தேசிய நடிகருக்கு நினைவஞ்சலி
இன்று 22.08.2011 மறக்க முடியாத நாள். நம் அன்புச் சகோதரர், தேசிய நடிகர் சசிகுமார் அவர்களின் நினைவு நாள். நானிலம் போற்ற வாழ்ந்த அந்த நல்லவருக்கு நமது திரியின் சார்பாக 37வது ஆண்டு நினைவாஞ்சலியை கண்ணீரோடு காணிக்கை ஆக்குகிறோம்.
இதோ...சசிகுமார் அவர்கள் "பாரத விலாஸ்" திரைக் காவியத்தில் நடித்துள்ள உணர்ச்சி மயமான ஒரு காட்சி ஒலி-ஒளி வடிவில்.
இந்தக் காட்சியில் சசிகுமார் அவர்கள் சொல்லுவதாக வரும் ஒரு வசனம் நம் கண்களைப் பனிக்கச் செய்கிறது. ("கசாப்புக் கடையிலே வெட்டுப் படுற ஆட்டுக்குக் கூட நாம ஏன் சாகப் போறோம்கிற காரணம் தெரியுமே") என்கிற வசனம் தான் அது. அது போல் தானும் தன் அன்பு மனைவியும் நெருப்புக்கு இரையாகப் போகிறோம் என்று முன்னமேயே காரணம் தெரியாமல் போய் விட்டதோ நம் தேசிய நெஞ்சத்திற்கு?..
http://www.youtube.com/watch?v=aerN6...yer_detailpage
அன்புடன்,
நெய்வேலி வாசுதேவன்.