வசந்த காலம் வருமோ பாடல் ,வகதீஸ்வரி என்ற மேளகர்த்தா ராகத்தின் சாயலும் இருக்கும்.உள்ளத்தின் நல்ல உள்ளத்தில் சக்ரவாகம்,சரசாங்கி கலப்பது போல.அதுதான் ராமமூர்த்தி ஸ்பெஷல்.ராகத்தின் ரகத்தை இனம் காணுவது கஷ்டம்.
Printable View
வசந்த காலம் வருமோ பாடல் ,வகதீஸ்வரி என்ற மேளகர்த்தா ராகத்தின் சாயலும் இருக்கும்.உள்ளத்தின் நல்ல உள்ளத்தில் சக்ரவாகம்,சரசாங்கி கலப்பது போல.அதுதான் ராமமூர்த்தி ஸ்பெஷல்.ராகத்தின் ரகத்தை இனம் காணுவது கஷ்டம்.
இன்றைய ஸ்பெஷல் (18)
இன்றைய ஸ்பெஷலாக மிக மிக ஸ்பெஷலான ஒரு பாடல்
http://www.inbaminge.com/t/t/Thani%2...nam/folder.jpg
1977-ல் வெளியான 'தனிக்குடித்தனம்' படத்தில் இருந்து.
சோ, கே.ஆர்.விஜயா இணைந்து நடித்த இப்படத்திற்கு இசை 'மெல்லிசை மன்னர்' எம்.எஸ்.விஸ்வநாதன்.
நம் பாலாவும், இசை அரக்கியும் போட்டுத் தாக்கும் ஒரு உற்சாக இளமைத் துள்ளல் பாடல். இரண்டு பேரும் நீயா நானா என்று போட்டியிட்டு பாடுவது நன்றாகத் தெரியும். அவர் குரல் காந்தம் என்றால் அரக்கியின் அலட்சியம் அட்டகாசம்.
இருவருக்குமே இப்பாடலில் தோல்வியே இல்லை.
ஆனால் அற்புதமான பாடல் ஒய்.ஜி. மகேந்திரனுக்கும், ஆண்பிள்ளை சங்கீதாவுக்கும் போய் சேர்ந்துவிட்ட கொடுமையைத்தான் தாங்க முடியவில்லை.
என்ன மாதிரி பாடல்! எப்படிப்பட்ட நடிகர்களுக்கு போய் இருக்க வேண்டும்?
அதுவும் ஒய்.ஜி. உள்ளாடைகளுடன் வேறு. சங்கீதா சுத்த வேஸ்ட்.
(கோபால், உங்க நண்பர்கிட்ட இதையெல்லாம் சொல்லப் படாதோ!)
அருமையாக எழுதப்பட்ட பாடல்.
புஷ்பராகம்
சக்ரபாகம்
ரத்னஹாரம்
திவ்யரூபம்
சந்த்ரலோகம்
சப்தகீதம்
புஷ்பராகம்
சக்ரபாகம்
ரத்னஹாரம்
திவ்யரூபம்
சந்த்ரலோகம்
சப்தகீதம்
இன்னும் என்ன சொல்ல
உன்மேனி கொண்ட வண்ணம்
செந்தாழம் பந்தாட்டம் நீ ஆடும் கோலங்கள்
இன்னும் என்ன சொல்ல
உன்மேனி கொண்ட வண்ணம்
செந்தாழம் பந்தாட்டம் நீ ஆடும் கோலங்கள்
காமரூபன்
பத்மநாபன்
தேவதேவன்
ராஜராஜன்
காளிதாசன்
இன்பநேசன்
இன்னும் என்ன சொல்ல
உன்மேனி கொண்ட வண்ணம்
உல்லாசம் கொண்டாடும்
என் ஊஞ்சல் எண்ணங்கள்
இன்னும் என்ன சொல்ல
உன்மேனி கொண்ட வண்ணம்
உல்லாசம் கொண்டாடும்
என் ஊஞ்சல் எண்ணங்கள்
நம் கல்யாணம் முடிந்தது ஆவணியில்
என் கைகூடப் படவில்லை தாவணியில்
நம் கல்யாணம் முடிந்தது ஆவணியில்
என் கைகூடப் படவில்லை தாவணியில்
கட்டுப்பாடோ
சுகம் தட்டுப்பாடோ
நாம் ஒட்டிக்கொள்ள
அம்மம்மாடி இந்தப் பாடோ
புஷ்பராகம்
சக்ரபாகம்
ரத்னஹாரம்
திவ்யரூபம்
சந்த்ரலோகம்
சப்தகீதம்
இன்னும் என்ன சொல்ல
உன்மேனி கொண்ட வண்ணம்
செந்தாழம் பந்தாட்டம் நீ ஆடும் கோலங்கள்
உன் சிங்கார ஸ்வரங்களை நீ படிக்க
அந்த சங்கீத ரசனையில் நான் துடிக்க
உன் சிங்கார ஸ்வரங்களை நீ படிக்க
அந்த சங்கீத ரசனையில் நான் துடிக்க
பட்டுப்பாடல் இதழ் முத்துப் போலே
நான் சொல்ல சொல்ல
இன்னும் வரும் இந்த நாளே
காமரூபன்
பத்மநாபன்
தேவதூதன்
ராஜராஜன்
காளிதாசன்
இன்பநேசன்
இன்னும் என்ன சொல்ல
உன்மேனி கொண்ட வண்ணம்
உல்லாசம் கொண்டாடும்
என் ஊஞ்சல் எண்ணங்கள்
புஷ்பராகம்
சக்ரபாகம்
ரத்னஹாரம்
திவ்யரூபம்
சந்த்ரலோகம்
சப்தகீதம்
http://www.youtube.com/watch?v=OMwdv...yer_detailpage
கோபால் சார்
ஆபோகியின் கலைக்கோயில் ,
வசந்த காலம் வருமோ நிலை மாறுமோ - மறக்கமுடியுமா
அருமையான காலை பொழுது
செல்லமா கௌரவத்தில் "கோபாலா கோபாலா " என்று நாகேஷ்ஐ
நீலு கூப்பிடுவது நினைவிற்கு வருகிறது
ராமமூர்த்தி பற்றிய உங்கள் ஆதங்கம் புரிகிறது
வாசு சார்
தனி குடித்தனம் பாடல் அருமை மரினாவின் நாடகத்தை தழுவி எடுக்கப்பட திரைப்படம். நம்ம S .A .கண்ணன் இயக்கம் என்று நினவு
இன்னும் என்ன சொல்ல
உன்மேனி கொண்ட வண்ணம்
உல்லாசம் கொண்டாடும்
என் ஊஞ்சல் எண்ணங்கள்
ஈஸ்வரியின் குரலில் உள்ள எக்காளத்தை கவனிக்கணும் சார்
இந்த பாட்டை கேட்கும் போது "எங்கள் வாத்யார் " னு ஒரு படம் நினைவிற்கு வந்தது .துரை இயக்கம் விஸ்வநாதன் இசை
நாகேஷ் elementary ஸ்கூல் டீச்சர் வேஷம் குடை எல்லாம் வைத்து கொண்டு வருவார் . அவருக்கு கூட விஸ்வநாதன் குரலில்
"நாராய் நாராய் செங்கால் நாராய் " பாடல் ஒன்று உண்டு
பாலா வாணி குரல்களில்
"சமுத்திர ராஜா குமரி சுக போக சுக வாணி நமோ நமோ நமஹ "
விஜய் பாபு ஜோடி மறந்து விட்டது (கவிதாவா )
எங்கள் வீட்டு தங்கதேரில் எந்த மாதம் திருவிழா
பாலாவின் குரலில் உள்ள மெலிதான "திருவிழா"
அருணோதயம் ஸ்டில் சூப்பர்
"கரும்பில் இனிப்பது அடிப்பக்கம் என்றால் காதலில் எந்த பக்கமோ
அம்மம்மா அம்மம்மா "
வாங்க கிருஷ்ணா சார்!
காலை வணக்கங்கள். ரொம்ப நாளா ஆனா மாதிரி இருக்கு உங்களைப்பார்த்து.
எங்கள் வாத்தியார்' 1980 இல் வந்தது என்று நினைவு. விஜய்பாபுக்கு கவிதாதான் ஜோடி.
'
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=Fu3xfmKFUSE
கலை கோயில்
சுசீலா ஸ்ரீநிவாஸ் குரல்களில்
"நான் உன்னை சேர்ந்த செல்வம்
நீ என்னை ஆளும் தெய்வம்
இனி என்ன சொல்ல வேண்டும்
நம் இளமை வாழ வேண்டும் "
உன் விரல்கள் என் அழகை மீட்டும்
உன் விழிகள் என் உயிரை வாட்டும்
உன் குரலும் என் பெயரை கூட்டும்
அதில் கோடி கோடி இன்பம் காட்டும்
அதில் கோடி கோடி இன்பம் காட்டும்
உன் அச்சம் நாணம் என்ற நாளும்
என் அருகில் வந்தவுடன் அஞ்சும்
இதழ் பருகும்போது நெஞ்சம் ஆறும்
அது பாடும் இன்ப ஸ்வரம் ஏழும்
அது பாடும் இன்ப ஸ்வரம் ஏழும்
மேலே சொன்ன இரண்டு ஸ்டான்சா என்ன அருமை சார்
அதே போல் சுசீலாவின் அமுத குரலில்
"தேவியர் இருவர் முருகனுக்கு திருமால் மருகன் அழகனுக்கு ஏனடி தோழி அறிவாயோ
எனக்கோர் இடம் நீ தருவாயோ
எனக்கோர் இடம் நீ தருவாயோ"
இந்த படம் தோல்வி அடைந்ததற்கு என்ன காரணம் சார்
கிருஷ்ணா சார்,
எம்.எஸ்.வியின் 'நாராய் நாராய்'
'என்றோர் புலவன் பாடியதை நான் இன்றே பாடுகிறேன்' நாகேஷ் பரிதாபம்.
கட்டழகுக் கன்னி காத்திருக்கேனே ரோஜாபூப் போலே ஜானகி குரலில் எங்கள் வாத்தியாரில்.
கடலூர் முத்தையாவை அதுக்குள்ளே மறந்துடிங்களா
சவ சவ இழுவை காட்சிகள், நடிகர் தேர்வில் அதலபாதாள சரிவு. சந்திரகாந்தா, ராஜஸ்ரீ கொடூரங்கள், சாமியார் ஒருவரின் பொறுமை சோதிப்பு, கதை என்ற ஒன்றே சரியாக இல்லாதது, முத்துராமனின் மந்தம்.
கடற்கரையில் காற்று வாங்க ஆசைப்பட்டுப் போய் அனல் பட்டு திரும்பியதைப் போன்று எரிச்சலும் கோபமும்தான் வந்தது கலைக் கோவிலைப் பார்க்கும் போது. பாடல்கள் மட்டுமே தென்றல்.
கொலைக்கோவில்.