஆட்டத்துக்கு. ஒழுங்கா வேலைக்குக் கெளம்பறேன். இது சரிப்படாது. எனக்கு லீவும் இல்லை.:)
சாரி வாசு சார்
உங்களை disturb செய்ததற்கு
இந்த "சொந்தம்" படம் ஒரு beautiful family டிராமா
எனக்கு ரொம்ப பிடித்த படம்
விச்சுவின் ஆரம்ப வரிகள் "கார்கால மேகம்" பிறகு கண்ணிய பாடகி
"நல்ல தான் யோசெகிறேங்க நமக்கு என்ன குறைஞ்சு போச்சு "
ஜானகியின் "வாழ்ந்தால் உங்களை போல் வாழ வேண்டும்"
iru peNkaL paadiya paattu endraal... paalaadai mEni pani vaadaik kaatRu thaan ninaivukku varukirathu (sorry my tamil font is not working)
//(சின்னக் கண்ணன் சார்! ஜாக்கிரதை! உங்களுக்கு சரிநிகர் சமானமாய் போட்டிக்கு ஒரு ஆள் வந்து விட்டார். சமாளிப்பீர்களா?) // vasu sir.. yErkanavEyE a.o.a paththi ezhuthittEnE..munnaalE.. ippo repost ingu..
*
தபக்கென்று ஜீராவில் விழுந்து நன்றாக நீச்சலடித்து ஊறிய குலோப் ஜாமூன் மாதிரி கன்னம்..க்ருகருவென நிலக்கரி நிறத்தில் மின்னிடும் கண்கள்..ஒரு முறை பார்த்த போதும் மறுபடி திரும்பிப் பார்க்கத் தூண்டும் அழகு..மெழுகு பொம்மை தான் இருந்தாலும் அழகு.. நிற்க நான் சொல்வது ரிச்சா கங்கோபாத்யாவை அல்ல..
ல்தா...எம்ஜிஆரின் ஜோடியாக அறிமுகமாகி சமர்த்தாய் அவருடன் அவளொரு நவரச நாடகத்தில் நீந்தி எப்படியோ தொடர்ந்து கயல்விழியாய் நடித்து அந்தப் பாத்திரத்தையே கெடுத்து இருந்தும் தென்றலில் ஆடும் பூவை என்று பாடப் பெற்று தொடர்ந்த தருணங்களில் சிவாஜி, ரஜினி,விஜயகுமார் என ஜோடி சேர்ந்து தொடர்ந்த வருடங்களில் காலத்தின் கட்டாயத்தால் ஜெய்கணேஷால் ஏமாற்றப் படுபவராக ஜோடியாக பரிதாப நிலைக்குத் தள்ளப் பட்டவர்..அப்பாடா விஷயத்துக்கு வந்தாச்சு..
ஆம் நடித்த படம் அழகே உன்னை ஆராதிக்கிறேன்.. பாடல்கள் அனைத்தும் சுவை.
லதாவைப் பொறுத்தவரி அவரிடம் பகைமை பாராட்டுவது ஒன்றே ஒன்று தான். அது தான் நடிப்பு. கடலில் போட்டாலும் சரி சுட்டாலும் சரி வரவே வராது என்பதை விட முயற்சியே செய்யாமல் இருந்தது தான் அவ்ரின் தனித்தனமை.
இந்தப்படத்திலும் இந்தப் பாடல் தனியாக எப்போது கேட்டாலும் இனிமை,சோகம், வரிகள் எல்லாம் நமை மெய்மறக்க வைக்கும்.. அதில் நடிக்கும் பாக்கியம் பெற்றிருந்தும் வாயசைப்பே போதும் என இருந்திருப்பார்..
எனக்கு மிகவும் பிடித்த பாடலில் ஒன்று இது.
ஏனோ தெரியவில்லை ஒவ்வொரு முறை ஹேர்கட் செய்து முடித்ததும் இந்தப் பாட்டும் நினைவுக்கு வ்ரும்.உண்மை தானே!
***
நானே நானா யாரோ தானா ?
மெல்ல மெல்ல மாறினேனா?
தன்னைத்தானே மறந்தேனே
என்னை நானே கேட்கிறேன் ( நானே நானா)
ஒருவன் நினைவிலே உருகும் இதயமே
இதோ துடிக்க,
உலர்ந்த உதடுகள் தனிமைக் கவிதைகள்
எதோ படிக்க,
மதுவின் மயக்கமே உனது மடிமேல்இனி
இவள் தான் சரணம் சரணம்
பிறையில் வளர்வதும் பிறகு தேய்வதும்
ஒரே நிலவு
உறவில் கலப்பதும் பிரிவில் தவிப்பதும்
ஒரே மனது
பருவ வயதிலே இரவும் பகலும் விரகம்
நரகம் சரணம் சரணம்
**
அதுல பார்த்தேள்னா அந்த அ.உ.ஆ படத்தில இன்னொரு பாட்டும் எனக்குப் பிடிக்குமாக்கும்..குறிஞ்சி மலரில் வழிந்த ரசத்தை உறிஞ்சத் துடிக்கும் உதடு இருக்க.. என ஆரம்பிக்கும்..வழக்கம்போல அதைப் பாடுபவர்கள் தான்(படத்தில்) கொடுத்து வைத்தவர்கள்..லதாவின் உறவு போல..ரெண்டுமே சுமார் பேர்வழிகள் தான்..முதலாமவர் சுபாஷிணி..குண்டுக் கொழுக்கட்டையாய் வந்து (அக்கா ஜெயசுதாவாம்..கொஞ்சமாவது அக்காகிட்ட இருந்து கத்துண்டுருக்கலாமில்லை)
பாடும்..ஆடும்..நடிக்காது..கடைசியாய் முண்டுமாதிரி துண்டும் விளக்கும் வைத்துக்கொண்டு ஆசையைக் காத்துல தூதுவிட்டுட்டுக் காணாமப் போனார்.
இரண்டாமவர் பிரகாஷ் சமர்த்தாய் இதில் மட்டும் நடித்துவிட்டு(?) நடிப்பு வராது எனத் தெரிந்து கோரியாக்ராபி - ஹிந்திக்குப் போய் ஃபேமஸ் ஆனார் பிற்காலத்தில்.
*