-
-
-
-
'ஆலய மணி' பாடல் காட்சிகளின் நிழற்படங்கள்.
கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா...
http://1.bp.blogspot.com/_2I2hYF2DQt...1.39.52%5D.jpg
பொன்னை விரும்பும் பூமியிலே...
http://2.bp.blogspot.com/_2I2hYF2DQt...1.40.10%5D.jpg
சட்டி சுட்டதடா...கை விட்டதடா...
http://3.bp.blogspot.com/_2I2hYF2DQt...1.40.25%5D.jpg
(நிறைவு பெற்றது)
அன்புடன்,
வாசுதேவன்.
-
அன்பு ராகவேந்திரன் சார்,
http://vodimages.bigflicks.com/image...dari_mov_3.jpg
ஆலயமணியின் ஆத்ம கீதங்கள் ஆறு...
அனைத்தையும் தங்கள் மூலம் பெற்றது எங்கள் பெரும் பேறு...
ஆவணச் செம்மலுக்கு தாங்கள் அளித்த மதிப்பெண்கள் நூற்றுக்கு நூறு...
எங்கள் ரசிக வேந்தரே! நீங்கள் நடிகர் திலகத்தின் புகழ் பாடும் வாழும் வரலாறு.
(தங்களின் 'ஆலயமணி' பதிவுகளுக்கு என் ஆத்மார்த்தமான நன்றி!)
அன்புடன்,
வாசுதேவன்.
-
அன்பு பம்மலார் சார் ,
தங்கள் அன்பான பாராட்டுதல்களுக்கும்,வாழ்த்துக்களுக்கும் நன்றி!
அன்பு சந்திரசேகரன் சார்,
தங்கள் உயரிய பண்புக்கு நன்றி!
அன்பு கார்த்திக் சார்,
தங்களின் அன்பு பாராட்டுக்கு நன்றி!
அன்புடன்,
வாசுதேவன்.
-
திரு பம்மல் சார்,
அள்ள அள்ள குறையாத அட்சயபாத்திரமாக மாறி தாங்கள் அளித்து வரும் ஆவணங்களை ஆனந்தகண்ணீர் வழிந்தோடும் விழிகளால் பார்த்து பரவசப்பட்டு எதுவுமே செய்ய தோன்றாமல் திக்பிரம்மை பிடித்த நிலையில் இருந்ததால் தங்களை பாராட்டக்கூட முடியவில்லை,மன்னிக்கவும்.தாங்கள் அளித்து வரும் ஆவணங்களால் ஒவ்வொரு நடிகர்திலகத்தின் ரசிகரையும் தலைநிமிர செய்துவிட்டீர்கள்,நிச்சயமாக நாங்கள் எல்லோரும் உங்களுக்கு கடமைப்பட்டுள்ளோம்.
திரு சந்திரசேகர் சார்,
திரு ராம்குமார் மற்றும் திரு பிரபு ஆகியோர் நடிகர்திலகத்தின் புகழை பரப்புவதில் காட்டும் ஆர்வத்துக்கு நிகராக அல்லது அதற்க்கும் மேலே தங்களுக்கு உள்ள ஆர்வத்தை பறைசாற்றுகிறது தங்களின் சீரிய முயற்சியால் திறந்து வைக்கப்பட்ட நிழற்குடை பற்றிய செய்தி ,நன்றிகள் பல கோடி.
திரு முரளி சார்,
தாங்கள் முன்னைப்போல் அடிக்கடி இங்கு வந்து தங்கள் கருத்தை பதியுமாறு அன்போடு கேட்டுகொள்கிறேன் .
திரு குமரேசன் சார்,
அடிக்கடி கேட்டு தொந்திரவு செய்வதற்கு மன்னிக்கவும்,என்னால் ஆவலை கட்டுபடுத்த முடியவில்லை ,வசந்தமாளிகை பற்றிய லேட்டஸ்ட் தகவல் என்ன என்பதை தயவு செய்து தெரிவிக்கவும்
-
அன்புள்ள பம்மலார் சார்,
ஆலயமணி ஆவணப்பொக்கிஷங்கள் பத்து.
அனைத்தும் கண்ணைக்கவரும் நல் முத்து.
என்னுடைய வேண்டுகோளைப்பதிவிட்ட பிறகுதான் பார்க்கிறேன். அதற்கு சில நிமிடங்களுக்கு முன்பாக நீங்கள் அனைத்து ஆவணங்களையும் அழகுற பதித்திருக்கிறீர்கள். பார்த்தவுடன் என்னுடைய பதிவை எடிட் செய்ய முயன்றேன். முடியவில்லை. கணிணி முரண்டு பிடித்தது. சரி, நமது பம்மலார் நிலைமையைப் புரிந்துகொள்வார் என்று விட்டுவிட்டேன்.
ஆவணப்பொக்கிஷங்கள் அனைத்து கண்ணுக்கும், கருத்துக்கும் விருந்து படைத்தன. 50 ஆண்டுகால விளம்பரப்பதிவுகளை ஏதோ நேற்று வந்தது போல புதுமை மங்காமல் தருவதற்கு தங்களால் மட்டுமே முடியும். அனைத்தும் கிடைத்தற்கரிய பொக்கிஷங்கள் அல்லவா.
சென்னையில் முதன்முதலாக நான்கு திரையரங்குகளில் 100 நாட்களைக் க்டந்த படம் ஆலயமணியே என்ற வரலாற்றுப் பதிவும் விளம்பரத்தில் தரப்பட்டுள்ளது. இதன்பிறகு 1964-ம் ஆண்டு சென்னையில் நான்கு திரையரங்குகளில் 100 நாட்களைக்கடந்த சாதனையை இரண்டு படங்களில் (கைகொடுத்த தெய்வம், நவராத்திரி) நிகழ்த்திக்காட்டினார் நடிகர்திலகம். இதற்கு முன் நாம் கொண்டாடி மகிழ்ந்த 'சிவந்த மண்' திரைக்காவியமும் சென்னையில் நான்கு தியேட்டர்களில் 100 நாட்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்த சித்திரமே
ஆவணப்பதிவுகள் அனைத்துக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள். தங்கள் தூய தொண்டு தொடர வாழ்த்துக்கள்.
-
திரு. கார்த்திக் சார், தங்களின் உயர்வான பாராட்டுக்கும், இனி வருங்காலத்தில் மேலும் துடிப்போடு செயல்படும் விதத்தில் அளித்துள்ள ஊக்கத்திற்கும் நன்றி.
-
Dear Mr.sankara - Thanks for your appreciation.