sridevi sreedhar @srikutty45 3h3 hours ago @iam_str to start @selvaraghavan film in April. Hrd its an awesome script. Lookin forward 2 a good film from director
https://pbs.twimg.com/media/B_ZGK1uUIAAMtmN.jpg
Printable View
sridevi sreedhar @srikutty45 3h3 hours ago @iam_str to start @selvaraghavan film in April. Hrd its an awesome script. Lookin forward 2 a good film from director
https://pbs.twimg.com/media/B_ZGK1uUIAAMtmN.jpg
Lethal Combo....
நீங்கள் பெருமைப் படும்படி மாறுவேன் - சிம்பு! - Vikatan
கௌதம் மேனன் இயக்கத்தில் சிலம்பரசன் , பல்லவி நடிப்பில் உருவாகி வரும் படம் ‘அச்சம் என்பது மடமையடா’. படத்திற்கு இசை ஏ.ஆர்.ரஹ்மான். தாமரை மற்றும் மதன் கார்க்கி படத்திற்கு பாடல்கள் எழுதுகின்றனர்.
‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தை போலவே இப்படத்திற்கும் அதீத எதிர்பார்ப்புகள் எகிறி உள்ளன. அந்த படத்தின் பாடல்களும் சரி, படமும் சரி இப்போதும் இளசுகளின் டாப் விருப்பமாக இருந்து வருகிறது. அந்த லிஸ்டில் தற்போது அடுத்த படம் உருவாகி வருகிறது ‘அச்சம் என்பது மடமையடா’.
http://cinema.vikatan.com/uploaded/t...i-stills22.jpg
தற்போது படத்தின் முதற்கட்ட படப்பிடிப்புகள் முடிந்துவிட்டன என தனது ட்விட்டர் பக்கத்தில் சிம்பு தெரிவித்துள்ளார். மேலும் இந்த குழுவுடன் இணைந்து பணியாற்றியது மன அமைதியை தருகிறது. ஏப்ரல் வரை காத்திருக்க முடியவில்லை. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் விரைவில் என ட்வீட் செய்துள்ளார்.
இந்நிலையில் தனது அடுத்த ட்வீட்டில், நேற்று ‘வாலு’ படம் தள்ளிப்போவதால் சற்றே மன உளைச்சலுடன் ஒரு ட்வீட் செய்திருந்தார். அதற்கு பதில் கூறும் வகையில் , கொஞ்சம் அப்செட், இப்போ ஓகே, எனது ரசிகர்களான உங்களின் அன்புக்கு நன்றிகள். கண்டிப்பாக நீங்கள் பெருமை படுமளவிற்கு வருவேன் , நீங்க இல்லாம நான் இல்ல’ என ட்வீட் செய்துள்ளார்.
செல்வராகவன் படம் - சிம்புவுடன் நடிக்கும் த்ரிஷா, தாப்ஸி.....webulagam
தனுஷின் வுண்டர்பார் தயாரிப்பில் செல்வராகவன் இயக்கும் படம் அடுத்த மாதம் தொடங்குகிறது. சிம்பு ஹீரோவாக நடிக்கும் இந்தப் படத்தில் இரண்டு நாயகிகள் இருக்கிறார்கள்.
செல்வராகவன் படத்தில் நாயகிகளுக்கு அதிக முக்கியத்துவம் இருக்கும். இந்தப் படத்திலும் அப்படியே. த்ரிஷா மற்றும் தாப்ஸி ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக உறுதி செய்யப்படாத தகவல்கள் கூறுகின்றன.
முக்கியமான விஷயம், நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்தப் படத்துக்கு யுவன் இசையமைக்கிறார். செல்வா - யுவன் என்ற வெற்றிக்கூட்டணி மீண்டும் இணைவது இசை ரசிகர்களுக்கு மகிழ்ச்சி தரும் விஷயம்.
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் சிம்பு... இசை அனிருத்!
ஆஃப் த ரெக்கார்டு! - vikatan
புத்த இயக்குனர் இயக்கத்தில் விரல் நடிகர் நடிக்கும் படத்தில், காணாமல் போன ஹீரோயினைத் தேடிக் கண்டுபிடிக்கும் கேரக்டராம். ஆனால் ஹீரோவே அவ்வப்போது ஷூட்டிங்கில் காணாமல் போய்விடுவதுதான் கடுப்பு.
கௌதம் மேனன், சிம்பு படத்தில் ராணா
ஆரம்பம் கொடுத்த எண்ட்ரி ராணாவிற்கு இப்போது கோலிவுட்டில் அடிக்கடி வாய்ப்புகள் குவிய துவங்கி விட்டன. ஏற்கனவே தெலுங்கில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள ‘பகுபலி’ , தமிழில் ’மகாபலி’ என்னும் பெயரில் வெளியாக உள்ளது.
இதுமட்டுமின்றி தமிழில் உருவாகும் மலையாள ‘பெங்களூரு டேஸ்’ ரீமேக் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் சிலம்பரசன் , பல்லவி நடித்து வரும் படம் ‘அச்சம் என்பது மடமையடா’.
‘என்னை அறிந்தால்’ படத்திற்காக இந்த படத்தை பாதியில் நிறுத்தி வைத்திருந்து இப்போது மீண்டும் துவங்கி நடந்து வருகிறது. இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் ராணா நடிக்க இருக்கிறார்.
சமீபத்தில் சென்னையில் பிரபல ஸ்டார் ஹோட்டலில் ராணாவை சந்தித்த கௌதம் மேனன் படத்தின் கதை மற்றும் ராணாவின் ரோல் குறித்து விளக்கவே ராணாவும் ஓகே சொல்லிவிட்டாராம். எனவே அச்சம் என்பது மடமையடா படத்தில் ராணா சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருக்கிறார்.
ஆரம்பமானது செல்வராகவன் படம்! சிம்பு ஹாப்பி !
சிலம்பரசன் நடிக்கவிருக்கும் அடுத்தப் படத்தினை செல்வராகவன் இயக்குகிறார். முன்னதாக படத்திற்கான போட்டோ ஷூட் நிறைவடைந்துவிட்டது.
இரண்டாம் உலகம் படம் வெளியாகி இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு சிம்புவை வைத்து அடுத்தப் படத்தினை இயக்கவிருக்கிறார் செல்வராகவன். சிம்புவுக்கு ஜோடியாக த்ரிஷா மற்றும் டாப்ஸி நடிக்கிறார்கள். முக்கிய கதாப்பாத்திரத்தில் ஜெகபதி பாபு நடிக்கிறார்.
படத்திற்கு இசை யுவன் சங்கர் ராஜா. செல்வராகவனின் நெருங்கிய நண்பரான அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்கிறார். இவர் ஏற்கெனவே செல்வராகவனின் காதல்கொண்டேன், புதுப்பேட்டை மற்றும் 7ஜி ஜெயின்போ காலனி உள்ளிட்ட படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர்.
சிம்பு தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “ இயக்குநர் செல்வராகவனின் படத்திற்கான போட்டோ ஷூட் முடிந்துவிட்டது. க்ரேட் வோர்க் வித் த்ரிஷா, டாப்ஸி, ஜெகபதி சார்” என்று டிவிட் செய்திருக்கிறார். சிம்புவின் வாலு படம் மே 9 வெளியாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.
கௌதம், சிம்பு படம் - நாயகி பல்லவி சுபாஷ் நீக்கம்
என்னை அறிந்தால் படத்துக்கு முன்பு கௌதம் சிம்புவை வைத்து ஒரு படத்தை தொடங்கினார். என்னை அறிந்தால் வாய்ப்பு கிடைத்ததும் அதனை நிறுத்தி வைத்தார். தற்போது அந்தப் படம் மீண்டும் டேக் ஆஃப் ஆகியுள்ளது.
அச்சம் என்பது மடமையடா என பெயர் வைக்கப்பட்டிருக்கும் அப்படத்தில் பல்லவி சுபாஷ் ஹீரோயினாக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். தற்போது அவர் படத்தில் இல்லை.
கௌதம் திடீரென என்னை அறிந்தால் படத்துக்குப் போனதால் பல்லவி சுபாஷ் தந்த தேதிகள் வீணாகிவிட்டதாகவும், தற்போது அவர் வேறு வேலைகளில் பிஸியாக இருப்பதால் மீண்டும் கால்ஷீட் தரவில்லை எனவும் கூறப்படுகிறது.
தற்போது வேறு நாயகியை ஒப்பந்தம் செய்ய முடிவு செய்துள்ளனர்.
கௌதம் படத்தில் சிம்புவோடு சேருகிறார் சமந்தா !
கௌதம்மேனன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் அச்சம்என்பதுமடமையடா படத்தின் நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த பல்லவிசுபாஷ், படத்திலிருந்து விலகிவிட்டார். படம் மிகவும் தாமதமாவதால் அவர் விலகிக்கொண்டார் என்று சொல்லப்படுகிறது. அதற்குப் பிறகு இந்தப்படத்தில் நாயகியாக நடிக்க வைப்பதற்காகப் பல பெயர்களைப் பரிசீலித்தாராம் கௌதம்மேனன்.
கடைசியாக அவர் செய்திருக்கும் முடிவின்படி சிம்பு ஜோடியாக நடிக்கவிருப்பவர் சமந்தா என்று சொல்லப்படுகிறது. சமந்தா இப்போது விக்ரமுடன் பத்துஎண்றதுக்குள்ள, சூர்யவுடன் 24, தனுஷ் படம் ஆகிய படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். இது தவிர தெலுங்கிலும் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறாராம். எனவே அவருடைய தேதிகள் கிடைப்பது கடினமாக இருக்கிறதாம். இருந்தாலும் கௌதம் படத்தில் நடிக்க சமந்தா தயாராக இருப்பதால் தேதிகள் எப்போது என்பதை முடிவு செய்துவிட்டு அதுபற்றிய அறிவிப்பை வெளியிடலாம் என்று இருக்கிறார்களாம்.
சமந்தாவை நடிக்க வைக்க இன்னொரு காரணமும் இருக்கிறதென்று சொல்கிறார்கள். விண்ணைத்தாண்டிவருவாயா படத்தின் தெலுங்குப்பதிப்பில் சமந்தா நடித்திருந்தார். இந்தப்படத்தையும் அதுபோலவே தமிழ் தெலுங்கு ஆகிய இருமொழிகளிலும் எடுக்கத் திட்டமிடுகிறாராம் கௌதம்மேனன். அதனால் இரண்டு மொழிகளிலும் பிரபலமாக இருக்கும் சமந்தாவையே நாயகியாக்கிவிடலாம் என்ற அவர் முடிவு செய்திருக்கிறாராம். சிம்புவுக்கும் இதில் சம்மதம் என்பதால் சமந்தாவின் தேதிகள் கிடைத்ததும் வேகமாகப் படப்பிடிப்பு தொடங்கிவிடும் என்று சொல்கிறார்கள்.