-
எம்.ஜி.ஆரின் படங்கள்வசூலை வாரிக்குவித்ததால் அவர் என்றென்றும் தயாரிப்பாளர்களின் விருப்பமாக இருந்தார். அநேகமாக அவர்தான் வெள்ளித்திரையில் ஜொலித்த தங்க நட்சத்திரம்; எம்.ஜி.ஆர். படங்களின் அழகியலோ கலையம்சங்களோ யாராலும் பாராட்டப்பட்டதில்லை.
அவற்றை விவாதப் பொருளாகவும் எவரும் பேசிக்கொள்வதில்லை. அவர் படத்தின் வாள்வீச்சுகள், சண்டைக்காட்சிகள், அழகுப் பதுமைகளாக வந்த நடிகைகளோடு அவர் நடத்திய காதல் விளையாடல்கள் என்பன திரையரங்கினுள் ரசிகனை ஆட்டம்போட வைத்ததென்றால், திரைக்கு வெளியே அவர் பாடல்கள் ஒவ்வொருவரையும் கிறங்கடித்தன. ஆகவே நம் கண்களிலிருந்தும் மனதிலிருந்தும் விலகிச்செல்ல முடியாத ஒரு நெருக்கத்தை அவர் பராமரித்துக்கொண்டார்.
எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகன் நான். அநேகமாக எங்கள் ஜமா-அத் பையன்களும் இளைஞர்களும் அப்படித்தான் இருந்தோம். மற்ற தமிழ் நடிகர்களைக் காட்டிலும் எம்.ஜி.ஆர். முஸ்லிம் கதாபாத்திரம் ஏற்று நடித்த படங்கள் அநேகம். அதிலும் அவருடைய ஆரம்பக் காலப் படங்கள் அவரின் புகழைப் பரப்பிச்செல்ல அவருக்கு ரொம்பவும் கைகொடுத்தன. முதல் வண்ணப்படமான அலிபாபாவும் நாற்பது திருடர்களும், பாக்தாத் திருடன், குலேபகாவலி, ராஜா தேசிங்கு, சிரித்து வாழ வேண்டும் அவற்றுள் முக்கியமானவை. இந்த ஒவ்வொரு படமும் திரும்பத் திரும்பப் பார்க்கத் தூண்டியவை.
முஸ்லிம் ரசிகர்களின் இதயக்கனி
களக்காடு ஆற்றங்கரையோரமாக அமைந்திருந்த லெப்பைநயினார் பள்ளிவாசல் தர்காவில் சந்தனக்கூடு திருவிழா நடக்கும்போது சாதிசமய பேதம் இல்லாமல் ஜனங்கள் திரண்டிருப்பார்கள். திருவிழாவின் முதல் நாள் முக்கூடல் ராமகிருஷ்ணா பீடி கம்பெனிக்காரர்கள் ஒரு அகலமான திரையைக் கட்டுவார்கள்; அதில் குலேபகாவலியைத் திரையிடுவார்கள்; இப்படியாகவே குறைந்தபட்சம் பத்து ஆண்டுகளாவது அதை மட்டுமே படமாகக் காட்டினார்கள்;
அப்படியும் கூட்டம் நெரித்துக்கொண்டுதான் இருக்கும். இதெல்லாம் போக எங்களூர் பாக்கியலெட்சுமி தியேட்டரிலும் ஒன்றரை ஆண்டுகளுக்கு ஒருமுறையாவது அதைத் திரையிடுவார்கள்; காசு கொடுக்காமல் ஓசியில் பார்த்த அதே ரசிக மகாஜனம் தியேட்டரிலும் அடிபிடியான கூட்டத்தை உருவாக்கிக்கொண்டு தள்ளுமுள்ளு செய்தவர்களாக, காசு கொடுத்துப் பார்க்க முனைந்ததும் விந்தையான விந்தைதான். எம்.ஜி.ஆரின் கலைநோக்கை இதைக் கொண்டு ஆராய்வதே சிறப்பானது.
இப்போது இரவு நேரமானால் எஃப்.எம். அலைவரிசைகளில் அவருடைய படப் பாடல்கள் கேட்டுத் தூங்குவது பல்லாயிரக் கணக்கான ரசிகர்களின் வழக்கம். அதில் நானும் ஒருவன். வாழ்வின் துயரங்களையும் கவலைகளையும் உடனடியாக மாற்றிப்போடும் நுட்பங்களைக் கொண்டவை அவருடைய படப் பாடல்கள். எம்.ஜி.ஆரின் ஆளுமை அவருடைய பாடல்கள் சார்ந்தும், இதர பங்கேற்பாளர்களின் தொழில்நுட்ப அறிவை உச்சபட்ச அளவில் வசப்படுத்திப் படங்களில் பயன்படுத்தியதை ஒட்டியும் உருவானவை என்று சொல்லலாம். அதனால்தான் அவர் பலதரப்பட்ட ரசிகர்களையும் கவர முடிந்தது.
-
1954ல் மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்ட படம் 'கூண்டுக்குளி'. இதில் எம்ஜியார். சிவாஜி இருவருமே நடித்திருக்கிறார்கள். எனவே மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம். இப்படத்திற்கான வசனத்தை விந்தன் எழுதியிருந்தார். அத்துடன் அருமையான சில பாடல்களும் இயற்றியிருந்தார். சரியா, தப்பா? என்கிற பாடல் மிகவும் பிரபலமாயிற்று
'கொஞ்சம் கிளியான பெண்ணை
கூண்டுக்கிளியாக்கிவிட்டு,
கெட்டி மேளம் கொட்டுவது
சரியா, தப்பா?
காதல் செய்த குற்றம்
எனது கண்கள் செய்த குற்றமென்றால்
கண்ணைப்படைத்த கடவுள் செய்கை
சரியா, தப்பா?
என பற்பல சரியா, தப்பா கேள்விகள் போட்டு எழுதப்பட்ட இப்பாடலை டி எம் சௌந்திரராஜன் வெகு அருமையாகப் பாடியிருந்தார்.
'குலேபகாவலி' என்றொரு பிரம்மாண்டமான படத்தைத் தயாரித்தார்கள். ஆர் ஆர் பிக்சர்சார். இப்படம் 1955ல் வெளி வந்தது. இப்படத்திற்குச் சில பாடல்களை எழுதியிருந்தார் விந்தன். அதில் குறிப்பாக ஒரு பாடல் மாபெரும் வெற்றியடைந்து மிகவும் பிரபலமாயிற்று. இப்பாடல் இன்று வரையிலும் பல்வேறு மேடைகளில் பாடப்பட்டும் வருகிறது.
'மயக்கும் மாலைப் பொழுதே நீ போ, போ
இனிக்கும் இன்ப இரவே நீ வா வா
இன்னலைத் தீர்க்க வா...
விஸ்வநாதன் - ராமமூர்த்தி இசை. மெல்லிசை மன்னர்கள் என்கிற பட்டம் பின்னாளில் இவர்களுக்குக் கிடைக்க ஆதாரமாக அமைந்த மிக அருமையான பாடல்.
-
1955- gulebhagavali review - the hindu
M. G. Ramachandran, T. R. Rajakumari, G. Varalakshmi, Rajasulochana, J. P. Chandra Babu, E.V. Saroja, S. D. Subbulakshmi, K. A. Thangavelu, E. R. Sahadevan, Sayeeram, A. Karunanidhi, Aadhilakshmi, Narayana Pillai, T. K. Ramarajan, Saraswathi and Venubai
Ramanna filmed Gulebakavali, a familiar Arabian Nights tale, with M. G. Ramachandran, T. R. Rajakumari, Rajasulochana, G. Varalakshmi, S. D. Subbulakshmi and E. V. Saroja, supported by K. A. Thangavelu, J. P. Chandra Babu, E. R. Sahadevan and A. Karunanidhi. Gulebakavali was a mass entertainer with melodious song and dance numbers, well-orchestrated fight sequences (the one between MGR and a ferocious tiger was much talked about), an interesting storyline and T. R. Rajakumari providing the glamour quotient (she was then 33). Gul-e-Bakavali has its origin in the famous Persian classic ‘One Thousand Nights and One Night' (‘Alf Leila Wah Leila'). This story is also found in the famed Telugu folktale collection ‘Kasi Majili Kathalu” by Madhira Subbaraya Deekshithulu. Not surprisingly, the story has been made into a movie in India several times. The first movie version was made in 1924 as a silent film by Kohinoor Films, Bombay. Directed by Kanthilal Rathod, it featured well-known stars of that period, Jamuna and Sabitha Devi. It was again made as a silent film in 1930. Then followed four films in Hindi, in 1932, 1947, 1956 and 1963.
It was made in Telugu in 1938 as Gulebakavali directed by Kallakoori Sathasiva Rao with the noted multilingual star B. Jayamma of Karnataka as the heroine. N. T. Rama Rao made another version in Telugu in the 1960s as Gulebakavali Katha.
The first Tamil version was produced in 1935 by S. Soundararajan of Tamil Nadu Talkies with V. A. Chellappa and T. P. Rajalakshmi playing the lead.
Gulebakavali was written by the noted writer of the day Thanjai Ramaiah Das. He also penned the lyrics and the high-flown dialogue with its underlying social concern and it was effectively delivered by MGR.
The music was composed by the up-and-coming duo Viswanathan-Ramamurthy. The film had many melodious songs of which the biggest hit was ‘Mayakkum maalai pozhudhey….' An interesting but not much known fact about this hit — K. V. Mahadevan who was the composer for Goondukili created this catchy tune. Ramanna struggling to finish the MGR-Sivaji Ganesan starrer, decided not to picturise the song for many reasons. He introduced it in Gulebakavali which was sung offscreen by Jikki and A. M. Raja, and picturised it on Varalakshmi and MGR. Ironically the credit went to Viswanathan-Ramamurthy. Rajakumari, a Carnatic musician, had always sung her songs ever since her debut in the early 1940s and rendered many hit numbers in films such as Chandralekha, Manonmani and Kubera Kuchela. But in Gulebakavali, she sang in borrowed voice (P. Leela) much to the disappointment of her fans. As for the story of Gulebakavali… a king has two wives. He banishes his first wife (SDS) as an astrologer told him that he would lose his vision because of her son (MGR). The mother and son live in the woods and when he meets his father without knowing his identity, the king loses his sight. When the son gets to know about the sad tale from his mother, he sets out to bring a rare flower from Bakavali, which would restore the king's sight.
To achieve it, he undergoes many adventures — enters into a debate with a queen (Varalakshmi) and wins the battle of wits, challenges a woman (Rajakumari) held captive by a crook (Thangavelu) in a fake dice contest, and rescues a slave dancer (Rajasulochana) of a tribal chief. The hero wins them all and succeeds in getting the flower along with the three women who turn out to be princesses and siblings! Meanwhile, his stepbrothers try to steal the flower, but are exposed. Besides Rajakumari, Varalakshmi and Rajasulochana dance and so do E.V. Saroja and Chandra Babu. Thangavelu as the dice manipulator provides moments of fun.
Remembered for the excellent onscreen narration by Ramanna, tuneful music and impressive song and dance numbers.
-
குலோபகாவலி/ அலிபாவும் 40 திருடர்களும்/
பாக்தாத் திருடன்/ ராஜா தேசிங்கு என்கிற
இந்த நான்கு படங்களிலும்
இஸ்லாமியப் பெயர்களையும், அடையாளங்களையும் தாங்கி
பாத்திரத்தோடு அவர் ஒன்றி
நடித்திருப்பது கவனிக்கத் தக்கதாக இருக்கும்.
அவர் தொப்பி அணியும் அழகே அலாதியாக இருக்கும்.
இஸ்லாத்தை மாசுபடுத்தாத வகையில்
கவனமும் செய்திருப்பார்..
குறிப்பாய் ஒன்றைச் சொல்லத் தோன்றுகிறது
குலோபகாவலி படத்தின் துவக்கம்
ஃபஜருக்கு (அதிகாலை நேரத் தொழுகை) பாங்கு சொல்வதாக இருக்கும்.
தமிழில் இப்படி ஃபஜரின் பாங்கோசையோடு துவங்கும்
இன்னொரு படம் பிற்காலத்தில் வந்திருக்கிறது. அது
மகேந்திரனின் ‘நெஞ்சத்தைக் கிள்ளாதே’
மலையாளத்தில் கூட அப்படியோர் படம் பார்த்திருக்கிறேன்…
பெயர்தான் நினைவில் இல்லை.
சினிமாவில்,
எம்.ஜி.ஆர். நடித்துக் கொண்டிருந்த காலத்திலும்
அதற்குப் பிறகான காலத்திலும் பல நடிகர்கள்
இஸ்லாமிய வேடம் ஏற்றிருக்கிறார்கள் என்றாலும்
எம்.ஜி.ஆர். அளவுக்கு இஸ்லாமியப் பாத்திரங்களோடு
ஒன்றிப் போனார்கள் என சொல்ல முடியாது.
எம்.ஜி.ஆர். நடித்த அந்த நான்கு படங்களில்
ராஜா தேசிங்கு நீங்களாக
மற்ற மூன்றும்
வெற்றிப் பெற்ற ஆங்கில படங்களை தழுவியது.
ராஜா தேசிங்கு…
செஞ்சியை ஆண்ட ஓர் நவாபுவின்
அவரது மறைமுக மனைவிகளின்….
அவர்களது பிள்ளைகளின்…
வரலாற்றுச் சான்றுகளை ஒட்டிய திரைக்கதை!
courtesy-abhidheen-net
-
courtesy- rudhran - net
மாறும் ரசனை....
மீசையும் கொஞ்சமாய் தாடியும் வளர்த்து, தோளில் ஒரு ஜோல்னா பையுடன் ருஷ்ய-ஃப்ரென்ச் எழுத்தாளர்களை மட்டுமே படிப்பதாய் ஒரு பாவ்லா/ பாவனை காட்டிக் கொண்டிருந்த வயதுகளில் எனக்கு எம்ஜியார் பிடிக்கவில்லை – நடிகராக மட்டுமல்ல, அரசியல் தலைவராகவும்.
ஆனால் அப்புறம் எனக்கு எம்ஜியார் பிடித்தது...ரொம்ப வருடங்களுக்குப் பிறகு, ஐந்திலிருந்து பத்து வயது வரை பிடித்த அளவுக்கு. நான் படிக்க வீட்டிலிருந்த சின்ன மேஜையின் மேல் எம்ஜியார் படம் மாட்டி வைத்திருந்தவன் நான். எம்ஜியார் ஏன் பிடிக்கும் என்று கேட்டால்,”பிடிக்கும்” என்று மட்டுமே பதில் தெரிந்திருந்த அறுபதுகளின் முற்பகுதி அது. எழுபதுகளில் அறிவுஜீவித்வ ஒப்பனை. பிறகு ஒவ்வொரு வேடமாய் மாறி நடிப்பு மட்டுமல்ல நாடகங்களும் சலித்தபின், என் ரசனை எளிமையான நேர்மையான ஒன்றாய் மாறியிருக்கிறது (என்று இப்போது கருதுகிறேன்).
இப்போதெல்லாம் எனக்கு எம்ஜியார் பாடல்களைக் கேட்க மட்டுமல்ல பார்க்கவும் பிடித்திருக்கிறது. ஐந்து ஆண்டுகளுக்கு முன் கூட இதை நான் இப்படி வெளிப்பையாகச் சொல்லாமல் டிஎம்எஸ்க்காக, கண்ணதாசனுக்காக, விஸ்வநாதனுக்காக என்றெல்லாம் என்னிடமேயும் காரணம் சொல்லித்தான் எம்ஜியார் பாடல்களைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.
நான் சொல்லிக்கொண்டிருந்த காரணங்களுக்காகக் கேட்கலாம் பார்க்க முடியாது, பார்ப்பது எம்ஜியாருக்காகத்தான்!
பதின்வயதுகளுக்கு முன் ஏனென்று தெரியாமல் எனக்குப் பிடித்த எம்ஜியார் முகம், ஐம்பதுகளின் பிற்பகுதியில் அடிக்கடி தொலைகாட்சியில் தென்பட்டதாலோ மீண்டும் பிடித்திருக்கிறது. என் வயதில் எம்ஜியார் ஆடிய ஆட்டங்கள் என்னுள் வியப்பை மேலிட வைக்கின்றன.. ஒரு வேளை அது வயிற்றெரிச்சலோ என்றும் யோசிக்க விருப்பமில்லை1
இப்போது ஏன், எது பிடிக்கிறது? “தொட்டு விடத் தொட்டுவிடத் தொடரும்” என்ற டூயட்டானாலும், “உன்னையறிந்தால்..” எனும் ஸோலோவானாலும், எம்ஜியாருக்கென்று ஒரு பாணி புரிகிறது. பல் தெரியச் சிரித்துக்கொண்டே பாடுவதாய் வாயசைப்பதும், க்ளோஸப் காட்சிகளில் காமெரா நோக்கி உற்றுப்பார்த்து, கண்கள் குறுக்கிச் சிரிப்பதும் அந்த நேரத்து ஸென் ZEN. அப்போது டிஎம்எஸ், கண்ணதாசன், விஸ்வநாதன் மட்டுமல்ல, உடன் ஒலிக்கும் சுசீலா குரலும் உடன் நடிக்கும் நாயகியின் முகமும்கூட மனத்துள் வந்து விடாது. முழுமையாய் அந்தக் கணத்தை ஆக்ரமிப்பதே எம்ஜியாரின் சாகசம்.
எம்ஜியாருக்கு நடிப்பு வராது, சும்மா கதாநாயகியாக இளம் வயதுப் பெண்களை வைத்து ஒப்பேற்றினார், அழத்தெரியாது, வெவ்வேறு பாத்திரங்களிலும் வெவ்வேறு ஒப்பனைகளிலும் தோன்ற மாட்டார், தன் வயதைக் காட்டும்படி காட்சி வைக்க மாட்டார் என்றெல்லாம் நாற்பதாண்டுகளுக்கு முன் நானும் எல்லாரும் சொன்னதையே சொல்லிக்கொண்டிருந்தவன்தான், இன்று புரிகிறது எம்ஜியாரின் வெற்றி எது, எப்படியென்று.
கண்களை நேரே பார்க்கவும், அப்போது மனத்திலும் முகத்திலும் இருக்கும் புன்னகையை விழியிலும் கொண்டு வந்ததுமே அவரது வெற்றி. இதைத் திட்டமிட்டுச் செய்திருந்தாலும் அது ப்ரம்மாண்டம்தான்!
ஒன்று பிடிக்காததால் இன்னொன்றைத் தேர்ந்தெடுக்கும் நிலை அல்ல இது, ஒன்று பிடித்திருக்கிறது என்றால் அதை வெளிப்படையாய்ச் சப்தமாய் அறிவிக்கும் நேர்மை இது. வயதும் வசதியும் தரும் சௌகரியம்.
-
எண்ணத்தில் நலம் இருந்தால் இன்பமே எல்லோர்க்கும் !
அன்புள்ள தோழர்களே ! அஸ்ஸலாமு அலைக்கும் !
ஒன்றே சொல்வான் நன்றே செய்வான்
அவனே அப்துல் ரஹ்மானாம்
ஆண்டான் இல்லை அடிமை இல்லை
எனக்கு நானே எஜமானாம் !
ஆடும் நேரத்தில் ஆடி பாடுங்கள்
ஆனாலும் உழைத்தே வாழுங்கள் !
வாழ்வில் நாட்டம் ஓய்வில் ஆட்டம்
இரண்டும் உலகில் தேவை
ஆடும் போதும் நேர்மை வேண்டும்
என்றோர் கொள்கை தேவை !
யாரும் அறியாமல் செய்யும் தவறென்று
ஏமாற்றும் நினைவை மாற்றுங்கள் !
ஒன்றில் ஒன்றாய் எங்கும் நின்றான்
ஒருவன் அறிவான் எல்லாம்
காலம் பார்த்து நேரம் பார்த்து
அவனே தீர்ப்பு சொல்வான் !
உள்ளகம் ஒன்றாக எதிரே நின்றாலும்
அஞ்சாமல் கருத்தை கூறுங்கள்
வந்தான் வாழ்ந்தான் போனான்
என்றா உலகம் நினைக்க வேண்டும் ?
சொன்னான் செய்தான் ! என்றே நாளும்
ஊரார் சொல்ல வேண்டும் !!!
ஒன்றே சொல்வான் நன்றே செய்வான்
அவனே அப்துல் ரஹ்மானாம்
ஆண்டான் இல்லை அடிமை இல்லை
எனக்கு நானே எஜமானாம் !
-
Dear Friends
very shortly .............
http://i60.tinypic.com/eqwi81.jpg
-
http://i57.tinypic.com/11c8cw9.jpg
MGR shared a good on-screen Chemistry with both Saroja Devi and Jayalalithaa. He was paired up with Saroja Devi in 27 films and with Jayalalithaa in 28.
Courtesy: Deccan Chronicle
-
http://i57.tinypic.com/2870j2x.jpg
MGR, who was known for his philanthropy, was the first actor to donate 75,000 rs as war fund during the Indo – China war in 1962.
Courtesy: Deccan Chronicle
-
http://i58.tinypic.com/osv7fs.jpg
The famous fur Cap that he wore was apparently gifted by a poor Muslim man while MGR was campaigning during the Indo-China war.
Courtesy: Deccan Chronicle