-
திரு. செல்வகுமார் சார், அதிமுகவின் 43வது ஆண்டை முன்னிட்டு தங்களின் திராவிட இயக்க வரலாற்று கட்டுரை அற்புதம். அதிலும் பேரறிஞர் அண்ணாவின் சிலை தயாரிப்பு பணிகளை புரட்சித் தலைவர் பார்வையிடுவதையும் அந்த சிலைக்காக அண்ணா போஸ் கொடுக்கும் புகைப்படம் அரிய பொக்கிஷம். நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
இன்றைய மக்கள் குரல் தினசரியில் வெளிவந்த செய்தி .
http://i62.tinypic.com/2we01he.jpg
-
-
இன்றைய மாலை முரசு நாளிதழில் வெளியான புகைப்படம்.
http://i61.tinypic.com/wu13c0.jpg
-
இன்றைய மாலை மலரில் வெளியான செய்தி.
http://i57.tinypic.com/amrxoy.jpg
-
திரு செல்வகுமார் அவர்களுக்கு
தங்களுடைய கட்டுரை படிக்க நேர்ந்தது.
சில விஷயங்களை தெரிந்துகொள்ள முடிந்தது. நன்றி.
அதில் இடம்பெறவேண்டிய இன்னும் சில விஷயங்கள் ..முக்கியமாக மையத்தில் புதிதாக படிக்க வரும் நண்பர்களுக்கு தெரியவேண்டியது என்று நான் நினைப்பது..!
அன்று ADMK சேர்ந்தவர்கள் ஒரு பகுதியினர் "MGR அவர்களது உண்மை விசுவாசி" அல்லது "MGR அவர்களது முரட்டு பக்தன்" என்று யாரும் அவருடைய ஆட்சிகாலத்தில் STICKER ஒட்டி கொள்ளவில்லை.
அவரது SECOND lieutenant ஆக திரு ராம வீரப்பன் அவர்களும் இருந்திருக்கிறார். அவரை மிக மிக பிடித்தவர்கள் கூட "RMV யின் உண்மை விசுவாசி" என்று STICKER ஒட்டி கொள்ளவில்லை. THEY DID NOT DO SUCH THINGS FOR THE SAKE OF IMPRESSING KEY PEOPLE FOR DERIVING TANGIBLE OR NON-TANGIBLE BENEFITS !
STICKER என்ற ஒரு உபகரணம் அந்த காலத்திலும் இருந்தது !!
இதை கூறுவதற்கு காரணம், சுவர் இருந்ததால் தான் இன்று சித்திரம் தீட்ட முடிகிறது !!!
யாரால் புகழோ,
யாரால் வெற்றியோ,
யாரால் வாழ்கையோ அவர்களை மறந்து
ஆனால் பேசும்போது அவர்களை மறக்கவில்லை என்பது போல பேசி, நிறைய பேர் தங்களுடைய வாழ்கையை வளப்படுத்திகொண்டிருக்கிரார்கள்.
ஒரு அரசாங்கத்தில் இன்று யார் நிதியமைச்சர். யார் தொழில்துறை, யார் மருத்துவம், யார் கல்வி என்று 98% மக்களுக்கு தெரியவில்லை. இதுதான் மக்கள் ஆட்சியா ? இதுதான் "மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு" என்ற மாண்பில் நடக்கும் முறையா ?
ஆனால் 1977 முதல் 1987 வரையிலான காலகட்டங்களில் இருந்த, இன்று இருப்பவர்களை கேட்டால் அவர்கள் கடகடவென ஒப்பிப்பார்கள் யார் யார் என்ன அமைச்சராக இருந்தார்கள் என்று !
MGR ADMINISTRATION & BEHAVIOR NO DOUBT WAS STRICT BUT
1) HE NEVER TREATED HIS MINISTERS LIKE A SLAVE ...!
2) HE NEVER TOOK DECISION DEPENDING ON HIS MOOD...!
3) HE NEVER ALLOWED MISCREANTS TO INTERFERE & INTERVENE HIS OPERATIONS ..!!
THIS IS MY BELIEF AS PER MY UNDERSTANDING AS I WAS IN MY EARLY TEEN AT THAT TIME ..!
மேலும் சத்துணவு திட்டம், சத்துணவு திட்டம் என்ற பெயரிலேயே இருந்தது. "பொன்மனச்செம்மல்" சத்துணவு திட்டம் என்று இருந்ததில்லை.
WHEN THERE IS A SCOPE TO LEARN SOMETHING FROM SOMEONE, WE HAVE TO LEARN IT IMMEDIATELY BEFORE WE THINK TOO BIG ABOUT OUR-SELF..!
RKS
-
மக்கள் திலகத்தால் துவங்கப்பட்ட மாபெரும் மக்கள் இயக்கம்
அ இ அ தி மு க. இந்நாள் கழகம் துவங்கப்பட்ட நன்னாள். 43ஆம் ஆண்டு துவக்கம் இன்று.
இந்நன்னாளில் திராவிட இயக்க நீண்ட வரலாறை உரிய புகைப்படங்களோடு மிக அருமையாக தொகுத்து பதிவிட்ட நமது அன்பு நண்பர் மதிப்புக்குரிய பேராசிரியர் திரு செல்வகுமார் அவர்களுக்கும்
இன்று பதிவுகள் வழங்கிய திருவாளர்கள் வினோத், யுகேஷ் பாபு, கலைவேந்தன், ராமமூர்த்தி, லோகநாதன், முத்தையன் மற்றும் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி.
அன்புடன்
எஸ். ரவிச்சந்திரன்
-----------------------------------------------------------------------
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
-----------------------------------------------------------------------
-
இந்நன்நாளில் - இதய ராகம் நிகழ்ச்சியில் - தற்பொழுது ஜெயா max தொலைக்காட்சியில் மக்கள் திலகம் நடித்த அற்புத காவியங்களில் இருந்து பாடல்கள் ஒளிபரப்பி வருகின்றனர்.
குங்கும பொட்டின் மங்களம் - குடியிருந்த கோயில்
எங்கே அவள் - குமரிக்கோட்டம்
அதோ அந்த பறவைபோல் வாழ வேண்டும் - ஆயிரத்தில் ஒருவன்
திருவளர் செல்வியோ - ராமன் தேடிய சீதை
வெற்றி மீது வெற்றி - தேடி வந்த மாப்பிள்ளை
நாம் ஒருவரை ஒருவர் - எங்கள் தங்கம்.
உன்னை நான் சந்தித்தேன் - ஆயிரத்தில் ஒருவன்
கடவுள் இருக்கின்றார் - ஆனந்த ஜோதி
கடவுள் தந்த பாடம் - நாடோடி
நான் உங்கள் வீட்டு பிள்ளை - புதிய பூமி
திரும்ப திரும்ப எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத பாடல்கள்.
http://i61.tinypic.com/11t6d0j.jpg
மக்கள் திலகத்தின் அழகு - சுறுசுறுப்பு - அவர் அணிந்திருக்கும் அற்புத உடைகள் -
இனிய இசை - அருமையான பாடல் வரிகள் - பாடியவர்களின் குரல் வளம் -
காட்சிப்படுத்தி இருக்கும் விதம் -
என்று இந்த பாடல்களின் பெருமைகளை சொல்லிக்கொண்டே போகலாம்.
காலத்தால் அழியாத பாடல்கள்
என்றும் நம்முடன் வாழ்கிறார் பொன்மனச்செம்மல்.
அன்புடன்
எஸ். ரவிச்சந்திரன்
-----------------------------------------------------------------------
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
-----------------------------------------------------------------------
-
-