தன் பட&
தன்னுடைய படங்களைப் பற்றி எந்தக் கலைஞனிடம் கேட்டாலும் உள்ளார்ந்த பதிலை எதிர்பார்க்க முடியாது. தன்னுடைய எல்லா படங்களுமே தனக்குப் பிடித்தவை தான் என்பார்கள். ஆனால் உள்ளது உள்ளபடி உரைக்கக் கூடிய ஒரே கலைஞர் என்பதை நிரூபிக்கும் வகையில் தன்னுடைய படங்களைப் பற்றித் தன் மனதில் பட்டதைக் கூறியிருக்கிறார் நடிகர் திலகம். தன்னுடைய 43வது பிறந்த நாளையொட்டி அகில இந்திய சிவாஜி கணேசன் ரசிகர் மன்றம் வெளியிட்ட மலரில் அவருடைய படங்களைப் பற்றிய அவருடைய கருத்துக்கள் இடம் பெற்றிருந்தன. அதன் தொடர்ச்சியாக தினத்தந்தி 1996 வாக்கில் மற்ற படங்களைப் பற்றிய அவருடைய கருத்துக்களைக் கேட்டறிந்தது. அதன் மறு வெளியீடு நடிகர் திலகம் மறைந்து சில நாட்களுக்குப் பிறகு ஒரு ஞாயிறு மலரில் இடம் பெற்றது. அதிலிருந்த சில துளிகள் அவ்வப் போது இங்கே இடம் பெறும். மிருதங்க சக்கரவர்த்தி படத்திலிருந்து தொடங்கி அவரது கருத்துக்கள் அதில் இடம் பெற்றுள்ளன. அதனடிப்படையில் மிருதங்க சக்கரவர்த்தி படத்தைப் பற்றிய நடிகர் திலகத்தின் கருத்து இங்கே-
கேள்வி: "மிருதங்க சக்கரவர்த்தி எப்படிப்பட்டவர் "
நடிகர்திலகத்தின் பதில்: "உண்மையான மிருதங்க சக்கரவர்த்திகளே பார்த்து ஒத்துக்கொண்டு பெருமைப்பட்ட சக்கரவர்த்தி தான் "
அன்புடன்
ராகவேந்திரன்