டியர் பம்மலார்,
சீற்றம் கொண்ட சிங்கம் போல் ஏறு கொண்டு எழுந்து எழுத்தினை ஆயுதமாக்கி எழுத்துப் பிழையினை எடுத்துரைத்த தங்களின் பணி மிகுந்த பாராட்டுக்குரியது. நன்றிகள். வாழ்த்துக்கள். தொடரட்டும் தங்கள் பணி.
அன்புடன்
Printable View
டியர் பம்மலார்,
சீற்றம் கொண்ட சிங்கம் போல் ஏறு கொண்டு எழுந்து எழுத்தினை ஆயுதமாக்கி எழுத்துப் பிழையினை எடுத்துரைத்த தங்களின் பணி மிகுந்த பாராட்டுக்குரியது. நன்றிகள். வாழ்த்துக்கள். தொடரட்டும் தங்கள் பணி.
அன்புடன்
http://i45.tinypic.com/33erj94.jpg
காலத்தில் அழியாத காவியம் தர வந்த மாபெரும் கலை மன்னனே..
காளி தாஸ் என்னும் கவிஞனை வடித்த மாபெரும் கலைச் சிற்பியே
என்று அந்தத் திரைக்காவியத்தைப் பற்றியும் நடிகர் திலகத்தைப் பற்றியும் பேசிக் கொண்டே எழுதிக் கொண்டே இருக்கலாம்.
அப்பாவி இடையனாக தேங்காயச் சில்லுகளை எடுத்து மாறு வேடத்தில் வந்திருக்கும் காளியிடம் நீட்டும் காட்சியா, அல்லது சென்று வா மகனே பாடல் காட்சியில் தான் மிகப் பெரிய உயரத்தை நோக்கிப் பயணிக்கிறோம் என்பதை அறியாத அந்த கள்ளங்கபடமற்ற முகத்தையும் அந்த நடையினையும் சொல்வதா, தன்னுடைய திருமணத்தைப் பற்றிய விவரம் அறியாமல் முதலிரவு அறையில் பழங்களை ருசிக்கும் குணத்தை மெச்சுவதா, தனக்கு காளியின் அருள் கிடைத்ததும் கோயிலில் யார் தருவார் அந்த அரியாசனம் என்று கணீரென்று பாடுவதை சொல்வதா
தர்பாரில் சைகையிலேயே ஒவ்வொரு கேள்விக்கும் அப்பாவியாக கையைக் காட்ட, அதற்கு மனோகர் தனி வியாக்கியானம் செய்ய, தன் முகத்தில் அப்பாவித்தனத்தையும் பெருமிதத்தையும் ஒரு சேர காட்டும் அந்த பாவத்தை சொல்லுவதா, புலவரான பின் தன்னுடைய உடல் மொழியிலேயே அந்தப் பாத்திரத்தின் சிறப்பினைக் கொண்டு வந்த பாங்கை சொல்வதா....Quote:
நடிகர் திலகம் ராஜ்ய சபா உறுப்பினராய் நியமனம் செய்யப் பட்டு, பதவியேற்ற நாளையொட்டி, தூர்தர்ஷனில் வெள்ளிக்கிழமை ஒளியும் ஒலியு்ம் நிகழ்ச்சியில் ஒளிபரபப் பட்ட முதல் பாடல், யார் தருவார் இந்த அரியாசனம் என்பது குறிப்பிடத் தக்கது
ஒவ்வொரு காட்சியும் பல முறை பார்த்து ஆய்வு செய்ய வேண்டிய திரைக்காவியம் மஹாகவி காளிதாஸ்...
இப்படிப் பல்வேறு பரிணாமங்களில் தன் நடிப்பை வெளிப்படுத்திய நடிகர் திலகத்தின் புகழ் மகுடத்தில் மற்றோர் வைரக்கல், மாணிக்கக் கல், மஹாகவி காளிதாஸ்.Quote:
இன்னும் சொல்லப் போனால் வேறொரு திரைப்படம் மூலம் திரையுலகில் அறிமுகமானாலும் மிகவும் நெகிழ வைக்கும் காவியமாக நடிகர் திலகத்தின் நீலவானம் திரைப்படம் மூலமே தன் உண்மையான திறமை வெளிப்பட்டது, அதுவும் மற்றொரு சிறந்த இயக்குநர் மூலமாக, என்பதை பாலச்சந்தர் அவர்களின் மனசாட்சியை விட அதிகமாக உணர்ந்தவர் வேறுயார் இருக்க முடியும். இதன் படி பார்த்தால் பாலச் சந்தர் என்கிற இயக்குநரை நன்கு உருவகப் படுத்திக் கொள்ள முதல் படி அமைத்துக் கொடுத்தது நீலவானம் என்பது தானே உண்மையாக இருக்க முடியும்.
அன்புடன்
டியர் பம்மலார் சார்,
தங்களின் "கலைப் பிரம்மாவைப் படைத்தது பாலசந்தரா ?!" மின்னஞ்சல் தவறு செய்தவர்களுக்கு ஒரு சாட்டையடி, எங்கள் மனம் போல் உங்கள் மனமும் இன்னும் ஆறவில்லை என்று புரிகிறது. நாம் தவறைச் சுட்டிக் காட்டி விட்டோம். தவறைச் சரி செய்வார்கள் எனவும் நம்புகிறோம். அப்படி தகுந்த விளக்கம் அவர்கள் தரவில்லை என்றால் இது வேண்டுமென்றே, சம்பந்தப் பட்டவர்கள் சிலரால் தெரிந்தே செய்யப்பட்ட தவறாகத்தான் நாம் எடுத்துக் கொள்ள முடியும்.
மின்னஞ்சல்கள் மூலமாகவும், தொலைபேசி வாயிலாகவும், நமது திரியின் மூலமாகவும், கண்டனங்களைத் தெரிவித்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் நமது 'இதய தெய்வம்' ரசிகர்கள் சார்பாக நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்புடன்,
நெய்வேலி வாசுதேவன்.
http://www.sukumari.com/images/other..._Young_Age.jpg
யார் இவர்? யூகிக்க முடிகிறதா?
இவருக்கும் தற்போது நம் திரியின் விவாதத்திற்கும் என்ன தொடர்பு?
சற்றுப் பொறுத்திருங்களேன்..
http://www.thehindu.com/multimedia/d...pu_671112f.jpg
இவரை உங்களுக்குத் தெரியும்.
இவருக்கும் தற்போது நம் திரியின் விவாதத்திற்கும் என்ன தொடர்பு?
சற்றுப் பொறுத்திருங்களேன்..
இவர்கள் மட்டுமா
இயக்குநர் ஏ.சி. திருலோக்சந்தர்
கதை வசனகர்த்தா பாலமுருகன்
ஒளிப்பதிவு மேதை ஏ. வின்சென்ட்
இவர்களுக்கும் தற்போது நம் திரியின் விவாதத்திற்கும் என்ன தொடர்பு -
விடை காண சற்றுப் பொறுத்திருங்களேன்...
adhu sukumari
சூப்பர் ராஜேஷ், சொல்லப் போனால் அந்த நிழற்படத்தின் சுட்டியிலேயே அவருடைய பெயர் உள்ளது.
அன்புடன்
கலைநிலா சிவாஜி கணேசன் ரசிகர் மன்றத்தின் 11வது ஆண்டு விழாவும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பிறந்த நாள் விழாவும் 02.10.2011 அன்று காலை 10.00 மணிக்கு சென்னை பெரம்பூர் சந்திரசேகர் திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது. விழாவில் முன்னணி நட்சத்திரங்கள் கலந்து கொள்ள இருக்கின்றனர். அன்றைய தினம் நண்பகல் சமபந்தி போஜனம் நடைபெற உள்ளது. விவரம் விரைவில்.
great pammalr sir