வெளிவராத ஞாயிறும் திங்களும் படத்தில் (சிவாஜி-தேவிகா இணை)
https://www.youtube.com/watch?v=ZjiRKDmIDjk
Printable View
வெளிவராத ஞாயிறும் திங்களும் படத்தில் (சிவாஜி-தேவிகா இணை)
https://www.youtube.com/watch?v=ZjiRKDmIDjk
நடிகர்களை நான் வெறுத்தாலும் இரட்டையர்களின் இசை என் மனதை துள்ள வைக்கிறதே. என்னுடைய டி.எம்.எஸ் -பீ.எஸ் இணைவில் முதல் பத்தில் என்றும் இருக்கும்.
https://www.youtube.com/watch?v=0Lm7i6Dp9yY
இளைய தலைமுறை படத்தில் நான் ஆவலோடு எதிர்பார்த்து இடம் பெறாத பாடல். சிவாஜி-வாணிஸ்ரீ விளையாட்டு எப்படி இருந்திருக்கும்?ஆடியோ மட்டுமே கேட்டு மகிழவும். கேட்டாயே ஒரு கேள்வி.(Go to sight and right hand side you get song list numbered and click kettaye oru kelvi)
http://www.thatstamilsongs.com/songs...%20Thalaimurai
காலம் எனக்கொரு பாட்டெழுதும்.S .P .B பாடி பூவை செங்குட்டுவன் எழுதி, R .குலசேகர்(நம்ம திலிப் cum ரகுமான் அப்பாதான்) இசையமைத்த படம் பௌர்ணமி. படம் வெளியாகவில்லை. ஆனால் பாடல் படு popular சிலோன் புண்ணியம்.தமிழ் சேவை.
R .K .சேகர் மலையாளத்தில் பல அபூர்வ பாடல்களை தந்த திறமைசாலி.(ஏ.எம்.ராஜா வும் மலையாளத்தில் ஒதுங்கினார்)
மாப்பிள்ளா இசை என்ற பாணியில் பின்னியுள்ளார்.சுமார் 50 நல்ல பாடல்கள்.
வீ.குமாருக்கு associate ஆக பல படங்கள்.இவர் இசை கோர்ப்பு கவனித்தார். என்னதான் பாடுவது ,நாணலில் முழுக்க இவர் பணி என்று கேள்வி.அதிர்ஷ்டமில்லாமல் சிறு வயதில் அடைய வேண்டிய உயரம் தொடாமல்,முழு பலனையும் மகனுக்கு தந்து ,அகால மரணம் தழுவினார்.
என்னுடைய வேண்டுகோளையேற்று
'கல்லில் பூவெடுப்போம்' (துணிவே துணை) பாடலை காணொளியாக தந்த அன்பு வாசு சார் அவர்களுக்கும்,
'தேவன் வேதமும் கண்ணன் கீதையும்' (ராஜநாகம்) பாடலை காணொளியாக தந்த அன்பு கிருஷ்ணா சார் அவர்களுக்கும்,
பல்வேறு பாடல்களை தொடர்ந்து தந்துகொண்டிருக்கும் அன்பு பாலா சார் அவர்களுக்கும்,
படங்களில் இடம்பெறாத பாடல்களைத் தேடிக்கொண்டுவந்து பதிப்பிக்கும் அன்பு கோபால் சார் அவர்களுக்கும்,
நன்றி... நன்றி... நன்றி....
'கேட்டாயே ஒரு கேள்வி' என்ற இந்தப் பாடலுக்கு பதிலாகத்தான் 'ஒரு அறை கொடுத்தால் தெரியும்' என்ற பாடல் படத்தில் இடம்பெற்றது.
இதுபோல 'பொம்பளையா லட்சணமா பொடவைய கட்டு' பாட்டுக்குப் பதிலாக 'சிங்காரத் தேர்கூட திரைமூடிப் போகும்' பாடல் இடம்பெற்றது.
இவையெல்லாம் நீக்கப்பட்டது கூட வருத்தமில்லை. ஆனால் அவன் ஒரு சரித்திரத்துக்காக இயற்றி இசையமைத்து பாடி ரெக்கார்ட் செய்த 'என் மனது ஒன்றுதான் உன் மீது ஞாபகம்' பாடலை நடிகர்திலகத்தின் வேறு ஒரு படத்தில் உபயோகப்படுத்தியிருக்கலாம்.
அந்தப்பாடலை 'பெருமைக்குரியவள்' படத்தில் சிவகுமாரும், பத்மப்ரியாவும் நடிக்கும்போது, டி.எம். எஸ். நடிகர்த்திலகத்துக்காகப்பாடும் வாய்ஸிலேயே பாடியிருப்பது நன்றாகத் தெரியும்.
ராஜகோபால் குலசேகர் என்கிற ஆர் .கே.சேகர் ,ஹிந்து வெள்ளாளர் .(1933-1976). இசை தொகுப்பாளர், உதவி இசை அமைப்பாளர்,இசை அமைப்பாளர் என பல பணிகள்.தக்ஷினாமூர்த்தி, குமார் என்று பலருக்கும் உதவியாளர். மலையாளத்தில் 53 படங்களுக்கு இசை 1964 தொடங்கி 1976 வரை.முதல் படம் பழசி ராஜா (1964)
மகன் திலீப் குமார் 1966 இல் பிறந்த prodigy .மகன் 10 வயதை கடக்குமுன்பே அமரராகி விட்டார்.
அவர் இசையமைத்த ,முதல் பாடல். கே.ஜே .யேசுதாசின் பொம்மை கால இளமை குரலில்.
http://www.youtube.com/watch?v=asnNjcTbDaQ
மாமா, காதல் கிளிகள் என்று ஒரு படம் 1979 இல் செய்ததாக ஞாபகம்.
நல்ல பாடல்கள்.(கொஞ்சம் பழைய வாடை. ஏணி படிகள் போல)
http://icdn.raaga.com/Catalog/CD/T/T0000980.jpg
1. செவ்வானமே சீர் கொண்டு வா
வெண்மேகமே தேர் கொண்டு வா
2. காதல் கிளியே... நீ ஏன் பேச மறந்தாய்
3. நதிக்கரையோரத்து நாணல்களே
என் நாயகன் புகழைக் கேளுங்களேன்
சுசீலா பின்னி எடுக்கும்
4. கரும்பிலும் இனியது இனியது
உயர் கவிதையில் புதியது புதியது
இதுதான் நான்கிலும் டாப்.
சிவக்குமார், கமல், ரதி அக்னிஹோத்ரி நடித்திருப்பார்கள். டிராஜடி அதிகம். படம் போகவில்லை. ஆனால் கோபால் சார் சொன்னது போல் மாமாவின் மந்திர டியூன்கள் எப்போதும் போல இனிக்கும்.
காதல் கிளியே மாமாதான்.