தமிழை ஏழு வகையாகப் பிரித்து படக்காட்சிகள் அமைத்திருப்பது மிகவும் அருமை. ஏழு அல்ல எழுபது வகையாகப் பிரித்தாலும் அதற்கு நடிகர்திலகத்தின் படக்காட்சிகளை விட்டால் வேறு வழியிலை.
Printable View
தமிழை ஏழு வகையாகப் பிரித்து படக்காட்சிகள் அமைத்திருப்பது மிகவும் அருமை. ஏழு அல்ல எழுபது வகையாகப் பிரித்தாலும் அதற்கு நடிகர்திலகத்தின் படக்காட்சிகளை விட்டால் வேறு வழியிலை.
:clap:Quote:
Originally Posted by Murali Srinivas
50 golden years have gone and rangan continues to cast his spell among the audience. Over the years the film has sort of achieved a cult status, like many other NT films and even if you watch the film today, it strikes a chord.
What an actor! What a team!! What a film!!!
:notworthy:
திருவரங்கன் அருளைப் பெற்ற அந்த ரங்கனைப் பற்றிய இந்த ரங்கன் சாரின் கருத்துக்களை முற்றிலும் ஆமோதிக்கிறேன். ரங்கன் என்ற பெயர் காலத்தால் அழிக்க முடியாது. படிக்காத மேதை திரைப்படம் தனியார் தொலைக்காட்சிகள் வருவதற்கு முன்னர், அதாவது 1990 ஆண்டுக்கு முந்தைய காலத்தில், சென்னைத் தொலைக் காட்சியில் ஒரு ஞாயிறு ஒளிபரப்பப் பட்டது. அன்று மாலை திரைப்படத்தைப் பார்க்காமல் நண்பர்களுடன் சென்னையில் பல தெருக்களில் வலம் வந்தோம். எந்த வீட்டில் காதைக் கொடுத்தாலும் ரங்கன் குரல் ஒலித்துக் கொண்டிருந்தது. அன்று இரவு பல புதிய இளைய தலைமுறையினர் அப்படத்தைப் பற்றிப் பேசிக் கொண்டதையும் பலர் தம்மை மறந்து கண்ணீர் விட்டதையும் காண நேர்ந்தது. அதன் பிறகு சில நாட்களில் அன்றைய பிரபல நட்சத்திரங்கள் பலர் பத்திரிகைகளில் இப்படத்தைப் பற்றிப் பேசியதும் நினைவுக்கு வருகிறது.
" உள்ளதைச் சொல்வேன், சொன்னதைச் செய்வேன், வேறொன்றும் தெரியாது"
இது நடிகர் திலகத்திற்கு வார்த்தைக்கு வார்த்தை பொருந்தும் வரிகள்.
ராகவேந்திரன்
தன்னுடைய படங்களைப் பற்றிய நடிகர் திலகத்தின் கருத்துக்கள் (தொடர்ச்சி)
'வெள்ளை ரோஜா' பிடித்திருக்கிறதா
"அந்த ரோஜாவை மக்கள் மார்பிலே எப்போதும் அணிந்து கொள்ளலாம்"
(தினத்தந்தி 05.08.2001 ஞாயிறு மலர்)
Quote:
AN INVITATION
------------ --------- --
9TH Nadigar Thilagam SIVAJI GANESAN MEMORIAL YEAR FUNCTION
------------ --------- --------- --------- --------- --------- --------- --------- ----
The President and the Members of the Management Council of Sivaji Ganesan Cultural Society, Malaysia (SGCSM) hereby cordially invites you and your family to the above event.
Date: 23 July, 2010
Venue: Tan Sri KR Soma Auditorium, Wisma Tun Sambanthan, KL
Time: 7.30pm
Tentative Program
------------ --------- -----
*7.30 pm - Welcome speech by Organizing Chairman
*A special talk about Sivaji Ganesan by Rajendran - President , Tamil Writers Association, Malaysia
*Music performance ( popular songs from movies of Sivaji Ganesan)
*Q& A about Sivaji Ganesan ( Attractive prizes to be won)
*Thaeru Kuthu by Veersingam and Group ( Sathiavan Savithiri) from film Navarathri
Close
Chief Guest of Honor: Dato' AK NATHAN
Special Guest: Magalir Thilagam Annai Ratnavalli Vijeyaraj
Light Refreshments and snacks shall be served to all patrons.
Admission: FREE
All those who have passion for Nadigar Thilagam Sivaji Ganesan please attend along with your family members and friends and relatives.
Yours Sincerely,
Eashvara Lingam ( for and on behalf of SGCSM )
for info: call 016-6880455
நீண்ட நாட்களாய் இந்தப்பக்கம் வர இயலாச் சூழல். நலமா நண்பர்களே..
பல பக்கங்கள் வளர்ந்துவிட்ட திரியை வாசிக்கத் தொடங்கிவிட்டேன்.
ஏழுவகை தமிழுக்கும் இலக்கணமாய் எடுத்துக்காட்டாய் விளங்கும் நம் எட்டாவது அதிசயம் பற்றிப் பகிர்ந்த அன்பின் பம்மலாருக்கு நன்றி.
கோவை மாநாட்டில் ஒரு ஜெர்மன் அறிஞர் சொன்னது நினைவுக்கு வந்தது - அவர் நம் அண்ணலின் தமிழ்ப் பேச்சைக் கேட்டுக் கேட்டு தமிழ்க்காதல் வளர்த்தவர்.
வருக காவேரி கண்ணன் அவர்களே! மீண்டும் நமது நடிகர் திலகத்தைப் பற்றி உங்கள் அழகு தமிழில் உரையாட வாருங்கள்.
சுவாமி,
படிக்காத மேதையின் சாதனை பதிவிற்காக காத்திருக்கிறோம்.
அன்புடன்
நடிகர்திலகம் அவர்கள் திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர்-அகிலான்டேஸ்வரி திருக்கோவிலுக்கு கானிக்கையாக கொடுத்த சாந்தி என்ற யானை நோய்வாய்ப்பட்டிருப்பதாகவும் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவதாகவும் படித்தேன்.அந்த யானை பூரன நலமடைய இறைவனை பிரார்திக்கிறேன்.
இளைய திலகம் பிரபு அவர்கள் கும்பகோனம் சென்றதாகவும் அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்ப்பு அளிக்கப்பட்டதாகவும்,அங்கு ரசிகர்களின் மத்தியில் பேசிய பிரபு அவர்கள் கும்பகோனத்தில் நடிகர்திலகத்தின் சிலையை வைக்க அரசுக்கு கோரிக்கை விடுத்ததாகவும் படித்தேன்.இதை பற்றிய முழு விவரத்தை அளிக்குமாறு நமது ஹப்பர்களை கேட்டுகொள்கிறேன்
வெகு நாட்களுக்குப் பிறகு நதியினில் வெள்ளம் கரையினில் நெருப்பு பாடல் காட்சி பார்க்க நேர்ந்தது. அந்த முகம், அந்த கண்கள், சொல்லவும் முடியாமல், மறைக்கவும் முடியாமல் மனம் தவிப்பதை அந்த நடையின் மூலமாகவும் உடல் மொழியின் மூலமாகவும் எவ்வளவு அழகாக வெளிப்படுத்துகிறார். அந்த பாத்திரதிற்கேற்ற உடல்வாகு!
கண்ணதாசனும் விஸ்வநாதனும் சேர்ந்து கைகொடுப்பது காட்சிக்கு கூடுதல் பலம்.
ஒரு நீதி கூண்டில் நின்றது
ஒரு நீதி சாட்சி சொன்னது
ஒரு நீதி தெய்வமானது
இதில் தர்மம் எங்கே போனது
இதை தவிர போனஸ்-ஆக தேவனே என்னை பாருங்கள், ஆறு மனமே ஆறு, சட்டி சுட்டதடா போன்றவையும். நன்றி இசை அருவி.
அன்புடன்
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 57
கே: நடிப்புக் கல்லூரி ஒன்றினை நிறுவி அதற்கு சிவாஜியை முதல்வராகப் போட்டால் எப்படியிருக்கும்? (வி.தர்மராஜன், செங்கோட்டை)
ப: அவரே ஒரு நடிப்புக் கல்லூரி ஆயிற்றே!
(ஆதாரம் : குங்குமம், 23.12.1979)
அன்புடன்,
பம்மலார்.