Because you are not old enough ! :lol:
Printable View
அந்தக் காலம்னு எழுதினீங்களோ பொழைச்சீங்களோ... தப்பிச்சிட்டீங்க..Quote:
காதலன் மீது காதலைக் கொண்ட காரிகை (பின்ன காதலனோட மாமாவையா லவ் பண்ணுவா) அவன் வராமல் எவ்வ்ளோ தவிக்கறா..
மையம் திரியில் எட்டாயிரம் பதிவுகளைக் கடந்தமைக்கு
சின்னக்கண்ணன் சாருக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.
அன்புடன் கோபு.
Mr CK
Congrats for reaching another milestone. Do post in NT's Thread also.
திரைப்படம்: சந்திரோதயம் (1966)
குரல்: டி.எம். சௌந்தரராஜன் & பி. சுசீலா
வரிகள்: வாலி
இசை: எம்.எஸ். விச்வநாதன்
நடிப்பு: I wonder who! :)
https://www.youtube.com/watch?v=9X2eO2yWTtk
சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ
செந்தாமரை இரு கண்ணானதோ
சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ
செந்தாமரை இரு கண்ணானதோ
பொன்னோவியம் என்று பேரானதோ
என் வாசல் வழியாக வலம் வந்ததோ
சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ
செந்தாமரை இரு கண்ணானதோ
குளிர் காற்று கிள்ளாத மலரல்லவோ
கிளி வந்து கொத்தாத கனியல்லவோ
குளிர் காற்று கிள்ளாத மலரல்லவோ
கிளி வந்து கொத்தாத கனியல்லவோ
நிழல் மேகம் தழுவாத நிலவல்லவோ
நெஞ்சோடு நீ சேர்த்த பொருளல்லவோ
எந்நாளும் பிரியாத உறவல்லவோ
இளம் சூரியன் உந்தன் வடிவானதோ
செவ்வானமே உந்தன் நிறமானதோ
பொன் மாளிகை உந்தன் மனமானதோ
என் காதல் உயிர் வாழ இடம் தந்ததோ
இளம் சூரியன் உந்தன் வடிவானதோ
செவ்வானமே உந்தன் நிறமானதோ
முத்தாரம் சிரிக்கின்ற சிரிப்பல்லவோ
முழு நெஞ்சைத் தொடுகின்ற நெருப்பல்லவோ
முத்தாரம் சிரிக்கின்ற சிரிப்பல்லவோ
முழு நெஞ்சைத் தொடுகின்ற நெருப்பல்லவோ
சங்கீதம் பொழிகின்ற மொழியல்லவோ
சந்தோஷம் வருகின்ற வழியல்லவோ
என் கோயில் குடி கொண்ட சிலையல்லவோ
சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ
செந்தாமரை இரு கண்ணானதோ
அலையோடு பிறவாத கடல் இல்லையே
நிழலோடு நடக்காத உடல் இல்லையே
துடிக்காத இமையோடு விழியில்லையே
துணையோடு சேராத இனமில்லையே
என் மேனி உனதன்றி எனதில்லையே
எழிலோடு எழில் சேர்த்து இமை மூடவோ
எனக்கென்ற சுகம் வாங்க துணை தேடவோ
மலர்மேனி தனைக் கண்டு மகிழ்ந்தாடவோ
மணக்கின்ற தமிழ் மண்ணில் விளையாடவோ
கண் ஜாடை கவி சொல்ல இசை பாடவோ
இளம் சூரியன் உந்தன் வடிவானதோ
செவ்வானமே உந்தன் நிறமானதோ
சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ
செந்தாமரை இரு கண்ணானதோ...
Vaali's original version of the last charanam was as follows:
இதழோடு இதழ் வைத்து இமை மூடவோ
இருக்கின்ற சுகம் வாங்கத் தடை போடவோ
மடி மீது தலை வைத்து இளைப்பாறவோ
முகத்தோடு முகம் வைத்து முத்தாரவோ
கண் ஜாடை கவி சொல்ல இசை பாடவோ...
The sensor board did not like those lines; so Vaali rewrote the charanam as:
எழிலோடு எழில் சேர்த்து இமை மூடவோ
எனக்கென்று சுகம் வாஙகத் துணை தேடவோ
மலர்மேனி தனைக் கண்டு மகிழ்ந்தாடவோ
மணக்கின்ற தமிழ் மண்ணில் விளையாடவோ
கண் ஜாடை கவி சொல்ல இசை பாடவோ...
சின்னக்கண்ணன் சார்,
எங்க வீட்டுப் பெண் திரைப்படத்தில் ஏ.வி.எம்.ராஜனுடன்
நடித்திருப்பவர் பணமா பாசமா திரைப்படத்தில் நடித்த விஜய நிர்மலா.
கோபு.
இந்த மய்யத்தில் தனக்கென்று ஒரு எழுத்துப் பாணியைக் கைக்கொண்டு மிக அருமையாக, அற்புதமாக "எட்டாயிரம்" பதிவுகளைத் தந்து தொடர்ந்து முன்னேறிக்கொண்டு இருக்கும் இனிய நண்பர் "சின்னக்கண்ணன்" அவர்களுக்கு இதயம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்.
குறுகிய காலத்தில் எட்டாயிரம் பதிவுகளை எட்டுவது என்பது ஒரு அரிய சாதனைதான் என்பதில் ஐயமில்லை.
நீங்கள் மதுரகானங்களோடு மட்டும் ஐக்கியமாகிவிடாமல், நடிகர்திலகம் திரியிலும் அதிக பங்களிப்பு செய்ய வேண்டுமென விரும்புகிறோம்.
வாழ்த்துக்களுடன் ஆதி.
4 ஆயிரம் 8 ஆயிரம் மாமா பிஸ்கோத்து
ச்சும்ம்ம்மா
8 ஆயிரம் பதிவுகளுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் சி.க