madhu ?
Regards
Printable View
madhu ?
Regards
தி எப் எம் லவர் அவர்களே,
மிக்க நன்றி "இடை கை இரண்டில் ஆடும்" வீடியோ தந்ததிற்காக. அருமையான பாடல். தேன் நிலவு பாடல் இந்த பாடலிற்கு பிறகு வந்ததாகும்.
ஸ்ரீதர் சிவாஜிக்கு அறிமுகமான படம் "எதிர்பாராதது" என்று நினைக்கிறேன். அதற்கு பிறகு அவர்கள் இருவரும் கலந்து இடம் பெற்ற படங்கள் "அமர தீபம்", "உத்தம புத்திரன்" ஆகியவை. என்ன ஆச்சரியம் என்றால் அந்த கால கட்டத்தில் ஸ்ரீதர் சிவாஜியை வைத்து டைரக்ட் செய்த படம் "விடிவெள்ளி" ஒன்றுதான். மற்றவை எல்லாம் ஜெமினி கணேசன், முத்துராமன் இவர்களை அல்லது புதிய நடிகர்களை வைத்து ஸ்ரீதர் டைரக்ட் செய்ததுதான். கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகளுக்கு பிறகு தான் இவர்கள் மீண்டும் இணைந்தார்கள் விடிவெள்ளிக்கு பிறகு. என்ன காரணம்?
விடிவெள்ளி சிவாஜியின் சொந்த தயாரிப்பு அல்லவா?
அன்புடன்
Ramaswamy
Hi TFML
பார்க்க பார்க்க சிரிப்பு வருது. அடக்க முடியலே. ( you know the reason)
அந்தி நேரம் வந்தாலே காதல் வேகம் உண்டாகும்
பெற்ற தாயைக் கண்டபோதும் நெஞ்சில் கோபம் உண்டாகும்
என்ன அழகான observation...
மாலையும் இரவும் சந்திக்கும் மங்கிய வெளிச்ச நேரத்தில் காதல் கொண்ட மனம் எதையோ எண்ணி எண்ணி
ஏங்கிக் கொண்டிருக்கும்போது அம்மா அன்பாக அருகில் வந்து என்ன என்று கேட்கும் வரை கூட கோபம் காத்திருப்பதில்லையாம்.
அம்மாவைப் பார்த்தாலே கோபம் வருமாம். ஆனால் அடுத்த வரியில் சொல்கிறார் பாருங்கள்.
"பிறர் பார்த்து விட்டாலும் பெண்மை நாணம் கொண்டாடும்" அம்மா பார்த்தால் கோபம். மற்றவர்கள் பார்த்தால் நாணம். காரணம் அம்மா உண்மையை கண்டு பிடித்து விடுவாள் என்ற பயம்தான். :P
ம்ம்ம்.. நாணத்துக்கும் வெட்கத்துக்கும் உள்ள வித்தியாசத்தை கவிஞர் இன்னொரு பாடலில் விளக்கி இருக்கிறார். அது என்னன்னு சொல்லுங்க பார்க்கலாம் ?
பிரபுராம் பிக்சர்ஸ் என்று போடப்பட்டு இருக்கிறது எஸ் ராமஸ்வாமி
ஸ்ரீதர் அவரது கதாபாத்திரங்களுக்கு பொருத்தமான
இன்னும் மென்மையான யதார்த்தமான அணுகுமுறையை
எதிர்பார்த்தாரோ
என்னவோ ?
Regards
நாணத்துக்கும் வெட்கத்துக்கும் உள்ள வித்தியாசத்தை
கவிஞர் இன்னொரு பாடலில் விளக்கி இருக்கிறார். அது என்னன்னு சொல்லுங்க பார்க்கலாம் ?
madhu :
akkam pakkam yaarum paarthaal vetkam vetkam
anbE unnai nEril kandaal naanam naanam
http://www.dailymotion.com/video/xet...an-paerai_auto
Regards
Hi TFML
idha.. idha.. idhathaan naan edhirparthEn.
aanaal.. neenga answer sonnaal naan othukka maatten.
inge varavanga ellarume periya teachersthan..
adhuleyum neenga doctorate vaangina aasami.
oru velai suvai-nga solli irundha acceptuvEn. :P
( inge nan mattumthan paappa )..
:kikiki: anyway.. idhuthan enakkum therinja answer.
vEra yedhavadhu songla vera yaaravadhu kavignar idhai pola solli irukkangala
enru pakkalaame.
தி எப் எம் லவர் அவர்களே,
பிரபுராம் (பிரபு, ராம்குமார்) pictures சிவாஜி கணேசனுடைய பிள்ளைகள் இருவருடைய பெயர்களில் ஆரம்பித்த ஒன்று என்று படித்த ஞாபகம். பிறகு தான் சிவாஜி productions ஆரம்பித்தார் என்று கேள்வி.
அன்புடன்
ராமஸ்வாமி
Hi all,
Oru excellent duet irukkiraradhu "Mullaivanam" padathil ...."Engirundo Ingu Vandha Rathiye" by TMS and Radha (Jayalakshmi). Any video link available?
Anbudan
Ramaswamy
பேராசிரியர் ஐயா
"ஒரு நிலா ராணி" பாடல் லிங்க் அழிபட்டதா ? என் நண்பருக்கு அதைக் காட்ட எண்ணி சொடுக்கியபோது அழிக்கப் பட்டதாக அறிவிப்பு கண்டேன்.
அன்புள்ள மது அவர்களுக்கு
சித்தூர் ராணியையும் அவள் காதலனையும் இந்தத் தொடர்புக்குள் அடைத்து வைத்திருக்கிறேன் .
http://www.mediafire.com/?uvj7uhrogqa852j
திறந்து எடுத்துக் கொள்ளுங்கள்
அன்புடன்
SSK
Hi TFML
neenga doctorate-a illaiya enbadhu inge ellarukkum therinja vishayam.
so adhai pathi no discussion.
boo hoo... enakku gundu basavappa eppo kidaikkum ?
professor ayya..
nanri nanri nanri...
A rare but popular melody from P. Sushila composed by Melliisai Mannar MSV, for the film Bhavaani (1967).
http://www.youtube.com/watch?v=wgLD57tojiU
RaghavendranQuote:
தவிக்கும் இதயங்கள் எங்கே
என் தாலாட்டு போகட்டும் அங்கே - கண்ணதாசன்
அன்புள்ள நண்பரே,
உங்களுக்கு எனது அதிகாலை வணக்கம் .
சிவாஜி கணேசனும், ராஜகுமாரியும் ஒருவர் முகத்தில் மற்றவர் முகத்தைப் பார்த்துக் கொண்டதின் விளைவாக , அதற்கு தண்டனையாக ஒரு தங்கப் பதுமை செய்யும் படி நேர்ந்து விட்டது .
முகம் என்ன கண்ணாடியா ?
எதிரே உள்ளதைக் காட்டுவதற்கு !
இருவரும் முகத்தில் முகம் பார்த்துக் கொள்ளுகிறார்கள் !
நீங்களும் அவர்களின் முகங்களில் உங்கள் முகத்தைக் காணுங்கள் !
http://www.mediafire.com/?zydmf4jneed
அன்புடன்
PROF.S.S.KANDASAMY
'' யான் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம் ''
நானே ராஜா படத்தில் குமாரி கமலா நடனம் இடம் பெற்ற இனிமையான பாடல், ஆடற் கலைக்கழகு தேடப் பிறந்தவள், என்கிற பாடலாகும். இசை டி.ஆர்.ராம்நாத். இப்படத்தில் நடிகர் திலகம், ஸ்ரீரஞ்சனி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
http://www.youtube.com/watch?v=Gvmt0FTanHk&
அன்புடன்
ராகவேந்திரன்
TFML,
add photo ellam pottu kalakareenga........ ennoda 6 , 7 vayasu nyabagam vandhadhae...
one more add.. Murphy radio.. gunda, thalai neraiya mudiya, azhaga kannu vechindu oru boy kid.......
apram.. penguin padam pottu.. onnu iurkum.. adhu enna nae therila...
anyway, thanks for the adds ....
paatuku - Special thanks TFML............ radio days...................... kashtathaiyum meeri.. sandhosham - nyabagam iruku..... happy days those were.........
Ragavendra,
Thanks for the songs and the links.. REally they are GEMS...............
ஆடற் கலைக்கழகு தேடப் பிறந்தவள், ! wonderful song RAGHAVENDRA sir
paadhiyilE stopped ?
Regards
usha !
murphy radio ad irukku aanna gundu paappa kaanalai
http://i871.photobucket.com/albums/a...fml/murphy.jpg
Regards
Dear TFMLover,
முதல் முறையில் பாதியில் நிற்கும் பாடல் மறுமுறை முழுதும் இயங்குகிறது. மீண்டும் முயற்சி செய்து பாருங்கள்.
மர்பி ரேடியோ விளம்பரம் பழைய நினைவுகளைக் கிளறுகிறது. மெக்கோட்ரானிக்ஸ் நிறுவனம் தற்போது சாந்தி திரையரங்கு அருகில் வி.ஜி.பி. நிறுவனம் இயஙகி வரும் கட்டிடத்தில இயங்கியதாகவும் பின்னர் ஏர் இந்தியா நிறுவனம் வந்த பிறகு தற்போது தேவி திரையரங்க வளாகத்தின் நுழைவாயிலில் ரிலையன்ஸ் நிறுவனம் இருக்கும் இடத்தில் இருந்ததாகவும் நினைவு. தற்போது அந்தக் கட்டிடத்திற்கு மெக்கோட்ரானிக்ஸ் பெயர் வைக்கப் பட்டுள்ளது. அந்த மர்பி குழந்தையின் படம் அச்சிட்ட விளம்பரம் நிறுவனத்தின் வாயிலில் வைக்கப் ப்ட்டிருக்கும்.
அன்புடன்
Dear TFMLover,
நிச்சயமாக சிறு வயது நிகழ்வுகள் நெஞ்சில் இறுதி வரைக்கும் நிலைத்திருக்கும் என்பது என் எண்ணம். அந்தக் காலத் சென்னை திரையரங்குகளில் தற்போது இயங்கி வருபவை - 1960 கால கட்டத்தவை
அண்ணா சாலை - சாந்தி, காசினோ, தேவி வளாகம்
திருவல்லிக்கேணி - ஸ்டார்
ராயப்பேட்டை - பைலட், மெலோடி (பழைய ஓடியன்)
மேற்கு மாம்பலம் - ஸ்ரீநிவாசா
பிராட்வே - பாட்சா (பழைய மினர்வா)
ஓட்டேரி - மகாலட்சுமி, சரவணா, பாலாஜி
வில்லிவாக்கம் - ராயல் - தற்போது புதுப்பிக்கப்பட்டுள்ளது, நாதமுனி - தற்போது இயங்குகிறதா என்று தெரியவில்லை
சைதாப்பேட்டை - ராஜ் (பழைய நூர்ஜஹான் )
தண்டையார்பேட்டை - அகஸ்தியா
வண்ணாரப்பேட்டை - மகாராணி, பாண்டியன் (பழைய மகராஜா) தற்போது இயங்குகிறதா என்று தெரியவில்லை
பெரும்பாலான சென்னை திரையரங்குகள் காலத்தின் பிடியில் சிக்கி மூடப்பட்டு விட்டன என்பது வருத்தத்திற்குரிய விஷயம். அப்படி மூடப்பட்ட திரையரங்குகளின் பட்டியலைப் படித்தால் நிச்சயம் மனம் வருந்தும். இருந்தாலும் நினைவுக்கு எட்டிய வரை பட்டியலிட்டுப் பார்ப்போம்
பிளாசா, கெயிட்டி (தற்பொழுது வணிக வளாகமாக உருவாகி வருகிறது), வெலிங்டன், பாரகன், நியூ எல்பின்ஸ்டன் (தற்போதைய ரஹீஜா காம்ப்ளெக்ஸ்), பாலர் அரங்கம் பின்னர் கலைவாணர் அரங்கமாக மாறி தற்போது அதுவுமில்லை, குளோப் - பின்னர் அலங்கார் - தற்போது வணிக வளாகம், மிட்லண்ட், பின்னர் லியோ என்ற சின்ன அரங்கு கட்டப்பட்டு அதில் அந்தமான் காதலி மாபெரும் வெற்றி பெற்று, பின்னர் அதுவும் வணிக வளாகமாகியுள்ளது, ஆனந்த், லிட்டில் ஆனந்த், காமதேனு, கபாலி, மேற்கு மாம்பலம் நேஷனல், சைதை ஜெயராஜ் - தற்போது இயங்குகிறதா தெரியவில்லை, ஓட்டேரி சரஸ்வதி - தற்போது இயங்குகிறதா தெரியவில்லை, கிரௌன், கிருஷ்ணா, பிரபாத் - தற்போது இயங்குகிறதா தெரியவில்லை, சயானி,
இப்படி இன்னும் சில உள்ளன.
இந்தத் திரையரங்குகளின் நிழற்படங்கள் கிடைத்தால் இங்கு வேறொரு சந்தர்ப்பத்தில் பதியலாம்.
அன்புடன்
RAGHAVENDRA sir !
இன்னுமொன்று கேட்க வேண்டுமென்று நினைத்தேன்
தங்களுக்கு நிச்சயமாகத் தெரியும்
என்னிடம் இருக்கும் நடிகர் திலகத்தின் நரசு ஸ்டூடியோ 'ஸ்ரீவள்ளி
கருப்பு வெள்ளை யில் தான் இருக்கிறது
அது ஆரம்பத்தில் கலர் வண்ணப்படமாக படமாக வந்ததா ?
நன்றி
Regards
ஜெயப்ரதா -
http://www.kollycircle.com/wp-conten...da_theatre.jpg
சமீபத்தில் மூடப்பட்ட லிபர்டி
http://www.southdreamz.com/wp-conten...odambakkam.jpg
புவனேஸ்வரி
http://chennaionline.com/images/arti...OtherImage.jpg
அன்புடன்
RAGHAVENDRA sir !
:clap:நடிகர் திலகத்தின் திரைப்படங்கள் ஓடிய அதே சயானி தானா ?
amazing !
Regards
மன்னிக்க வேண்டும், அது புவனேஸ்வரி திரையரங்கு என எண்ணுகிறேன். சயானி அரங்கின் நினைவில் மூழ்கி விட்டதால் அதையே எழுதி விட்டேன். இருந்தாலும் சயானியும் கிட்டத் தட்ட இதே போல் தான் இருக்கும். சாலையிலிருந்து கிட்டத்தட்ட 100 அடி உள்ளே தள்ளி இருக்கும். என்னிடம் சயானியின் நிழற்படம் இருந்தால் அதைப் பதிவேற்ற முயற்சிக்கிறேன்.
புவனேஸ்வரி திரையரங்கும் தற்போது இயங்கவில்லை என எண்ணுகிறேன்.
அதே பகுதியில் 70களின் கடைசியில் வசந்தி திரையரங்கு துவங்கப் பட்டது. தற்போது அது இயங்குகிறதா தெரியவில்லை.
அன்புடன்
சிரமத்திற்கு மன்னிக்கவும்.
அந்த வானொலிப் பெட்டி கண்களுக்கு மிகவும் ரம்மியமாகக் காட்சி தரும். ஒலி துல்லியமாகக் கேட்கும். அந்தக் குழந்தையோ உள்ளத்திலே நிரந்தரமாகத் தங்கி விடும். அது தான் மர்பி முசாபிர். 60களின் மத்தியில் தமிழகத்தில் மிகப் பிரபலமான வானொலிப் பெட்டி. பேட்டரியிலும் இயங்கக் கூடியது. மின்சாரத்தில் இயங்கிக் கொண்டிருந்த நேஷனல் எக்கோ ரேடியோ பெட்டியின் ஆதிக்கத்தை குறைத்து பேட்டரியிலும் மின்சாரத்திலும் இயங்கக் கூடியதாக வந்த மர்பி முசாபிர் பெருத்த வரவேற்பைப் பெற்றதில் வியப்பில்லை. மெல்லிசை மன்னர் 60களின் பிற்பகுதியில் தன் ஆளுமையை ஆழமாக விஸ்தரித்துக் கொண்டிருந்த போது இந்த வானொலிப் பெட்டியின் உதவியில் தான் நம்மைப் போன்ற பல ரசிகர்கள் உருவாகக் காரணமாயிருந்தது இந்தப் பெட்டி. இதோ அந்த விளம்பரம்.
http://i872.photobucket.com/albums/a...phymusafir.jpg
அன்புடன்
அன்புள்ள தபம் லவர் ( tfm lover ) அவர்களுக்கு .
எனது நண்பகல் வணக்கம் .
சிவாஜி, பத்மினி நடித்த நரசுவின் ஸ்ரீ வள்ளி வண்ணப் படம் தான் !
அந்தப் படத்தை எந்த நிறுவனமும் வெளியிடவில்லை !
அதனால் அது சந்தைக்கு வரவில்லை .
இரண்டு வருடங்களுக்கு முன் ஒரு தடவை நான் மதுரைக்கு சென்ற பொழுது மதுரையில் உள்ள பெரியார் பேருந்து நிலையத்துக்கு வெளியே ஒரு கடையில் யாரும் சீந்துவாரில்லாமல் இந்தப் படத்தின் மூன்று குறுந்தகடுகள் எனக்குக் கிடைத்தன .
படம் முழுமையாக இருந்தது . ஆனால் அவ்வளவாகத் தெளிவில்லாத வண்ணம் .!
நல்ல சிறந்த பாடல்கள் இருந்தும் படம் நன்றாக ஓடவில்லை என்று நினைக்கிறேன் .
இந்தப் படத்தின் பாடல்கள் தங்களுக்குத் தேவையா ?
அன்புடன்
prof.s.s.kandasamy
'' யான் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம் ''
அன்புமிக்க பேராசிரியர் அவர்களின் பதிவு மிக்க மகிழ்வூட்டுகிறது. உதவுதற்கென்றே உள்ளவர் அவர்.
அவர் கூறியது போல் ஸ்ரீவள்ளி வண்ணப் படம் தான். ஆனாலும் வெளியான புதிதில் சில பிரதிகள் கருப்பு வெள்ளையிலும் வந்ததாகக் கேள்விப் பட்டிருக்கிறேன். இது ஊர்ஜிதமான தகவல் அல்ல.
தற்போது ஒரு நிறுவனம் இப்படத்தை நெடுந்தகட்டில் வெளியிட்டிருக்கிறார்கள். ஆனாலும் பேராசிரியர் கூறியது போல் வண்ணம் பல இடங்களில் பிசிறடிக்கிறது. அதை கருப்பு வெள்ளையிலேயே வெளியிட்டிருக்கலாமோ என்று கூட தோன்றுகிறது. இதோ தங்கள் பார்வைக்கு அந்த நெடுந்தகட்டின் முகப்பும் பின் அட்டையும்
http://i872.photobucket.com/albums/a.../SriValliF.jpg
http://i872.photobucket.com/albums/a.../SriValliR.jpg
இதில் இடம் பெற்றுள்ள நடிகர் திலகத்தின் நிழற்படங்கள் ஸ்ரீவள்ளி படத்தினுடையதல்ல.
அன்புடன்
அன்புள்ள TFMLover அவர்களே,
தங்களைத் தமிழில், அதாவது தமிழ்த் திரை இசைப் பிரியர் என விளிக்கலாமா.
அன்புடன்
hi prof !
ஸ்ரீவள்ளியில் நல்ல சிறந்த பாடல்கள் ! உண்மைதான்
பி சுஷீலா பத்மினிக்காக பாடியிருக்கிறார் அல்லவா
சிரமப்பட வேண்டாம் , தங்கள் கண்களுக்கு ஓய்வு தாருங்கள்
முடிந்தால் நானே கிளிப் போடுகிறேன் (யாராவது முன்வந்து கேட்டால்
அதுவும் குவாலிட்டியைப் பொருத்தது )
உங்களுக்கும் ஒரு விளம்பரம் வைத்து இருக்கிறேன் புரொபசர்
பார்க்க வேண்டுமா ?
thanks
Regards
this is the song :
http://www.dailymotion.com/video/xj6rw1_kaathirundhen-kaathirundhen_creation
காத்திருந்தேன் காத்திருந்தேன் ..
தேதி வைத்து சேதி சொன்னால் தாய் முகமும் மறந்து விடும் ..
which came mind while reading madhu 's
previous post referring to பெற்ற தாயைக் கண்டபோதும் நெஞ்சில் கோபம் உண்டாகும் !
wonderfully sung by P Suseela, from Vaasu films 'Kairasi 1960
undoubtedly remains one of the best from R Govarthanam
lyrics by written by Kannadasan
(with some ideas lifted from Thirukkural of course )
duly expressing the feelings of a girl who is about to be married
soft musical accompaniment without ever overpowering ,
enchanting P Susheela for Sarojadevi
convincingly picturised too
successful movie for Gemini Ganesan , with good plot line and songs
Kairasi directed by K Shankar ,
somehow it makes me feel like a Sridhar kind of theme ,
or is it the Ganesan +Sarojadevi wonderful pair on my frame of mind
Regards
தி எப் எம் லவர் அவர்களே,
உண்மைதான், கைராசிஇல் R கோவர்தனம் நல்ல பாட்டுக்கள் கொடுத்திருக்கிறார். "அன்புள்ள atthan வணக்கம்" என்ற சுசீலாவின் பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும்.
இந்த படத்தில் வந்த டூயட் "கண்ணும் கண்ணும் பேசியது உன்னால் அன்றோ' (TMS - சுசீலா) என்ற பாடல் "yehudi என்ற ஹிந்தி படத்தில் வந்த முகேஷ் பாடலை "யெஹ் மேரா திவானாபன் ஹாய்" என்ற பாடலை (http://www.songs.pk/yahudi_1958.html) நினைவு படித்தினாலும் ஒரு நல்ல பாடல்.
அன்புடன்
ராமஸ்வாமி
this one ? really ? S Ramaswamy
http://www.youtube.com/watch?v=ZwMtiRe6rBE
and i found this too by kumari kamala
http://www.youtube.com/watch?v=YLTBy9ds7yg&feature=related
Regards
அன்பர்களே
ரயில் பின்ணணியில் எடுக்கப்பட்ட ஒரு பாடல்
கிளிப் போடலாமென்று எண்ணம்
உங்கள் ஞாபகத்திற்கு சட்டென்று வருகின்ற
சில பாடல்களை சொல்லுங்கள் பார்க்கலாம்
நான் நினைப்பது அகப்படுகிறதா என்று பார்ப்போம்
ரயிலோசையோ அல்லது ரயிலுக்குள்ளேயோ அமைந்தது போல
கேட்டு பார்த்து இருப்பீர்கள் அல்லவா
நன்றி
Regards
Hi TFM Lover,
Yes, that's the Mukesh song which I feel "Kannum Kannum" loosely resembles, but I may be mistaken. However the song is good. Govarthanam was a very good MD who chose to play second fiddle to MSV, I guess, barring the odd movie like "Kairasi", "Poovum Pottum' (who can forget the fantastic Nadaswara Osayile devan vandhu paadugindran, thedi varum melathile devi nadam aadugindral), "Pattanathil Bootham" (Excellent songs).
I like his "Anubulla Athan Vanakkam" very much as it has an MSV touch or feel to it, I guess.
About your query on Rail songs I can immediately recall "Pachai Vilakku" songs "Oli Mayamana" and "Kelvi Pirandadu Andru", Also "Chittirai Madam Pournami Neram" (Raman Ethanai Ramanadi) or the children's song "Oodum Odum Rayil. Athu Engum Nirkadu Mail" in "Valliyin Selvan".
Anbudan
Ramaswamy
ரயில் பாடல் என்றால் சட்டென்று நினைவுக்கு வரக்கூடிய சில பாடல்களை ராமசாமி அவர்கள் கூறி விட்டார். அதில் அம்மம்மா தம்பி என்று நம்பி என்ற ராஜபார்ட் ரங்கதுரை படத்தில் புஷ்பலதா பாடிய பாடலும் நினைவுக்கு வரும்.
சில அபூர்வமான பாடல்கள் உள்ளன. அதில் கண்டசாலா பாடி பரோபகாரம் படத்தில் இடம் பெற்ற நெஞ்சமே போவாய் நீ பாடலும் ஒன்று. அதே போல் அன்புக்கரங்கள் படத்தில் இடம் பெற்ற ஒண்ணா இருக்கக் கத்துக்கணும் பாடலைக் குறிப்பிடலாம். மேலும் அனாதை ஆனந்தன் படத்தில் ரயில் பெட்டியில் இடம் பெறும் டூயட் பாடலான கண்ணாடி முன்னாடி பாடல் (இந்த மெட்டில் ஒரு பாடல் ஆர்.டி.பர்மன் அவர்கள் இசையமைத்த கேரவன் படத்தில் இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது ), குங்குமச் சிமிழ் படத்தில் கூட்ஸ் வண்டியிலே பாடல் ரயிலை அடிப்படையாக வைத்து அமைக்கப் பட்ட பாடல், சங்கே முழங்கு படத்தில் நாலு பேருக்கு நன்றி பாடல், சுமதி என் சுந்தரி படத்தில் எல்லோருக்கும் காலம் வரும் பாடல், five star படத்தில் ரயிலை அடிப்படையாக வைத்து ஒரு பாடல், இப்படி பல பாடல்கள் உள்ளன.
அன்புடன்
TFML,
Murphy picture ku thankkkkssssssss.......... konjam neram.......... ennoda 6 vayasu nyabagam.............tamizh
ezhuthu kooti padika arambam. english.. theiryadhu........ 3rd std la dhanae english....... Anandha vikatan book il indha add ai parthu, enna idhu endru en paati kitae kaetu kathunden..... ( paatiku.. vellaikaran period nala.. konjam english theiryum..........)
3rd std vandhadhum, english kathundadhum... mudhal velai - book il - add ill varum.. English letters ai padiakradhu dhan..........
chinna vayasu nyabagam... kashtathaiyum thaandi.. sandhosham matumae niraindhu irukiradhu..............
so.. Thanks a lot TFML..........