-
'ஜஸ்ட் ரிலாக்ஸ்' பாடல்
ரொம்ப சுறுசுறுப்பாக விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கும் படத்தில் இடையே ஒரு ரிலாக்ஸ் பாடல் வந்தால் எப்படியிருக்கும்? சில படங்களில் ஸ்பீட் பிரேக்கர்கள் போல கதையோட்டத்தை இடைஞ்சல் செய்யும். சில படங்களில் மனதுக்கு கூடுதல் உற்சாகம் கொடுக்கும். அப்படி நம் மனதுக்கு உற்சாகம் கொடுத்த பாடல்தான் இது. சி.வி.ஆர். - நடிகர்திலகம் கூட்டணியில் முதலிடம் பெறும் "ராஜா" படத்தில் இடம்பெற்ற 'இரண்டில் ஒன்று' பாடல் மனதுக்கு சொல்லமுடியாத கிளுகிளுப்பைத் தரும்.
நடிகர்திலகத்துக்கு மதுரக்குரலோன் எஸ்.பி.பி. பாடிய இரண்டாவது பாடல் இது. பாடல் நடிகர்திலகத்துக்கு மட்டும்தான். "மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா" அவர்களுக்கு வெறும் ஹம்மிங் மட்டுமே (இதற்காகவே இருந்த வசந்தாவின் குரலில்). காதலர்கள் இருவருக்கும் அருமையான உடைகள். நடிகர்திலகத்துக்கு கருநீல நிற பேண்ட், மற்றும் அதே நிறத்தில் (உள்ளே பனியன் அணிந்திராமல்) சட்டை, "மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா" அவர்களுக்கு கரும்பச்சை நிறத்தில் அழகான வெள்ளைக்காலருடன் கூடிய கவுன்.
பாடலுக்கு மேலும் சுவை சேர்த்தது அதன் காட்சியமைப்பு. நடிகர்திலகம் தனது ஜோடியை கிட்டத்தட்ட டீஸ் செய்து பாடுவதுபோல் பாட, அவரை அறையைவிட்டு வெளியே தள்ளி கதவைத்தாளிட, ஒவ்வொரு கதவையும் இவர் மூட மூட அவர் வேறு வழியே வந்து வந்து எட்டிப்பார்த்து பாட, இவரை மடக்குவதற்காக அவர் வெளியே போக, அவர் வெளியே போன சாக்கைப்பயன்படுத்திக்கொண்டு அவர் அறையின் உள்ளே நுழைந்து கொள்ள, செம கலக்கல்.
இரண்டில் ஒன்று, நீ என்னிடம் சொல்லு
என்னைவிட்டு வேறு யாரு உன்னைத்தொடுவார்
(முதல் சரணம் நினைவில் இல்லை, எனவே இரண்டாவது சரணம்)
காலைப்போட்டு மூடிக்கொண்டால் தாகம் தீராது
முந்தானைபோட்டு மூடிக்கொண்டால் மோகம் தீராது
என் அல்லிராணி என் அருகில் வா நீ
நான் முள்ளில்லாத ரோஜாப்பூவை
கிள்ளிப்பார்கின்றேன்
என்னை விட்டு வேறு யாரு உன்னைத்தொடுவார்
தத்தை போலும் தேவன் என்று என்னைச்சொல்லம்மா உன்
அத்தை பெற்ற பிள்ளையென்று எண்ணிக்கொள்ளம்மா
வித்தை ஒன்றை கற்றுக்கொள்ளு வாத்தியாரம்மா
நீ கற்றுக்கொள்ள என்னைவிட்டால் வேறு யாரம்மா
இணைந்து நில்லு இன்னும் அணைந்து கொள்ளு
நான் எங்கோ போவேன் அங்கேயெல்லாம் உன்னையெடுத்து
என்னை விட்டு வேறு யாரு உன்னைத்தொடுவார்
இரண்டில் ஒன்று, நீ என்னிடம் சொல்லு
என்னைவிட்டு வேறு யாரு உன்னைத்தொடுவார்
இளமையும் கிளுகிளுப்பும் ஒருசேர கண்ணதாசன், மெல்லிசை மன்னர், எஸ்.பி.பி., சி.வி.ஆர்., நடிகர்திலகம், "மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்கள்" அனைவரும் இணைந்து கலக்கிய அருமையான இன்டோர் பாடல்...
-
கார்த்திக்,
அமர்க்களம். என்னுடைய படு favourite காட்சி மற்றும் பாடல்.S P B -வசந்தா இணைவே சுகம்தான். தலைவர் இதில் அவ்வளோ அழகு,handsome ,இளமை,குறும்பு,துருதுருப்பு .Grape கலர் ஷர்ட். மேடம், பச்சை கலர். தலைவர் செல்லமாய் முதுகு நிமிண்டும் அழகு.புல் fight போல அறையில் நுழையும் ஸ்டைல்.
-
கலக்கல் கார்த்திக் சார்!
செம ரிலாக்ஸ். நிம்மதியா ஜாலியா இருக்கு உங்க எழுத்தைப் படித்தவுடன். 'ராஜா' மாதிரி எழுதுறீங்க.
பாட்டில் லயிக்கிறதுக்கு முன்னாலேயே அந்த மன்மதனின் அழகு முகத்தை கவனிக்கத்தானே நேரம் சரியா இருக்கு. சும்மா துறுதுறுதுறுன்னு. எங்கேயாவது ஒரு இடத்துல நிப்பாரா?...
அதுவும்
'அந்த மெத்தை போடும் தேவன் என்று என்னை சொல்லம்மா'
வரிகளின் போது
இரண்டு கால்முட்டிகளின் மீதும் இரண்டு கைகளை வைத்து, வலது காலை பின் பக்கம் சற்றே உயர்த்தி, ஒரு எந்து எந்தியபடி ஒரு வினாடி வருவாரே!
வேண்டாம் கார்த்திக் சார்.
வெறி ஏறுது. அதுவும் கன்னாபின்னான்னு
ம்..
இது மதுர கானங்கள் திரியாய்ப் போயிடுச்சு.:sad:
http://www.youtube.com/watch?v=Ddujh...yer_detailpage
-
கார்த்திக் சார்!
ஒரு இடத்துல கூட மறக்காம மா.பு அ அ போடுகிறீர்களே! சூப்பர்.:)
-
[கார்த்திக் சார்/வேந்தர் சார்/வாசு சார்/கோபால் சார்
மதியம் முழுவதும் பவர் படுத்தி எடுத்து விட்டது .10 நிமஷங்களுக்கு ஒரு தடவை லோட் ஷெட்டிங் . evening ஒரு reception போய் விட்டு வந்து பார்த்தால் திரி செம ரகளை .
வாசு சார் எங்கிருந்து தான் இந்த டைட்டில் பிடிகிரரோ ஜஸ்ட் ரிலாக்ஸ்
செம கலக்கல்
நீங்கள் ஜனரஞ்சக ராமண்ணா என்றல் கார்த்திக் சார் இன் இளைமை CVR
"நான் நினைத்தேனோ இது எல்லாம் நடக்கும் என்று "
கார்த்திக் திரியை "இரண்டில் ஒன்று " பார்ப்பேன் என்கிறார்
கோபால் சார் இன் சிமேந்திர மத்யமம் ஒரு அபூர்வ ராக பட்டியல்
கீரவாணி மற்றும் சிமேந்திர மத்யமம் பற்றி எல்லாம் நிறைய ஆய்வு
இறுதியாக
",மறந்தே போச்சு ரொம்ப நாளாச்சு மடி மேல் விளையாடி நாம் மனம் போல் உறவாடி '
பாலா மற்றும் வாசுவின் செல்ல ராட்சசி
"மறந்தா போகும் "
http://www.ovguide.com/athaiya-mamiy...50;2க225
இந்த லிங்க் இல் முத்துராமனும் பாரதியும் ஆடி படுகிறார்கள்
அத்தைய மாமியா 1974
ஜெய் உஷா நந்தினி என்று நினவு .கோபு direction
இதில் முத்து மற்றும் பாரதி எங்கு வந்தார்கள் என்று தெரியவில்லை
-
இன்றைய ஸ்பெஷல் (17)
படம்: உனக்கும் வாழ்வு வரும் (1978)
இசை: சங்கர்-கணேஷ்
பாடல் :நான் மெதுவாகத் தொடுகின்றபோது
http://www.inbaminge.com/t/u/Unakkum...rum/folder.jpg
அப்போது மிகவும் பிரபலமான பாடல். ஆனால் இப்போது மறக்கடிக்கப் பட்டு விட்டது. மீண்டும் ஞாபகப்படுத்திக் கொள்வோம்.
http://image1.frequency.com/uri/w354..._thumbnail.jpg
இப்படி ஒரு படம் வந்ததா? வந்ததே. முத்துராமன்,ஸ்ரீப்ரியா ஜோடி. இந்தப் பாடல் மிக மெதுவாக, ஆனால் அழகாக நம் காதுகளுக்குள்ளும், இதயத்துக்குள்ளும் நுழையும். ரொம்ப ஸாப்ட்டான ஒரு பாடல்.
ஜெயச்சந்திரன் மற்றும் சுசீலா கொஞ்சம் கூட அலட்டலில்லாமல் அமைதியாகப் பாடியிருப்பார்கள். ஸ்ரீப்ரியா வாலை சுருட்டிக் கொண்டு அடக்கமாக நடித்திருப்பார்.
இந்தப் படத்தில் நம் ஆச்சி மனோரமா பாடிய ஒரு பிரபலமான பாடல் ஒன்று உண்டு. கல்யாண வைபவங்களில் இப்பாடலைப் போடாமல் இருக்க மாட்டார்கள்.
மஞ்சக் கயிறு
தாலி மஞ்சக் கயிறு
இது மஹாலஷ்மி ராசி
மஞ்சக் கயிறு
என்று தள்ளுவண்டியில் மஞ்சள் தாலிக்கயிறு விற்றுக் கொண்டு ஆச்சி அருமையாகப் பாடியிருந்தார்.
படத்தின் கதை முழுவதுமாக மறந்துவிட்டது. ஆனால் நான் 'மெதுவாகத் தொடுகின்றபோது' பாடல் என்றும் நினைவில் நின்றுவிட்டது.
நான் மெதுவாகத் தொடுகின்றபோது
கண் மயங்காமல் இருப்பாளோ மாது
திருமேனி கொஞ்சம் தழுவாமல் நெஞ்சம்
துயிலாது கண்கள் துயிலாது
நீ மெதுவாகத் தொடுகின்றபோது
கண் மயங்காமல் இருப்பாளோ மாது
திருமேனி கொஞ்சம் தழுவாமல் நெஞ்சம்
துயிலாது கண்கள் துயிலாது
அழகான கன்னங்கள் அரவிந்தக் கிண்ணங்கள்
அடையாளச் சின்னங்கள் கேட்க
சிறு காயங்கள் வரும் மாயங்கள் அதிகாலைதான்
சிறு காயங்கள் வரும் மாயங்கள் அதிகாலைதான்
ஆறுமோ ஆறுமோ
பொன்னாகும் கன்னம் என்னாகும்
நீ மெதுவாகத் தொடுகின்றபோது
கண் மயங்காமல் இருப்பாளோ மாது
திருமேனி கொஞ்சம் தழுவாமல் நெஞ்சம்
துயிலாது கண்கள் துயிலாது
துயிலாது கண்கள் துயிலாது
பூமாலை மாங்கல்யம் பொன்னூஞ்சல் ஊர்கோலம்
கல்யாண வைபோகம் என்று
பூமாலை மாங்கல்யம் பொன்னூஞ்சல் ஊர்கோலம்
கல்யாண வைபோகம் என்று
ஒருநாள் பார்த்து இரு தோள் பார்த்து
நாம் பெற வேண்டும் பூச்சரம்
ஒருநாள் பார்த்து இரு தோள் பார்த்து
நாம் பெற வேண்டும் பூச்சரம்
தைமாதம் அந்த வைபோகம்
நான் மெதுவாகத் தொடுகின்றபோது
கண் மயங்காமல் இருப்பாளோ மாது
திருமேனி கொஞ்சம் தழுவாமல் நெஞ்சம்
துயிலாது கண்கள் துயிலாது
https://www.youtube.com/watch?v=M0uYr8we5rA&feature=player_detailpage
-
கார்த்திக் சார்,
இரண்டில் ஒன்று பாடலின் முதல் சரணம்
பாலுக்குள்ளே வெண்ணை உண்டு நான் அறிவேன்
பாவைக்குள்ளே எண்ணம் உண்டு நீ அறிவாய்
நாளுக்குள்ளே ரெண்டும் உண்டு மூன்றும் உண்டு
உன் நாடகத்தில் காதல் உண்டு நானும் உண்டு
திறந்த கண்ணில் பெண் மறைந்து கொண்டாள்
கண் உள்ளே போன எண்ணம் எங்கும் பறந்து போகாது
-
இனிய காலை வணக்கம் சார் எல்லோருக்கும் 30/6/14
இது எப்படி இருக்கு 1978
காயத்ரி யின் ஓரளவு வெற்றிக்கு பிறகு
சுஜாதாவின் நிறைய கதைகள் புற்றீசல் போல் கிளம்பின
அப்ப சுஜாதா கூட இதை பற்றி எழுதி இருந்தார். " ஒரு கோஷ்டியே என் கதைகளை திரைப்படமாக எடுக்க வேண்டும் என்று அலைந்து கொண்டு இருக்கிறது "
அந்த வகையில் வந்த இரண்டாவது படம்
அனிதா இளம் மனைவி புதினம் திரைப்படத்திற்கு கொடுத்த தலைப்பு
அப்போது ரஜினியால் பிரபலமான "இதெப்படி இருக்கு " வாசகம்
ஒரு அருமையான suspense thriller ஸ்டோரியை எப்படி திரைப்படம் ஆக்க கூடாது என்பதற்கு மிக சிறந்த எடுத்துகாட்டு இந்த திரை படம்
தலைப்பே இந்த குழப்பதின் ஆரம்பம்
மேஜர் சுந்தர்ராஜனின் இளம் இரண்டாம் மனைவி y விஜயா மனைவி மீது எப்போதும் சந்தேகம் . முதல் மனைவியின் மகள் ஸ்ரீதேவி .மேஜர் சுந்தர்ராஜனின் செச்றேடரி சரத்பாபு .ஸ்ரீதேவி சொத்துகள் விஷயமாக
வக்கீல் கணேஷ்இன் (ஜெய் ஷங்கர் ) உதவியை நாடுவார் .
இதற்கு இடையில் மேஜர் சுந்தர்ராஜனே இறந்தது விட்டது போல் கதை செல்லும் .ஆனால் இறந்தது மேஜர் சுந்தர்ராஜன் அல்ல .அவருடைய அல்லக்கை ராமதாஸ் . இறுதியில் ஜெய் ஷங்கர் உண்மையை கண்டு பிடிப்பார்
ஒரு அருமையான பாடல் ஜேசுதாஸ் ஜானகி குரல்களில்
லலலலாஆஆ ...லாலாலலாஆஆ
எங்கும் நிறைந்த ...இயற்கையில் என்ன சுகமோ
பொங்கி வரும் சின்னஞ்சிறு உள்ளங்களில் என்ன கனவோ ...
எண்ணங்களில் என்ன சுவையோ ...(எங்கும்)
பார்வை ஜாடை சொல்ல
இளம் பாவை நாணம் கொள்ள ...(பார்வை )
அங்கு காதல் கோலமிடும்
மனம் தாகம் பாடி வரும் (எங்கும் )
வெண்பனி போலவள் தேஹம் ...
அள்ளும் செங்கனி போலிதழ் மோகம் ...(வெண்பனி )
தேனாக ...லாலாலாலாலா ... லால ... லால
ஆசை தேனாக ...
ஆசை அது ஆறாக ...
வாழ்வில் இன்பம் நூறாக ...
வா ...ம்ம்ம்ம்ம் ...வா ...ம்ம்ம்ம் ...வாஆ ...ம்ம்ம்ம் ...(எங்கும் )
தங்கமும் வைரமும் போலெ ...
தொட்டு தழுவிடும் ஆசைகள் மேலெ ...(தங்கமும் )
சேராத்ஒ ...லாலாலாலாலா ... லால ... லால ...
மோகம் சேராதோ ...
மோகம் அது தீராதோ
தேஹம் கொஞ்சம் வாடாதோ
வா ...ம்ம்ம்ம்ம் ...வா ...ம்ம்ம்ம்ம் ...வாஆ ...ம்ம்ம்ம் ...
எங்கும் நிறைந்த இயற்கையில் என்ன சுகமோ
பொங்கி வரும் சின்னஞ்சிறு எண்ணங்களில் என்ன கனவோ
இந்த பாடலின் சிறப்பு ஒரு இனிமையான ஹம்மிங் மற்றும் ஜேசுதாசின் மனதை கவரும் குரல் இளையராஜாவின் ஆரம்ப கால மெலடி
http://www.youtube.com/embed/dtv165n4KlI
-
வாசு சார்
unakkum valvu varum
சூப்பர் பாட்டு
வழக்கம் போல சிலோன் ரேடியோ ஹிட்
இந்த பட டைரக்டர் நடன இயக்குனுர் புலியூர் சரோஜாவின் கணவர் g ஸ்ரீனிவாசன் என்று நினவு .
-
வணக்கம் கிருஷ்ணா சார்,
எங்கும் நிறைந்த கிருஷ்ணாவின்
பதிவுகளில் என்ன சுகமோ
நீங்கள் சொன்னது வாஸ்தவம். இப்படத்தைக் கெடுத்து பாழ் பண்ணி விட்டார்கள். கிடைத்தது அருமையான பாடல் மட்டுமே.
https://lh5.ggpht.com/CC2jOTq6yJaeol...Y7MZME07LIka4A