http://i1028.photobucket.com/albums/...pszweltbbw.jpg
Printable View
சாந்தி திரையரங்கம்.
ராகவேந்தர் ,கார்த்திக் எழுத்துகளை படித்து கண்ணீர் திரையிட்ட கண்களை துடைக்க நேரம் தேவை பட்டது. இன்று எனது மணநாள் ஆதலால் சோகங்களை ஒத்தி வைத்து எனது எண்ணங்களை பகிர்கிறேன்.
நான் பிறந்ததிலிருந்தே சிவாஜி ரசிகன். என் சூழல் முழுதும் சிவாஜி காற்றே. 1965 முதலே, சாந்தி என்ற விளம்பரங்களை கண்டால் உடலில் ஒரு இன்ப எழுச்சி ,ஒரு ஆசுவாச உணர்வு எழும். கிட்டத்தட்ட நம் கடவுளின் ஆலயம் போல ,அந்த திசை நோக்கி எண்ணியே தொழுதோம். நான் நெய்வேலியில் வளர்ந்ததால் சாந்தி தியேட்டரை பற்றி கேள்வி ஞானம் மட்டுமே.
சிவந்த மண் போன்ற சில சில முக்கிய படங்கள் சாந்தியில் வெளியாகாத சூழ்நிலை,தில்லானா மோகனாம்பாள் போன்ற படங்கள் வெள்ளி விழா வாய்ப்பிருந்தும் தவற விட்ட சோகங்கள் என தூற்றிய தருணங்களும் உண்டு.
ஆனால் தேவி பாரடைஸ் போன்ற திரையரங்குகள் வந்து ஓரளவு சாந்தி மோகத்தை தணித்தது.ராஜா சாந்தியில் வெளியாகாதது ஆத்திரமூட்டவில்லை.நெய்வேலி அமராவதியில் அஞ்சல் பெட்டி காணும் போது கன்னட பைங்கிளியுடன்(Chinna paingili) திராவிட மன்மதனின் கிணற்று விளையாட்டு சாந்தி cutout காணும் போது , பட்டிக்காடா பட்டணமா படத்தை மதுரை சென்ட்ரலில் கண்டு களிக்கும் போது சாந்தி வரும் போது உடம்பு பூரா விசிலடிக்கும்.
நான் சென்னையில் தங்க ஆரம்பித்தது 1974 ஆகஸ்ட் முதலே. ஆனால் தனியே நடமாடும் அளவு தன்னம்பிக்கை வளராததாலும்,ஜெமினி studio colour lab ,பிரத்யேக திரையரங்கில் ,வெளியாக போகும் படங்களை ஒரு மாதம் முன்பே கண்டு களித்து கொண்டிருந்தேன்.
நான் எதிர்பார்த்த பொன்னாள் வந்தே விட்டது. 1975 ஏப்ரல் 20 ஆம் தேதி என் அத்தை மகன் ,28 டிக்கெட் புக் பண்ணி ,கருணை கூர்ந்து என் பெயரையும் பார்வையாளர் வரிசையில் சேர்த்த நாள். நான் சாந்தியில் பார்த்து ரசித்த முதல் படம். என்ன சொல்வது ,அப்படியே சந்தோஷத்தில் ஓவென்று கத்தி, குதிக்கலாமா என்று. என் ஆலயத்தில் மேல் மாடியிலிருந்து என் தெய்வ தரிசனம். பின்பு மன்னவன் வந்தானடி,பாட்டும் பரதமும் ,தீபம்,அண்ணன் ஒரு கோயில்,திரிசூலம்,ரத்த பாசம், என்று பல படங்கள்.
முதல் முதலில் சுவர்களில் சாதனையலங்காரங்கள் இருப்பதை கேள்வியுற்று ஓடி ஓடி போய் பார்த்து களித்திருக்கிறேன்.மன்னனில் சாந்தி வரும் காட்சியில் பழைய த்ரில் எட்டிபார்க்கும்.சென்னையை விட்டு வெளிநாடு போன பிறகு , எப்போது விடுப்பில் வந்தாலும் ,ஒரு முறையேனும் அங்கு வந்து சுற்றி விட்டே செல்வேன். மனம் முழுக்க பரவசம் சூழும். ஆனால் மற்ற நடிகர்களின் படம் அங்கு ஓடுவதோ, அவர்களின் போஸ்டர்கள் இருப்பதோ கடுப்பை கிளப்பினாலும் பொறுத்தே சுற்றி பார்ப்பேன்.
இன்று எங்கள் ஆலயம் இடிக்க படும் சோகம். அங்கு வணிக வளாகம் என்ன , இன்னொரு தாஜ் மகாலே வந்தாலும் கூட எங்கள் சாந்தி எங்களுக்கு தந்த உணர்வையா தர போகிறது?
From FB
Sivagamiyn Selvam 50th day function at Chennai Srinivasa Theatre we all with Our Respected Director Thiru CV Rajendran Sir.
https://scontent.fmaa1-1.fna.fbcdn.n...51592888_o.jpg
Last day of Our Shanthi Theatre.
https://scontent.fmaa1-1.fna.fbcdn.n...f4&oe=57CE2BDC
Mr KCS Sir,
Thanks for your writeup on 52 days celebration of SS. Very happy to meet Canada Siva sir in the fumction.
He made his presence inspite of busy schedule. We miss you on that day in Srinivasa Mr KCS.
Mr Neyveliar,
Thanks for uploading the snap from FB.
Regards
வாசு சார்,
நான் முன்கூட்டியே செல்லத் திட்டமிருந்த நிகழ்ச்சிக்காக, திருநெல்வேலி சென்றுவிட்டதால் 22 ஆம் தேதி நடைபெற்ற 52வது நாள் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இயலவில்லை.
101-வது நாள் 10-07-2016, ஞாயிறு அன்று வருகிறது. அன்றைய தினம் விழா கொண்டாடத் திட்டமிட்டிருப்பதாக வெளியிட்ட மதுரை சிவா மூவிஸ் சந்திரசேகர் அவர்கள் தெரிவித்துள்ளார். அன்றைய தினம் அனைவரும் தவறாது கலந்துகொண்டு கொண்டாடுவோம்.
நன்றி.