-
Rewind to the Sangam era
By Malathi Rangarajan (From The Hindu - December 29, 2012)
Over the years Vairamuthu has ingeniously woven several unusual phrases, similes, metaphors and aphorisms into his lines. In an interview to Malathi Rangarajan, the veteran verse writer talks about what makes his lyric for Kochadaiyaan special
http://www.thehindu.com/arts/cinema/...?homepage=true
-
‘ஆனந்த விகடன்’ வார இதழில் தொடராக எழுதி பிறகு புத்தகமாக வெளியான ‘மூன்றாம் உலகப்போர்’ புத்தகத்தின் வருமானத்தை காவிரி டெல்டா பகுதியில் தற்கொலை செய்து கொண்ட 11 விவசாயக் குடும்பங்களுக்கு தலா ரூ 1 லட்சம் வீதம் நிதியுதவியாக கொடுக்க இருப்பதாக கவிஞர் வைரமுத்து அறிவித்துள்ளார்.
-
ஒடுக்கப்பட்ட உழைப்பாளி வர்க்கத்திற்கு எக்காலத்திற்கும் பொருந்துவது போல கவிஞர் எழுதிய திரைப்பாடல். கொந்தளிக்கும் வரிகள்!
மனிதா மனிதா இனி உன் விழிகள் சிவந்தால் உலகம் விடியும்
விழியில் வழியும் உதிரம் முழுதும் இனி உன் சரிதம் எழுதும்
அசையும் கொடிகள் உயரும் உயரும் நிலவின் முதுகை உரசும்
சில ஆறுகள் மாறுதடா வரலாறுகள் மீறுதடா
பசியால் பல ஏழைகள் சாவதென்பது தேசியமானதடா
இனி தேன் வரும் என்பதும் பால் வரும் என்பதும் ஜோசியாமானதடா
அடி சாட்டைகளே இனி தீர்வுகள் என்பது சூசகமானதடா
ஒளி வீசுக சூரியனே யுகம் மாறுது வாலிபனே
ஒரு தோல்வியில்லா புது வேள்வியினால் இனி சோதனை தீர்ந்து விடும்
சில ஆயிரம் ஆயிரம் சூரிய தீபங்கள் பூமியில் தோன்றி விடும்
அட சாமரம் வீசிய பாமர ஜாதிகள் சாதனை கண்டு விடும்
ராஜா-யேசுதாஸ் கூட்டணிப் பாடல்களில் கவிஞரின் பலப் பாடல்கள் சிறப்பு பெற்றவை. அதில் குறிப்பாக இந்தப் பாடல் இடம்பெற்ற படத்தின் தளத்திற்கு அப்பாலும் என்றென்றும் மங்காமல் ஒளி வீசக் கூடியது.
-
Vairamuthu speaks
Lyrics for கிழக்குச் சீமையிலே
Manoothu Mandayile..song .. I had written lyrics like " ஆட்டுப் பால் குடிச்சி அறிவழிஞ்சி போகுமுன்னு " whereas in Film Annamalai, I had written "ஆயுள் வளர்க்குது ஆட்டுப் பால்", and both were contradictory. How come Vairamuthu turn so contradictory was the uproar at that time ?
I replied with humility and patience . A lyric writer, should never run off, from criticisms .
Explanation :- There Gandhi drank goat's milk. ( In Anna malai Film , Intro song for Rajni... வந்தேண்டா பால் காரன் song )
In கிழக்குச் சீமையிலே, the lyrics were written for a small baby. Uncle had taken milk from kaanan pasu ( a particular type of cow ). A small baby cant drink goat milk. I even went and did a research on the fat content of the milk, before writing lyrics.
Goat Milk - Fat content - 4.1% and Gandhi has power to digest the fat content
Kaanan Pasu - Fat Content - 3.1 % and this can be digested by baby.
Hence, when we write lyrics , we should do it with facts, and with proofs to explain everyone.
I thank the people for criticising me, and giving me an opportunity to explain to them..
-
வேதம் புதிது திரைப்படத்தில் மிக முக்கியமான கதை நகர்வில் இடம்பெறும் பாடல் வரிகள் இவை. எனக்குப் பிடித்த இடம் "காட்டு மரங்களெல்லாம் கைநீட்டி அழைக்குது - மாட்டுச் சலங்கையெல்லாம் மகளொடு அழுகுது.." இடம் பொருளை நினைவில் நிறுத்தி காட்சியை அழகுபட வரிகளிலேயே வடிக்கும் கலை இது. ஒவ்வொரு வார்த்தையையும் மலேஷியா வாசுதேவன் பாடும் விதம் - ஜீவன் கலந்து , எற்ற இறக்கம் பாடல் முழுதும் தென்படும். ஊனையே அசைக்கும் நாதம் அது! தேவந்திரன் இசையில் சிறந்ததொரு ஆக்கம்.
மாட்டுவண்டி சாலையிலே கூட்டுவண்டி போகுதம்மா
கூட்டுவண்டி உள்ளுக்குள்ளே கூண்டுக்கிளி வாடுதம்மா
கூறப்பட்ட இடம்வேறு இவள் போகும் இடம்வேறு
காதலிச்ச வரலாறு கண்ணீரு தகராறு
ஓடிப்போய் சொல்லிவிட உயிர்கிடந்து துடிக்கிறது
ஊமைகண்ட கனவு இது உள்ளுக்குள் வலிக்கிறது
எண்ணத்தைச் சொல்லாமல் ரெண்டுமனம் தவிக்கிது
கன்னத்தில் சிந்தாமல் கண்ணீரும் உறைந்தது
காட்டு மரங்களெல்லாம் கைநீட்டி அழைக்குது
மாட்டுச் சலங்கையெல்லாம் மகளொடு அழுகுது
ஆற்றுமணல் மேடுகளே அதனருகே ஆலயமே
தென்னையிளந் தோப்புகளே தேன்கொடுத்த சோலைகளே
நதிவழி போனமகள் விதிவழி போகின்றாள்
இதயத்தில் துடிப்பில்லை இருந்தாலும் வாழுகின்றாள்
சின்னக் கிளியிரண்டும் செய்துவிட்ட பாவமென்ன
அன்பைக் கொன்றுவிட்டு ஆச்சாரம் வாழ்வதென்ன
http://www.youtube.com/watch?v=LQ__gIe9DnQ
-
FM பண்பலை ஒன்றில் கவிஞர் அளித்த பேட்டியிலிருந்து :
வெண்ணிலவே வெண்ணிலவே ( மின்சாரக் கனவு )
----------------------------------------------------
Rajeev Menon is a very good admirer of Tamil language. He has also learnt many languages, and has read literature in a lot of other languages. After reading a song of mine, he said, " There are moon songs in all languages. But the lyrics of the song that you have written seems to be there only in Tamil. This is my opinion". I asked him which one.
வெண்ணிலவே வெண்ணிலவே விண்ணை தாண்டி வருவாயா விளையாட ஜோடி தேவை
Everyone will think till this stage. I don't have any companion to play with. I am alone, so, Moon, pls come and play with me. This is not something new, and every lyricist and poet has been thinking on these lines before.
The next lyrics are something new, which I haven't seen in any of the languages ( said by Rajeev Menon)
"இந்த பூலோகத்தில் யாரும் பார்க்கும் முன்னே உன்னை அதிகாலை அனுப்பி வைப்போம்"
Calling the moon, and when the dawn breaks, it gets lost, and we feel bad and search over it again and everywhere. Just as how a mother feels bad for a child, when he / she doesn't return back after school on time, similarly, the sky feels worried, when the moon doesn't return back to the sky. So, we calling the moon to play with us, and requesting it to go back to its place of the sky was a new concept, and Rajeev Menon said that it was a new idea, which was never seen anywhere else.
Usually, I don't go to the shooting spot, where my songs are picturised. There has been no time for me to go for the same. I have the yearning, but don't have the time. Among the songs , which I desired to go and see the picturisation, this song is also one of them. When the song was picturised in AVM Studio, I was also present. The lyrics that was picturised, was, " இது இருள் அல்ல அது ஒளி அல்ல இது ரெண்டோடு சேராத பொன் நேரம்".
-
-
விருது எனக்கு இன்னும் சமூகப் பொறுப்பை கொடுக்கிறது: வைரமுத்து பேட்டி
நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மபூஷன் விருது பெற்றது குறித்து ‘தி இந்து’ வுக்கு கவிப்பேரரசு வைரமுத்து ஞாயிற்றுக்கிழமை அளித்த பேட்டி :
விருது குறித்த மகிழ்ச்சி பற்றி?
ஒரு விருது, விருதைப் பெற்றவனுக்கு கொடுக்கும் மகிழ்ச்சியைவிட அந்த விருது பெற்றவன் சார்ந்திருக்கிற சமூகம் அடைகிற மகிழ்ச்சித்தான் பெரிது. இதில் நான் அடைகிற மகிழ்ச்சி சிறிது. நான் சார்ந்திருக்கிற சமூகம் அடைகிற மகிழ்ச்சி பெரிது. அதனால் அந்த மகிழ்ச்சி அந்த விருதை பெருமை உடையதாகவும், சிறப்பு மிக்கதாகவும் மாற்றியிருக்கிறது. எனவே அந்த விருதின் பெருமை சமூகத்தின் சந்தோஷத்தைப் பொருத்து அதிகமாகிறது.
உங்களோடு சேர்ந்து விருது பெருவதில் சந்தோஷம் என்று கூறியிருக்கிறாரே, கமல்?
எனக்கும் மகிழ்ச்சிதான். பத்மஸ்ரீ விருதைப்பெற்றபோது, நான் மிகவும் நேசித்த இசைஅரசர் டி.எம்.சௌந்தர்ராஜனோடு சேர்ந்து பெற்றேன். அது எனக்கு பெருமை. பழக அருமையான நண்பர், கமல். என் நேசிப்புக்குரிய இரண்டு சாதித்த மனிதர்களோடு பெறுவதும் பெருமை. கமலும், நானும் ஒரே வயதுடையவர்கள். கலைத்துறையில் என்னை விட 20 ஆண்டுகள் மூத்தவர். நான் 80 களில் வந்தேன். அவர் 60 களில் வந்தார். என் சம வயது கொண்ட ஆனால் என்னை விட 20 வயது மூத்த கலைஞனோடு சேர்ந்து விருதைப் பெருவதில் மகிழ்ச்சி.
உங்களது அடுத்த கட்டம்?
என்னைப்பார்த்து ஏற்கனவே ஒரு கேள்வியை கேட்டார்கள். நீங்கள் படைத்த படைப்பில் உங்களுக்கு பிடித்த படைப்பு எது என்று. நாளை எழுதப்போகும் படைப்பு என்றேன். இதுவரை எழுதிய எழுத்துக்களெல்லாம் பயிற்சிகளும், முயற்சிகளும்தான். ஒரு மிகச்சிறந்த படைப்பை நோக்கி பயணப்படுவதற்கு இந்தப்படைப்புகள் எல்லாம் துணை நிற்கின்றன என்றே நினைக்கிறேன். எனவே இந்த விருது எனக்கு இன்னும் சமூக பொறுப்பை கொடுக்கிறது. இன்னும் வாழ்விலும், படைப்பிலும் செம்மை சேர்க்க வேண்டும் என்ற பொறுப்பை கொடுக்கிறது. எனவே என் பழைய படைப்பைவிட மேம்பட்ட படைப்பை கொடுக்க முயல்கிறேன். காலமும், அனுபவமும் அதை செய்து முடிக்கும் என்று நம்புகிறேன்.
இங்கே உயரிய விருதுகளால் இன்னும் கௌரவிக்கப்பட வேண்டியவர்கள் யார் யார்?
ஒரே ஒரு ஏக்கம் இருக்கிறது. மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு ஒவ்வொரு ஆண்டும் இந்த விருது கிடைத்துவிடும் என்று எதிர்பார்க்கிறேன். அவரது பாடலை கேட்டு வளர்ந்தவர்கள், நாங்கள். அவருக்கு பத்மஸ்ரீ, பத்மபூஷன் எல்லாம் பொருந்தாது. பத்மவிபூஷன் வழங்க வேண்டும் என்று விரும்புகிறேன். எவ்வளவு பெரிய இசை கலைஞர். தமிழ்நாட்டை 25 ஆண்டுகளாக இசையால், தமிழால் தாலாட்டிய பெருமகன். இந்த விருதைப்பெறக்கூடிய மூத்த தகுதியானவர் என்று அவர்தான் ‘பளீச்’ என்று நினைவுக்கு வருகிறார். இன்னும் பலப்பேர் இருக்கலாம். அவர்களில் எம்.எஸ்.விஸ்வநாதன் ‘பளீச்’ சென அகப்படுபவர்.
யார்.. யாரெல்லாம் வாழ்த்துகள் தெரிவித்தார்கள்?
முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம், கருணாநிதி, நல்லக்கண்ணு, மத்திய அமைச்சர் பா.சிதம்பரம், ஜி.கே.வாசன், சி.பி.எம்.ராமக்கிருஷ்ணன், இயக்குநர் கே.பாலசந்தர், ரஜினிகாந்த், கமல்ஹாசன், வை.கோ, இயக்குநர்கள் லிங்குசாமி, கே.வி.ஆனந்த், சீனுராமசாமி நடிகர்கள் சூர்யா, ஜீவா, முக்கிய நீதியரசர்கள், துணைவேந்தர்கள், மருத்துவத்துறை நண்பர்கள் என்று தொடர்ந்து வாழ்த்துகள் குவிந்த வண்ணம் இருக்கிறது.
உங்களது அடுத்தப் படைப்பு?
படைப்புக்கான கருவை நெஞ்சில் வளர்த்துக்கொண்டே இருக்கிறேன். அது ஈழம் சார்ந்த படைப்பாக இருக்கும்.