என் மகன் திரைப்படத்தின் காட்சிகள் பொம்மையில் வெளிவந்தவை, தற்போது நமது பார்வைக்கு...
http://i872.photobucket.com/albums/a...llBommaifw.jpg
http://i872.photobucket.com/albums/a...ommaip02fw.jpg
அன்புடன்
Printable View
என் மகன் திரைப்படத்தின் காட்சிகள் பொம்மையில் வெளிவந்தவை, தற்போது நமது பார்வைக்கு...
http://i872.photobucket.com/albums/a...llBommaifw.jpg
http://i872.photobucket.com/albums/a...ommaip02fw.jpg
அன்புடன்
டியர் ராகவேந்திரன் சார்,
பாசமான பாராட்டுக்கு பணிவான நன்றி !
ரசிகக் கண்மணிகளாகிய அன்புள்ளங்கள் அனைவரையுமே நமது கலையுலகத் தந்தை, "பிள்ளைகளே !" என்றுதானே வாய் நிறைய வாஞ்சையோடு, அன்போடு அழைப்பார் !
"என் மகன்" - 'பொம்மை' இதழ் நிழற்படங்கள், பொக்கிஷங்கள் !
அன்புடன்,
பம்மலார்.
டியர் நெய்வேலி வாசுதேவன் சார்,
பாராட்டுக்கு நன்றி !
'நீங்கள் அத்தனை பேரும் உத்தமர் தானா' பாடலின் வீடியோவைப் பதிவிட்டு வெளுத்து வாங்கி விட்டீர்கள் !
டியர் முரளி சார்,
"என் மகன்" - 'அன்றும் இன்றும்' சூப்பர் !
அன்புடன்,
பம்மலார்.
நடிகர் திலகம் பற்றி அமரர் ராஜீவ் காந்தி
நடிகர் திலகம் கலையுலகில் 50 ஆண்டுகள் கோலோச்சி பீடுநடை போடுகின்றதைப் பாராட்டி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ராஜீவ் காந்தி அவர்கள் எழுதிய 25.9.1984 தேதியிட்ட பாராட்டுக் கடிதத்தின் நகல்
[உதவி : நமது ஹப்பர் திரு.கே.சந்திரசேகரன்]
http://i1094.photobucket.com/albums/...GEDC4369aa.jpg
இன்று 20.8.2011 முன்னாள் பிரதமர் அமரர் ராஜீவ் காந்தி அவர்களின் 68வது பிறந்த தினம்.
பம்மல் ஆர். சுவாமிநாதன்.
அண்ணலின் ஆகஸ்ட் அற்புதங்கள்
மரகதம்
[21.8.1959 - 21.8.2011] : 53வது உதயதினம்
பொக்கிஷப் புதையல்
முதல் வெளியீட்டு விளம்பரம் : The Hindu : 7.8.1959
http://i1094.photobucket.com/albums/...EDC4361a-1.jpg
முதல் வெளியீட்டு விளம்பரம் : முரசொலி : 21.8.1959
http://i1094.photobucket.com/albums/...EDC4362a-1.jpg
"மரகதம்" சென்னை 'வெலிங்டன்' திரையரங்கில் 100 நாட்கள் ஓடிய சிறந்த வெற்றிக் காவியம்.
இதன் 100வது நாள் விளம்பரம் கிடைக்கப் பெற்றவுடன் அவசியம் இங்கே இடுகை செய்கிறேன்.
அன்புடன்,
பம்மலார்.
டியர் பம்மலார்,
முத்தே, மணியே, பவழமே, மாணி்ககமே, மரகதமே என்று உங்களைத் தமிழில் உள்ள அனைத்து வார்த்தைகளையும் வைத்து வார்த்தை ஜாலம் செய்து வாழ்த்தி அந்த உத்தமக் கலைஞன் மகிழ்ந்து கொணடிருக்கிறார் என்பது திண்ணம்.
அன்புடன்
மரகதம் விமர்சனம்
http://i872.photobucket.com/albums/a...thamreview.jpg
மரகதம் திரைப்படத்தின் மற்றொரு விளம்பரம்
http://i872.photobucket.com/albums/a...gathamAdfw.jpg
அன்புடன்
நடிகர் திலகத்தின் வெற்றி மகுடத்தில் மேலும் ஒரு மணி மகுடம் என்மகன். N.T யின் 172- ஆவது காவியம்.
பூட்டு உடைக்கும் திருடனாகவும், ஏட்டு ராமையா தேவனாகவும் இரட்டை வேடம் நடிகர் திலகத்திற்கு.
பாசமான குடும்ப வேடங்களிலேயே N.T யை அதிகம் பார்த்த நமக்கு action role-களிலும் அவர் வெளுத்து வாங்க முடியும் என்று நிரூபித்தவர்கள் திரு,பாலாஜி அவர்களும், திரு சி.வி.ராஜேந்திரன் அவர்களும். (தங்கை, என் தம்பி, திருடன், ராஜா, என்மகன் )
வழக்கம் போல இரண்டு character-களுக்கும் சரியான வித்தியாசம்.
சந்தர்ப்ப சூழ்நிலையால் திருடனாக்கப்பட்டு எதிரிகளிடம் சிக்கித் தவிக்கும் தவிப்பாகட்டும்..
தனக்குக் கோபம் தலைக்கேறும் போதெல்லாம் lighter- யை கொளுத்தி கோபத்தை வெளிப்படுத்தும் விதமாகட்டும்...
தன்னை சுவீகாரம் எடுத்துக் கொள்ளும் ஏட்டு ராமையா தேவரின் அன்புக்கு கட்டுப் படவேண்டிய சங்கடமான சூழ்நிலையில் சிக்கிக்கொண்டு தவிப்பதாகட்டும்...
தன் திருட்டுத் தொழிலால் காதலி பாதித்து விடக் கூடாது என்பதற்காக காதலை மறைத்து தவிப்பதாகட்டும்...
'நீங்கள் அத்தனை பேரும் உத்தமர் தானா சொல்லுங்கள்' என்று எதிரிகளிடம் கொக்கரிப்பதாகட்டும்...
தனக்கு ஒரு ஆண்பிள்ளை இல்லையே என்று ஒரு திருடனை சுவீகாரம் எடுத்துக் கொண்டு அவன் திருடன் என்று தெரிந்ததும் கொதித்துக் கொந்தளித்து,அவனை துவம்சம் செய்து விட்டு, பின் பாசத்தில் trumpet- எடுத்து சோகத்துடன் வாசிக்கும் பாங்காகட்டும்...
எதிரிகளிடமிருந்து தன் மகனை காப்பாற்ற மரங்கள் அடர்ந்த தோப்பில் போடும் அந்த அற்புத கம்பு சண்டையாகட்டும்...
தன்னை பாலாஜி முதுகில் சுட்டவுடன் "பின்னால நின்னு யாருடா சுட்டது..கோழப் பய...ஆம்பளையா இருந்தா முன்னாடி வாடா...டாய்..நான் தேவன்டா", என்று துடிதுடித்து உயிரை விடுவதாகட்டும்...
ஏட்டு ராமையாத் தேவராகவும், திருடன் ராஜாவாகவும் நடிப்பில் ராஜாங்கம் நடத்துகிறார் நடிக மன்னன்.
பொண்ணுக்கென்ன அழகு...
நீங்கள் அத்தனை பேரும் உத்தமர் தானா சொல்லுங்கள்...
சொல்லாதே.. சொல்லாதே...ஊரார்க்கு சொல்லாதே ....
போன்ற சூப்பர் ஹிட் பாடல்கள்..
ஒளிப்பதிவு டைரக்டர் மஸ்தானின் 'குளு குளு' ஒளிப்பதிவு...
எம்.எஸ்.விஸ்வநாதனின் ஆர்ப்பாட்டமான இசை...
C.V..ராஜேந்திரனின் 'விறு விறு' இயக்கம்...
மொத்தத்தில் அனைத்து தரப்பினரையும் கவர்ந்த வெற்றிமகன் "என் மகன்". ராஜாமணி அன்னை ஈன்ற அன்பு மகன், எங்கள் 'தெய்வ மகன்'....
அன்புடன்,
நெய்வேலி வாசுதேவன்.
வாசுதேவனின் மகன் ஜெயந்தி நாளன்று, தன் பிள்ளைகளில் ஒருவரான வாசுதேவனை அந்த நடிகர் திலகம் வாழ்த்திக்கொண்டுள்ளார் என்பது நிதர்சனம். என் மகன் திரைக்காவியத்தைப் பற்றிய தங்களின் ஆய்வு, சிறப்பாக உள்ளது. பாராட்டுக்கள்.
தங்கள் வரவு நம் திரியின் மகுடத்தில் மற்றும் ஓர் மரகதக் கல் என்பது உறுதி.
தங்களுக்காகவும் மற்றும் நம் அனைத்து நண்பர்களுக்காகவும் மரகதம் திரைக்காவியத்திலிருந்து சில காட்சிகள், collage வடிவில்
http://i872.photobucket.com/albums/a...mcollagefw.jpg
அன்புடன்
மரகதம் திரைக்காவியத்தில் எஸ்.எம்.சுப்பையா நாயுடு அவர்கள் இசையமைப்பில் ராதா ஜெயலக்ஷ்மி - டி.எம்.சௌந்தர்ராஜன் குரல்களில் காலத்தால் அழிக்க முடியாத இனிமையான பாடல், கண்ணுக்குள்ளே உன்னைப் பாரு. இப்பாடலைத் திரு வாசுதேவன் தரவேற்றிய சூட்டோடு சுட்டாக நம் அனைவர் பார்வைக்கும் தருவார் என எதிர்பார்ப்போம்.
முன்கூட்டிய நன்றி திரு வாசுதேவன் அவர்களே
அன்புடன்