http://i59.tinypic.com/vg0rhs.jpg
Printable View
http://i58.tinypic.com/1252vdy.jpg
பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர். வழங்கும் "தாய்க்கு தலை மகன் " வெளியாகி
48 ஆண்டுகள் நிறைவு ஆனது. வெளியான நாள் : 13/01/1967.
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். சுடப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த
சூழ்நிலையில் , தமிழகமே பரபரப்பாக , பதட்டமாக இருந்த நிலையில் முதல்
வெளியீட்டில் பார்க்க வீட்டில் அனுமதி கிடைக்காததால் , மறுவெளியீடுகளில் தான்
பார்க்க முடிந்தது . மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் குண்டடிபடுவதற்கு முன்பு
வந்த கடைசி படம்.
நல்ல திரைக்கதை. சில இனிமையான பாடல்கள் அமைந்தன.
1.அன்னை என்று ஆகுமுன்னே
2. வாழ வேண்டும் தினம் வளர வேண்டும் .
3. பார்த்துக் கொண்டது கண்ணுக்கு கண்ணு
தேவர் பிலிம்ஸ் தயாரித்த படங்களில் இந்த படத்தில்தான் சோகக் காட்சிகளில்
புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். தன் தாய் பாசத்தையும், சகோதர பாசத்தையும் நடிப்பில்
அதிக அளவில் காட்டி நன்கு சோபித்தார் எனலாம்.
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் விரைவில் குணமடைந்து வீடு திரும்பவேண்டும் என்பதில் ரசிகர்கள் /தொண்டர்கள் ஆர்வமாக இருந்ததால் , இந்த படத்திற்கு
எதிர்பார்த்த ஆதரவும், வெற்றியும் கிடைக்கவில்லை. இருப்பினும் அவ்வப்போது
மறுவெளியீடுகளில் அரங்குகளில் வெளியாகி வெற்றிநடை போடுகிறது .
ஆர். லோகநாதன்.