அம்மா அம்மம்மா
பற்றி எரியுதம்மா
புயலின் நடுவினில்
தேவேந்திரன் மகள்
கேட்கக் கூசும் சோதனை
வேலைக்காரியால் வேதனை
முட்டி மோதும் அரசியல்
நடந்ததுதான் என்னவோ
Printable View
அம்மா அம்மம்மா
பற்றி எரியுதம்மா
புயலின் நடுவினில்
தேவேந்திரன் மகள்
கேட்கக் கூசும் சோதனை
வேலைக்காரியால் வேதனை
முட்டி மோதும் அரசியல்
நடந்ததுதான் என்னவோ
என்னவோ என்றே நெஞ்சில்..
..ஏதோவோர் அச்சம் கூட்ட
மின்னலைப் போலத் தாவி
...மென்மையாம் எந்த்ன் பெண்ணின்
கண்ணிலே உற்றுப் பார்த்தால்
..கரித்துளி இல்லை என்றால்
வண்ணமாய்க் குவித்து வாயால்
..வக்கணம் காட்டு றாளே..!
காட்டுறாளே குருட்டுப் பாசம்
ஒன்றிரண்டு பெத்த தாயின்று
கண்டிப்புக்கு அடங்காதவை
அவள் வளர்த்த செல்லங்கள்
பிஞ்சில் பழுத்து வெடித்த
மீசை அரும்பிய விடலைகள்
மிகப்பெரியதோர் வாகனத்தில்
பயங்கர வேகத்தில் மின்னலாய்
விதிமுறைகள் மீறி பறந்து
சாலையோரம் சிவனே என்று
நடந்து சென்ற நல்லவரை
முதியவரை மோதி நொறுக்கி
மருத்துவமனையில் சேர்த்து
நினைவு திரும்பாமலே அவர்
சில நாள் பாவமாய் கிடந்தது
பல லட்சங்கள் வீணே கரைத்து
யந்திரத்தில் மூச்சு விட்டு
இறுதியில் உலகை விட்டு
பயணிக்க யார் காரணம்
காரணம் கேட்க லாமா
...காரிகை கண்ணின் ஓரம்
ஆரமாய்க் கோலம் கண்டு
...அவனுமே சொன்னான் மெல்ல
பாரமாய் இருந்த நெஞ்சம்
..பகிர்வதால் இளகு மன்றோ
ஈரமாய்ச் சொல்ல அங்கே
..எந்திழை முறுவல் செய்தாள்..
சொல்ல நினைத்தால் முடிந்திடுமோ
...சோகம் என்னை மறந்திடுமோ
அள்ளி முடிக்கும் வார்த்தைகளை
...அழகாய் அளவாய்த் தான்போட்டு
மெல்லக் கேட்கும் சகநடிகா
...மேவிச் சொல்வேன் கேள் கதையை
வல்ல விதியின் விளையாட்டா
...வாட்டும் வினையாய் ஜாதகமா...
நடிகை என்றே எனை அறிவாய்..
.. நட்பாய் பழகத் தான் துடிக்கும்
விடியல் அறியா பறவையென
..வஞ்சி எனைநீ அறியாயே
கடிதாய் வந்த ஓர்காதல்
..காரிகை என்னை அள்ளீயதே
துடிக்கும் இளமை இன்னபிற
..தோழன் பிரிவும் காரணமே..
மெல்லச் சிரித்தான் சகநடிகன்
...மேகம் போலத் தான்கருமை
கொள்ளா இருந்தால் அதுநடிப்பு
...கோதை உனக்குத் தெரியாதா
விள்ளீச் செல்லும் மேகம்போல்
..வேகமாய் துயரும் மாறிவிடும்
அள்ளிச் சிரிப்பை முகத்தினிலே
...அழகாய் அணிவாய் எனச்சொன்னான்
சொன்னான் முடிவாக உறுதியாக
போகாதே அங்கே இங்கே என
நிற்காதே கண்ட இடத்திலென
கண்கொத்திப் பாம்பானான்
வெடித்தது பூகம்பம் அங்கு
ஆணாதிக்க முழு உருவே
கொடுங்கோலனே உன்னடிமை
நானல்ல புது யுக பெண்ணடா
உன் பிடிக்குள் அடங்குவேனா
என் நகர்வை கண்காணிக்கும் நீசனே
என் அசைவை கவனிக்கும் அற்பனே
பிரிந்து செல்கிறேன் இப்பொழுதே
சுதந்திரமாய் பறந்து திரிவேன்
பிழைத்துக்கொல்வேன் நீயின்றி
செத்துவிட மாட்டேன் பட்டினியில்
பிரவாகம் நிற்கவில்லை
பரிதாபமாய் தவித்தான்
தன்னிலை விளக்கினான்
அன்பே ஆருயிரே கண்மணியே
கொலைகார மனித எதிரிகள்
தீவிரவாதிகள் பலசாலிகள்
கொடிய நவீன போர்முறைகள்
பயங்கர உயிகொல்லி கருவிகள்
நச்சுப்புகையும் மின்சார ஆயுதமும்
இன்னும் பிற வியூகமும் அமைக்க
பதறாமல் இருப்பேனோ சொல்லம்மா
ஆபத்தை நான் கண்ட இடமெங்கும்
நீ போகாதிருக்க வேண்டினேன்
பொல்லாத பேச்செல்லாம் ஏனம்மா
போகாதே என்னைவிட்டு நில்லம்மா
பதியின் பாசமறிந்தாள் சின்னவள்
பாகாய் உருகினாள் சரணடைந்தாள்
சரணடைந்தாள் ஏந்திழையும் கணவனவன் பாதம்
..சங்கடந்தான் இருந்தாலும் நின்றானே ஆங்கே
வரமெனவே மனையாளாய் வாய்த்திட்ட வஞ்சி
..வனவாழ்க்கை என்றாலும் மயங்காமல் அங்கே
துறவுக்காய் பதிசெல்ல பின்னாலே சென்று
..தூய்மைமிகு வாழ்க்கையினை வாழ்ந்தவளும் அன்றோ
உறவினிலே பழிவந்தால் உலகின்முன் நீக்க
..உணர்ச்சியினை மட்டாக்கி நின்றானே அண்ணல்
அண்ணல் காந்தி சிரிக்கிறார்
ரூபாய் நோட்டுக்களில் தினம்
அறியாத அப்பாவியாய்தானே
ஆசை முகம் மறக்கலானதே
அன்றாட பணப் பரிமாற்றம்
அட்டையிலும் எங்கேயும்
அல்லது கணினி பெட்டியிலுமென
ஆகிவிட்ட கலிகாலமிதிலே
கலிகால மிதிலேபல கனமாய்வரும் விஷயம்
பலிகொள்ளுதே பலவாண்டுகள் பகிர்ந்தேவரும் நடத்தை
வழியாய்தினம் வரமாய்ப்பலர் மனத்தேயுள மனிதம்
வழிமாறுதே குறைந்தேயினி மறைந்தேயது விடுமோ
மறைந்தேயது விடுமோ
மாயமோ மந்திரமோ
தினம் தினம் தேயுதே
காணாமலே போனதே
இரு வாரத்தில் இருளானதே
கலங்கிய கணத்தில்
கீற்றாய் முளைத்தது
சிறிது சிறிதாய் வளர
மனமதுவும் குளிர
முழுதாய் கண்ட நிலவு
வாழ்வதின் ஏற்ற இறக்கம்
காட்டியதோ தெளிவாகவே
தெளிவாகவே தான் பிறக்கிறது
புதுவருடம்
நல்ல எண்ணங்கள்
நல் வாழ்க்கை
நல்ல விஷயங்கள்
இன்னும் பல நல்லவை தருவதற்கு..
எல்லாம்
எப்படி நாம் இருக்கிறோம் என்பதை வைத்து