வெள்ளெலிகள் துள்ளி ஓடும்
கிளி ஒன்று யாரு என கத்தும்
பாட்டியின் தம்பி சிறு வீட்டில்
பேரப்பிள்ளைகள் எங்களுக்கு
பாட்டியுடன் அங்கு செல்கையில்
மனதில் வழியும் குதூகலம்
Printable View
வெள்ளெலிகள் துள்ளி ஓடும்
கிளி ஒன்று யாரு என கத்தும்
பாட்டியின் தம்பி சிறு வீட்டில்
பேரப்பிள்ளைகள் எங்களுக்கு
பாட்டியுடன் அங்கு செல்கையில்
மனதில் வழியும் குதூகலம்
குதூகலமாகத் தான் இருக்கும்
வருட முடிவு வர வர..
அடுத்த வருடம்
இன்ன செய்யலாம்
இப்படி இருக்கலாம்
இவ்வளவு சம்பாதித்து
இவ்வளவு சேமிக்கலாம்
வேலை மாறலாமா
கல்யாணம் செய்து கொள்ளலாமா
இன்னும் இன்னும்..
வருடக் கடைசி நாளின்
கொண்டாட்டங்கள் முடிந்த பின்னர்
புதுவருட முதல் நாளில் தோன்றும்
ஆச்சு இன்னொரு வருஷம்..
ம்ம் நல்லா இருக்கட்டும்..
என்ற நினைப்புடன்
நல்லா இருக்குமா
என எழும் கேள்விக் குறியும்..
இருந்தாலும்
தொடரும் நம்பிக்கை..
நம்பிக்கை நட்சத்திரங்கள்
நாளைய சூரியன்கள்
நம் கலங்கரைவிளக்கங்கள்
நல்ல இளைய பிள்ளைகள்
பிள்ளைகள் அங்கு மிங்கும்..
..பேச்சுகள் பலவாய்க் கத்தி
எள்ளியே ஓடிச் செல்ல
..ஏற்றமாய் நோட்ட மிட்டு
விள்ளலாய் எடுத்த இட்லி
..வாயினில் போட மறந்த
தள்ளாத பாட்டி சொன்னாள்
..தக்கவாய் பாத்துப் போங்க.
போங்க என்றால் வாங்க
வாங்க என்றால் போங்க
ஊடி விளையாடி மகிழ
வஞ்சியர் தனி அகராதி
அகராதியில் இருக்காதவோர் அசைத்தாடிடும் உணர்வாய்
பகராததாம் எழிலாயென பலபாவலர் திகைக்கும்
நகராமலே இதயந்தனில் நல்மாகவே எழும்பும்
நகங்கள்முதல் உடலெங்கிலும் துலங்கும் உன் அழகே
அழகே ஆயிரம் கப்பலை கடலிறக்குமாம்
அதி நீள போரினை நடத்தி வைக்குமாம்
ஆபத்தின் உறைவிடமாகிக் கிடக்குமாம்
அன்றும் இன்றும் காவியத்தின் கருவாம்
கருவாமென கனிந்தேசொல கணவன்முகம் மலர்ந்தே
திருவேயிவள் எனவேசொலி தளிர்மேனியை அணைத்தே
தருவேன்பல விதமாகவே பரிசேயெனச் சொலியே
பருவத்திலே தாயானவள் இதயமதை நிறைத்தான்..
நிறைத்தான் இல்லத்தை
பட்டால் நகை நட்டால்
பகட்டால் சொகுசால்
பரிவொன்றே போதும்
பெண்ணைப் போற்றவென
புரியாத அவன் பாமரன்
பாமரன் போலத் தோற்றம்
.,..படகினில் வந்த கூட்டம்
சாமரம் வீசும் தென்றல்
..சாற்றிய மென்மை உள்ளம்
கோமகன் ராமன் மீதோ
...கொண்டதோ பக்தி வெள்ளம்
பூமனம் கொண்ட குகந்தான்
..புவனமும் அறியும் அம்மா..