அலைபேசியில் அழைத்து வாழ்த்துக்கள் கூறி ஆசியும் பெற்று விட்டேன்.. எல்லோரது வாழ்த்துக்களையும் பகிர்ந்து கொண்டேன்
Printable View
பாவை பாவை தான் ஒரு அசுரப்பாடல் ... மிகவும் பிரமாதம்
என்னைப் புரட்டிப் போட்ட இசைக் குயிலின் பாடல்கள். 5
இதோ! இன்னொரு கானம். அசைத்துப் பார்க்க முடியாத ஆணித்தரமான குரல்வளத்தில். பெண்மையின் பெருமை பேசும் தேசிய கீதம். காதலின் மகத்துவத்தை உணர்த்தும் காயகல்பக் குரலில்.
ஆயிரம் பெண்மை மலரட்டுமே
ஆயிரம் கண்கள் ரசிக்கட்டுமே
ஒருத்தியின் நெஞ்சம் ஒருவனுக்கென்றே
சொல் சொல் சொல் தோழி சொல் சொல் சொல்
ஒன்றே காதல் ஒன்றே இன்பம் ஒன்றே வாழ்வின் நீதி
ஒன்றாய் சேர்ந்து அன்பாய் வாழும் பண்பே பெண்கள் ஜாதி
காதல் நாயகன் ஒரு பாதி
காதலி தானும் மறு பாதி
இருமனம் அங்கே ஒரு மனம் என்றே
சொல் சொல் சொல் தோழி சொல் சொல் சொல்....
மன்னவனே ஆனாலும் பொன்னளந்து கொடுத்தாலும்
பெண் மனதை நீ அடைய முடியாது
வாள் முனையில் கேட்டாலும்
வெஞ்சிறையில் போட்டாலும்
உடலன்றி உள்ளமுன்னைச் சேராது
தவறு செய்யாதே
அருகில் வராதே நில்.. நில்.. நில்...
கட்டளை என்றால் அப்படி ஒரு கட்டளை. மன்னவனுக்கே. இடுவது இசையரசி.
என்ன ஒரு வாதம்?! என்ன ஒரு அசையா தன்னம்பிக்கை?!
குரலில் தெரியும் அந்த அவசிய ஆணவ கர்வம். என்னை அதிகாரத்தால் அடி பணிய வைத்துவிட முடியாது என்ற எகத்தாளம் பாடலின் கருத்துக்கு ஏற்ப. குரலுக்குக் கூடத்தான் இந்த சவால்.
ஆயிரம் பாடகி பாடட்டுமே
ஆயிரம் குரல்கள் கேட்கட்டுமே
எங்கள் அனைவரின் நெஞ்சம்
உன் குரலுக்கென்றே சொல் சொல் சொல்
சரிதானே!
https://www.youtube.com/watch?v=2fnE...yer_detailpage
http://tamil.filmibeat.com/img/2013/...eela4-4600.jpg
பல ஆண்டுகளாக தமிழ்நாட்டு ரசிகர்களை தனது தேன் குரலில் மயங்கச் செய்த பிரபல பின்னணி பாடகி பி. சுசீலா இன்று தனது 80வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். ஆந்திராவில் இருந்து வந்து தமிழகத்தை தனது இசை மழையால் நனைத்த அவரின் பிறந்தநாள்
1950ம் ஆண்டு சுசீலா சென்னை வானொலியில் நிலைய பாடகியாக சேர்ந்தார். பாப்பாமலர் என்ற நிகழ்ச்சியில் பாடிக் கொண்டிருந்த அவருக்கு பெற்றதாய் என்ற படத்தில் பாட வாய்ப்பு கொடுத்தவர் director கே.எஸ்.பிரகாஷ்ராவ். இசை அமைப்பாளர் நாகேஸ்வரரவ் 1953ம் ஆண்டு பெற்றதாய் படத்தில் எதற்கு அழைத்தாய் என்ற பாடலை அவர் ஏ.எம். ராஜாவுடன் சேர்ந்து பாடினார்.
மாலையில் மல்லிகை.. அந்தியில் பஞ்சனை.. ஊரெல்லாம் பார்க்குதே... உன்னிடம் கேட்கிறேன்... என்று சரணத்தில் ஆரம்பிக்கும் சுசீலா ஒரு மந்திரம் போட்டது போல பாட்டிற்குள் நம்மை அழைத்துச் செல்கிறார். எஸ்.பி.பி யை பற்றியும் சொல்லவேண்டிய தேவை இல்லை. ஒரு காதல் பாடலுக்கு எங்கு குழைய வேண்டுமோ அங்கு குழைந்து சிணுங்கி எல்லாம் செய்வார் எஸ்.பி.பி. இப்பாடலிலும்...
http://www.youtube.com/watch?v=s5_JDftkVic
இது தான் என் நிறைய நண்பர்கள் மொபைலோட காலர் டுயூன். இந்த பாட்டை கேட்பதற்காகவே நிறைய போன் வரும் அப்படின்னு சொல்வாங்க ஏன் கேட்டா பாட்டு நல்லா இருக்காம். பாட்டோட ஆரம்பித்தில பேசக்கூடாதுன்னு எஸ்.பி.பி ஆரம்பிச்சதும் படத்தில் சிலுக்கு ரஜினியை விட்டு சினுங்கிகிட்டே மான் போல துள்ளி ஓடுவாங்க. அப்பப்பா... இதிலும் எஸ்.பி.பி யின் ரகளை அதிகம். அந்த ரகளையை ஓரம் கட்டும் அருமையான பி. சுசீலாவின் காதல் ததும்பும் குரல்
http://www.youtube.com/watch?v=8lFb3vES6h0
காத்தோடு பூ உரச... பூவ வண்டுரச...அன்புக்கு நான் அடிமை
இது ராஜாவின் மணிமகுட பாட்டு. பல்லவி ஆரம்பிக்கும் முன் ஒரு காற்றில் இலை பறந்து கீழே எப்படி விழுமோ அதுபோல ஒரு வேணுகானம் கிளம்பும் பாருங்கள். கொஞ்சம் கேளுங்களேன். அதற்க்கப்புறம் சுசீலாம்மா ஆரம்பிப்பாங்க. தூள். "உன்னோடு நான்.. என்னோடு நீ.. பூவா காத்தா உரச..." டாப்.
http://www.youtube.com/watch?v=h-TUe0gQsck
கிருஷ்ணா ஜி வருக
கே.எஸ்.பிரகாஷ்ராவ் இயக்குனர். பெற்றதாய்க்கு இசை பெண்டியாலா நாகேஸ்வரரவ்
வாசு ஜி ,ராஜேஷ் ஜி
காலை வணக்கம் . சுசீலா அம்மாவின் 80வது பிறந்த நாள் இனிய வாழ்த்துகள் .
thanks raajesh sir
corrected
Rgds
Gk