சரோஜாதேவியின் கணவர் இறந்துவிட்டார் தானே..நோய்? பத்மினியின் டாக்டர் கணவரும் ஹார்ட அட்டாக் தானே..வைஜயந்தியின் டாக்டர் பாலியும் இப்போ இல்லை தானே..பாவம்.
Printable View
சரோஜாதேவியின் கணவர் இறந்துவிட்டார் தானே..நோய்? பத்மினியின் டாக்டர் கணவரும் ஹார்ட அட்டாக் தானே..வைஜயந்தியின் டாக்டர் பாலியும் இப்போ இல்லை தானே..பாவம்.
//தற்போது இத்திரைப்படம் தமிழில் புதிய தொழில் நுட்பத்துடன் மெருகேற்றப்பட்டு, வரும் தீபாவளிக்கு திரையிடப்படவுள்ளது. சினிமாஸ்கோப்பில் வெளிவர இருக்கும் இப்படத்துக்கு, டிஜிடல் தொழில் நுட்பத்தில் இசை அமைப்பாளர் ரவிராகவ், புதிய இசை வடிவம் கொடுத்துள்ளார்.// க்ருஷ்ணா ஜி.. சங்கராபரணம் ..விமர்சனம் விகடனில் அட்டையில் வந்த சமயம்.. கேள்விப்பட்ட போது மதுரையில் மீனாட்சியில் ரிலீஸ்... ஏகப் பட்ட கூட்டம்..மொழிதெரியாமல் தெலுங்கு போய்ப் பார்த்தது - பல புரியாவிட்டாலும் கடைசிப்பாட்டு கொஞ்சம் உருக்கம்.. ராஜலஷ்மி கடல் கண்களோடு படம் பர்த்த இரவில் கனவில் வந்ததாக ஞாபகம்.. நான் அவரை ப் பாடஎல்லாம் சொல்லவில்லை :)
அப்புறம் வெகுகாலத்திற்கு ப் பிறகு புத்தகமாய்வெளிவந்த சோ எழுத்தில் விமர்சனம் படித்தேன்..
பாலு மகேந்திரா ஒளிப்பதிவு..ம்ம் தமிழில் வசனம் மட்டும் வைத்துக்கொண்டு பாட்டு தெலுங்கில் இருந்தால் நன்றாக இருக்கும்..ஆங்கிலப் படங்களெல்லாம் பெயர் மாற்றாமல் இப்போது தமிழில் டிவியில்வருவதைப் போல..(டை அனதர் டே)
இதை எழுதும் போதே ஒரு நினைவு.. அந்தக்கால மதுரை பரமேஸ்வரியில் ஓடுவதாகப் பார்த்த போஸ்டர்..சொர்க்கத்தின் சூடான சுந்தரிகள் எனத் தமிழில் எழுதியிருக்க படத்தின் பெயர் It is hot in paradise..! :)
எஸ் வி. சார்.. தங்கத் தேரோடும் வீதியிலே பாட்டு ப் போட்டதுக்கு தாங்க்ஸ் :) மத்தவங்க என்னை த் திட்டப் போறாங்க எப்படி மறக்கலாம்னு..
80 களில் சிலோன் ரேடியோக்களில் சிலோனில் ஓடிய படம் என விளம்பரம்.. படிப்பினை ஊட்டும் குடும்பச் சித்திரம் என கே.எஸ்.ராஜாவின் கணீர்க்குரல் வேறு.. இந்தப் படம் நினைவில் வந்தது (இன்னொன்று பைலட் ப்ரேம் நாத்..) கண்ணில் தெரியும் கதைகள்.. நான் ஒரு பொன்னோவியம் கண்டேன் இதிலே இளமை இனிமை இது புதுமை
நிறைய தடவை கேட்டிருக்கிறேன்.. அப்படியே அழகாக வேகமாக ஓடும்.. நடித்தவர் சரத் பாபு எனில் பார்த்ததில்ல.. பாடல் புலமைப் பித்தனாம்..பாடியவர்கள் எஸ்பிபி, சுசீலாம்மா, ஜானகியம்மா.. எனக்குப் பிடித்த பாடல் உமக்கும் பிடிக்குமா..
*
நான் ஒரு பொன்னோவியம் கண்டேன் எதிரே
இளமை இனிமை இது புதுமை
போதை தரும் நாகஸ்வரம்
பாடிடும் செந்தேன் மழை உந்தன் மொழியோ..
பார்வையில் ஆயிரம் கவிதைகள் எழுதிடும் அபினயம்..
பார்வை அழைப்பதும் பாவை தவிப்பதும் ஏனடி ஏனடி பைங்கிளியே
மேகலை வாட்டியது அதை மேனியில் காட்டியது
சிறு ஊடல் விளையாடல் ஒரு கூடல் உறவாடல்
குறி போடல் சுவை தேடல் கவி பாடல்
புதுவித அனுபவமே..?
அறிமுகம் அனுபவம் அது சுகம்
அழகன் மடியில் எனது உலகம்
மாலை வரும் வரும் மாலை தரும் தரும்
மாவிலை பின்னிய தோரணங்கள்
மங்கல வாத்தியங்கள் எங்கும் எங்களின் ராஜ்ஜியங்கள்
ஒரு வானம் கரு மேகம் மழை போலும் மலர் தூவும்
மயில் ஆடும் குயில் கூவும் இவை யாவும் திருமண எதிரொலிகள்
முதல் முதல் இரவென்ன வருவது..
..மகிழ மனது நெகிழ வருக
நானொரு பொன்னோவியம் கண்டேன்
தந்தோம் தனம் தனம் தந்தோம் தனம் தனம்\
என்றொரு மெல்லிசை கேட்பதென்ன
அது என்ன நூதனமோ
உங்கள் ஆசையின் சாதனமோ
மனம் தந்தும் தனம் தந்தும்
இதழ் சிந்தும் ரசம் தந்தும்
தரும் இன்பம் பல தந்தும்
வரும் சொந்தம் இவள் சீதனமோ
பலவித சுகங்களின் தரிசனம்
விழியும் மனமும் உருக வருக
**
மாரியம்மன் திருவிழா படத்தில் "சிரித்தாள் சிரித்தேன் அவளொரு ராஜகுமாரி "என்ற டி.எம்.எஸ் பாடிய இளையராஜா பாடலொன்று. அப்போதெல்லாம் தேங்காய் ,மனோரமாவிடம் தாராளமாக விளையாடுவார்.
//தேங்காய் ,மனோரமாவிடம் தாராளமாக விளையாடுவார்.// :) ஹி ஹி..கோபால்சார்..
இதன் தொடர்பாக இன்னொரு பாட்டும் நினைவில்.. பல்லவ நாட்டு ராஜ குமாரிக்குப்பருவம் பதினெட்டு..
மழு என்ற இரு எழத்து படத்திற்கு,மாமனாரின் இன்ப வெறி 10 எழுத்து மொழி பெயர்ப்பு.கில்லாடிகளப்பா.
நன்றி மதுண்ணா.. இதுவரை வீடியோ பார்த்ததில்லை.. இதிலேயே இன்னொரு பாட்டும் போட்டுத்தேய்ப்பார்கள் ரிகார்டரை.. நான் ஒன்ன நெனச்சேன்.. நீ என்ன நினச்சே..
அதை ஏன் கேக்கறீங்க அந்தக்காலத்தில் மலையாளப் பட டைட்டில்களின் மொழி பெயர்ப்பு.. தமாஷாயிருக்கும்..ஏதோ ராத்திரிகள்னுல்லாம் வரும் சட்டுன்னு நினைவுக்கு வரலை..ஒரு ப்ரதாப் போத்தன் நடிச்ச படத்துக்கு ஒரு வினாடி சுகம் என டைட்டில்..:) இதையும் மீறி மதுரையில் நன்கு ஓடிய - மத்த விஷயம் எல்லாம் இல்லாத- மலையாளப்படம் நியூடெல்லி - சிந்தாமணியில் ஓடியது..