முற்பகல் செய்யின் பிற்பகல்? வேதனையில் தவிக்கும் நடிகை!
'மருந்தில்லாத தீக்குச்சியா இருந்தாலும், எறும்பு நசுக்க உதவுமே' என்ற எண்ணம் இல்லாமல் போனதால், இப்போது வருந்திக் கொண்டிருக்கிறார் நயன்தாரா! (அட, நயன்தாரா இல்லாம நியூஸ் எழுத முடியாதா என்று வாசகர்கள் ஆத்திரப்பட வேண்டாம்! காய்க்கிற மரம்தானே, கல்லடி படட்டும்)
'திருவிளையாடல்' கதையை வைத்துக் கொண்டு கோடம்பாக்கம் முழுவதும் சுற்றித்திரிந்தார் பூபதி பாண்டியன். அப்போதெல்லாம் இவரை சரியாக அங்கீகரிக்கவில்லை பல ஹீரோக்களும், சில ஹீரோயின்களும். அதில் ஒருவர் நம்ம நயன்தாரா! எப்படியோ தனுஷ் கதை கேட்டார். கேட்டதும் பிடித்துப் போக உடனே உருவானது திருவிளையாடல். சூப்பர் ஹிட்! அதன்பின் பூபதி பாண்டியனின் ராஜ்ஜியத்தில் உய்யலாலாதான். முன்பு தன்னை புறக்கணித்தவர்களை தவிர்த்துவிட நினைத்தார். திருவிளையாடல் ஹிட்டுக்கு பிறகு, 'சிலர் நான் ஃபிரீயாத்தான் இருக்கேன். கால்ஷீட் வேணுமா' என்று கேட்காத குறைதான்!
தற்போது ஜெயம் ரவி நடிக்கும் புதிய படம் ஒன்றை இயக்கப் போகிறார் பூபதி பாண்டியன். இவருக்கு ஜோடியாக யாரை போடுவது என்று லிஸ்ட் போடப்பட்டது. அதில் நயன்தாராவின் பெயரும் இருக்க, அதை மட்டும் தனது சிவப்பு இங்க்கினால் அடித்தாராம் பூபதி பாண்டியன். விஷயத்தை கேள்விப்பட்டு வேதனைப்படுகிறார் நயன்.
http://www.tamilcinema.com/CINENEWS/...ry/290109d.asp
