கை தட்டல் கேட்டு
குளிர்ந்தது காது
கழுத்தில் மாலை
களிப்பேறிய நிலை
கௌரவ பட்டம்
கொடுத்தது கூட்டம்
குதூகல வேளையிலே
குற்றால சாரலிலே
கலைந்தது கனவு
கண்ணெதிரே நின்றது
கட்டிய காதல் மனைவி
கையில் தண்ணீர் கிண்ணி
Printable View
கை தட்டல் கேட்டு
குளிர்ந்தது காது
கழுத்தில் மாலை
களிப்பேறிய நிலை
கௌரவ பட்டம்
கொடுத்தது கூட்டம்
குதூகல வேளையிலே
குற்றால சாரலிலே
கலைந்தது கனவு
கண்ணெதிரே நின்றது
கட்டிய காதல் மனைவி
கையில் தண்ணீர் கிண்ணி
தண்ணீர் கிண்ணியை
அரைவாசி நிரப்பி
மடியில் தலையைச் சாய்த்து
குடிடா கண்ணு எனக் கொடுக்க
உதடு குவிய மறுக்காமல்
கோவித்து யே என மறுபடி மறுபடி
அழ..
பின் தோளில் சாய்த்து
பாரு தோ தோ
பாரேன் அந்தக் காககாய
ஒன்ன மாதிரி
முழிய முழிய் உருட்டுது பாரேன்
எனத் தொடர்ந்த பேச்சில்
மனம் வந்து தண்ணீரைக்
குழந்தை மடக் மடக் எனக்
குடிக்கவும்
நிரம்பியது
அன்னையின் வயிறு..
வயிறு மட்டும் உண்டு பருப்பதோ
உழைத்து நாம் ஓடாய் தேய்வதோ
மற்ற உறுப்புகள் எண்ணத துவங்க
கை கால் வாய் உணவை மறுக்க
கூட்டு சதியில் காலியாய் வயிறு
அத்தோடு முடியவில்லை கதை
அத்தனை உறுப்பும் சோர்ந்தன
இயங்கும் சக்தியை இழந்தன
யாரால் யாருக்கு லாபம்
போட்டியில் கற்ற பாடம்
அனுபவம் புகட்டிய அமுதம்
அன்பாய் சார்ந்திருப்பதே நலம்
நலமாய் இருக்கத்தான் நாங்களின்று
..நன்றாகக் கைகுவித்து கேட்டு நிற்போம்
வளம்பலவும் உமக்குவாய்க்க வேணுமென்றால்
..வாக்குதனை இட்டிடுவீர் எமக்கே என்றே
பலமாகப் பாய்ந்தங்கே கேட்டே அங்கு
..பதைபதைப்பாய் அமர்ந்தபின்ன்ர் அருகில் கேட்டார்
களத்திற்கு வந்துவாக்கும் கேட்டு விட்டேன்..
..கரன்சியினை கண்ணீலெப்போ காட்டு வீர்நீர்!!
நீர் என்றும் விஞ்சுகிறீர்
வஞ்சியை கொஞ்சுகிறீர்
கொஞ்சம் கெஞ்சுகிறீர்
நெஞ்சம் மறைக்கிறீர்
வஞ்சம் நிறைக்கிறீர்
வென்றதாய் நினைக்கிறீர்
அய்யோ பாவம் ஆண்களே
அறியாத அப்பாவிகளே
அப்பாவிகளே
என் இனிய மக்களே
ஒன்று சொல்வேன் கேட்பீர்..
எதிர்கட்சிக்குப் போட்டீர்களென்றால்
நீங்கள் முட்டாள்கள்
எங்களுக்கு ஓட்டு கொடுத்தீரெனில்
புத்திசாலிகள்..ஆகவே
கேட்ட மக்கள்
எப்போதும் போலேவே
அமைதி காத்தனர்
புத்திசாலித் தனமாக..
புத்திசாலித்தனமாக
முன்யோசனையாக
எச்சரிக்கையாக
மிக கவனமாக
ஊஹும்......
எதுவும் பலிக்காது
வீண்கனவு உனது
தோற்பதும் சுகமே
தாம்பத்திய போர்க்களம்
அடக்கிய சூத்திரம்
சூத்திரம் மறந்து போனால் சுலபமாய் வழியும் சொல்லி
பாத்திகள் தோட்டந்த் தன்னில் பதிவதைப் போல நெஞ்சில்
சேர்த்திட வைத்த பள்ளி தென்றலாய் நினைவில் தீண்டி
கோர்த்திடும் விரைவில் வேலை குறைவறச் செய்வ தற்கே
குறைவறச் செய்வதற்கே
கோடி வேலை கிடக்கே
கோடை விடுமுறையிலே
குதூகலமாய் விளையாட
கோலியும் சோழியுமாய்
கூடிய தோழியர் அன்று
கையில் ஐபேட் இருக்க
கண்ணான பேத்தியுடன்
கோடி இன்பம் பெற்றேன்
கணக்கில்லா கேம்ஸில்
காலம் மாறினாலும் நான்
களிக்கின்ற குழந்தையே
குழந்தையே என்று நின்று
..குறைகளை மறந்த காலம்
சலசலச் சாரைப் பாம்பாய்
..தாவியே ஓடிப் போச்சு
வளம்பல மாற்றம் பெற்ற
...வஞ்சியாய் அவளும் பேச
களிகொளும் மனத்தில் அங்கே
..கருத்துடன் பயமும் கூடும்..