-
Quote:
Originally Posted by
RAGHAVENDRA
ஐயனே,
இன்னும் 120 ஆண்டுகளுக்குப்பின்னர்,நாங்கள ஒருவரும் இருக்கமாட்டோம்..
ஆனால் நீங்கள் இருப்பீர்கள்..
அன்று உங்கள் புகழ் உலகெங்கும் வியாபித்திருக்கும்..
உலகிலுள்ள அத்தனை கலை சார்ந்த பல்கலைகழங்களுக்கும் உங்கள் சாதனை உயர் வகுப்பு பாடமாக அமையும்.
உம் தாள் பணிந்து வணங்குகிறோம்..
-
-
We always cherish the memories of our living legend, the one and only NT till we reach him
-
nadigarthilagame unnai endrum marakkamattom oru naal nangal marapom andru engal uyir engalidam irukkathu
-
neeye tamil neeya amutham neeya thuyavan vazhga un pugazl
-
today a black day for NT fans, infact for cinema industry
You continue to live in our hearts NT Sivaji Sir,
If God give us power we will bring you back to life NT Sivaji Sir
Continue to bless us from heaven
-
ஆருயிர் அண்ணனே இன்று யாருக்கு உனது நினைவு நாள்? . உன்னை இன்று மட்டும் நினைத்துவிட்டு நாளை மறந்துபோய் வேறு வேளைகளில் ஈடுபடுவோருக்கு.
அணுதினமும் உன்னையே நினைத்து உருகும் எங்களுக்கல்ல. உன்னை எப்போதும் நினைத்துக்கொண்டே இருப்பதால் எல்லா நாட்களும் உன் நினைவு நாளே.
இன்று கலையுலகை கவ்விய கறுப்பு நாள்.
தமிழகத்தின் பொக்கிஷம் களவு போன இருட்டு நாள்.
தமிழ்த்தாயும் கலைத்தாயும் தங்கள் மகனைப் பறிகொடுத்த மலட்டு நாள்.
நாங்கள் சற்று அயர்ந்திருந்த நேரத்தில் எமன் எங்களிடமிருந்து உன்னைத் திருடிக்கொண்டு போன திருட்டு நாள்.
இனி நாட்காட்டிகளில் ஜூலை 21 என்ற நாள் வேண்டாம். 364 நாட்கள் போதும் இவ்வுலகுக்கு...
-
நடிகர் திலகத்தின் நினைவு நாளை அனுசரிக்கும் விதமாக திருவொற்றியூர் பிரபு ரசிகர்கள் சார்பில் வெளியிடப் பட்டுள்ள போஸ்டர்
http://i1146.photobucket.com/albums/...ps9e462ad6.jpg
-
http://i1146.photobucket.com/albums/...ps0ae56b56.jpg
இந்த நிழற்படம் சிறப்பு வாய்ந்தது, இதனை இங்கு பகிர்ந்து கொள்வதில் உள்ளம் நெகிழ்கிறது. இதில் இடது புறத்தில் இருக்கும் இருவரும் வலது புறத்திலிருந்து இருவருமாக நால்வரும் சகோரர்கள். இவர்களுடைய தந்தையாரும் தீவிர சிவாஜி வெறியர். பெருந்தலைவரின் அன்பிற்கு பாத்திரமானவர். இவர்களின் குடும்ப அங்கத்தினர்கள் அனைவருமே நடிகர் திலகத்தின் மேல் அளவற்ற பாசம் கொண்டவர்கள், குழந்தைப் பிராயத்திலிருந்தே நடிகர் திலகத்தின் படங்களால் வளர்க்கப் பட்டவர்கள், அவருடைய ரசிகர்களாய் வளர்க்கப் பட்டவர்கள், வளர்ந்தவர்கள், வாழ்பவர்கள். இவர்கள் ஒவ்வொரு ஆண்டும் நடிகர் திலகத்தின் பிறந்த நாள் மற்றும் நினஐவு நாட்களில் ஒன்றாய் அன்னை இல்லத்தில் சங்கமித்து நடிகர் திலகத்தை நேரில் சந்தித்து மகிழ்ந்தவர்கள், அவரிடம் ஆசி பெற்றவர்கள், அவர் மறைந்தாலும் தொடர்ந்து அவருடைய திருவுருவப் படத்திற்கு மரியாதை செலுத்தி வருபவர்கள்.
அன்னை இல்லத்தில் நடிகர் திலகத்தின் ரசிகர்களுக்கு நினைவு நாள் மற்றும் பிறந்த நாட்களில் நேராக உள்ளே சென்று தலைவரின் படத்திற்கு மாலை மரியாதை செய்து விட்டு வரும் சிறப்பு வேறு எந்த ரசிகருக்கும் கிடைக்காத பெரும் பேறாகும். இந்த இரு நாட்களிலும் அந்தப் பகுதி முழுவதுமே ரசிகர்கள் வசமே இருக்கும் அளவிற்கு உரிமை கிடைப்பது ஒவ்வொரு சிவாஜி ரசிகரும் பெருமைப் படக் கூடிய விஷயமாகும்.
-
http://i1146.photobucket.com/albums/...ps528cc3e7.jpg
மலர் மாலை மரியாதையுடன் நடிகர் திலகத்தின் திருவுருவப் படம் உயிருடன் திகழ்வதைப் பார்க்கும் போதெல்லாம் கண்களில் நீர் பெருக்கெடுத்து வருவதைத் தடுக்க முடியவில்லை. தெய்வ சந்நிதானம் போல் அந்த இடம் திகழ்கிறது. இந்தக் காட்சியைப் பார்க்கும் தங்களுக்கும் அந்த உணர்வு நிச்சயம் ஏற்படும்.